priya pandees
Moderator
அத்தியாயம் 1
"காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேனென்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா"
மணி பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது, அந்தப் பாட்டு சத்தமும் அதனோடு ஒருவனின் காலடிச் சத்தமும் மட்டுமே அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது. இங்கும் அங்கும் நடந்தவாறு கையிலிருந்த கோப்பை பிரட்டிக் கொண்டிருந்தான் கரிகாலவேந்தன். நாளை அவன் ஆஜர் ஆக வேண்டிய கேஸின் இறுதிக் கட்டம். தீர்ப்பு மட்டுமே நாளை தரப்பட இருக்கிறது, ஆனாலும் புதிதாக எதாவது முளைத்து விடக் கூடாது என்பதற்காக மீண்டுமாக ஒருமுறை ஆரம்பித்ததிலிருந்து அவன் திரட்டிய ஆதாரங்களை மொத்தமாகச் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நடையை தூங்கி விழுந்தவாறே பார்த்துக் கொண்டு அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார் ஒருவர், "இவன் இம்புட்டு சத்தமா பாட்ட வச்சுகிட்டு என்னத்த தான் முக்கி முக்கி அதுல படிக்கானோ தெரிய மாட்டேங்குது. காலா காலத்துல கல்யாணமும் பண்ண மாட்டேங்குறான் பண்ணவனையும் போய் பொண்டாட்டிக் கூடப் படுக்க விட மாட்டேங்குறான். மனசாட்சின்றது இருக்கான்னு பாரு" எனத் தலையை தாங்கி அமர்ந்திருந்தார். அவர் அவன் தாய்மாமா, அம்மாவின் உடன்பிறந்த தம்பி அய்யாவழி, சுருக்கமாக அனிருத். இருவருக்கும் பத்து வயதே வித்தியாசம்.
அவனுக்கும் அவர் புலம்பல் காதில் விழுந்தது தான், ஆனால் கேட்காதது போலவே நடையைத் தொடர்ந்திருந்தான். எதையும் விடவில்லை, புதிதாக எந்த காரணமும் கொண்டு வந்து நிறுத்த முடியாது என முழுமையாக நம்பினான். ஆனாலும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தண்டனை பெற்று தரும்வரை இவனுக்கு இந்த தலைவலி இருக்கவே செய்யும்.
அவன் கையிலிருந்தக் கோப்பை மேசையில் வைத்துவிட்டு நிற்கவும், "படிச்சு முடிச்சுட்டியா வேந்தா கிளம்புவோமா?" என வேகமாக எழுந்து நின்றார் அனிருத்.
"உன்ன அப்பவே கிளம்புனுட்டேன், இங்கேயே இருந்து உன்ன கூட்டிட்டு போறேன்னு உட்கார்ந்துருந்துட்டு, அப்ப இருந்து புலம்பிகிட்டே கிடக்க. அத்த தேடும்னா கிளம்பு நீ" என அரட்டினான் வேந்தன்.
"அக்கா வையும் வேந்தா. நா டவுனு வரைக்கும் போறேன்னு சொன்னதுமே, அப்ப பிள்ளை கூட இருந்து கூட்டிட்டு வந்துருன்னு சொல்லி விட்டுச்சு தெரியுமா? அதேன் இவ்வளவு நேரம் இருந்தேன் உன் அத்தை மேல எனக்கு என்ன பயமாம்? அப்டி வேற சொல்லிட்டு திரியுதாளா அவ?"
"நா என்ன சின்ன பிள்ளையா? வேலை முடிஞ்சா வீட்டுக்கு வரத் தெரியாதா எனக்கு?" என்றான் வேந்தன்.
"அதுக்கு நீ கொஞ்ச நஞ்சமா வம்பிழுத்து வச்சுருக்கணும். ஊரு பூராவும் விவகாரம் பண்ணிட்ட அப்ப வீட்டுல உள்ளவுகளுக்கு பயமாத்தேன் இருக்கும்"
"இப்ப உன் கூட வந்தா எவனாவது குறுக்க சாடுனா பறந்து பறந்து ப்ரூஸ்லி மாறி சண்டை போட்ருவ நீ?"
"பின்ன? ஏன் போட மாட்டேன் நினைக்கியாக்கும்? உன் மாமன் வாரேன்னு தெரியபோயி தான் ஒருபயலும் உன்ன நெருங்க மாட்டேங்குறான் தெரிஞ்சுக்கோ. அதேன் மாமே இப்புடி அடிக்கடி உன்கூட தலையக் காட்டிகிட்ருக்கேன்" எனக் காலரைத் தூக்கி விட்டு மீசையை நீவிவிட்டு அனிருத் சொல்ல,
"இந்த கதையெல்லாம் உன் அக்காட்டையும் நம்பி கழுத்த நீட்டுன அத்தைட்டையும் வேணா சொல்லு நம்புவாங்க. தனியா ஊருக்குள்ள போவ பயந்துட்டுதேன் இங்கனயே உட்கார்ந்துருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்காத" என்றவன் பேசிக் கொண்டே அனைத்தையும் ஒழுங்காக எடுத்து வைத்து, பாட்டையும் நிறுத்தி விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானான்.
"ஆருக்கு பயம்? எதுனாலும் வந்து பாருன்னு மூஞ்சிக்கு நேரா ஒத்தைக்கு ஒத்த நிப்பேனாக்கும். சும்மா இல்ல? இங்க கேளு, அந்தக் காலத்துல ஏழெட்டு வயசுல தெருவிளக்கு இல்லாம இருக்கக்கயே சாமம்ன்னு இல்லாம வயல்ல தண்ணி பாயவிட்டுக் காவலுக்கு நின்னவன் தெரியுமா? ஆர பாத்து பயமுன்னுற?"
"உனக்குத்தான் மாமா உனக்கே உனக்குத் தான்" எனச் சிரித்தவாறு வேந்தன் வெளியே வந்திருக்க, அவன் பின்னேயே வெளியே வந்தவர், "நா பாட்டுக்கு அப்பவே கிளம்பி போயிருக்கணும். நம்ம மருமகனேன்னு பாசத்துல நின்னேன்ல அதான் இம்புட்டு பேசுத நீ" என வாய்க்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தார்.
"பத்து மணி ஆகிட்டு, உன் மாமன் ஒத்தைல வந்துகிட மாட்டான் உன் கூட நிக்கவச்சு பத்ரமா கூட்டிட்டு வந்துருய்யான்னு உன் அக்கா தான் எனக்கு ஃபோன போட்டு சொன்னாப்டி, வேணும்னா போனதும் உன் அக்காவ நீயே கேளு" என்றவன் அவனது மாருதி ஜிப்ஸியில் ஏறி அமர்ந்தான்.
"உங்க கூடவே இருக்கேனுல்ல அதான் என் அருமை தெரியாம ஆளாளுக்கு லந்து பண்ணுதீக" என முகத்தை சுருக்கி கொண்டு தானும் மறுபக்கம் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தார் அனிருத்.
"சரி விடு மாமா. நமக்குள்ள இதென்ன புதுசா. ஆமா என்ன விஷயமா டவுனுக்கு வந்த?"
"அங்கன வந்து ரெண்டு மணிநேரமா குத்த வச்சுருந்தவன்ட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம இருந்துபுட்டு இப்பத்தான் கேக்குதான் காரணத்த"
"நாந்தான் ஃபைல் பாத்துட்டருந்தேன்ல?"
"விதவிதமா பாட்டு கேட்டேம்னு வேணா சொல்லு"
"அது நீ தூங்காம இருக்கறதுக்கு போட்டது"
"என்ட்டையே நடிக்காத வேந்தா நீ! இப்படி பாட்ட கேட்டே வாழ்க்கைய ஓட்ட போறியா நீயி?"
"நீ என்ன வேலையா வந்தன்னு சொல்லு முதல்ல"
"உடனே பேச்ச மாத்திடு" என்ற அனிருத், "புதுசா ஒரு வெளிநாட்டு ஏஜென்ட் கிடைச்சுருக்கான் போல அவனுக்கு நம்ம தைலம் சேம்பிள் கொஞ்சம் குடுத்துட்டு வரலாம்னு போனேன்"
"ஓ! யாரு என்னன்னு நல்லா விசாரிச்சாச்சா?"
"அதெல்லாம் உன் அண்ணனுக்கு தான் தெரியும். என்னைய குடுத்துட்டு வான்னு சொன்னான் குடுத்துட்டு வந்துட்டேன்"
"நீங்க தான அதுக்கு முதலாளி?"
"அவன் நிறைய ஆர்டர் பிடிக்கிறான், சரி அடுத்தக்கட்டத்துக்கு தொழில் வளர்ந்தா போதும். அவன் பார்த்தா என்ன நா பார்த்தா என்ன இப்ப?"
"சரியான ஏமாளி மாமா நீ!"
"இருந்துட்டு போறேன் போ என் மருமகன் தான ஏமாத்துறான். வெளியாள்ட்ட ஏமாந்தா தான் தப்பு" என்றவர், வெளியே தெரிந்த கும்மிருட்டை பார்த்து விட்டு தலையை முழுவதுமாக குனிந்து அமர்ந்து கொண்டார்.
"ஏமாறுறதே தப்பு தான் மாமா" எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வண்டி சட்டென்று நின்றது.
"ஏன்டா நிப்பாட்டிட்ட?" எனப் பதறி நிமிர்ந்து மருமகனைப் பார்க்க, அவனோ சாவியைத் திருகி வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான்.
"அடேய் வண்டிய எடுறா. இங்க ஏன்டா நிப்பாட்டின?" என வெளியே திரும்பி பார்த்தவருக்கு, சலசலக்கும் ஆற்றின் நீரும், காற்றில் ஆடும் ஆற்றங்கரை மரங்களும் திகிலை கிளப்பி விட மீண்டும் மருமகனிடம் திரும்பியவர், "அடேய் வேந்தா வண்டியை எடுடா. என்னத்தடா அங்க தேடிட்ருக்க" என அவன் கையை போட்டு உலுக்க.
"ம்ச் மாமா வண்டி எதனால நின்னுச்சுன்னு தெரியல. பெட்ரோல்லாம் இருக்கு, இன்ஜின் தான் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. இறங்கி தள்ளுறியா, ஸ்டார்ட் ஆகிடும்" என முகத்தை சுருக்கியே கேட்டான். வண்டி பாதியில் நின்ற கடுப்பு அவனுக்கு. அந்த இடத்தில் நின்றுவிட்ட பதட்டம் அவருக்கு.
"இறங்கி தள்ளுறதா? என்ன விளையாடுறியா? நீ வேணும்னு பண்ணுத வேந்தா. மாமாவ வச்சு விளையாட்டு காட்டாத. நா உன் தாய்மாமாடா"
"நா என்ன சித்தப்பான்னா சொன்னேன்? லூசு மாமா. வண்டி நின்னுருச்சுன்னு சொல்லிட்ருக்கேன். பயத்துல உளறிக் கொட்டுற. நீ வந்து ட்ரைவர் சீட்ல உட்காரு. நானாச்சு இறங்கி தள்ளுதேன்" எனக் கடுப்பாக கூறி அவன் இறங்க போக.
"ஐயையோ விட்டு போகாதடா. மாமாவும் உன்கூட இறங்கி தள்ளுதேன்"
"ரெண்டு பேரும் இறங்கிட்டா. வண்டியை உங்கொப்பத்தா வந்து ஓட்டுமா?" எனப் பல்லைக் கடித்தான் வேந்தன்.
"செத்தவுகலாம் சாமிக்கு சமம் அப்படி பேசப்டாது வேந்தா" என்றவர் சுற்றி வெளியே பார்த்தவாறு அவன் கையைப் பிடித்து அவனை ஒட்டிக்கொண்டே வந்து கியருக்கு மேல் ஏறியிருந்தார்.
அவரைப் பார்த்து விட்டு வெளியே பார்த்தவன், "அங்கதான் இருக்குதா உன் அப்பத்தா?" எனக் கேட்க,
"எனக்கு அப்பத்தான்னா உனக்கு பூட்டி பாத்துக்கோ. சும்மா பேசக்கூடாது. கெட்ட சக்திட்ட இருந்துலாம் நம்ம மூதாதையர்கள் தான் நம்மள காப்பாத்துவாங்க தெரிஞ்சுக்கோ"
"சரி அவங்களே வந்து காரையும் தள்ளட்டும். நீ அப்படி கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தன்னா நா கொஞ்சம் சரிஞ்சு படுத்துப்பேன். தள்ளுயா மாமா" என அவர் கையை எடுத்துவிட்டு சீட்டில் தள்ளியும்விட,
"எதே தூங்க போறியா? அடேயப்பா உனக்கு கொஞ்சம் கூடவா பயமா இல்ல? கொலையா கொல்லுதானே" என்றவர் மீண்டும் அவனை நெருங்கி வர,
"கியர்ல இருந்து கீழ இறங்குயா முதல்ல. அதையும் உடச்சுவிட்டுட்டன்னா விடிஞ்சாலும் இங்கிருந்து நகர முடியாது"
"தள்ளித் தள்ளி விடாத வேந்தா பயந்துட்டு வருது. சீக்கிரம் வண்டிய எடேன் வீட்டுக்கு போயிடுவோம்" என்கையிலேயே அவன் ஃபோன் வீறிட்டு அலற, அதற்கு மேல், "அம்மாடி முருகா முருகா முருகா!" என அழவே துவங்கியிருந்தார் அனிருத்.
"ஃபோன் மாமா ஃபோனு தான். ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற முகரைய பாரு" என முறைத்தவாறு அதை எடுத்து காதில் வைத்தான்.
"ஏய்யா மணி ஒன்னாக போவுது எங்கையா இருக்கீங்க?" என அழைத்திருந்தார் அவன் அன்னை படிகாசீயம்மாள்.
"வர்ற வழி தான்மா. நீ போய் படும்மா நாங்க வந்துடுவோம்"
"எக்கா மணி ஒன்னாயிருச்சாக்கா? ஆத்தங்கரை பக்கத்துல வண்டிய பேய் நிறுத்தி வச்சுருச்சுக்கா. எனக்கு என்னமாச்சு ஆச்சுன்னா என் பொண்டாட்டி புள்ளைய மட்டும் பாத்துகிடுக்கா. உன் மகேன் என்ன காவு குடுக்காம நகர மாட்டேன்னு நிக்கியான்" என அனிருத் கத்தி கூப்பாடுப் போட,
"யாத்தே ஏய்யா அய்யாவு என்னையா சொல்லுத?"
"அனிருத்னு சொல்லுக்கா" என அவர் அழுதுகொண்டே அக்காவைத் திருத்த, முறைத்து பார்த்தான் வேந்தன்.
"எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குதே நா என்ன பண்ணுவேன். வண்டியப் புடிச்சுகிச்சுனா அத அங்கனயே விட்டுட்டு நீங்க இறங்கி ஓடி வந்துருங்கய்யா. திரும்பி பார்க்காம ஓடி வந்துருங்க ராசாக்களா. வண்டி போனாப் போட்டும் உசுருதேன் முக்கியம்" என அவர் இன்னும் ஒப்பாரியைக் கூட்ட, தலையில் அடித்து கொண்டு பக்கத்தில் இருந்த மாமன் தலையிலும் நறுக்கென்று கொட்டு வைத்து வாயை மூட செய்கைக் காட்டினான் வேந்தன்.
"எக்கா இவனே என்ன கொன்னுறுவான்க்கா"
"காக்க காக்க சொல்லுயா ஒரு கெட்டதும் கிட்ட வராது. நம்ம குலசாமி சுப்புரமணியர் இருக்கைல நம்மகிட்ட எதுவும் வராதுய்யா. அழாத தம்பி" என்றார் படிகாசீ.
"நல்ல அக்கா நல்ல தம்பி. எம்மா ஃபோன வைம்மா நாங்க வரோம்" என்றவன் வண்டியை விட்டு பட்டென்று இறங்கவும், அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. பிச்சிப்பூ நறுமணம் காற்றில் அந்த இடைத்தையே நிரப்பிக் கொண்டு வந்தது போலிருந்தது. நிச்சயமாக உணர்ந்தான் அந்த வாடையை ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. சுற்றிப் பார்த்தவாறு காரின் பின்னால் சென்று நின்று, "மாமா கார ஸ்டார்ட் பண்ணி, கியர் போடு, ஆக்ஸிலேட்டர மிதி" என்க, கிடுகிடுவென நடுங்கியவர், தட்டுத்தடுமாறி கொண்டிருந்தார்.
"மாமா!" என்றவன் மறுபடியுமான சத்தத்தில், சாவியைக் கீழே போட்டிருந்தார்.
"அடேய் அலறாதடா. ரொம்ப பயமா இருக்கு" எனக் குனிந்து தேடிக்கொண்டிருந்தார் அவர்.
வேந்தனோ காரைத் தள்ளினான் எளிதாக நகர்ந்தது. அவன் அழுத்தம் கொடுப்பதை குறைத்தும் கார் நகர்வது போலிருக்க, மெல்ல அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான். ஆனால் காரை யாரோ தள்ளுவது போல் நன்கு நகர்ந்தது. உள்ளே இருந்தவர் ஒருவழியாகத் தேடி எடுத்து காரில் சாவியைப் போட்டு திருகி, கியரை ரிவர்ஸில் போட்டு ஆக்ஸிலேட்டரை குடுக்க, கார் ஸ்டார்ட் ஆகாமலே பின்னால் சட்டென்று நகர, சுதாரித்து பின்னால் நகர்ந்து நின்றான் வேந்தன்.
"கார பேயி பின்னாடி இழுக்குதுடா வேந்தா. ஓடி வந்துடுடா. வேந்தா வேந்தா எனக்கு பயமா இருக்குடா, வே வேவேவே" எனக் கத்தி கதறி அய்யாவழி அழ,
மிகுந்த எரிச்சலுடன் முன்னால் சென்றவன், ஜன்னல் வழி உள்ளே பார்த்தான், அவன் நினைத்தது போலவே ரிவர்ஸ் கியரில் தான் கிடந்தது கார்.
"காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேனென்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா"
மணி பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது, அந்தப் பாட்டு சத்தமும் அதனோடு ஒருவனின் காலடிச் சத்தமும் மட்டுமே அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது. இங்கும் அங்கும் நடந்தவாறு கையிலிருந்த கோப்பை பிரட்டிக் கொண்டிருந்தான் கரிகாலவேந்தன். நாளை அவன் ஆஜர் ஆக வேண்டிய கேஸின் இறுதிக் கட்டம். தீர்ப்பு மட்டுமே நாளை தரப்பட இருக்கிறது, ஆனாலும் புதிதாக எதாவது முளைத்து விடக் கூடாது என்பதற்காக மீண்டுமாக ஒருமுறை ஆரம்பித்ததிலிருந்து அவன் திரட்டிய ஆதாரங்களை மொத்தமாகச் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நடையை தூங்கி விழுந்தவாறே பார்த்துக் கொண்டு அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார் ஒருவர், "இவன் இம்புட்டு சத்தமா பாட்ட வச்சுகிட்டு என்னத்த தான் முக்கி முக்கி அதுல படிக்கானோ தெரிய மாட்டேங்குது. காலா காலத்துல கல்யாணமும் பண்ண மாட்டேங்குறான் பண்ணவனையும் போய் பொண்டாட்டிக் கூடப் படுக்க விட மாட்டேங்குறான். மனசாட்சின்றது இருக்கான்னு பாரு" எனத் தலையை தாங்கி அமர்ந்திருந்தார். அவர் அவன் தாய்மாமா, அம்மாவின் உடன்பிறந்த தம்பி அய்யாவழி, சுருக்கமாக அனிருத். இருவருக்கும் பத்து வயதே வித்தியாசம்.
அவனுக்கும் அவர் புலம்பல் காதில் விழுந்தது தான், ஆனால் கேட்காதது போலவே நடையைத் தொடர்ந்திருந்தான். எதையும் விடவில்லை, புதிதாக எந்த காரணமும் கொண்டு வந்து நிறுத்த முடியாது என முழுமையாக நம்பினான். ஆனாலும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தண்டனை பெற்று தரும்வரை இவனுக்கு இந்த தலைவலி இருக்கவே செய்யும்.
அவன் கையிலிருந்தக் கோப்பை மேசையில் வைத்துவிட்டு நிற்கவும், "படிச்சு முடிச்சுட்டியா வேந்தா கிளம்புவோமா?" என வேகமாக எழுந்து நின்றார் அனிருத்.
"உன்ன அப்பவே கிளம்புனுட்டேன், இங்கேயே இருந்து உன்ன கூட்டிட்டு போறேன்னு உட்கார்ந்துருந்துட்டு, அப்ப இருந்து புலம்பிகிட்டே கிடக்க. அத்த தேடும்னா கிளம்பு நீ" என அரட்டினான் வேந்தன்.
"அக்கா வையும் வேந்தா. நா டவுனு வரைக்கும் போறேன்னு சொன்னதுமே, அப்ப பிள்ளை கூட இருந்து கூட்டிட்டு வந்துருன்னு சொல்லி விட்டுச்சு தெரியுமா? அதேன் இவ்வளவு நேரம் இருந்தேன் உன் அத்தை மேல எனக்கு என்ன பயமாம்? அப்டி வேற சொல்லிட்டு திரியுதாளா அவ?"
"நா என்ன சின்ன பிள்ளையா? வேலை முடிஞ்சா வீட்டுக்கு வரத் தெரியாதா எனக்கு?" என்றான் வேந்தன்.
"அதுக்கு நீ கொஞ்ச நஞ்சமா வம்பிழுத்து வச்சுருக்கணும். ஊரு பூராவும் விவகாரம் பண்ணிட்ட அப்ப வீட்டுல உள்ளவுகளுக்கு பயமாத்தேன் இருக்கும்"
"இப்ப உன் கூட வந்தா எவனாவது குறுக்க சாடுனா பறந்து பறந்து ப்ரூஸ்லி மாறி சண்டை போட்ருவ நீ?"
"பின்ன? ஏன் போட மாட்டேன் நினைக்கியாக்கும்? உன் மாமன் வாரேன்னு தெரியபோயி தான் ஒருபயலும் உன்ன நெருங்க மாட்டேங்குறான் தெரிஞ்சுக்கோ. அதேன் மாமே இப்புடி அடிக்கடி உன்கூட தலையக் காட்டிகிட்ருக்கேன்" எனக் காலரைத் தூக்கி விட்டு மீசையை நீவிவிட்டு அனிருத் சொல்ல,
"இந்த கதையெல்லாம் உன் அக்காட்டையும் நம்பி கழுத்த நீட்டுன அத்தைட்டையும் வேணா சொல்லு நம்புவாங்க. தனியா ஊருக்குள்ள போவ பயந்துட்டுதேன் இங்கனயே உட்கார்ந்துருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்காத" என்றவன் பேசிக் கொண்டே அனைத்தையும் ஒழுங்காக எடுத்து வைத்து, பாட்டையும் நிறுத்தி விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானான்.
"ஆருக்கு பயம்? எதுனாலும் வந்து பாருன்னு மூஞ்சிக்கு நேரா ஒத்தைக்கு ஒத்த நிப்பேனாக்கும். சும்மா இல்ல? இங்க கேளு, அந்தக் காலத்துல ஏழெட்டு வயசுல தெருவிளக்கு இல்லாம இருக்கக்கயே சாமம்ன்னு இல்லாம வயல்ல தண்ணி பாயவிட்டுக் காவலுக்கு நின்னவன் தெரியுமா? ஆர பாத்து பயமுன்னுற?"
"உனக்குத்தான் மாமா உனக்கே உனக்குத் தான்" எனச் சிரித்தவாறு வேந்தன் வெளியே வந்திருக்க, அவன் பின்னேயே வெளியே வந்தவர், "நா பாட்டுக்கு அப்பவே கிளம்பி போயிருக்கணும். நம்ம மருமகனேன்னு பாசத்துல நின்னேன்ல அதான் இம்புட்டு பேசுத நீ" என வாய்க்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தார்.
"பத்து மணி ஆகிட்டு, உன் மாமன் ஒத்தைல வந்துகிட மாட்டான் உன் கூட நிக்கவச்சு பத்ரமா கூட்டிட்டு வந்துருய்யான்னு உன் அக்கா தான் எனக்கு ஃபோன போட்டு சொன்னாப்டி, வேணும்னா போனதும் உன் அக்காவ நீயே கேளு" என்றவன் அவனது மாருதி ஜிப்ஸியில் ஏறி அமர்ந்தான்.
"உங்க கூடவே இருக்கேனுல்ல அதான் என் அருமை தெரியாம ஆளாளுக்கு லந்து பண்ணுதீக" என முகத்தை சுருக்கி கொண்டு தானும் மறுபக்கம் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தார் அனிருத்.
"சரி விடு மாமா. நமக்குள்ள இதென்ன புதுசா. ஆமா என்ன விஷயமா டவுனுக்கு வந்த?"
"அங்கன வந்து ரெண்டு மணிநேரமா குத்த வச்சுருந்தவன்ட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம இருந்துபுட்டு இப்பத்தான் கேக்குதான் காரணத்த"
"நாந்தான் ஃபைல் பாத்துட்டருந்தேன்ல?"
"விதவிதமா பாட்டு கேட்டேம்னு வேணா சொல்லு"
"அது நீ தூங்காம இருக்கறதுக்கு போட்டது"
"என்ட்டையே நடிக்காத வேந்தா நீ! இப்படி பாட்ட கேட்டே வாழ்க்கைய ஓட்ட போறியா நீயி?"
"நீ என்ன வேலையா வந்தன்னு சொல்லு முதல்ல"
"உடனே பேச்ச மாத்திடு" என்ற அனிருத், "புதுசா ஒரு வெளிநாட்டு ஏஜென்ட் கிடைச்சுருக்கான் போல அவனுக்கு நம்ம தைலம் சேம்பிள் கொஞ்சம் குடுத்துட்டு வரலாம்னு போனேன்"
"ஓ! யாரு என்னன்னு நல்லா விசாரிச்சாச்சா?"
"அதெல்லாம் உன் அண்ணனுக்கு தான் தெரியும். என்னைய குடுத்துட்டு வான்னு சொன்னான் குடுத்துட்டு வந்துட்டேன்"
"நீங்க தான அதுக்கு முதலாளி?"
"அவன் நிறைய ஆர்டர் பிடிக்கிறான், சரி அடுத்தக்கட்டத்துக்கு தொழில் வளர்ந்தா போதும். அவன் பார்த்தா என்ன நா பார்த்தா என்ன இப்ப?"
"சரியான ஏமாளி மாமா நீ!"
"இருந்துட்டு போறேன் போ என் மருமகன் தான ஏமாத்துறான். வெளியாள்ட்ட ஏமாந்தா தான் தப்பு" என்றவர், வெளியே தெரிந்த கும்மிருட்டை பார்த்து விட்டு தலையை முழுவதுமாக குனிந்து அமர்ந்து கொண்டார்.
"ஏமாறுறதே தப்பு தான் மாமா" எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வண்டி சட்டென்று நின்றது.
"ஏன்டா நிப்பாட்டிட்ட?" எனப் பதறி நிமிர்ந்து மருமகனைப் பார்க்க, அவனோ சாவியைத் திருகி வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான்.
"அடேய் வண்டிய எடுறா. இங்க ஏன்டா நிப்பாட்டின?" என வெளியே திரும்பி பார்த்தவருக்கு, சலசலக்கும் ஆற்றின் நீரும், காற்றில் ஆடும் ஆற்றங்கரை மரங்களும் திகிலை கிளப்பி விட மீண்டும் மருமகனிடம் திரும்பியவர், "அடேய் வேந்தா வண்டியை எடுடா. என்னத்தடா அங்க தேடிட்ருக்க" என அவன் கையை போட்டு உலுக்க.
"ம்ச் மாமா வண்டி எதனால நின்னுச்சுன்னு தெரியல. பெட்ரோல்லாம் இருக்கு, இன்ஜின் தான் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. இறங்கி தள்ளுறியா, ஸ்டார்ட் ஆகிடும்" என முகத்தை சுருக்கியே கேட்டான். வண்டி பாதியில் நின்ற கடுப்பு அவனுக்கு. அந்த இடத்தில் நின்றுவிட்ட பதட்டம் அவருக்கு.
"இறங்கி தள்ளுறதா? என்ன விளையாடுறியா? நீ வேணும்னு பண்ணுத வேந்தா. மாமாவ வச்சு விளையாட்டு காட்டாத. நா உன் தாய்மாமாடா"
"நா என்ன சித்தப்பான்னா சொன்னேன்? லூசு மாமா. வண்டி நின்னுருச்சுன்னு சொல்லிட்ருக்கேன். பயத்துல உளறிக் கொட்டுற. நீ வந்து ட்ரைவர் சீட்ல உட்காரு. நானாச்சு இறங்கி தள்ளுதேன்" எனக் கடுப்பாக கூறி அவன் இறங்க போக.
"ஐயையோ விட்டு போகாதடா. மாமாவும் உன்கூட இறங்கி தள்ளுதேன்"
"ரெண்டு பேரும் இறங்கிட்டா. வண்டியை உங்கொப்பத்தா வந்து ஓட்டுமா?" எனப் பல்லைக் கடித்தான் வேந்தன்.
"செத்தவுகலாம் சாமிக்கு சமம் அப்படி பேசப்டாது வேந்தா" என்றவர் சுற்றி வெளியே பார்த்தவாறு அவன் கையைப் பிடித்து அவனை ஒட்டிக்கொண்டே வந்து கியருக்கு மேல் ஏறியிருந்தார்.
அவரைப் பார்த்து விட்டு வெளியே பார்த்தவன், "அங்கதான் இருக்குதா உன் அப்பத்தா?" எனக் கேட்க,
"எனக்கு அப்பத்தான்னா உனக்கு பூட்டி பாத்துக்கோ. சும்மா பேசக்கூடாது. கெட்ட சக்திட்ட இருந்துலாம் நம்ம மூதாதையர்கள் தான் நம்மள காப்பாத்துவாங்க தெரிஞ்சுக்கோ"
"சரி அவங்களே வந்து காரையும் தள்ளட்டும். நீ அப்படி கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தன்னா நா கொஞ்சம் சரிஞ்சு படுத்துப்பேன். தள்ளுயா மாமா" என அவர் கையை எடுத்துவிட்டு சீட்டில் தள்ளியும்விட,
"எதே தூங்க போறியா? அடேயப்பா உனக்கு கொஞ்சம் கூடவா பயமா இல்ல? கொலையா கொல்லுதானே" என்றவர் மீண்டும் அவனை நெருங்கி வர,
"கியர்ல இருந்து கீழ இறங்குயா முதல்ல. அதையும் உடச்சுவிட்டுட்டன்னா விடிஞ்சாலும் இங்கிருந்து நகர முடியாது"
"தள்ளித் தள்ளி விடாத வேந்தா பயந்துட்டு வருது. சீக்கிரம் வண்டிய எடேன் வீட்டுக்கு போயிடுவோம்" என்கையிலேயே அவன் ஃபோன் வீறிட்டு அலற, அதற்கு மேல், "அம்மாடி முருகா முருகா முருகா!" என அழவே துவங்கியிருந்தார் அனிருத்.
"ஃபோன் மாமா ஃபோனு தான். ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற முகரைய பாரு" என முறைத்தவாறு அதை எடுத்து காதில் வைத்தான்.
"ஏய்யா மணி ஒன்னாக போவுது எங்கையா இருக்கீங்க?" என அழைத்திருந்தார் அவன் அன்னை படிகாசீயம்மாள்.
"வர்ற வழி தான்மா. நீ போய் படும்மா நாங்க வந்துடுவோம்"
"எக்கா மணி ஒன்னாயிருச்சாக்கா? ஆத்தங்கரை பக்கத்துல வண்டிய பேய் நிறுத்தி வச்சுருச்சுக்கா. எனக்கு என்னமாச்சு ஆச்சுன்னா என் பொண்டாட்டி புள்ளைய மட்டும் பாத்துகிடுக்கா. உன் மகேன் என்ன காவு குடுக்காம நகர மாட்டேன்னு நிக்கியான்" என அனிருத் கத்தி கூப்பாடுப் போட,
"யாத்தே ஏய்யா அய்யாவு என்னையா சொல்லுத?"
"அனிருத்னு சொல்லுக்கா" என அவர் அழுதுகொண்டே அக்காவைத் திருத்த, முறைத்து பார்த்தான் வேந்தன்.
"எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குதே நா என்ன பண்ணுவேன். வண்டியப் புடிச்சுகிச்சுனா அத அங்கனயே விட்டுட்டு நீங்க இறங்கி ஓடி வந்துருங்கய்யா. திரும்பி பார்க்காம ஓடி வந்துருங்க ராசாக்களா. வண்டி போனாப் போட்டும் உசுருதேன் முக்கியம்" என அவர் இன்னும் ஒப்பாரியைக் கூட்ட, தலையில் அடித்து கொண்டு பக்கத்தில் இருந்த மாமன் தலையிலும் நறுக்கென்று கொட்டு வைத்து வாயை மூட செய்கைக் காட்டினான் வேந்தன்.
"எக்கா இவனே என்ன கொன்னுறுவான்க்கா"
"காக்க காக்க சொல்லுயா ஒரு கெட்டதும் கிட்ட வராது. நம்ம குலசாமி சுப்புரமணியர் இருக்கைல நம்மகிட்ட எதுவும் வராதுய்யா. அழாத தம்பி" என்றார் படிகாசீ.
"நல்ல அக்கா நல்ல தம்பி. எம்மா ஃபோன வைம்மா நாங்க வரோம்" என்றவன் வண்டியை விட்டு பட்டென்று இறங்கவும், அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. பிச்சிப்பூ நறுமணம் காற்றில் அந்த இடைத்தையே நிரப்பிக் கொண்டு வந்தது போலிருந்தது. நிச்சயமாக உணர்ந்தான் அந்த வாடையை ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. சுற்றிப் பார்த்தவாறு காரின் பின்னால் சென்று நின்று, "மாமா கார ஸ்டார்ட் பண்ணி, கியர் போடு, ஆக்ஸிலேட்டர மிதி" என்க, கிடுகிடுவென நடுங்கியவர், தட்டுத்தடுமாறி கொண்டிருந்தார்.
"மாமா!" என்றவன் மறுபடியுமான சத்தத்தில், சாவியைக் கீழே போட்டிருந்தார்.
"அடேய் அலறாதடா. ரொம்ப பயமா இருக்கு" எனக் குனிந்து தேடிக்கொண்டிருந்தார் அவர்.
வேந்தனோ காரைத் தள்ளினான் எளிதாக நகர்ந்தது. அவன் அழுத்தம் கொடுப்பதை குறைத்தும் கார் நகர்வது போலிருக்க, மெல்ல அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான். ஆனால் காரை யாரோ தள்ளுவது போல் நன்கு நகர்ந்தது. உள்ளே இருந்தவர் ஒருவழியாகத் தேடி எடுத்து காரில் சாவியைப் போட்டு திருகி, கியரை ரிவர்ஸில் போட்டு ஆக்ஸிலேட்டரை குடுக்க, கார் ஸ்டார்ட் ஆகாமலே பின்னால் சட்டென்று நகர, சுதாரித்து பின்னால் நகர்ந்து நின்றான் வேந்தன்.
"கார பேயி பின்னாடி இழுக்குதுடா வேந்தா. ஓடி வந்துடுடா. வேந்தா வேந்தா எனக்கு பயமா இருக்குடா, வே வேவேவே" எனக் கத்தி கதறி அய்யாவழி அழ,
மிகுந்த எரிச்சலுடன் முன்னால் சென்றவன், ஜன்னல் வழி உள்ளே பார்த்தான், அவன் நினைத்தது போலவே ரிவர்ஸ் கியரில் தான் கிடந்தது கார்.