Asha Evander
Moderator
அத்தியாயம் 1
அந்த திரையரங்கம் முழுவதும் ஒரே கூச்சலும் இருக்கைகளை தூக்கி எறிவதுமாக, மிகவும் அமர்க்களமாக இருந்தது. காரணம் இன்று ஆரண்யன் சக்கரவர்த்தியின் ஏழாவது படம் முதல் காட்சி. அவனின் மற்ற படங்களில் நான்கு மட்டுமே ஹிட் கொடுத்தாலும் அவனுக்காகவே அவனை ரசிக்கும் ரசிகர்கள் பலர். இன்றும் அப்படி தான். படம் அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும் ஆரண்யணின் முகத்தை திரையில் பார்த்ததற்கே இத்தனை அமர்க்களம்.
அவன் சினிமா துறைக்கு வந்தே நான்கு வருடங்கள் தான் ஆகி இருந்தன. அதற்குள் ஏழு படங்களை முடித்து அதில் நான்கு படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருந்தது. ஒரு படம் தேசிய விருதும் வாங்கி இருந்தது.
அந்த தியேட்டரில் கடைசி வரிசையில் மக்களோடு இணைந்து தானும் ரசித்துக் கொண்டிருந்தான் ஆரண்யன். அவன் எப்போதும் இப்படித் தான். அவனின் படம் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தியேட்டருக்கு தவறாமல் வந்து விடுவான். அவனின் ரசனையே வேறு.
இன்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை ரசித்தவாறே அவனுக்கு இடதுபக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான். அவன் இருந்தது கடைசி இருக்கை ஆதலால் அந்த இருட்டில் அவன் பார்வையை யாரும் கண்டுக் கொள்ளவும் இல்லை.
"ஹேய் வர்ஷ் இன்னைக்கு நைட் டுயூட்டி இருக்கு தானே. இந்த மொக்கை படத்துக்கு வரணும்னு இப்போ உனக்கு வேண்டுதலா? கிளம்பு. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்"
என்று வர்ஷ் என்றழைக்க பட்டவளின் தோழி பூர்விகா சிடுசிடுக்க,
"இன்னும் கொஞ்சம் நேரம் பூர்வி. என் ஹீரோவை சைட் அடிச்சிக்குறேன்" என்று அவனை அங்குலம் அங்குலமாக ரசித்தாள் வர்ஷிதா மேத்தா. மகப்பேறு மருத்துவர் அவள். சக்கரவர்த்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாள்.
“ஆமா பெரிய ஹீரோ இவரு, நாலு படம் ஹிட் அடிச்சிட்டா சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரா? அவங்க பண பலத்தை வச்சு இப்படி பப்ளிசிட்டி தேடிட்டு இருக்கார்” பூர்விகா சொல்ல,
“ஷட் அப் பூர்வி. அவரை பத்தி பேசாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?” வர்ஷிதா முகம் சிவக்க கேட்க,
அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் முகமும் மாறியது. ‘எதுக்காக இந்த கோபம்? அந்த பொண்ணு தான் ஏதோ பண்ணியிருக்கா’ அவனின் மனதில் பழகியே இராத பூர்வி மேல் கோபம் வந்தது.
“என்ன சொல்லிட்டேன் நான்? அவங்க ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தா அவங்களையே நெருங்க முடியாது வர்ஷி. மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துகிட்டு உன்னை நீயே கஷ்டபடுத்தாம வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கட்டிட்டு நிம்மதியா வாழு. கனவு வாழ்க்கை வாழாத”
பூர்வியின் பேச்சில் வர்ஷிதா தளர்ந்து அவளை பார்க்க “சரி சரி விடு படத்தை பாரு, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” என்ற பூர்வி அதற்கு மேல் எதுவும் பேசாமல் படத்தை பார்க்க, வர்ஷிதா அவனையே ரசித்து பார்த்தாள்.
அவளின் மனதில் அவனை பற்றிய பிம்பமே வேறு. காதல் என்பதை தாண்டி அவன் அவளின் எல்லாமுமாக மாறி சில வருடங்கள் ஆகி விட்டது. அது அவனுக்கு தெரியுமா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் எப்போதும் அவளுக்கு அவன் தான் ஹீரோ.
அவளின் ஒவ்வொரு முகபாவனையையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தனது பக்கத்தில் இருந்த மேனேஜரை பார்த்தான்.
“மிஸ்டர் மேத்தா வாங்கின அமௌண்ட் எல்லாம் செட்டில் பண்ணிட்டாரா?”
“சார்!” அவன் அதிர்ச்சியாக ஆரண்யனை பார்த்தான்.
‘படத்தை பார்க்க வந்து விட்டு என்ன நினைவில் இருக்கிறார் இவர்’ என நினைத்தவன் “இன்னும் அசல் வரல சார்” என்று கூற,
“இது முடிச்சிட்டு அங்க கிளம்பலாம்” என்றான் ஆரண்யன்.
“ஓகே சார்” என்று அவன் திரும்பி விட, மீண்டும் ஆரண்யன் பார்வை வர்ஷிதா பக்கம் தான் சென்றது.
இரண்டரை மணி நேரம் படம் முடிந்து அனைவரும் வெளியே வர, கூடவே யாருக்கும் தெரியாமல் கூட்டத்துடன் வெளியே வந்தவன் தியேட்டரின் பின்பக்கம் வழியாக கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து விட்டான்.
படத்தை நடித்து முடித்து கொடுப்பது வரை மட்டும் தான் அவன் பண்ணுவான். அடிக்கடி புரொமோஷன் செய்ய வந்தாலும் மீடியா பக்கம் திரும்பவே மாட்டான். இதுவரை அவனின் பேட்டி என எங்கேயும் வந்தது இல்லை.
அவன் மேனேஜர் வந்து காரை கிளப்ப, “மிஸ்டர் மேத்தா வீட்டுக்கு போ” என்று கூறி விட்டு வெளியே பார்க்க, தனது காரை எடுக்க நின்றாள் வர்ஷிதா.
“இவளை இன்னைக்கு பிடிச்சே ஆகணும்” எனக் கூற,
“யாரை சார்?” எனக் கேட்டான் மேனேஜர்.
“காரை ரோட்டை பார்த்து ஓட்டுறதுல கவனம் வைக்காம காதை என்கிட்ட ஒட்டு கேட்க விட்டுருக்கியா நீ?” ஆரண்யன் அழுத்தத்தில் “சாரி சார்” என திரும்பிக் கொண்டான் அவன்.
“இனி வீட்டுல தான் போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நைட் டியூட்டி கிளம்பி வா” என்ற பூர்வி அவளின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,
“நான் வரதுக்குள்ள கிளம்பிட்டாரா இந்த ஹீரோ சார்? நாளைக்காவது மாட்டாமலா போயிடுவார்” என்று அவளின் காரை கிளப்பினாள். பாவம் அவளின் வீட்டையே அவன் திருப்பி போட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.
—------
"சார் கொஞ்சம் நாள் டைம் குடுங்க பிளீஸ். எப்படியாவது இந்த முறை மொத்தமா கடனை அடைச்சிடுறேன். வீட்டுக்கு எல்லாம் வந்து அசிங்க படுத்தாதீங்க"
எனக் கெஞ்சி கொண்டிருந்தார் மேத்தா. அவரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.
நேராக மேத்தாவின் வீட்டிற்கு தான் வந்தான் என்றாலும் அவனை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அவனின் தொழில் நடிப்பு என்றாலும் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பதை மற்றொரு தொழிலாக செய்துக் கொண்டிருக்கிறான். மேத்தா அவரின் மகளின் படிப்பிற்காக இவனிடம் வட்டிக்கு கடன் வாங்கி விட்டு இப்போது இரண்டு மாத வட்டி கட்ட முடியாமல் போகவும், நேரடியாக கேட்க வந்திருந்தான் அவன்.
“அவர் இரண்டு மாசம் வட்டி கூட கட்டலன்னு என்கிட்ட சொல்லவே இல்ல நீ” அவனின் மேனேஜரை முறைக்க,
“சார் நான் தெளிவா சொல்லும் முன்னாடி நீங்க கிளம்ப சொல்லிட்டீங்க” என்றான் அவன்.
“இங்க பாருங்க மிஸ்டர் மேத்தா”
அவரை தாண்டி மகன், மனைவி என அவனின் பார்வை போக சட்டென எழுந்து நின்றார் மேத்தா.
"கண்டிப்பா இந்த முறை பணத்தை தந்திடுவேன் சார்"
அவர் சொல்லி முடிக்கும் நேரம் “அப்பா” என்ற குரல் கேட்டு திரும்பினான் ஆரண்யன். அவளை அவன் எதிர்பார்த்தே நின்றிருந்தாலும் அவளுக்கு அவனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சி.
வெளியில் அவன் காரை பார்த்தாலும் அவனாக இருக்காது என்ற சந்தேகத்தில் உள்ளே வந்தவளுக்கு அவனை பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும் தந்தை அவன் முன்னால் தவித்து நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினாள்.
“என்னாச்சு அப்பா? எதுக்காக இவர் இங்க வந்திருக்கார்?” அவள் கேட்க, ஆரண்யன் தோரணையாக அமர்ந்து கொண்டான்.
அவனின் தோரணையை ரசித்ததாக அவள் கண்கள் காட்டிக் கொடுத்து விட இன்னும் ஆழமாக அவளை பார்த்தான் அவன்.
தந்தையிடம் இருந்து பதில் வராமல் போகவே ஆரண்யனை பார்க்க, அவனோ மேத்தாவை பார்த்து,
"எனக்கு பணமா தான் வேணும்னு இல்ல. உங்க பொண்ணு கூட தரலாம்" என்று கூறி அவர்களின் அதிர்ந்த பார்வையை பொருட்படுத்தாமல் வெளியேறி விட்டான்.
வர்ஷிதா அவனின் பேச்சில் உச்சகட்ட கோபத்தில் இருந்தாள்.
“பணத்துக்காக நானா?”
“அப்பா என்ன நடக்குது இங்க?”
“அவர்கிட்ட அப்பா ஐம்பது லட்சம் கடன் வாங்கி இருக்கார் வர்ஷிக்கா. இந்த இரண்டு மாசமா வட்டியும் கட்டல. அதை கேட்க தான் அவர் வந்தார். ஆனா உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ண கேட்கிறார் போல” என அவளின் தம்பி விஷ்ணு கூறவும் தந்தையை பார்த்தாள்.
“என்ன அப்பா இது?”
“இந்த டைம் பிசினஸ் நல்ல லாபம் தான்டா, கண்டிப்பா மொத்தமாவே கொடுத்துடலாம்” என்றார் மேத்தா.
ஆனால் அவளுக்கு தான் அதில் நம்பிக்கை இல்லை. இதுவரை நேரில் வராதவன் இப்போது வந்ததற்கு என்னவோ காரணம் இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. கூடவே அவளை திருமணம் செய்யும் நோக்கில் தான் கேட்டானா எனும் குறுகுறுப்பும் கூடியது.
அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றவள் அப்படியே தூங்கி விட அவள் எழும்பும் போது மாலை ஐந்து ஆகி இருந்தது. எட்டு மணிக்கு மருத்துவமனை செல்ல வேண்டும்.
குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் ஆறு மணிக்கே கிளம்ப, “என்ன வர்ஷி இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்ட?” என்று வந்தார் ராதா, அவளின் தாய்.
“ஒரு கான்பரன்ஸ் இருக்கும்மா. அப்பாகிட்ட ரொம்ப பணத்துக்காக கஷ்டபட வேண்டாம்னு சொல்லுங்க. நான் வெளியில் ரெடி பண்ண பார்க்கிறேன்” என்றவள் ஒரு முறை தாயை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்.
“இது என்ன புதுசா?”
“அவ அடிக்கடி பண்ணுறது தானே. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா ராதாவை கட்டி பிடிச்சு கொஞ்சிட்டு தானே போவா” என்ற விஷ்ணு கூட அவரை பின்னால் இருந்து அணைக்க,
“விடுடா கழுதை வயசாச்சு இன்னும் என் பின்னாடி சுத்துற” என்று சமையலறைக்குள் சென்றார்.
----------
வர்ஷிதா மருத்துவமனை வழி செல்லாமல் அந்த பணக்காரர்கள் இருக்கும் சாலைக்குள் காரை திருப்பினாள். அனைத்தும் மேல்தட்டுவர்க்க மக்கள் வசிக்கும் இடம் அது. பல நடிகர்கள், தொழிலதிபர்கள், நடிகைககள் வீடு அங்கே இருக்க, ஆரண்யன் சக்கரவர்த்தியின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள் வர்ஷிதா.
அவளை பார்த்ததும் செக்யூரிட்டி கேட்டை திறந்து விட, அவரை ஆச்சர்யமாக பார்த்தவாறே காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள் வர்ஷிதா.
“உள்ளே போங்கமா. சார் உள்ளே தான் இருக்காங்க” என்று அவர் கேட்டை பூட்டி விட, தயங்கியவாறே வாசலில் வலது காலை எடுத்து வைத்தாள் வர்ஷிதா.
முதல்முறையாக அவனின் வீட்டிற்கு வருகிறாள். மனம் கவர்ந்தவன் வீட்டிற்கு வரும் போதே மனம் முழுவதும் பரவசம். அதிலும் இது ஆரண்யன் தனியாக இருக்கவே வாங்கிய வீடு. அவனின் குடும்பத்தார் எல்லாம் வேறு இடத்தில் இருந்தனர்.
ஹால் பகுதிக்கு வந்து விட்டவள் அவனை தேட, “என்ன மேடம் வீடு வரைக்கும் விசிட்?” என்று கேட்டுக் கொண்டே வந்தவனை பார்த்து மூச்சடைத்து நின்றாள் வர்ஷிதா.
அப்போது தான் குளித்திருப்பான் போல. தலையில் போட்ட ஷாம்பூ மணமும் சோப்பு மணமும் கலந்து அவளின் நாசியை தீண்ட, சட்டை இல்லாமல் வெறும் ட்ராக் பேண்ட் உடன் வந்து நின்றவன் மீது தான் அவள் பார்வையே.
“என்ன வச்ச கண்ணு எடுக்காம சைட் அடிக்குற. ஆனா தியேட்டர்ல மட்டும் பக்கத்துல இருந்தும் உனக்கு கண் தெரியலையே” என சிரிக்க,
“ஐயோ! அங்க வந்தீங்களா?” என ஒரு நொடி தடுமாறி பின் நேராக அவனை பார்த்தாள். ஆனால் அந்த ஒருநொடி தடுமாற்றம் தான் அவனுக்கும் அவள் மீது கொஞ்சம் பித்தாக்கியது.
“என்ன விஷயம்?” அவன் கேட்க,
“சொல்லுறேன், அந்த சட்டையை போட்டுட்டு வரீங்களா?” என இப்போது அவன் முகம் பார்க்காமல் சொல்ல,
“இவ்ளோ நேரமா ரசிச்சியே, அப்போவே வெட்கம் எல்லாம் இல்லன்னு தெரிஞ்சு போச்சு. இப்போவும் இப்படியே பேசு” அவன் சோபாவில் அமர,
“உங்களுக்கே ஒரு பொண்ணு முன்னாடி இப்படி நிக்கிறோம்னு கூச்சம் இல்ல அப்புறம் எனக்கு என்ன வந்துச்சாம்?” என்றவள்,
“காலையில வீட்ல வச்சு எதுக்காக அப்படி சொன்னீங்க பணம் இல்லைன்னா பொண்ணு அப்படின்னு. நான் என்ன பொருளா பணத்துக்கு பதிலா என்ன நீங்க விலைக்கு வாங்க?” எனக் கேட்க அதில் கொஞ்சம் சூடு ஏறியிருந்தது.
“அப்படியா சொன்னேன்! அச்சோ சாரி, உனக்கு ஆசை இல்லையா என்னை கல்யாணம் பண்ணிக்க?”
“அதெல்லாம் இல்ல”
“ஓ! அதனால்தான் நான் நடிக்கிற எல்லா படத்துக்கும் தியேட்டர்ல வந்து அப்படியே வச்ச கண்ணு பாக்காம ரசிச்சிட்டு இருப்பியா?”
“அது.. அது ஹீரோவா உங்களை பிடிக்கும். அதுக்காக அப்படி பார்க்கிறேன், அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அவள் தடுமாற, அவளை பிடித்து இழுத்தான் அவன்.
அவனின் மீது விழுந்தவளை இறுக பிடித்தவன், “அப்போ கல்யாணம் வேண்டாம் அப்படி தானே?” என்று கேட்க,
முயன்று “ஆமா” என்றாள், அவன் கண் பார்க்காமல்.
“ஓகே நீ கிளம்பலாம்” அவன் அவளை தள்ளி விட்டு எழும்ப, “என்ன!” அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“என்ன என்ன? நீ கிளம்பு. நான் வீட்டுக்கு போகணும். உனக்காக யாரும் இங்க தவம் இருக்கல” என்று கூற அவளுக்குள் சட்டென கோபம் மூண்டது.
‘கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?’ என எண்ணிக் கொண்டவள்,
"எனக்கு உங்களை கல்யாணம் பண்ண பூரண சம்மதம். பணத்துக்காக இல்ல, எனக்கு உங்க மேல இருக்குற காதலுக்காக. ஆனால் அதுக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன். சம்பாதிக்கிறது எல்லாம் என் அம்மா, அப்பாக்கு தான் கொடுப்பேன்" என்றவளை சுவாரசியமாக பார்த்தான் ஆரண்யன்.
சிறிது நேரத்துக்கு முன்பு தயங்கி நின்றவளா இவள் எனும் ரீதியில் அவன் பார்த்தான்.
"வர்ஷிதா மேத்தா! ரைட்?"
"ஆமா, அதுவே இப்போ தான் தெரியுமா?" என்று கொஞ்சம் மனம் கனக்க கேட்டாள்.
"சட்டு சட்டுன்னு வானிலை மாதிரி மாத்தி பேசுறியே. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லலன்னா என்ன பண்ணுவ?"
"சிம்பிள், அதிக வட்டிக்கு கடன் கொடுத்துட்டு திருப்பி கேட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் பண்ணுறதாக புகார் கொடுப்பேன். நாங்க அதை திருப்பி தர டைம் தானே கேட்டோம். மொத்தமா தரவே மாட்டேன்னு சொல்லலயே"
அவளின் பேச்சில் சிரித்தவன்,
"என் மேல புகார் கொடுக்க போற. அதுவும் உடல்ரீதியா துன்புறுத்தியதாக. ஆனா சாட்சி வேணுமே" என அவளை நெருங்க, பின்னால் நகர்ந்தாள் வர்ஷிதா.
“என்ன மேடம் தைரியசாலி ஆச்சே. நில்லு பார்ப்போம்” என்றவன்,
"லுக் மிஸ். வர்ஷிதா, இது என்னோட கோட்டை. அவ்ளோ ஈசியா நீ வெளில போக முடியாது" என்று கூற,
"ஆஹான்!"
என்றவள் அவன் எதிர்பாராத நொடி அவனின் தாடியை பிடித்து இழுத்து உதட்டை கடித்தவள் அவனின் அதிர்ந்த நிலையை பயன்படுத்தி வாசலுக்கு சென்று விட்டாள்.
அவன் தான் ஒரு நொடி அவளின் செயலில் சுயம் இழந்து நின்றான்.
"ஆரண்யா" குரல் கேட்டு அவன் நிமிர,
"ஐ லவ் யூ டா. என்னை கல்யாணம் பண்ண நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நீ கெட்டவனா இரு. நான் உனக்கும் மேல கெட்டவளா இருப்பேன். உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். உன் பணத்தை நான் திரும்ப தருவேன். ஆனா வேற எதுவும் என்கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது" என்று கூற,
“பாரேன்! உன்னை கல்யாணம் பண்ணி சும்மா உட்கார வைக்கவா முடியும்?அதையும் பார்க்கலாம்டி. இந்த உதட்டு கடியை நான் உனக்கு நாளைக்கே திருப்பி தரலன்னா நான் சக்கரவர்த்தி குடும்ப வாரிசு இல்லடி" என கத்தினான்.
"சரி தான் போடா" என்றவள் புன்சிரிப்புடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆரண்யன் உதட்டிலும் அதே புன்னகை.
அந்த திரையரங்கம் முழுவதும் ஒரே கூச்சலும் இருக்கைகளை தூக்கி எறிவதுமாக, மிகவும் அமர்க்களமாக இருந்தது. காரணம் இன்று ஆரண்யன் சக்கரவர்த்தியின் ஏழாவது படம் முதல் காட்சி. அவனின் மற்ற படங்களில் நான்கு மட்டுமே ஹிட் கொடுத்தாலும் அவனுக்காகவே அவனை ரசிக்கும் ரசிகர்கள் பலர். இன்றும் அப்படி தான். படம் அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும் ஆரண்யணின் முகத்தை திரையில் பார்த்ததற்கே இத்தனை அமர்க்களம்.
அவன் சினிமா துறைக்கு வந்தே நான்கு வருடங்கள் தான் ஆகி இருந்தன. அதற்குள் ஏழு படங்களை முடித்து அதில் நான்கு படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருந்தது. ஒரு படம் தேசிய விருதும் வாங்கி இருந்தது.
அந்த தியேட்டரில் கடைசி வரிசையில் மக்களோடு இணைந்து தானும் ரசித்துக் கொண்டிருந்தான் ஆரண்யன். அவன் எப்போதும் இப்படித் தான். அவனின் படம் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தியேட்டருக்கு தவறாமல் வந்து விடுவான். அவனின் ரசனையே வேறு.
இன்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை ரசித்தவாறே அவனுக்கு இடதுபக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான். அவன் இருந்தது கடைசி இருக்கை ஆதலால் அந்த இருட்டில் அவன் பார்வையை யாரும் கண்டுக் கொள்ளவும் இல்லை.
"ஹேய் வர்ஷ் இன்னைக்கு நைட் டுயூட்டி இருக்கு தானே. இந்த மொக்கை படத்துக்கு வரணும்னு இப்போ உனக்கு வேண்டுதலா? கிளம்பு. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்"
என்று வர்ஷ் என்றழைக்க பட்டவளின் தோழி பூர்விகா சிடுசிடுக்க,
"இன்னும் கொஞ்சம் நேரம் பூர்வி. என் ஹீரோவை சைட் அடிச்சிக்குறேன்" என்று அவனை அங்குலம் அங்குலமாக ரசித்தாள் வர்ஷிதா மேத்தா. மகப்பேறு மருத்துவர் அவள். சக்கரவர்த்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாள்.
“ஆமா பெரிய ஹீரோ இவரு, நாலு படம் ஹிட் அடிச்சிட்டா சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரா? அவங்க பண பலத்தை வச்சு இப்படி பப்ளிசிட்டி தேடிட்டு இருக்கார்” பூர்விகா சொல்ல,
“ஷட் அப் பூர்வி. அவரை பத்தி பேசாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?” வர்ஷிதா முகம் சிவக்க கேட்க,
அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் முகமும் மாறியது. ‘எதுக்காக இந்த கோபம்? அந்த பொண்ணு தான் ஏதோ பண்ணியிருக்கா’ அவனின் மனதில் பழகியே இராத பூர்வி மேல் கோபம் வந்தது.
“என்ன சொல்லிட்டேன் நான்? அவங்க ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தா அவங்களையே நெருங்க முடியாது வர்ஷி. மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துகிட்டு உன்னை நீயே கஷ்டபடுத்தாம வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கட்டிட்டு நிம்மதியா வாழு. கனவு வாழ்க்கை வாழாத”
பூர்வியின் பேச்சில் வர்ஷிதா தளர்ந்து அவளை பார்க்க “சரி சரி விடு படத்தை பாரு, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” என்ற பூர்வி அதற்கு மேல் எதுவும் பேசாமல் படத்தை பார்க்க, வர்ஷிதா அவனையே ரசித்து பார்த்தாள்.
அவளின் மனதில் அவனை பற்றிய பிம்பமே வேறு. காதல் என்பதை தாண்டி அவன் அவளின் எல்லாமுமாக மாறி சில வருடங்கள் ஆகி விட்டது. அது அவனுக்கு தெரியுமா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் எப்போதும் அவளுக்கு அவன் தான் ஹீரோ.
அவளின் ஒவ்வொரு முகபாவனையையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தனது பக்கத்தில் இருந்த மேனேஜரை பார்த்தான்.
“மிஸ்டர் மேத்தா வாங்கின அமௌண்ட் எல்லாம் செட்டில் பண்ணிட்டாரா?”
“சார்!” அவன் அதிர்ச்சியாக ஆரண்யனை பார்த்தான்.
‘படத்தை பார்க்க வந்து விட்டு என்ன நினைவில் இருக்கிறார் இவர்’ என நினைத்தவன் “இன்னும் அசல் வரல சார்” என்று கூற,
“இது முடிச்சிட்டு அங்க கிளம்பலாம்” என்றான் ஆரண்யன்.
“ஓகே சார்” என்று அவன் திரும்பி விட, மீண்டும் ஆரண்யன் பார்வை வர்ஷிதா பக்கம் தான் சென்றது.
இரண்டரை மணி நேரம் படம் முடிந்து அனைவரும் வெளியே வர, கூடவே யாருக்கும் தெரியாமல் கூட்டத்துடன் வெளியே வந்தவன் தியேட்டரின் பின்பக்கம் வழியாக கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து விட்டான்.
படத்தை நடித்து முடித்து கொடுப்பது வரை மட்டும் தான் அவன் பண்ணுவான். அடிக்கடி புரொமோஷன் செய்ய வந்தாலும் மீடியா பக்கம் திரும்பவே மாட்டான். இதுவரை அவனின் பேட்டி என எங்கேயும் வந்தது இல்லை.
அவன் மேனேஜர் வந்து காரை கிளப்ப, “மிஸ்டர் மேத்தா வீட்டுக்கு போ” என்று கூறி விட்டு வெளியே பார்க்க, தனது காரை எடுக்க நின்றாள் வர்ஷிதா.
“இவளை இன்னைக்கு பிடிச்சே ஆகணும்” எனக் கூற,
“யாரை சார்?” எனக் கேட்டான் மேனேஜர்.
“காரை ரோட்டை பார்த்து ஓட்டுறதுல கவனம் வைக்காம காதை என்கிட்ட ஒட்டு கேட்க விட்டுருக்கியா நீ?” ஆரண்யன் அழுத்தத்தில் “சாரி சார்” என திரும்பிக் கொண்டான் அவன்.
“இனி வீட்டுல தான் போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நைட் டியூட்டி கிளம்பி வா” என்ற பூர்வி அவளின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,
“நான் வரதுக்குள்ள கிளம்பிட்டாரா இந்த ஹீரோ சார்? நாளைக்காவது மாட்டாமலா போயிடுவார்” என்று அவளின் காரை கிளப்பினாள். பாவம் அவளின் வீட்டையே அவன் திருப்பி போட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.
—------
"சார் கொஞ்சம் நாள் டைம் குடுங்க பிளீஸ். எப்படியாவது இந்த முறை மொத்தமா கடனை அடைச்சிடுறேன். வீட்டுக்கு எல்லாம் வந்து அசிங்க படுத்தாதீங்க"
எனக் கெஞ்சி கொண்டிருந்தார் மேத்தா. அவரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.
நேராக மேத்தாவின் வீட்டிற்கு தான் வந்தான் என்றாலும் அவனை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அவனின் தொழில் நடிப்பு என்றாலும் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பதை மற்றொரு தொழிலாக செய்துக் கொண்டிருக்கிறான். மேத்தா அவரின் மகளின் படிப்பிற்காக இவனிடம் வட்டிக்கு கடன் வாங்கி விட்டு இப்போது இரண்டு மாத வட்டி கட்ட முடியாமல் போகவும், நேரடியாக கேட்க வந்திருந்தான் அவன்.
“அவர் இரண்டு மாசம் வட்டி கூட கட்டலன்னு என்கிட்ட சொல்லவே இல்ல நீ” அவனின் மேனேஜரை முறைக்க,
“சார் நான் தெளிவா சொல்லும் முன்னாடி நீங்க கிளம்ப சொல்லிட்டீங்க” என்றான் அவன்.
“இங்க பாருங்க மிஸ்டர் மேத்தா”
அவரை தாண்டி மகன், மனைவி என அவனின் பார்வை போக சட்டென எழுந்து நின்றார் மேத்தா.
"கண்டிப்பா இந்த முறை பணத்தை தந்திடுவேன் சார்"
அவர் சொல்லி முடிக்கும் நேரம் “அப்பா” என்ற குரல் கேட்டு திரும்பினான் ஆரண்யன். அவளை அவன் எதிர்பார்த்தே நின்றிருந்தாலும் அவளுக்கு அவனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சி.
வெளியில் அவன் காரை பார்த்தாலும் அவனாக இருக்காது என்ற சந்தேகத்தில் உள்ளே வந்தவளுக்கு அவனை பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும் தந்தை அவன் முன்னால் தவித்து நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினாள்.
“என்னாச்சு அப்பா? எதுக்காக இவர் இங்க வந்திருக்கார்?” அவள் கேட்க, ஆரண்யன் தோரணையாக அமர்ந்து கொண்டான்.
அவனின் தோரணையை ரசித்ததாக அவள் கண்கள் காட்டிக் கொடுத்து விட இன்னும் ஆழமாக அவளை பார்த்தான் அவன்.
தந்தையிடம் இருந்து பதில் வராமல் போகவே ஆரண்யனை பார்க்க, அவனோ மேத்தாவை பார்த்து,
"எனக்கு பணமா தான் வேணும்னு இல்ல. உங்க பொண்ணு கூட தரலாம்" என்று கூறி அவர்களின் அதிர்ந்த பார்வையை பொருட்படுத்தாமல் வெளியேறி விட்டான்.
வர்ஷிதா அவனின் பேச்சில் உச்சகட்ட கோபத்தில் இருந்தாள்.
“பணத்துக்காக நானா?”
“அப்பா என்ன நடக்குது இங்க?”
“அவர்கிட்ட அப்பா ஐம்பது லட்சம் கடன் வாங்கி இருக்கார் வர்ஷிக்கா. இந்த இரண்டு மாசமா வட்டியும் கட்டல. அதை கேட்க தான் அவர் வந்தார். ஆனா உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ண கேட்கிறார் போல” என அவளின் தம்பி விஷ்ணு கூறவும் தந்தையை பார்த்தாள்.
“என்ன அப்பா இது?”
“இந்த டைம் பிசினஸ் நல்ல லாபம் தான்டா, கண்டிப்பா மொத்தமாவே கொடுத்துடலாம்” என்றார் மேத்தா.
ஆனால் அவளுக்கு தான் அதில் நம்பிக்கை இல்லை. இதுவரை நேரில் வராதவன் இப்போது வந்ததற்கு என்னவோ காரணம் இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. கூடவே அவளை திருமணம் செய்யும் நோக்கில் தான் கேட்டானா எனும் குறுகுறுப்பும் கூடியது.
அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றவள் அப்படியே தூங்கி விட அவள் எழும்பும் போது மாலை ஐந்து ஆகி இருந்தது. எட்டு மணிக்கு மருத்துவமனை செல்ல வேண்டும்.
குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் ஆறு மணிக்கே கிளம்ப, “என்ன வர்ஷி இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்ட?” என்று வந்தார் ராதா, அவளின் தாய்.
“ஒரு கான்பரன்ஸ் இருக்கும்மா. அப்பாகிட்ட ரொம்ப பணத்துக்காக கஷ்டபட வேண்டாம்னு சொல்லுங்க. நான் வெளியில் ரெடி பண்ண பார்க்கிறேன்” என்றவள் ஒரு முறை தாயை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்.
“இது என்ன புதுசா?”
“அவ அடிக்கடி பண்ணுறது தானே. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா ராதாவை கட்டி பிடிச்சு கொஞ்சிட்டு தானே போவா” என்ற விஷ்ணு கூட அவரை பின்னால் இருந்து அணைக்க,
“விடுடா கழுதை வயசாச்சு இன்னும் என் பின்னாடி சுத்துற” என்று சமையலறைக்குள் சென்றார்.
----------
வர்ஷிதா மருத்துவமனை வழி செல்லாமல் அந்த பணக்காரர்கள் இருக்கும் சாலைக்குள் காரை திருப்பினாள். அனைத்தும் மேல்தட்டுவர்க்க மக்கள் வசிக்கும் இடம் அது. பல நடிகர்கள், தொழிலதிபர்கள், நடிகைககள் வீடு அங்கே இருக்க, ஆரண்யன் சக்கரவர்த்தியின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள் வர்ஷிதா.
அவளை பார்த்ததும் செக்யூரிட்டி கேட்டை திறந்து விட, அவரை ஆச்சர்யமாக பார்த்தவாறே காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள் வர்ஷிதா.
“உள்ளே போங்கமா. சார் உள்ளே தான் இருக்காங்க” என்று அவர் கேட்டை பூட்டி விட, தயங்கியவாறே வாசலில் வலது காலை எடுத்து வைத்தாள் வர்ஷிதா.
முதல்முறையாக அவனின் வீட்டிற்கு வருகிறாள். மனம் கவர்ந்தவன் வீட்டிற்கு வரும் போதே மனம் முழுவதும் பரவசம். அதிலும் இது ஆரண்யன் தனியாக இருக்கவே வாங்கிய வீடு. அவனின் குடும்பத்தார் எல்லாம் வேறு இடத்தில் இருந்தனர்.
ஹால் பகுதிக்கு வந்து விட்டவள் அவனை தேட, “என்ன மேடம் வீடு வரைக்கும் விசிட்?” என்று கேட்டுக் கொண்டே வந்தவனை பார்த்து மூச்சடைத்து நின்றாள் வர்ஷிதா.
அப்போது தான் குளித்திருப்பான் போல. தலையில் போட்ட ஷாம்பூ மணமும் சோப்பு மணமும் கலந்து அவளின் நாசியை தீண்ட, சட்டை இல்லாமல் வெறும் ட்ராக் பேண்ட் உடன் வந்து நின்றவன் மீது தான் அவள் பார்வையே.
“என்ன வச்ச கண்ணு எடுக்காம சைட் அடிக்குற. ஆனா தியேட்டர்ல மட்டும் பக்கத்துல இருந்தும் உனக்கு கண் தெரியலையே” என சிரிக்க,
“ஐயோ! அங்க வந்தீங்களா?” என ஒரு நொடி தடுமாறி பின் நேராக அவனை பார்த்தாள். ஆனால் அந்த ஒருநொடி தடுமாற்றம் தான் அவனுக்கும் அவள் மீது கொஞ்சம் பித்தாக்கியது.
“என்ன விஷயம்?” அவன் கேட்க,
“சொல்லுறேன், அந்த சட்டையை போட்டுட்டு வரீங்களா?” என இப்போது அவன் முகம் பார்க்காமல் சொல்ல,
“இவ்ளோ நேரமா ரசிச்சியே, அப்போவே வெட்கம் எல்லாம் இல்லன்னு தெரிஞ்சு போச்சு. இப்போவும் இப்படியே பேசு” அவன் சோபாவில் அமர,
“உங்களுக்கே ஒரு பொண்ணு முன்னாடி இப்படி நிக்கிறோம்னு கூச்சம் இல்ல அப்புறம் எனக்கு என்ன வந்துச்சாம்?” என்றவள்,
“காலையில வீட்ல வச்சு எதுக்காக அப்படி சொன்னீங்க பணம் இல்லைன்னா பொண்ணு அப்படின்னு. நான் என்ன பொருளா பணத்துக்கு பதிலா என்ன நீங்க விலைக்கு வாங்க?” எனக் கேட்க அதில் கொஞ்சம் சூடு ஏறியிருந்தது.
“அப்படியா சொன்னேன்! அச்சோ சாரி, உனக்கு ஆசை இல்லையா என்னை கல்யாணம் பண்ணிக்க?”
“அதெல்லாம் இல்ல”
“ஓ! அதனால்தான் நான் நடிக்கிற எல்லா படத்துக்கும் தியேட்டர்ல வந்து அப்படியே வச்ச கண்ணு பாக்காம ரசிச்சிட்டு இருப்பியா?”
“அது.. அது ஹீரோவா உங்களை பிடிக்கும். அதுக்காக அப்படி பார்க்கிறேன், அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அவள் தடுமாற, அவளை பிடித்து இழுத்தான் அவன்.
அவனின் மீது விழுந்தவளை இறுக பிடித்தவன், “அப்போ கல்யாணம் வேண்டாம் அப்படி தானே?” என்று கேட்க,
முயன்று “ஆமா” என்றாள், அவன் கண் பார்க்காமல்.
“ஓகே நீ கிளம்பலாம்” அவன் அவளை தள்ளி விட்டு எழும்ப, “என்ன!” அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“என்ன என்ன? நீ கிளம்பு. நான் வீட்டுக்கு போகணும். உனக்காக யாரும் இங்க தவம் இருக்கல” என்று கூற அவளுக்குள் சட்டென கோபம் மூண்டது.
‘கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?’ என எண்ணிக் கொண்டவள்,
"எனக்கு உங்களை கல்யாணம் பண்ண பூரண சம்மதம். பணத்துக்காக இல்ல, எனக்கு உங்க மேல இருக்குற காதலுக்காக. ஆனால் அதுக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன். சம்பாதிக்கிறது எல்லாம் என் அம்மா, அப்பாக்கு தான் கொடுப்பேன்" என்றவளை சுவாரசியமாக பார்த்தான் ஆரண்யன்.
சிறிது நேரத்துக்கு முன்பு தயங்கி நின்றவளா இவள் எனும் ரீதியில் அவன் பார்த்தான்.
"வர்ஷிதா மேத்தா! ரைட்?"
"ஆமா, அதுவே இப்போ தான் தெரியுமா?" என்று கொஞ்சம் மனம் கனக்க கேட்டாள்.
"சட்டு சட்டுன்னு வானிலை மாதிரி மாத்தி பேசுறியே. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லலன்னா என்ன பண்ணுவ?"
"சிம்பிள், அதிக வட்டிக்கு கடன் கொடுத்துட்டு திருப்பி கேட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் பண்ணுறதாக புகார் கொடுப்பேன். நாங்க அதை திருப்பி தர டைம் தானே கேட்டோம். மொத்தமா தரவே மாட்டேன்னு சொல்லலயே"
அவளின் பேச்சில் சிரித்தவன்,
"என் மேல புகார் கொடுக்க போற. அதுவும் உடல்ரீதியா துன்புறுத்தியதாக. ஆனா சாட்சி வேணுமே" என அவளை நெருங்க, பின்னால் நகர்ந்தாள் வர்ஷிதா.
“என்ன மேடம் தைரியசாலி ஆச்சே. நில்லு பார்ப்போம்” என்றவன்,
"லுக் மிஸ். வர்ஷிதா, இது என்னோட கோட்டை. அவ்ளோ ஈசியா நீ வெளில போக முடியாது" என்று கூற,
"ஆஹான்!"
என்றவள் அவன் எதிர்பாராத நொடி அவனின் தாடியை பிடித்து இழுத்து உதட்டை கடித்தவள் அவனின் அதிர்ந்த நிலையை பயன்படுத்தி வாசலுக்கு சென்று விட்டாள்.
அவன் தான் ஒரு நொடி அவளின் செயலில் சுயம் இழந்து நின்றான்.
"ஆரண்யா" குரல் கேட்டு அவன் நிமிர,
"ஐ லவ் யூ டா. என்னை கல்யாணம் பண்ண நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நீ கெட்டவனா இரு. நான் உனக்கும் மேல கெட்டவளா இருப்பேன். உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். உன் பணத்தை நான் திரும்ப தருவேன். ஆனா வேற எதுவும் என்கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது" என்று கூற,
“பாரேன்! உன்னை கல்யாணம் பண்ணி சும்மா உட்கார வைக்கவா முடியும்?அதையும் பார்க்கலாம்டி. இந்த உதட்டு கடியை நான் உனக்கு நாளைக்கே திருப்பி தரலன்னா நான் சக்கரவர்த்தி குடும்ப வாரிசு இல்லடி" என கத்தினான்.
"சரி தான் போடா" என்றவள் புன்சிரிப்புடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆரண்யன் உதட்டிலும் அதே புன்னகை.