priya pandees
Moderator
அத்தியாயம் 1
பாப்பு கனவில் கண்ட பெண்ணின் நிலைமையில் ஹோமா ஸ்டேஜில் படுத்துவிட, அவள் கண் முன் நடந்தவைகளை காண வேண்டி பூர்வ ஜென்மம் சென்று விட்டாள். அவள் கண்டதே இனி நாம் விவரமாக பார்க்க உள்ளோம்.
நடு நிசி, அடர்ந்த காட்டுப் பகுதி, பௌர்ணமி வெளிச்சம் மட்டுமே அடர்ந்த மரங்களை தாண்டி அங்கங்கு விழுந்து வெளிச்சத்தை பரப்ப முயற்சித்து கொண்டிருந்தது. "சோ" ௭ன்ற இறைச்சலுடன் அருவி கொட்டி கொண்டிருந்தது. அங்கு தான் பாப்பு வந்து நின்று பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் "என்று தானடி விட்டொழிப்பாய் இப்பழக்கத்தை" ௭ன்ற பெண்ணின் கேள்விக்கு., அழகிய நீல கூந்தல் அசைந்தாட நீரில் ஆடி கொண்டிருந்தவள் நின்று திரும்பி "நான் தீண்டத்தகாத செயல் ஒன்றும் செய்யவில்லையே கொற்றவை" ௭ன்க.
"ஆத்தி இவ ௭ன்ன ௭ன்னைய மாறியே இருக்கா" ௭ன வாயை பிளந்தவாறு தன்னையே தடவி தடவி பார்த்தாள் பாப்பு.
"உனக்கே இது அதிகமாக தெரியவில்லையா மகிழ்" என்ற படி அருவியின் அடியிலிருந்து வெளிவந்து காட்சி கொடுத்தாள் கொற்றவை செல்வி.
"ஏனடி எனது சிறிய ஆசையை நிறைவேற்ற இப்படி சலித்துக் கொள்கிறாய்".
"சிறிய ஆசையா? கடந்த 11 வருடமாக நடுநிசியில் யாருக்கும் தெரியாமல் இந்த வயது பெண்ணை கிழங்கையும், ஆட்டிறைச்சியையும் காட்டி ஏமாற்றி கூட்டிவந்து இந்த அருவியில் குளிப்பாட்டுகிறாயே, இது சிறிய ஆசையா? இவ்விஷயம் உனது, எனது பெற்றோர்களுக்கு மட்டும் தெரிய வேண்டும், வேங்கை அம்மனுக்கு வேண்டுதல் இல்லா பலியாகி விடுவோம்" ௭ன புலம்ப.
"11 வருடம் ஆகியும் நீ புலம்புவது ௭ப்படி மாறவில்லையோ, அதுபோல் ௭னது இந்த பௌர்ணமி இரவும் மாறாது. மற்றவைகளை மாட்டும் தினத்தன்று யோசிப்போமடி" ௭ன்றாள் சாதாரணமாக மகிழ்.
"அது எப்படி மாதந்தோறும் சரியாக பௌர்ணமியன்று மட்டும் நடுநிசியில் விழிக்கிறாய், பழக்கத்தில் வரவேண்டுமென்றாலும் எனக்கு மட்டும் இத்தனை வருட பழக்கத்தில் விழிப்பு வர மாட்டேன் என்கிறது" என கேட்டவாறு அருவியிலிருந்து வெளிவந்து கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
சுற்றி சுற்றி பார்த்த பாப்பு 'என்னது இவ்வளவு இருட்டா இருக்கு?. நாம ௭ங்க வந்துருக்கோம், காலைல சார்ம் கூட்டிட்டு வந்த இடம் தானே இது, இப்ப ௭ப்டி வந்தோம் பரவாயில்லயே ஜெட் வேகத்துல வந்துட்டோம். ௭ன்னலாமோ தோனுச்சே. ஆமா இங்க தான் அந்த பொண்ணு கழுத்தறுத்து சாக போச்சு, காப்பாத்தணுமே' என சுற்றி முற்றி தேட, இருவர் பேசிக்கொண்டே நடந்து வரும் சத்தம் கேட்டு மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தாள்.
அவ்வளவு நேரமும் தன்னை போலவே ஒருத்தியை கண்ட ஷாக்கில் உடன் வந்த கொற்றவையை கவனிக்காதவல் தற்போது கண்டு விட்டு, 'கூட வர்றது வெள்ள பாட்சா தானே, இவ இங்க என்ன செய்றா? ஆமா அவ வயிறு பெருசா இல்ல? பாப்பாவ எங்க?' என்ற குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டிருக்க, இருவரும் பேசியவாறே இவளைக் கடந்து சென்றனர். தானும் பின்தொடர்ந்தாள் பாப்பு.
அந்த பெண்களின் பேச்சு தொடர்ந்தது, "என்னை வேங்கை எதிர்பார்ப்பாள் அதனால் எழுந்துவிட வேண்டுமென நான் தூங்கினாலும் என் மனம் விழித்திருக்கும். ஆனால் உன் மனம், எப்படியும் மகிழ் வந்து எழுப்பி விடுவாள் அந்நேரம் எழுந்து கொள்ளலாம் என நிம்மதியாக உறங்கி விடுகிறது".
"அப்படியும் இருக்குமோ?"
"அப்படித்தான் இருக்கும் கொற்றவை" என ஈர உடையுடன் வந்து சிவனை வணங்கினர். பின் வேங்கை நல்லாள் குகையை நோக்கி நடந்தனர்.
'அட நம்ம சார்ம் கூட வந்த அதே அருவி, அதே சிவன் கோயில், அப்ப இது அதே காடு தான்' இது குழப்பத்திலிருந்த பாப்பு.
மலையை குடைந்து உள்ளே செல்லும் நீண்ட பாதை, ஆங்காங்கே இருந்த தீப்பந்தத்தின் ஒளியில் பாதையைக் காட்டிக் கொடுத்தது. உள்ளே இரு பக்கத் தீப்பந்தத்தின் ஒளியிலும், நேர்முகத்தில் படும் நிலவின் ஒளியிலும் பிரகாசமாய் காட்சியளித்தாள் வேங்கை நல்லாள்.
'இந்த பொண்ணு எப்படி நம்மள மாதிரியே இருக்கு? ஆனா வேற மாதிரி பேசுது, ட்ரெஸிங் டோட்டலா வித்தியாசமா இருக்கே, அட அடுத்து அதே குகை கோயில், நேத்து வந்தப்போ அவ்வளவு தூசியா இருந்தது, இப்போ இவ்ளோ நீட்டா இருக்கு! என்னட எடிசனுக்கு வந்த சோதனை, நீங்க கஷ்டப்பட்டு லைட்ட கண்டுபிடிச்சும் இங்க கட்டைல தீ பொருத்தி வச்சிருக்காங்க, ஒருவேளை இங்க ஈ.பி., கனெக்சன் வாங்கலையோ?' என அவள் கேள்வி அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருந்தது.
"இந்த ஒரு விஷயம் தானடி மகிழ் அர்த்தஜாமத்தில் எழுப்பி குளிக்க வைக்கிறாய் என தெரிந்தும் உன்னுடன் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணம், ௭ன்ன தேஜஸ் பார்த்தாயா நம் தாய் முகத்தில்" என கண்ணை வேங்கை நல்லாளின் முகத்தை விட்டு நகராமல் கொற்றவை சொல்ல.
"அது தெரிந்ததனால் தானேடி நீ விடாமல் பிதற்றினாலும் பரவாயில்லை என்று உன்னை தவறாமல் உடன் அழைத்து வருகிறேன்".
பின் இருவரும் மனம் குளிர அமைதியாக அமர்ந்து அவளை ஆசை தீர தரிசித்து விட்டு வெளியேற, "ஏனோ மகிழ், ௭னக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம், இந்நேரம் நம் தாயும் தூங்கும் நேரமாக இருப்பின் நாம் அவளை தொந்தரவு செய்ததாக ஆகிவிடாது?" என்ற கொற்றவையின் கேள்விக்கு.
"அப்படி நினைத்திருந்தால் எட்டு வயதில் நான் முதன் முதலில் கிளம்புகையிலேயே ஏதாவது தடங்கல் கொடுத்து என்னை தடுத்து இருப்பார்களே".
"அது சரி, அது சரி அவளை மீறி நம்மால் ௭ன்ன செய்துவிட முடியும். சரி அது போகட்டும், இப்போது என்ன வேண்டிக் கொண்டாய்?".
"வேண்டுதலை எப்படியடி வெளியில் சொல்வது".
"இதற்கு முன் சொல்லிக்கொண்டதே இல்லாதது போல் பேசுகிறாயே. எனக்கு தெரியும் நீ என்ன வேண்டியிருப்பாய் என" ௭ன்று கொற்றவை நொடித்து கொள்ள.
"என்ன தெரியும் உனக்கு? கொஞ்சம் சொல்லு கேட்போம்".
"இந்த வயதில் வேறு என்ன வேண்ட முடியும். மனதிற்கினிய நல்ல மணாளன் வேண்டும் என கேட்டிருப்பாய்".
"அப்படியெனில் நீ அதைத்தான் கேட்டாயா?".
கொற்றவை கண்ணை சிமிட்டி, தலையசைத்து குனிய, "அடிப் பாதகி மணாளனை காணுமுன் உனக்கு வெட்கம் வேறு வருகிறதா? கொடுத்து வைத்தவர் தான் உன் கணவர்".
"போ மகிழ், நீ என்ன வேண்டினாய் என மழுப்பாமல் சொல்".
"அடுத்த முறை வேட்டைக்குச் செல்லும் பொழுது ஒரு சிங்கமாது ௭ன் கையில் சிக்க வேண்டும் என வேண்டினேன்" என்க.
பாப்புவும் அதிர்ச்சியில் நின்று விட்டவள். அடுத்த நொடியே 'சிங்க வேட்டைக்கு போறாளாம்,' என குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து சிரித்தாள்.
கொற்றவையும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட, 4 அடி எடுத்து வைத்த மகிழ், நின்று திரும்பி உடன் வந்தவளை நோக்க அவள் நிற்கும் விதத்தைக் கண்டு கலகலவென சிரிக்க, அதில் உணர்ச்சி பெற்ற மற்றவள், "தயவு செய்து அடுத்த முறை வேட்டைக்குச் செல்கையில் என்னை அழைத்து விடாதே தாயே உனக்கு கோடி புண்ணியம்" என்று அவள் தன் குடில் நோக்கி வேகமாக நடந்தவாறு, 'இவளிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் புகுந்த வீடு செல்ல வேண்டும்' என புலம்பிக் கொண்டே தன் குடில் வாசல் வந்தவள் நின்று மகிழ் அவள் குடிலில் சென்று விட்டாளா என தெரிய வேண்டி திரும்பி பார்த்தாள்.
அவள் குடிலிற்கு எதிர்திசை வரிசையில் நான்கு குடிலின் முன்னையே மகிழ் குடிலிருக்க அதன் வாசலில் நின்று கொற்றவையின் புலம்பலில் ஏற்பட்ட சிரிப்போடு பார்த்து நின்றாள், அவள் திரும்பிப் பார்க்கவும் இவளும் கையசைக்க, அவளும் கையசைக்க சிரித்தவாறே குடிலில் சென்று மறைந்தனர் தோழிகள் இருவரும்.
இதை வேறு 2 கண்களும் கண்டதை பாப்பு உட்பட மூவருமே கவனத்தில் கொள்ள வில்லை.
அவர்கள் குடில்கள் அமைந்திருப்பது மலைகளுக்கும், காட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அவ்விடத்தின் பெயர் கொள்ளிமடம். அவர்களது குலத்தொழில் வேட்டையாடுவது மற்றும் தேனெடுப்பது. அவர்களின் வீரத்தை மெச்சி அவர்களில் சிலருக்கு அரசு வேலையான காவல் வீரன் வேலையும் தந்திருக்கிறான் அவர்களின் தற்போதைய இளவரசன் "அமிழ்திறைவன்".
வேந்தன் பாண்டியனின் ஆட்சியின் கீழ் குறுநில மன்னரான அமிழ்திறைவன் ஆளுமையின் கீழ், புராரி வன தேசத்தின் கீழ்வரும் 200 கிராமங்களும், 200 நகரங்களும் உண்டு. அதில் ஒரு கிராமம் தான் நம் தோழிகள் வசிக்குமிடமான கொள்ளிமடம்.
இக்காலத்தில் தாட்சாயணியாக இருக்கும் நம் பாப்பு, தன் உடலை இரணியன் பொறுப்பில் விட்டுவிட்டு கனவுலகில் சஞ்சரிக்க அவளது ஆத்மாவும் டிக்கெட்டே எடுக்காமல், டைம் மெஷினும் இல்லாமல் ஆவலுடன் வண்டி ஏறி வந்து இறங்கியது கிபி 1308 ஆம் நூற்றாண்டுக்கு.
இருவரும் அவரவர் வீடு செல்லவும், 'நாம இப்ப எங்க போறது? இவ எப்படி நம்மள மாதிரியே இருக்கா? அதுவும் ஓவர் நைட்ல இவ்ளோ நீளமா முடி எப்படி வந்திருக்கும்? அவ பாப்புக்குட்டினா நான் யாரு? நான் அவளோட மனசாட்சியா இருக்குமோ? அப்ப ஏன் நான் பேசுறதுலா அவளுக்கு கேக்கல? இப்ப எப்படி நான் அவளுக்குள்ள போறது? இந்த டிவில எல்லாம் மனசாட்சின்னு காட்றாங்க, ஆனால் அது எப்படி வருது எப்படி போதுனு காட்டமாட்டுறாங்க' என்று மகிழ் நுழைந்த குடில் திண்ணையிலேயே அமர்ந்து விட்டாள்.
அந்நேரத்தில் தான் அவள் காதில் சில குரல்கள் விழுகிறது, சார்ம் மற்றும் விஷாகன் ஹாஸ்பிட்டலில் வைத்து பேசிக்கொள்வது, விஷாகன் குழந்தை பிறந்து விட்டதாக கூறுவது, கிருஷ்ணன் வந்து அவள் எழுப்புவது கஷ்டம் என்பதாக வீரமணி கூறியதை சொல்வது, வேதியின் வேதனை குரல் அனைத்தையும் கேட்டவள், 'ஏன் எல்லோரும் ஏதோ போல் பேசுகிறார்கள்?' என மேலும் குழம்பி.
'நான் நல்லாத்தான் இருக்கேன்' என சொல்லவிளைகையில், இங்கு குடில் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார் ஒரு பெண்மணி.
ஏத்தி கட்டின பருத்தி சேலையும், ஒய்யாரக் கொண்டையுமாய் வந்த இக்கால வடிவாகிய அஞ்சலையை கண்டதும், மற்றதை மறந்து குபீரென்று சிரித்து விட்டாள்.
"என்னமா நீ இப்படி வந்து நிக்கிற?" எனக் கேட்டு மேலும் சிரிக்க, அஞ்சலையும் வாசலை கூட்டி முடித்தவர் தண்ணீரைத் தெளிக்க, தன் மேல் தெளிக்கவும் துள்ளி விலகினாள். ஆனால் அவள் மேல் தண்ணீர் எதுவும் படவில்லை, அவர் தன்னை கண்டதாகவும் தெரியவில்லை என்றபின் தான் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
'நான் எங்க இருக்கேன்? இவங்க எல்லாம் ஏன் நம்ம ஃபேமிலி போலவே இருக்காங்க? நம்மள மாதிரியே வேற பிளான்ட்லையும் மனுஷங்க வாழ்றதா சொல்வாங்களே அப்படி எங்கேயும் வந்து விட்டோமோ?' என மறுபடியும் அவள் கற்பனைவளம் வளர, அது தடுப்பது போல் பேச்சு குரல் கேட்டது.
"தாயி, ஐயா இன்னும் எழுந்துகலையா?" ௭ன வந்த நால்வரையும் கண்டு வாலியை ஓரமாக வைத்துவிட்டு, "வாங்க பெரியண்ணே, சாமி எழுந்து நேரமாச்சு. ஆசை மகள் தலைகோதி தூங்க படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களை வரச் சொல்லி இருந்தார்களா?".
"சரிதானுங்க தாயி, செல்ல மகள் என்பது தன் வீட்டில் இருக்கும் வரை தானே அதுதான் தலைவர் தாலாட்டுகிறார்கள். நாங்கள் சென்று பிறகு திரும்பி வரட்டுமா?" என்க.
"சும்மா இருங்க பெரியண்ணே. நான் சென்று சாமியை வரச் சொல்கிறேன். அமருங்கள் வடிநீர் கொண்டுவருகிறேன்" என்றவர் உள் சென்று, "சாமி, தங்களைக் காண பெரியண்ணன், கோவில் பூசாரியோடு இன்னும் இருவர் வந்துள்ளனர்".
"நான்தான் அஞ்சலை வரச் சொல்லி இருந்தேன். அரசவைக்கு படைவீரர்களாக, பாதுகாவலர்களாக பிள்ளைகள் சிலருக்கு நம் இளவரசர் வேலை தந்து ஓலை அனுப்பினார் இல்லையா!!, அதான் நல்ல நாள் பாத்து, நம் தாய்க்கு ஒரு பூஜை போட்டு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். நாம் தாமதிப்பது அவர்களை அவமதிப்பதாய் எண்ணி விடக்கூடாதே, அதான் காலையிலேயே வரச் சொல்லியிருந்தேன்".
"ஆகட்டும் சாமி நீங்கள் செல்லுங்கள், நான் இஞ்சி வேர் வடிநீரும், ரொட்டியும் எடுத்து வருகிறேன்" என்றபின், நீதிவர்மன் (மெய்யப்பன்) வெளியேறினார்.
"எழுந்திரு மகிழ், வாசலை தெளித்து பாதியில் வரும்படி ஆகிவிட்டது, சென்று கோலமிடு. சூரிய உதயமாகும் நேரமாகிவிட்டது".
"சற்று நேரமெடுத்து செல்கிறேனம்மா" என அலுப்பாக மகிழ் திரும்பி படுக்க.
"அதற்குள் தெளித்த வாசல் காய்ந்துவிடும், சூரிய உதயத்தின் பின் லட்சுமி வரும் நேரம், வீட்டுப்பெண் உறங்களாகாது மகிழ்".
"சரி சரி எழுந்துவிட்டேன், காலையிலேயே தேவாரம் பாட ஆரம்பிக்காதே" என எழுந்தவள் பின்வாசல் சென்று கேணியில் நீர் வார்த்து முகம் அலம்பி, இடித்து வைத்த பச்சரிசி மாவுடன் வெளியேறினாள்.
வெளியில் அமர்ந்து இருப்பவர்களைக் கண்டு வணக்கம் வைத்துவிட்டு, கோலத்தில் கவனமானாள்.
இவற்றையெல்லாம் பாப்பு திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள். அவளுக்கு நடப்பது எதுவும் புரியவுமில்லை, நம்பவும் முடியவில்லை.
கோலத்தை போட்டு முடித்தவள் அங்கேயே பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகில் தந்தையோடு அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட, வடிநீரோடு வந்த அஞ்சலை, "உள்ளே வந்து ரொட்டி தட்டு மகிழ், இங்க என்ன வேடிக்கை?".
"என்ன பேசுகிறார்கள் என கேட்டு விட்டு வருகிறேனம்மா".
"கேட்டு நீ என்ன செய்யப் போகிறாய்?".
"நீ போ அஞ்சலை அவள் வருவாள்" நீதிவர்மன் அவள் தலை வருட.
"நன்றாக கொஞ்சுங்கள், போற இடத்தில் தங்கள் மகள் ராணியாக வீற்றிருக்கப் போவது போல்" என்ற முனகலுடன் உள்ளே சென்றார்.
"அவ்வாறெனில் வரும் வெள்ளிக்கிழமை பூஜை வைத்துக்கொள்வோம், அந்தந்த குடும்பத்திற்கு தகவலை சேர்பித்து விடுங்கள்".
"ஏனப்பா பெண் பிள்ளைகளுக்கு நம் இளவரசர் வேலை கொடுக்க மாட்டாரா?" ௭ன்ற மகிழின் கேள்விக்கு.
"அது வழக்கத்தில் இல்லை மகளே".
"பெண்களும் போர் புரிய ஏற்றவர்கள் தானேப்பா, பின் ஏன் இப்படி ஒரு சட்டம், ஆண்களை தாண்டி ஊர் எல்லையில் உள்நுழையும் வீரர்களை பெண்கள் தடுத்தால் போதுமென".
"பெண் என்பவள் நாட்டிற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையானவள். அவளை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண் மகனுக்கும் உண்டு மகளே".
"என்னவோ போங்களப்பா" என அவள் சலித்துக்கொள்ள, ஆதரவாக அவள் தலை தடவினார் நீதிவர்மன். இவர்களை கண்டு சிரித்தவாறே மற்ற நால்வரும் விடைபெற்றுச் சென்றனர்.
"அப்பா தேனெடுக்க கிளம்புகிறேன் உடன் வருகிறாயா?", "சரிப்பா" என வேகமாக தலையசைத்தாள் மகிழ்.
"சாமி, அவள் எதற்கு?" ௭ன்ற அஞ்சலைக்கு.
"என்னுடன் தானே கூட்டிச் செல்கிறேன் பிறகென்ன பயம்".
"அதுதானே பயம், தேனை எடுப்பீர்களா? இல்லை இவள் மேல் கவனம் கொள்வீர்களா?".
"நான் பார்த்துக்கொள்கிறேன் அஞ்சலை".
"நான் எந்த குறும்பும் செய்யாமல் சமத்தாக சென்று வருவேனம்மா, கொற்றவையும் உடன் அழைத்து செல்கிறேன். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம், அப்பா அவர்கள் வேலையைப் பார்க்கட்டும்".
"சரிதான் ஏத்த ஜோடி தான் நீயும், அவளும்".
மகிழை ஃபாலோ பண்ணும் வேலையை, கடமையை காரியமாய் பாப்புவும் உடன் கிளம்பினாள்.
மலையேறி தேன் எடுக்க ஏதுவான உடையுடன், தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர். நீதிவர்மனுடன் நான்குபேர் முன்செல்ல, தோழியர் இருவரும் பாப்புவை பின்தொடர விட்டு முன் சென்றனர். தேன் எடுக்க வேண்டிய இடத்திற்கு சற்று முன்னே ஒரு பெரிய ஆலமரத்தடியில் தோழிகள் இருவரும் தேங்கி விட்டனர். அதில் இணையப்பட்ட மரஊஞ்சல் 2 கட்டப்பட்டிருக்க, அதில் ஆளுக்கொன்று ஜம்மென்று அமர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இது இவர்களின் வழக்கம் தான் போலும் என்பதை புரிந்துகொண்டாள் பாப்பு. 'இவங்க இரண்டு பேரும் எப்படியும் வெட்டிக் கதை தான் பேச போறாங்க, நாம மெய்யப்பன், எம்.ஏ.,பி.எல்., எப்படி மலையேறுறார்னு பாத்துட்டு வருவோம்' என ஆண்களை பின் தொடர்ந்தவள், வழியெங்கும் கண்ட வண்ண வண்ண மலர்களைக் கண்டு அதிசயித்தாள்.
அப்படி ஒரு நறுமணம் அவளுக்கு பூக்களை பார்த்ததும் உண்டானது. செவ்வரலி, செண்பகப்பூ, மல்லி, முல்லை, நீலக்குறிஞ்சி போன்ற மலர்கள் அங்கிருந்தன. இவள் அதில் மயங்கி நின்றிருக்க.
மற்றவர்கள் மூங்கிலில் செய்த ஒரு வகை வட்ட வடிவத்திலான கயிற்றில் காலை சுற்றி மாட்டிக்கொள்ளும் ஏணியுடன் சர்ரென்று மேல் ஏறினர். தேன் கூட்டை கிட்ட நெருங்குகையில் பந்தத்தில் தீ பற்ற வைத்துக்கொண்டு மேலும் முன்னேற, தேனீக்கள் மொய் மொய்யென்று மேய்ந்து கொண்டிருந்தவற்றை விரட்ட நெருப்பு புடவையை காட்ட அதில் அவை தேன் கூட்டை விட்டு விலகி பறக்க, கையில் வைத்திருந்த மூலிகைச்செடி உதவியுடன் தேனை எடுத்து குடுவையில் போட்டனர். கொசகொசவென தேனீக்கள் இவளை நோக்கி வருவது போலிருக்க, வீல் என்று அலறி பதறினாள்.
அதில் அவள் உடல் அங்கு திடுக்கிட்டது, அருகிலேயே படுத்திருந்த இரணியன் அவள் உடல் தூக்கிப் போடவும், பதறி டாக்டரை அழைத்து வந்தான். (அப்பொழுது சென்னையிலுள்ள ஹாஸ்பிட்டலில் தான் இருந்தாள் பாப்பு) "இது மாதிரி ஏதாவது ரியாக்ட் பண்ணுவாங்க, நல்லதுதான். டோன்ட் வொரி" என்றுவிட்டு டாக்டர் சென்றுவிட, தொய்ந்து போய் அமர்ந்தான் இரணியன்.
பாப்பு அடித்து பிடித்து வந்த வழியிலேயே ஓடிவந்து தோழிகளுடன் அமர்ந்து கொண்டாள். மூச்சு வாங்குவது நிற்க வெகு நேரம் பிடித்தது.
பாப்பு கனவில் கண்ட பெண்ணின் நிலைமையில் ஹோமா ஸ்டேஜில் படுத்துவிட, அவள் கண் முன் நடந்தவைகளை காண வேண்டி பூர்வ ஜென்மம் சென்று விட்டாள். அவள் கண்டதே இனி நாம் விவரமாக பார்க்க உள்ளோம்.
நடு நிசி, அடர்ந்த காட்டுப் பகுதி, பௌர்ணமி வெளிச்சம் மட்டுமே அடர்ந்த மரங்களை தாண்டி அங்கங்கு விழுந்து வெளிச்சத்தை பரப்ப முயற்சித்து கொண்டிருந்தது. "சோ" ௭ன்ற இறைச்சலுடன் அருவி கொட்டி கொண்டிருந்தது. அங்கு தான் பாப்பு வந்து நின்று பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் "என்று தானடி விட்டொழிப்பாய் இப்பழக்கத்தை" ௭ன்ற பெண்ணின் கேள்விக்கு., அழகிய நீல கூந்தல் அசைந்தாட நீரில் ஆடி கொண்டிருந்தவள் நின்று திரும்பி "நான் தீண்டத்தகாத செயல் ஒன்றும் செய்யவில்லையே கொற்றவை" ௭ன்க.
"ஆத்தி இவ ௭ன்ன ௭ன்னைய மாறியே இருக்கா" ௭ன வாயை பிளந்தவாறு தன்னையே தடவி தடவி பார்த்தாள் பாப்பு.
"உனக்கே இது அதிகமாக தெரியவில்லையா மகிழ்" என்ற படி அருவியின் அடியிலிருந்து வெளிவந்து காட்சி கொடுத்தாள் கொற்றவை செல்வி.
"ஏனடி எனது சிறிய ஆசையை நிறைவேற்ற இப்படி சலித்துக் கொள்கிறாய்".
"சிறிய ஆசையா? கடந்த 11 வருடமாக நடுநிசியில் யாருக்கும் தெரியாமல் இந்த வயது பெண்ணை கிழங்கையும், ஆட்டிறைச்சியையும் காட்டி ஏமாற்றி கூட்டிவந்து இந்த அருவியில் குளிப்பாட்டுகிறாயே, இது சிறிய ஆசையா? இவ்விஷயம் உனது, எனது பெற்றோர்களுக்கு மட்டும் தெரிய வேண்டும், வேங்கை அம்மனுக்கு வேண்டுதல் இல்லா பலியாகி விடுவோம்" ௭ன புலம்ப.
"11 வருடம் ஆகியும் நீ புலம்புவது ௭ப்படி மாறவில்லையோ, அதுபோல் ௭னது இந்த பௌர்ணமி இரவும் மாறாது. மற்றவைகளை மாட்டும் தினத்தன்று யோசிப்போமடி" ௭ன்றாள் சாதாரணமாக மகிழ்.
"அது எப்படி மாதந்தோறும் சரியாக பௌர்ணமியன்று மட்டும் நடுநிசியில் விழிக்கிறாய், பழக்கத்தில் வரவேண்டுமென்றாலும் எனக்கு மட்டும் இத்தனை வருட பழக்கத்தில் விழிப்பு வர மாட்டேன் என்கிறது" என கேட்டவாறு அருவியிலிருந்து வெளிவந்து கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
சுற்றி சுற்றி பார்த்த பாப்பு 'என்னது இவ்வளவு இருட்டா இருக்கு?. நாம ௭ங்க வந்துருக்கோம், காலைல சார்ம் கூட்டிட்டு வந்த இடம் தானே இது, இப்ப ௭ப்டி வந்தோம் பரவாயில்லயே ஜெட் வேகத்துல வந்துட்டோம். ௭ன்னலாமோ தோனுச்சே. ஆமா இங்க தான் அந்த பொண்ணு கழுத்தறுத்து சாக போச்சு, காப்பாத்தணுமே' என சுற்றி முற்றி தேட, இருவர் பேசிக்கொண்டே நடந்து வரும் சத்தம் கேட்டு மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தாள்.
அவ்வளவு நேரமும் தன்னை போலவே ஒருத்தியை கண்ட ஷாக்கில் உடன் வந்த கொற்றவையை கவனிக்காதவல் தற்போது கண்டு விட்டு, 'கூட வர்றது வெள்ள பாட்சா தானே, இவ இங்க என்ன செய்றா? ஆமா அவ வயிறு பெருசா இல்ல? பாப்பாவ எங்க?' என்ற குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டிருக்க, இருவரும் பேசியவாறே இவளைக் கடந்து சென்றனர். தானும் பின்தொடர்ந்தாள் பாப்பு.
அந்த பெண்களின் பேச்சு தொடர்ந்தது, "என்னை வேங்கை எதிர்பார்ப்பாள் அதனால் எழுந்துவிட வேண்டுமென நான் தூங்கினாலும் என் மனம் விழித்திருக்கும். ஆனால் உன் மனம், எப்படியும் மகிழ் வந்து எழுப்பி விடுவாள் அந்நேரம் எழுந்து கொள்ளலாம் என நிம்மதியாக உறங்கி விடுகிறது".
"அப்படியும் இருக்குமோ?"
"அப்படித்தான் இருக்கும் கொற்றவை" என ஈர உடையுடன் வந்து சிவனை வணங்கினர். பின் வேங்கை நல்லாள் குகையை நோக்கி நடந்தனர்.
'அட நம்ம சார்ம் கூட வந்த அதே அருவி, அதே சிவன் கோயில், அப்ப இது அதே காடு தான்' இது குழப்பத்திலிருந்த பாப்பு.
மலையை குடைந்து உள்ளே செல்லும் நீண்ட பாதை, ஆங்காங்கே இருந்த தீப்பந்தத்தின் ஒளியில் பாதையைக் காட்டிக் கொடுத்தது. உள்ளே இரு பக்கத் தீப்பந்தத்தின் ஒளியிலும், நேர்முகத்தில் படும் நிலவின் ஒளியிலும் பிரகாசமாய் காட்சியளித்தாள் வேங்கை நல்லாள்.
'இந்த பொண்ணு எப்படி நம்மள மாதிரியே இருக்கு? ஆனா வேற மாதிரி பேசுது, ட்ரெஸிங் டோட்டலா வித்தியாசமா இருக்கே, அட அடுத்து அதே குகை கோயில், நேத்து வந்தப்போ அவ்வளவு தூசியா இருந்தது, இப்போ இவ்ளோ நீட்டா இருக்கு! என்னட எடிசனுக்கு வந்த சோதனை, நீங்க கஷ்டப்பட்டு லைட்ட கண்டுபிடிச்சும் இங்க கட்டைல தீ பொருத்தி வச்சிருக்காங்க, ஒருவேளை இங்க ஈ.பி., கனெக்சன் வாங்கலையோ?' என அவள் கேள்வி அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருந்தது.
"இந்த ஒரு விஷயம் தானடி மகிழ் அர்த்தஜாமத்தில் எழுப்பி குளிக்க வைக்கிறாய் என தெரிந்தும் உன்னுடன் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணம், ௭ன்ன தேஜஸ் பார்த்தாயா நம் தாய் முகத்தில்" என கண்ணை வேங்கை நல்லாளின் முகத்தை விட்டு நகராமல் கொற்றவை சொல்ல.
"அது தெரிந்ததனால் தானேடி நீ விடாமல் பிதற்றினாலும் பரவாயில்லை என்று உன்னை தவறாமல் உடன் அழைத்து வருகிறேன்".
பின் இருவரும் மனம் குளிர அமைதியாக அமர்ந்து அவளை ஆசை தீர தரிசித்து விட்டு வெளியேற, "ஏனோ மகிழ், ௭னக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம், இந்நேரம் நம் தாயும் தூங்கும் நேரமாக இருப்பின் நாம் அவளை தொந்தரவு செய்ததாக ஆகிவிடாது?" என்ற கொற்றவையின் கேள்விக்கு.
"அப்படி நினைத்திருந்தால் எட்டு வயதில் நான் முதன் முதலில் கிளம்புகையிலேயே ஏதாவது தடங்கல் கொடுத்து என்னை தடுத்து இருப்பார்களே".
"அது சரி, அது சரி அவளை மீறி நம்மால் ௭ன்ன செய்துவிட முடியும். சரி அது போகட்டும், இப்போது என்ன வேண்டிக் கொண்டாய்?".
"வேண்டுதலை எப்படியடி வெளியில் சொல்வது".
"இதற்கு முன் சொல்லிக்கொண்டதே இல்லாதது போல் பேசுகிறாயே. எனக்கு தெரியும் நீ என்ன வேண்டியிருப்பாய் என" ௭ன்று கொற்றவை நொடித்து கொள்ள.
"என்ன தெரியும் உனக்கு? கொஞ்சம் சொல்லு கேட்போம்".
"இந்த வயதில் வேறு என்ன வேண்ட முடியும். மனதிற்கினிய நல்ல மணாளன் வேண்டும் என கேட்டிருப்பாய்".
"அப்படியெனில் நீ அதைத்தான் கேட்டாயா?".
கொற்றவை கண்ணை சிமிட்டி, தலையசைத்து குனிய, "அடிப் பாதகி மணாளனை காணுமுன் உனக்கு வெட்கம் வேறு வருகிறதா? கொடுத்து வைத்தவர் தான் உன் கணவர்".
"போ மகிழ், நீ என்ன வேண்டினாய் என மழுப்பாமல் சொல்".
"அடுத்த முறை வேட்டைக்குச் செல்லும் பொழுது ஒரு சிங்கமாது ௭ன் கையில் சிக்க வேண்டும் என வேண்டினேன்" என்க.
பாப்புவும் அதிர்ச்சியில் நின்று விட்டவள். அடுத்த நொடியே 'சிங்க வேட்டைக்கு போறாளாம்,' என குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து சிரித்தாள்.
கொற்றவையும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட, 4 அடி எடுத்து வைத்த மகிழ், நின்று திரும்பி உடன் வந்தவளை நோக்க அவள் நிற்கும் விதத்தைக் கண்டு கலகலவென சிரிக்க, அதில் உணர்ச்சி பெற்ற மற்றவள், "தயவு செய்து அடுத்த முறை வேட்டைக்குச் செல்கையில் என்னை அழைத்து விடாதே தாயே உனக்கு கோடி புண்ணியம்" என்று அவள் தன் குடில் நோக்கி வேகமாக நடந்தவாறு, 'இவளிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் புகுந்த வீடு செல்ல வேண்டும்' என புலம்பிக் கொண்டே தன் குடில் வாசல் வந்தவள் நின்று மகிழ் அவள் குடிலில் சென்று விட்டாளா என தெரிய வேண்டி திரும்பி பார்த்தாள்.
அவள் குடிலிற்கு எதிர்திசை வரிசையில் நான்கு குடிலின் முன்னையே மகிழ் குடிலிருக்க அதன் வாசலில் நின்று கொற்றவையின் புலம்பலில் ஏற்பட்ட சிரிப்போடு பார்த்து நின்றாள், அவள் திரும்பிப் பார்க்கவும் இவளும் கையசைக்க, அவளும் கையசைக்க சிரித்தவாறே குடிலில் சென்று மறைந்தனர் தோழிகள் இருவரும்.
இதை வேறு 2 கண்களும் கண்டதை பாப்பு உட்பட மூவருமே கவனத்தில் கொள்ள வில்லை.
அவர்கள் குடில்கள் அமைந்திருப்பது மலைகளுக்கும், காட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அவ்விடத்தின் பெயர் கொள்ளிமடம். அவர்களது குலத்தொழில் வேட்டையாடுவது மற்றும் தேனெடுப்பது. அவர்களின் வீரத்தை மெச்சி அவர்களில் சிலருக்கு அரசு வேலையான காவல் வீரன் வேலையும் தந்திருக்கிறான் அவர்களின் தற்போதைய இளவரசன் "அமிழ்திறைவன்".
வேந்தன் பாண்டியனின் ஆட்சியின் கீழ் குறுநில மன்னரான அமிழ்திறைவன் ஆளுமையின் கீழ், புராரி வன தேசத்தின் கீழ்வரும் 200 கிராமங்களும், 200 நகரங்களும் உண்டு. அதில் ஒரு கிராமம் தான் நம் தோழிகள் வசிக்குமிடமான கொள்ளிமடம்.
இக்காலத்தில் தாட்சாயணியாக இருக்கும் நம் பாப்பு, தன் உடலை இரணியன் பொறுப்பில் விட்டுவிட்டு கனவுலகில் சஞ்சரிக்க அவளது ஆத்மாவும் டிக்கெட்டே எடுக்காமல், டைம் மெஷினும் இல்லாமல் ஆவலுடன் வண்டி ஏறி வந்து இறங்கியது கிபி 1308 ஆம் நூற்றாண்டுக்கு.
இருவரும் அவரவர் வீடு செல்லவும், 'நாம இப்ப எங்க போறது? இவ எப்படி நம்மள மாதிரியே இருக்கா? அதுவும் ஓவர் நைட்ல இவ்ளோ நீளமா முடி எப்படி வந்திருக்கும்? அவ பாப்புக்குட்டினா நான் யாரு? நான் அவளோட மனசாட்சியா இருக்குமோ? அப்ப ஏன் நான் பேசுறதுலா அவளுக்கு கேக்கல? இப்ப எப்படி நான் அவளுக்குள்ள போறது? இந்த டிவில எல்லாம் மனசாட்சின்னு காட்றாங்க, ஆனால் அது எப்படி வருது எப்படி போதுனு காட்டமாட்டுறாங்க' என்று மகிழ் நுழைந்த குடில் திண்ணையிலேயே அமர்ந்து விட்டாள்.
அந்நேரத்தில் தான் அவள் காதில் சில குரல்கள் விழுகிறது, சார்ம் மற்றும் விஷாகன் ஹாஸ்பிட்டலில் வைத்து பேசிக்கொள்வது, விஷாகன் குழந்தை பிறந்து விட்டதாக கூறுவது, கிருஷ்ணன் வந்து அவள் எழுப்புவது கஷ்டம் என்பதாக வீரமணி கூறியதை சொல்வது, வேதியின் வேதனை குரல் அனைத்தையும் கேட்டவள், 'ஏன் எல்லோரும் ஏதோ போல் பேசுகிறார்கள்?' என மேலும் குழம்பி.
'நான் நல்லாத்தான் இருக்கேன்' என சொல்லவிளைகையில், இங்கு குடில் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார் ஒரு பெண்மணி.
ஏத்தி கட்டின பருத்தி சேலையும், ஒய்யாரக் கொண்டையுமாய் வந்த இக்கால வடிவாகிய அஞ்சலையை கண்டதும், மற்றதை மறந்து குபீரென்று சிரித்து விட்டாள்.
"என்னமா நீ இப்படி வந்து நிக்கிற?" எனக் கேட்டு மேலும் சிரிக்க, அஞ்சலையும் வாசலை கூட்டி முடித்தவர் தண்ணீரைத் தெளிக்க, தன் மேல் தெளிக்கவும் துள்ளி விலகினாள். ஆனால் அவள் மேல் தண்ணீர் எதுவும் படவில்லை, அவர் தன்னை கண்டதாகவும் தெரியவில்லை என்றபின் தான் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
'நான் எங்க இருக்கேன்? இவங்க எல்லாம் ஏன் நம்ம ஃபேமிலி போலவே இருக்காங்க? நம்மள மாதிரியே வேற பிளான்ட்லையும் மனுஷங்க வாழ்றதா சொல்வாங்களே அப்படி எங்கேயும் வந்து விட்டோமோ?' என மறுபடியும் அவள் கற்பனைவளம் வளர, அது தடுப்பது போல் பேச்சு குரல் கேட்டது.
"தாயி, ஐயா இன்னும் எழுந்துகலையா?" ௭ன வந்த நால்வரையும் கண்டு வாலியை ஓரமாக வைத்துவிட்டு, "வாங்க பெரியண்ணே, சாமி எழுந்து நேரமாச்சு. ஆசை மகள் தலைகோதி தூங்க படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களை வரச் சொல்லி இருந்தார்களா?".
"சரிதானுங்க தாயி, செல்ல மகள் என்பது தன் வீட்டில் இருக்கும் வரை தானே அதுதான் தலைவர் தாலாட்டுகிறார்கள். நாங்கள் சென்று பிறகு திரும்பி வரட்டுமா?" என்க.
"சும்மா இருங்க பெரியண்ணே. நான் சென்று சாமியை வரச் சொல்கிறேன். அமருங்கள் வடிநீர் கொண்டுவருகிறேன்" என்றவர் உள் சென்று, "சாமி, தங்களைக் காண பெரியண்ணன், கோவில் பூசாரியோடு இன்னும் இருவர் வந்துள்ளனர்".
"நான்தான் அஞ்சலை வரச் சொல்லி இருந்தேன். அரசவைக்கு படைவீரர்களாக, பாதுகாவலர்களாக பிள்ளைகள் சிலருக்கு நம் இளவரசர் வேலை தந்து ஓலை அனுப்பினார் இல்லையா!!, அதான் நல்ல நாள் பாத்து, நம் தாய்க்கு ஒரு பூஜை போட்டு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். நாம் தாமதிப்பது அவர்களை அவமதிப்பதாய் எண்ணி விடக்கூடாதே, அதான் காலையிலேயே வரச் சொல்லியிருந்தேன்".
"ஆகட்டும் சாமி நீங்கள் செல்லுங்கள், நான் இஞ்சி வேர் வடிநீரும், ரொட்டியும் எடுத்து வருகிறேன்" என்றபின், நீதிவர்மன் (மெய்யப்பன்) வெளியேறினார்.
"எழுந்திரு மகிழ், வாசலை தெளித்து பாதியில் வரும்படி ஆகிவிட்டது, சென்று கோலமிடு. சூரிய உதயமாகும் நேரமாகிவிட்டது".
"சற்று நேரமெடுத்து செல்கிறேனம்மா" என அலுப்பாக மகிழ் திரும்பி படுக்க.
"அதற்குள் தெளித்த வாசல் காய்ந்துவிடும், சூரிய உதயத்தின் பின் லட்சுமி வரும் நேரம், வீட்டுப்பெண் உறங்களாகாது மகிழ்".
"சரி சரி எழுந்துவிட்டேன், காலையிலேயே தேவாரம் பாட ஆரம்பிக்காதே" என எழுந்தவள் பின்வாசல் சென்று கேணியில் நீர் வார்த்து முகம் அலம்பி, இடித்து வைத்த பச்சரிசி மாவுடன் வெளியேறினாள்.
வெளியில் அமர்ந்து இருப்பவர்களைக் கண்டு வணக்கம் வைத்துவிட்டு, கோலத்தில் கவனமானாள்.
இவற்றையெல்லாம் பாப்பு திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள். அவளுக்கு நடப்பது எதுவும் புரியவுமில்லை, நம்பவும் முடியவில்லை.
கோலத்தை போட்டு முடித்தவள் அங்கேயே பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகில் தந்தையோடு அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட, வடிநீரோடு வந்த அஞ்சலை, "உள்ளே வந்து ரொட்டி தட்டு மகிழ், இங்க என்ன வேடிக்கை?".
"என்ன பேசுகிறார்கள் என கேட்டு விட்டு வருகிறேனம்மா".
"கேட்டு நீ என்ன செய்யப் போகிறாய்?".
"நீ போ அஞ்சலை அவள் வருவாள்" நீதிவர்மன் அவள் தலை வருட.
"நன்றாக கொஞ்சுங்கள், போற இடத்தில் தங்கள் மகள் ராணியாக வீற்றிருக்கப் போவது போல்" என்ற முனகலுடன் உள்ளே சென்றார்.
"அவ்வாறெனில் வரும் வெள்ளிக்கிழமை பூஜை வைத்துக்கொள்வோம், அந்தந்த குடும்பத்திற்கு தகவலை சேர்பித்து விடுங்கள்".
"ஏனப்பா பெண் பிள்ளைகளுக்கு நம் இளவரசர் வேலை கொடுக்க மாட்டாரா?" ௭ன்ற மகிழின் கேள்விக்கு.
"அது வழக்கத்தில் இல்லை மகளே".
"பெண்களும் போர் புரிய ஏற்றவர்கள் தானேப்பா, பின் ஏன் இப்படி ஒரு சட்டம், ஆண்களை தாண்டி ஊர் எல்லையில் உள்நுழையும் வீரர்களை பெண்கள் தடுத்தால் போதுமென".
"பெண் என்பவள் நாட்டிற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையானவள். அவளை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண் மகனுக்கும் உண்டு மகளே".
"என்னவோ போங்களப்பா" என அவள் சலித்துக்கொள்ள, ஆதரவாக அவள் தலை தடவினார் நீதிவர்மன். இவர்களை கண்டு சிரித்தவாறே மற்ற நால்வரும் விடைபெற்றுச் சென்றனர்.
"அப்பா தேனெடுக்க கிளம்புகிறேன் உடன் வருகிறாயா?", "சரிப்பா" என வேகமாக தலையசைத்தாள் மகிழ்.
"சாமி, அவள் எதற்கு?" ௭ன்ற அஞ்சலைக்கு.
"என்னுடன் தானே கூட்டிச் செல்கிறேன் பிறகென்ன பயம்".
"அதுதானே பயம், தேனை எடுப்பீர்களா? இல்லை இவள் மேல் கவனம் கொள்வீர்களா?".
"நான் பார்த்துக்கொள்கிறேன் அஞ்சலை".
"நான் எந்த குறும்பும் செய்யாமல் சமத்தாக சென்று வருவேனம்மா, கொற்றவையும் உடன் அழைத்து செல்கிறேன். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம், அப்பா அவர்கள் வேலையைப் பார்க்கட்டும்".
"சரிதான் ஏத்த ஜோடி தான் நீயும், அவளும்".
மகிழை ஃபாலோ பண்ணும் வேலையை, கடமையை காரியமாய் பாப்புவும் உடன் கிளம்பினாள்.
மலையேறி தேன் எடுக்க ஏதுவான உடையுடன், தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர். நீதிவர்மனுடன் நான்குபேர் முன்செல்ல, தோழியர் இருவரும் பாப்புவை பின்தொடர விட்டு முன் சென்றனர். தேன் எடுக்க வேண்டிய இடத்திற்கு சற்று முன்னே ஒரு பெரிய ஆலமரத்தடியில் தோழிகள் இருவரும் தேங்கி விட்டனர். அதில் இணையப்பட்ட மரஊஞ்சல் 2 கட்டப்பட்டிருக்க, அதில் ஆளுக்கொன்று ஜம்மென்று அமர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இது இவர்களின் வழக்கம் தான் போலும் என்பதை புரிந்துகொண்டாள் பாப்பு. 'இவங்க இரண்டு பேரும் எப்படியும் வெட்டிக் கதை தான் பேச போறாங்க, நாம மெய்யப்பன், எம்.ஏ.,பி.எல்., எப்படி மலையேறுறார்னு பாத்துட்டு வருவோம்' என ஆண்களை பின் தொடர்ந்தவள், வழியெங்கும் கண்ட வண்ண வண்ண மலர்களைக் கண்டு அதிசயித்தாள்.
அப்படி ஒரு நறுமணம் அவளுக்கு பூக்களை பார்த்ததும் உண்டானது. செவ்வரலி, செண்பகப்பூ, மல்லி, முல்லை, நீலக்குறிஞ்சி போன்ற மலர்கள் அங்கிருந்தன. இவள் அதில் மயங்கி நின்றிருக்க.
மற்றவர்கள் மூங்கிலில் செய்த ஒரு வகை வட்ட வடிவத்திலான கயிற்றில் காலை சுற்றி மாட்டிக்கொள்ளும் ஏணியுடன் சர்ரென்று மேல் ஏறினர். தேன் கூட்டை கிட்ட நெருங்குகையில் பந்தத்தில் தீ பற்ற வைத்துக்கொண்டு மேலும் முன்னேற, தேனீக்கள் மொய் மொய்யென்று மேய்ந்து கொண்டிருந்தவற்றை விரட்ட நெருப்பு புடவையை காட்ட அதில் அவை தேன் கூட்டை விட்டு விலகி பறக்க, கையில் வைத்திருந்த மூலிகைச்செடி உதவியுடன் தேனை எடுத்து குடுவையில் போட்டனர். கொசகொசவென தேனீக்கள் இவளை நோக்கி வருவது போலிருக்க, வீல் என்று அலறி பதறினாள்.
அதில் அவள் உடல் அங்கு திடுக்கிட்டது, அருகிலேயே படுத்திருந்த இரணியன் அவள் உடல் தூக்கிப் போடவும், பதறி டாக்டரை அழைத்து வந்தான். (அப்பொழுது சென்னையிலுள்ள ஹாஸ்பிட்டலில் தான் இருந்தாள் பாப்பு) "இது மாதிரி ஏதாவது ரியாக்ட் பண்ணுவாங்க, நல்லதுதான். டோன்ட் வொரி" என்றுவிட்டு டாக்டர் சென்றுவிட, தொய்ந்து போய் அமர்ந்தான் இரணியன்.
பாப்பு அடித்து பிடித்து வந்த வழியிலேயே ஓடிவந்து தோழிகளுடன் அமர்ந்து கொண்டாள். மூச்சு வாங்குவது நிற்க வெகு நேரம் பிடித்தது.