எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டியமுதே! என் கண்ணம்மா! - கதைத் திரி

Shambhavi

Moderator
கண்ணம்மா - 01

அதிகாலை வேலையில் ஆதவனின் தரிசனத்தை நின்று, நிதானமாக ரசித்துப் பார்ப்பதென்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. ஆனால் இன்று அதற்கென்றே நன்னாளாக அமைந்ததுவோ என்று என்னும் அளவிற்கு அவருமே தன் கதிர்களை எல்லாம் மெல்ல மெல்ல பார் எங்கும் பரப்பிக் கொண்டே துயில் கலைந்தார்.

மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்து, நீ பெரியவளா இல்லை நான் பெரியவளா என்று சண்டையிட்டவாறே கதிர்கள் தங்களின் நிறத்தை வானம் என்னும் தாளில் தீட்டிக்கொண்டிருக்க,
நன்கு தெளிந்த நீல வானமும் அதற்கு தோதாய் வெண்ணிற மேகங்களை கொண்டு கண்ணைப் பறித்தது.

கடல் அன்னையின் மேற்புறத்தில் சூரியனவனின் கதிரொலிகள் பட்டு தங்கமென ஜொலிக்க, அந்த அதிகாலை வேளையில் பாய்மர கப்பலில் பயணம் செய்வோர் கூட, அந்த ஒளியில் எறும்புகளாய் தான் தோன்றினர் அவனின் கண்களுக்கு.

கடலை ஒட்டியிருந்த வானைத் தொட்டுவிடும் உயரத்தில் ஓங்கி உயர்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ஜம்மென்று நின்றவாறே ஆற அமர இக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, வீட்டில் அணியும் ஒரு இலகுவான ஆடையை அணிந்து கொண்டு, இடக்கையில் தனது காஃபி கப்புடன் கண்களில் ஒரு தீர்க்க பார்வையைக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

குளிர்ந்த காற்று அவன் மேனியை இதமாகச் தழுவிச் செல்ல, அதனை ரசித்தவனின் கண்களும் இதழ்களும் ஒரு மென்னகை புரிந்தன.

சொட்டு விடாது ரசித்து குடித்த காஃபியின் கசப்பு நாவில் தவழ்ந்த வண்ணம் இருக்க, உமிழ் நீரைக் கூட்டி விழுங்கியவனின் காதுகளை தீண்டியது வீட்டின் அழைப்பு மணி.

"தம்பி, கிளம்பிட்டீங்களா? செத்த நேரமிருங்க டிஃபன் செஞ்சு தாரேன்" என்றவாறே தன் வயர் கூடையுடன் சமையல் அறை நோக்கி சென்றார் சாந்தா, அந்த வீட்டின் சமையல் அம்மா.

"சாந்தா ம்மா, எனக்கு கஞ்சி மட்டும் செஞ்சு வைங்க. மதியம் ராகவ் வருவான், அவன கேட்டு லஞ்ச் செஞ்சுடுங்க" என்றவன் தன் குடித்தக் கப்பை கழுவி, அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.

அவனின் செயலால் மனதில் எப்போதும் துளிர்க்கும் மகிழ்வு, இன்றுமே வந்து சாந்தாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.

என்றும் இல்லாத ஒரு நிறைவு அவன் மனதில். ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவாறே கட்டிலில் இருந்த சீருடையை அணிந்துக் கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

வெள்ளை நிற முழுக்கை சட்டையும், ஆழ்ந்த நீல நிற காற்சட்டையும் அதன் நிறத்திலேயே வெள்ளை பட்டைகளைக் கொண்ட கழுத்து அட்டியும் (டை!) அணிந்து நின்றவனின் தோற்றம் அவனுக்கே ஒரு கர்வத்தைக் கொடுத்தது.

இறுதியாய் 'என்னையும் அணிந்து கொள்ளேன்' என்ற தொப்பி அவனின் கவனத்தை தன்பால் ஈர்க்க, அதனை அணிந்துகொண்டு நிமிர்ந்து நின்றவன் மகிழ்ச்சியின் பயனாய் ஒரு விரிந்த சிரிப்பின்னூடே தன்னுடைய மீசையையும் முறுக்கிக் கொண்டான்.

ஆறடியைத் தாண்டும் அசாத்திய உயரம் கொண்டவனுக்கு கனகச்சிதமாக இருந்தது அந்த உடை. அதிலும் அவனின் சற்று அடர்ந்த மில்க் சாக்லேட் நிறத்திற்கு அத்தனை எடுப்பாய் இருந்தது.

இன்று தான் முதல் நாள் வேலையில் சேர இருக்கிறான். முழுவதுமாக தயாராகி வெளியே வந்தவனை இமை கொட்டாது பார்த்து நின்றிருந்தார் சாந்தா.

அவரைக் கவனித்துவிட்டவனோ,
ஒரு சின்ன சிரிப்புடன் அவர் கொடுத்த கஞ்சியை பருகியவாறு பணிக்கு கிளம்பி சென்றான்.

திருவான்மியூரில் இருந்து கிளம்பிய அவன் சாக்லேட் நிற டஸ்டர் சென்று நின்ற இடமோ, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்!

நேரம் சரியாய் ஆறரை என அவன் ரோலக்ஸ் காட்ட, நிமிர்ந்த நடையுடன் தன்னின் உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் உள்ளே பிரவேசித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.



"தாத்தா, பாட்டிய பத்ரமா பார்த்துப்பீங்களாம். அவசரம்னா எனக்கு போன் பண்ண மறந்துடாதீங்க. நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. அப்புறம்.." என்று சிந்தித்தவள் அருகே நின்றிருந்த தன்னுடைய பாட்டியை கட்டிக்கொண்டு,

"அங்க போன உடன என்னைய மறந்தராத நீலா.." என்று போலி கண்ணீருடன் அவரை இறுக்கிக் கொண்டாள், அம்ருதவர்ஷினி.

தலையில் அடித்துக்கொண்ட அவரோ, "ஏன்டீ.. ஏன்டீ என் மனத்தையே வாங்குற? இப்போ நான் இந்த கண்ராவிய எல்லாம் கேட்டேனா" என்றவர் முகத்தை அஸ்ட கோணலாக வைத்துக்கொள்ள, ஒரு பொங்கிய சிரிப்பு அம்ருதாவின் முகத்தில்.

"டார்லிங்.. அப்போ என் கூட வரது உனக்கு பிடிக்கலையா" என்று நீலாம்பரியாகிய நீலாவை உரசிக்கொண்டே கேட்டார் அவரின் ஆருயிர் கணவரான சாரங்கன்.

"அய்யோ.. காலம் போன கடசீல இதுலாம் தேவையா உங்களுக்கு" அவர் பல்லைக் கடிக்க,

"சாரு நீ விடு, நீலாவுக்கு ஒரே வெக்கம் வெக்கம்.. கம்மிங் கம்மிங், அதான் ஓவரா பிகு பண்ணுது" என்றாள் நீலாவை லேசாக இடித்துக் கொண்டு.

"வெக்கப்படுறீயா டார்லிங்.." என்று கேட்டுக்கொண்ட நீலாவின் பக்கம் வந்த சாரங்கனைப் பார்த்து சற்று அவரே மிரண்டு விட்டார்.

அவரின் அதிர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, பொது இடமாக இருக்க அம்ருதாவிற்கு தான் சிரிப்பை அடக்க பெரும்பாடானது.

"ஆனாலும் உனக்கு எங்கையோ மச்சமிருக்கு தாத்தா" என்று அவர்களின் பயண பொதிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு வந்து நின்ற ஆதவன் கூற,

"நீ ஏன் வயிறு எரியுர பேராண்டி" - சாரங்கன்.

"என்னைய இங்க இருக்குற கேரளாவுக்கு அனுப்ப அத்தன யோசிச்ச உங்க பையன், இந்த வயசுல உங்கள கோ..வா அனுப்புறாரே! அதான்" - ஆதவன்.

"அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா" - அம்ருதா.

"ஆமா ஆமா.. பேரன் பேத்தியே எடுத்தாச்சு.. இதுல செகண்ட் ஹனிமூன்" என்றவன் முணுமுணுக்க,

"தப்பா சொல்லுறடா பேராண்டி, இது எங்க நாலாவது ஹனிமூன்" என்றார் முகத்தில் சிறு வெக்கச் சாயலுடன்.

"எதேய்.. கஷ்டம், கஷ்டம்.. தயவு செஞ்சு மூஞ்ச அப்படி வெக்காத தாத்தா.. கடுப்பாகுது" என்றவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவரின் பாவனையை பார்த்தபடி நின்றிருந்த அம்ருதா, "சாரு" என்று சிரிப்பினூடே அவரை அணைத்துக் கொண்டாள்.

"வயசு பசங்க கிட்ட பேசுற பேச்சா இது" என்று வெளியே சொன்னாலுமே நீலாம்பரியின் முகமும் ஒரு மென்மையை கொண்டிருந்தது.

"அப்பா, மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துட்டீங்களா? ஸ்டீமர், ஸ்கார்ப் எல்லாம் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே அவர்களின் டிக்கெட்டை சரி பார்த்தவாறு வந்து நின்றார், சுந்தரேஸ்வரர்.

"எல்லாம் இருக்குடா. நீ மொதல்ல டிக்கெட்ட கொடு. நாங்க கிளம்புறோம்" என்றவர் பரபரக்க, 'கிழவனுக்கு அவசரத்த பாரேன்' என்று மனதில் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேச் பண்ணிட்டேன் டாடி" என்ற சிரித்துக் கொண்டே சொன்ன அம்ருதாவை,

"அம்ரூ, நீயும் தான் இவங்க கூட போற" என்று கடைசி நேர அணுகுண்டைப் போட்டார் அவளின் தந்தை சுந்தரேஸ்வரர்.

"வாட்" என்று அதிர்ந்த குரல்கள் கேட்க,

"என்ன வாட்? உங்கள தனியா அனுப்ப வேண்டாம்னு சரோ சொல்லுறான். அதான் அம்ரூ வில் அக்கோம்பனி யூ போத்" என்றார் சுந்தரேஸ்வரர்.

"அப்பா, நான் ஒன்னுமே பேக் பண்ணல அண்ட் இட்ஸ் தேயர் டிரிப்"

"அம்மா எடுத்துட்டு வராங்க அம்ரூ. அவங்க எல்டர்லி பீப்பிள்டா, அதான்" என்று தன்மையாகவே மகளிடம் சுந்தரேஸ்வரர் பேசப் பேச,

"யாருடா உனக்கு எல்டர்லி பீப்பிள்? நானா.. நானா.." என்று அவரிடம் சண்டைக்கு வந்திருந்தார் சாரங்கன்.

அவரின் பாவனையே அனைவருக்கும் சிரிப்பைக் கொடுக்க ஆதவன், "அப்புறம்.. யங் மேன், பேத்திய கூட வெச்சுட்டே ஃபோர்த் ஹனிமூன் போல" எனச் சிரித்துக்கொண்டே கேட்டவனை வெட்டவா குத்தவா என்ற திக்கில் பார்த்து வைத்தார், சாரங்கன்.

"சரி அப்பா நீங்க முன்னாடி போங்க, மீனா வந்துட்டு இருக்கா. அம்ரூ லக்கேஜ் வந்தோடனே செக்-இன் பண்ணிக்கலாம்" என்றவர் ஆதவனிடம் ஏதோ வாங்கி வர சொல்லி அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே அவர் மனைவி மீனாட்சியிடமிருந்து அழைப்பு வர, அதனை எடுத்துக்கொண்டே சிறிது தள்ளி நின்றிருந்தார் சுந்தரேஸ்வரர்.

"ஆம் சாரி சாரு" சாரங்கனை அணைத்துக்கொண்டே அம்ரூ அவரிடம் சொல்ல,

"என் பேபி எங்க கூட தான வரப்போறாங்க.. யூ டோண்ட் ஃபீல் ஃபார் தட்" என்றவர் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட, பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.

நீலாம்பரி அவர்களின் பக்கவாட்டில் நின்றவாறு இவங்களின் பாசம் பிணைப்பை பார்த்துக்கொண்டு இருக்க, அவரை இடித்து தள்ளியவாறே முன்னோக்கி சென்றான் வாசுதேவ கிருஷ்ணன்.

ஒரு நிமிடம் நிலை தடுமாறி விட்டவர், அங்கிருந்த தடுப்பு கம்பியை பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றுகொண்டார்.

அவரின் தள்ளாடலை பார்த்த தாத்தாவும் பெயர்த்தியும் ஒரு விநாடி அதிர்ந்து பின் அவரைத் தாங்கிக் கொண்டனர்.

வாசுதேவ கிருஷ்ணனுக்கு இருந்த அவசரத்தில் ஓடிக்கொண்டே "ஆம் சாரி" என்று திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைந்திருந்தான்.

"டி பாரி.. ஒன்னுமில்லையே" என பதறிப் போய் கேட்ட சாரங்கனின் உடலிலுமே ஒரு உதறல் தோன்ற, அதை கவனித்துவிட்ட அம்ருதாவிற்கோ கோபம் கண்ணை மறைத்திருந்தது.

"ஈஸ்வரா.." என்று சற்று பதட்டமான குரலில் நீலாம்பரி கடவுளையும் மகனையும் அழைத்தவாறு தரையில் அமர்ந்துவிட, சாரங்கனுக்கு மனது படபடத்தது.

அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திய அம்ருதா, "யூ பிலடி ***" என்று அவனை அர்ச்சித்தவாறே வாசுவின் பின்னால் ஓடினாள்.

அவள் அணிந்திருந்த ஸ்கட்டை தூக்கியபடி ஓடியவளை என்னவோ ஏதோவென்று பின் தொடர்ந்து ஓடினர், விமான நிலைய காவல் அதிகாரிகள்.

கேட்டை தாண்டி செக்யூரிட்டி செக்கிங் வந்தும் கூட அவளின் ஓட்டம் தடைபடவில்லை.

ஓட்டம் முழுவதிலும் அவனை வசைபாடியவாறே இருந்தவள் சட்டென்று அங்கிருந்த பயணி ஒருவரின் காஃபி கப்பை பறித்த வேகத்தில் வாசுவை நோக்கி இன்னும் வேகமாக ஓடினாள்.

சுற்றி நடக்கும் எந்த விசயத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடந்துகொள்ள, அங்கு தன்னின் அடையாளத்தை உறுதி செய்ய நின்றிருந்தவனின் பின்புற சட்டையானது காஃபி அபிஷேகம் செய்யப்பட்டது, அம்ருதவர்ஷினியால்!

ஒரு நொடி அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்து விட்டனர்!

எதற்காக? என்ற கேள்வி அனைவர் முகத்திலுமே இருக்க, வாசுதேவிற்கோ பற்றிக்கொண்டு ஆத்திரம் வந்தது.

"வாட் தி ஹெல்" என்று அவன் திரும்ப, அங்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் அம்ருதா.

கண்களில் ஆத்திரத்தை தோக்கியபடி அவள் நின்றிருக்க, "என்ன ம்மா நீ.. என்ன பிரச்சன உனக்கு" என்று அங்கிருந்த காவலர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்.

"அறிவில்ல" என்று எகிறியபடி கோபத்துடன் அவளை நெருங்கியிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

"உனக்கு மட்டும் கிலோ கணக்கில இருக்கா என்ன?" என்றவளின் கூற்றிற்கு ஆத்திரம் கட்டுக்கடங்காது வர, அவனை தடை செய்தது அங்கிருந்த பணிபெண்ணின் குரல்.

"ஸார், இட்ஸ் கெட்டிங் லேட். ப்ளீஸ் கெட் ச்சேஞ்ட் ஆப் யுவர் செல்ஃப்" என்று அடக்கத்துடன் அப்பெண் சொல்லியிருந்தாலும், இந்த நிலைமை தனக்கு வந்ததற்கான காரணகர்த்தாவை அடித்து வீழ்த்தும் கோபம் அவன் முகத்தில்.

அதற்குள் காவலர்கள் அவளை விசாரிக்க ஆரம்பித்திருக்க, வாசுதேவகிருஷ்ணனையும் இங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தனர் விமான நிலைய அதிகாரிகள்.

போகும் அவனையே பார்த்திருந்தவள் அப்போது தான் அவனைத் திரும்பி ஏதும் கேட்காதது நினைவிற்கு வர,

"டேய் முள்ளபன்னி தலையா.. வாய் நீளத்துக்கு இங்கிலிஷ் பேசுனா மட்டும் போதாது. மூஞ்சில இருக்கிற கண்ணும் தெரியனும்! அதவிட முக்கியமா மேனர்ஸ் இருக்கனும்" என்றவள் அவனையே பார்த்தவாறு காவலர்களின் இழுப்பிற்கு சென்றாள்.

முதலில் யாரோ என்று நினைத்தவன், பின் அவள் குரலின் அடையாளத்துடன் திரும்பிப் பார்க்க அவளின் சொற்கள் இவனுக்குத் தான் தீயாய் எரிந்தது!

அதிலும் 'என்ன, என்ன வார்த்தைகளை பிரயோகிக்கிறாள் இந்த பெண்' என்று நினைக்கையில் அவனின் கை முஷ்டிகளை இறுக்கி தன்னின் கோபத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனபட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

அம்ருதாவை அங்கிருந்த காவலர் கண்கணிப்பு அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் அந்த அதிகாரிகள். அங்கு அவளை விசாரிக்கிறேன் என்ற பெயரில் போட்டு துளைத்து எடுக்க, அவளின் கோபம் ஹை பிச்சில் ஏறி நின்றிருந்தது.

அப்போது சரியாய் சுந்தரேஸ்வரர் வந்து அவளை வினவ, பொங்கிவிட்டாள் அவரிடம்.

"வயசானவங்கள இடிச்சுட்டு ஓடி வந்தது அவன்! அவன் சட்டைய பிடிச்சு ஏன்டானு கேட்கறதுக்குள்ள என்னைய தூக்கிட்டு வந்தது இவங்க! இதுல என் தப்பு எங்க இருக்கு டாடி" என்று சுந்தரேஸ்வரரிடம் சண்டைக்கு நின்றிருந்தாள் அம்ருதா.

அவளை முறைத்துக்கொண்டே, "என் மதர் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டாங்க ஸார். தட்ஸ் வை ஷி பெஹோவ்ட் லைக் தட் (எங்க அம்மா கொஞ்சம் தடுமாறிட்டாங்க. அதான் இவள் இப்படி நடந்து கொண்டாள்) " என்ற சுந்தரேஸ்வரரின் விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தியாக இல்லை என்று அவர் முகத்திலேயே நன்கு தெரிந்து.

இருந்தும் ஒரு பெரிய மனிதர், மகளின் செயலால் மன்னிப்பு வேறு கேட்க என்ன செய்ய முடியும் அவர்களால்?

"டோன்ட் ரிப்பீட் இட் அகைன் மிஸ் (இதை திரும்ப செய்யாதீர்கள்) " என்ற எச்சரிக்கையுடன் அவர்களை விட்டுவிட்டனர்.

"அப்பா, தயவு செஞ்சு திரும்ப ஆரம்பிக்காதீங்க. எனக்கு முடியல" என்றவள் அவரிடம் விடைப்பெற்று செக்-இன் நோக்கி சென்றாள்.

அவளுக்கு முன்பே சாரங்கனும் நீலாம்பரியும் பரிசோதனை செய்து உள்ளே சென்றிருக்க, அந்த பிரச்சனையால் சிறிது தாமதமாகியிருந்தது.

'உர்' என்ற முகத்துடன் விமானத்திற்குள்ளே சென்
றவளின் பார்வையில் விழுந்தான்‌ அவன்.

"எதேய்ய்.. இவன் தான் பைலட்டா!" என்று யூனிபார்ம் அணிந்து நின்றவனை முழுதாக பார்த்தபின் அவள் ஸ்தம்பித்துவிட்டாள் என்பதே உண்மை.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
கண்ணம்மா - 02


"ஒன்னும் இல்லையே பாரி? முடியலேனா ட்ரிப் கேன்சல் பண்ணிடலாமா?" என்று கரிசனையாய் கேட்ட கணவனை நினைத்து அந்த வயதிலும் அவருக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது.

"அட.. இதுக்கெல்லாம் யாராவது ட்ரிப் கேன்சல் பண்ணுவாங்களா? கோவா தான் எனக்கு முக்கியம்" என்று சிரிப்புடன் நீலாம்பரி கூற, சாரங்கனின் முகத்திலும் ஒரு விரிந்த சிரிப்பு படர்ந்தது.

இவர்கள் இருவருக்கும் முதலிலேயே முன்பதிவு செய்திருந்ததால் முன் வரிசையில் அமர்ந்திருக்க, கடைசி நேர முடிவால் கடையோர கடைசியில் தான் அம்ருதாவிற்கு இருக்கை அமைந்தது.

அதுவே அவளை சுணக்க, சற்று முன்பு நடந்த நிகழ்வால் அவளின் மொத்த மனநிலையும் குன்றியிருந்தது.

அவள் எப்போதும் விரும்பும் ஜன்னலோர இருக்கையும் அமையாதது வேறு இன்னும் கடுப்பைத் தர, பார்வையை சுற்றி சுழட்டினாள்.

அருகே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவரின் சின்ன குழந்தையும் அவளை கவர்ந்திருந்தனர்.

ஒரு சினேகப் புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தவள், விமான பணிப்பெண்ணை அழைத்து சில சாக்லேட்களை கேட்டாள்.

மூன்றை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு, மீதமிருந்ததை அந்த குட்டி வாண்டிற்கு கொடுத்த போது அதன் முகத்தில் இருந்த மலர்ச்சியே அவளுக்கு அத்தனை பூரிப்பைக் கொடுத்தது.

பின் பரஸ்பர பேச்சுவார்த்தை அந்த வாண்டிடம் அவள் நடத்த, அதுவும் இவளிடம் ஒட்டிக்கொண்டது.

"நீ கோவா ஏன் வர?"

"அதுவா.. அங்க பீச் இருக்கும்ல அத பார்க்க" என்றாள் அந்த குழந்தையிடம் ரகசியம் போல.

"வாவ்! எங்க வீட்டு மேல இருந்து பார்த்தாவே சி தெரியுமே" என்றது அது, தன் முட்டை கண்களை விரித்துக் கொண்டு.

பாப் கட்டிங் வைத்து துறுதுறுவென இங்கும் அங்கும் தாவித் தாவி அம்ரூவிடம் அக்குழந்தை பேச, அந்த அழகுக்கு இணையான மழலையழகும் சேர்ந்து கொண்டு அம்ரூ மனதை மட்டுமன்று அங்கிருந்தவர்கள் முகத்திலுமே ஒரு நிறைந்த புன்னகையை பூக்கச் செய்திருந்தது அந்த வாண்டின் பேச்சு.

அதன் பாவனையில் லயித்திருந்தவளின் உள்ளுணர்வு ஏதோ தோன்ற, நிமிர்ந்து பார்த்தவளின் முகமோ அப்பட்ட அதிர்ச்சியில் சிவந்திருந்தது.

தீவிரமாக விமான பணிப்பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த வாசுதேவ கிருஷ்ணன் அவள் பார்வை வட்டத்தில் விழ, அவனின் தோரணையும் உடையும் அப்போது தான் அவள் கவனத்தையே ஈர்த்தது!

'எதேய்.. இவன் தான் பைலட்டா!' என்று அறிந்த நொடி அவள் அதிர்ந்து விட்டாள் என்பதே உண்மை.

ஏதோ ஒரு பயணி தன் பாட்டியை தள்ளிவிட்டு விரைந்திருக்கிறான் என்று அவள் நினைத்திருக்க, இவன் என்ன வென்றால் விமானியாக இருக்கிறான்.

அதுவும் அவன் அணிந்திருந்த வெண்ணிற சட்டையை பார்த்த போதுதான் தன்னுடைய செயலை நினைத்து சற்று சங்கடமாகப் போனது அம்ருதாவிற்கு.

அதுதான் அவளின் இயப்பு. தன்னால் யாருக்கும் எந்த வித அசௌகரியமோ, தீங்கோ அல்ல ஒரு சாதாரண சுணக்கமோ வரக் கூடாது என்று நினைக்கும் மனோபாவம் உடைய பெண் தான் அவள்.

'இருந்துமே பாட்டி கீழே விழுந்திருந்தால்?' என்று அவளின் மூளை எடுத்துரைக்க, 'அதற்கு காஃபிய ஊத்துவியா?' என்றவள் மனது இடித்துரைத்தது.

மூளைக்கும் மனதுக்கு நடக்கும் விவாதத்தை கவனித்தவள், எப்போதும் போல் அலசி ஆராய்ந்து பின் அவனிடன் ஒரு மன்னிப்பை கேட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த நிலைக்கு வர காரணம் கூட, அவன் 'ஆம் சாரி' என்று ஓடிக்கொண்டே சொல்லியதின் விளைவாகத் தான் இருந்ததே தவிர அவளாக வழிய சென்று கேட்க முடியவில்லை.

நீலம்பரியின் தடுமாற்றமும், சாரங்கனின் நடுக்கமும் அதற்கு முக்கிய பங்கு!

"விடு விடு அம்ரூ. அதான் நீல்ஸ்'கு ஒன்னுமில்லையே. அவன் தள்ளிவிட்டதும் தப்பு தான், நீ காஃபி ஊத்துனதும் தப்பு தான்" என்று தனக்குள்ளேயே பேசியவள் அவனைப் பார்க்க, சரியாக அவனுமே இவளையேத் தான் பார்த்தவாறு நின்றிருந்தான், மார்ப்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு.

'கொடிக்கம்பம்' என்ற பட்டை பெயர் வைக்கும் அளவிற்கான உயரமும், நடுத்தர நிலையிலான எடையுடன் இருந்தவனை பார்க்க, 'நம்ம பக்கத்து வீட்டு பையன் தான்' என்று சாரங்கன் அடிக்கடி சொல்லும் வாக்கியமே நினைவிற்கு வந்தது அவளுக்கு.

மங்கிய நிறத்தவன் தான் இருந்தாலும் அவனின் முகம் காட்டும் பொழிவும் மென்மையும் ஒருவித சோபையாக இருந்தது போல அம்ரூவிற்கு.

கால்களை விரித்து நிமிர்ந்து நின்றவாறே கைகளைக் கட்டியபடி அவன் நின்றிருந்த தோற்றம், அழையா விருந்தாளியாய் அவள் மனதிற்குள் சிறை பிடிக்கப்பட்டிருந்தது.

வைத்தக் கண் எடுக்காத வாசுவின் பார்வையில் அவள் தான் தலை குனிய வேண்டியதாயிற்று.

'இவன் என்ன இப்படி பார்க்கிறான்' என்றவள் துணுக்குற்றாலும், 'ஒருவேள ஷர்ட்ல கரையாகிடுச்சோ?' என்று நினைத்துக்கொண்ட இருக்க, அவனோ அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அங்கு விமான காக் பிட்டில் அமர்ந்திருந்தவனின் மனதோ ஒரு இதமான நிலையில் இருந்தாலும் மனதின் ஓரத்தில் சற்று முன்பு நடந்த நிகழ்வானதே மின்னி மின்னி அந்த இதத்தைக் கலைப்பதாக இருக்க, 'இந்த மனநிலையில் தன்னால் பணி செய்ய முடியுமா?' என்ற அச்ச நிலைக்கே சென்றுவிட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

"கேப்டன், ஷால் ஐ கிவ் தி ஃபைனல் இன்ஸ்டிரக்சன்ஸ் டூ தி பேசேஞ்சர்ஸ் (கேப்டன், பயணிகளுக்கான கடைசி அறிவிப்பை கொடுத்திடவா)" என்ற விமானப் பணி பெண்ணின் அழைப்பில் மீண்டவன்,

"ஆப்டர் ஃபைவ் மினிட்ஸ்" என்றவன் கேபினில் இருந்து வெளியேறி இருந்தான்.

நீண்ட மூச்சுக்களை எடுத்துவிட்டவனின் மனது சற்று சமன்பட, தன் விமான பயணத்தை தொடங்க அகமும் முகமும் மகிழ்ந்தவாறே கேபினுள் சென்று விமானத்தை இயக்க ஆரம்பித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

"அன்பு தமிழ் மக்களுக்கு என் ப்ரியமான வணக்கங்கள். நான் பைலட் வாசுதேவ கிருஷ்ணன்! பேசெஞ்சர்ஸ் கம்பர்டபிளா ஃபீல் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன். எனி இன்கன்வினியன்ஸ், ப்ளீஸ் லெட் அஸ் நோ. இந்த டிராவல் எனக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு, அதோட உங்க எல்லார் ஓட ஹாப்பினஸ்ஸும் கூட தான். இதுதான் என் ஃபர்ஸ்ட் டேக் ஆஃப் அஸ் அ பைலட். அதுக்காக ஒரு சின்ன கம்பிளிமெண்ட் டூ ஆல். ப்ளீஸ் டேக் இட். தேங்க்யூ" என்றவனின் பேச்சு அந்த ஒலிப்பெருக்கியில் நின்றுவிட,
ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி கலந்த பயம் அம்ரூவின் முகத்தில்.

மகிழ்விற்கான காரணம் அவனின் ஆழ்ந்த அமைதியான பேச்சாக இருந்தாலும், 'நடுகடலில் ஊர்தியை விட்டுவிடுவானோ' என்ற பயம் இல்லாமல் இல்லை அவளுக்கு.

"எம்மா செம்மலாத்தா.. என்னைய முழுசா போய் இவன் கரை சேர்க்கனும்.. அப்போ தான் உனக்கு கிடா உண்டு.. பார்த்துக்க" என்ற அவசர வேண்டுதலும் தன் குலதெய்வத்திற்கு வைத்தாள் அந்த இளம் நாகரீக யுவதி.

'பாவம் முதல் நாள் வேலை போல.. இதுல நீ வேற காஃபிய ஊத்திட்டியே அம்ரூ' என்று தன்னையே அவள் குற்றம் சொல்ல, விமானப் பெண் அவளை நெருங்கி இருந்தார்.

ஒரு சிறு துண்டு அணிச்சல், ஒரு பதப்படுத்தப்பட்ட பழச்சாறு உடன் சில சாக்லேட்கள் எல்லா பயணிகளுக்கும் வழங்கப்பட, பலர் அதை ஏற்றும் சிலர் அதை நாசுக்காகத் தவிர்த்தும் கொண்டனர்.

மென்நகையுடே அதை வாங்கிக்கொண்டவளின் அனிச்சவிழிகள் கூட ஆனந்தம் கொண்டன அந்நொடி.



வானில் உயர பறப்பதென்பது அவனுக்கு புதிது இல்லை தான். ஆனால் ஊர்தி நிறைய பயணிகளுடன் அந்த ஊர்தியையே இயக்குவது அதுவே முதல்முறை.

எடுத்தவுடன் விமானத்தை இயக்க குடுக்க மாட்டார்கள். அதுவும் வாசுதேவ கிருஷ்ணன் துணை விமானி தான். அதாவது ஜூனியர் பைலட்.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவனின் பயிற்சிகள் அனைத்து நிறைவடைந்திருக்க, இப்போது தன்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்த 'ஏவியேட்டர்' ஆகிவிட்டான்.

அவன் முகத்தில் இருந்த நிறைவும், பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த சிரிப்பையும் பார்த்த கேப்டன், "என்ன மேன், ஆர் யூ ஹேப்பி?" என்றார் அவன் தோள் தட்டி.

"கனவ நினைவாக்க அவ்வளவு பெரிய போஸ்ட்ட விட்டுட்டு வந்தாலும், யூ காட் இட் மை பாய்" என்ற அவரின் சந்தோச களிப்பு அவனின் காதினை தீண்டவே இல்லை.

வாசுதேவின் கவனம் முழுவதும் ரேடரிலும் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் செய்திகளிலுமே இருந்தது.

மனதில் ஒருவித கணக்குப் போட்டுக்கொண்டே அந்த ரீடிங்கை எல்லாம் பார்த்திருந்தவன், அத்தனை நாட்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளோட அதை ஒப்பிட்டவாறு இருந்தன அவன் விழிகள்.

"வாசு" என்று அவனின் தோளைத் தொட, "என்னாச்சு கேப்டன்?" என்றவனை பார்த்திருந்தவர் சிரித்தே விட்டார்.

"சி லெவல்ல இருந்து நல்லாவே மேல வந்தாச்சு மேன்.. ஜஸ்ட் ரிளாக்ஸ்!" என்றவர் அவனை திரும்பிப் பார்த்தவாறு,

"நீ ஹேப்பி'யா?"

முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன், "ரொம்ப" என்றான் மிகுந்த உற்சாகத்துடன்.

"ஓகே முதல் நாளே ரொம்ப போட்டு படுத்திக்காத. போகப் போக புரிஞ்சுடும் உனக்கு" என்றவாறு அவரின் ஏவியேசன் ஹெட்செட்டை சரி செய்துக் கொண்டு தன் பணியினை கவனிக்கலானார்.

வாசுதேவ கிருஷ்ணன் இப்போது பணியில் இருப்பது ஒரு டொமெஸ்டிக் பிளைட்டில். முதலில் உள் நாட்டு சேவையை முடித்து, அதற்கான தரவரிசை பட்டியலில் அவர்கள் (ஏவியேட்டர்ஸ்) இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைக்கு பின்பு, பைலட் என்ற நிலையில் இருந்து கேப்டனான பின்பே வெளிநாட்டு விமானங்களை இயக்க முடியும்.

இப்போது கூட அவனே அந்த விமானத்தை இயக்கவில்லை. கூட சக - கேப்டன் இருந்தார் தான். அவருடன் சேர்ந்தே தன்னின் நிலைபாட்டையும் மனதில் வைத்துக்கொண்டு விமானத்தின் போக்கை அவன் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு விமானத்தில் கட்டாயம் இரண்டு கேப்டன்கள் இருந்தே ஆக வேண்டும். அதற்கு மேல் துணை பைலட் ஒருவர் இருக்கலாம். அதன் கணக்கில் தான், இன்று தன்னுடைய பணியினை துணை பைலட்டாக ஆரம்பித்திருக்கிறான் வாசு.

"கேப்டன், ரிலிவ் பண்ணிட்டு வரேன்" என்றவன் தன்னுடைய ஹெட்செட்டை கழற்ற,

"சும்மா சும்மா, டெஸ்க் விட்டு போகக் கூடாதுனு டிரைனிங்கல சொல்லல?" என்றார் அந்த மற்றொரு கேப்டன்.

அவரின் பேச்சு வாசுவிற்கு எரிச்சலைக் கொடுப்பதற்கு பதிலாக, சிரிப்பையே கொடுத்தது.

"இது டொமஸ்டிக் ஃப்ளைட் கேப்டன்" என்றான் குறுநகையுடன்.

அவருக்கோ, 'மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனே' என்ற நிலையில் அமர்ந்திருந்தார் அவர்.

விமானங்களின் கட்டமைப்புகளை பொருத்து ஓய்வறை வசதிகளுமே மாறுபடும். அதுவும் டொமஸ்டிக் ஃப்ளைடில் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பெரும்பாலும் ஒரே ஓய்வறைதான் இருக்கும்.

ஆனால் அவர் சொல்லியதும் சரிதான். காக் பிட்டின் உள்ளே நுழைந்த பின்பு, முக்கியமான காரணம் தவிர்த்து வெளியே வரக்கூடாது. நெடுநேர பயணத்தின் போது அவர்கள் பயன்படுத்த ஏதுவாக காக் பிட்டின் உள்ளேயே ஓய்வறை வசதியோடு விமானங்களும் இருக்கினர்.

ஆனால் இது டொமஸ்டிக் விமானம் அல்லவா! அதைத் தான் வாசுவும் அவருக்கு நினைவூட்டினான்.

கதவைத் திறந்து வெளியே வந்தவன் புன்சிரிப்புடனே பயணிகளை கடந்து விமானத்தின் கடைசியில் இருந்த ஓய்வறை நோக்கி நடந்தான்.

சுற்றிலும் பார்வையை வைத்தவாறே வந்தவனை கண்டுகொண்டார், சாரங்கன்.

நன்கு சாய்ந்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் விழி எடுக்காது அவனையே பார்த்திருக்க, "என்ன தம்பி, காஃபி வாசம் ஆளத் தூக்குது" என்றார் இடக்காக.

அவரின் பேச்சைக் கண்டுகொண்டவன் புன்னகையுடன், "உங்களுக்கு பின்னாடி தானே ஸார் காலி இருக்கு. அதான் ஸ்மெல் நல்லா வருது போல" என்று சிரிப்பு மாறாமல் சொன்னவன் சென்றுவிட்டான்.

(கிச்சன் ஏரியவை தான் காலி என்று விமானத்தில் அழைப்பர்.)

இங்கு சாரங்கனோ, "எனக்கே கவுண்டர் கொடுக்கறான் பாரேன்." என்று திரும்பி நீலாவிடம் சொல்ல, அவரோ சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தார்.

"இது உங்களுக்குத் தேவையா" - நீலாம்பரி.

"தெரிஞ்சுட்டே இப்போ ஒரு ஸாரியாவது சொல்லுறானா பாரு" - சாரங்கன்.

"அதான் அப்போவே சொல்லிட்டாரே!" - நீலாம்பரி

"இருந்தாலும்.. பார்த்தா சொல்லக் கூடாதா? என்ன பழக்கமோ" என்றவருக்கு மனது அப்போதும் ஆறவில்லை.

விமானத்தின் கடைசி பகுதிக்கு செல்லும் முன்பு ஒரு சிறு திரைப் போட்டு மறைந்திருந்த இடத்தை வாசு கடக்கும் போது, அவன் பின்னால் கேட்ட மெல்லிய சப்தத்தில் திருப்பிப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன!

"ஸாரி" என்று அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவாறு கேட்ட அம்ருதாவை ஏனோ அந்த நொடி அவனுக்குப் பிடித்துவிட்டது.

அவனின் மார்ப்பு அளவிற்கு நன்கு பூசிய உடல்வாகுடன் ஒரு பொம்மையயைப் போல் இருந்தவள் அவனை அந்த நொடி கவர்ந்திழுத்திருந்தாள்.

மில்லி மீட்டர் புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவனுக்கு அந்த பயணம் ஏனோ மனதில் நிறைவாகத் தோன்றியது.

மனதில் ஏதோ ஒரு புதுவகை உணர்வு. 'இந்த dopamine வெளிய வந்துட்டான் போல' என்றவன் நினைக்க, அதுவே அவன் புன்னகையை இன்னும் அதிகரித்திருந்தது.

எதிரே இருந்தவளுக்கும் அது பரவிவிட, காரணம் அறியா ஒரு மெல்லிய சிரிப்புடன் தலையசைத்து அவனை கடந்திருந்தாள் அம்ருதவர்ஷினி!

இனிதாய் ஒரு காதல் வாழ்க்கைக்கு வித்திட காத்திருந்தது போல அங்கு ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையும் அழகாய் ஆரம்பிக்கப்பட்டது, விதியின் செயலால்.



அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 03

வடபழனி

'பாரி ஹோட்டல்ஸ்'
என்ற பெரும் பெயர் பலகை தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது சூரியனின் தயவால்.

காலை ஆறரை மணிக்கே காஃபியின் மனம், ஹோட்டலின் வாயில் வரை வந்து நாசியை துளைத்துக்கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஹோட்டலின் முக்கிய சிக்நேச்சர் டிஸ்!

காஃபி'க்கு என்றே ஒரு தனி கூட்டம் கூடும் அந்த ஹோட்டலில். அதற்கு அடுத்தபடியாக இருந்த காரணம் ஹோட்டலின் அலங்கார வடிவமைப்பு!

வாயிலின் இரண்டு புறத்திலும் மரத்தாலான பெரிய யானையின் சிற்பங்களுடன் கூடிய தோரனையான நிலவு படி.

'இன்றிகேட் கார்விங்' என்று சொல்லக்கூடய மிக நுட்பமான மர வேலைப்பாடுகள் அந்த நிலவுபடி முழுவதிலுமே இருந்தது. தமிழரை போற்றும் வகையிலும் அவர்களின் தொழிலான உணவிடுவதை குறிக்கும் வகையிலும்,

'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்'

என்ற கொன்றை வேந்தனின் ‘பகிர்ந்து உண்ணுதல்’ கருத்தை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், தங்களின் நிலைப்பாட்டை கூறவும் வாயில் நிலவுபடியில் அவ்வாறு சதுக்கியிருந்தனர்.

வாயிலின் இடதுபுற பக்கவாட்டில் சின்ன தாமரை குள அமைப்பும், வலது புற சுவர் முழுவதிலும் 'வெர்டிகல் கார்டன்' அமைப்பும் அத்துனை வரவேற்பாக இருந்தது.

செயற்கை மனம் எதுவும் இல்லாமல், பூக்களின் மணமே அங்கு ஒரு நிமிடம் நம்மை நின்று அதனை ரசித்துப் பார்க்க/ நுகர தூண்டும்.

அந்த இடத்தைத் தாண்டி ஹோட்டலின் உள்ளே செல்லும் பாதை முழுக்க முழுக்க மனதை க(வரு)மழும் வண்ணமாக ஒரு மெல்லிய தசாங்க மனம் சூழ்ந்திருக்கும்.

பூக்கலால் அலங்கரிக்கப்பட்ட உருளி, அதற்கு மேலே சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார், மூசிக வாகனன்.

பார்த்தாலே வணங்க தோன்றும் விதமாக இருந்தது அவரின் அமைப்பு. இருபக்கமும் ஐந்து அடி உயரத்திற்கு குத்து விளக்கும், அதற்கு கீழே இரண்டு மூங்கில் கூடைகளில் விரலி மஞ்சளும் உப்பும் இருந்தன.

ஹோட்டலின் உள்ளே, முழுக்க முழுக்க மரத்தினாலேயே இன்டீரியர் வர்க் செய்யப்பட்டிருந்தது.

சுவற்றை, ரவிவர்மாவின் ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் குத்தகைக்கு எடுத்திருக்க,
மெல்லிய மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஸ்பாட் லைட் வெளிச்சம் அங்கு சூழ்ந்திருந்தது.

சுவற்றில் எந்தவித பிரத்தியேக வண்ணப்பூச்சும் இல்லாமல், முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களை தெளித்துவிட்டபடி எழுதியிருந்தனர். சிறியது துவங்க பெரியது வரை கண்ணை உறுத்தாத அதே சமயம் அழகு மிளிரும் வகையில் இருந்தது.

ஏசியின் அளவு சற்று கூடுதலாகவே இருக்க, எப்போதும் இருக்கும் நாற்காலிகள் தவிர்த்து, உணவு மேசைகளில் சாய்விருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதுவே சொல்லியது அந்த ஹோட்டலின் அந்தஸ்தை!

மேல தொங்கும் ஷன்லி லைட், மேல்மட்ட பக்கவாட்டு சுவர்களில் பதித்திருந்த கண்ணாடியில் இடம்பெற்றிருந்த வேலைப்பாடு, அதற்கு கீழே இன்டோர் பிளான்ட்ஸ் என அத்தனை நுணுக்கமாக வடிவமைத்திருந்தார்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்று சொன்னாலும் கூட, சமையல் அறை எங்கும் இக்கால செஃப்'கள் தவிர்த்து கிராமத்து சமையல் கலைஞர்களே காணப்பட்டனர்

'அந்த வெங்காயத்த பொடிசா நறுக்கு.. டேய் முருகா நெய்ல முந்திரி பருப்ப வறுத்து எடு.. எலகட்டு வந்துடுச்சானு பாருங்க மணி அண்ணே' என்ற கலவையான குரல்கள் சமையல் கட்டில் சுறுசுறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தன.

அங்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த நபரிடம் விரைந்து வந்த அந்த ஹோட்டலின் ஊழியர்,

"ஸார், டிஃபன் ரெடி. சாப்பிடறீங்களா?"

"ஹான்.. ரூம்'க்கு கொண்டு வந்துடுங்க தம்பி" என்றவர் வாடிக்கையாளர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே தன்னுடைய அறையை நோக்கிச் சென்றார், சரவணபவன்.

பார்மலில் இருந்தவரின் தோற்றம் முப்பதுகளின் இறுதியாக தோன்றினாலும் அவருக்கு வயதோ, நாற்பத்தி எட்டு!

ஃப்ரேம் லெஸ் கண்ணாடியும், தங்க நிற கை கடிகாரமுமே அவரின் டிரேட் மார்க். அங்கிங்கு இருந்த வெள்ளை முடிகள் கூட ஒருவித அழகையே கொடுத்தது அவரின் வீட் (கோதுமை) நிற மேனிக்கு.

சுடச்சுட நெய் மணக்கும் சாம்பார் இட்லியும், கெட்டியாக இருந்த தேங்காய் சட்னியும் பார்ப்பதற்கே அமிர்தமாக இருக்க, உடன் அவரின் மனைவி அனு ரேகாவும் நினைவிற்கு வந்துவிட்டார்.

நெய் மணம் நாசியை குத்தகைக்கு எடுத்திருந்த போதிலும், காஃபியின் மணம் அதைவிட போட்டு படுத்திய போதிலும் தன் முன்பு இருந்த உணவுகளை டேபிளில் நெருக்கி வைத்து ஒரு செல்ஃபீ எடுத்துக்கொண்டவர், அதை புலனத்தின் வழி ரேகாவிற்கும் கடத்தினார்.

முகம் மலர்ந்த சிரிப்புடன் உணவை அவர் சாப்பிட ஆரம்பித்திருக்க, அந்த அறைக்குள் வேகமாக நுழைந்தார், சுந்தரேஸ்வரர்.

"சரவணா இந்த அம்ரூ இருக்காளே" என்று முன் நெற்றியில் கை வைத்தவாறு அவரின் அருகே அமர்ந்து கொண்டார் சுந்தரேஸ்வரர்.

அதற்குள் சரவணனிற்கு ரேணுவிடமிருந்து அழைப்பு வர, அதை எடுத்து ஒலிபெருக்கியில் போட்டவர், அண்ணனைப் பார்த்திருந்தார்‌.

"என்ன அம்ரூ இல்லாதனால குளிர் விட்டுப் போச்சா உங்களுக்கு? உங்கள யாரு அவளையும் இப்போ கோவாக்கு அனுப்ப சொன்னா?" என்று எகிரியவரிடம்,

"நான் தான்மா அனுப்புனேன்" என்றார் ஒரு மாதிரி குரலில் சுந்தரேஸ்வரர்.

"மாமா.." என்ற அனுரேகா முதலில் அதிர்ந்தாலும் பின்,

"அவர் தட்ட கொஞ்சம் பாருங்க மாமா.. நெய் மெதங்குது இட்லில. அம்ரூ இப்படி போன உடனே இவர் இங்க ஆட ஆரம்பிச்சுட்டார்" அனு திரும்பவும் பொரிய, சுந்தரேஸ்வரருக்கு அப்போதுதான் அந்த பொறியே தட்டியது!

"டேய், உண்மைய சொல்லு. இதுக்குதான் நீ அம்ரூவ அப்பா கூட அனுப்புச் சொன்னியா?" என்றவர் தம்பியை முறைத்தவாறு கேட்டிட, எங்கே தன்னுடைய இட்லியும் நெய் மிதக்கும் சாம்பாரும் பரிபோய்விடுமோ என்ற அச்சம் சரவணனின் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்தது.

தட்டை தன் பக்கவாட்டிற்கு நகற்றியவர், "என்ன'ண்ணே.. என்னைய பார்த்து இப்படி கேட்டுட்டீங்க. வயசானவங்க தனியா போகறாங்களேன்னு சொன்னா.." என்றவரை இடைமறித்த அனுரேகா,

"எப்படி எப்படி.. மூனு மாசத்துக்கு முன்ன தான லண்டனுக்குத் தனியா போனாங்க ரெண்டு பேரும்! அப்போ அவங்க வயசானவங்க இல்லையோ" என்றவரின் குரலில் நக்கல் தோனிக்க,

"நான் நெய் சாப்பிட்டா, நீ ஏன்டீ நைய் நைய்னு குதிக்கிற?" சரவணபவன் கடுப்பாகி கத்திவிட,

"உன்னைய இப்போ நான் ரைய்னு தான் ஒன்னு விடபோறேன் பாரு.. காலங்காத்தாலையே பீபி ஏத்திட்டு" என்று கோபத்தில் சுந்தரேஸ்வரரும் கத்த ஆரம்பித்திருந்தார்.

'ஸ்பீக்கர்ல போட்டது தப்பாகிடுச்சே' என்று நொந்தவாறு, "அப்பறமா கூப்பிடுறேன், வை" என்று போனை வைத்தவர், இட்லியை ஸ்பூனில் குத்திக் குத்தி சாப்பிட ஆரம்பித்திருந்தார்.

"டேய்.. அத வெச்சுட்டு வேற கொண்டுவர சொல்லு" - சுந்தரேஸ்வரர்

"அண்ணே.. இன்னிக்கு மட்டும்" - சரவணபவன்

"என்னிக்குமே நீ இதயெல்லாம் தொடவே கூடாதுனு ஆதவன் சொன்னானா இல்லையா"

"சரீரீ.." என்று பல்லைக் கடித்துக்கொண்டு அந்த உணவை அவர் புறம் தள்ளினார் மனதே இல்லாமல்.

"பரவால பரவால.. ஒரு நாள் சாப்பிட்டுக்கோ. சாப்பாட்டை வீண் பண்ணக் கூடாதுல்ல" என்றார் சுந்தரேஸ்வரர் தம்பியின் சுருங்கிய முகத்தைப் பார்த்தப் பின்பு.

'வீம்பு பிடித்தால் இருக்கிறதும் போய்விடும்' என்று வேகவேகமாக உணவை உட்கொள்ளத் தொடங்கினார் அவர்.

அதுவரை இருந்த ஒரு கடினத் தனம் முகத்திலிருந்து மாறிட, தம்பியையே மென்னகையுடன் பார்த்திருந்தார், சுந்தரேஸ்வரர்.

சிறுவயதில் தொடங்கிய அவர்களின் ஓட்டம் இப்போது தான் சற்று குறைந்திருக்கிறது போல தோன்றினாலும், அதற்கு அவர்கள் கொடுத்த விலை என்னவோ தங்களின் உடல் நலனை!

பெரிதாக எதுவும் பாதிக்கவில்லை என்று சந்தோஷபட்டாலும், உள்ளதையும் காப்பாத்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை நிரம்பவே அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

அன்பு. இந்த ஒற்றை சொல் செய்யக்கூட மாயங்கள் தான் எண்ணற்றது. இப்பூவுலகில் இருக்கும் எல்லா உயிர்களுமே இந்த ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு பொட்டிக்குள் அடைபடும் பூனையாகவே மாறிவிடும்.

உறவாகட்டும், நம்மால் செய்யப்படும் உன்னத செயல்களாகட்டும், அன்பிருந்தால் எல்லாம் வசமாகும்.

இதுவே சாரங்கனின் வாழ்க்கை மந்திரம்! அதுவே தான் அவரின் உயர்விற்கும் காரணகர்த்தா.

மதுரையில் அமைந்திருந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வாழ்க்கையில் ஏதாவது சாதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த சாரங்கன், நிலபுலன்கள் அனைத்தையும் தந்தையின் பேச்சை மீறி விட்டுவந்தவரை ஆதரித்தது அப்போதைய மதராசப்பட்டினம்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம், சாரங்கனையும் விட்டுவிடவா போகிறது?

அப்பாத்தாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிட்டவரின் கைகளும் கூட அவரின் கை பக்குவத்திற்கு அடிமையாகியிருக்க, அதையே மூலதனமாக வைத்து அவர் தொடங்கிய தொழில், ஒரு சிறு உணவுக் கடை.

பத்துக்கு ஆறு என்ற இடத்தில் தொடங்கியவரின் பயணம் இப்போது ஏழு ஹோட்டல்களை கொண்ட, 'பாரி குரூப் ஆப் ஹோட்டல்ஸ்' என்று விஸ்தரித்து நிற்கிறது.

கடும் உழைப்பு. விடாத மனோதிடம். இந்த இரண்டும் இருந்தால் யாராலும் வெற்றி அடையலாம் என்ற கூற்றை சாரங்கனும் அவரின் புதல்வர்களும் நடத்திக் காட்டியிருந்தனர்.

எடுத்தவுடனேயே எல்லாம் பொன்னாகி விடவில்லை தான். நேரமெடுத்தது.

முயலும் ஆமையும் போட்டியில் எப்படி மெல்ல மெல்ல வந்த ஆமையின் முயற்சி வென்றதோ அதேதான் இங்கும்.

அப்போது அவர்கள் முயலாமல் இருந்திருந்தால், வாழ்க்கை நிச்சயம் ஒரு ஆமையாகத் தான் இருந்திருக்கும்.

ஆனால், ஆமை வேகத்தையும் முயலின் முயற்சியுமே அவர்களை உயரத்தில் இப்போது வைத்திருக்கிறது என்பது தான் உண்மை!

சுந்தரேஸ்வரர், சரவணபவன் என்ற இரு பிள்ளைகளுடன் சாரங்கனின் 'பாரி ஹோட்டல்ஸ்' பெயரும் புகழுடன் இருப்பதற்கான மற்றொரு காரணம், சமையலின் சுவை.

தொண்ணூறு சதவீதம் சுவையாக இருந்தாலும் அந்த பத்து சதவீத அன்பு தான் சமையலையே தூக்கி நிறுத்தும். சமையல் ஆட்கள் சுணங்கியோ, சோர்ந்தோ இருந்தால் அவர்களின் உணர்வும் சமையில் கடத்தப்படும் என்பதை ஆழமாக நம்புவார், சாரங்கன். ஏன் அதுதான் உண்மையும் கூட.

அதன் பொருட்டே மிகுந்த அனுசரணையாகத் தான் ஊழியர்களிடம் இருப்பார்கள் அவர்கள் மூவரும். ஆனால் ஏமாளிகளாக இருக்கவில்லை.

அந்த பிணைப்புத் தான் இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலம். உறவிலும் தொழிலும் அவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமே இந்த அன்பும் கலகலப்பும் தான்.



"ஸாரி" என்றவளை பார்த்திருந்தவன், இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு வந்த புன்னகையையும் அடக்கி அவள் தலையசக்கும் முன்பே ஏதும் பேசாமல் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவாறு சென்றுவிட்டான் வாசுதேவன்.

அவனின் நடவடிக்கை அம்ருதாவிற்கு சற்றும் பிடிக்கவில்லை என்றாலும், அவளின் செயலால் தானே இது என்று நினைப்பும் அவளுக்கு இல்லாமல் இல்லை.

அவளின் பின்னோட வந்த சாரங்கனும், "என்னவாமா அவனுக்கு" என்று இடக்காகக் கேட்டவரிடம்,

"காஃபி ஊத்துனது தப்பு தான சாரு"

"அவன் பண்ணது மட்டும் சரியா.. என் டார்லிங்க தள்ளி விட்டுட்டு எப்படி ஓடினான் ராஸ்கல்.." என்று கடுகடுத்த முகத்துடன் முறைத்துக்கொண்டு நின்றிருந்தவரின் நிலையோ, ஸ்கூல் படிக்கும் குழந்தையாகவே தான் இருந்தது.

நீலாம்பரியை அவன் தள்ளிவிட்டதே அவருக்கு கோபத்தைக் கொடுத்திருக்க, சற்று முன்பு அவன் கொடுத்த மொக்கையும் இப்போது அதனுடன் சேர்ந்திருந்தது.

அதன் வெளிப்பாடாக இருந்தது இவரின் இந்த சிறுபிள்ளை கோபம்.

சின்ன சிரிப்புடன், "எனக்கு யாரோ ஒருத்தர் 'யாராவது தப்பு செஞ்சா, நீயும் அவங்களுக்குத் திரும்ப ஏதாவது செய்யனும்னு இல்லை. சிரிச்சுட்டே கடந்து போயிடுனு' சின்னதுல இருந்து சொல்லிக் கொடுத்திருக்கார் சாரு! அவர் யாருனு உனக்குத் தெரியுமா" என்று பீடிகையுடன் இழுத்தவளை முறைத்துக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்றுவிட்டார், சாரங்கன்.

அங்கு நீலாம்பரியோ வந்து அமர்ந்தவரின் நிலை புரியாது, "என்னங்க அந்த பிள்ளைக்கு இதுதான் முதல் டிரிப்பாம். ஒரு வாழ்த்து சொல்லலாம்'னு பார்த்தா முகத்த எப்படியோ வெச்சிட்டு போயிடுச்சு" என்று வருத்தம் பொங்க சொன்னவரை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று பார்த்திருந்தார் அந்த யங் மேன்.

"கிழவி.. கொஞ்சம் அமைதியா வா. வாழ்த்து சொல்லனுமாம்.. இப்போ அதான் முக்கியம்" என்று அவர் முகத்தை திருப்ப,

"அப்போ நீங்க என்ன கொமரனோ, எழுபது தாண்டியாச்சு இதுல கிழவனுக்கு பவுசப் பாரேன்.. வந்துட்டாரு" என்று நீலாம்பரி நொடிக்க, அம்ருதா அவ்விருவரின் முகத்தையும் சிரிப்புடன் பார்த்து நின்றிருந்தாள்.

காக் பிட்டில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் மீண்டும் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. டோபோமைன் தன் வேலையைத் திரும்ப ஆரம்பித்திருந்தது போலும்.

மஞ்சள் நிற சட்டையும் இளநீல நிற டெனிம் கோட்டும் அதற்கு தோதாய் இருந்த சிகப்பு நிறத்தில் மெல்லிய வேலைப்பாடுகள் இருந்த ஸ்கர்ட்டும் அணிந்திருந்தவள் அவனை கவர்ந்திருந்தாள்.

ரசனையாய் எல்லாம் அவன் பார்க்கவில்லை தான், ஆனாலும் அவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை அவள் நிகழ்த்தி இருக்கிறாளே! அதனைத் தொட்டு அவளை பார்த்திருந்தவனின் கண்களைத் தாண்டி மனதையுமே அவள் பிடித்திருந்தாள்.

தப்பே செய்திருந்தாலும் முகத்திற்கு நேராக அவள் கேட்ட 'ஸாரி' அவனை ஒரு கணம் யோசிக்கவும் வைத்திருந்தது.

தன்னுடைய செயலுடன் ஒப்பிட்டவனுக்கு, வெக்கமாய் போய்விட்டது. சாரங்கனின் கேளியுமே இப்போது அவனை குத்தவும் செய்திருந்தது.

ஒன்றரை மணி நேரப் பயணம், டபேலின் விமான நிலைத்தில் முடிவடைந்திருந்தது.

செக்கிங் முடித்து, உடமைகளை எடுத்துக்கொண்டு அவரவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சாரங்கன், நீலாம்பரி தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ரிசார்ட் ஊழியர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வந்திருக்க, கிளம்ப ஆயத்தமானர்வர்களை திரும்பிப் பார்க்க வைத்தது வாசுதேவ கிருஷ்ணனின் குரல்.

"நீலு பேபி.." என்ற குரலுக்கு நீலம்பரி திரும்பினாரோ இல்லையோ, படக்கென்று திரும்பி பார்த்தார் சாரங்கன்.

'உசாரு டோய்' என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அருகே வந்து நின்றான், வாசுதேவ கிருஷ்ணன்.

"ஹாய் நீலு பேபீ" என்றான் துள்ளல் குரலில், அந்த பேபீயில் அழுத்தம் கொடுத்து.

சிரித்த முகமாக நின்றிருந்தவனை, சிரிப்பு மறைந்த முகத்துடன் பார்த்து நின்றிருந்தார் சாரங்கன்.

"என்ன ஓல்ட் மேன், பீபி டேப்லெட் மார்னிங் போட்டீங்களா" என்று அவரையும் வாரிவிட, சிங்கம் சிலிப்பிக்கொண்டு வந்தது சண்டைக்கு.

"யார் ஓல்ட் மேன்? நானா.. நானா.." என்று தன் தலையில் இருந்த தொப்பியை பிடித்தபடி வாசுவை நோக்கி முன்னேறியவரை தடுத்த நீலாம்பரிக்குக் கூட வாசுவின் பேச்சு பிடிக்கவில்லை.

"பின்ன இல்லையா? எங்க நீலு பேபிக்கு முன்ன நீங்க ஓல்ட் பீஸ் தான்" - வாசு

"ஹலோ தம்பி, இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு?" - நீலாம்பரி

"நீ என்ன அவன் கிட்ட பேசிட்டு" கடுப்புடன் மனைவியை அடக்கினார் சாரங்கன்.

"சாரு.. கொஞ்சம் இரு. என்ன மிஸ்டர். பைலட், என்ன வேணும் உங்களுக்கு?" - அம்ருதா

"என் நீலு பேபி தான்" என்றான் வாசு அசராமல்.

அவன் பதிலால் மற்றவர்கள் தான் அசந்து போயிருந்தனர்.

போட்ட பீபி மாத்திரையும் தன் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்க, சாரங்கனுக்கு படபடவென்று வர ஆரம்பித்திருந்தது.

"யார் தம்பி நீங்க? இதுக்கு முன்ன நான் உங்களப் பார்த்ததுக் கூட இல்லையே?"

"ஹான் ஹான்.. இல்லையே நீலு பேபி. என்னைய அவ்வளவு சீக்கிரமா மறந்துட்டீங்களா என்ன? நியாபகப் படுத்தி பாருங்க?" என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன்.

"தெரியலையே" என்றவர் அப்போது தான் கணவனை கவனித்தார்.

எழுபத்து நான்கு வயதில் மனைவி மற்றொரு ஆணிடம் பேசுவது கூட அவருக்கு பொறுக்காது, முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

"நியாபகப் படுத்தும் அளவுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா" என்ற இளப்பமாக சாரங்கன் கேட்க,

"மதுரா ஹாஸ்பிட்டல் நியாபகம் இருக்கா நீலு பேபி" என்றவனை அதிர்ந்து போய் பார்த்து நின்றிருந்தார் சாரங்கன்.

அமுதம் தொடரும்...



 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 04

"எவ்வளவு தங்கமான பிள்ளை தெரியுமா அம்ரூ.." கால்களை கடற்கரை மணலில் நீட்டியவாறு வாசுதேவனைப் பற்றி சொன்ன சாரங்கனை கடுப்புடன் பார்த்திருந்தாள், அம்ருதவர்ஷினி.

ஒரு விஷயத்தை ஒருமுறை சொல்லலாம், இரண்டுமுறை சொல்லலாம். ஆனால் இத்தொடு பலநூறு முறைகள் தாண்டிய அவரின் பேச்சு அவளுக்கு கடுப்பையும் எரிச்சலையுமே தந்தது.

அவர்கள் மூவரும் கோவா வந்து இத்துடன் மூன்று நாட்கள் ஆகின்றன. கோவாவைப் பற்றிய பேச்சுக்களை விட, வாசுதேவ கிருஷ்ணனின் பேச்சுதான் அந்த முதியவர் அதிகமாக பேசியிருந்தார்.

வாசுவின் 'மதுரா ஹாஸ்பிடல்' என்ற உச்சரிப்பு சாரங்கனுக்கு போதுமானதாக இருந்தது
அவனை 'யார்' என்று கண்டுகொள்ள.

"என்ன, நியாபகம் வந்துச்சா ஓல்ட் மேன்" என்றவன் சாரங்கனின் முகம் பார்க்க,

"க்ருஷ்ணா" என்றார் மிகுந்த மென்மையுடன் முகத்தில் பூத்த மென்னகையும் சேர்த்து.

"நல்லா இருக்கீங்களா தம்பி" என்று அவன் கைகளைப் பற்றி நீலாம்பரிக்கு அத்தனை சந்தோஷம். இத்தனை வருடங்கள் சென்று தன்னை அடையாளம் கண்டு, பேச வந்திருக்கிறானே என்ற நினைப்பு.

"ஸாரி நீலு பேபீ! இன்னிக்கு தான் பஸ்ட் டே இங்க அதான் காலேல கவனிக்காம ஓடிட்டேன்" என்று உள்ளார்ந்து மன்னிப்பைக் கேட்டுவிட்டான் அந்த கண்ணன்.

அவன் முகத்தையே பார்த்திருந்த சாரங்கனுக்குத் தான் வார்த்தையே வரவில்லை.

நேரமாவதை உணர்ந்து அவர்களிடமிருந்து விடைபெற, "கண்ணா.. உன் நம்பர் தரியா" என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்ட நீலாம்பரியிடம் மறுப்புக் கூறாது தந்துவிட்டே சென்றான் வாசுதேவன்.

அன்று அவர்கள் மூவரும் வேறு எங்கும் செல்லாமல், ரிசார்ட்டிலேயே தங்கிவிட்டனர்.

அம்ருதா திடீரென்று அவர்களுடன் இணைந்ததால் சிலபல பார்மாலிட்டிஸ் முடித்து அங்கேயே அன்றைய நாளை கழித்திருந்தனர்.

மனதில் வாசுவைப் பற்றிய நினைப்பு மூவருக்கு, அதை சற்று தள்ளி வைத்து தங்களின் இயல்புக்கு மீண்டிருந்தனர்.

மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை, அதுவும் கடற்கரையை ஒட்டியவாறு இருந்த அறைதான் அவர்களுக்கு ஒதுக்கியிருந்தனர். தாத்தாவும் பேத்தியும் போட்ட ஆட்டத்தில் பூந்தியானது என்னவோ பாவப்பட்ட பாட்டி தான்!

அடுத்த நாள் எந்தவித அலுப்புமில்லாமல் நன்றாக விடிய, அவர்களின் பயணம் தன்ஷிகரை நோக்கி பயணமானது.

தன்ஷிகரின் ஸ்பைஸ் ஃபாம் அவர்களின் முழுநாளையுமே களவாடிக்கொள்ள, சமையல் நிபுணரான சாரங்கனுக்குத் தான் அங்கிருந்த மசாலா பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அவர்கள் தந்த உணவின் ருசியிலும் சுற்றம் மறந்து, மயங்கியிருந்தார்.

காலை தொடங்கிய அவர்களின் 'ஸ்பைஸ் எக்ஸ்ப்லோர்' பின்னந்தி மாலையில் இரவு உணவுடன் முடித்துக்கொண்டு கிளம்பினர்.

அடுத்த நாள் முழுவதும், கடற்கரையிடம் தங்களின் நேரத்தை குத்தகைக்கு விட, சாரங்கன் செய்த அலும்புகள் தான் பெண்கள் இருவருக்கும் தாளவில்லை.

புதுப் புது உணவு வகைகளை ஆர்டர் செய்து அங்கு கரையில் போடப்பட்டிருக்கும் குடைகளின் கீழே இருந்த டெக் சேரில் அமர்ந்து கொண்டு, அசைவத்தையே சாப்பிடாத நீலாம்பரியிடம் வம்பு வளர்ப்பார்.

"கிழவி.. உனக்கு இத சாப்பிட்டா செமிக்காதுனு சொல்லு.. என்ன மாதிரி உடம்ப ஃபிட்'டா வெச்சிருக்கனும்… டுன் டுன் ஆண்ட்டி மாதிரி ஒரு சைஸ்" என்பார் நண்டினை கடித்தபடி.

பின் சற்று பொருத்து, பலவகை நோஜிடோக்களை (Nojito, மதுபானம் கலக்காத சோடா சேர்த்து தயார்செய்யப்படும் பானம்) வாங்கி, தன்னை 'குடிமகன்' போல் பாவனை செய்து அவர்களின் பீபியை எகிற வைப்பார்.

"இவ எனக்கு அப்போவே சமமில்லாம தான் இருப்பா பேபீ.. பாரு இந்த சாரங்கனோட அழகுக்கும் திறமைக்கும் இந்த ஒயின் டிரம் லேடிய கட்டி என் வாழ்க்கையே வேஸ்ட் பண்ணிட்டாங்க வேஸ்ட்.."என்று ஒயின் கிளாஸ்ஸை கையில் ஏந்தி ஒரு ஆட்டம் ஆடுவர்.

"என்ன சாரு.. இளம திரும்புதோ"

"அப்கோர்ஸ் மை பேபி.. ஆம் ஸ்டில் யங், யூ நோ" என்பார் வரவழைத்த குளறல் குரலில்.

இவருக்கு எழுபத்து நான்கு வயது என்று வெளியே சொன்னால், நம்மைத் தான் கல்லைக் கொண்டு அடிக்க வருவார்கள், அப்படி ஒரு ஆட்டம்.

"உங்க தாத்தன கூட்டிட்டு வந்து, இந்த கோவால கூட என் உயிர வாங்கனுமா நீ?"

"அட நீங்க தான ஆசைப் பட்டு கேட்டீங்க நீல்ஸ்" என்று அவரை நக்கலாகப் பார்த்துக்கொண்டே அம்ரூ கூற,

"அதுக்குனு.. ஒரு கோவில் கொளத்துக்கு போனா கூட புண்ணியம் சேரும். இவரு என்னனா குடியும் கூத்துமாவில்ல இருக்காரு" அவர் அங்கலாய்க்க,

"நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத நீல்ஸ், அது ஜஸ்ட் லெமன் கலந்த சோடா தான். ரெண்டு நாளா சாப்பாடு ஓவர்ல, அதான் டைஜஸ்ட்காக வாங்கி குடிக்கறார்."

அம்ருதா சொன்ன பின்புதான் நீலம்பாரிக்குமே அது பல்பு எரிய இருந்தும், "என் புருஷனப் பத்தி எனக்காத் தெரியாது?" என்று அவர் சிலாகிக்க,

"இப்போதான் யாரோ குடியும் கூத்துனு சொன்னதா நியாபகம்"

"எவடி அவ.. என் பேத்திக்கிட்ட அப்படி சொன்னது" என்றவரின் பதிலால் கடுப்பும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது அவளுக்கு.

இரு நாட்கள் ஊரினை சுற்றியதின் விளைவாக வந்தது சாருவிற்கு மூட்டு வலி!

பிறகென்ன ரிசார்டிலேயே அன்றைய ஜாகையாக இருக்க, பெரியவர்கள் இருவரும் சற்று ஆசுவாசமாக இருந்தனர்.

ஆனால் அம்ரூவால் சும்மாவோ இல்லை பார்த்த இடத்தையே பார்த்துக் கொண்டே இருக்க முடியாமல், கரை மணலில் நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் நன்கு வளர்த்தியான உயரம் தான். குறைந்தது ஐந்தரை அடிக்கு மேலான உயரமும் பூசியபடியான உடல்வாகு தான் அவளுக்கு.

கொழு கொழு கன்னங்கள் கோதுமை நிற மேனியவளுக்கு அத்தனை அழகாகவே இருந்தது‌. முதுகு வரையான கூந்தலை, அப்படியே விட்டிருந்தவள் இன்றும் அதே ஸ்கட்ர் அண்ட் டாப் தான்.

கால்கள் மணலில் புதையப் புதைய நடந்து கொண்டிருந்தவளின் யோசனைகள் யாவும் வாசுவை சுற்றியே!

அன்று ஏர்போர்ட்டில் அவனின் பேச்சாகட்டும் அதன் பிறகான சாரங்கனின் வெளிப்பாடாகட்டும், எல்லாம் வேறுவிதமாகத் தான் இருந்தது அவளுக்கு.

"நைட் முழுக்க என் கூட, என் கைய பிடுச்சுடே தான் இருந்தார் அந்த தம்பி",

"ஒவ்வொரு தடவையும் என்ன, என்ன மாத்திரை கொடுக்கறாங்க, என்ன செய்யறாங்கனு என் கிட்ட சொல்லிட்டே இருந்தார்",

"டீ வாங்கி கொடுக்கறதுல இருந்து பாரிக்கு தண்ணீ கொடுத்த வரைக்கும் எல்லாம் அந்த புள்ள தான்டா செஞ்சது",

"அவளுக்கு கீழ இறங்க முடியல, வலில மொகத்த சுழிச்சுட்டு நின்னா 'வாங்க பாட்டீனு' தூக்கிட்டு போவான் பாத்ரூம்'க்கு" - சாரங்கனின் இப்பேச்சுக்கள் தான் அவளை அப்போது சூழ்ந்திருந்தவை.

"சாரு சொல்லுறதப் பார்த்தா அவன் அங்க இருக்கனும்.. ஆனா எப்படி பிளைட்ல" என்று வாய்விட்டே அவள் கூற,

"கண்டிப்பா எங்கையோ இடிக்குது அம்ரூ! டோண்ட் டிரஸ்ட் எனிவன்" என்று எப்போதும் அவள் சொல்லிக்கொள்ளும் வாக்கியத்தை இப்போதும் சொல்லி முடிக்க,

"மேம்.. யூவர் கிரண்ட்பா இஸ் சர்ச்சிங் யூ" என்று அங்கிருந்த ஊழியர் ஒருவர் வந்து கூறவும் தான், சுற்றத்தை கவனித்திருந்தாள் அம்ருதா.

"அச்சச்சோ" என்று பதறியவளின் நிலை புரிந்த அந்த ஊழியரும் அவளுடனே நடந்தார், ஒன்றரை கிலோ மீட்டருக்கு!

அங்கு சாரங்கன் ஆடிய ஆட்டத்தில், 'அம்ருதாவை யாரோ கடத்தி விட்டனர்' என்ற நிலைக்கே அந்த ரிசார்ட் மேலாளர் நினைத்துவிட்டார்.

தூங்கி எழுந்தவர்கள் இங்கு தான் இருப்பாள் என்று நினைத்து சுற்றிலும் தேட, அங்கு அம்ருதா இல்லாமல் போகவே, பயந்துவிட்டனர் அந்த முதியவர்கள்.

ஏற்கனவே சூடுகண்டவர்கள், இப்போது பாஷை தெரியாத ஊரில் வயது பெண்ணை காணாமல் ஒரு நர்த்தனமே ஆடிவிட்டார் சாரங்கன்.

"ஜஸ்ட் கால் தி காப்ஸ்.. ஐ வாண்ட் மை கிராண்ட் சைல்ட் ரைட் நவ்" - சாரங்கன்

"வி ஆர் லுக்கிங் ஃபார் ஹர் சர். ப்ளீல் பி காம்" - ரிசார்ட் மேனேஜர்

"அம்ரூ, எங்கடி அம்மா போன" என்று நீலாம்பரி ஒருபுறம் அழுக, அங்கு சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட ஆரம்பமானது.

மனதுக்குள் அடித்துக்கொள்ள பெயர்த்தியை காணாது பரிதவித்து, பதறித்தான் போயிருந்தனர் இருவரும்.

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த அம்ருதாவை தலை முதல் கால் வரை ஆராய்ந்துவிட்டே அவளை நெருங்கி வந்தனர் இருவரும்.

"எங்கடி அம்மா சொல்லாம போன.. அந்த போனையாவது எடுத்துட்டு போனா தான் என்ன" அவளை கடிந்தவாறே சாரங்கன் அம்ரூவின் கைகளை பிடித்துக்கொள்ள,

"பொறுப்புங்கறதே இல்லையா வர்ஷினி உனக்கு? எத்தன தடவ சொல்லிருக்கேன் தனியா போகாத.. போகாதனு.. உயிர் போய் வந்துடுச்சு எங்களுக்கு. ஊர் பேரு தெரியாத எடத்துல இருந்துட்டு இப்படியா பண்ணுவ" என்று நீலாம்பரியும் தன் பங்கிற்கு அவளை பேச, நொந்துவிட்டாள் அம்ருதவர்ஷினி.

"நீங்க தூங்கிட்டு இருந்தீங்கனு தான் வெளிய போனே நீல்ஸ். ஆனா எனக்குத் தெரியல போல, கொஞ்சம் தூரமா போய்டேன்"

"தூரமா போயிட்டியா? என்ன பொண்ணுடீ அம்மா நீ? சுத்துப்புறத்த பக்காம அப்படி என்ன பராக் பார்த்துட்டு இருந்த? என்ன யோசனை வேண்டி கிடக்கு முதல்ல வெளிய போனா? கவனம் இல்லாம என்னாவது ஆகியிருந்த ஈஸ்வரனுக்கு நான் என்ன பதில் சொல்லுறதாம்?" என்று படபடவென்று பொரிந்த நீலம்பரியைப் பார்த்தவளுக்குத் தோன்றியது என்னவே, 'நாம வாயே திறந்திருக்கக் கூடாது' என்பதே.

"என்ன பேபி.. வை ஆர் யூ லைக் திஸ்? இப்படி தான் கேர்லஸ்ஸா இருப்பாங்க" சாரங்கனும் தன் பங்கிற்கு கேட்டிட,

"ஆம் ஸாரி.. இதுக்கு மேல முடியாது. அழுதுடுவேன்" என்றவள் அங்கிருந்த மேலாளரிடம்,

"ஸாரி ஃபார் தி டிரபில் ஸார். வில் லுக் வித் திஸ்"

ஒரு சிறு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றவரின் மனதில் நிச்சயம் அம்ருதா தந்தூரி'தா ஆகியிருப்பது நிச்சயம்!

"இங்கையே எத்தன நேரம் இருக்கனு தான் வெளிய போனேன். அதுவும் ரொம்ப எல்லாம் இல்லை, கடல ஒட்டித்தான் நடந்துட்டு இருந்தேன் சாரு. இது பிரைவேட் ரிசார்ட். இங்க ஒன்னும் அப்படி ஏதும் நடக்காது, சில்" என்றாள் தன்மையாக.

"எந்த புத்துல பாம்பிருக்கும்னு தெரியாது வர்ஷினி. அதுவும் இங்க இருக்கிறவங்களப் பாரு, எப்ப பாரு தண்ணீ அடிச்சிட்டு. என்ன கன்றாவி இதுலாம். இந்த மாதிரி எடத்துல எப்படி உனக்கு பாதுகாப்பு இருக்கும்னு சொல்லுற? மொதல்ல இங்க இருந்து போகலாம் வாங்க.. இன்னும் மனசு கெடந்து அடிச்சுக்குது எனக்கு" என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, சாரங்கனும் அவரின் அருகேயே அமர்ந்து கொண்டார்.

வயதான காலத்தில் இவர்களை போட்டு படுத்திவிட்டோமே என்ற வருத்தம் சிறிது இருக்கவே தான் செய்தது. இருந்தும் தன்னின் நிலையை நினைத்து மனதில் ஒருவித அழுத்தம் கூடுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

அழுத்தமாக இருந்தது இப்போது மேலும் மேலும் அழுத்த, வாசுவிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் பெண்ணவள்.



"மரமண்ட, மரமண்ட.. சரியான தயிர்சாதம் தான் நீங்க" என்று எதிரில் இருந்தவனை ஏக வசனத்தில் திட்டிக்கெண்டிருந்தாள், காவ்யா.

பாவமாய் அவளையும் அவன் முன்னே இருந்த பப்ஸையும் மாறி மாறி பார்த்தவன், தன் நிலையை நினைத்து அவசரமாக கடவுளிடம் ஒரு பெட்டிசனை போட்டு விட்டான்.

"பாக்காதீங்க.. கடுப்பாகுது" என்றவள் ரோஸ் மில்க்கில் இருந்த ஸ்ட்ராவை டம்ளரில் குத்திக் குத்திக் குடிக்க ஆரம்பித்திருந்தாள்.

"கன்னுக்குட்டி, எனக்கு புரியவே இல்ல போ" என்றவன் அவள் திட்டியதைக் கூட கண்டுகொண்டதாய் தெரியாமல் அவள்‌ சொல்லும் விஷயத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தான்.

"ஆமா.. உங்களுக்கு ஸ்கால்பெல்(Scaples), ஃபோர்செப்ஸ்(Forceps), சிசர்ஸ்(கத்திரி) தவிற வேறெதுவுமே தெரியாது பாருங்க.."

(Scaples, Forceps அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தபடும் சாதனங்கள்)

"ம்ப்ச்ச்.. இப்போ என்ன? புரியலனு சொன்னது ஒரு குத்தமா? இல்லை நீயாவது சொல்ல வேண்டியத தெளிவா சொல்லனும். அதுவுமில்லாம என்னையவே குத்தம் சொல்லிட்டு" என்றவன் தன் கண்ணாடியை சரி செய்தவாறு எழுது நின்றுவிட்டான், ராகவ் கிருஷ்ணன்.

'இவரோட வர்க் பத்தி சொன்னா மட்டும் கோபம் முணுக்குனு வந்துருமே' என்று முணுமுணுத்தவள், "சரி, சாப்பிடுங்க. மதியமும் நீங்க சாப்பிடலேனு அஸ்வின் அண்ணா சொன்னார்"

"இதுக்கு மட்டும் ஒன்னுமில்லை.. சொல்ல வேண்டியத சொல்லிடாத" என்றவன் மஷ்ரூம் பப்சையும் ரோஸ் மில்க்கையும் கடகடவென்று சாப்பிட்டு முடித்திருந்தான்.

"வேற என்னாவது வாங்கிட்டு வரவா?" என்றவளை ஒரு பார்வை பார்த்தவன்,

"நீ கேட்டது கிடைக்க கொஞ்ச நாள் ஆகலாம் கன்னுக்குட்டி. அதுவரை நீ வெயிட் பண்ணித்தான் ஆகனும். நோ அதர் கோ" என்றவன்‌ அவள் தலையில் கை வைத்து, ஆட்டிவிட்டே சென்றான் இதழ்களில் மறைந்த புன்னகையுடன்.

'அவனுக்குப் புரிந்துவிட்டதே போதும்' என்று நினைத்தவளின் முகத்திலுமே புன்னகை அரும்பியிருக்க, எப்போதும் தலைத் தூக்கும் அவளின் துடுக்குத் தனம் இன்றும் தன் வேலையைக் காட்டியது.

விரைப்பாய் நிமிர்ந்த நடையுடன் செல்லும் ராகவின் பின்னால் இவளும் ஓடினாள்.

ஓடியவளை அந்த மருத்துவமனையே பார்த்திருந்தாலும், அதையெல்லாம் அவள் சட்டை செய்வாளா என்ன?

இத்தனைக்கும் அவர்களின் காதல் அந்த மருத்துவமனை அறிந்த ஒன்றே!

வெள்ளைக் கோட்டையும் ஸ்டெத்'தையும் (ஸ்டெத்தாஸ்கோப்) எடுத்துக்கொண்டு அதி அவசரமாக ஓடியும், லிஃப்ட்டில் ஏறியிருந்தவனை தவறவிட்டிருந்தாள்.

ஒரு நொடி அவளின் முகம் சுருங்கிவிட்டது. அணிந்திருந்த புடவை முந்தியை இறுக்க பற்றியபடி நின்றவள் பின் ஒரு மூச்சை எடுத்துவிட்டவாறு படிகளில் ஏறலானாள்.

இரண்டாவது தளம்.

வெக்கு வெக்கு என ஏறியதின் விளைவு, மூச்சு வாங்கியபடி ராகவின் அறையில் நின்றிருந்தால்.

கதவை தட்டவும் இல்லை, தாழ்ப்பாள் போடவுமில்லை.

"என்னடீ"

"தண்ணீ கொடுங்க"

"உட்காந்து பொறுமையா குடி"

"ஹான்.. ஹான்.."

"என்னத்தா தான் படிச்சியோ.."

"டாக்டர். ராகவ் கிருஷ்ணன், எம்.பி.பி.எஸ்., எம்.டி (நுரையீரல் நிபுணர்)”

அவள் சொல்லிய விதமும் பாவமும் அவனுக்கு சிரிப்பையே கொடுத்து.

"இந்த மரமண்ட, மலமாடு.. இந்த பேருலாம் எங்க போச்சாம்?"

"அது நான் மட்டும், எனக்கே எனக்காகக் கூப்பிடுற பேரு." என்றாள் முகத்தை வெட்டிக் கொண்டு.

"நீங்க எப்பறமோ வாங்கிக் கொடுங்க.. ஆனா என்கூடவாது வரலாம்ல." என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

"காவ்யா.." அழுத்தமாக ஒளித்த அவனின் வார்த்தை, அவளுக்குத் தான் வலித்தது.

"ப்ளீஸ் ரகு.."

"ம்ப்ச்.. என்ன காவ்யா, எனக்குனு சில ப்ரின்ஸ்பல்ஸ் இருக்கு. அத உடைக்க முடியாது. புரிஞ்சுக்கோ"

"உன்ன.." சத்தமாக முனங்கியவள், அந்த பெரிய டேபிளை சுற்றிக்கொண்டு அவனின் ஷர்டைப் பிடித்திருந்தாள் ஆத்திரமாக.

"என்ன ரொம்பத் தான் பண்ணுறீங்க. இப்போ நான் என்ன கேட்டுடேன்னு ரொம்ப ஓவரா போறீங்க. கல்யாணம் பண்ண போறவர் தானேனு ஒரு சாரீ தான வாங்கி தர சொன்னே? அது ஒரு குத்தமாயா? இத்தா பெரிய ஹாஸ்பிடல் ஓனர் வேற. ஒரு டூ தவுசன்'க்கு ஒரு சாரீ வாங்கி தரமுடியாதாம். என்கிட்டையே உங்க ப்ரின்ஸ்பல், வெங்காயபல், தேங்கபல் எல்லாம் காட்டுவீங்களோ? சோடாபுட்டி, கண்ணில்லாம பண்ணீடுவேன் பார்த்துக்கோ" மூச்சுவாங்க சொன்னவள் அவனை நெருங்கி இருக்க, அவள் பேச்சை விழி விரித்து கேட்டுக்கொண்டிருந்தான், ராகவ் கிருஷ்ணன்.

"ஒரு புடவைக்காக என் பையன் கண்ணில்லாம இருக்கனுமா ம்மா" என்று வெளியே நின்றவாறே கேட்டவரின் குரலால் பதறி விலகியிருந்தாள் காவ்யா.

ராகவிற்கோ முகம் லேசாக சிவந்துவிட்டது. மெல்லிய சிரிப்புடன் அழுத்தமாக கைகளை மூடியவனால், காவ்யாவையோ அவனின் தந்தையையோ பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.

அறை கதவை தட்டியபடி நின்றிருந்தவரிடம், "உள்ள வாங்க ப்பா" என்ற ராகவின் குரலிற்கு பின்பே உள்ளே சென்றார்.

மகன் ஜன்னலை பார்த்தபடி நிற்க, வரப் போகும் மருமகளோ, பூமிக்குள்ளேயே தலையை விட்டுவிடுபவள் போல நின்றிருக்க, அத்தனை நேரம் அவள் பேசியப் பேச்சைக் கேட்டவருக்கு சிரிப்பு பீரிட்டது.

"ப்பா.." என்ற ராகவின் குரல் மிகுந்த கூச்சத்துடன் வர,

"நான் இப்போதான் ராகவா வந்தேன். முழுசா கூட கேட்கல." என்றவர் காவ்யாவிடம், "ஸாரிடா காவ்யா" என்றார் உள்ளார்ந்து.

"அச்சோ.. என்ன மாமா"

"ப்பா.. எதுக்கு இப்போ ஸாரி எல்லாம் கேட்டுட்டு"

"உங்க ப்ரைவசில இன்ட்டரப்ட் பண்ணிட்டேன்ல ம்மா.. அதான். ஆனா ஒரு அட்வைஸ், என்ன பேசுறதா இருந்தாலும் வர்க் பிளேஸ்ல இனி வேண்டாம். தனியா போய் பேசுங்க. எல்லாரும் இங்க ஒன்னுபோல இருக்க மாட்டாங்க" என்று மென்மையாய் சொன்னவர் முகத்தில் நீங்காத சாந்தமும் அது கொடுக்க சிரிப்பும் இருந்து.

அவர் முரளி கிருஷ்ணன். ராகவின் பாசமிகு அன்பான தந்தை. அதைவிட, பெரும் மருத்துவர் டாக்டர். முரளி கிருஷ்ணன் என்றால் தெரியாதவர்கள் அந்த மெட்ரோ நகரில் இல்லை.

நகரின் மிக முக்கிய 'மதுரா' ஹாஸ்பிட்டலின் நிறுவனர். தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்!

ஆனால் அது எல்லாவற்றையும் விட குணமான, மகிழ்வான, மனிதநேயம் கொண்ட எதார்த்தவாதி முரளி கிருஷ்ணன்னாகவே தான் அவருக்கு அத்தனை புகழும் சேர்ந்திருந்தது.

இந்த பண்பே அவரை பெரிய மனிதராக மதிக்கவும் வைத்திருந்தது. இன்றைய தலைமுறையினரின் நிலைபாடையும் புரிந்துகொண்டு அதை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்தவும் செய்துவிடுவார், முரளி கிருஷ்ணன்.

அவரின் மன்னிப்பு, காவ்யா வருந்துவாளே என்பதற்காக மட்டும் தான். பின்னாளில், 'உங்க அப்பா ஒட்டு கேட்டுட்டார்' என்ற ஒரு சொல் வராமல் இருக்கவும் இந்த 'ஸாரி' உதவலாம் என்பது அவர் கருத்தாக மனதோடு இருந்தது.

ஆனாலும் அவருக்கே மகனின் நிலை உருத்தியதின் விளைவாகத் தான் கேட்ட அந்த மன்னிப்பையும் அழுத்தமாக கேட்டுவிட்டார்.

ஆனால் வேலை நேரத்தில் அவர்களின் தனிமை, அவருக்கு பிடிக்கவில்லை என்பதும் உண்மை. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே அரிது என்றாலும், இதுபோல் வேலை நேரத்தில் பேசுவது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது.

காவ்யாவின் தேவையோ இல்லை ராகவின் தேவையோ யாருக்காவது தேவைபடும் என்ற நினைப்பு அவருக்கு.

ஆனால் இந்த மாதிரி சிறு சிறு நிகழ்வுகள் தானே பின்னாளில் பொக்கிஷமாக மனப்பெட்டகத்தில் இனிமையான அனுபவங்களாக நிலைத்து நிற்கும்!

எதையும் புரியாதவர் இல்லை அவர். வாழ்க்கை வலிக்க வலிக்க கற்றுக்கொடுத்த பாடத்தின் விளைவுகளின் வெளிபாடுகள் தான் இவை.

"ஸாரி மாமா.. இனி இப்படி நடக்காது" என்றாள் காவ்யா உள்ளே போன குரலோடு.

"விடுமா.. சரி இன்னிக்கு டியூட்டி முடிஞ்சதா உனக்கு?"

"முடிஞ்சுருச்சுங்க மாமா.. ஓபி ஒரு எட்டு பேர் பார்த்தேன் அப்புறம் ஒரு டெலிவிரி கேஸ். உமா மேம் கூட தேட்டர்'ல இருந்தேன், டைம் அப்படியே போயிடுச்சு அதான் உங்க டிப்பார்ட்மெண்ட் வரல மாமா" சின்ன சிரிப்புடன் அவள் சொல்லிக் கொண்டிருக்க,

"ஏன் எங்க டிப்பார்ட்மெண்ட் பக்கம் வந்தா என்னவாம்" என்று குறைபட்டுக் கொண்ட ராகவனிடம்,

"நீ ஏன்டா பொறாம படுற? என் மருமகளுக்கு கார்டியாலஜில இன்ரஸ்ட். நான் உன்ன கார்டியாக் படிக்க சொன்னா, முடியாதுனு போனவன் தான நீ. இப்போ இந்த பொண்ணயும் கெடுக்க பார்க்குறீயா.. பிச்சுடுவேன் பார்த்துக்கோ"

"சரி சரி.. விடுங்க. அவளுக்கு என்ன விருப்பமோ அதையே படிக்கட்டும். இன்னும் ஒரு ஆறு மாசம் இங்கையே இருந்து நல்லா கத்துக்கட்டும்"

"எதுக்கு? இங்கையே உன் பின்னாடி வால் மாதிரி இருக்க சொல்லுறீயா. ஸ்பெஷலைசேசன் முடிச்சு இங்க தான வரப்போறா, அப்புறம் என்ன?" என்று மகனிடம் வாதிட்டவர் காவ்யாவிடம்,

"உனக்கு என்ன ஃபர்தரா படிக்க விருப்பமோ அத படிடா. கார்டியாலஜியோ இல்லை கைனக்கோ அது உன் விருப்பம். ஆனா கல்யாணம் பண்ணிட்டு படி. அதுனால சீக்கிரமா பீஜி நீட் அப்ளை பண்ணிடு. படிக்க சந்தேகம் வந்தா சொல்லு, ஐ வில் கைட்" என்றவர் தன்மையாக.

இவர்கள் இருவரின் சபாஷனையும் கேட்டவளின் பதிலோ, "எப்போ மாமா கல்யாணம் பிக்ஸ் பண்ணுவீங்க" என்பதையே.

ராகவோ 'காரியத்துலையே கண்ணா இருக்காளே' என்று மனதில் நினைத்துக்கொண்டு சிரிப்பை உதிர்க்க முரளியோ,

"எங்க வீட்டு பெரிய மனுசர் வரட்டும்டா.. சீக்கிரமா முடிச்சடலாம்" என்றவருக்கு,

"பாருங்க பாருங்க.. வரும் போது யாராவது ஒரு ஏர் ஹோஸ்டஸ்ஸ கூட்டிட்டு தான் வருவான். நீங்களும் எனக்கு ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான் பண்ண போறீங்க" என்று ராகவ் பேசியபடி இருக்க,

"எனக்கே அந்த கொடுப்பினை இல்லையே சன்" என்றார் சிவாஜியின் பாணியில்.

மூவரும் சற்று நேரம் தொழில் சார்ந்து பேசிய கொண்டிருந்தனர்.

"சரிங்க மாமா.. நான் அப்படியே கிளம்பறேன். டைம் ஆயிந்தி" - காவ்யா

"இரு ம்மா.. டீ டைம் வேற ஏதாவது சாப்பிட்டு வரலாம்" - முரளி கிருஷ்ணன்

"ஆமா.. எனக்கும் லைட்டா பசிக்குது. இனி ஏழு மணிக்கு தான் எனக்கு அப்பாயின்மெண்ட்" - ராகவ்

"அதுக்குள்ள பப்ஸ் டைஜஸ்ட் ஆகிட்டா ரகு" என்று கண்கள் சிரிக்க கேட்டவளை முறைத்தபடி இருந்தான் ராகவ்.

"என்ன ராகவ்" என்று கோபமாக கேட்ட தந்தைக்கு, "ரொம்ப பசி ப்பா. அதான் ஒன்னே ஒன்னு குட்டியா தான் சாப்பிட்டேன்" என்று பாவமாய் சொன்ன மகனை முரளியும் முறைத்தபடி தான் பார்த்திருந்தார்.

"விடுங்க மாமா, இன்னிக்கு ஒரு பத்து கிலோமீட்டர் ஓடட்டும்" என்று சிரிப்புடன் சொன்னாள் காவ்யா.

மாலை நேர தேனீர் இடைவேளையாக இருக்க, சாப்பிட வெளியேறிய மூவரின் முகத்திலுமே அப்பட்ட மகிழ்ச்சியும் சிரிப்பும்.

நீண்ட நாட்களுக்கு பின்பான சுவாரஸ்ய பேச்சு, அதன் வெளிப்பாட்டை அவர்கள் முகத்தில் நன்றாகவே காட்டியிருந்தது.

அதிலும் ராகவ்வின் அருகே அவனை நெருங்கியவாறு நடந்து வந்த காவ்யாவின் முகத்தில் அத்தனை சந்தோஷக் கலை.

அதை இனி நீடிக்க வைத்திருப்பானா ராகவ்?


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 05

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து அவளின் நினைவுகளை தள்ளி வைக்க நினைத்தும் முடியாது தன் மனதுடன் போராடி கொண்டிருந்தான், வாசு.

முழுதாய் நான்கு மணிநேரம் கூட அவனுடன் அவள் இருந்திருக்க மாட்டாள். ஆனால் இந்த நான்கு நாட்களாக அவனை பாடாய் படுத்தி எடுத்தது அம்ருதாவின் நினைவுகள்.

"என்னடீ என்னை பண்ணுற" என்று நெஞ்சை நீவிவிட்டவனுக்கு அங்கு அவளின் வாசத்தை அழிக்க முடியும் என்று தோன்றவில்லை.

"வாசு.. ஸ்டெடி மேன், ஸ்டெடி" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு இருந்தவனை வினோதமாக பார்த்திருந்தார் அவனின் கேப்டன்.

"என்ன வாசு" என்றவர் அவன் தோளில் தட்ட, மறுப்பாக தலையசைத்தவன் இதயம் ஏகத்திற்கும் எகிறி குதித்தது.

மீண்டும் அதேபோல் நெஞ்சை அவன் நீவி விட, அவரோ பயந்துவிட்டார்.

"என்னடா பண்ணுது.. எனி மெடிக்கல் எமர்ஜென்சி" என்று சற்று பதட்டமாக அவர் கேட்க, பக்கென்று சிரித்துவிட்டான் வாசு.

"இல்ல கேப்டன்.. சம்திங் இஸ் ஹேப்பெனிங் ஹியர்" என்றான் சற்று உல்லாச குரலில்.

அவனின் விரிந்த சிரிப்பும் முக நிறைவும் அவருக்கு அவனின் நிலையை சொல்லியது.

"லவ்வா மேன்" என்றார் அவரும் அதே சந்தோஷக் குரலில்.

"கேப்டன்.. ஹு இஸ் இன் லவ்? எனி மெடிக்கல் எமர்ஜென்சி?" என்று தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பரபரப்பாக எதிர்கேள்வி வர, அப்போது தன் இருவருக்கும் உறைத்தது தங்களின் மடத்தனத்தை.

"நத்திங், நோ இஸ்யூஸ். ஆல் ஆர் கிளார் ஹியர்" என்று ஒருவாரு சமாளித்தவுடன் தான் மூச்சே வந்தது அவருக்கு.

வாசுவிடம் ஒரு முறைப்பைத் தந்தவர் ரேடாரில் கவனம் வைத்தார்.

'நான் ஏதோ பேசினா இவருக்கு என்னவாம்.. இப்போ இது தேவையா' என்று மனதில் நினைத்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

காரணமற்ற சிரிப்புடன் அவன்
முன்னால் சென்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இப்போது ஏதோ அவ்வளவு அழகோவியமாக காட்சி தந்தது.

வெறும் பஞ்சு மூட்டை என நினைத்து இருந்தவனுக்கு அது கூட இப்போது அத்தனை ஈர்ப்பதாய் தோன்ற ஆரம்பித்திருக்க, பார்க்கும் யாவும் கண்ணைக் கவர ஆரம்பித்திருந்தது.

'என்னடா இது எதப் பார்த்தாலும் கவிதையாத் தெரியுதே..' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனுக்கு தெரியவில்லை அதுதான் காதலின் முதலாம் படி நிலை என்று.

மும்பையில் இருந்து சென்னை வரும் விமானம் அது. சென்னையில் தரையிறங்கிய உடன் கேப்டனிடம் நன்கு நான்கு மொத்துக்கள் வாங்கிய பின்புமே அவனின் சிரிப்பு மட்டுப்படவில்லை.

"சில்லி பாய், ஒரு நிமிசம் ஒன்னுமே புரியல. நெஞ்ச நெடு வானத்தில நீவிவிட்டு ஏதோ பேசினா நான் என்னனு நினைக்கறதாம்"

"அப்படி இருந்தா நானே சொல்லுவேன் ராப், இட்ஸ் ஜஸ்ட்.. ம்ப்ச்" என்றவன் தலையைக் கோதிக்கொள்ள,

"ஹு இஸ் ஷீ" என்றார் சப்தமாக சிரித்தபடி.

"வர்ஷினி" என்றான் மிகுந்த மென்மையாக.

அவன் முகமும் குரலும் அவருக்கு அவனின் நிலையை சொல்லிவிட, வாசுவின் முதுகில் மெல்ல தட்டியபடி சென்றுவிட்டார் கேப்டன் ராபின்.

"இம்சடி நீ.." என்றவன் மானசீகமாக அவளின் கொழுத்த கன்னங்களை பற்றி இழுத்தான், கைகளால் மட்டும்!

விமான நிலையத்தில் இருந்து வெளியேறி தன்னின் அப்பார்ட்மெண்ட்'டை நோக்கி பயணித்தான் வாசு அவனின் ஆஸ்தான டஸ்டரில்.

உடலில் ஒரு துள்ளல். அடுத்த மூன்று தினங்கள் அவனுக்கான விடுமுறை. அதுவே ஒரு சந்தோஷக் களிப்பு என்றால் இப்போது திடீரென்று பூத்திருந்த வர்ஷினியின் நினைவுகள்.

ஆம், நினைவுகள் தான். அந்த சிறு நேர நினைவு தந்த மயக்கம் காதலாய் பரவி படர்ந்திருந்தது அவனின் உடலெங்கும். ஆனால் அதை சட்டென்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது ஏற்கவும் தோன்றாது ஒருவித இன்ப அவஸ்தையில் ஆட்பட்டிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

"என்னமோ உள்ளுக்குள்ள நடக்குது" என்று தன் தலையைத் தட்டியபடி காரை செலுத்தியவன் அப்பார்ட்மெண்டை அடைந்திருந்தான்.

நல்ல குளிர் காற்று வீசியது. மழை வரும் அறிகுறியாய் மண் மனம் அவன் நாசியை நிமிண்ட, அதனை ரசித்தபடி படிகளில் ஏறினான்.

முழுதாய் எட்டு மாடி! நின்று நிதானமாக ஏறி வீட்டை அடைந்து, அவனின் பிரத்யேக சோபாவில் பொத்தென்று விழுந்தவுடன் தான் அவனின் களைப்பின் அளவு புரிந்தது அவனுக்கு.

"ம்ம்ம்ம்'' என்று உடலை ஒரு முறுக்கு முறுக்கி எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்த சென்றுவிட்டான்.

வெந்நீர் குளியலில் உடல் அலுப்புப் போக குளித்து வந்தவன், வீட்டில் அணியும் ஒரு இலகு ஆடையை அணிந்து கொண்டு தன்னின் பிரத்தியேக உணவான குழம்பியை தயாரிக்க ஆரம்பித்த நேரம் வீட்டுன் மணி அடித்து.

கெட்டிலில் தண்ணீரை கொதிக்கவிட்டு, கதவை திறக்க சென்றவனின் முன்பு மினி மாரியாத்தாவாக நின்றிருந்தாள், காவ்யா!

"டேய், பாப்பா!" என்று உற்சாகமாக கத்தியவாறே அவளை வரவேற்றான் வாசு.

"உஸ்ஸ்.. கத்தாத" என்று பல்லைக் கடித்து, வாயில் விரல் வைத்து அவனை அடக்கியவள் காலணியை திக்குக்கு ஒன்றாய் விட்டெறிந்து சென்றமர்ந்தாள்.

காவ்யாவை ஒரு பார்வை பார்த்தவன் அவள் அமர்ந்திருந்த விதமும் முகச் சிவப்பும் அவனை உசுப்ப, அவள் கழற்றி எறிந்த காலணிகளை கையால் எடுத்து அதற்குறிய இடத்தில் வைத்தான்.

"வாசு.. என்ன இது" என்ற அதட்டலுடன் வந்து நின்றான் ராகவ்.

வியர்வையில் குளித்து முகம் கடுக்க வந்து நின்ற அண்ணனை அவன் கேள்வியாய் பார்க்க,

"அவ ஸ்லிப்பர்ஸ்ஸ நீயேன் எடுக்கற? அறிவில்ல உனக்கு.. மகாராணி அப்படி என்ன பண்ணுறா"

"ஏன் அவன் எடுத்தா உங்களுக்கு என்ன பிரச்சனை?" - காவ்யா

"ஹே.. நீ கழட்டி எறிஞ்சத எடுக்க அவனென்ன உனக்கு வெச்ச வேலக்காரனா. இங்க என்ன எல்லாரும் உனக்கு சேவகம் பண்ணணும்னு நினச்சுட்டு இருக்கியா.. எப்ப பாரு அத செய் இத செய்னு ஆடர் போட்டுகிட்டு. மைண்ட் இட் அந்த நினப்பு இனி உனக்கு வரவே கூடாது.. ச்சை என் மூடே கெட்டுச்சு.. இடியட்" என்று தலையைத் தடவிக்கொண்டே அவனுக்கான அறைக்குள் சென்றுவிட்டான் அவன்.

எப்போதும் நடக்கும் கூத்துதான். ஆனால் வார்த்தை பிரயோகம் இன்று சற்று தடித்துவிட்டது, அதையும் விட காவ்யாவின் மனது நொறுங்கிவிட்டது என்பதே சரி.

இடிந்துபோய் நின்றிருந்தவளின் அருகே செல்லக் கூட முடியாமல் அசையாது அவ்விடமே வாசுவும் நின்றிருக்க, கண்களை கடந்து அவள் கண்ணீர் கன்னத்தை தொடப்போகும் நொடி அதை சிறையெடுத்திருந்தான் ராகவ்.

"ஸாரிடா கண்ணம்மா" வழக்கம் போல் சொன்னவனை அடி வெளுத்து விட்டாள் பாவையவள்.

"உங்களுக்குத் தோன்றத பேசுவீங்கனா, எனக்கு என்ன தோனுதோ அத நானும் பேசுவேன்.. முடியாட்டி போக வேண்டியது தான. அப்படி என்ன நான் பெருசா கேட்டேன்னு அங்க பிடிச்சு திட்டிட்டே வரிங்க? என் ஸ்லிப்பர்ஸ் தேவா'ண்ணா எடுக்கக் கூடாதா? சொல்லுங்க எடுக்கக் கூடாதா. அவன் அப்படி தான் எடுப்பான். உங்களுக்கு இத கேட்க தான் எந்த உரிமையும் இல்ல" என்றவள் அவன் முகத்தைக் கூட பாராது அவன் அறையை விடுத்து வாசுவின் அறைக்குள் சென்று மறைந்தாள்.

"ஸாரி வாசு" தம்பியின் முகத்தைப் பார்க்காது அவன் தலைக்குனிந்து மொழிந்திட,

"எங்க ரெண்டு பேர்க்கும் நடுவுல நீ வராதனு உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்டா.. தேவை இல்லாம பேசிப்பேசியே அவள இப்படி டார்ச்சர் பண்ணுறதுக்கு நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்"

"டேய்" என்று அதிர்ந்து வாசுவின் அருகில் வந்தவன், "ஷீ இஸ் மை லவ்" என்றான் கண்கள் கலங்க,

"ஆனா நீ அப்படி அவள நடத்தறதில்லை ராகவ். உனக்குத் தகுந்த மாதிரி அவள நீ மாத்தற. அது உனக்கு புரியுதோ இல்லையோ, எங்களுக்கு நல்லா தெரியுது.. அதுல அவ காயப்படுறானு நான் சொல்லமாட்டேன்.. செத்து பிழைக்கிறா! அதுதான் உண்மை" என்றவன் ராகவை தாண்டிக்கொண்டு கிச்சனை நோக்கிச் சென்றான்.

பாதி தண்ணீருக்கு மேல் ஆவியாகி இருந்தது கெட்டிலில். திரும்ப நீரை விட்டு, அது கொதித்ததும் காஃபியை கலந்தவன் ராகவிடம் ஒரு கப்பைத் தர, நிமிர்ந்து வாசுவைப் பார்க்கக் கூட அவனால் முடியவில்லை.

அவனுள் அவன் நடந்த விதத்தை ஆராய்ந்து பார்த்தவனுக்கு தன் மீதான மிகப் பெரும் தவறு புரிந்தாலும் அந்த நிமிடம் அவனின் செய்கைகளை மாற்றிக்கொள்ளவோ இல்லை விடும் வார்த்தைகளை யோசித்தோ பேசுவது சாத்தியமற்றதாவே தோன்றியது.

அது அவனின் இயல்பு. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சும்மாவா கூறினார்கள்.

அவனை தொட்டிலில் போட்டு ஆட்டியவரின் முழு உருவமாக இவன் இருந்தால், அடுத்த முரளி கிருஷ்ணனாக காவ்யா இனி உருவாகாமல் இருக்கவே போராடுகிறான், வாசுதேவ கிருஷ்ணன்.

கப்பை அவன் முகம் நோக்கி நீண்ட, கண்ணாடியை கழற்றி கண்ணைத் துடைத்துக்கொண்டே அதை வாங்கியபடி காவ்யாவை பார்க்கச் சென்றான் அந்த காதலனான மருத்துவன்.

மழை வழுக்க ஆரம்பித்திருந்தது. பால்கனியின் பக்கம் மழைநீர் கடலில் கலப்பதை பார்த்தவாறு மிடறு மிடறாக குழம்பிய பருகத் துடங்கியவனின் மனதில் எண்ணமெல்லாம் அவர்கள் இருவரே!

ராகவின் இயல்பை அவன் குற்றம் கூற முடியாது. அவன் மாற்ற முயற்சி செய்தாலும் அது அவனால் முடியாமல் அவனையே அவன் நொந்து கொள்வது இன்றளவும் நடக்கும் ஒரு நிகழ்வு.

ஆனால் காவ்யா? அத்தனை மென்மையான பெண்! 'மெச்சூர்ட் கேர்ள்' என்று சொன்னாலும் கூட மெல்லிய மனம் உள்ளவள்.

அதனால் தானே ராகவ்வை கவர்ந்துவிட்டாள்! இருந்தும் அவனுக்கு அந்த நினைப்பு இல்லாமல் தானே அவளை சில சமயங்களில் வார்த்தையால் வதைக்கிறான்.

எண்ணத்தின் போக்கு இப்படி இருக்க, அவனை நிகழ்விற்கு கொண்டுவந்தது அவனின் கைப்பேசி அழைப்பு.

ஒரு புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை ட்ரூ காலர் தன்னின் பணியை செவ்வன செய்து 'அம்ரூதவர்ஷினி சுந்தரேஸ்வரன்' என்று முந்தி வந்து காட்டிவிட, வாசுவின் சிரிப்பிற்கு அளவே இல்லை.

அவள் அழைப்பாள் என்று இவனுக்குத் தெரியும் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவனே எதிர் பாராதது!

'ஆக மேடம் மண்ட வேல செய்ய ஆரம்பிச்சுருச்சு' என்று நினைத்தவன் அழைப்பை ஏற்க, அந்த புறம் பேசியது என்னவோ சாரங்கன்.

"ஹவ் ஆர் யூ மை பாய்?" என்று ஆர்ப்பாட்டமாக கேட்ட சாருவின் குரலில் இங்கு வாசு புஸ்வானம் ஆகிவிட்டான்.

"நல்லா இருக்கேன் ஓல்ட் மேன். ஹாவ் டூ யூ டு" என்று அவனும் பேச,

"ம்ம்.. பரவாயில்லை. நீ யங்காவே இருந்துக்க. சரக்கடிக்கற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேனா" என்ற சாரங்கன் நக்கலாக கேட்க, பின்னால் இருந்து, "சாரு.. என்ன பேசுற" என்ற அம்ரூவின் குரல் மிகத் தெளிவாக கேட்டது வாசுவிற்கு.

"ஹாஹாஹா.. இல்ல தாத்தா. இப்போதான் ஒரு பெக் உள்ள போச்சு. அது தாங்கும் இன்னிக்கு" என்றான் அவனும் அவருக்கு நிகர்.

முகம் லேசாய் கூம்பிவிட்டது தாத்தாவிற்கும் பெயர்த்திக்கும்.

"சரி, நான் வேணா அப்பறமா கால் பண்ணுறேன் தம்பி" என்று சுதியிறங்கி சாரங்கன் சொல்ல,

"பரவாயில்லை தாத்தா, சொல்லுங்க. ஆம் ப்ரீ நவ்" என்றான் விளையாட்டை விட்டுவிட்டு.

"ம்ம்" என்று அவர் விட்ட பெருமூச்சு அவனுக்கு நன்கு கேட்டுவிட, "எல்லாம் நார்மல் தான தாத்தா" என்றான் சற்று அக்கறையுடன்.

"தேங்க்யூ மை சைல்ட்" என்றார் உள்ளார்ந்த அன்பு குரலில்.

"தாத்தா?"

"அன்னிக்கே நான் சொல்லியிருக்கனும் தம்பி. என் பாரிய நல்லா பார்த்துகிட்ட நீ. எனக்கு என்ன செய்யனும்னு அப்போ ஒன்னும் புரியல. அவ அப்படி கிடக்கும் போது எனக்கு என் கையே ஒடஞ்சுட்ட மாதிரி இருந்துச்சு. வயசான கிழவன் தான நானு, மனசுல தெம்பு இருந்தாலும் உடம்பில இல்லையே ராசா..‌. நான் இருந்து பார்க்க வேண்டியத நீயும் உங்க அப்பாவும் தான பார்த்துக்கிட்டீங்க சாமி.‌ அந்த சாமிக்கு ஒரு வார்த்த நன்றி சொல்ல முடியாம இந்த கிழவன் இத்தன வருசமா ரொம்ப அவதிபட்டுடேன். அன்னிக்கு நீ வந்து நின்ன பாரு, எனக்கு பேச்சே வரல..‌ அதான் இப்போ.." என்றவர் விசும்பல் குரல் தான் வாசுவிற்கு கேட்டது.

"சாரு.. சாரு.. அமைதியா இருங்க.. தாத்தா ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." என்ற அம்ருதாவின் குரல் கேட்க,

"வர்ஷி.. வர்ஷி.." என்று சற்று சப்தமாகவே வாசு அழைத்தான் அந்த புறத்திலிருந்து.

சட்டென்று போனை எடுத்து,
"ஹலோ" என்க,

"அவர் ஷர்ட ரிமூவ் பண்ணி, சாஞ்சு உட்கார வை. தண்ணீ கொஞ்ச கொஞ்சமா கொடு.. நிறையா வேண்டாம்.. நெஞ்ச நீவி விடு" என்று கட்டளை போல் அவன் சொல்ல, அனைத்தையும் செய்தவள், "ம்ம்.. பண்ணிட்டேன்" என்றாள் சற்று பதட்டத்துடன்.

"நீ அமைதியாகு முதல்ல" என்றவன், "மூச்ச நல்லா இழுத்துவிட்டு தாத்தா பக்கத்துல உட்கார்" என்றான் அவளை தெரிந்தவன் போல.

உண்மையில் அம்ருதாவிற்கு அந்த மாதிரியான நிகழ்வுகளை பார்த்தால் படபடவென்று வந்துவிடும். சாரங்கனுமே மிகுந்த உணர்ச்சி வசமாக இருக்க, சற்று மூச்சு வாங்கியது அவருக்கு.

இருவரும் சரியாகும் வரை தொடர்பில் இருந்தவன், "ரெண்டு பேரும் முதல்ல நார்மல் ஆகுங்க.. இப்படி சின்ன விசயத்துக்கு எல்லாம் எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன்? தாத்தா பீ கூல். நான் அப்பறம் கால் பண்ணுறேன். முதல்ல படுத்து எழும்புங்க.." என்றவன் அழைப்பை துண்டிக்க, மீண்டும் ஒரு பத்து நிமிடம் சென்று இசைத்தது அவன் கைப்பேசி.

"என்னாச்சு வர்ஷி" என்றான் வாசு, என்னவோ ஏதோ என்று.

"நீங்க டிரிங் பண்ணுவீங்களா?" என்று கேட்டவளின் குரலில் டன் கணக்கில் கவலை தான் மண்டிக்கிடந்தது.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 06

தன் மன அழுத்தங்களை கொட்டித் தீர்த்துவிட்டதாளோ என்னவோ அந்த வான மங்கை தெளிவாக காட்சி தந்துகொண்டிருந்தாள். நிலவு ஒருபுறம் தன் ஒளியை லேசாக வானத்திற்கு ஆதரவு தருவது போல் ஒளிர்ந்துகொண்டிருக்க, அதை ஜன்னல் வழியே பார்த்தவாறே வாசுவிடம் பேசிக்கொண்டிருந்தாள், அம்ருதவர்ஷினி.

பால்கனியில் அமைந்திருந்த செயற்கை புல்வெளியில் சாரங்கனின் குசனில் அமர்ந்தவாறு, "நீங்க ட்ரிங் பண்ணுவீங்களா?" என்று அவனிடம் அவள் கேட்ட கேள்வி, சற்று அவளுக்கு அதிகப்படியாகத் தோன்றியிருந்தது.

அந்த புறத்தில் இருந்தவனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகைக் கீற்று அந்த நிலவுக்கு ஒப்ப.

"ம்ம்" என்று மூச்செடுத்துவிட்டவன் பேச ஆரம்பிக்கும் முன்னதே,
"ஸாரி, உங்க பெர்சனல் கேட்கனும்னு கேட்கல..அது.." என்றாள் சற்று தயங்கியக் குரலில்.

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் வர்ஷினி"

"என் நேம் தெரியுமா உங்களுக்கு.." என்றாள் சற்று ஆச்சர்யமாக.

அவனோ மனதில் 'உன் ஜாதகமே என்கிட்ட இருக்கே வர்ஷிமா' என்று எண்ணியவன் அவளிடம்,

"நீலு பேபி சொன்னாங்க" என்றான் மென்மையாக உண்மையை உரைத்தபடி.

"ஹோ.." என்றவளுக்கு அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை.
தோன்றவில்லை.

அவனுடன் இப்படி உள்ளார்ந்து, உணர்ந்து பேச வேண்டும், தன் மனதில் இருப்பதை பற்றி வினவ வேண்டும் என்ற பல வேண்டும்கள் இருந்தாலும் அந்த நொடி இதத்தை அவள் இழக்க விரும்பவில்லை.

ஏன் இந்த இதம்? ஏன் இந்த உணர்வு? என்ற வினாக்களுக்கு பதிலறியாது, அதை தெரிந்துகொள்ள விரும்பாது அவனுடன், இந்த ஆளுமைக்காரனுடன் பேச வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இப்போது அவளுக்கு!

"வர்ஷினி, இருக்கீங்களா?"

"சொல்லுங்க.."

"நீங்க தாங்க சொல்லனும்" என்று சிரித்தவனின் சப்தம் அம்ருதாவை சென்றிருந்த நேரம் சாரங்கனின் இருமல் சப்தம் அவளைக் களைத்தது.

"இருங்க.. சாருக்கு இருமல் வருது.. பார்த்துட்டு வரேன்"

"பாருங்க லைன்லையே இருக்கேன்" என்றவனின் முகத்தில் அத்தனை மென்மை.

தலையை அழுத்த கோதவும், மீசையை முறுக்கவும் என்று அந்த முப்பது விநாடிக்குள் அத்தனை சந்தோஷப் பெருக்கு அவன் மனதில்.

"வாசு.." என்று பல் இடுக்கில் அவனையே அவன் அடக்க முற்பட, "கூப்டீங்களா" என்று அம்ருதா எதிர்ப்புறம் கேட்டது அவனுக்கு அந்த மழைக்குளிரில் இன்னும் சில்லென்று ஆனது.

"சரி.. நான் நேரா விசயத்துக்கே வரேன். அஞ்சு வருஷம் முன்ன பாட்டிக்கு என்ன நடந்ததுனு எனக்குத் தெரியனும். நீங்க தானே அவங்க கூட இருந்தது? அப்போ நீங்களாவது எனக்கு சொல்லுங்க, ஃப்ளீஸ்"

"உங்களுக்குத் தெரியாதா?" என்று அதுவரை இருந்த இலகுத் தன்மை மறைந்து கூர்ந்து கேட்டவனது குரலில் ஒரு கூர்மை இருந்ததை அம்ருதா கண்டுக்கொண்டாள்.

"இல்லை. வீட்டுல யாரும் சொல்லல.‌" சுருங்கச் சொன்னவள், "ஐ நீட் டூ நோ இட்" குரல் அவனிடம் இறைஞ்சியது.

"வர்ஷினி, உங்க வீட்டு ஆட்களே சொல்லலேனா.. அப்புறம் நான் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?" கூராக வந்து விழுந்த வார்த்தையால் என்ன பதில் சொல்ல என்று தெரியாது முழித்தவளின் நிலை அவனுக்குப் புரிந்தது அங்கு.

"உங்க வீட்டு ஆட்கள் இத விரும்பல போல. அவங்க விரும்பாதத நீங்க கேட்கறதோ இல்ல மீறி நான் சொல்லுறதோ தப்பு. ஆம் ஸாரி வர்ஷினி"

அதுவரை இருந்த பொறுமை எருமை ஏறி வாசு ஓட்டும் பிளைனில் சென்றுவிட்டது அவளுக்கு.

"என்ன ஸாரி.. இல்ல என்ன ஸாரிங்கறேன்.. ஆவூனா ஒரு ஸாரிய கேட்டுட்டா சரியாகிடுமா? இப்போ என் பாட்டிக்கு என்னச்சுனு தானய்யா கேட்டேன்.. அதுக்கு என்னமோ கெமிஸ்ட்ரி மேம் லச்சர் எடுக்கற மாதிரி பாடம் நடத்துற? மொதல்ல உன் மேலையே எனக்கு டவுட் இருக்கு. அன்னிக்கு ஹாஸ்பிடல்'ல டாக்டர் இப்போ பிளைட்'ல பைலட்! என்ன ஆள் மாறாட்டம் பண்ணுறீயா இல்ல வேற எதுவுமா? குட் மேனர்ஸ் கிளாஸ் வேற இப்போ ஒரு கேடு.. வைய்யா முதல்ல.." என்று கடுத்தவளுக்கு ஆத்திரம் மட்டும் அடங்குவேனா என்றிருந்தது.

"கொடிக்கம்பம், எனக்கே பாடம் நடத்துறான்" என்றவள் முனங்கவும் அவள் போன் வைப்ரேட் ஆகவும் சரியாய் இருந்தது.

'நீங்க கெமிஸ்ட்ரில ஃபெயில்'லா வர்ஷினி?' என்ற மெசேஜில் வாயை மூடி சிரிக்கும் இமோஜியையும் அவன் அனுப்ப, இங்கு ஆத்தா காளியம்மா அவதாரம் தரித்து நின்றிருந்தாள்.

"அடிங்கு முள்ளபன்னி தலையா" என்று கூவலுடன் திரும்ப வாசுவிற்கு இவள் அழைக்க, நீண்ட நேரம் அழைப்புச் சென்றதே தவிர அவன் எடுத்தபாடில்லை.

"திட்டுனதுல பயந்துட்டானோ" என்று அவளுக்கே அவள் சொல்லிக்கொள்ள, அங்கு வாசுவின் வீட்டில் நிலையே வேறாக இருந்தது!

முசுமுசு கோபம் என்னவோ சில மணித்துளிகள் தான் அவளிடம் நீடித்திருந்தது, அதன்பின் தலையைத் தட்டிக்கொண்டவள், "என்ன எல்லாம் பேசி வைச்சிருக்கடீ நீ?" என்று ஒருவித குற்றவுணர்வு வேற அவளை ஆட்கொண்டு, அன்றைய இரவு தூக்கத்திற்கு தடையாகியது.



"அம்மா" என்று வீடே அதிர கத்திக்கொண்டு வந்தான், ஆதவன்.

"நீல்ஸ்.. நீல்ஸ்.. அனும்மா.. மீனு" என்று இன்னும் அவன் கத்த, அவன் கத்தலில் அவன் கூறிப்பிட்ட யாரும் வெளிவராமல் அவன் சற்றும் எதிர்பாராத அவன் தந்தை தான் அவரின் அறையில் இருந்து வந்தார்.

அதுவரை அங்கிங்கு வேகமாக சென்ற கால்களோ அவரை கண்டதும் தன்னின் வேகத்தை சற்றுக் குறைத்தாலும் இன்னுமே ஒருவித பரபரப்பு அவனின் நடையில்.

"பாட்டீ" என்று சற்று மெல்ல அவன் கத்த, அதில் முன்பிருந்த 'நீல்ஸ்' மறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"என்ன ஆது.. அதுக்குள்ள வந்துட்ட" என்று கையை புடவை முந்தியில் துடைத்தபடி வந்து நின்றார் அனுரேகா, சரவணபவனின் மனைவி.

"என்ன சாமி" என்றவர் திரும்பவும் கேட்க,

"என்ன ஆதவா" என்றார் பொறுமை இழந்த சுந்தரேஸ்வரர்.

ஆதவன், சுந்தரேஸ்வரர் - மீனாட்சியின் இளைய மகன். தற்போது இறுதி வருடம் மருத்துவம் பயில்கின்றான்.

"அதுங்க அப்பா, அம்மா எங்க?" என்றான் மென்று விழுங்கி.

"ம்ப்ச்.. இன்னும் எல்லாத்துக்கும் அம்மா வேணுமா உனக்கு? சொல்ல வந்தத சுருக்கா சொல்லாம எப்பப்பார் அம்மா அம்மானு அவ பின்னாடியே திரிய வேண்டியது" என்றார் சற்று சிடுசிடுப்பாக.

சுந்தரேஸ்வரரின் இந்த இயல்பே அவனுக்குப் பிடிக்காத ஒன்று. யார் இருக்கிறார்கள் என்று பாராமல் சுந்தரேஸ்வரர் அவர் மனைவியை பேசிவிடுவார்.

'அது எப்படி நீங்க எங்க அம்மா'வ பேசலாம்' என்று இவர்கள் கேட்டாலும் அதற்கும் சேர்த்து திட்டு விழும் மீனாட்சிக்கு.

ஆம், மீனாட்சியே தான். அத்தனை பெயர் பொருத்தம் இருவரும். ஆனால் மனப் பொருத்தம்? அவர்களுக்கே வெளிச்சம்.

"ஆரம்பிச்சுட்டார்டா" என்று ரேகா முணுமுணுக்க, சரியாக அங்கு வந்தார் மீனாட்சி.

"ஆதும்மா.. சாப்பிட்டையா?" என்று கேட்டுக்கொண்டே வந்த மீனாட்சி, "வந்தா உன்ன குளிச்சிட்டு தான மத்தவங்க கிட்ட பேச சொல்லியிருக்கேன். போ, போ முதல்ல ஃப்ரெஷ் ஆகு" என்றவர் திரும்பி ரேகாவைப் பார்த்து,

"தம்பி வர சமயமாச்சு பாரு ரேகா. போய் அந்த கூழ கரச்சு வை" என்று வேலையை ஏவிவிட்டு கடைசியாகத்தான் கணவரிடம் வந்தார்.

"நீங்க என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க? காஃபி குடிச்சீங்களா இல்ல ஹோட்டல் போறீங்களா?" என்று கேள்விகளை அவர் அடுக்க, அதில் எப்போதும் போல் மீனாவிடம் சொல்ல வந்த செய்தி மறந்து தன்னின் வேலை முதன்மையாக்கப்பட்டது சுந்தரேஸ்வரருக்கு.

"அட ஆமா.. சரவணே என்னைய திநகர் பிராஞ்ச் போக சொன்னான். சரி நான் கிளம்பறேன் மீனா" என்றவர் விடைப்பெற்று நகர, ரேகா கிட்சனில் இருந்து எட்டிப் பார்த்தவாறே,

"ஆனாலும் இந்த கேள்வி கேட்டு சமாளிப்பு மட்டும் இல்லேனா மாமாவ அடக்கறது ரொம்ப கஷ்டம் இல்ல ஆதவா" என்றவர் ஓரக்கண்ணால் மீனாட்சியைப் பார்த்தவாறு.

அவரோ, "அந்த வித்த தெரிஞ்சனால தான் அனு மூனு பிள்ளைய பெத்து இருபத்தி அஞ்சு வருஷமா இப்படி கோந்து போல ஒட்டிக்கிட்டு இருக்கோம். ஸாரி இருக்கேன்" என்றார் சிரிப்புடன்.

"ஏன் திரும்ப பேசுங்கனு தானே நாங்க சொல்லுறோம். இப்படியே ஒவ்வொரு இடமா சமாளிக்கத் தான் முடியுமா" என்று கூண்டு புலியாய் ஆதவன் கத்திக்கொண்டே வர,

"அட ஆதுமா, என்ன இது? பொறுமை ரொம்ப முக்கியம் தம்பி. யார் பேசுறா அப்பா தானே. என்ன அவருக்கு இந்த இடம், பொருள், ஏவல், வவ்வால் எல்லாம் தெரியாது அவ்வளவு தான்" என்றவர் சொல்லி முடிக்கவும், அனு வயிற்றைப் பிடித்து சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.

"இருந்தாலும் மீனா என் புள்ளைய இப்படி நீ பேசக் கூடாது ம்மா.. சொல்லிட்டேன்" என்று அவர்களுக்கான சிற்றுண்டியை எடுத்து வந்தார் நீலாம்பரி. அவர் கூறியது என்னவோ கேலிக்குத் தான்.

இரு மருமகளுக்கும் தன் கையால் ஒரு வேளையாவது சமைத்து தர விரும்பும் ஒரு அருமையான மாமியார். (அக்மார்க் போட்டா அது வேற கேட்டகிரி வந்துருமே!)

"பாரு இது வீடானே எனக்கு அப்போ அப்போ சந்தேகம் வந்துருது. இப்படியா ஒரு மாமியாரும் மருமகளும் இருப்பாங்க.. ரொம்ப கஷ்டம்டா" என்றபடி ஆதவனின் தோள்களை தட்டியபடி அமர்ந்தான் ஆரூரன், ஆதவனின் இரட்டை.

"வயிறு ஃபுள்ளா தீயறதுக்கு முன்னாடி போய் சாப்பிட எடுத்திட்டு வந்து உட்காருடா" என்று அனு சொல்ல,

"ஆமா, ஆமா.. தீஞ்சுப் போய் தான் வந்திருக்கேன். பாட்டீ இந்த வயிறு எரிச்சலுக்கு என்னத்தையோ தருவீங்களே அத பண்ணிக் கொண்டாங்க. மதியம் சாப்பிட்டதுல இருந்தே புட் பைப்லாம் எரியுது"

"ஏன்டா.. அப்படி என்ன சாப்பிட்ட" என்ற மீனாட்சி அதட்ட, "ஹோட்டல தானே ஆருமா சாப்பிட்ட? அப்பறம் எப்படி காரம் ஏறும்" என்று அனுவும் கேள்வியிட,

"அந்த கூத்த ஏன் மம்மீஸ் கேட்கறீங்க" என்று கண்களில் கை வைத்து குலுங்கி அழுவதைப் போல் அவன் பாவனை செய்ய, அவன் முதுகில் ஒன்று வலிக்க போட்டவாறே ஆதவன், "சொல்லிட்டு நடிடா எலும்பா" என்றான்.

"அது.. காலலேயே திநகர் பிராஞ்ச் சமையல் அண்ணா லீவ் கேட்டிருக்கார். இப்போ வந்து கேட்டா எப்படி, 'இன்னிக்கு இருந்துட்டு சாயந்திரம் போல கிளம்பிக்கோங்கனு' சரோப்பா சொல்லிட்டார்"

"அதுதான வழக்கம். இவங்க நோக்கம் போல வந்து சொன்னா அடுத்த வேள யார் சமைப்பா" என்று மீனாட்சி பொங்க,

"இருங்க மீ, அவன் சொல்லி முடிக்கட்டும்" என்ற ஆதவன், ஆரூவின் முதுகைத் தடவ,

"ஹான்.. சரோப்பா சொன்னதும் ஏதோ கேட்டிருக்கார். கொஞ்சம் சரோப்பாவும் பேசிட்டார். அதுக்கு அவர் இருந்த கடுப்புல வத்தக்குழம்புல ரெண்டு மடங்கு மொளகாயப் போட்டுட்டார் மீ.. மொளகாயப் போட்டுட்டார்"

"அடியாத்தே
சாப்பிட வந்த மனுஷாளுக்கு என்ன ஆச்சோ! அத்தன காரம் சாப்பிட்டா வயிறு என்னத்துக்காக" என்று வலது கையை நெஞ்சில் வைத்தவாறே ஆரூரனுக்கு மோரை எடுத்து வந்தார் நீலாம்பரி.

"அதேதான் நீல்ஸ்.. நான் வேற வத்தக்குழம்பையே ரசம் மாதிரி குடிப்பேனா, இன்னிக்கும் அதே போல குடிக்க.. உள்ள எல்லாம் வெந்து போச்சு" என்று நெஞ்சை நீவியபடி ஆரூரன் சொல்லவும் பெண்களுக்கு மனதே ஆறவில்லை.

"மீ.. வயிறு எரியுது" என்று ஆரூரன் வயிற்றைத் தடவ,

"ரொம்ப எரியுதாடா" என்று அவனின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறு அனு கேட்க, ஆதவன் அதற்குள் அவனுக்கான மருந்தை எடுத்து வந்திருந்தான்.

"மீனா, ஈஸ்வரனுக்கு போன போடு" என்ற நீலாம்பரியின் குரலில் இருந்தே தெரிந்துவிட்டது அவரின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று.

ஆரூரன் மனதோ, 'இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலக்குமாரா' என்று பின்பாட்டு பாட, அங்கு அவரின் வேலையை முடித்திருந்தார் நீலாம்பரி.

"எதுக்குங்க அத்த வேல விட்டு எல்லாம் எடுத்துட்டு" என்று மீனாட்சி சொன்னாலும் அவர் மனது கிடந்து அடிக்கத்தான் செய்தது ஆரூரனைப் பார்க்கும் போது.

"பின்ன அவன வெச்சிட்டு இன்னும் என்ன செய்ய சொல்லுற, ஆரூவை விடு. எத்தன பேர் அந்த சாப்பாட்டை இன்னிக்கு சாப்பிட்டிருப்பாங்க? அவங்களுக்கு என்னாவதுனா என்னையே என்னால மன்னிக்க முடியாது. இதுல நீ தலையிடாத மீனா" என்று சற்று சப்தமாக அவர் கத்திவிட, ஆதவனுக்கு கோபம் பொங்கிவிட்டது.

இனி விட்டால் ஆகாது, சூழல் கைமீறிவிடும் என்ற எண்ணிய ரேகா ஆதவனிடம், "என்ன ஆதும்மா இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட. என்ன சங்கதி" என்ற மீனாவின் ஆயுதத்தை இப்போது கையில் எடுத்திருந்தார் ரேகா!

"ம்ப்ச்.. அத சொல்ல வந்ததுக்குத் தான் அந்த பேச்சு பேசினார் மனுசேன். மூடே போச்சு." என்றவன் சலிக்க,

"இந்த பாருடா அவர் பேசி இவனுக்கு மூட் போச்சாம்.. சாப்பாட்டு காலியாகிடுச்சுனு சொல்லு.. ஒருத்தர் போய் உனக்கு எடுத்துட்டு வரதுக்கு எதுக்குடா இத்தன சீன்" என்று ஆரூரன் சரியாக நூலைப்பிடிக்க,
'கண்டுக்கிட்டான் கண்டைனர் வாயன்' என்று மனதில் நினைத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளத்தான் முடியுமா?

"அது.. எனக்கு இண்டர்ன் ஹாஸ்பிடல் சொல்லிட்டாங்க அம்மா.. அதான் சொல்ல வந்தேன்" என்றவனின் முகம் மலர, "எந்த ஹாஸ்பிடல்'னு ஒரு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்"

"கீழ்பாக்கம் மா" என்று ஆரூரன் சொல்ல, "அடிங்க டவரா வாயா.." அவன் முதுகில் மொத்தியபடியே, "ம்மா ரொம்ப யோசிக்காதீங்க.. மதுரா ஹாஸ்பிடல் தான்" என்றான் வாயெல்லாம் பல்லாக.

அங்கு கீழே படியிறங்கியபடி ஆதவனின் பேச்சைக் கேட்ட அம்ருதாவோ, "மதுரா ஹாஸ்பிடல்'லா" என்று முணுமுணுக்க, அவள் மனதோ பல்வேறு கணக்கைப் போட்டபடி இருந்தது.

அமுதம் தொடரும்...
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 07

மழை பெய்து முடித்திருந்த வானத்தின் வெறுமையை கண்களில் ஒளியே இல்லாது பார்த்திருந்தாள் காவ்யா!

வாசுவின் அறை. எப்போதும் வந்து செல்லும் அறையாயினும் இன்று தான் இத்துனை நேரம் அமர்ந்திருந்து அந்த வானத்தை வெறித்துப் பார்த்திருந்தாள்.

கண்களில் வழிந்த கண்ணீர் இப்போது கேட்பார் அற்று வழிய, வீசிய காற்றின் பயனால் தலையெல்லாம் கலைந்து, புடவை சற்று நேரற்று இருக்க 'இன்னும் எத்தனை ஏச்சுப் பேச்சை நான் கேட்க வேண்டும்' என்ற வாக்கியமே அவள் முகத்தில் ஒட்டியிருந்தது.

கதவை இருமுறை தட்டிய உடன் உள்ளே வந்தான் ராகவ். அந்த தட்டல் சப்தத்தில் ஒரு வெற்று சிரிப்பு காவ்யாவின் முகத்தில்.

தம்பியின் அறை. சற்று கசங்கலாக இருந்தது. அதில் அவனின் பாவை பெண்ணோ இன்னும் கசங்கியவளாகத் தான் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

அவன் வார்த்தைக் கொடுத்த தாக்கம் அவளை எந்த அளவிற்குத் தாக்கியுள்ளது என்பது அவன் கண்ணெதிரே கண்டுகொள்கிறானே.

நெஞ்சோரம் சுருக்கென்ற வலி. அவன் கொண்ட காதல் அந்த வலியை அவனுக்குக் கொடுத்தாலும், அதற்கான மருந்தென்னவோ காவ்யா இல்லையே.

அவனின் மாற்றம் தான் இனி காவ்யாவை மாற்றும் என்று தெரிந்தாலும் எதற்கும் செவி கொடுக்காத டமாரமாகத் தானே இத்தனை நாட்கள் இருந்தான். இருக்கின்றான்?!.

ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது தானே!

அறைக்குள் வந்தாலும் அவன் படித்த நாகரிகமும் அந்த குட் மேனர்ஸும் அவனை தயங்க வைத்தது. ஒருத்தரை காயப்படுத்திய பின்பு அவரை அணுகத் தயங்குவது மனித இயல்பு என்று நாம் சொன்னாலும் இக்காலத்தில் அரிதாரமாகவே நாம் கணக்கில் கொள்வோம்.

"டேய் கண்ணம்மா!" என்று அவள் அருகே அவன் செல்லும் முன்பே முந்தானையை இழுத்து கைகளில் திணித்திருந்தாள்.

அவள் செயலால் சற்று தடுமாறியவன் பின்,
"ஸாரிடா கன்னுக்குட்டி" என்று அவள் காலுக்கடியில் வீழ்ந்திருந்தான்.

பாதங்களை அவள் உள்ளிழுக்க, வம்படியாய் தன் கையில் ஏந்தி, மடியில் வைத்து அவளின் மடியில் தலை சாய்ந்திருந்தான் ராகவ் கிருஷ்ணன்.

இருவர் கண்ணிலும் கண்ணீர் தான். அவன் பேசியதற்காக இருவரும் அழவில்லை! அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து, அவர்களின் காதலை நினைத்தான கண்ணின் உவர்நீர் இப்போது அவர்களையே மெல்ல சுட ஆரம்பித்திருந்தது.

"கோபத்துல பேசிட்டேன்டா. நீ ஏதாவது கேட்டுட்டே இருந்த, அத செய்ய முடியாத இடத்துல நான் இருக்கேன் கன்னுக்குட்டி. நீ கேட்டு பண்ணமுடியாத கோபம், அதான் உன்னையே திட்டிடுறேன்.. மனசால எதுவும் சொல்லலடா" அவளின் புடவையை நனைத்தது ராகவின் சுடுநீர்‌. கைகள் இறுக்கி தன்னின் கேவலை அவள் அடக்க, அவனுக்கு அந்த அவசியம் இருக்கவில்லை போல.

"டேய் கன்னுக்குட்டி" என்றவன் அவள் மடியில் முகம் புதைத்து விசும்ப, அவளுக்குத் தான் கண்ணீர் இன்னுமே சுரந்தது.

'இந்த நிலை தேவையா' என்று மனம் கிடந்து அடிக்கத் தான் செய்தது காவ்யாவிற்கு. இருந்தும், ஏதோ இனம் புரியாத ஒரு கேள்வி மனதை கவ்வாமல் இல்லை!

அவன் தலைமுடியை வலிக்க பற்றி மேலே தூக்கியவள் அவன் முகம் பார்க்க, அவனின் வெண்ணிற முகம் சில இடங்களில் சிவந்து பல இடங்களில் இளஞ்சிவப்பாக இருக்க, "பேசுறத பேசிட்டு அழுதா, சரியா போச்சா ஹான்.." என்று அவளும் அழ,

"ஸாரி கன்னுக்குட்டி" கண்ணைத் துடைத்துக்கொண்டு ராகவும் யாசிக்க, "எத்தன தடவ மன்னிக்க" என்றாள் சற்று கோபம் கொண்ட குரலில்.

"டேய்"

"பேசாத ரகு! எல்லாத்தையும் பேசிட்டு வந்து இப்படி அழுதா சரியாச்சா? சொல்லு. நானும் உணர்வு, மனசு எல்லாம் இருக்கற மனிஷி தான். நீ பேசுற எல்லாம் என்னையும் பாதிக்கும் தான். இப்போ சொன்னியே 'உனக்கு சேவகம் பண்ணதான் நாங்களானு' ஏன் பண்ணா என்ன? உங்க வீட்டுக்கு உங்கள நம்பித் தான வரேன். அப்போ எனக்குப் பண்ணா குத்தமா? இல்ல உங்களுக்கு சேவகம் பண்ணத் தான் கல்யாணம் பண்ணிட்டு நான் வரேனா? சொல்லுங்க.. எப்பவும் உங்க இடத்தில இருந்து மட்டும் பார்க்காதீங்க ரகு! எதிர்ல நிக்கிறவங்க கண்ணோட்டமும் முக்கியம்."

"வார்த்தைய விட வேற எந்த ஆயுதமும் ஒருத்தன கொல்லத் தேவையில்லேனு சொல்லுவாங்க.. அது என் வகையில சரியாதான் இருக்கு. ஒரு ஒரு தடவையும் நீங்க பேசுறது என்னை கொல்லுதே! நாம உயிரா நினைக்கிறவங்க நம்மளை துச்சமா நினச்சு பேசும் வார்த்தை எப்படி நம்ம உயிர அறுக்கும் தெரியுமா? தெரியாது.. உங்களுக்குத் தெரியவும் செய்யாது, நான் சொல்லுறது புரியவும் செய்யாது" என்று கண்களை அவள் துடைத்துக்கொள்ள, அவளையே கலங்கிய முகத்துடன் பார்த்திருந்தான் ராகவ்.

"நீங்க இத்தன பேசியும் நான் ஏன் உங்கள விட்டு போகலத் தெரியுமா?" என்றவள் அவனைக் கூர்ந்து பார்த்தவாறு சொல்ல, அவன் உடலில் மெல்லிய நடுக்கம் பரவ ஆரம்பித்திருந்தது.

"கன்னுக்குட்டி" என்று அவள் கைகளை அவன் பிடிக்க, அவளே விலகிக் கொண்டாள்.

அவன் தீண்டலை அவள் நிராகரிப்பது இதுவே முதல் முறை. ஆடிப்போய் விட்டான் ராகவன்.

அவள் கைகளையே அவன் பார்த்திருக்க, அவன் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே, "என் பிள்ளைய தவிக்கவிட்டு என்னால போக முடியாதே!" கலங்கிய குரலில் அவள் சொல்ல,

"கண்ணாம்மா" என்ற கூச்சலுடன் முட்டியிட்டிருந்தவாறே அவளை இழுத்து அணைத்திருந்தான் அந்த அதிரடி காதலன்.

அவளின் அந்த விழிப்பு அவனுக்கு முற்றும் புதிது தானே. அவனின் எண்ணத்தின் ஓட்டம் புரிந்தவளாக அவனிடமே தன்னை ஒப்புவித்துவிட்டாள் அந்த பாவை.

குசனில் இருந்து வேகமாக கீழே இறங்கியது, அவனின் ஆழ்ந்த அணைப்பு எல்லாம் அவளுக்கு வலியைக் கொடுக்க, "ரகு வலிக்குது" என்றவளை,

"உன் பிள்ளை ஹக் பண்ணா இப்படித் தான் சொல்லுவியா" கண்ணீர் வழிய சிரிப்புடன் அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு மனது பாரமானது.

"பப்ளிக்ல என் கை பிடிச்சது, என் மேல சாய்ந்து நடந்தது, இந்த கடையில இது வேணும் அத வேணும் கேட்டது எல்லாம் என்னை ரொம்ப ஏதோ பண்ணிடுச்சுடா கன்னுக்குட்டி.. அதான் சத்தம் போட்டுடேன். எனக்கு மட்டும் ஆசையில்லையா‌ என்ன? இருக்கு, நெஞ்ச முட்டுற அளவுக்கு இருக்கு. ஆனா அது எல்லாம் நம்ம மேரேஜ் அப்புறம்னு எனக்கு ஒரு எண்ணம்" திக்கித் திணறி அவன் சொல்ல,

"அது எண்ணம் இல்ல, உங்க ப்ரின்ஸ்பல்ஸ்" என்று அவள் கடுப்புடன் திருத்த,

"அதுதான் உண்மை! சின்ன வயசுல இருந்து சிலத பார்த்துப் பார்த்து வளந்துட்டேன். இந்த ப்ரின்ஸ்பல்ஸ் எல்லாம் எனக்கு, என்னோட எதிர்கால வாழ்க்கைக்காக நானே எனக்குள்ள விதைச்சுக்கிட்டது. அத மாத்தவோ இல்ல மீறவோ என்னால முடியாது. ஐ ஸ்ட்ராங்லி பிலிவ் தெம்" என்றவனை செய்வதறியாது பார்த்திருந்தாள் காவ்யா.

அவளை தன் மடியில் வாகாக அமர்த்திக்கொண்டு, சற்று நகர்ந்து சுவற்றுடன் ஒட்டி அமர்ந்தவன், "என்ன நானே மாத்த ட்ரை பண்ணுறேன் கன்னுக்குட்டி. ஆனா என் ப்ரின்ஸ்பல்ஸ் ரொம்ப கஷ்டம். உங்ககிட்ட பேசுறது, நடந்துக்கறது எல்லாம் என்னோட இயலாமை தான். இத சொல்ல எனக்கு எந்தவித அவமானமும் இல்லை. என்‌ கன்னுக்குட்டிகிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லப்போறேன்."
என்றவன் மெல்ல சிரிக்க,

"பட் அது உங்க சுயமா இருக்காதே ரகு!"

"கஷ்டம் தான். உன்கிட்ட, நான் நானா இருக்கனும் தான். பட் எங்க இந்த கோபம் வந்து தொலைக்கிதே! இந்த லவ் பீரியட் நமக்கு கொஞ்சம் டிஃபிக்கல்ட் தான் போல. கல்யாணம் ஆகிட்டா என் கன்னுக்குட்டிய‌ இப்படி பேச வருமா‌ என்ன"

"அப்பவும் நான் உங்க லவ்வர் தான் ரகு" என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்தவாறு.

"உங்க கோபமோ இயலாமையோ தான் உங்க பிஹேவியருக்குக் காரணம்னு நீங்க நினச்சுட்டு இருக்கீங்களா?" என்றவளை அவன் இப்போது பார்க்க,

"வாட் டூ யூ மீன்?"

"ஐ மீன் தி ட்ருத்! இதுதான் உங்க நேச்சர். அது என்கிட்ட வெளிபடுது. உங்க கோபம், பிடித்தமின்மை, சில ப்ரின்ஸ்பல்ஸ் எல்லாம் அடுத்த மனுஷங்க கிட்ட உங்களால காட்ட முடியாது. ஒரு கட்டுப்பாடு இருக்கும்.. ஆனா நான் அப்படி இல்லையே.. அதான் முழுசா என்கிட்டையே அத்தனையும் நீங்க காட்டுறீங்க"

"ஆனா இது நம்ம மேரீட் லைப்ல எப்படி இம்பாக்ட் பண்ணும்னு கொஞ்சம் யோசிங்க ரகு! யூ நீட் டூ சேஞ்ச். எல்லா நேரமும் நானும் சகிக்க முடியாதே! என் பிள்ளைய திருத்தும் கடம எனக்கு இருக்கு" என்றவள் அவன் நுதழில் இதழ் பதித்து வெளியேறினாள்.

ராகவின் சுய அலசலுக்கு தேவையான வார்த்தைகளாகவே இருந்தன காவ்யா சொன்னவை அனைத்தும்.

அப்போதுதான் வாசு அம்ருதாவிடம் பேசிவிட்டு நின்றிருக்க, அவன் முகமலர்ச்சியும் அதில் தெரிந்த மென்மையும் மென்னகையும் காவ்யாவை ஈர்ந்தது!

"வாசு'ண்ணா" என்றவள் அவனை நோக்கி செல்ல, அதே விரிந்த புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

"என்னவாம்.. முகம் டாலடிக்குது" என்றவள் தன் வலியை மறைத்துக் குதூகலிக்க, அவள் தலையில் வழக்கம் போல் கைவைத்து ஒரு சுற்று சுற்றியவன், "ஒருத்தி பாடா படுத்துறாட தங்கம்" என்றான் மனதை மறையாமல்.

"என்னது!" என்றவள் அதிர,

"என்னை ஆட்டிப்படைக்குறா ஒருத்தி" என்றான் அழுத்தமாக.

"லவ் பண்ணுறீயா வாசு'ண்ணா" என்று காவ்யா பதட்டத்தை மறைத்துக் கேட்டாலும் அவள் குரல் அதை வெளிப்படுத்தியது.

"திங்க் சோ" என்றான் தலையை அழுத்தக் கோதியபடி. முகம் சற்று சிவந்ததுவோ என்று எண்ணும் படி மெல்லிய நாணம் வந்து எட்டிப்பார்த்தது அவன் முகத்தில்.‌

அவன் முகத்தையே இமை கொட்டாது பார்த்திருந்தவள், "யாரு? எப்போ?" என்றாள்.

"அது ஆச்சு.. நாலு வருஷம்" என்றானே பார்ப்போம். நெஞ்சல் கைவைத்து பதறிவிட்டாள் காவ்யா.

"என்ன நாலு வருஷமா? என்னடா அண்ணா சொல்லுற" என்றவள் அலற, அப்போது தான் வாசு அவளை கவனித்தான்.

"என்ன காவ்ஸ்.. என்னாச்சு.. எதுக்கு இந்த டென்சன்." என்றவன் முகம் சட்டென்று கூர்மையாக,

"உனக்கு.. அவ.. இல்ல அவங்கள ரொம்பப் பிடிச்சிருக்கா என்ன?" பரிதவிப்பாக கேட்டு நின்றிருந்தவளின் எண்ணம் அவனுக்குப் புரியவே இல்லை.

சரியாக அப்போது அம்ருதாவும் அழைக்க, அந்த அழைப்பை வாசு ஏற்கவில்லை.

"என்னடா வாசு" என்று முகத்தை துடைத்தபடி வந்த ராகவும் கேட்டு நிற்க, "ரகு வாசு'ண்ணா யாரையோ லவ் பண்ணுறானாம்" ராகவிடம் அதிர்ச்சி மறையாது கண்களை விரித்தபடி அப்படியே ஒப்பித்தாள் காவ்யா.

"வாட்.." என்ற அதிர்வுடன் அவன் தம்பியைப் பார்க்க, அவனோ ராகவை பார்த்து இளித்து வைத்தான்.

"ச்சீ.. சிரிக்காதடா சகிக்கல", என்றவன், "லவ் பண்ணுறீயாடா வாசு" என்ற சந்தோஷத்துடன் வாசுவை தோளோடு அணைக்க, அவர்கள் இருவரையும் புரியாத பாடத்தைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் காவ்யா.

"யாருடா" என்று அவனும் அதே கேள்வியை கேட்டு வைக்க,

"ம்ப்ச் உனக்குத் தெரியாது. பட் டேட் நோஸ் ஹர்." என்றவன் பின் மென்மையாக, "அம்ருதவர்ஷினி" என்றான் கண்கள் நிறைந்த மகிழ்வுடன்.

நெடுநாள் பிந்தைய தம்பியின் மலர்ச்சி ராகவையும் தொற்ற, காவ்யாவின் புறம் அவன் திரும்பிய சமயம் அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, "என்ன கன்னுக்குட்டி" என்றவனை நோக்கி பாய்ந்திருந்தாள் அவள்.

"என்ன கன்னுக்குட்டி.. பன்னிக்குட்டினு சொல்லிட்டிருக்கீங்க. உங்களுக்குப் புரியுதா வாசு'ண்ணா லவ் பண்ணுறானாம்!! எப்படி முடியும்" என்றவள் கண்களை விரித்து கத்த,

"லூசாடி நீ.. அவனென்ன சாமியாரா எப்படி லவ் பண்ணுறான்னு கேட்கற"

"டேய் வாசு'ண்ணா ஆர் யூ சிரியஸ்? தெரிஞ்சுத் தான் பண்ணுறீயா நீ இதெல்லாம்" என்றவள் அப்போதும் பீடிகையிட,

"அடியேய்.. என்ன தெரிஞ்சு பண்ணியானு கேட்கறா.. அவன் என்ன ஸ்கூல் பையனா" என்று ராகவும் கத்த,

அவளோ ராகவை விடுத்து வாசுவிடம், "ஓ காட்! நீ மறந்துட்டியா வாசு'ண்ணா.. நீ அத்தம்மா கிட்ட எங்களுக்காக பிரமிஸ் பண்ணியே, அவங்க சொல்லுற பொண்ணத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு" என்றவள் சொல்ல, ஆண்கள் இருவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

முக்கியமான இடத்தையே வாசுதேவ கிருஷ்ணன் மறந்திருக்கிறானே!

அவன் அன்னையின் பேச்சை தட்டாது நடக்கும் தனயன். இப்போது சில இடங்களில் தட்டி நடக்க, அதையே தாங்காதவர் அவனிடம் பேச்சையும் நிறுத்தியிருந்தார்.


ஆனால் வாசு அவரின் கட்டுப்பாட்டை மீறி நடக்க மாட்டான்‌ என்றவரின் நினைப்பை இப்போது அம்ருதாவிற்காக அவரை அவன் நினைக்கவில்லை என்று தெரிந்தால்?


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 08

“அ… வாடி என் கப்பக்கெழங்கே
எங்க அக்கா பெத்த முக்காதுட்டே
பாடதே வாயத்தொறந்தே…”

தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு, வேஷ்டியை மடித்துக்கட்டி தாத்தாவும் பெயரனும் போட்ட ஆட்டத்தை அனு வாய் மேல கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

வாசுவிடம் தன் நன்றியை சொன்னதுமே அவரின் இளமையும் சுறுசுறுப்பும் இன்னும் பன்மடங்கு திரும்பியதைப் போல் உணர்ந்திருந்தார் சாரங்கன்.

"இந்த வயசுல கிழவனுக்கு இந்த ஆட்டம் தேவையா என்ன" என்று ஆதவன் நீலாம்பரியிடம் கடுப்படிக்க,

"எடு அந்த தொடப்பக்கட்டைய, யாருடா உனக்குக் கிழவன்" என்று நீலாம்பரி ஆதவன் தலையில் கொட்ட,

'கிழவிக்கு லொள்ளப் பாரேன்' என்று அனு மனதினுள் நினைக்க அதற்குள் மீனாட்சி,

"ஆதும்மா.. தாத்தாவ பாட்டி மட்டும் தான் கிழவன்னு சொல்லுவாங்க.. நீ எப்படிடா அவங்க பெட் நேம வெளிய இப்படி சத்தம் போட்டு சொல்லலாம்" என்று அவரும் அவர் பங்கிற்கு வார, 'குடும்பமாடா இது' என்று நினைப்புடன் அங்கு அமர்ந்திருந்தார் சரவணபவன்.

"சரோப்பா.. வாங்க, வந்து ஜோதில ஐக்கியம் ஆகிக்கோங்க" ஆரூரன் ஆடிக்கொண்டே சத்தமிட,

"எதுக்கு உங்க பாட்டி கையில எடுக்கறேன்னு சொன்னத உன் சித்தி தூக்கவா.. போடா" என்றவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

"நீல்ஸ்.. யூ கம் பேப்" என்று அடுத்த பாட்டை மாற்றியபடி ஆரூரன் அழைக்க,

"டேய் டேய்.. என் டார்லிங் வரானா 'ஓஹோ எத்தனை அழகு' பாட்ட போடுடா ஆரூ கண்ணா" என்றார் நீலாம்பரியைப் பார்த்துக்கொண்டே.

அவரின் அலப்பரை தாங்காத சரவணனோ, "அப்பா.. போதும் இத்தோட நிறுத்திக்கோங்க" என்று பல்லைக் கடித்தார்.

"டேய்.. நீயும் வேணா அனுவோட ஆடேன்.. சும்மா எங்களையே சொல்லிட்டு" என்றவர் துண்டை எடுத்து கழுத்தைச் சுத்தி ஸ்டைலாக போட்டவாறு, "பேபி.. நீ வாடா" என்று அம்ரூவை அழைத்தார்.

"எதுக்கு அவ ஆடி, வீடு நடுவுல பொளக்கவா" என்று ஆரூரன் நக்கல் பேச, "செத்தடா மவனே" என்றவள் பிளேயர் ரிமோட்'டை அவன் மீதே தூக்கி அடித்து பின் அவனைத் துரத்த ஆரம்பித்திருந்தாள், அம்ருதா.

இது எதையும் கருத்தில் பதியாமல் மனைவியைப் பார்த்தவாறு இருந்த சரவணனின் அருகே அமர்ந்த ஆதவன், "சரோப்பா" என்று அவர் தோளைச் சுரண்ட, "என்னடா" என்றார் சலிப்பாக.

"சித்தி ஏதோ சொல்ல சொன்னாங்க.. இப்போ மறந்துட்டேன்" ராகமாக இழுத்தவன் எழுந்துக்கொள்ள,

"டேய் ராசா.. ஆதவா" என்று அவனை பிடித்து அமர வைத்தவர் அவன் முகத்தை ஆர்வமாக பார்த்திருந்தார்.

அவரின் பார்வை சிரிப்பையும் குறுகுறுப்பையும் தர, "சரோப்பாஆ" என்று சப்தமாக சிரித்துவிட்டான் அவன்.

"சொல்லேண்டா"

"அங்கையே போய் கேட்டுக்கோங்க.." என்று சொன்னவன் 'ரொம்ப தான் கடுப்படிக்கிறார் மனுசன்‌‌' என்று‌ எண்ணிக்கொண்டே மீனாட்சியிடம், "சொல்லிட்டேன் மீ" என்றான் தாழ்ந்த குரலில்.

இருப்புக் கொள்ளவில்லை சரவணபவனுக்கு. மனைவியிடம் செல்லவும் முடியாமல் ஆதவனிடம் கேட்கவும் முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்.

அதற்குள் பாடல் மாறி சாரு தன் உள்ளே மறைந்திருந்த காதல் மன்னனை வெளியே கொண்டுவந்திருந்தார்.

"ஒ ஒ எத்தனை அழகு இருவது வயதினிலே.." என்று ரவிச்சந்திரனின் நடன அசைவுகளை அப்படியே அவர் ஆடிக்கொண்டே நீலாம்பரியின் அருகே வர, எங்கே அவர் தான் வேறோரு உலகில் இருந்தாரே!

ஓடிக்கொண்டிருந்த ஆரூரனும் அம்ருதாவுன் சடன் பிரேக்கில் நின்றிருக்க, அனுவும் மீனாட்சியும் பிளந்த வாய் மூடாமல் மாமனாரின் நடனத்தை அதிசயத்துப் பார்த்திருக்க, சரவணனோ
"இன்னும் நான் என்ன கொடுமையேல்லாம் பார்க்கனுமோ ஈஸ்வரா" என்று வெளிப்படையாகவே தலையில் அடித்தாலும் அவர் முகத்தில் சிரிப்பு அப்பியிருந்தது.

நீலாம்பரியின் கைகளைப் பற்றியபடி அவருடன் சேர்ந்து சாரங்கனும் ஆட, ஆதவன் பாடலின் சப்தத்தை அதிகரித்திருந்தான்.

முதுமையிலும் அவர்களின் அந்த நடனம் அத்தனை அழகாகவும் இருவரின் முகத்தில் இருந்த காதல் அத்தனை ஈர்ப்பாய் இருந்தது.

நீலாம்பரியின் கைகளை விடாது அவருடன் சேர்ந்தே அவரை ஆட வைத்து தானும் ஆட, பாடலில் பெண் குரல் மாறி வரவும் சுற்றத்தை மறந்து நீலாம்பரியும் அதற்கேப்ப பாட ஆரம்பித்து சாரங்கனுடன் ஒன்றிவிட்டார்.

"சாரு" என்ற பேரப்பிள்ளைகளின் சிரிப்புச் சத்தத்தில் தான் அவர்கள் விலகினார்கள்.

இருந்தும் அந்த அணைப்பை அவர் விடவுமில்லை, விலக்கவுமில்லை.

நீலாம்பரிக்குத் தான் வெக்கத்தில் முகமே சிவந்துவிட்டது. அத்தனை பூரிப்பும் சிரிப்பும் அவரின் முகத்தில்.

"அச்சோ.." என்றவர் சாரங்கனின் பின் மறைய, சாரங்கனுக்கே அது சிரிப்பாய் போய்விட்டது.

நீலாம்பரியின் வலது கையைப் பிடித்தபடி, "நீலு டார்லிங்" என்றவர் காதல் பொங்கும் குரலில் அழைக்க, "அய்யோ போங்க" என்றவர் ஓடிச்சென்று அம்ருதாவின் பக்கத்தில் நின்றுக்கொண்டார்.

"ஆனா.. வாழுற தாத்தா நீ" என்று ஆரூரன் சாரங்கனின் தோளைத் தட்டிக்கொண்டே சொல்ல,

"பொண்டாட்டி சொல்ல கேட்டுப் பார்.. எந்த வயசுலையும் நீ நல்லா வாழலாம்"

அவர் என்னமோ சாதாரணமாக சொன்னாது போல் இருந்தாலும் அதில் இருந்த அர்த்தம் மொத்தமும் சரவணனுக்கே!

"க்கும்.. எங்க இத உங்க பெரிய பையன்கிட்ட சொல்லுங்க பார்ப்போம்" என்று ஆதவன் குரலை உயர்த்த,

"அதாவது பேராண்டி.. அவன் எப்படி இப்படி ஒரு டிசைனா இருக்கானே எனக்குப் புரியல" என்றவர் நிறுத்தி மீனாட்சியைப் பார்த்தவாறு,

"ஐ ஆம் ஸாரி மருமகளே! இந்த பாட்டு கேட்டுத்தான் ஈஸ்வரன் பொறந்தான்.. இருந்தும் அவனுக்கு இந்த லவ்வூ வரலையே ம்மா.. வரலையே" என்றவர் சிவாஜியின் நடிப்பை கையில் எடுத்திருக்க, அந்த வார்த்தை மீனாட்சியை சுட்டது.

விளையாட்டிற்கு சொன்ன வாக்கியம் என்று எண்ணினாலும் சாரங்கன் சொன்ன அந்த காதலை முழுமையாக சுந்தரேஸ்வரரிடம் மீனாட்சி பெற்றாரா என்பதே அவருக்கு இன்னும் தெரியாத ஒரு கேள்வி.

எல்லாரையும் போல் 'காதல் செய்ய வேண்டும்' என்ற ஆசையுடன் இருந்தவரின் வாழ்க்கை குட்டிக்கரணம் அடித்ததற்கான காரணத்தை எண்ணி இப்போது அவரின் மனது கசந்துவிட்டது.

இருந்தும் அம்ரூ, ஆதவன், ஆரூரனைப் பார்த்தால் அதெல்லாம் ஒரு விசயமா என்றே தோன்றிடும் அவருக்கு.

திருமணம் ஆன இரண்டாம் வருடம் அம்ருதவர்ஷினி பிறந்திருக்க, அடுத்து அவளின் முதல் பிறந்தநாளை பிறந்த பத்து நாள் குழந்தைகளான ஆதவன் ஆரூரனுடன் தான் அவள் கொண்டாடினாள்!

'ஒன் இயர் பேபீஸ்' என்று நாம் சொன்னாலும் மீனாட்சிக்கு அதில் ஒரு சந்தோஷம். மனதையும் தேற்றிக்கொள்ள ஒரு வழியாக இருந்தனர் அந்த மூவரும்.

"ஆனாலும் உங்க தாத்தாக்கு இம்புட்டு அதுப்பு ஆகாதுடா ஆரூ.. அந்த பாட்டுல வர நாகேஷ் மாதிரி இருந்துட்டு இந்த வயசுலையும் பாட்டி கூட என்ன ஆட்டம் பாரேன்" என்று ஆரூரனின் காதை அனு கடிக்க,

"ஏன் உங்க வீட்டுக்காரர் உங்க கூட ஆடலேன்னு கடுப்போ" என்றவன் சிரிக்க,

"உனக்கு அந்த நினைப்பெல்லாம் இருக்கா என்ன? முதல்ல அவர சேர்ந்தாப்புல பத்து நிமிஷம் ஒரு இடத்துல உட்காரச் சொல்லு.. உடம்புக்குள்ள அத்தனையும் இருக்கு இதுல என் கூட ஆடலேன்னு நான் இங்க என்ன தவமா கிடக்கேன்" என்று கடைசி வாக்கியங்களை முணுமுணுத்தப்படி கிச்சனிற்குள் சென்றுவிட்டார் அவர்.

அதற்கு மேலும் முடியாமல், "சித்தப்பா.. போய் தான் பேசீடுங்களேன் பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க.. உங்க நல்லதுக்குத் தானே சொல்லுறாங்க" என்று அம்ருதா கூற,

மீனாட்சி, "ஏதோ உங்க கிட்ட அனு சொல்லச் சொன்னா.. ஆனா என்னன்னு தான் மறந்துட்டேன்.. இருங்க கேட்டுட்டு வரேன்" என்று வேண்டும் என்றே மீனாட்சி எழும்ப,

"அய்யோ அண்ணி.. வயசான காலத்துல நீங்க ஏன் சிரமப்படுறீங்க? நானே போறேன்" என்றவர் குடுகுடு என்று கிச்சனை நோக்கிச் சென்றார்.

"எது வயசான காலமா.. அவர விட நான் மூனு வயசு கம்மி தான" என்று மீனாட்சி புலம்ப,

"விடு மீ.. உன்ன கிழவினு சொல்லமா சொல்லிட்டு போறார். வரட்டும்" என்று ஆரூரன் மெல்ல பத்தவைத்து அமர்ந்துவிட்டான்.

சரவணன் கிச்சன் உள்ளே சென்ற அடுத்த இரண்டாவது நிமிடம், "ஆது.. மொதல்ல இவர நீ செக்கப் கூட்டிட்டு போனாதான் நான் இங்க எல்லார் கூடவும் பேசுவேன்.. இது என் புள்ள மேல சத்தியம்" என்றவர் வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவரின் அறைக்குள் சென்று மறைந்தார் அனு.

"என்ன ம்மா" என்று பதறிப்போய் நீலாம்பரி அவரின் பின்னோடு செல்ல, சாரங்கன் அம்ருதாவைப் பார்த்திருந்தார்.

அனுவின் பேச்சைக் கேட்டிருந்தாலும் கிச்சனை விட்டு சரவணன் வெளியே வரவேயில்லை. அதுவே சாரங்கனுக்கு கலக்கமாக இருக்க, "அய்யா சரவணா" என்று மகனை அழைத்தும் அவர் வரவில்லை.

உடனே ஆரூரன் கிச்சன்னுக்குள் செல்ல, "சரோப்பா" என்று அவரை அணைத்துக்கொண்டான்.

"என்னவாம்.. பொண்டாட்டி கூட சண்டை போடற அளவுக்கு முன்னேற்றம் வந்தாச்சுப் போல" என்றவன் கேளியாகக் கேட்டாலும் அவனுக்காத் தெரியாதா அவர்களின் அன்யோன்யத்தைப் பற்றி.

காதலித்து கரம் பற்றியவர்கள் சரவணனும் அனுவும். சண்டை என்று இதுவரை போட்டதில்லை ஆனால் வாக்கு (வி)வாதம் நிறைந்திருக்கும்.

அதேபோல் தான் இரு தினங்களுக்கு முன்பு கூட. என்ன அது சற்று காரம் ஏற்றியிருந்தது.

அனு இரண்டு தினங்களாகப் பேசாமல் இருக்க, சரவணன் தான் தவித்துப் போயிருந்தார்.
உடனே மகனை தூதனுப்பினாலும் பயனிருக்காது என்று அவர் காத்திருக்க, அவர்களின் ஊடல் வீட்டினர் பார்வையாகும் அளவிற்கு அத்தனை வெளிச்சமாக இருந்தது.

ஊடலும் அழகானது தானே!

இப்போது அப்பிரச்சனையை சுமூகமாக முடிக்கவே காலையிலேயே சாரங்கனின் குழு முயற்சிக்க, சரவணனும் அம்முயற்சியின் பயனாக அனுவிடம் பேசச் செல்ல, எங்க அனைத்தும் சொதப்பியது!

"இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.. ஹாஸ்பிடல் போய் ஒரு மாஸ்டர் செக்கப் தான பார்க்கனும்னு சொல்லுறேன்.. ஏன் அதுக்குக் கூட வரமாட்டாராம். அவர் நல்லதுக்குத் தான சொல்லுறேன்.. இதக்கூட புரிஞ்சுக்காம இருக்காரே அம்மா" என்று நீலாம்பரியிடம் அவர் புகார் வாசிக்க, அவர் தான் என்ன செய்ய முடியும்.

"என் பிள்ளையையும் பேச்ச மீறி ஜெர்மன் அனுப்பியாச்சு. இவரும் வேலையவே இன்னும் கட்டிட்டு அழுறார். உடம்பு இப்போவே பாதி பாழாப்போச்சு.. இருக்கறதையாவது தக்கவச்சிக்க வாங்கனா, ஏதோ நொரநாட்டியம் பேசிட்டு இருக்கார்" என்று அவர் நொடித்தார்.

"சரி பூர்வா பேசுனானா" என்று அவர் பேச்சை மாற்ற, மகனின் பெயரைக் கேட்டதுமே அவர் முகத்தில் ஒரு மென்னகை படர்ந்தது.

அபூர்வன், சரவணபவன் - அனுரேகாவின் ஒற்றை புதல்வன். தற்போது ஜெர்மனில் மேல்படிப்பிற்காக சென்றுள்ளான்.

"எங்க.. நேத்து ஏதோ வேலையாம். இனி நைட் தான் கால் பண்ணுவான் அம்மா" என்றவர் சொல்லி முடிக்கவும், ஆரூரன் அறைக்குள் பிரவேசித்தான்.

"அனும்மா.. நாளைக்கு சரோப்பா அம்ரூவோட ஹாஸ்பிடல் போவார். ஓகே வா" என்றவன் சொல்ல, "உண்மையாவா" என்றார் கண்களை சுருக்கி.

"அட நானே கூட்டிட்டு போய் எல்லா டெஸ்டையும் எடுத்துட்டு.. எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துறேன் அனும்மா" என்று அதுவரை இல்லாத முக மலர்ச்சியுடன் அம்ருதா சொல்ல, அனுவின் முகம் இயல்பைக் காட்டியது.

ஆனால் நீலாம்பரியின் மூளை முழித்துக்கொண்டது!



"என்ன அப்படி பார்க்கறீங்க.. எனக்கு பயமா இருக்கு" என்று காவ்யா திரும்ப தன்னின் டேமை திறந்துவிட,

"கொஞ்சம் இரேன்டீ" என்ற ராகவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவன் அவனின் தாயார் பேச்சை கேட்காத பிள்ளை என்றாலும் வாசு அப்படி இல்லையே. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நாம் படித்திருப்போம் ஆனால் வாசு அதில் தாயையும் சேர்ந்து அல்லவா படிப்பான். (அப்போ படிச்சேல.. இப்போ அனுபவி)

எடுத்தெறிந்து பேசும் ரகம் ராகவ் இல்லை தான் இருந்தும் அவனுக்கு அவரை பிடிக்காது! ஆனால் வாசுவிற்கு அவனின் அன்னை தான் மூச்சு காற்று!

அவர் விதித்த கட்டளையின் படி நடக்கவில்லை என்றால் பாதிப்பு மொத்தமும் வாசுவிற்கு. இதில் குறிப்பிடபட வேண்டிய விசயம் அவரின் அந்த கட்டளை!

"சுத்த கேணத்தனமா இருக்கு" என்று காவ்யாவே பொங்கியிருக்க, அதற்கு வாசு ஒற்றுக்கொண்டானே அதுதான் இங்கு சிறப்பு.

எங்க திரும்பி யோசித்தாலும் முட்டுச்சந்தாகத்தான் ராகவிற்கு வந்தது.

"வாசு" என்று பரிதவிப்பாய் கூப்பிட்ட ராகவை உணர்வற்றப் பார்வைப் பார்த்திருந்தான் வாசுதேவன்.

'என்ன செய்ய' என்று மனதில் அக்கேள்வி ஓடிக்கொண்டே இருந்தாலும் அம்ருதாவை அவனால் இழக்க முடியும் என்று தோன்றவே இல்லை.

கையில் சூடான காஃபி இருக்க அதை மிடறு மிடறாக குடித்தவனின் எண்ணம் மொத்தமும் இருந்தது அவனின் அன்னையே. அவரை மீறி எப்படி சாத்தியம் என்ற கேள்வி வண்டாய் அவனைக் குடைந்துகொண்டிருந்தது.

ஆனால் அம்ருதாவின் மேல் அவன் கொண்ட அந்த அபிப்பிராயத்தை, 'அது காதல் தான்' என்றவன் மனது அடித்துச் சொன்னது.

காதல், இந்த வார்த்தை அவனுக்குத் தோன்றியே முழுதாக ஒரு வாரம் கூட ஆகிவிடவில்லை. ஆனால் அவளை மனதில் நினைக்க ஆரம்பித்து என்னவோ வருடம் நான்காயிற்று. ஆனால் இன்று அதனை இழக்கும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டுள்ளான்.

ஆம் தள்ளப்பட்டுள்ளான் தான். அவன் தாயிடம் அவன் வைத்த சத்தியம் அப்படியானது.

"அம்மா, இப்போ என்ன ராகவ் லவ் பண்ணிட்டான்.‌ அது என்ன அவ்வளவு பெரிய தப்பா. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு, லவ் பண்ணுறாங்க நாளைக்கு கல்யாணம் பண்ணிப்பாங்க. யாருக்காவது பிடிக்காத பட்சத்தில் நீங்க தடுத்தா நியாயம். இது சுத்த மடத்தனம். சரி.. இன்னும் நீங்க அதே ஸ்டண்ட்ல இருந்தீங்கனா நான் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்களே எனக்கான பொண்ண பாருங்க போதுமா.. இப்போ ராகவ விடுங்க"

"ஒருவேளை நீ காதல்னு வந்து நின்னா ராகவ்'க்கு கல்யாணமே ஆகியிருந்தாலும் அவன் டிவார்ஸ் பண்ணிடனும் இதுக்கு ஓகேவா உங்க அண்ணே" என்று வேண்டும் என்றே அவர் கேட்க, கொதித்துப் போன ராகவன் அன்றொடு தனக்குத் தாயே இல்லை என்று சுத்திக்கொ
ண்டிருக்கிறான்.

ஆனால் அப்படி விட்டுவிடும் உறவா அது?!

சரி யாரந்த பாசமிகு தாயார் என்றா கேட்கிறீர்கள். இதோ,

பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி. புவனா திருமழிசை அவர்களே!

அமுதம் தொடரும்...

 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 09

பரிதியவனின் ஆளுமையைக் கண்டுகொண்ட வான மகளோ அவன் மீது காதல் கொண்டு, அவனின் வருகையை எண்ணி நாணி கோணி மெல்ல தூரலிட்டவாறே செக்கச் சிவந்திருக்க, அவளின் தோழிகளான மேகங்களோ தங்களின் கேலிகளை அவிழ்த்துவிட, அதில் செங்கதிரோனுக்குமே சற்று வெக்கம் வந்து பளிர் என்று தன் சிவந்த நிறத்தை மறைக்க முடியாது வெளிக்காட்டிவிட்டான்.

அந்த காட்சியை எப்போதும் போல் இன்றும் ஆழ்ந்து இரசித்தவாறே சூடான சீரக ஓமம் தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தார், மீனாட்சி!

அது அவருக்கான நேரம். மெல்ல அந்த மாடித்தோட்டத்தில் ஒரு சிறு நடையுடன் அந்த காலை நேர விடிவானத்தை ரசிப்பது அத்தனை அலாதி அவருக்கு. கூட சூடாய் சீரகத் தண்ணீர் இருந்தால் போதும் அவரின் அந்த ஒருமணி நேர இளைப்பாறும் நிமிடங்கள் விநாழிகையாய் கரைந்திருக்கும்.

இந்த இருபத்து ஐந்து வருட மணவாழ்க்கை இப்படி தான் பெரும்பாலும் அவருக்கு கழிந்திருந்தது. என்ன ஒரு வித்தியாசம் அவர் நின்று ரசிக்கும் வீடும், இடமும் மட்டுமே சற்று மாற்றம். அவ்வளவே!

முதலில் என்னடா வாழ்வு என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு இப்போது அதை ரசித்து, உணர்ந்து வாழ பழகியிருந்தார் என்பதே உண்மை‌.

இதுதான் வாழ்க்கை என்ற எதார்த்தம் அவருக்கு புரியவே சில வருடங்கள் ஆனாலும் இன்னும் புரியாத ஒரு செய்தி சுந்தரேஸ்வரரின் அன்பும் காதலும்.

வார்த்தைகளால் அவர் அதை உணர்த்துவார் என்று மீனாட்சி எதிர்பார்த்திருக்க, அது அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது.

ஆனால் அவர் சொல்லும் அந்த அன்பையும் பாசத்தையும் ஏன் காதலையும் கூட சுந்தரேஸ்வரர் உணர்த்திய விதம் வேறாக இருக்க, அதனை புரிந்துகொள்ளத் தான் மீனாட்சியால் முடியவில்லை.

மனதில் மகிழ்வு இருந்தாலும் ஏதோ ஒரு வெற்றிடம். இன்னது என்று பிரித்தறிய இயலாமல் துளையிடும் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது காரணத்தை அறிய முடியாமல்.

"ம்மா.. ம்மா.. மீ.." என்று கத்திக்கொண்டே அம்ருதா மாடிக்கு வர,

அங்கு வண்ண வானத்தை நிமிர்ந்து பார்த்தவாறு நின்றிருந்த ஒரு ஓவியமாய் தெரிந்த மீனாட்சியைக் கண்டு ஒரு இன்ஸ்டன்ட் புகைப்பட நிபுணி ஆகிவிட்டாள் அம்ருதா.

"லவ்லி" என்றவளின் கத்தலில் தான் மீனாட்சி இயல்பு மீண்டு,

"என்ன அம்ரூ, இவ்வளவு நேரமா எங்க கிளம்பீட்ட?" என்று கேட்டவாறே அங்கு பூத்திருந்த மஞ்சள் நிற பன்னீர் ரோஜாவைப் பறித்தவர் மகளுக்கு சூடிவிட்டார்.

அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடியைப் போல் மகள் நின்றிருக்க, "அம்ரூ முதல்ல சுவாமி கும்பிடு. சீக்கிரமா அந்த ராமன் மாதிரியே ஒரு புருஷன் வரனும்னு வேண்டிக்கப் போ.." என்றார் திடீர் என்று.

அவர் ராமன் என்று சொன்னால் அவள் மனதில் அந்த கிருஷ்ணன் அல்லவா வந்து கண்சிமிட்டி நின்றான்.

மனதிற்குள்ளே ஒரு திடுக்கிடல்.
'அவர பத்தி கேட்கப் போறனால அவர் வந்திருப்பார்' என்று அசட்டையாக நினைத்து மீனாட்சியுடன் அவள் கீழே சென்றுவிட்டாள் அந்த கண்ணனுக்குப் பூஜை செய்ய.

"எதுக்கு உங்களக் கூப்பிட்டேனே மறந்தாச்சு மீ.." என்றவள் முகத்தை சுழிக்க, "சரி அதுவா நியாபகம் வரட்டும். இன்னிக்கு டாக்டர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கியாச்சா?" என்ற அவளுக்குப் பாலை ஆற்றி தர,

"வாங்கியாச்சே.." என்ற சொன்னவள், "ஏன் மீ அப்பாவுக்கும் பார்த்துட்டா என்ன?"

"அவருக்குக் எல்லாம் ஒன்னும் இருக்காது அம்ரூ. எதுக்கு இப்போ? ஒருத்தருக்கு பார்க்கும் போது இன்னொருத்தருக்கு பார்க்கக் கூடாது" என்று கண்டிப்புடன் கூற,

"அப்படியா.. அப்போ ஒரே நேரத்துல ஒரு பேமிலில இருக்க ரெண்டு பேருக்கு எதாவது பிரச்சனை வந்தா ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகமா, நல்ல நாள், நேரம் எல்லாம் பார்த்தா ஹாஸ்பிடல் போவீங்க" என்று முறைத்தவாறே படியிறங்கிக் கொண்டே கேட்ட ஆதவனுக்கு என்ன பதில் அவர் சொல்ல முடியும்.

"இதுல சனிக்கிழமை ஹாஸ்பிடல் போகக்கூடாதாம். ஏன் திடீர்னு அட்டாக் வந்து 'இன்னிக்கு சனிக்கிழமை ஹாஸ்பிடல் போகக்கூடாதுனு' நெஞ்சப் பிடிச்சுட்டு வீட்டுலையே இருந்துப்பீங்களோ" என்றவன் இன்னும் காய,

"டேய் விடேன்டா..அவங்களப் பத்திதான் தெரியும்ல" என்ற அம்ரூவின் சமாதானம் எல்லாம் அவன் கணக்கில் எடுக்கவே இல்லை.

"நீ இருடீ.. இதுவே தொடர்கதை மாதிரி போய்கிட்டே இருக்கு. எத்தன பேர் இந்த நினைப்போட இருக்காங்கத் தெரியுமா. சுத்தமா யோசிக்கக் கூடவா மாட்டாங்க." அவனின் ஆதங்கம் இப்படி வெளிவர,

"என்ன அதிசயம் காலங்காத்தாலையே இங்க மாநாடு போட்டிருக்கீங்க" என்று சாரங்கனும் வந்துவிட்டார்.

"சரோப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனுமே சாரு அதான் சீக்கிரமா கிளம்பிட்டேன்" என்றவளை வினோதமாகப் பார்த்திருந்தார் அவர்.

"பேபி.. எந்த ஹாஸ்பிடல் போற?" - சாரங்கன்

"மதுரா தான் சாரு" - அம்ரூ

"சரிதான். அவங்களே உன்ன கைட் பண்ணிடுவாங்க, டைம் சேவ்" - ஆதவன்

"என்னதான் சேவ்னாலும் இப்படி ஆறரை மணிக்கே கிளம்பி இருக்கனுமா" என்ற சாரங்கனின் கேள்விக்கு பின்பே அங்கு மற்றவர்களின் பல்பு எரிந்தது!

"அது சாரு.." என்ற இழுத்தவளை, "உங்க சரோப்பா மேல இம்புட்டு பாசமா அம்ரூ" என்று மீனாட்சி ஒருபக்கமும்,

"ஏன்டீ மூன்று கிலோமீட்டர்ல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு இப்போவேவா கிளம்பி நிப்ப! நானும் இத யோசிக்கவே இல்ல பாரேன் மீ" என்ற ஆதவனும் சேர்ந்துகொண்டு அம்ரூவை டீ ஆத்த ஆரம்பித்துவிட்டனர்.

'அய்யோ.. ஆர்வம்.. ஆர்வம்' என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட அம்ருதா பின் ஒரு சமாளிப்புடன், "இப்போவே யார் ஹாஸ்பிடல் போறேன்னு சொன்னா? நான் தி. நகர் பிரான்ச் போயிட்டு அப்பறமா தான் போவேன்" என்று அவள் முறுக்கிக்கொள்ள,

"அது என்ன எல்லாருக்கும் இந்த தி. நகர் பிரான்ச் மேலையே கண்ணா இருக்கு? எனக்குத் தெரியனும்" என்ற ஆதவன் கேள்வியிட,

"உடனே சமாளிக்கனும்னா அந்த பிரான்ச் தான பக்கத்துல இருக்கு" என்று டைனிங் டேபிளில் தாளமிட்டவாறு சாரங்கன் சொல்ல, 'சாரு கண்டுக்கிட்டார்' என்று அமைதியாகிவிட்டாள் அம்ருதா.

ஆனால் அவளையே பார்த்துக்கொண்டிருந்த நீலாம்பரிக்கு அவளின் நடவடிக்கை உவப்பாகவே இல்லை.

"ஆதவா.. உனக்கு இன்னிக்கு காலேஜ் போயே ஆகனுமா" என்று வந்து நின்ற நீலாம்பரியை,

"ஆமா நீல்ஸ், இன்பார்டன்ட் செமினார் இருக்கே" என்றுவிட்டான் அவன்.

"அப்போ சரி, அம்ரூ நீ தி. நகர் போய் இன்னிக்கு பார்த்துக்கோ. சரவணன ஆரூ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகட்டும்" என்ற குண்டைத் தூக்கி அவள் தலையில் போட, அவளின் அதிர்ந்த முகமே அவருக்கு அவளின் நிலையைக் கூறியிருந்தது.

'முதலுக்கே மோசம் வைச்சிடும் போலயே இந்த நீல்ஸ்' என்று நினைத்தவள் உடனே,

"அவனுக்கு என்னத் தெரியும்னு அவன சரோப்பா கூட போகச் சொல்லுறீங்க? அதெல்லாம் முடியாது நானே போறேன்" என்றவள் சரவணனின் அறைக் கதவைத் தட்ட அவரோ சிவப்பேறிய விழிகளுடன் வந்து கதவைத் திறந்தார்.

"ரெடியா அம்ரூ.. போகலாமா" தடாலென்று அவர் கேட்க, "ஹான்.. சரோப்பா" என்று முழிப்பது இப்போது இவளானது.

"என்ன அய்யா, தூங்கலையா சரியா" என்று சாரங்கன் கேட்டுக்கொண்ட சரவணனின் அருகே வர, "தூக்கம் வரல ப்பா.. சரி நாங்க கிளம்பறோம்" என்று அவர் முகம் பார்க்காது வாசல் நோக்கி சென்றுவிட்டார்.

சரவணனின் நடவடிக்கையிலேயே நீலாம்பரி துவண்டுவிட, இனி எங்க அவர் அம்ருதாவை பார்க்க!

"சரோப்பா இப்போவே போகனுமா என்ன" என்று பின்னூடே கேட்டுக்கொண்டே அம்ருதா வர,

"இல்ல அம்ரு. ஒரு மணி நேரம் அப்புறமா போகலாம். கொடோன்'ல ஸ்டாக் பார்க்கனும், நேத்து மறந்தாச்சு"

"நேத்தே பார்த்துட்டேனே சரோப்பா..‌ அங்க ராம் இருந்தார் இல்லாத ஐட்டம்ஸ் எல்லாம் வாங்க சொல்லிட்டேன்" என்றவளை நன்றியுடன் பார்த்திருந்தார் அவர்.

பாரி ஹோட்டல்ஸின் ஏழு பிரான்ச்களை சுந்தரேஸ்வரர், சரவணன், அம்ருதா மற்றும் ஆரூரன் தான் இப்போது நிர்வகிக்கின்றனர். அதில் அம்ரூவும் ஆரூவும் கத்துக்குட்டிகள் என்பதால் மேலோட்ட வேலைகள் மட்டுமே அவர்களிடம் தருவர் சரவணனும் சுந்தரேஸ்வரரும்.

சாரங்கனும் அனுரேகாவும் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தற்சமயம் அவர்களின் வேலைகள் சுருங்கி மாதம் சில முறைகள் மட்டும் வேலை மேற்பார்வை பார்க்க வருவார்கள்.

அதேபோல் எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் இருந்தாலும் அதை தானே நின்று பார்த்தால் தான் சரவணனுக்கு ஒரு திருப்தி. நேற்று மனைவியுடனான ஊடலில் அதை அவர் மறந்திருக்க, அம்ருதா பார்த்திருந்தது அத்தனை நிறைவு அவருக்கு.

வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அவர்கள் மதுரா வருவதற்கு மணி எட்டைத் தொட்டிருந்தது.

பின் முழு பரிசோதனைகள் செய்வதற்கு முன்பு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சில டெஸ்டுகள் எடுத்து சரவணன் வெளியே வர எட்டே முக்கால் ஆகிவிட, அவருக்கு பசியும் கண்ணை கட்டிவிட்டது.

அருகே ஒரு உணவகத்தில் உண்டு இருவரும் திரும்ப மதுராவிற்குள் நுழையும் தருணம் வேகமாய் ஒரு அவசர ஊர்தி அடிபட்ட ஒரு தம்பதியுடன் நுழைந்தது.

அடுத்த நிமிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டு அந்த இருவரின் உயிரைக் காக்க மருத்துவக்குழு போராட அந்த ஊர்தியின் உள் நான்கு வயது சிறுவன் முகம், உடை என்று ரத்தம் அப்பியவாறு அழுதுகொண்டிருந்தான்.

யார் கூப்பிட்டும் வராமல், தூக்கினாலும் பயங்கரமாய் கத்தவும் செய்வதறியாது ஊழியர்கள் அங்கேயே நின்றுவிட, படக்கென்று சரவணன் அந்த சிறுவனுக்கு அங்கிருந்த தண்ணீரைக் கொடுத்து தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்.

அத்தனை தாகம் போலும். முக்கால்வாசி குடிநீரை குடித்தவுடன் தான் அவனின் அழுகை சற்று மட்டுப்பட்டது.

அடிபட்டிருந்த தம்பதியர் அநேகமாக இவனின் பெற்றோர் என்பது திண்ணம்.
அதிர்ச்சியில் அவன் பயந்திருக்க, அவனிடம் இலகுவாய் பேசிக்கொண்டிருந்தார் சரவணன்.

அங்கேயே அவர்களும் இருந்துவிட அந்த தம்பதியருக்கும் சிகிச்சை ஆரம்பம் ஆகியிருந்தது.

எல்லாம் முடிந்து நல்லவிதமாக அவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பின்னர் தான் சரவணனுக்கு மூச்சே வந்தது.

"டேய் அம்ரூ, தம்பிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாயேன்"

க்ரீம் பன்னும் பிஸ்கட் உடன் ஒரு ஃப்ரெஷ் ஜூஸ்ஸை அவள் வாங்கி வந்து கொடுக்க ஆசையாக அவனுக்கு ஊட்டிவிட்டார் சரவணன்.

"இந்த தம்பிய பார்க்கும் போது நம்ம பூர்வா போலவே இருக்கான்ல" என்றவர் சொல்ல அவரையே பார்த்திருந்தவள் பின்னால் கேட்ட குட்மார்னிங் சப்தத்தில் திரும்பினாள்.

சாந்தமாய், சிரித்த முகத்துடன் ஏதோ பார்த்த சாயலில் வந்த அந்த ஐம்பதைக் கடந்த மருத்துவருக்கு அங்கு எல்லாரும் காலை வாழ்த்தைச் செல்லிக்கொண்டிருக்க, சரியாக அவரும் சரவணனின் அருகே வந்து நின்றார்.

அதுவரை அவரையேப் பார்த்திருந்த அம்ருதாவிற்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை அது வாசுதேவனின் தந்தை தான் என்று.

"ஹலோ சரவணன்" என்று சினேகமாக பேசியவரைப் பார்த்த சரவணனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்பு அவரைக் கண்டு கொண்டு அவரும் பேசலானார்.

இருவரையும் புரியாது பார்த்து நின்றிருந்த அம்ருதா, 'யாருனு சொல்லிட்டாவது பேசுங்கையா. இதுக்கு ஊமை படமே பெட்டர்னு தோன ஆரம்பிச்சிடும் போலயே' என்று சுற்றிலும் பார்வையைச் சுழற்ற சரியாய் அவனை பார்த்துவிட்டாள் கோதையவள்.

"தேவா" என்று அவளையும் மீறி அவளின் உதடுகள் உச்சரித்திருக்க, அவளின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கவில்லை அவளின் நயனங்கள்.

அவனின் மெல்லிய சாக்லேட் நிறத்திற்கு தோதாக க்ரீம் நிற சட்டையும் அதற்கு தக்க இன்க் நிற பேன்ட்டுடன் அவன் அவளையே பார்த்தவாறு நடந்துவர, அதுவரை இல்லாத ஒரு புதுவித பார்வை அவனிடம்.

புதிதாக கண்களில் ஒரு கருப்பு நிற சட்டம் போட்ட கண்ணாடி இன்னும் அவனை வசீகரித்திருக்க, இரண்டு நாள் தாடி வேறு அவளை இம்சித்திருந்தது.

'ச்சை.. ஹாஸ்பிட்டல்ல கூட என்ன சைட் அடிக்க வெச்சுட்டானே' என்றவள் நினைத்தாலும் அவனின் பார்வையின் அர்த்தம் மெல்ல புரிய ஆரம்பித்திருந்தது அவளுக்கு.

'என்ன இப்படி பார்க்கறான். தெரியும்னு பார்க்கறானா இல்ல என்ன இது' என்றவள் நினைத்துக்கொண்டிருக்க,
"அம்ரூ" என்ற சரவணனின் குரலுக்குத் திரும்பிவிட்டாள் அவள்.

"இது டாக்டர். முரளி கிருஷ்ணன். பாட்டிய முன்ன டிரீட் பண்ணியவர்" என்று விளக்கம் கொடுக்க, 'அட பச்சி சிக்கிடுச்சு' என்று அவள் மனது கவுண்ட்டர் கொடுத்தது.

ஒரு கேவலமான விரிந்த சிரிப்புடன் அவள் முரளியைப் பார்த்திருக்க, "ஹலோ அம்ருதவர்ஷினி" என்றவளிடம் கை நீட்டியவரின் கையைப் பற்றிக் குழுக்காமல் இரு கரம் கூப்பி வணங்கினாள் அம்ருதா.

அதுவே அவரை ஈர்த்துவிட, ஒரு புருவ உயர்வுடன், "காட் பிளஸ் யூ மை ச்சைல்ட்" என்று அவள் தலையில் கைவைத்து அவர் வாழ்த்திவிட,

"உங்க மருமகளுக்கு இன்னும் நாலு வார்த்த சேர்த்து போட்டு வாழ்த்துங்க டேட்" என்று அவர் காதில் சொன்ன வாசுவின் பேச்சைக் கேட்டவர் கண்கள் விரிய அம்ருதாவைத் தான் பார்த்திருந்தார்.

"தம்பி.. நல்லாயிருக்கீங்களா?" என்று சரவணன் வாசுவிடம் கேட்க, "உங்களுக்கு இவரத் தெரியுமா சரோப்பா" என்ற அம்ருதாவை முரளி கிருஷ்ணன் ஒரு சிறு நகையுடன் பார்த்திருந்தார்.

"தம்பி தான் அம்ரூ பூர்வாவ கவனிச்சுட்டார்" என்றவரின் பதிலால் குழம்பிவிட்டாள் அம்ருதா.

'பூர்வாக்கு என்னாச்சு' என்றவள் யோசிக்கவும் வாசு அவளின் கவனத்தை திசை திருப்பும் நோக்குடன், "ஹாய் அம் வாசுதேவ கிருஷ்ணன். இங்க கன்சல்டிங் டாக்டரா இருக்கேன். அண்ட் இவர் என் டேட்" என்று முரளியை காட்டவும் தான் அது அவளுக்கு சற்று புரிய ஆரம்பித்திருந்தது.

"அப்போ பைலட்?"

"அது இவரோட ஆம்பிஷன். இது அவங்க அம்மா கம்பல்ஷன்" என்று முரளியின் பதிலால் வாயடைத்து நின்றிருந்தாள் அம்ருதா.

"அம்ருதவர்ஷினி குழம்பீட்டிங்க போல! இது என்னோட ரெண்டாவது பையன் டாக்டர். வாசுதேவ கிருஷ்ணன். இங்க ஒரு கன்சல்டிங் டாக்டரா அப்போ அப்போ அவர் லீவ் டேஸ்ல வருவார். ஆனா இப்போ முழு நேர பைலட்! படிச்ச படிப்ப வீண் பண்ண கூடாதில்ல அதான் லீவ் டைம்ல டாக்டர் வேஷம்." என்றவர் சரவணனிடம்,

"இந்த சேம்ப் யார்கிட்டையும் வராம இருந்தாங்களாம். இவரோட பேரண்ட்ஸ் இப்போ நல்லா இருக்காங்க சரி யார் கிட்ட இவர் இருக்கார்னு பார்க்க வந்தேன். சடனா உங்களப் பார்த்ததும் நல்லது தான். சரி நான் வரேன்‌ மிஸ்டர். சரவணன். வீட்டுல கேட்டேன்னு சொல்லுங்க" என்று அவர் கிளம்பிவிட,

"வரேன் ம்மா வர்ஷினி" என்றவர் சொல்லும் போதே,
"டேட்" என்று வாசுவின் அழுத்தமான குரலால் திரும்பியவர் அவன் தலையாட்டலில், "வரேமா அம்ருதா" என்று திருத்தி சிரிப்புடன் சென்றுவிட்டார்.

அவனின் தலையாட்டலையும் முரளியின் திருத்தலையும் பார்த்த சரவணனுக்கு ஓரளவிற்கு வாசுவின் பார்வையும் பேச்சும் புரிந்துவிட்டது.

காதல் செய்தவருக்காத் தெரியாது அவனின் பார்வையின் அர்த்தம்!

இருந்தும் தந்தையானவருக்கு அந்த கணம் சுருக்கென்றது.

"சரிங்க தம்பி. நாங்க வரோம்" என்றவரின் குரலின் மாற்றம் அவனுக்குப் புரிந்திருந்தது.

ஆமோதிப்பாய் ஒரு தலையசைப்பைத் தந்தவன், "இந்த சேம்ப முன்னாடி ரிசப்ஷன் ஏரியால இருக்கற லேடி கிட்ட கொடுத்துடுங்க அங்கிள். அவங்க பார்த்துப்பாங்க" என்றவன் அவர் அந்த சிறுவனின் புறம் திரும்பியவுடன்,

"நைட் கால் பண்ணுவேன், எடு" என்று அவன் அம்ருதாவின் காதருகே மிக நெருக்கமாய் சொல்லிச் செல்ல, வேகமாய் அவனிடமிருந்து நகர்ந்தவளுக்கு அவனின் அந்த செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை.

சுழித்த முகத்துடனே அவனைப் பார்த்தாள் அவள்.

முரளியுடன் சென்றுவிட்ட, வாசுவின் கைப்பேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தால், "அம்மா காலிங்" என்றதை
ப் படித்தவன்,
"இனி என் காதல் வாழ்க்கை ரங்கராட்டினம் தான் போல" என்று ஒரு பெருமூச்சுடன் திரும்பி நடக்க, அவனையே திரும்பிப் பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள், அம்ருதவர்ஷினி சுந்தரேஸ்வரர்!


அமுதம் தொடரும்...
 
Last edited:
Top