Shalini shalu
Moderator
உடல்நிலைக் குறைவால் நரம்பு ஊசிப் போட்டு இருக்கேன் ஃப்ரண்ட்ஸ். அதான் யூடி லேட் ஆகிடுச்சு. சாரி ![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64f.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
உன் நினைவிலே கரைகிறேன் - 31
தன்னுடைய நேர்காணலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள், ஹாலில் தனக்காக காத்திருந்த குடும்பத்தைப் பார்த்தவளோ, அவர்களைப் பளிச்சிடும் புன்னகையுடன் ஏறிட்டாள் ஹாரண்யா.
ஆனால், அந்த மூவரின் முகங்களிலும் மருந்துக்கும் புன்னகையோ, மலர்வோ இல்லை என்பதைக் கவனித்து துணுக்குற்று,
“ஏன் எல்லாரும் முகத்தை இப்படி சீரியஸாக வச்சு இருக்கீங்க?” என்று வினவினாள்.
உடனே தங்களைச் சமாளித்துக் கொண்டனர் அவளது மாமனார், மாமியார்.
“அப்படியெல்லாம் இல்லையே? நீ சாப்பிட்டியா ம்மா?” என்றார் மனோரமா.
“ம்ம். சாப்பிட்டேன் அத்தை” என்றவளோ, பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, அவனோ உணர்ச்சியற்ற முகத்துடன் காட்சி அளித்தான்.
“அப்போ சரி ம்மா. நீ சோர்வாக இருப்ப. ரூமுக்குப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு” என்றவரிடம்,
“சரிங்க அத்தை” எனப் பதிலளித்து விட்டுப் பகீரதனைப் பார்க்க,
அவனோ,”நானும் உன் கூட வர்றேன் ரணு” என்று கூறி அவளுடன் தங்கள் அறைக்குச் சென்றான்.
“என்ன மனோ, இவன் மூஞ்சியே சரியில்லை, மருமகளை எதையாவது சொல்லிடுவானோ!” என்று தன் மனைவியிடம் கவலையுடன் கேட்டார் பாலேந்திரன்.
“எனக்கும் அந்த பயம் தான் ங்க. அவ வந்ததில் இருந்து இவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசலை. அதையும் ஹாரா கவனிச்சிட்டுத் தான் இருந்தாள்” என்றார் மனோரமா.
“அந்த மோஹித் கூட நின்னு மருமக ஃபோட்டோ எடுத்துக்கிட்டதைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்துருச்சோ?”
“அப்படித் தான் நினைக்கிறேன் ங்க. அதைப் பார்த்த உடனே நமக்கே ஒரு மாதிரி தானே இருந்துச்சு?”
பாலேந்திரன்,“முதல்ல அப்படித் தான் இருந்தது மனோ. ஆனால் நம்மப் பையனே ஒரு நடிகனாக இருக்கும் போது அவன் செய்யாத விஷயத்தையா மருமக பண்ணிட்டான்னு நினைக்கும் போது எனக்கு ஹாரா மேலே இருந்த வருத்தம் எல்லாம் போயிடுச்சு. ஆனால், அந்தப் பொண்ணு உள்ளே வர்றப்போ நம்ம முக மாற்றத்தைப் பார்த்து குழப்பம் ஆகிடுச்சு. அதுவும் அந்த ராஸ்கல் இறுகிப் போய் எதுவுமே பேசாமல் நிற்கவும் அவளோட உற்சாகம் எல்லாம் வடிஞ்சா மாதிரி ஆகிட்டா. ரூமில் என்னென்ன சொல்லி அவளைக் காயப்படுத்தப் போறான் - னு நினைக்கிறேன்!” என்று உரைத்தவரிடம்,
“அப்படி ஏதாவது நடந்தால் மருமகளே பார்த்துப்பாள். அப்படியும் அவன் ஓவராகப் பண்ணா நாம எடுத்துச் சொல்லலாம்” என்று உறுதியாக கூறினார் மனோரமா.
இதே சமயம், தங்கள் அறையில், கணவனும், மனைவியும் ஒருவர் மற்றொருவரை கவனித்துக் கொண்டு தான் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.
கணவனின் அமைதியைக் கண்டு கோபம் வந்து விட,”பகீ! நானும் ரொம்ப நேரமாக உங்களைக் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். இப்போ வரைக்கும் நீங்க என்கிட்ட எதுவுமே பேசலை. எப்பவுமே நான் என்னோட இண்டர்வியூ முடிச்சிட்டு வந்தால் நீங்க மூனு பேரும் என்னை அவ்வளவு சந்தோஷமா வரவேற்பீங்க! ஆனால், இன்னைக்கு எல்லாம் தலைகீழாக நடக்குது! நான் உற்சாகமாக வந்தா நீங்க எல்லாம் முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க! என்ன தான் ஆச்சு உங்களுக்கு?” என்று அவனிடம் பொரிந்து தள்ளிய போதும் கூட,
மௌனத்தைக் கடைபிடித்தவனைக் கண்டு வெறியாகி, அவனது முகத்தைத் தன் அருகில் இழுத்து,”உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்! நீங்க இதுக்குப் பதில் சொல்லித் தான் ஆகனும்!” என்று கத்தினாள் ஹாரண்யா.
தங்களது உரையாடல்கள் கீழே கேட்காது என்ற தைரியத்தில் சற்று அதிகமாகவே சத்தமிட்டு விட்டாள்.
அவளிடம்,”நீ மோஹித்தோட பட ஃபங்கஷனுக்கு ஆங்கரிங் பண்ணப் போறேன்னு ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள்,
“அதனால் என்ன ஆச்சு இப்போ?” என்றாள் அவனது மனைவி.
பகீரதன்,“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!” என்றதும்,
“என்னோட வேலையில் தினசரி நடக்குறதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே? நீங்க அப்படியா நடந்துக்கிறீங்க? ஷூட்டிங் இருக்குன்னு மட்டும் தான் சொல்வீங்க. அது மாதிரி தான் நானும் நடந்துக்கிட்டேன். அதே மாதிரி, நம்மக் கல்யாணத்துக்கு முன்னோடியும் கூட நான் மோஹித்தை இண்டர்வியூ செய்திருக்கேனே? இப்போ மட்டும் உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனோ,
“நீ அவனை இண்டர்வியூ செய்ததில் எனக்குப் பிரச்சினை தான். ஆனால், அதை விட பெரிய பிரச்சினையாக இருந்தது நீ அவன் பக்கத்தில் நின்னு ஃபோட்டோ எடுத்தது தான்! அதை எதுக்கு செஞ்ச?” என்றவனது கேள்விக்கு,
“அவர் தான் என் கூட ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டார். நீங்களே அந்த லைவில் பார்த்து இருப்பீங்களே?” என்ற பதிலைச் சொன்னாள் ஹாரண்யா.
“ஆமாம். ஆனால் நீ அதை மறுத்து இருக்கலாமே! ஏன் மறுக்கலை?” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள்,
“அது ஏன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைச்சேன்! ஆனால் நீங்களே இப்படி கேட்கிறீங்களே? நீங்க எவ்வளவு வருஷமாக சினி ஃபீல்டில் இருக்கீங்க? இதையெல்லாம் மறுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா பகீ?” என்றதும்,
“நான் கண்டிப்பாக மறுத்து இருக்கேன். நீ நினைச்சாலும் அதைச் செஞ்சி இருக்கலாம்” என்று மொழிந்தான் பகீரதன்.
“என்னால் முடிஞ்சா மறுத்து இருப்பேன் பகீ. அங்கே அவரோட ஃபேன்ஸ் அவ்வளவு பேர் இருந்தாங்க. அவங்களும் அவரோட கோரிக்கையை ஏத்துக்க சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க. அதான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதோட என்னோட வேலையில் இதெல்லாம் சகஜம். ஏன் நீங்க கூடத் தான் உங்களைப் பேட்டி எடுக்கிற ஆங்கர்ஸ் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கு நானும் சண்டை போடவா?” என்று அவனிடம் சண்டைக்கோழியாகத் துள்ளினாள் ஹாரண்யா.
“ம்ம். போடு. யாரு வேண்டாம்னு சொன்னா” என்று அலட்சியமாகப் பதிலளிக்க,
“ஓஹ் அப்படியா? அப்போ அதுக்கும், இதுக்கும் சரியாகப் போச்சுப் போங்க!” என்று அவனுக்குக் குறையாத அலட்சிய பாவனையுடன் கூறினாள்.
“ஆஹான்! நான் கேட்டதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்ட. என்னோட அப்பா, அம்மா கேட்டால் இதையே தான் சொல்லுவியா?” என்று கிண்டலாக வினவினான் பகீரதன்.
அதைக் கேட்டதும், தான் வீட்டிற்குள் நுழைந்ததுமே தன்னுடைய மாமனார், மாமியாரின் முகங்களைப் பார்த்த போதே அவர்கள் தன்னைப் பார்த்தப் பார்வையில் சங்கடம் தான் இருந்தது என்பது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.
மனைவியின் முகம் சுருங்கி விட்டதைக் கண்டு, அவளுக்குத் தன்னுடைய கேள்வியின் அர்த்தம் புரிந்து விட்டது என்று திருப்தி அடைந்தவன்,”என்ன ரணு? அவங்க கிட்ட சொல்ல உங்ககிட்ட வேற பதில் இருக்கா என்ன?” என்றவனிடம்,
“இருக்கு பகீ! அதை அவங்க என்கிட்ட கேட்கும் போது சொல்லிக்கிறேன்! நீங்க கவலையை விடுங்க” என்று தெனாவெட்டாகப் பதில் கூறினாள் ஹாரண்யா.
அதில் அவளை முறைத்தவனோ,”நீ அவங்க கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனால் இனிமேல் அந்த மோஹித் சம்பந்தப்பட்ட எந்த ஃபங்கஷனுக்கும் ஆங்கரிங் செய்யக் கூடாது! புரிஞ்சிதா?” என்று அவளுக்குக் கட்டளை இட்டான் பகீரதன்.
“திஸ் இஸ் டூ மச் பகீ! அது எப்படி முடியும்?” என்று வாக்குவாதம் செய்ய,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது ரணு! நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும்!” என்ற கணவனிடம்,
“நான் ஏன் இனிமேல் மோஹித்தைப் பேட்டி எடுக்கக் கூடாது? என்னக் காரணம்னு சொல்லுங்க?” எனக் கேட்டாள் ஹாரண்யா.
“அவன் எனக்கு சமமான ஆள் கிடையாது! என்னை விடப் பிரபலமானவனும் இல்லை. அப்படியிருக்கும் போது, சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிற என்னோட மனைவி இரண்டாவது இடத்தில் இருக்கிற ஒருத்தனைப் பேட்டி எடுக்கிறதும், அவன் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிறதும் எனக்குப் பிடிக்கலை ரணு! அதான்!” என்று அவளுக்கு விளக்கினான் பகீரதன்.
“நீங்க ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக யோசிக்கிறீங்க பகீ! அது உங்களுக்கே தெரியலை. ஆங்கரிங் என்னோட வேலை. நான் அதுக்கு விசுவாசமாக இருக்கனும்ன்னு விரும்புறேன். அதனால், என்னை யாரைப் பேட்டி எடுக்கச் சொன்னாலும் எடுப்பேன்! அது எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கலைன்னா மட்டும் தான் அதைச் செய்ய மாட்டேன்!” என்று தீவிரமாக உரைத்தாள் ஹாரண்யா.
“அப்படியா விஷயம்? அப்போ உனக்கு நான் முக்கியமா, உன் ஆங்கரிங் வேலை முக்கியமான்னு கேட்டால் என்ன சொல்லுவ?” என்று கேட்டு வைக்க,
அவளோ,“நானும் அதையே உங்ககிட்ட திருப்பிக் கேட்பேன்! அதுக்கு நீங்க என்னப் பதில் சொல்றீங்களோ, அதே தான் என்னோட பதிலாகவும் இருக்கும்” என நிதானமாக உரைத்தாள் அவனது மனைவி.
அவளைத் தன் புருவத்தை உயர்த்தி மெச்சியவனோ,”நான் சொல்ற அப்பவே சம்மதிச்சிடு ரணு. இல்லைன்னா நீ எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ!” என அவளை எச்சரித்தான் பகீரதன்.
அதற்கு,”அதை அப்போ பார்த்துக்கிறேன். இப்போ எனக்குத் தலைவலி வந்துருச்சு. அதனால் டீ குடிக்கப் போறேன். உங்களுக்கும் கண்டிப்பாகத் தலை வலிக்கும்னு எனக்குத் தெரியும். அதனால் நீங்களும் வந்து காபி குடிங்க” என்றவளிடம்,
“ஷூயர்” என்ற கணவனை அழைத்துக் கொண்டு கீழே போனாள் ஹாரண்யா.
- தொடரும்
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64f.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
![Cherry blossom :cherry_blossom: 🌸](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f338.png)
உன் நினைவிலே கரைகிறேன் - 31
தன்னுடைய நேர்காணலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள், ஹாலில் தனக்காக காத்திருந்த குடும்பத்தைப் பார்த்தவளோ, அவர்களைப் பளிச்சிடும் புன்னகையுடன் ஏறிட்டாள் ஹாரண்யா.
ஆனால், அந்த மூவரின் முகங்களிலும் மருந்துக்கும் புன்னகையோ, மலர்வோ இல்லை என்பதைக் கவனித்து துணுக்குற்று,
“ஏன் எல்லாரும் முகத்தை இப்படி சீரியஸாக வச்சு இருக்கீங்க?” என்று வினவினாள்.
உடனே தங்களைச் சமாளித்துக் கொண்டனர் அவளது மாமனார், மாமியார்.
“அப்படியெல்லாம் இல்லையே? நீ சாப்பிட்டியா ம்மா?” என்றார் மனோரமா.
“ம்ம். சாப்பிட்டேன் அத்தை” என்றவளோ, பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, அவனோ உணர்ச்சியற்ற முகத்துடன் காட்சி அளித்தான்.
“அப்போ சரி ம்மா. நீ சோர்வாக இருப்ப. ரூமுக்குப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு” என்றவரிடம்,
“சரிங்க அத்தை” எனப் பதிலளித்து விட்டுப் பகீரதனைப் பார்க்க,
அவனோ,”நானும் உன் கூட வர்றேன் ரணு” என்று கூறி அவளுடன் தங்கள் அறைக்குச் சென்றான்.
“என்ன மனோ, இவன் மூஞ்சியே சரியில்லை, மருமகளை எதையாவது சொல்லிடுவானோ!” என்று தன் மனைவியிடம் கவலையுடன் கேட்டார் பாலேந்திரன்.
“எனக்கும் அந்த பயம் தான் ங்க. அவ வந்ததில் இருந்து இவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசலை. அதையும் ஹாரா கவனிச்சிட்டுத் தான் இருந்தாள்” என்றார் மனோரமா.
“அந்த மோஹித் கூட நின்னு மருமக ஃபோட்டோ எடுத்துக்கிட்டதைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்துருச்சோ?”
“அப்படித் தான் நினைக்கிறேன் ங்க. அதைப் பார்த்த உடனே நமக்கே ஒரு மாதிரி தானே இருந்துச்சு?”
பாலேந்திரன்,“முதல்ல அப்படித் தான் இருந்தது மனோ. ஆனால் நம்மப் பையனே ஒரு நடிகனாக இருக்கும் போது அவன் செய்யாத விஷயத்தையா மருமக பண்ணிட்டான்னு நினைக்கும் போது எனக்கு ஹாரா மேலே இருந்த வருத்தம் எல்லாம் போயிடுச்சு. ஆனால், அந்தப் பொண்ணு உள்ளே வர்றப்போ நம்ம முக மாற்றத்தைப் பார்த்து குழப்பம் ஆகிடுச்சு. அதுவும் அந்த ராஸ்கல் இறுகிப் போய் எதுவுமே பேசாமல் நிற்கவும் அவளோட உற்சாகம் எல்லாம் வடிஞ்சா மாதிரி ஆகிட்டா. ரூமில் என்னென்ன சொல்லி அவளைக் காயப்படுத்தப் போறான் - னு நினைக்கிறேன்!” என்று உரைத்தவரிடம்,
“அப்படி ஏதாவது நடந்தால் மருமகளே பார்த்துப்பாள். அப்படியும் அவன் ஓவராகப் பண்ணா நாம எடுத்துச் சொல்லலாம்” என்று உறுதியாக கூறினார் மனோரமா.
இதே சமயம், தங்கள் அறையில், கணவனும், மனைவியும் ஒருவர் மற்றொருவரை கவனித்துக் கொண்டு தான் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.
கணவனின் அமைதியைக் கண்டு கோபம் வந்து விட,”பகீ! நானும் ரொம்ப நேரமாக உங்களைக் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். இப்போ வரைக்கும் நீங்க என்கிட்ட எதுவுமே பேசலை. எப்பவுமே நான் என்னோட இண்டர்வியூ முடிச்சிட்டு வந்தால் நீங்க மூனு பேரும் என்னை அவ்வளவு சந்தோஷமா வரவேற்பீங்க! ஆனால், இன்னைக்கு எல்லாம் தலைகீழாக நடக்குது! நான் உற்சாகமாக வந்தா நீங்க எல்லாம் முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க! என்ன தான் ஆச்சு உங்களுக்கு?” என்று அவனிடம் பொரிந்து தள்ளிய போதும் கூட,
மௌனத்தைக் கடைபிடித்தவனைக் கண்டு வெறியாகி, அவனது முகத்தைத் தன் அருகில் இழுத்து,”உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்! நீங்க இதுக்குப் பதில் சொல்லித் தான் ஆகனும்!” என்று கத்தினாள் ஹாரண்யா.
தங்களது உரையாடல்கள் கீழே கேட்காது என்ற தைரியத்தில் சற்று அதிகமாகவே சத்தமிட்டு விட்டாள்.
அவளிடம்,”நீ மோஹித்தோட பட ஃபங்கஷனுக்கு ஆங்கரிங் பண்ணப் போறேன்னு ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள்,
“அதனால் என்ன ஆச்சு இப்போ?” என்றாள் அவனது மனைவி.
பகீரதன்,“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!” என்றதும்,
“என்னோட வேலையில் தினசரி நடக்குறதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே? நீங்க அப்படியா நடந்துக்கிறீங்க? ஷூட்டிங் இருக்குன்னு மட்டும் தான் சொல்வீங்க. அது மாதிரி தான் நானும் நடந்துக்கிட்டேன். அதே மாதிரி, நம்மக் கல்யாணத்துக்கு முன்னோடியும் கூட நான் மோஹித்தை இண்டர்வியூ செய்திருக்கேனே? இப்போ மட்டும் உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனோ,
“நீ அவனை இண்டர்வியூ செய்ததில் எனக்குப் பிரச்சினை தான். ஆனால், அதை விட பெரிய பிரச்சினையாக இருந்தது நீ அவன் பக்கத்தில் நின்னு ஃபோட்டோ எடுத்தது தான்! அதை எதுக்கு செஞ்ச?” என்றவனது கேள்விக்கு,
“அவர் தான் என் கூட ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டார். நீங்களே அந்த லைவில் பார்த்து இருப்பீங்களே?” என்ற பதிலைச் சொன்னாள் ஹாரண்யா.
“ஆமாம். ஆனால் நீ அதை மறுத்து இருக்கலாமே! ஏன் மறுக்கலை?” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள்,
“அது ஏன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைச்சேன்! ஆனால் நீங்களே இப்படி கேட்கிறீங்களே? நீங்க எவ்வளவு வருஷமாக சினி ஃபீல்டில் இருக்கீங்க? இதையெல்லாம் மறுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா பகீ?” என்றதும்,
“நான் கண்டிப்பாக மறுத்து இருக்கேன். நீ நினைச்சாலும் அதைச் செஞ்சி இருக்கலாம்” என்று மொழிந்தான் பகீரதன்.
“என்னால் முடிஞ்சா மறுத்து இருப்பேன் பகீ. அங்கே அவரோட ஃபேன்ஸ் அவ்வளவு பேர் இருந்தாங்க. அவங்களும் அவரோட கோரிக்கையை ஏத்துக்க சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க. அதான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதோட என்னோட வேலையில் இதெல்லாம் சகஜம். ஏன் நீங்க கூடத் தான் உங்களைப் பேட்டி எடுக்கிற ஆங்கர்ஸ் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கு நானும் சண்டை போடவா?” என்று அவனிடம் சண்டைக்கோழியாகத் துள்ளினாள் ஹாரண்யா.
“ம்ம். போடு. யாரு வேண்டாம்னு சொன்னா” என்று அலட்சியமாகப் பதிலளிக்க,
“ஓஹ் அப்படியா? அப்போ அதுக்கும், இதுக்கும் சரியாகப் போச்சுப் போங்க!” என்று அவனுக்குக் குறையாத அலட்சிய பாவனையுடன் கூறினாள்.
“ஆஹான்! நான் கேட்டதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்ட. என்னோட அப்பா, அம்மா கேட்டால் இதையே தான் சொல்லுவியா?” என்று கிண்டலாக வினவினான் பகீரதன்.
அதைக் கேட்டதும், தான் வீட்டிற்குள் நுழைந்ததுமே தன்னுடைய மாமனார், மாமியாரின் முகங்களைப் பார்த்த போதே அவர்கள் தன்னைப் பார்த்தப் பார்வையில் சங்கடம் தான் இருந்தது என்பது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.
மனைவியின் முகம் சுருங்கி விட்டதைக் கண்டு, அவளுக்குத் தன்னுடைய கேள்வியின் அர்த்தம் புரிந்து விட்டது என்று திருப்தி அடைந்தவன்,”என்ன ரணு? அவங்க கிட்ட சொல்ல உங்ககிட்ட வேற பதில் இருக்கா என்ன?” என்றவனிடம்,
“இருக்கு பகீ! அதை அவங்க என்கிட்ட கேட்கும் போது சொல்லிக்கிறேன்! நீங்க கவலையை விடுங்க” என்று தெனாவெட்டாகப் பதில் கூறினாள் ஹாரண்யா.
அதில் அவளை முறைத்தவனோ,”நீ அவங்க கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனால் இனிமேல் அந்த மோஹித் சம்பந்தப்பட்ட எந்த ஃபங்கஷனுக்கும் ஆங்கரிங் செய்யக் கூடாது! புரிஞ்சிதா?” என்று அவளுக்குக் கட்டளை இட்டான் பகீரதன்.
“திஸ் இஸ் டூ மச் பகீ! அது எப்படி முடியும்?” என்று வாக்குவாதம் செய்ய,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது ரணு! நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும்!” என்ற கணவனிடம்,
“நான் ஏன் இனிமேல் மோஹித்தைப் பேட்டி எடுக்கக் கூடாது? என்னக் காரணம்னு சொல்லுங்க?” எனக் கேட்டாள் ஹாரண்யா.
“அவன் எனக்கு சமமான ஆள் கிடையாது! என்னை விடப் பிரபலமானவனும் இல்லை. அப்படியிருக்கும் போது, சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிற என்னோட மனைவி இரண்டாவது இடத்தில் இருக்கிற ஒருத்தனைப் பேட்டி எடுக்கிறதும், அவன் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிறதும் எனக்குப் பிடிக்கலை ரணு! அதான்!” என்று அவளுக்கு விளக்கினான் பகீரதன்.
“நீங்க ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக யோசிக்கிறீங்க பகீ! அது உங்களுக்கே தெரியலை. ஆங்கரிங் என்னோட வேலை. நான் அதுக்கு விசுவாசமாக இருக்கனும்ன்னு விரும்புறேன். அதனால், என்னை யாரைப் பேட்டி எடுக்கச் சொன்னாலும் எடுப்பேன்! அது எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கலைன்னா மட்டும் தான் அதைச் செய்ய மாட்டேன்!” என்று தீவிரமாக உரைத்தாள் ஹாரண்யா.
“அப்படியா விஷயம்? அப்போ உனக்கு நான் முக்கியமா, உன் ஆங்கரிங் வேலை முக்கியமான்னு கேட்டால் என்ன சொல்லுவ?” என்று கேட்டு வைக்க,
அவளோ,“நானும் அதையே உங்ககிட்ட திருப்பிக் கேட்பேன்! அதுக்கு நீங்க என்னப் பதில் சொல்றீங்களோ, அதே தான் என்னோட பதிலாகவும் இருக்கும்” என நிதானமாக உரைத்தாள் அவனது மனைவி.
அவளைத் தன் புருவத்தை உயர்த்தி மெச்சியவனோ,”நான் சொல்ற அப்பவே சம்மதிச்சிடு ரணு. இல்லைன்னா நீ எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ!” என அவளை எச்சரித்தான் பகீரதன்.
அதற்கு,”அதை அப்போ பார்த்துக்கிறேன். இப்போ எனக்குத் தலைவலி வந்துருச்சு. அதனால் டீ குடிக்கப் போறேன். உங்களுக்கும் கண்டிப்பாகத் தலை வலிக்கும்னு எனக்குத் தெரியும். அதனால் நீங்களும் வந்து காபி குடிங்க” என்றவளிடம்,
“ஷூயர்” என்ற கணவனை அழைத்துக் கொண்டு கீழே போனாள் ஹாரண்யா.
- தொடரும்
Last edited: