எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

❤ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ❤ - கதை திரி

Status
Not open for further replies.

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-01 at 6.40.55 PM.jpeg
அது ஒரு பொன் மாலை பொழுது. சூரியன் தனது கிரணங்களை தனக்குள் மெல்ல இழுத்துக் கொண்டிருக்க கீழ் வானில் இருள் பரவத் துவங்கியிருந்தது. பறவைகள் இரைதேடிவிட்டு தங்களது கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. அவர்கள் வீட்டிற்கு வந்த கார்கள் அனைத்தும் பிரதான வாயிலை கடக்கும் சத்தம் கேட்டதும் அவள் தான் தங்கியிருந்த அவுட்-ஹவுசிலிருந்து அந்த பெரிய பங்களாவை நோக்கி ஓடினாள்.

WhatsApp Image 2025-01-01 at 3.41.19 PM.jpeg

அவள் அந்த வீட்டின் வாயிலை அடைந்தபோது அந்த வீட்டின் தலைவர் வரதராஜன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் செல்லவிருந்தார். மூச்சு முட்ட ஓடி வந்தவள் அவரை அங்கு கண்டதும், "அப்பா......எல்லாமே..நல்லபடியா முடிஞ்சதா? மாப்ளவீட்டுகாரங்க என்ன சொன்னாங்க? நம்ம...ரியாவ அவங்களுக்கு புடுச்சிருக்கா?" என்று வினவினாள். அவள் மூச்சுவாங்குவதை கவனித்த அவர், அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

அந்த பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் அவளை அமரவைத்து அவளருகே தானும் அமர்ந்தார்.

_01f590ac-c3b3-4c47-ab7f-6e5d46a999b1.jpg
அவள் தன்னை ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தபோது, "இவ்வளவு நேரம் நீ எங்க நியதி போன? உன்ன தேடிகிட்டே இருந்தேன். இந்த பங்ஷனுக்கு தேவையான எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சுட்டு நீ எங்கம்மா போன?" என்று விசாரித்தார்.

அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, "நான் தான் அவள இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன்" என்று ஒரு பெண்ணின் அதிகாரக் குரல் கேட்டது.
_cc98a1d8-6c59-4f3b-8b1d-7d311e592b77.jpg

"ஏன் மாலினி இப்படி செஞ்ச? அவளும் நம்ம பொண்ணு மாதிரி தான?" என்று அவர் கேட்கவும், "நீங்க வேண்ணா அப்படி நினைச்சுக்கோங்க, எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. அதோட இவ என் பொண்ணோட பங்க்ஷன்ல கலந்துக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று அவள் தன் மனதுக்குள் இருந்த வெறுப்பை அப்படியே கொட்டினாள்.

அதை கேட்ட நியதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது அவள் தினமும் கேட்கக்கூடிய வார்த்தைகள் தான் என்றாலும் அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நியதியின் முகவாட்டத்தை பார்த்த வரதராஜன், "மாலினி, இனிமேல் இப்படி சொல்லாத. நியதியும் நம்ம வீட்டுபொண்ணு தான். இவா ரியாவோட எல்லா கல்யாண பங்க்ஷன்லயும் கண்டிப்பா கலந்துக்குவா. அண்ட் திஸ் இஸ் ஃனல்" என்று தன்னுடைய இறுதி முடிவைக் கூறினார். அதற்குமேல் நிற்க விருப்பமில்லாமல் மாலினி அங்கிருந்து தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

அவள் சென்றவுடன், "அவள பத்திதான் உனக்கு தெரியும்லமா. அதுனால அவ சொல்றத எதையும் பெருசா எடுத்துக்காத" என்று அவர் கூறவும், "அப்பா, அதவிடுங்க மாப்பிள வீட்ல என்ன சொன்னாங்க அத சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் நியதி கேட்கலானாள். ஒரு மெல்லிய புன்னகை புரிந்தவாறே, "நம்ம ரியாவ அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம். அடுத்த கொஞ்ச மாசத்துலயே கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொல்லீட்டாங்க" என்று அவர் கூறவும் நியதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆனால் அவருடைய முகம் சட்டென வாடியது. அவருடைய வாட்டத்தைக் கண்ட மகள், "என்னப்பா, ஏன் உங்க முகம் வாடி இருக்கு? எல்லாம் நல்லபடியா தான முடிஞ்சது?" என்று வினவினாள்.

_7d274984-c110-42d4-a67d-a063057fd18a.jpg
ஒரு பெரு மூச்சிற்குப் பின், "அதுலாம் நல்லபடியா தான்மா முடிஞ்சது. எனக்கு கவலையே நம்ம ரியாவை பத்திதான். இதுக்கு முன்னால ஸூசைடு அட்டம்ப்ட் பண்ணி, வந்த எல்லா நல்ல சம்பந்தத்தையும் கெடுத்துட்டா. அவங்க எல்லாரும் நம்ம ஸ்டேட்டஸ்கு ஈகுவலா இருந்ததுனால எந்த பிரச்சனையும் இல்ல”

“ஆனா இப்போ வந்துருக்குறது ரொம்ப பெரிய இடம். வர்தன் கார்ப்பரேட் குரூப்ஸோட ஒன் அண்ட் ஒன்லி சி.இ.ஓ மிஸ்டர் ஆரியவர்தன். எல்லா அப்பாவும் தான் பொண்ணுக்கு இவரு மாப்பிளையா வந்துர மாட்டாரான்னு நினைக்குற அளவுக்கு அவர் அவ்வளவு டாலன்டட். ஏதோ ஒரு பார்ட்டீல நம்ம ரியாவை அவரோட பாட்டிக்கு பிடிச்சிப்போனதுனால இப்போ சம்மந்தம் பேசிட்டு போயிருக்காங்க. இது ரியாவுக்கு எவ்வளவு பெரிய லக்குன்னு அவளுக்கே தெரியாது. இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா முடிஞ்சா ரியாவுக்கு மட்டுமில்ல நம்ம கம்பெனியோட மதிப்பு ரொம்ப கூடீரும்”

“அப்படி இல்லாம கல்யாணத்துல பிரச்சனை வந்துச்சுன்னா நம்ம கம்பெனி இருக்குற இடம் தெரியாம போய்டும். அதுனால தான்மா எனக்கு ரியாவை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு" என்று தன்னுடைய முகவாட்டத்திற்கான காரணத்தைக் கூறினார். பின் அவர் நியதியின் கையை பற்றி, "நியதி நீ ரொம்ப புத்திசாலியான பொண்ணு. நீ சொன்னா ரியா கண்டிப்பா கேப்பா. எப்படியாவது ரியாவுக்கு பக்குவமா எடுத்து சொல்லி இந்த கல்யாணத்த நல்லபடியா நடக்குறதுக்கு நீ உதவிசெய்மா" என்று அவளிடம் வேண்டிக்கொண்டார்.

உடனே நியதி, "நீங்க கவலையே படாதீங்கப்பா. எல்லாம் நல்லதே நடக்கும். இந்த கல்யாணத்த நல்லபடியா நடத்திகொடுக்கவேண்டியது என்னோட பொறுப்பு. சரியா?" என்று அவள் கேட்கவும் வரதராஜன் நிம்மதியுற்றவராய் ஒரு புன்னகை புரிந்தார்.

வரதராஜனை சந்தித்துவிட்டு ரியாவின் அறைக்குச் செல்லவிருந்தவளை மாலினி அழைத்ததாக வேலையாள் ஒருத்தி கூறவும், நியதி மாலினியின் அறைக்குச் சென்றாள். கதவை தட்டிவிட்டு அறையினுள்ளே சென்றபோது மாலினி அங்குள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
_33cc0967-11b6-4ca8-a2f6-fb05e6c62865.jpg
நியதி எதுவும் பேசாமல் அவள் முன்னால் சென்று நிற்கவும் மாலினி பேசத் துவங்கினாள், "நான் இப்போ உன்ன இங்க எதுக்கு கூப்பிட்டிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் ரியாவை பத்திதான். அவ கல்யாணம் நல்லபடியா முடியனும். அதுக்கான பொறுப்ப அவர் உங்கிட்ட குடுத்திருக்காருன்னு எனக்கு தெரியும். அவர் வேணும்னா உங்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிட்டு அப்படியே விட்டுறலாம்”

“ஆனா நான் அப்படி கிடையாது, தினமும் ரியா என்ன பண்றா? யார்கூட பேசுறா? எங்க போறான்னு, எனக்கு தகவல் குடுத்துகிட்டே இருக்கணும். சரியா?" என்று தான் அழைத்த காரணத்தைக் கூறினார். "நீங்க கவலையே படாதீங்க அம்மா. இந்த கல்யாணம்..." என்று கூறிக்கொண்டிருந்த நியதியை தன் கையசைவால் நிறுத்தி, "என்ன அம்மான்னு கூப்பிடாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லீருக்கேன். நானா உன்ன பத்து மாசம் சும்மந்து பெத்தேன்? எப்ப பாத்தாலும் அம்மா அம்மாங்குற?" என்று எரிச்சலுடன் கூறினாள்.

நியதி தன் மனதிற்குள் ஊசியாய் இறங்கிய வார்த்தைகளை மௌனமாக கேட்டுவிட்டு, "நீங்க கவலப் படாதீங்க மேடம். கண்டிப்பா இந்த கல்யாணம் நல்லபடியா முடியும். நீங்க சொன்னமாதிரியே தினமும் நடக்குறத உங்ககிட்ட வந்து சொல்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து ரியாவின் அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தபோது ரியா டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு, தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

_f9f7101f-9a10-4b7b-943b-4adb76139da4.jpg
நியதி வருவது தெரிந்ததும் அந்த சிரிப்பு கோபமாக மாறி, "ஏய் நிதி, எனக்கு பங்க்ஷன் நடக்கும்போது நீ இங்க இல்லாம அவுட்-ஹவுஸ்ல என்ன செஞ்சிகிட்டு இருந்த?" என்று கேட்டாள்.

அதற்கு, "நான் ஒரு வேலையா அங்க போயிருந்தேன். அதான்.." என்று நியதி கூறும்போதே, "எனக்கு இங்க பங்க்ஷன் நடக்கும்போது நீ....ஓ இது அம்மாவோட வேலையா?" என்று அவள் கேட்கவும் நியதி 'இல்லை' என்பதுபோல் தலையசைத்தாள். ஆனாலும் ரியா உண்மையை அறிந்தவளாக, "இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. அவங்கள..." என்று கூறியவளை நியதி இடைமறித்து, "அதவிடு, மாப்பிளை எப்படி? உனக்கு பிடிச்சிருக்கா?" என்று விஷயத்திற்கு வந்தாள்.

ரியா எதுவும் பேசாமல் அவள் முகத்தைப் பார்க்கவும், "இல்ல அவர இன்னைக்கு நீ நேர்ல பாத்திருப்ப. அவரோட நிலைமை உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதுதான் கேட்டேன்" என்றாள் நியதி. அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருந்த நியதியைப் பார்த்து லேசாக புன்னகைத்து, "ம்ம் பிடிச்சிருக்கு" என்று ரியா கூறவும் நியதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

உடனே, "அதான பாத்தேன். அவரை எப்படி பிடிக்காம போகும்? அவரு எவ்வளவு பெரிய ஆளு. அவர கல்யாணம் பண்ணிக்க நிறையபேர் ட்ரை பண்ணாலும் அந்த லக் உனக்கு தான் அடிச்சிருக்கு. நீ ரொம்ப லக்கி ரியா. அவரு பிசினஸ்ல..." என்று நியதி ஆரியவர்தனின் புகழை பாட ஆரம்பித்தாள்.

அவளை நிறுத்தி, "போதும் போதும். அவரு உன்னோட ரோல் மாடல்னால ரொம்பதான் புகழ்ற... ஆமா… எல்லாருமே அவங்களோட ரோல் மாடல கல்யாணம் பண்ணிக்க ஆசை படுவாங்க. அவங்கள தவிர வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா கோபமோ இல்ல பொறாமையோ வரும். அப்படி என் மேல உனக்கு ஏதாவது வருதா?" என்று சீண்டும் குரலில் ரியா கேட்டாள்.

"எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. அதுக்கு பதிலா சந்தோஷம் தான் இருக்கு. ஒருவேளை உன்ன தவிர்த்து வேறுயாராவது அவர கல்யாணம் பண்ணீருந்தா அப்படி தோணீருக்குமோ என்னவோ?" என்று பதிலழித்துவிட்டு நியதி கண்சிமிட்டவும், இருபெண்களும் நகைத்தனர். பின் ஒரு நிமிட அவகாசம் கூட கொடுக்காமல் ரியா, நியதிக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.

மிகவும் ஆனந்தமாக இருந்த ரியா நிறைய உணவுகளை ஆர்டர் செய்து உண்டாள்.

_f5d6c45a-0d07-4f8d-8a2e-1cfbb74dfb1c.jpg
அவளையே ஒரு புன்முறுவலுடன் பார்த்தபடி, அங்கிருந்த உணவுகளில் தனக்குவேண்டியவற்றை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் நியதி. "நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நிதி. நீ எவ்வளவு வேணுமோ நல்லா சாப்பிடு. இது என் ட்ரீட்" என்று சாப்பிட்டவாறே கூறவும் நியதி சிரித்துக்கொண்டே, 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

இரு பெண்களும் உண்டுமுடித்ததும் பில்லை கட்டுவதற்காக ரியா தன் பையில் பர்ஸைத் தேடினாள். ஆனால் அது அங்கு இல்லை. உடனே ஜீ-பே மூலமாக பணத்தை செலுத்திவிடலாம் என்று போனை தேடியவளுக்கு அதுவும் அந்த பையினுள் தென்படவில்லை.

_a73d5995-6fd5-45c1-9e06-f87374096138.jpg
விஷயத்தை நியதியிடம் தெரிவித்தபோது, "என்ன ரியா இப்பபோய் இப்படி சொல்ற? பாரு நீ படுத்தின அவசரத்துல நானும் என்னோட போன எடுத்துட்டு வரல. இப்போ என்ன பண்ண?.." என்று நியதி யோசிக்கலானாள்.

அப்போது அவளுக்கு ஏதோ ஒன்று நினைவிற்கு வர அவளது முகம் பிரகாசமானது. அவள் ரியாவிடம், "நீ கவலைப்படாத. நமக்குத்தான் நம்மளோட ‘ஆபத்பாந்தவன்’ இருக்கான்ல" என்று கூறி கண்சிமிட்டினாள். "ஆபத்...ஓ.. வா சீக்கிரம் கால் பண்ணலாம்" என்று கூற, ரிசப்ஷனிலிலுள்ள தொலைபேசியில் யாரையோ தொடர்புகொண்டாள் நியதி.
_01864bed-4d08-4107-b215-908933dfc8de.jpg
அவள் தான் கூறவேண்டியதை கூறிவிட்டு, இருவரும் அந்த நபரின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தனர். ரியா அந்த பில்லை பார்த்தவாறே அமர்ந்திருந்தபோது, "என்னவோ அந்த பில்லுக்கு நீ பணம் கொடுக்கபோறவ மாதிரி அத பாத்துகிட்டு இருக்க?" என்று ஒரு ஆணின் குரல் கேட்க, அந்த திசையை நோக்கி இருவரும் திரும்பினர்.

மாயங்கள் தொடரும்...

 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-04 at 6.45.44 PM.jpeg
வந்தவனைப் பார்த்ததும் இருபெண்களின் முகமும் பிரகாசமடைந்தது. அங்கு ஸ்டைலாக ஓர் இளைஞன் அவர்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-01-04 at 11.46.36 AM.jpeg
அவன் அவர்களருகே வந்து ரியாவின் கையிலிருந்த பில்லை வாங்கிப் பார்த்து, "ஏய், நீ மனிஷி தான? இவ்வளவு ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்க?" என்று அவன் கூறவும் ரியா அசடுவழிய சிரித்தாள். அந்த பில்லிற்கு பணத்தை கட்டிவிட்டு மூவரும் கார் பார்க்கிங்குக்கு வந்தார்கள்.

அப்போது அவன், "ஏய் ரியா, நீ ஒரு கம்பெனி சி.இ.ஓவோட பொண்ணு. வெளிய வரும்போது இப்படியா பர்ஸையும், போனையும் மறந்து வச்சிட்டு வருவ? நானே பாவம், ஒரு கம்பெனில பி.ஏவா வேல பாத்துகிட்டிருக்கேன். பிரண்டுங்கிறதுனால இப்படியா மொளகா அறைப்ப?" என்று கேட்டான். "சாரி சான், ஒரு அவசரத்துல மறந்துட்டேன். நீ ஹெல்ப் பண்ணலைனா வேறயாரு பண்ணுவா சொல்லு?" என்று ரியா கெஞ்சும் குரலில் கேட்டாள்.

உடனே அவன், "எனக்கு சரண்னு அழகா பெயர் வச்சிருக்காங்க. அதைவிட்டுட்டு சான், மான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்க....ஆமா அப்படி என்ன அவசரம் உனக்கு?" என்று விசாரிக்க, "மேடம்க்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சில அதான் கால் தரையில படாம சுத்திகிட்டு இருக்காங்க" என்று நியதி கூறவும் சரணின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அவன் ரியாவிற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருக்கும்போதே, "வா ரியா, கிளம்பலாம். லேட்டானா அம்மா திட்டுவாங்க" என்று நியதி ரியாவைக் கிளப்பினாள். சரண் அவர்களை தடுத்து, "என்னப்பா, நீங்க கூப்பிட்டீங்கன்னு என்னோட வேலைய போட்டுட்டு உங்களுக்காக வந்துருக்கேன். நீங்க என்னன்னா என்ன அம்போன்னு விட்டுட்டு போறீங்க. வந்ததுக்கு கொஞ்சநேரம் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்களேன்" என்று அவன் அப்பாவியாய் தன் முகத்தை வைத்து கேட்டான்.

உடனே ரியா, "ஆமா நிதி, சான் பாவம். நமக்காக வந்திருக்கான்ல அதுக்காகயாவது அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போய் பேசுவோமா?" என்று கூறவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ரியா காரை எடுக்கச் சென்றபோது சரண், "என்ன நிதி, ரியாவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான? இல்லாட்டி இதுக்கு முன்னால பண்ணமாதிரி ஏதாவது..." என்று கேட்க, "இல்ல சான். ரியா ரொம்ப சந்தோஷமா இருக்கா. இதுக்கு முன்னாடி அவ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்ல. அதனால இந்ததடவ எந்த ஒரு பிரிச்சனையும் வராதுன்னு நம்புறேன்" என்று கூறினாள்.

அப்போது ரியா காரை எடுத்துக்கொண்டு வர நியதி அதனுள் ஏறிக்கொண்டாள். அவர்கள் அருகிலிருந்த பூங்காவிற்குச் செல்ல, சரண் தன்னுடைய பைக்கில் அவர்களை பின்தொடர்ந்தான். மூவரும் பூங்காவில் பேசிக்கொண்டிருக்கும்போது சரண் ரியாவினுடைய வருங்கால கணவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
WhatsApp Image 2025-01-04 at 12.09.30 PM.jpeg
"ஆமா ரியா உன்கிட்ட மாட்டின அந்த அப்பாவி மனுஷன் யாரு?" என்று கேட்க அதற்கு நியதி, "வேற யாரு நம்ம ஆரியவர்தன்சார் தான்" என்று கூறினாள். "என்ன ஆரியவர்தன்சாரா? அவரையா கல்யாணம் பண்ணப்போற? வாவ் ரியா, கங்ராஜூலேஷன்ஸ். எவ்வளவு பெரிய பிசினஸ் மேன் அவரு" என்று சரண் ஆச்சரியத்துடன் கூறினான்.

அதை கேட்ட ரியா லேசாக புன்னகைத்தாள். சிறிதுநேரம் பேசிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர். ரியாவும் நியதியும் வீட்டை வந்தடைந்தபோது மாலினி வாயிலில் காத்துக்கொண்டிருந்தாள்.
_f6ac95c6-190e-4a57-8cad-abcecaa4163a.jpg
அவள் ரியாவை உள்ளே அனுப்பிவிட்டு நியதியை வசைபாடத் துவங்கினாள்.

"கல்யாணம் ஆகப்போற பொண்ண கூட்டிகிட்டு இவ்வளவு நேரமா வெளிய சுத்துறது? சீக்கிரம் வீட்டுக்கு வரணும்ங்கிற அறிவு கிடையாது? உன்கிட்ட ஒரு பொறுப்ப கொடுத்தா இந்த லச்சணத்துல தான் வேலபாப்பியா?" என்று அவளை வையத்து துவங்கினாள்.

உள்ளே செல்லாமல் அங்கு நின்றுகொண்டிருந்த ரியா தன்னுடைய தாய் நியதியை பழிப்பது பிடிக்காமல், "அம்மா அவ வீட்டுக்கு போகலாம்னு தான் சொன்னா ஆனா என்னால தான் நேரமாயிருச்சு. தயவுசெய்து அவள வையாதீங்க" என்று கூறினாள்.

ஆனால் மாலினியோ, "ரியா நீ சின்ன பொண்ணு உனக்கு எதுவும் தெரியாது. உள்ள போ" என்று அவளை வலுக்கட்டாயமாக உள்ளே அனுப்பிவிட்டு நியதியின் பக்கம் திரும்பினாள்.

"என்ன மன்னிச்சிருங்க மேடம். இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தான் தங்கியிருக்கும் அவுட்-ஹவுசிற்குச் சென்றாள். தன்னுடைய உடுப்புகளை மாற்றிவிட்டு படுக்கைக்குச் சென்றவள் உடனே உறங்கிவிடவில்லை.
WhatsApp Image 2025-01-04 at 3.07.20 PM.jpeg
'தான் முதன்முதலில் இந்த வீட்டிற்கு எவ்வாறு வந்தோம்' என்ற எண்ணத்தை அவளது மனம் உறுப்போடத் துவங்கியது. இந்த வீட்டிற்கு அவள் வருவதற்கு முக்கியமான காரணமே ரியாதான். கல்லூரியில் படிக்கும்போது ஒரு பிரச்சனையிலிருந்து ரியாவை நியதி காப்பாற்றியதால் அவர்களுக்கிடையில் நட்பு உண்டாயிற்று. அந்த நட்பின் விளைவாக ரியாவின் நடவடிக்கைகளில் நல்ல வேறுபாடு தெரியஆரம்பித்தது.

அந்த மாற்றங்களுக்கு நியதி தான் காரணம் என்று தெரிந்ததும் வரதராஜனுக்கு அவள்மீதான மதிப்பு கூடியது. அவளுக்கு யாருமில்லாத காரணத்தால் தன்னுடைய வீட்டிலேயே நியதியை தங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இவையனைத்தும் மாலினிக்குப் பிடிக்கவில்லை. அவளை எவ்வளவுதான் சமாதானப் படுத்தினாலும் நியதி இந்த வீட்டில் தங்குவதை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஆனால் வரதராஜனுக்கும் நியதியை விட்டுக்கொடுக்க மனமில்லை. அதனால் நியதியை தங்களது அவுட்-ஹவுசில் தங்கவைத்து அவளுக்கான அனைத்து தேவைகளையும் அவர் பார்த்துக் கொண்டார்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ரியா மாடலிங் துறையை தேர்ந்தெடுக்க, நியதியை தனக்கு பி.ஏ.வாக நியமித்தார் வரதராஜன். ஒரு முறை அலுவலகத்தில் நடக்கவிருந்த பணமோசடியை நியதி தடுத்து நிறுத்தியபோது அவள் மீது வரதராஜனுக்கு மேலும் நம்பிக்கை கூடியது.

வரதராஜன் செய்த உதவிக்கு நியதியும் நன்றியுள்ளவளாகவே இருந்தாள். தன்னுடைய நன்றியை செலுத்த சந்தர்ப்பத்தை தேடியவளுக்கு ரியாவின் திருமணம் ஒரு வாய்ப்பை அளித்தது. வரதராஜனுக்கு இந்த திருமணம் எவ்வளவு முக்கியமானது என்று நன்றாகத் அறிந்திருந்தாள். அதனால் இந்த திருமணத்தை நல்லபடியாக நடத்திவைக்கவேண்டுமென்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாள். இவ்வாறு தனக்குள் ஓடிய எண்ணங்களை நினைத்தவாறே தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை, விரைந்து அலுவலகத்திற்கு தயாராகி சாப்பிடுவதற்காக அவுட்-ஹவுஸிலிருந்து அந்த பெரிய வீட்டிற்குச் சென்றாள். அங்கு அமர்ந்திருந்த வரதராஜன் நியதி வந்ததும் ஒரு புன்முறுவல் செய்து வரவேற்றார்.

"குட் மார்னிங் நியதி. நல்லா தூங்குனியா?" என்று அவளை விசாரித்ததற்கு அவள் 'ஆம்' என்று புன்முறுவலுடன் தலையசைத்து, டைனிங் டேபிளில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
_63ea9fbf-d3f5-4eb0-a437-9aa02748b9bd.jpg
சிறு தயக்கத்திற்குப் பின், "நேத்து ரியாகிட்ட பேசினியா நியதி? அவ என்ன சொன்னா?" என்று வினவினார். "அப்பா, நம்ம ரியாவுக்கு அவர ரொம்பவே பிடிச்சிருக்கு. கல்யாணம் பிக்ஸான சந்தோஷத்துல அவ நேத்து எனக்கு ட்ரீட்டே குடுத்தா. இப்படி ரியா சந்தோஷப்பட்டு நான் பாத்ததே கிடையாது. அதனால கவலையேபடாதீங்க, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்" என்று மகிழ்ச்சியுடன் உறுதியாகக் கூறினாள்.

அவள் வார்த்தைகளில் நிம்மதியுற்றவராய், "ரொம்ப சந்தோஷம்மா. இப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அப்போ அடுத்த வேலைய ஆரம்பிப்போம். இன்னும் ரெண்டு வாரத்துல என்கேஜ்மென்ட் வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அடுத்து..." என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே, "என்கேஜ்மென்ட்னா ஷாப்பிங் போகணும்லபா" என்று தூரத்திலிருந்து ரியாவின் குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

ரியா படியிலிருந்து புன்னகையுடன் இறங்கியவாறே, "அப்போ நானும் நிதியும் சேந்து ஷாப்பிங் போகப்போறோம். அதுனால இன்னைக்கு நிதி உங்ககூட ஆஃஸ்கு வரமாட்டாபா" என்று கூறினாள்.

ரியா இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள் என்பதே வரதராஜனுக்கு மிகப்பெரிய நிம்மதி. அதனால் அவரும் எந்தஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. "ஆனா ஆஃஸ் வேல நிறைய இருக்கே.." என்று நியதி இழுத்தபோது, "பரவாயில்ல நியதி. இன்னைக்கு ஒரு நாள் தான. அத அருண் பாத்துக்குவான்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அந்தசமயம், "நீ எதுக்கு ரியா அவள கூப்பிட்ற. நான் வர்றேன் உன்கூட" என்று கூறியவாறு மாலினி அங்குவந்து சேர்ந்தாள். ஆனால், "அம்மா நீங்க ஓல்டு பீஸ். உங்களுக்கு இப்பவுள்ள டிரென்ட் தெரியாது. நிதிதான் இதுக்கு சரியான ஆளு. வா நிதி கிளம்பலாம்" என்று கூறி அவளை ரியா அழைத்துச் சென்றாள். அந்த ஒரு வாரம் முழுவதும் ஷாப்பிங்கில் சென்றது.

ரியாவிற்கு கார் ரேஸிங் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் கார் ஓட்டுவதில் மிகவும் கில்லாடி. எந்த ஒரு போட்டியையும் விடாமல் அனைத்திலும் பங்குகொள்வாள். அப்படியிருக்கையில் ஒரு நாள் பெண்கள் இருவரும் தங்களுடைய அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது ரியாவிற்கு அவளுடைய தோழன் ஒருவனிடமிருந்து கார் ரேஸிங்கில் பங்குகொள்ளுமாறு அழைப்பு வந்தது.

இதை நியதியிடம் தெரிவித்தபோது, "இல்ல ரியா வேண்டாம், வேண்டவே வேண்டாம். இன்னும் ஒரு வாரத்துல உனக்கு என்கேஜ்மென்ட். இப்போ போறது சரியா இருக்காது. அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க. வேண்டாம் ரியா நான் உன்ன போகவிடமாட்டேன்" என்று உறுதியாகக் கூறினாள். ஆனால் ரியாவோ, "ப்ளீஸ் நிதி, இது தான் கடைசி தடவ. கல்யாணம் ஆகிடுச்சினா என்னால இதல்லாம் பண்ணவே முடியாது. நான் போறேன் ப்ளீஸ்.." என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். ஆனால் நியதி மறுத்துவிட்டாள்.
_ca99b583-8e95-4606-8ad4-a5046a64d725.jpg
ரியா எவ்வளவுதான் கெஞ்சினாலும் நியதி அவளை விடவேஇல்லை. எப்படியாவது அங்கு செல்லவேண்டுமென்று நினைத்த ரியா, கீழே சென்று தந்தையை பார்க்கப்போவதாகக் பொய் கூறிவிட்டு தன்னுடைய காரில் யாருமறியாவண்ணம் அந்த ரேஸ் நடக்கும் இடத்திற்கு விரைந்தாள். வெகுநேரமாகியும் ரியா வராததால் அவளைத் தேடி கீழே சென்ற நியதிக்கு எங்கு தேடியும் அவள் தென்படவில்லை.

உடனே வேலையாட்களை விசாரித்தபோது அவள் காரில் வெளியே சென்றதாகக் கூறவும் நியதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பதறிப்போனாள். இந்த விஷயம் மாலினிக்கு தெரியவருவதற்குள் எப்படியாவது ரியாவை வீட்டிற்கு அழைத்துவரவேண்டுமென்று நியதி விரைந்து அந்த ரேஸ் நடக்குமிடத்திற்குச் சென்றாள்.

அங்கு அப்போதுதான் ரேஸ் துவங்கியிருந்தது. ரியாவும் அதில் கலந்துகொண்டு வேகமாக தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
_3004bb71-45b4-4666-86e6-c63bf6685471.jpg
நியதி ரியாவின் பாதுகாப்பிற்காக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக ரியாவின் கார் லேசாக தடுமாறி மற்றொரு காரில் மோதியது. அதைப் பார்த்ததும் நியதி பதறிப் போனாள்.

உடனே அங்கிருந்த அனைவரும் ரியாவையும் அந்த அடுத்த காரிலுள்ள நபரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் ரியாவின் தலையில் எந்த அடியும் ஏற்படவில்லை. ஆனால் அவளுடைய கை கால்களில் பலத்த காயங்கள் இருந்தன. ரியாவின் பெற்றோருக்கு இதை தெரிவித்தபோது அவர்களும் பதறியடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர்.

ரியாவிற்கு உள்ளே சிகிச்சை நடக்க நியதி கண்கலங்கியவாறே அந்த அறையின் வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

அங்கு பதற்றத்தில் வந்த மாலினி உடனே நியதியின் மீது கோபம் கொண்டவளாக கத்தத் துவங்கினாள். ஆனால் வரதராஜன் அவளை நிறுத்தி சமாதானம் செய்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவரிடம் ரியாவின் உடல்நிலையை பற்றி விசாரித்தனர்.

எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் கூறவும் அங்கிருந்த அனைவரும் நிம்மதியுற்றனர். மருத்துவருடன் பேசியவாறே வரதராஜன் சென்றுவிட, மாலினி நியதியை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு தான் மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். நியதி சரணிற்கும் இந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்தபோது தானும் அங்கு வந்து ரியாவைப் பார்க்க வருவதாகக் கூறினான்.

நியதி அந்த கண்ணாடிக்கதவின்வழியே பார்த்தபோது ரியா மயக்கத்திலிருந்து எழுந்திருந்தாள்.
_0fd6215c-8cbb-4ba3-8c07-8001744d6f4a.jpg
அவர்களின் உரையாடலை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நியதிக்கு, "மத்தவங்க பேசுறத ஒட்டுகேக்குறது தப்புன்னு உனக்கு தெரியாதா?" என்று யாரோ கூறுவது கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அங்கு அவன், அந்த ஆரியவர்தன் லேசாக புன்னகைத்தவாறு தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-04 at 3.47.27 PM.jpeg
மாயங்கள் தொடரும்...

தங்களுடைய கருத்துக்களை இங்கு பகிரவும் சகோஸ்...
 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-08 at 4.16.13 PM.jpeg
அளவாக வெட்டப்பட்ட கேசம், நீண்ட புருவங்கள், கூரிய கண்கள், எப்போதும் லேசான புன்னகையை அணிந்த உதடுகள், அகண்ட மார்பு, நீண்ட கை மற்றும் கால்கள். அவன் அந்த ஆட்டோமேட்டிக் வீல்சேரில் அமர்ந்திருந்தபோதும் அவனுடைய உயரம் நியதியின் தோள் அளவிற்கு இருந்தது.
WhatsApp Image 2025-01-04 at 3.47.27 PM.jpeg
அவனுடைய கால்கள் கருப்புநிற துணியால் மூடப்பட்டிருந்தது. அவனுடைய கூறிய பார்வையால் மற்றவர் மனதின் அடியாழம்வரை சென்று ஆராய்ந்துவிடுவான். ஆனால் அவனுடைய கண்கள் அவனது மனதிலுள்ள எண்ணங்களை யாரும் அறியாவண்ணம் ரகசியமாய் பாதுகாக்கும்.

மொத்தத்தில் 'ஆணழகன்' என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். ஆரியவர்தனை மேகஸின் முதல் பக்கங்களிலும் செய்தித்தாள்களிலும் பார்த்துவந்த நியதிக்கு அவனை நேரில் பார்த்ததும் சற்று மெய்மறந்து தன்னையறியாமல் அவனை பார்த்தவாறே நின்றாள்.

விரைவில் நிதானத்திற்கு வந்தவள், "சாரி சார்" என்று கூறி அவன் அந்த அறைக்குள் செல்வதற்காக கதவை திறந்தவிட்டாள்.

அவர்கள் இருவரும் உள்ளே செல்ல ஆரியவர்தனின் செக்ரட்டரியான பார்கவ் அறையின் வெளியே நின்றுகொண்டான். அறையின் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும் உள்ளிருந்த பெண்கள் வாயிலைப் பார்த்தனர்.

வந்தவன் யார் என்று தெரிந்ததும் மாலினி விரைந்து அவனை வரவேற்றாள். ஆரியவர்தன் ரியாவின் உடல்நிலையை பற்றி அவளிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, "நியதி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு அதுனால நீயும் அங்க வந்து உதவி செய்ய வா" என்று கூறி நியதியை மாலினி அந்த அறைக்கு வெளியே அழைத்துச் சென்றாள்.

வெளியே வந்ததும், "நியதி, உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே தெரியாதா? அவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க. அவங்களுக்குள்ள தனியா பேச நிறைய இருக்கும். நீ எதுக்கு அங்க நிக்கிற? உனக்கு தெரியாதா அங்கயிருந்து வெளியவரணும்னு" என்று தாழ்ந்த குரலில் நியதியை திட்டிக்கொண்டிருந்தாள்.

நியதி எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள். அங்கு நடந்த எதையும் பார்க்காமல் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த பார்கவின் காதுகளுக்கு மாலினியின் வசைமொழி மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

மருத்துவரை சந்திக்கச் சென்ற வரதராஜன் ஆரியவர்தன் வந்திருக்கும் செய்தியை அறிந்து, ரியாவின் அறையை நோக்கி விரைந்தார். அப்போது அந்த அறையிலிருந்து அரியவர்தனும் வெளியே வர, "வாங்க மிஸ்டர் வர்தன்....இப்படி நடக்கும்ன்னு நாங்க நினைச்சி பாக்கல. ரியா...." என்று அவர் கூறும்போதே, "இட்ஸ் ஓகே அங்கிள். ரியா ரெக்கவர் ஆகட்டும். இப்போதைக்கு என்கேஜ்மெண்ட போஸ்ட்-போன் பண்ணுவோம்" என்று கூறினான்.

WhatsApp Image 2025-01-08 at 1.30.35 PM.jpeg
"நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அப்படியே செஞ்சிருவோம்" என்று வரதராஜனும் ஒப்புக்கொண்டார். ஆரியவர்தன் முன்னே செல்ல பார்கவ் அவனைத் தொடர்ந்தான்.

வழியில் நின்றுகொண்டிருந்த நியதியைப் பார்த்து, "உன் ஃரண்ட நல்லா பாத்துக்கோ" என்று ஆரியவர்தன் கூறிவிட்டுச் சென்றான். ரியா விரைவில் குணமடைய நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன.

ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதியின் ஆலோசனைப்படி நிச்சயதார்த்தவிழா வர்தன் காம்பௌண்டிலுள்ள 'பார்ட்டி ஹாலில்' நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

விழா நடக்கும் நாளும் வந்தது. ரியாவும் நியதியும் ஒரு காரில் செல்ல, வரதராஜனும் மாலினியும் மற்றொரு காரில் சென்றார்கள்.

அவர்கள் வர்தன் காம்பௌண்டிற்குள் நுழைந்தபோது 'ரூட் மேப்' ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை பார்த்தபோதுதான் ஆரியவர்தனின் எவ்வளவு செல்வவளம் படைத்தவன் என்று தெரியவந்தது. விழாவிற்கு வரும் விருந்தினர்கள் வழி தவறிவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே பாடி-காட்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் வரதராஜன் குடும்பத்தார் நீண்ட சாலையில் பயணித்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டிருந்தன. அந்த சாலையிலிருந்து இடதுபக்கம் ஒரு பாதை பிரிந்தது. அது 'வர்தன் பேலஸ்' அதாவது ஆரியவர்தன் வசிக்கும் இடத்திற்குச் செல்லும் வழி.

WhatsApp Image 2025-01-08 at 1.42.10 PM.jpeg
அங்கு யாரும் செல்லாவண்ணம் ஒரு கேட் போடப்பட்டிருந்தது. அதே சாலையில் இன்னும் சற்று தூரத்தில் பயணித்தபோது வலப்புறம் மற்றொரு சாலை பிரிந்தது. அங்கு 'வர்தன்ஸ் மினி ஃரஸ்ட்' என்று செல்லமாக அழைக்கப்படும் அவனுடைய பிரம்மாண்டமான தோட்டம் அமைந்திருந்தது.
WhatsApp Image 2025-01-08 at 1.45.25 PM.jpeg
மேலும் பயணித்தபோது அவர்கள் செல்லவேண்டிய இடமான 'பார்ட்டி ஹவுஸ்' வந்தது. வர்தன் வீட்டில் எந்தஒரு பார்ட்டி என்றாலும் அங்கு தான் வைத்து கொண்டாடப்படும்.
WhatsApp Image 2025-01-08 at 1.48.27 PM.jpeg
வழியில் வரும்போது அங்கிருந்த அனைத்தையும் ரியாவும் நியதியும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

அது மாலைநேரம் என்பதால் அந்தஇடம் மிகவும் அழகாக இருந்தது. 'பார்ட்டி ஹவுசிற்குள்' நுழைத்த வரதராஜன் குடும்பத்தாரை முதலில் வரவேற்றது ஆரியவர்தனின் பாட்டியான சந்திரமதி.

நிச்சயதார்த்தத்திற்கான அந்த இடம்முழுவதும் பூக்கள் மற்றும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாக காணப்பட்டது.

ரியாவும் நியதியும் அனைத்து ஏற்பாடுகளைப் பார்த்து பிரம்மித்துப்போயிருந்தனர். அதை பார்த்த சந்திரமதி,

"என்ன ரியா அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டபோது, "ரொம்ப நல்லா இருக்கு பாட்டி. ரியலி அமேசிங்" என்று தான் கண்டு பிரம்மித்ததை வாயாரப் புகழ்ந்தாள். அப்போது ஆரியவர்தனும் தன்னுடை செக்ரெட்டரி பார்கவுடன் அங்குவந்து சேர்ந்தான்.

விழாவின் நாயகனான ஆரியவர்தன் பிளாக் டக்சிடோவிற்கு பொருத்தமான டையும், ஷூவும் அணிந்து மாப்பிள்ளைக்கே உரிய லக்ஷணங்களுடன் மிடுக்காகக் காணப்பட்டான்.

WhatsApp Image 2025-01-08 at 1.56.57 PM.jpeg
அவன் வீல்சாரில் அமர்ந்திருந்தபோதும் அவனுடைய கம்பீரம் சற்றும் குறையவில்லை. அவனையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த நியதி சட்டென நிதானத்திற்கு வந்தாள். விருந்தினர்களின் வருகை அதிகரித்ததும் விழா துவங்கியது.

விழாவின் நாயகனான ஆரியவர்தன் வீல் சாரில் மேடைக்குச் சென்றான். அவனுடைய குடும்பத்தில் அவனுக்கென்று இருப்பது அவனுடைய பாட்டி ஒருவர் மட்டுமே. அவரும் அவனுடன் சேர்ந்து அந்த மேடையில் நின்றார்.

பின் ரியாவும் அவளுடைய குடும்பத்தாரும் மேடையை நோக்கிச் செல்ல இருந்தனர். அப்போது மாலினி நியதியை ஒரு கையசைவால் அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் மேடைக்குச் சென்றாள்.

ரியா நியதியைப் பற்றி விசாரித்தபோது, "ஏதோ போன் பேசணும்னு போயிருக்கா. இப்போ வந்திருவா" என்று பொய் கூறினாள். விழாவின் நாயகன் மற்றும் நாயகி ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். இவையனைத்தையும் நியதி தொலைவிலிருந்து ரசித்திகொண்டிருந்தாள்.

நிச்சியதார்தம் முடிந்ததும் அனைவரும் ரியா மற்றும் ஆரியவர்தனுக்கு மேடையேறி வாழ்த்து தெரிவித்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டே நின்ற நியதியிடம் மதுபோதையில் ஒருவன், "ஹே...சுவீட்டி...நீ ரொம்ப அழகா இருக்க" என்று வாய்உளற பேசினான். அவனை ஒரு எரிச்சல் பார்வை பார்த்துவிட்டு அங்கு நிற்க பிடிக்காமல் வேகவேகமாக நகர்ந்தாள்.

ஆனாலும் அவன் அவளை விடாமல் பின்தொடர்ந்தான். "என்ன...சு..வீட்டி இப்படி பயப்படுற. கம் ஹியர்.." என்று அவளை அழைத்தான். அவன் ஒவ்வொரு அடியும் முன்னெடுத்துவைக்க நியதி பின்னோக்கி நகர்ந்தாள்.

அப்படியே நகர்ந்தவள் பின் நின்ற நபரை பார்க்காமல் அவர்மீது இடித்துகொண்டாள். இடித்ததில் தடுமாறி விளப்போனவளை இரு கைகள் தாங்கி பிடித்தன. நியதி ஆச்சரியத்துடன் பார்க்கவும் அவன் அவளை நிறுத்தினான்.

அப்போது அவள் பயத்துடன் தன்னை துரத்திக்கொண்டுவந்தவனைப் பார்த்தாள். அவனும் அவள் பார்த்த திசையில் தன் பார்வையை செலுத்தியபோது விஷயத்தை அறிந்துகொண்டான்.

"மிஸ்டர் ராஜீவ் நீங்க எங்க இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியும்ல? இங்க நடந்த விஷயம் மட்டும் ஆரியவர்தனுக்கு தெரிஞ்சா உங்களோட நிலைமையும் உங்க பிஸினெஸ்ஸோட நிலைமையும் என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியுமா? இங்க இங்க நீங்க கெஸ்டுங்கறத மறந்துராதீங்க" என்று அவனை மிரட்டுவதுபோல் கூறிவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த மெய்க்காப்பாளர்களைப் பார்த்து, "காட்ஸ்! சார்கு போதைய தெளியவைங்க" என்று ஆணையிட்டான்.

உடனே அந்த ராஜீவை அங்கிருந்து அவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பின் அவன் நியதியின் பக்கம் திரும்பி, "ஐ அம் ரியல்லி சாரி. இனிமேல் இப்படி நடக்காது" என்று மன்னிப்பு கேட்டான். உடனே அவள், "தாங்க யூ" என்று நன்றி தெரிவிக்க அவன் லேசாக புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் போகும் திசையை பார்த்துக்கொண்டே நின்றிருந்த நியதியின் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள். யார் என்று திரும்பிப்பார்த்தபோது, "நீ என்ன நிதி எப்போ பார்த்தாலும் தொலஞ்சி போய்டுற? வா என் கூட" என்று ரியா அவளை தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஆரியவர்தன் தனக்கு நெருக்கமான ஒரு நபரை வரதராஜன் குடும்பத்தாருக்கு அறிமுகப் படுத்துவதாகக் கூறவும் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருத்தனர்.

"பார்கவ் அவனுக்கு சீக்கிரம் கால் பண்ணு" என்று அரியவர்தன் ஆணையிடவும், "பண்ணீட்டேன் சார். வந்துட்றேன்னு சொன்னாரு" என்று கூறினான். அப்போது, "சாரி எல்லாரையும் வெயிட் பண்ணவச்சதுக்கு.." என்று ஒரு குரல் கேட்டது. அவன் வேறுயாருமல்ல நியதியை அந்த ராஜீவிடமிருந்து காப்பற்றிய அதே நபர்.

அவன் ஆரியவர்தனின் அருகில் சென்று நிற்க, "திஸ் ஐஸ் ரஞ்சித். மை பெஸ்ட் ஃரெண்ட். என்னோட ஃமிலி மெம்பர்" என்று அறிமுகப்படுத்தினான். நியதி ஆச்சரியத்தோடு 'ஓ அப்போ இவருதான் ரஞ்சித் சாரா' என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

நியதி ரஞ்சித்தைப் பார்த்ததில்லை என்றாலும் ஆரியவர்தனைப் பற்றியசெய்திகளை சேகரிக்கும்போது ரஞ்சித்தின் பெயரை கேள்விப்பட்டிருக்கிறாள்.

அதன் பின் அங்கு அனைவரும் நடனமாடத் துவங்கினர். நியதி எப்போதும் பணக்காரச் சூழலை தவிர்த்துவிடுவாள். அனைவரும் நடனமாடச்சென்றபிறகு அங்கு மேலும் நிற்க பிடிக்காமல் வெளியேறினாள்.

வெளியேவந்தவளின் கண்களுக்கு அந்த பரந்த புல்வெளி தெரிந்தது. ஆங்காங்கே அமர்வதற்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து நிலவை ரசிக்கத் துவங்கினாள்.

_1897d501-1943-4db3-b2eb-0805921ed072.jpg
அன்று முழுநிலவு என்பதால் அந்த வட்டநிலா கருப்பு வெல்வெட் துணியில் வெள்ளி தட்டை வைத்ததுபோல் அழகாக காட்சியளித்தது.

மேலும் அங்கு வீசிய தென்றல் காற்றும், நிசப்தமாக இருக்கும் அந்த இடமும் அவளுடைய மனதிற்கு அமைதியைக் கொடுத்தது. தன்னுடைய கண்களை மூடியவாறு அந்த தென்றலை அனுபவித்தாள்.

அப்போது ஆரியவர்தன் இந்த விழாவிற்காக தயாராகி வந்த காட்சி அவளுடைய மனதில் ஓடியது. சட்டென தன் கண்களைத் திறந்தாள். ஏன் தனக்கு இவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்கும்போதே, "மேடம்க்கு நான் பண்ண அரேஞ்மென்ட்ஸ் பிடிக்கலையா? அதான் இங்க இருக்கீங்களா?" என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது ஆரியவர்தன் தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சாரில் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

அவன் அவளருகில் வந்து நிற்கவும், "அப்படிலாம் இல்ல சார். ரொம்ப நல்லா இருக்கு....எனக்கு இயற்கைன்னா ரொம்ப பிடிக்கும். அதான் பாக்கலாம்னு வெளியவந்தேன். நீங்க..." என்று அவள் கேட்கவும், "எனக்கு பார்ட்டினாலே அலர்ஜி. கொஞ்சம் ஃரெஷ் ஆகிட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று சாதாரணமாகக் கூறினான்.

பின் அங்கு ஒரு அமைதி நிலவியது. ஆரியவர்தனை நேரில் சந்திக்கும்போது பிஸினெஸைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்று நியதி எண்ணியதுண்டு. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தும் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.

'என்ன பேசுவது?' என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து கேள்வி வந்தது. "நீ என்னோட பெரிய ரசிகைன்னு எனக்கு ஒரு நியூஸ் வந்ததே.." என்று அவன் கூறவும், 'போச்சுடா ரியா சொல்லீட்டாளா. இவளுக்கு வேற வேலையே இல்ல' என்று தன் மனதிற்குள் ரியாவை செல்லமாகக் திட்டினாள்.

அவள் 'ஆம்' என்பதுபோல் அசடுவழிய தலையசைக்கவும், "அப்போ உனக்கு என்னோட பிசினஸ் ஸ்ட்ராடஜில எது ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லு" என்று அவளிடம் கேட்டான். அவ்வளவு தான், நியதி தன் மனதில் அவனைப் பற்றி பாராட்டி சொல்லநினைத்த அனைத்தையும் மடைதிறந்த வெள்ளம்போல் கூறலானாள்.

WhatsApp Image 2025-01-08 at 4.07.47 PM.jpeg
அவன் தன்னுடைய தொழிலில் பயன்படுத்தும் அனைத்து யுக்திகள், ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் அவன் பேசியவை, மேகஸினில் அவனைப் பற்றி படித்தது என்று அவன் இந்த துறையில் முதன் முதலில் கால் எடுத்துவைத்ததிலிருந்து இன்றுவரையிலான அனைத்து செய்திகளையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.

அவளுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருந்தவனுக்கு ஒரு சில இடம் வியப்பாகவும், வேறு சில இடத்தில் பெருமையாகவும் இருந்தது. அவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு ஏதோ தோன்ற தன்னுடைய பேச்சை நிறுத்தினாள்.

"வாவ்! ஃண்டாஸ்டிக்! என்ன பத்தி எனக்கே தெரியாத பல விஷயம் நீ சொல்லும்போதுதான் எனக்கு தெரியுது. ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ம்ம்.....இன்டெரெஸ்ட்டிங்.....வெரி இன்டெரெஸ்ட்டிங்..." என்று அவளைப் பாராட்டினான்.

அப்போது, "சார் உங்கள பாட்டி கூப்டாங்க" என்று அவனுடைய செக்ரேட்டரி பார்கவ் அங்கு வந்தான். உடனே அவன், "இட் வாஸ் நைஸ் டாக்கிங் வித் யூ மிஸ் நியதி. வில் மீட் சூன்" என்று கூறிவிட்டு அவன் தன்னுடைய வீல்சேரில் செல்ல பார்கவ் அவனைப் பின்தொடர்ந்தான்.

விழா முடிந்ததும் வரதராஜன் குடும்பத்தார் தங்களது வீட்டிற்குத் திரும்பினர். ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி, ரியாவிற்காக நிறைய பரிசுகளையும் அனுப்பிவைத்தார்.

அவர்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, "நியதி, இன்னைக்கு நிறையபேரோட கண்ணு உன்மேலதான் இருந்தது. என்ன…யாராவது சிக்குனாங்களா?" என்று குறும்புச்சிரிப்புடன் கேட்டாள். அதற்கு, "வாய மூடு ரியா" என்று அவள் செல்லமாக அதட்டவும் அங்கு சிரிப்பலை பரவியது.

_c5dd203c-f09b-4c09-8cc0-0d2dc4f46004.jpg
அடுத்து திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. வரதராஜன் தன்னுடைய விருந்தினர்களை தங்கவைக்க ரிசார்ட்டில் ரூம் புக் செய்ய திட்டமிட்டிருந்தார். அந்தவேலையை முடிக்க நியதியை அந்த ரிசார்டிற்கு அனுப்பிவைத்தார்.

அப்போது, "அப்பா எனக்கும் வீட்லயே இருக்க போரடிக்குது. நானும் அவகூட போயிட்டு வரேன்" என்று ரியா கூற இருவரும் அங்கு சென்றனர். ரூம்களை புக் செய்துவிட்டு சற்று இளைப்பாறுவதற்காக ஜுஸ் குடிக்க எண்ணி அந்த ரிசார்ட்டிலுள்ள ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

அந்த இடத்திலிருந்து பார்த்தால் நீச்சல் குளம் நன்றாக தெரியும். தற்செயலாக நீச்சல் குளத்தின் பக்கம் நியதியின் கண்கள் சென்றபோது அவள் அதிர்ந்துபோனாள். ரியாவை அழைத்து காட்டியபோது அவளும் அதிர்ச்சியடைந்தாள்.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-11 at 4.27.16 PM.jpeg
அங்கு மாயா ஒரு ஆடவனுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் வேறுயாருமல்ல சரணின் உயிருக்கு உயிரான காதலி. எப்போதும் சுடிதார் அணிந்து, கூந்தலைப் பிண்ணி, நிறைய பூவைத்து அழகாக காட்சியளித்த மாயா இன்று தன்னுடைய உடலமைப்பு தெரியுமளவிற்கு இறுக்கமான நீச்சலுடையை அணிந்திருந்தாள்.

அதுமட்டுமல்லாமல் அங்குள்ள ஒருவனுடன் கைகோர்த்துக் கொண்டு மார்பில் சாய்ந்தவாறு நீச்சல் குளத்தில் அமர்ந்திருந்தாள். அவர்களை யார் பார்த்தாலும் அனிச்சை செயலாக தங்களது தலையை தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு அவர்களது செய்கைகள் இருந்தன. இந்த நெருக்கமே அவர்களுக்குள் என்ன உறவு இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டியது. அதனை பார்க்க சகிக்காமல் ரியாவும் நியதியும் தங்கள் பார்வையை வெறுப்புறம் திரும்பிக்கொண்டனர்.
_ab562c25-1677-42da-9310-898cc2417939.jpg
"என்ன நிதி இந்த மாயா நம்ம சரணவிட்டுட்டு வேற எவன்கூடயோ சுத்துறா"

"அது வேறயாரோ இல்ல ரியா. சாகர் கன்ஸ்ட்ரக்ஷன்சோட சி.இ.ஓ அஷ்வத்"

"ஓ...அப்போ இவ பணத்துக்காக ஒரே நேரத்துல பலபேரோட சுத்திகிட்டு இருக்காளா? நம்ம சரண் பாவம் இவள நம்பி ஏமாந்துட்டு இருக்கானே"

"ஆமா ரியா. நான் இவள சாதாரணமா எடைபோட்டுடேன். எப்போ நம்ம சரணையே ஏமாத்துறான்னு தெரிஞ்சதோ இனிமேல் நான் பொறுத்துக்கவே மாட்டேன்" என்று கண்கள் சிவக்க கோபத்துடன் கூறினாள்.

"இந்த சதிகாரிய பத்தி எப்படியாவது சரணுக்கு சொல்லியே ஆகணும். உடனே அவனுக்கு கால் பண்ணு” என்று ரியா கூறவும் நியதி அவனை தன் கைபேசி மூலம் அழைத்தாள்.
அன்று காலையில்தான் தன்னுடைய அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்த சரண், வீடு திரும்பியிருந்தான். அலுப்பின் காரணமாக ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தவன் ரியாவின் நிச்சயத்திற்கு வராத காரணத்தால் அவளை சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக அவளிருக்கும் இடத்தை விசாரிக்க தன் கைபேசியை எடுத்தான்.
அப்போது 'என் ஃரெண்டப் போல யாரு மச்சான்' என்று அவனுடைய அழைப்புமணி அடிக்க புன்னகைத்தவாறே, "நானே உன்ன கால் பண்ணனும்னு நினச்சேன் பட் நீயே கால் பண்ணீட்ட. சொல்லு என்ன விஷயம்?" என்று கேட்டான்.
WhatsApp Image 2025-01-11 at 3.42.00 PM.jpeg
ஆனால் இங்கு மாயாவின் மேல் இருக்கும் கோபத்தை தன்னுள் அடக்கியவாறு, "நான் சொல்ற இடத்துக்கு வரியா சான்?" என்று சற்று இறுக்கமான குரலில் நியதி கேட்டாள்.

உடனே அவன், "என்ன வாலு வழக்கம்போல எங்கயாவது மாட்டிகிட்டீங்களா?" என்று புன்னகையுடன் கேட்க, "அதெல்லாம் இல்ல இப்போ நீ உடனே கிளம்பி ஸீ-ஷோர் ரிஸார்டுக்கு வா" என்று கூறினாள். ஆச்சரியத்துடன், "ஓ, இப்போ ரெஸ்டாரண்ட்ட விட்டு ரிசார்ட்டு லெவெலுக்கு போயாச்சா? சரி இரு இப்போ உடனே வர்றேன்" என்று கூறி தன்னுடைய அழைப்பை துண்டித்தான்.

அவன் வழியில் வரும்போது பொக்கே ஒன்றை வாங்கி அதில் 'சாரி' என்று சிறு காகிதத்தில் எழுதி வைத்திருந்தான்.
WhatsApp Image 2025-01-11 at 3.54.22 PM.jpeg
நியதி இருக்கும் இடத்தில் ரியாவும் இருப்பாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தன் செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாக அந்த பூச்செண்டை ரியாவுக்காக வாங்கினான்.

அவன் அந்த ரிசார்டிற்கு வந்தபோது ரியாவும் நியதியும் அமர்ந்திருப்பதைக் கண்டு வேகமாக அவர்கள் அருகில் நெருங்கினான். "சாரி ரியா என்னால உன்னோட என்கேஜ்மெண்ட்டுக்கு வரமுடியாம போய்டுச்சு. ஆனா பாரு ரியா உன் கல்யாணத்துக்கு நான்தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வேன். சரியா இப்போ கோபிச்சிக்கிடாத பிலீஸ்..." என்று ரியாவைப் பார்த்து கெஞ்சியவாறே அவளிடம் அந்த பூச் செண்டை நீட்டி மன்னிப்பு கோரினான்.

"பரவா இல்ல சான். இட்ஸ் ஓகே" என்று கூறி லேசாக புன்னகைத்துவிட்டு நியதியைப் பார்த்தாள். உடனே நியதி, "ஆமா சான் உன் ஆள்....அதான் மாயா இருக்காள்ள அவள பாக்கவே முடியல? என்ன பண்றா?" என்று மாயாவைப் பற்றி விசாரித்தாள்.

மாயாவின் பெயரைக் கேட்டதும் சரண் சற்று வெட்கத்துடன், "எனக்கு அடுத்த வாரம் பெர்த்டே வருதுல அதுக்காக சப்ரைஸ் பிளான் பண்றேன்னு சொன்னா. இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொன்னதுக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டா" என்று வருத்தத்துடன் கூறினான்.

"ஓ...முக்கியமான மீட்டிங்கா..." என்று இரு பெண்களும் இழுத்தனர். சரண் புரியாமல் அவர்களைப் பார்க்கவும், "அப்போ அந்த மீட்டிங் அதுதானான்னு பாரு" என்று மாயா இருக்கும் திசையை நோக்கி நியதி காட்டினாள். திரும்பி அந்த திசையில் பார்த்த சரணுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை.
WhatsApp Image 2025-01-11 at 3.56.56 PM.jpeg
அங்கு மாயா, அஷ்வத்தை அணைத்தவாறு நீச்சல்குளத்தின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அதை பார்த்தபோது சரணுக்கு வானமே இடிந்து விழுந்ததுபோல் இருந்தது. அந்த காட்சியை இமைக்காமல் பார்த்தவண்ணம் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

பின் சரணுடைய கைபேசியை வாங்கி மாயாவை அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டாள். சரண் அழைப்பது தெரிந்ததும் மாயா, 'இவன் ஏன் இப்போ கூப்பிட்றான்?' என்று எரிச்சலுடன் தன்னுடைய கைபேசியை எடுத்தாள். "ஹே பேபி! ஐ மிஸ் யூ சோ மச். இப்போ தான் உன்னை பத்தி நினைச்சிகிட்டு இருந்தேன் நீயே கால் பண்ணீட்ட. சோ ஸ்வீட் ஆப் யூ" என்று கொஞ்சும் குரலில் கூறினாள்.

தூரத்திலிருந்து அவர்கள் அவளை பார்த்துக்கொண்டிருந்ததால் அவளுடைய முகபாவனை மாறியதை மூவரும் கவனித்தனர். "நான் நியதி பேசுறேன் மாயா" என்று கூறவும், 'ஓ இவளா' என்று நினைத்துவிட்டு, "என்ன நியதி என்னைக்கும் இல்லாம நீ என்கூட பேசுற? என்ன விஷயம்?" என்று மாயா விசாரித்தாள்.

அதற்கு, "இல்ல...பாத்து ரொம்ப நாளாச்சா. அதான் மீட் பண்ணுவோம்னு கூப்பிட்டேன்" என்று நியதி கூறினாள். உடனே மாயா, "சாரி நியதி இன்னைக்கு மீட்டிங் விஷயமா நான் என் பாஸோட வெளிய வந்திருக்கேன். அதனால இன்னைக்கு முடியாது" என்று கூறி சமாளித்தாள். "ஓ அப்படியா...சரி எங்க மீட்டிங் நடக்குது?" என்று நியதி கேட்டதற்கு, "நானும் சரணும் எப்பவுமே மீட் பண்ணுவோம்ல அந்த மால்ல உள்ள மீட்டிங் ஹால்ல தான்" என்று கூறினாள்.

உடனே நியதி, "வாட் எ சப்ரைஸ் மாயா நாங்களும் அங்க தான் இருக்கோம். கொஞ்சம் திரும்பிப் பாரு" என்று நியதி கூறியபோது மாயா திகைத்து திரும்பினாள்.

அங்கு கோபத்தால் சிவந்த கண்களுடன் சரண் நிற்க, பெண்கள் இருவரும் 'மாட்னியா?' என்று புருவத்தை உயர்த்திப்பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள். "ஐ கேன் எக்ஸ்பிளைன் சரண்" என்று மாயா அவனை நோக்கி அடியெடுத்து வைத்தபோது அவளை கையசைவால் நிறுத்தினான்.

"உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இனிமேல் என்ன பாக்க வராத. குட் பை" என்று கூறிவிட்டு, நிர்காமல் அங்கிருந்து சென்றான். அவனை பின்தொடர்வதற்காக சென்ற மாயாவை நியதி தடுத்து நிறுத்தினாள். "வழிவிடு நியதி நான் சரண பாக்கணும்" என்று மாயா கூறவும், "எதுக்கு அவன மறுபடியும் ஹர்ட் பண்ணவா? சரண் எவ்வளவு நல்லவன் தெரியுமா? அவன் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு தெரியுமா?”
_02c494e6-8810-436d-903f-8a67fbc42a33.jpg
“உனக்கு ஒண்ணுன்னா அவன் துடிச்சிபோய்டுவான். அப்படிப்பட்ட நல்லவன எப்படிடீ உனக்கு ஏமாத்த மனசு வந்துச்சு? நீயெல்லாம் ஒரு பொண்ணு தானா? ச்ச.." என்று கோபத்துடன் நியதி மாயாவைப் பார்த்து கேட்டாள். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக்கொண்டே நியதி முன்னோக்கி நகர்ந்து செல்ல மாயா பின்னகர்ந்தாள்.

"இவ பொண்ணு இல்ல பணத்தாச பிடிச்ச பேய்" என்று ரியா மாயாவை கூற, "ஏய் ரியா மைண்ட் யுவர் வேட்ஸ்" என்று மாயா கோபப்பட்டாள். உடனே நியதி, "உன் மேல தன்னோட முழுஅன்ப செலுத்தி நீதான் அவனோட வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டு இருந்தவனை இப்படி காயப்படுத்திட்டியே. உனக்கு எதுக்குடி மரியாத குடுக்கணும்?" என்று நியதி கோபமாகக் கேட்டுக்கொண்டே முன்னகர்ந்தாள்.

அவர்களுக்கு பதிலழித்துக்கொண்டே பின் நகர்ந்த மாயா தனக்கு பின்னிருக்கும் நீச்சல் குளத்தை மறந்தாள். "ஹே நியதி..." என்று கூறும்போதே நீச்சல்குளத்தில் விழுந்துவிட்டாள். நீரின் ஆழத்திற்கு சென்று மீண்டும் மேலே மாயா வந்தபோது நியதி அவளைப் பார்த்து, "நீ இனிமேல் என் சரண் பின்னால வரவே கூடாது. அப்படி நீ வர்றது தெரிஞ்சா நடக்கிறதே வேற" என்று அவளை மிரட்டிவிட்டு, "வா ரியா போகலாம்" என்று நியதி கூற இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

'என்னை இப்படி அவமானப் படுத்துனீல நியதி. நான் உன்ன சும்மா விடவே மாட்டேன். கண்டிப்பா நீ என்கிட்ட ஒருநாள் மாட்டுவ. அப்போ வச்சிக்குறேன்' என்று தன் மனதிற்குள் நியதியின் மீது மாயா வஞ்சத்தை வளர்த்துக்கொண்டாள்.
_fbbaf817-93a3-4ebd-a5a4-8c3a28976d45.jpg
சரணை தேடிக்கொண்டு சென்றபோது அவன் அந்த ரிசார்டிலுள்ள பார்க்கில் அமர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் அவனருகில் அமர்ந்து, "டேய் சரண் ஃல் பண்ணாதடா. இப்பவாவது இந்த ராச்சசிய பத்தி உனக்கு தெரியவந்துச்சுன்னு நினைச்சி சந்தோஷப் பட்டுக்கோ" என்று ரியா அவனை தேற்றினாள்.
_ca50a44e-51a8-47f2-9885-09e5f3341041.jpg
அவன் எந்தஒரு அசைவும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருக்கவும், "காலேஜ் படிக்கும்போது எத்தனை பொண்ணுங்க உன் பின்னால சுத்துனாங்க. ஒரு நாளைக்கு மினிமம் பத்து லவ் லெட்டராவது வரும். அதுல நிறைய அழகான பொண்ணுங்களும் இருந்தாங்க”

“அப்படி அவங்க எல்லாத்தையும் விட்டுட்டு போயும்போயும் இந்த மாயாவ ஏன்டா லவ் பண்ண? நீயெல்லாம் எப்படி வாழவேண்டியவன் அநியாயமா இப்படி பொதக்குழியில விழப்பாத்திருக்கியேடா?" என்று நியதி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது சரண் லேசாக புன்னகைத்தான்.

உடனே நியதியும் புன்முறுவலுடன், "டேய் எப்பவுமே சொல்லுவாங்கல 'நம்மள விட்டு ஏதாவது ஒண்ணு போச்சுன்னா அதைவிட பெஸ்டா வேற ஒண்ணு நம்ம லைஃல வரும்னு'. அது மாதிரி தான்டா இதுவும். இந்த மாயா மட்டும் தான் இருக்காளா வேற யாருமே இல்லையா? ஷி டஸின்ட் டிசெர்வ் யூ”

“நீ என்னோட 'பிரின்ஸ் பிரதர்' டா. இந்த பிரின்ஸ் பிரதர்க்கு ஈக்குவலான ஒரு 'பிரின்சஸ்' கண்டிப்பா வருவா. சோ நோ வொரிஸ்" என்று நியதி கூறவும் சரண் இயல்புநிலைக்கு வந்தான். அவன், "உங்கள மாதிரியான ஃரெண்ட்ஸ் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்று கூற இரு பெண்களும், "ஓ" என்று கூச்சலிட்டு நகைத்தனர். பின் அங்கு நண்பர்களுக்கு இடையிலான பேச்சுக்களும் கேலியும் கிண்டலுமாக இருந்தது.

அங்கு அவ்வாறு இருக்க 'வர்தன் பேலசில்' ஆரியவர்தன் வீல்சாரில் அமர்ந்தவாறு யாரையோ தன்னுடைய கைபேசியில் அழைத்து, "எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு. இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம்" என்று கூறவும் மறுமுனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் நிசப்தமாக இருந்தது.
WhatsApp Image 2025-01-11 at 3.51.00 PM.jpeg
சிறிது நேரம் கழித்து, "என்ன திடீர்னு?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உடனே, "பாட்டி கம்பெல்பண்ணாங்க அதான் இப்படி செய்யவேண்டியதா போச்சு. நீ கல்யாணத்துக்கு எப்ப வருவ?" என்று ஆரியவர்தன் கேட்டான். அதற்கு, "சாரி ஆரி என்னால முடியாது. இங்க கொஞ்சம் பர்சனல் ஒர்க்ஸ் இருக்கு" என்று அவள் கூறினாள்.

ஆனால் அவனோ, "ஹே நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியும்ல? நீ இருந்தா நான் கொஞ்சம் பெட்டெரா ஃல் பண்ணுவேன். ப்ளீஸ் வா" என்று அவளை இங்கு வருமாறு வேண்டினான். ஆனால் அவள் அப்போது, "இல்ல ஆரி. என்னால கண்டிப்பா முடியாது. ப்ளீஸ் டூ அண்டர்ஸ்டாண்ட்" என்று அவள் தன்னுடைய முடிவை தெரிவித்தாள்.

உடனே ஒரு பெருமூச்சு விட்டு, "இட்ஸ் ஓகே. அட்லீஸ்ட் இந்தியா வரும்போதாவது என்ன பாக்கவா" என்று கூறவும், "ம்ம்.." என்று அந்த பெண் கூறினாள். சிறு மௌனத்திற்குப் பின், "கங்கிராட்ஸ் ஆரி" என்று கூற, "தாங்க் யூ" என்று பதிலுரைத்தான். அந்த அழைப்பை துண்டித்துவிட்டு ஆரியவர்தன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
WhatsApp Image 2025-01-11 at 3.50.05 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-15 at 7.52.00 PM.jpeg
திருமணத்திற்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில் வேலைகள் வேகவேகமாக நடக்கத் துவங்கின. வரதராஜன் குடும்பத்தார் மூச்சு விடுவதற்கு கூட நேரமில்லாமல் வேளைகளில் ஈடுபட்டனர். நியதி காலை அலுவலக வேலையிலும் மதியம் திருமண வேலையிலும் மும்மரமாக இருந்தாள். தன்னைப்பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லாமல் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

அதேசமயம் ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி ரியாவிற்கு முகூர்த்தப் புடவையை தேர்ந்தெடுப்பதற்காக அவளையும் மாலினியையும் 'வர்தன் பேலஸிற்கு' அழைத்திருந்தார். நியதி தன்னுடைய அலுவலக வேலையை முடித்துவிட்டு, 'யப்பா இந்த ரியாவோட கல்யாணம் நல்லபடியா சீக்கிரமா நடக்கணும். அதுக்கப்பறம் நாம நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். முடியல.....பெண்டு நிமிருது' என்று அலுப்பை போக்கிக்கொள்ள தன் கைகளை நெட்டியிழுக்கும்போது அவளுடைய தொலைபேசிக்கு ரியாவின் அழைப்பு வந்தது.
_288a5a9c-297d-421a-8a0d-73485467b075.jpg
'இப்போ எங்க கூப்பிட போறாளோ?' என்று நினைத்தவாறே, "சொல்லு ரியா இன்னைக்கு எங்க போகணும்?" என்று சோர்வான குரலில் கேட்டபோது, "வர்தன் மேன்ஷன்க்கு போகணும் சீக்கிரம் வா" என்று ரியா பதிலுரைத்தாள்.

ஆச்சரியத்துடன், "ரியா, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டுவாரம் இருக்கு. அதுக்குள்ள அவர பாக்காம இருக்கமுடியலையா?" என்று நியதி கேட்டபோது, "அதெல்லாம் இல்ல நிதி. அவரோட பாட்டி கல்யாணத்துக்கு சாரியும் ஜுவல்லரியும் செலக்ட் பண்ண கூப்டாங்க அதான்" என்று செல்லவேண்டிய காரணத்தைக் கூறினாள்.
உடனே நியதி, "ஓ...அப்போ அந்த சாக்குல அவர நீ பாக்குறதுக்காக போகுற என்ன?" என்று சீண்டும் குரலில் கேட்கவும், "ஓவர்திங்கிங் உடம்புக்கு ஆகாது. நீ சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா. நாம மூணுபேரும் அங்க போவோம்" என்று கூறினாள். "இதோ இப்போவே வர்றேன்" என்று கூறி அங்கிருந்து விரைந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

மாலினி ரியாவைப் பார்த்து, "அவங்க நம்ம ரெண்டு பேர மட்டும் தான் கூப்டாங்க. நீ எதுக்கு போற இடத்துக்கெல்லாம் அவளையும் இழுக்குற?” என்று கோபத்துடன் கேட்டாள். ரியா தன் தாயின் அருகில் வந்து, "இந்த டயலாக்க நீங்க மாத்தவே மாட்டீங்களா?" என்று கேட்கவும், "நான் சொன்னா எப்போ நீ கேட்ருக்க? போ ஏதாவது பண்ணு" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

பெண்கள் மூவரும் வர்தன் மேன்ஷனிலுள்ள, 'வர்தன்ஸ் பேலசிற்கு' சென்றபோது தகுந்த மரியாதையுடன் நன்கு உபசரிக்கப்பட்டனர். அவர்களை சந்திரமதி புன்முறுவலுடன் வரவேற்று புடவை மற்றும் நகைகள் வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார். அந்த இடத்தை அடைந்த மூன்று பெண்களுக்கும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
_da2c43f6-f94b-440a-8841-f8363df35b06.jpg
மாலினி தன் வாயைப் பிளந்து பிரம்மிப்புடன் அந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த அறை மினி டெக்ஸ்டைல் மற்றும் ஜுவல்லரி கடையை போல் காட்சியளித்தது. ஒருபுறம் முழுவதும் அனைத்து வகையான லெஹெங்காக்களும் மற்றொரு பக்கம் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளும் அதற்கேற்றாற்போல் ஆரி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த ஜாக்கெட்டுகளும் வைக்கப்பட்டிருந்தது.

மறுபுறம் புடவைகளுக்கு ஏற்றார்போல் நகைகளை தேர்ந்தெடுக்க டையமண்டுசெட், சோக்கர்ஸ், ஹாரம் என பலவகையான நகைகள் அடுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த அனைத்து லெஹெங்காக்கள், புடவைகள் மற்றும் நகைகள் அனைத்தும் இந்தியாவின் டாப் ஃஷன் மற்றும் ஜுவல்லரி டிசைனர்களால் தயாரிக்கப் பட்டவை.

இன்னொரு பகுதியில் ஒரு ஆள் அளவிற்கு உயரமான கண்ணாடி. தேர்ந்தெடுக்கும் புடவைகள் மற்றும் நகைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. இவையனைத்தையும் பார்த்து மெய்ம்மறந்து நின்றவர்களை சந்திரமதியின் குரல் யதார்த்தத்திற்கு கொண்டுவந்தது.

"ரியா உனக்கு இதுல எது பிடிச்சிருக்கோ அத எல்லாத்தையும் நீ எடுத்துக்கோமா. இது எல்லாமே மாப்பிளைவீட்டுசார்பா பொண்ணுக்கு குடுக்குறது. நீங்க யங் ஜெனரேஷன். உங்க டேஸ்ட் வித்யாசமா இருக்கும். அதான் உனக்கு பிடிச்சத நீயே செலக்ட் பண்ண சொன்னேம்மா. இப்போ அதிதி மட்டும் இங்க இருந்தா அவளே எல்லாத்தையும்...." என்று கூறும்போதே சந்திரமதியின் முகத்தில் சோகம் பரவியது.

சுற்றியிருப்பவர் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்ததும், "சரி சரி ரியா சீக்கிரம் செலக்ட் பண்ண ஆரம்பி. இப்போ ஆரம்பிச்சாதான் நைட்டுகுள்ளயாவது முடியும்" என்று கூற அனைவரும் தாங்கள் வந்த வேலையை பார்க்கத் துவங்கினர். ரியாவும் நியதியும் பட்டுப்புடவை பிரிவில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது, மாலினி ரியாவை தன்னுடன் நகைகளை பார்க்கவருமாறு அழைத்துச்சென்றாள்.

தனித்து விடப்பட்ட நியதி அங்கு அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த டிசைனர் பட்டுப்புடவைகளை பார்க்கத் துவங்கினாள். அனைத்து சேலைகளும் நன்றாக இருந்தாலும் ஒரு புடவை மட்டும் நியதியின் கருத்தைக் கவர்ந்தது. இளம்பச்சை நிறத்தில் இருந்த அந்த புடவையில் தங்க ஜரிகையால் மயில் வடிவமைப்பில் ஆங்காங்கே வேலைப்பாடுகள் அழகாக செய்யப்பட்டிருந்தன. அது மிகவும் நியதிக்கு பிடித்திருந்தது.

எப்போது ஒரு பொருளை வாங்கினாலும் அதனுடைய விலையை பார்த்து வாங்குவது தான் நியதியின் வழக்கம். அன்றும் அதேபோல் விலையை பார்த்தபோது அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அதில் ‘பதினைந்து லட்சத்தி ஐம்பத்திஐந்தாயிரம்’ என்று விலை போடப்பட்டிருந்தது. உடனே அதை யாரும் பார்க்காவண்ணம் அப்படியே வைத்துவிட்டாள்.

'யப்பாடி பதினஞ்சு லட்சமா.....பணக்காரங்க பணக்காரங்கதான்' என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ரியா தன்னுடைய தாயிடமிருந்து தப்பி நியதியின் அருகில் வந்தாள்.

"நிதி அம்மாவுக்கு கொஞ்சம் கூட காமன்சென்ஸ் இல்ல. முதல்ல சாரி எடுத்துட்டு அப்பறமா அதுக்கு மேட்சிங்கான ஜுவல்லரி எடுக்கணும்னு தெரியவே இல்ல. நீ வா நாம அங்க போய் சாரி அண்ட் லெஹன்கா பாப்போம். அதுல ஏதாவது எனக்கு செலக்ட் பண்ணு" என்று கூறி நியதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

வந்த வேலை முடிந்தவுடன் பெண்கள் மூவரும் கிளம்பும்போது அவர்களை நிறுத்தி, "அம்மா நியதி நீ எதுவும் எடுத்துக்கலையா.... இங்க இருக்குறதுல என்ன பிடிச்சிருக்கோ அத நீயும் எடுத்துக்கோ" என்று புன்முறுவலுடன் சந்திரமதி கூறினார். மாலினியின் முகம் கோபமாக மாறுவதை கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, "இருக்கட்டுங்க. ரியா எடுத்துகிட்டால்ல அதுவே போதும்" என்று கூறினாள்.

உடனே சந்திரமதி, "இல்ல நியதி நீ என் ஆசைக்காக ஏதாவது ஒண்ண நீ எடுத்துக்கணும்" என்று கூறவும் செய்வதறியாது அங்கே நின்றாள். அப்போது தனக்கு பிடித்தமான ஒன்றை அங்கிருந்து சந்திரமதி எடுத்து நியதியிடம் நீட்டி, "இந்த சாரி உனக்கு நல்லா பொருத்தமா இருக்கும். வாங்கிக்கோமா" என்று எடுத்துக்கொடுத்தார்.
_4f9f751b-c19e-40de-9ddd-fd88b536ac9f.jpg
அவள் வாங்காமல் அப்படியே நிற்கவும், "என்னமா பாட்டிக்காகயாவது வாங்கிக்க கூடாதா?" என்று கேட்டபோது நியதி மாலினியைப் பார்த்தாள். 'வாங்கிக்கோ' என்பதுபோல் அவள் கண்ணசைக்க நியதி அதனை பெற்றுக் கொண்டாள். பின் சந்திரமதியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, "ரொம்ப தாங்க்ஸ் மேடம்" என்று அவள் தன் நன்றியை தெரிவித்தாள்.

ஆனால் சந்திரமதியோ, "மேடமா? பாட்டின்னு கூப்பிடுமா. ரியாவுக்கு பாட்டின்னா நான் உனக்கும் பாட்டி தான்" என்று கூற நியதி புன்முறுவலுடன், "தேங்க்ஸ் பாட்டி" என்று கூறவும் சந்திரமதி புன்னகைத்தார். சந்திரமதியிடமிருந்து ஆசிர்வாதம் வாங்குமாறு மாலினி ரியாவைப் பார்த்து சைகை செய்ய அவளும் அவ்வாறே செய்தாள். அதன் பின் வரதன் குடும்பத்தார் அங்கிருந்து வீடு திரும்பினர்.

திருமணநாளும் நெருங்கியது. அவர்களது திருமணம் ஸீ-ஷோர் ரிசார்ட்டில் வைத்து நடக்கவிருந்தது. நிச்சயதார்த்தம் முன்னரே முடிந்ததால் திருமணத்திற்கு முந்தயநாள் இரவு ஒரு சிறுவிழா ஒன்று மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழா ஸீ-ஷோர் ரிசார்டிலுள்ள வெட்டிங் ஹாலில் நடைபெற இருந்தது.
நியதி அழகான தங்க நிறத்தில் பட்டு லெஹங்கா அணிந்திருந்தாள். அதனுடைய ஸ்கர்ட் முழுவதும் தங்கநிறத்தில் இருக்க பார்டர் சிவப்புநிறமாக இருந்து. அதில் தங்க ஜரிகையால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவள் அணிந்திருந்த நெட்டட் பிளவுசில் ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகள் இருந்தன.
அவள் துப்பட்டாவில் ஹெவி ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவளுடைய கேசம் அலையலையாக விடப்பட்டு சிறு பூக்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. அவளைப் பார்க்கும்போது ஒரு அழகிய விண்ணுலக தேவதை மண்ணுலகில் நடமாடுவது போல் இருந்தது.
WhatsApp Image 2025-01-15 at 8.12.12 PM.jpeg
அவள் தயாராகிவிட்டு ரியா இருக்கும் இடத்திற்குச் சென்றாள். மணமகள் அறையை திறந்தபோது அங்கு வயலட் நிற லெஹங்காவில் மிகவும் அடர்த்தியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, நெட்டெட் ஷாலை ஒருபுறமாக தொங்கவிட்டு, அதற்கேற்றாற்போல் தன்னுடைய சிகையை ஃரென்ச் பிரைட் ட்விஸ்ட் செய்து அழகான சிற்பம்போல் ரியா போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தாள்.
_53b3eb71-3f25-4fe1-b99c-4db5d4eb313b.jpg
நியதி அந்த அறைக்குள் நுழையும்போதே ரியா அப்படியே அவளை பார்த்தவாறு ஆச்சரியத்துடன் நின்றாள். "வாரே வா நிதி. நீ எவ்வளவு அழகா இருக்கன்னு தெரியுமா? எப்ப பாத்தாலும் அந்த லெகின், சுடிதார் டாப், அதுக்கு மேல ஷாலுன்னு சுத்திகிட்டு இருக்குற நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. இப்படி தெரிஞ்சிருந்தா உன்ன நானே கல்யாணம் பண்ணீருப்பேனே....இப்பவும் டைம் இருக்கு இந்த கல்யாணத்த நிப்பாட்டீறலாமா?" என்று விஷமமாகக் கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் நகைக்கத் துவங்கினர். உடனே, "ரியா, சும்மா இருக்கியா. நீயும் தான் அழகா இருக்க. உனக்கென்ன கொறச்சலாம். என் கண்ணே பட்டுடும்போல" என்று கூறி தன் கண்ணிலுள்ள மையை எடுத்து ரியாவிற்கு திருஷ்டி வைத்தாள். அப்போது மாலினி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அவள் வருவது தெரிந்ததும் நியதி யாரும் அறியாவண்ணம் பின்னகர்ந்தாள். ஆனால் ரியா நியதியை விடாமல் தன்னுடன் போட்டோஷூட் எடுக்குமாறு வற்புறுத்தினாள். அதேசமயம் சரண் ரியாவை பார்ப்பதற்காக அந்த அறைக்குள் நுழையப் போனான். மாலினி இருப்பது தெரிந்தது அவன் பின்னடைந்தான்.

ஆனால் ரியா அவனையும் விடவில்லை "இங்க வாடா" என்று அவள் அழைத்தபோது சரண் தன் கண்பார்வையால் மாலினியை காட்டினான். ஆனால் ரியா எதையும் பொருட்படுத்தாமல் அவனையும் அவர்களது போட்டோஷூடில் சேர்த்துக்கொண்டாள்.
அப்போது மாலினி 'இந்த ரியாவுக்கு எத்தனையோ ஃரெண்ட்ஸ் இருக்காங்க. அப்படி இருக்க ஏன் இந்த அனாதைகளோடவே சுத்திகிட்டு இருக்கான்னு தெரியல' என்று தன் மனதிற்குள் நினைத்தாள்.

விழா துவங்கியதும் அந்த வெட்டிங் ஹாலிற்குள் ஆரியவர்தன் தன்னுடைய ராஜ வருகையைக் கொடுத்தான். அவன் அழகான ஸ்டைலிஷான ஸ்டீல் க்ரே டக்சீடோ அணிந்து அதற்கு பொருத்தமாக மெரூன் கலர் டையும் ஐவரி கலர் ஷர்ட்டும் அணிந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-15 at 3.27.49 PM.jpeg
அது அவனுடைய கம்பீரமான உடலமைப்பை அழகாக எடுத்துக்காட்டியது. அவன் தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சேரில் முன்னே சென்று மேடையேற அவனுடைய நண்பன் ரஞ்சித் அவனைப் பின்தொடர்ந்தான். ஆரியவர்தன் ரஞ்சித்துடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது ரியாவை நியதியும் மற்ற தோழிகளும் அழைத்து அந்த ஹாலிற்குள் வந்தார்கள்.

அப்போது ஆரியவர்தன் தன்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதை கவனித்த ரஞ்சித் ஆரியனின் காதருகில் வந்து, "டேய் ஆரி இப்பவே விழுந்துராதடா" என்று கூறி வேடிக்கையாகச் சிரிக்கவும் அவனை ஆரியவர்தன் லேசாக அடிவயிற்றில் தன்னுடைய முழங்கையால் இடித்துவிட்டு குறும்பாக முறைத்துப் பார்த்தான். ரியாவும் மேடையேற இருவரும் சேர்ந்து நின்றனர். விழா முடிவடைந்ததும் அனைவரும் அந்த ரிசார்ட்டிலுள்ள தங்களது அறைக்குச் சென்றார்கள்.

ரியாவும் நியதியும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். நியதி குளித்துவிட்டு வெளியே வந்தபோது ரியா வேகமாகச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள். அவளுடைய இந்த செயலால் ஆச்சரியம் அடைந்த நியதி அப்படியே நின்றாள். விசும்பல் சத்தம் கேட்டதும் அவளை தன் முன் நிறுத்திப் பார்த்தபோது ரியாவின் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தது.

உடனே நியதி அவளை படுக்கையில் அமரச்செய்து தானும் அவளருகில் அமர்ந்து அவளை விசாரித்தாள்.
_c65dcf91-8070-4c19-b80c-b940cc8528b8.jpg
" உனக்கு என்ன ஆச்சு ரியா? இப்போ ஏன் அழுவுற?" என்று புரியாமல் அவளுடைய கண்ணீரை துடைத்தவாறே கேட்டாள். ரியா விசும்பிக்கொண்டே, "நாளைக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னா நான் உங்க கூட இருக்கமாட்டேன்ல....இனிமேல் என்னால உங்கள பாக்கவே முடியாதுல...முன்ன மாதிரி நீ, நான், சான் எல்லாருமா சேர்ந்து சுத்தமுடியாதுல...எனக்கு அத நினச்சா ரொம்ப கவலையா இருக்கு" என்று கூறி மீண்டும் அழத்துவங்கினாள்.

ஆனால் நியதியோ, "ஹே ரியா கல்யாணம்ங்கிறது ஒரு பொண்ணோட வாழ்க்கையில முக்கியமான ஒரு நிகழ்வு. அது அவளோட வாழ்க்கையில பெரிய திருப்பத்தை கொண்டுவரும். பெத்தவங்கள விட்டுட்டு போறது கஷ்டம் தான் ஆனாலும் நீ ஏன் கவலப் படுற? இங்க தான இருக்கப்போற”

“நீ கூப்பிட்டா....இல்ல நினைச்சாலே நாங்க எல்லாரும் வந்து நிக்கப்போறோம். அதுக்கு ஏன் அழுகுற? முதல்ல கண்ண தொடச்சிட்டு சீக்கிரம் படு. இல்லாட்டி நாளைக்கு மேக் அப் போடுறவங்க வந்து பாக்கும்போது நீ கருவளையத்தோட நிக்கப்போற" என்று கூறி அவளை படுக்க வைத்தாள்.

ரியாவிற்கு தன்னுடைய முதுகைக்காட்டி படுத்தவளுக்கும் அதே சிந்தனை தான். அவளாலும் ரியாவை பிரிந்திருக்க முடியாது. நியதியின் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. பின் அவளும் நித்திரையில் ஆழ்ந்தாள்.

மறுநாள் காலை திருமணம் அந்த ஸீ-ஷோர் ரிசார்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் வைத்து நடக்கவிருந்தது. மணமேடை குடையைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டு அதில் ஆர்கிட்ஸ் வைத்தும் வெண்ணிற துணிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
_3dd2edca-df6e-430b-a6fd-cfdd9d217ad6.jpg
மணமக்கள் அந்த மேடையை அடைவதற்கு ஒரு பெரிய நடைபாதை ஒன்று அமைக்கப் பெற்று அதில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் விருந்தினர்கள் அமர்வதற்காக துணியாலும் பூக்களாலும் அலங்கரிக்கப் பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. திருமண மேடைக்கு பின்னிருந்த கடற்பரப்பு மேலும் அந்த இடத்திற்கு அழகு சேர்த்தது. அன்று மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் வானிலை மிகவும் நன்றாக இருந்தது.

அன்றைய விழாவின் நாயகனான ஆரியன் தன்னுடைய அறையில் தயாராகிக்கொண்டிருந்தான். அவன் வெல்வெட்டால் செய்யப்பட்டிருந்த நேவிப்ளூ ஷ்ரவாணி அணிந்திருந்தான். அதில் தங்க ஜரிகையாலான வேலைபாடுகள் இந்தியாவிலுள்ள பெரிய டிசைனர்களால் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய கால்களை அதேநிற வெல்வெட் சால்வையால் போர்த்தியிருந்தான்.
WhatsApp Image 2025-01-15 at 3.51.46 PM.jpeg
அவனுடைய மிடுக்கான தோற்றம் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. அந்த உடைக்கு ஏற்றாற்போல பிராண்டட் ஷூவும் அணிந்திருந்தான். அவனுடைய தோற்றத்தில் ராஜகளை தாண்டவமாடியது. ராஜாவைப் போல் தோற்றமளித்த அவனிடம் செங்கோல் ஒன்றுமட்டும் இல்லை.

மணமகனான ஆரியவர்தன் மணமேடையில் அமர்ந்திருக்க வரதராஜன் பதற்றத்துடன் மணப்பெண்ணை அழைத்து வந்தார். மணப்பெண் ஆரியவர்தனின் அருகில் வந்து அமர்ந்ததும் இருகுடும்பத்தார் உட்பட திருமணத்திற்காக வந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

மாயங்கள் தொடரும்...
 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
ஏனென்றால் வரதராஜன் மணமகளாக மணமேடைக்கு அழைத்து வந்தது வேறு யாரும் அல்ல அது நியதி தான்.
_9b46f52f-2e9f-43a3-8fb3-4791c0021cba.jpg
அவளை ஆரியவர்தனின் அருகில் அமர்த்திவிட்டு அவர்கள் அருகில் நின்றார். அப்போது வரதராஜனிடம் சென்று, "என்னங்க என்ன காரியம் பண்றீங்க? இது நம்ம பொண்ணு உட்காரவேண்டியயிடம்" என்று கோபத்துடன் மாலினி வினவினாள்.
அப்போது வரதராஜன், "எனக்கு என்ன செய்யனும்னு தெரியும். நீ சும்மா இரு" என்று கண்ணில் பொங்கிய சினத்துடன் தாழ்ந்த குரலில் அழுத்தமாகக் கூறினார். நியதியின் இந்த நிலைக்கு ரியா மட்டுமே காரணம்.

நியதி அங்கு மணப்பெண்ணாக வந்து அமர்வதற்கு நான்குமணிநேரத்திற்கு முன் ரியா தன்னுடைய தந்தை எடுத்துக்கொடுத்த பட்டுப்புடவையை உடுத்தி அழகிய பதுமைபோல் நின்றாள்.
WhatsApp Image 2025-01-18 at 4.17.23 PM.jpeg
அவளுடைய அலங்காரம் முடிந்தபின் வந்திருந்த பியூடிஷியன் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். அவளும் நியதியும் மட்டும் அந்த அறையில் இருந்தபோது ரியா பதற்றத்துடன் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.

நியதி விசாரித்தபோது, "கல்யாணம் நடக்க போகுதுல அத நினைச்சிதான் பயமா இருக்கு" என்று தன் கைகளை பிசைந்தவாறு கூறினாள். அவளை சிரிப்புடன் பார்த்து, "ஏய்! ஏன் பயப்படற? நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது தி கிரேட் ஆரியவர்தன். அவர பாத்தா பயத்துக்கே பயம் வரும். அவரு...." என்று கூறப்போனவளை இடைமறித்து ரியா ஒரு பெரிய கும்பிடு போடவும் நியதி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது அவளுடைய அறைக்கு ஒரு டிராலியில் காலை உணவு வந்து சேர்ந்தது. அவர்கள் அதனை உண்டுமுடிக்கும்போதே நியதியின் கைபேசிக்கு மாலினியின் அழைப்பு வந்தது. "ஏய் நியதி நீயா கல்யாணப் பொண்ணு? எந்த ஒரு வேலையும் செய்யாம இருக்க? வா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று மாலினி அவளை அழைக்கவும் அங்கிருந்து நியதி சென்றாள்.

வேலையை முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு திரும்பும்போது ரியா அங்கு இல்லை. உடனே பதற்றத்துடன் நியதி அவளை தேடத் துவங்கினாள்.அப்போது குழியலறையிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்க நியதி நிம்மதியடைந்தாள். அப்போது அங்கு வந்த வேலையாள் அவர்களுக்கு காலை உணவு கொண்டுவரப்பட்ட ட்ராலியை எடுத்துச் செல்ல நியதி ரியாவிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

வெகுநேரம் ஆகியும் ரியா வராததால் நியதி குளியலறையைத் தட்டிப் பார்த்தாள். கதவு தானாக திறந்துகொள்ள உள்ளே சென்று பார்த்தபோது ரியா அங்கு இல்லை. நியதிக்கு தூக்கிவாரிப்போட்டது.
_84a1e89b-9916-4964-942d-8a58fb9cab80.jpg
இந்த விஷயத்தை சரணிடம் கைபேசியின் மூலம் தெரிவித்தபோது அவன் அதிர்ந்துபோனான்.
_4f79c420-ccb8-4efd-b198-1437d8f1783e.jpg
"என்ன சொல்ற நிதி? நல்லா தேடிப்பாரு. அங்க தான் இருப்பா" என்று அவன் கூறவும், "இல்ல சான், நாங்க இருந்த ஃலோர் முழுசும் நல்லா தேடிட்டேன். எங்க தேடியும் கிடைக்கல. என்ன செய்யிறதுனே தெரியல" என்று படபடத்த குரலில் கூறினாள்.

உடனே அவன், "டென்ஷன் ஆகாத நிதி. நானும் எல்லா இடத்துலயும் தேடி பாக்குறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய கைபேசியை வைத்தான். அவன் பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இறுதியாக கார் பார்க்கிங் வந்தபோது யாரோ ரியாவை காருக்குள் தள்ளி வேகமாக காரைக் கிளப்பிச் செல்வது தெரியவந்தது.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவன் அந்த காரைப் பின்தொடர்ந்து ஓடினான். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்று தூரத்தில் நின்று மூச்சுவாங்க வேகவேகமாக நியதிக்கு போன் செய்தான். அவன் அந்த விஷயத்தை நியதியிடம் தெரிவித்தபோது, "என்னது யாரோ கடத்திட்டு போய்ட்டாங்களா? இப்ப என்ன பண்றது சான். இத கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லியே ஆகணும். இல்லாட்டி ரியா பெரிய பிரச்னைல மாட்டிக்குவா" என்று கூற சரணும் ஒப்புக்கொண்டான்.

வரதராஜனிடம் அந்த விஷயத்தை தெரிவித்தபோது அவர், "ஒருவேளை ராஜீவ் தான் நம்ம ரியாவ கடத்தீருப்பானோ? ரியா அவனை விட்டுட்டு வேறஒருத்தர கல்யாணம் பண்றது பிடிக்காம கோவத்துல இப்படி பண்றானோ?" என்று அவர் தனக்குள் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார். உடனே அவர் ராஜீவின் பெயரைக் குறிப்பிடாமல் ரியா கடத்தப் பட்டதாக மட்டும் ஆரியவர்தனிடம் தெரிவித்தார்.

அவனும் ரியாவை கடத்திச் சென்றவர்களை தேடுவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.
_d8df91c6-6b36-4444-ab87-4c250c81f85a.jpg
வர்தன் குடும்பத்தாரும், வரதராஜன் குடும்பத்தாரும் ரியாவின் அறையில் தீவிர யோசனையில் அமர்ந்திருந்தபோது, "இது என்னவோ எனக்கு விராஜோட வேல மாதிரி இருக்கு டா. அவனுக்கு தான் நம்மள பிடிக்காதே" என்று ரஞ்சித் கூறினான்.

விராஜ் குணசீலன், வர்தன் கார்பொரேட் குரூப்ஸின் எதிராளியான குணா கார்பொரேட் குரூப்ஸின் சி.இ.ஓ. அவன் எப்போதும் ஆரியவர்தனை தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருப்பவன். ஆனால் அவன் எப்போதும் வெற்றிகண்டதில்லை. அதனால் தான் ரஞ்சித்திற்கு இந்த எண்ணமே வந்தது.

உடனே ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி, "ரஞ்சு என்ன நடந்ததுன்னு தெரியாம யாரையும் இப்படி பழிசொல்லக் கூடாது" என்று கூறவும், "சாரி பாட்டி" என்று ரஞ்சித் கூறினான்.
_869eaed4-ccda-45fc-9bb7-296e7d724c04.jpg
அனைவரும் ரியாவுக்கு என்ன நடந்திருக்குமோ என்று பயந்துகொண்டிருந்தபோது, "என்ன வரதராஜன் சார்! குடும்பத்தோட சேர்ந்து டிராமா பண்றீங்களா?" என்று ரஞ்சித்தின் குரல் உரக்கக் கேட்டதும் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

"உங்க பொண்ண யாரும் கடத்தல. அவாதான் காதலிச்சவன கல்யாணம் பண்றதுக்காக ஓடிபோய்ட்டா. இந்தா பாருங்க" என்று தன் கையிலிருந்த காகிதத்தை வரதராஜனிடம் நீட்டினான். அவர் பயந்துகொண்டே அதனை வாங்கி பார்த்தபோது அதில், 'என்னுடைய காதலனுடன் என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறேன். என்னை மன்னிக்கவும். என்னை யாரும் தேடவேண்டாம். இப்படிக்கு ரியா' என்று எழுதியிருந்தது.

அதை பார்த்தவருக்கு இமயமே சரிந்துவிழுந்ததுபோல் இருந்தது. அனைத்து இயற்கைப் பேரழிவும் ஒன்று சேர ஒரே நேரத்தில் நடந்ததுபோல் இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வதென்று வரதராஜன் குடும்பத்தார் அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தபோது ரஞ்சித் மீண்டும் பேசத் துவங்கினான்.

"என்ன மிஸ்டர் வரதராஜன், நீங்க யார ஏமாத்த பாக்குறீங்க. இவன் யாருன்னு தெரியும்ல? வர்தன் கார்பொரேட் குரூப்சோட சி.இ.ஓ. தி கிரேட் ஆரியவர்தன். இந்த கார்பொரேட் உலகமே அவனோட சுண்டு விரல்ல இருக்கு. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவனையே ஏமாத்தப் பாப்பீங்க? இவன பகைச்சிக்கிட்டவங்களோட கதி என்னன்னு உங்களுக்கு தெரியும்ல?" என்று அவன் கோபத்தில் மிரட்ட ஆரம்பித்தான்.

அதை பார்த்து வரதராஜன் குடும்பத்தார் பயந்தனர். வரதராஜன் ஆரியவர்தனைப் பார்த்தபோது அவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அது அவருக்கு இன்னும் திகிலூட்டியது. ஏதாவது பேசி வரதராஜன் குடும்பத்தை மிரட்டினாலாவது அவனது மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அவன் எதுவும் பேசவும் இல்லை, நினைப்பதை கண்களில் காட்டவும் இல்லை.

ரஞ்சித் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆரியவர்தன் சட்டென தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சேரை திருப்பி அந்த அறையை விட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல அவனுடைய செக்ரட்டரியான பார்கவ் ஆரியவர்தனைப் பின்தொடர்ந்தான். அவனுடைய அந்த செய்கை வரதராஜனுக்கு ஆச்சத்தைத் ஏற்படுத்தியது.

ரஞ்சித், வரதராஜனின் பிசினெஸ்ஸை வைத்து மிரட்டியபோது அவர் விரைந்து சந்திரமதியிடம் சென்று, "அம்மா எங்கள மன்னிச்சிருங்க. இப்படி நடக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கல. நீங்க ஏதாவது வர்தன் சார்கிட்ட சொல்லுங்கம்மா" என்று தலைகுனிந்து கைகூப்பியவாறு மன்னிப்புக் கோரினார். ஆனால் அவரோ, "என்னால எதுவும் முடியாது வரதராஜன். நான் சொன்னேங்கிற ஒரே காரணத்துக்காக தான் ஆரி இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சான்”

“இப்படி நடந்ததுக்கு அப்பறம் நான் எதுவும் சொல்றதுக்கில்ல. ஆரி என்ன முடிவெடுக்குறானோ அது தான் என்னோடதும்" என்று தன்னுடைய முடிவை தெரிவித்தார். வரதராஜன் மனம்நொந்து என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் பார்கவ் அங்கு வந்து, "வர்தன் சார் உங்களோட தனியா பேசணும்னு சொன்னாரு" என்று கூறி வரதராஜனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

பார்கவ் முன் செல்ல, வரதராஜன் அவனைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடைய கைகள் பயத்தால் ஜில்லென குளிர்ந்தது. அவருடைய இதயத்துடிப்பை அருகிலிருப்பவர்கள் கேட்கும் அளவிற்கு வேகமாகத் துடித்தது. 'ஆரியவர்தன் என்ன சொல்லப்போறாரோ? நம்முடைய கதி என்னவாகப் போகிறதோ?' என பல எண்ணங்கள் அவருடைய மனதில் தோன்றி மறைந்தன.

அந்த நேரத்தில் அவரிடம் இருந்த தைரியம் குறைந்து அவருடைய மனதை பயம் ஆக்கிரமித்திருந்தது. ஆரியவர்தனின் அறையினுள் செல்வதற்காக பார்கவ் கதவைத் திறந்துவிட அவர் தயங்கிக்கொண்டே வெளியே நின்றார்.

"வர்தன் சார்கு வெயிட் பண்றது பிடிக்காது" என்று பார்கவ் கூறவும் தனக்குள் மீதமிருக்கும் துணிவை சேகரித்துக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தார். கதவு சாத்தப்பட்டது. அங்கு ரியாவின் அறையில் அனைவரும் வரதராஜனுக்காக ஆவலுடனும் பதற்றத்துடனும் காத்துக்கொண்டிருந்தனர்.

அரைமணி நேர உரையாடலுக்குப் பின் வரதராஜன் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். வந்தவருக்கு ஏதோ ஒன்று தோன்ற விரைந்து ரியாவின் அறைக்குச் சென்று நியதியை தன்னுடன் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.

பதற்றத்துடன் இருந்த நியதி அவரைப் பார்த்து, "அப்பா என்ன ஆச்சு? ஆரியவர்தன் சார் என்ன சொன்னாரு?" என்று அங்கு நடந்தவற்றை தெரிந்துகொள்வதற்காக ஆவலுடன் கேட்டாள். உடனே அவர், "நியதி நீ என் பொண்ணு தான? இந்த அப்பா சொன்னா நீ அத கண்டிப்பா கேப்பீல?" என்று அவளிடம் நிதானமான குரலில் கேட்டார்.

"ஆமாபா நான் உங்க பொண்ணு தான். நீங்க என்ன சொன்னாலும் கண்டிப்பா கேட்பேன்" என்று உறுதியான குரலில் கூறினாள். "அப்போ நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். உன்ன தவிர வேறுயாராலையும் செய்யவே முடியாது" என்று மட்டும் கூறினார். தந்தைக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கு ஏதோ உபாயம் கிடைத்திருக்கிறது என்றெண்ணி, "சொல்லுங்கப்பா நான் அத கண்டிப்பா செய்றேன். இந்த பிரச்னையில இருந்து வெளிய வர்றதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்றேன். நான் இப்போ என்னப்பா செய்யணும்?" என்று கேட்டாள்.

உடனே அவர், "நீ அவர கல்யாணம் பண்ணிக்கனும்மா" என்று கூறவந்ததை பட்டென போட்டுடைத்தார். நியதியால் தன்னுடைய காதுகளை நம்பமுடியவில்லை. இந்த யோசனைக்கு ஏன் வந்தார் என்று அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அப்படியே நிற்கவும், "முடியாதுன்னு மட்டும் சொல்லீராத நியதி. இந்த கல்யாணம் நடக்கலைனா நம்ம குடும்பம் எந்த நிலைக்கு ஆளாகும்னு உனக்கு நல்லா தெரியும். அத நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு" என்று அவர் பயத்துடன் கூறினார்.

"இல்லப்பா அது ரியாவோட இடம் நான் அங்க...." என்றவளை இடைமறித்து, "அவ பேரகூட சொல்லாத. நாம இப்போ இருக்குற இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு முழுக்கமுழுக்க அவா ஒருத்தி மட்டும் தான் காரணம்" என்று கோபத்துடன் கூறினார். ஆனாலும் நியதிக்கு மனம் ஒப்பவே இல்லை. அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கவும் வரதராஜன், "என்னைய இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்தக்கூடிய தெய்வமா நான் உன்கிட்ட இத கேக்குறேன். தயவு செஞ்சு நியதி இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கோமா" என்று கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க தன்னுடைய இருகைகளையும் கூப்பியவாறு அவள்முன் நின்றார்.

எப்போதும் இமயத்தின் கம்பீரமும், நேர்கொண்ட பார்வையும், கணீரென்ற குரலுமாக அவரைப் பார்த்த நியதிக்கு இன்று அவர் கூனி குறுகி நிற்பதைப் பார்க்கவும் அதிர்ச்சியடைந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்த வெள்ளம்போல் வந்தது. அவள் சட்டென அவருடைய கையைப் பிடித்து, "அப்பா இப்படி செஞ்சு என்ன பாவத்துக்கு ஆளாகிறாதீங்க. நான் இந்த கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தான? கண்டிப்பா பண்ணிக்கிறேன்" என்று அவள் கூறவும் வரதராஜனின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அவள் மணமகள் கோலம் பூண்டாள்.
_ba69e78a-8fe0-4ae2-83c9-2929ce28f3e0.jpg
இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் அங்கு இரு குடும்பத்தாரும் என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் பதற்றத்தில் இருந்தனர். அப்போது ஆரியவர்தன் மணமகனாக மணமேடையில் அமர்ந்தான். மாலினியும் சரணும் திகைத்து நிற்க சந்திரமதிக்கும் ரஞ்சித்துக்கும் ஆரியவர்தன் ஏதோ செய்யப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தது.

வரதராஜன் நியதியை மணமகள் கோலத்தில் அங்கு வந்து அமரவைத்ததும் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியம். நியதி ஆரியவர்தனின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் நிறைய கேள்விகள் இருந்தன. ஆரியவர்தனும் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-18 at 4.12.42 PM.jpeg
விதி யாரை, எப்போது, எந்த இடத்தில், எந்த நிலைக்குத் தள்ளும் என்று யாருக்கும் தெரியாது. அது போலத்தான் இங்கும் நியதி விதியின் விளையாட்டால் சூழ்நிலைக் கைதியானாள். ஐயர் தாலியை அணிவிக்குமாறு கூற ஆரியவர்தன் நியதிக்கு அந்த தங்கத் தாலியை அணிவித்தான். நியதி மிஸ்ஸஸ் ஆரியவர்தன் ஆனாள்.

மாயங்கள் தொடரும்...

 

Attachments

  • WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
    WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
    34.8 KB · Views: 1

Krishna Tulsi

Moderator
மாயம் 7
திருமணம் முடிந்ததும் வர்தன் குடும்பத்தார் நியதியை அழைத்துச் சென்றபோது அவளுடைய கண்கள் வரதராஜனைத் தேடின. ஆனால் அவர் எங்கும் தென்படவில்லை. அப்படியே தேடிக்கொண்டிருந்தவளின் கண்களுக்கு சரண் அகப்பட்டான். அவளுடைய நெருங்கிய நண்பனாக இருந்தபோதும் அந்த சூழ்நிலையில் எந்த ஒரு உதவியும் செய்யமுடியாதவனாய் தன்னுடைய இயலாமையை நினைத்து மிகவும் வருந்தினான்.

அவனுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டவளாய் 'சரண் நீ கவலப் படாத’ என்று தன் கண்ணசைவின் மூலம் வெளிப்படுத்தினாள். மணமக்கள் இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அமர்ந்துகொள்ள சந்திரமதியும் ரஞ்சித்தும் மற்றொரு காரான புகாட்டியில் அமர்ந்துகொண்டனர்.
_5a434f04-402e-47ba-ba48-5ec100c6ed35.jpg
வரதராஜனை எங்கு தேடியும் காணமுடியாத காரணத்தால் நியதியின் முகம் வாடி இருந்தது. மணமக்களை வர்தன் பாலஸிற்கு அழைத்துச் சென்ற காரில் நிசப்தம் மட்டுமே நிலவியது.

இங்கு வரதராஜன் மாலினியுடன் தன் காரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது மாலினி தன்னுடைய மன ஆற்றாமை காரணமாக புலம்பிக்கொண்டிருக்க அது எதுவும் காதில் கேட்காதவராய் தனக்கும் ஆரியவர்தனுக்கும் இடையேயான உரையாடல் நினைவிற்கு வந்தது.

வரதராஜன் அறைக்குள் வந்தபோது ஆரியவர்தன் அங்குள்ள பெரிய கண்ணாடி கதவின் வழியாக வெளியே பார்த்தவாறு தன்னுடைய வீல்சேரில் அமர்ந்திருந்தான்.
அவர் உள்ளே வருவது தெரிந்ததும், "என்ன செய்யப்போறீங்க மிஸ்டர் வரதராஜன்?" என்று அவனிடமிருந்து கேள்வி பிறந்தது.

அவன் அந்த கேள்வியை கேட்டபோது வரதராஜனின் மனதில் பயம் குடிகொண்டது. பதில் கூறும் தகுதியை இழந்த அவர் எதுவும் பேசாமல் நீதிபதியின் முன் நிற்கும் குற்றவாளியைப் போல் அவமானத்தால் தலைகுனிந்து நின்றார். அதுவரையில் அவருக்கு தன் முதுகைமட்டுமே காட்டியவாறு அமர்ந்திருந்த ஆரியவர்தன் திரும்பி அவரைப் பார்த்தான்.
WhatsApp Image 2025-01-22 at 4.37.08 PM.jpeg
பின், "இந்த சூழ்நிலைய சரி செய்யுறதுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க?" என்று அவன் கேட்டபோது, "மிஸ்டர் வர்தன் என்ன மன்னிச்சிருங்க. இப்படி நடக்கும்னு நான்..." என்று அவர் கூறும்போதே தன்னுடைய கையசைவால் அவரை நிறுத்தினான்.
_bee2bb12-f074-4762-ad85-eee589f10973.jpg
"முடிஞ்சதபத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. நடக்கப் போறத மட்டும் பேசுவோம். இந்த கல்யாணம் நடக்கலைனா அது எனக்கு ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்ஸு. இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்” என்று அவன் கூறவும் அவர் அவனை திகைத்து நோக்கினார். “ஆழம் தெரியாம கால விட்டுட்டோம்னு நினைக்குறீங்களா மிஸ்டர் வரதராஜன்" என்று தன்னுடைய ஒற்றை புருவத்தை உயர்தி மாயப் புன்னகை புரிந்தான்.

அதில் சற்று அதிர்ந்துபோன வரதராஜன் பயத்துடன் அவனைப் பார்த்தபோது, "நான் உங்கள மிரட்டுறதா நினைக்க வேண்டாம்" என்று அவன் சாதாரணமாகக் கூறினான். உடனே அவர், "தயவுசெய்து எங்கள மன்னிச்சிருங்க மிஸ்டர் வர்தன். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன். எங்க மேல கொஞ்சம் கருண காட்டுங்க. ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சினார்.

சிறு யோசனைக்குப் பின், "சரி உங்களுக்கு ஒரு அரைமணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள இந்த கல்யாணத்த நடத்துறதுக்கான வழியத் தேடுங்க. ஏன்னா எனக்கு இப்போ இங்க கல்யாணம் நடந்தே ஆகணும்" என்று அழுத்தமாகக் கூறி மீண்டும் அந்த கண்ணாடிக் கதவின் பக்கம் திரும்பினான்.

வரதராஜன் என்னசெய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்கவும், "டைம் இஸ் ரன்னிங் அவுட் மிஸ்டர் வரதராஜன்" என்று அவன் கூறவும் அவர் அந்த அறையைவிட்டு விரைந்து வெளியேறினார்.

திருமணத்தை எவ்வாறு நடத்துவது என்று நினைத்துக்கொண்டே வந்தவருக்கு நியதியின் நினைவு வந்தது. 'நியதியும் நம்ம பொண்ணு மாதிரி தான. அழகு, அறிவு, பொறுப்பு, பொறுமை எல்லா குணமும் அவளுக்கு இருக்கு. அவள கல்யாணம் பண்ணிக்க யாராயிருந்தாலும் கொடுத்துவச்சிருக்கணும். இப்போ ரியா இடத்துல அவள உட்காரவச்சா மிஸ்டர் வர்தன் சொன்னமாதிரி அவருக்கு கல்யாணமும் நடந்துரும், நம்ம பிஸினஸும் தப்பிச்சிடும்' என்று ஒரு யோசனை தோன்றியது.

அதனால்தான் நியதியை அவர் ரியாவின் இடத்தில் அமர வைத்தார். அங்கு பாசம் நீங்கி சுயநலம் மேலோங்கியதை நினைத்து அவர் மிகவும் வருந்தினார். சட்டென கார் அவர்களது வீட்டின் முன் நின்றதும் அவர் நிகழ்காலத்திற்கு வந்தார். அதுவரை புலம்புவதை நிறுத்தாமல் இருந்த தன்னுடைய மனைவியை ஆசுவாசப் படுத்திவிட்டு தன்னுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

அங்கு ‘வர்தன்ஸ் பேலஸை’ அனைவரும் அடைந்தபோது மாலை நேரமாகி இருந்தது. மணமக்களை சந்திரமதி ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றார். ஆரியவர்தனின் மனைவியாகவும், வர்தன் குடும்பத்தாரின் மருமகளாகவும் நியதி அந்த வீட்டினுள் தன்னுடைய முதல் அடியை எடுத்துவைக்க இருவரும் உள்ளே சென்றனர். பூஜை அறைக்கு மணமக்களை சந்திரமதி அழைத்தபோது ஆரியவர்தன் வரமறுத்துவிட்டான்.

உடனே அவர், "ஆரி உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடந்திருக்கு. நீ ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்க போற. அதுனால உனக்காக இல்லைனாலும் எனக்காகயாவது வா" என்று அணையிடுவதுபோல் கூறவும் ஆரியவர்தன் பூஜை அறைக்கு வந்தான்.

அந்த பூஜை அறையில் கண்ணனும் ராதையும் அழகாக அலங்கரிக்கப் பட்டு ஒரு புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தனர்.

_b98e61cc-64b9-4d32-a9f9-3a25bc76c513.jpg
நியதியை விளக்கேற்றுமாறு சந்திரமதி கூறியபோது அவள் தயங்கி நின்றாள். அவளை அழைத்து விளக்கேற்றவைத்தார். திருமண சடங்குகள் அனைத்தும் முடிவுற்றபிறகு சந்திரமதி நியதியை தன் அறைக்கு அழைத்துச் செல்ல, முதல் தளத்தில் இருக்கும் ஆரியவர்தனின் அறைக்கு ரஞ்சித் அவனை லிஃட்டில் அழைத்துச் சென்றான்.
WhatsApp Image 2025-01-22 at 5.23.16 PM.jpeg
நியதி எதுவும் பேசாமல் நிற்க சந்திரமதி பேசத் துவங்கினார், "இன்னைக்கு யாருமே எதிர்பார்க்காத பல விஷயம் நடந்திருக்கு. மனுஷங்க எல்லாரும் அவங்க நினைக்குறதுதான் நடக்கணும்னு விரும்புறாங்க. ஆனா கடவுள் ஒருத்தர் இருக்காரு அவர் நினைக்குறதுதான் நடக்கும்னு யாருக்குமே தெரியல. இப்பகூட பாரு நான் ஆரிகாக ரியாவ தேர்ந்தெடுத்தேன் ஆனா நீதான் அவனோட வாழ்க்கை துணையா வரணும்னு இருக்கு..." என்று பெருமூச்சு விட்டார்.

மீண்டும் அவர் பேசத் துவங்கினார், "எனக்கு வயசாயிருச்சி. எனக்கப்பறம் ஆரிய யாரு பாத்துக்குவான்னு ஒரு பயம் மனசுல இருந்தது. அதான் ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணா அவா அவன பாத்துக்குவான்னு தான் கல்யாணத்துக்கே ஏற்பாடுசெஞ்சேன். என் ஆரிக்கு கல்யாணத்துல இஷ்டமே இல்ல. ஆனா நான் சொன்னேங்கிற ஒரே காரணத்துக்காகதான் அவன் சம்மதிச்சான்" என்று தன் பேரனுக்கு திருமணம் செய்ய வேண்டிய காரணத்தை அந்த முதியவள் நியதிக்கு விளக்கினாள்.
_3f4f0845-9090-4810-8c08-d4933df5e1ba.jpg
பின் நியதியின் கையைப் பற்றி, "நியதி இனிமேல் ஆரிய நான் உன் கிட்ட ஒப்படைக்குறேன். நீ அவன் கூடவே இருந்து அவன நல்லா பாத்துக்குவியாமா?" என்று அவளிடம் கெஞ்சுவதுபோல் கேட்டார். உடனே நியதி, "நான் பாத்துக்குறேன் பாட்டி. நீங்க கவலைப்படாதீங்க" என்று அவருக்கு வாக்குறுதியளித்தாள்.

அவளுடைய வார்த்தைகளில் நிம்மதியுற்றவராய், "இது போதும்மா எனக்கு. நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்க்கைய நடத்தணும்னு நான் கண்ணன வேண்டிக்குறேன்" என்று மனநிறைவுடன் வேண்டிக்கொண்டார். அப்போது ரஞ்சித் அங்கு வந்து, "பாட்டி ஆரி அவனோட ரூம்ல இருக்கான். நான் கிளம்புறேன்" என்று சந்திரமதியை மட்டும் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் நியதியை கண்டுகொள்ளாமல் அப்படியே சென்றதைப் பார்த்த சந்திரமதி, "ரஞ்சித்கு ஆரினா ரொம்ப பிடிக்கும். அவனுக்கு இப்படி நடந்தது ரஞ்சித்கு ரொம்ப கோவம். அதான்...." என்று கூறியவரை இடைமறித்து, "புரியுது பாட்டி" என்று மட்டும் கூறினாள். சந்திரமதி நியதியின் கையில் பால் டம்பளரை கொடுத்து ஆரியவர்தனின் அறைக்கு அனுப்பிவைத்தாள்.

அந்த வெள்ளி பால்டம்பளரை வாங்கியவள் அவனிடம் என்னவெல்லாம் கூறவேண்டும் என்று தன் மனதிற்குள் சிறுகுழந்தையைப்போல் உருபோட்டுக்கொண்டே வந்தாள். அவனுடைய அறையை சென்றடைந்ததும் உள்ளே செல்லாமல் தயங்கியவாறு வெளியே நின்றுகொண்டிருந்தாள். சிங்கத்தின் குகைக்குள் செல்பவருக்கு எந்த அளவு பயம் இருக்குமோ அதைவிடவும் அதிக அளவிலான பயத்தில் நியதி இருந்தாள். பின் அனைத்து தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு கதவின் கைப்பிடியை திருகி உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே வந்தபோது அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சுகளைப் போல் மெழுகுவர்த்தி வெளிச்சம் தெரிய அங்குள்ள ஃரென்ச் விண்டோ வழியாக சந்திரன் தன்னுடைய குளிர்ந்த ஒளியை அந்த அறையினுள் பரவவிட்டிருந்தான். நியதி ஆரியனைத் தேட அவன் தன்னுடைய வீல்சேரில் ஃரென்ச் விண்டோவின் அருகில் அமர்ந்தவாறு நிலவைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
_52b5c137-75bd-4eec-b15d-c0407f02df24.jpg
அவனைக் கண்டதும், அச்சத்தால் நியதியின் இதயத் துடிப்பு பலமடங்கு அதிகரித்தது. அவள் மெதுவாக தன்னுடைய அடிகளை அளந்து அளந்து ஆரியனை நோக்கி எடுத்து வைத்தாள். அவனருகே சென்று, "சார்" என்று மெல்லிய குரலில் அழைத்தபோதுதான் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
_5d9a90dc-5863-4e9f-8af3-9114f2010668.jpg
அவன் அவளை பார்த்த உடனே நியதி தான் கூற நினைத்த அனைத்தையும் மறந்து பயத்தில் உளர ஆரம்பித்தாள். "சார்...அது....ரியா....வந்து....இப்படி..." என்று திக்கிக்கொண்டிருந்தவளை தன்னுடைய கையசைவால் நிறுத்தினான்.

பின், "நியதி நான் பாஸ்ட்ட பத்தியும் ஃயூசரபதியும் எப்பவுமே யோசிக்க மாட்டேன். எனக்கு ப்ரெசென்ட் மட்டும் தான் முக்கியம். இப்போ நமக்கு கல்யாணம் ஆயிருச்சி. அத எவ்வளவு சீக்கரம் அக்சப்ட்பண்றியோ அது உனக்கு நல்லது. ஓகே?" என்று அவன் கேட்கவும் அவள் 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

பின் தன் அறையினுள் இருக்கும் மற்றொரு அறையைக் காட்டி, "இது என்னோட பெர்சனல் சேம்பர். இனிமேல் நீ இங்கயே தங்கலாம். நீ வேற ஒரு ரூம்ல தங்குறது பாட்டிக்கு தெரிஞ்சதுனா அவங்க மனசு கஷ்டப்படும். அதுனால தான் என் ரூம்லயே இருக்குற இந்த சேம்பர நான் உனக்கு தர்றேன்" என்று கூறினான்.

அவள் அதை பார்த்துக்கொண்டே நிற்கவும், "என் ரூம தாண்டித்தான் இந்த சேம்பர்கு வரமுடியும். அதனால நீ பாதுகாப்பாதான் இருப்ப. போ" என்று அவன் கூறவும் நியதி விரைந்து அந்த அறையினுள் சென்றாள். அந்த அறையும் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவள் எதையும் கவனிக்காமல் அந்த பஞ்சு மெத்தையில் அமர்ந்தாள்.

அவளுடைய மனதில் 'ரியா ஏன் இப்படி பண்ணா? என்ன செய்யிறதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு தான செய்வா? இன்னைக்கு எப்படி எனக்குக் கூட தெரியாம இப்படி பண்ணீட்டா? எங்க இருந்து அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு?' என்று பல கேள்விகள் அவளுடைய மனதில் ஓடியது. அவற்றை மனம் யோசிக்கத் தயாராக இருந்தாலும் அவளுடைய உடல்சோர்வின்காரணமாக விரைவில் தூங்கிவிட்டாள்.

இங்கு மாலினி படுக்கை அறையிலும் ரியாவைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்க வரதராஜனுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. உடனே அவர், "இனிமேல் நீ ரியாவ பத்தி ஏதாவது பேசுன, அப்பறம் நடக்குறதே வேற. இன்னைக்கு எல்லார் முன்னாடியும் என்ன அவமானப் படுத்தீட்டுப் போய்ட்டா. நான் அவளுக்கு அப்பாவும் இல்ல அவ எனக்கு பொண்ணும் இல்ல”

“எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்ணு. அது நியதி மட்டும் தான். இன்னைக்கு மட்டும் அவ மிஸ்டர் வர்தன கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நம்ம நிலைமை என்ன ஆகிருக்கும்னு நினைச்சாலே..." என்று தன் பயத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய மகளை பழித்துவிட்டு நியதியை வாழ்த்தி பேசுவதை மாலினியால் சிறிதும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நியதியை நோக்கி அவள் தன்னுடைய கோபக் கணைகளை வீச ஆரம்பித்தாள்.

"என்ன இப்படி சொல்றீங்க? ரியா நம்ம பொண்ணு. அவ காதலிச்சா, ஆனா இந்த மாதிரியான காரியம் பண்ணவே மாட்டா. இது எல்லமே அந்த சதிகாரி நியதியோட வேலையா தான் இருக்கும். அவ தான் நம்ம பொண்ணோட மனச மாத்தியிருக்கா" என்று ஆவேசத்தில் கூறினாள். ஆனால் அவரோ, "நியதிய பத்தி தப்பா பேசாத மாலினி. அவ ரொம்ப நல்ல பொண்ணு" என்று அதட்டும் குரலில் கூறினார்.

உடனே அவள், "அந்த அனாதை மேல வச்சிருக்குற நம்பிக்கை கூடவா உங்க பொண்ணு மேல இல்ல? ஏன் உலகம் தெரியாம இருக்கீங்க? அந்த நியதி இருக்காள்ள அவ பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நம்ம பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துட்டா" என்று பதிலளித்தாள். "நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

தன்னுடைய மனதில் இருந்த அனைத்தையும் மாலினி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள், "எங்கேஜ்மென்ட், கல்யாணம்னு எல்லாத்துக்கும் அவ்வளவு சந்தோஷமா தயாராகிக்கிட்டு இருந்த ரியா கடைசீ நேரத்துல மனசுமாற என்ன காரணம்? அதோட ரியா என்ன பண்றாங்குறது நமக்கு தெரியுதோ இல்லையோ, நியதிக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி இருக்கும்போது இந்த விஷயத்த ஏன் நியதி உங்க கிட்ட சொல்லல?" என்று ஒவ்வொரு சந்தேகங்களையும் அடுக்கினாள்.

மாலினி ஒவ்வொன்றாகக் கூறவும் 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கிணங்க வரதராஜனுக்கு நியதியின் மீதுள்ள நம்பிக்கை ஆட்டம் கொடுக்க ஆரம்பித்தது. "ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கலாம் ஆனா கண்மூடித்தனமா நம்பிக்கைவைக்குறது ரொம்ப தப்புங்க. நான் சொல்றத சொல்லீட்டேன், இனிமேல் உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

வரதராஜனால் அன்று இரவு முழுவதும் தூங்க இயலவில்லை. அவருடைய மனம் போர்களமானது. ரியாவின் மீதுள்ள மகள் பாசம் ஒரு தரப்பில் இருக்க மற்றொறு தரப்பில் நியதியின் மீதுள்ள நம்பிக்கை இருந்தது. பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது. பாசத்தின் தரப்பு வலிமை பெற நியதியின் மீதுள்ள நம்பிக்கை வலுவிழக்கத் துவங்கியது. இறுதியில் ரியாவின் மீதான மகள் பாசம் வென்றது.

மறுநாள் காலை நியதி விரைந்து எழுந்து தயாராகி வந்தபோது ஆரியவர்தனும் தன்னுடைய அறையில் தயாராகி இருந்தான். இருவருமாக சேர்ந்து லிஃட்டில் கீழே வந்தார்கள்.
_451bc032-c72a-40d5-aa86-0444ce6fc102.jpg
டைனிங் டேபிளில் காலை உணவுக்காக அமர்ந்திருந்த சந்திரமதி புதுமணத் தம்பதியர் வருவதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் இருவரும் சந்திரமதியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காலை உணவுக்காக அமர்ந்தனர்.

அப்போது ரஞ்சித்தும், பார்கவும் அங்கு வந்தனர். பார்கவ் ஆரியவர்தனின் செக்ரட்டரியாக இருந்தாலும் அவனையும் குடும்ப உறுப்பினரைப் போலவே பார்ப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. காலை உணவு முடிந்ததும் சந்திரமதி தன்னுடைய அறைக்கு திரும்பிவிட நியதி ஆரியனிடம் வந்தாள். "சார்" என்று நியதி ஆரியவர்தனை அழைக்க அவன் திரும்பிப் பார்த்தான்.

உடனே அவள், "நான் என் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன்" என்று கூறவும், "கண்டிப்பா போயிட்டு வா ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்" என்று கூறி அவளை வெளியே அழைத்துச் சென்றான். வெளியே வந்தவுடன் ஆரியன் பார்கவின் பக்கம் திரும்பி கண்ணசைவால் ஏதோ சொல்ல பார்கவ் யாரையோ அழைத்தான்.

அந்த நபர் வந்து நின்றதும், "நியதி இது ராமு. இவர் தான் உன்னோட பர்சனல் கார் டிரைவர். நீ இனிமேல் எங்க போனாலும் அந்த கார்ல போகலாம்" என்று அவளிடம் கூறினான். 'பர்சனல் காரா!' என்று நியதி நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரியவர்தன் தன்னுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

உடனே அவள் "ஓகே சார்" என்று மட்டும் கூறினாள். ஆரியவர்தன் அலுவலகத்திற்குச் சென்றபிறகு நியதி அந்த பர்சனல் காரில் வரதராஜன் வீட்டிற்குச் சென்றாள்.
_4677f705-9ef8-499c-bc92-22fdb92b4f4d.jpg
அவள் வேக வேகமாக வீட்டினுள்ளே அடியெடுத்து வைக்க எத்தனித்தபோது, "உள்ள வராத. அங்கேயே நில்லு!" என்று கோபத்துடன் ஒரு குரல் கேட்டது.
 

Krishna Tulsi

Moderator
மாயம் 8
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் உள்ளே எடுத்துவைக்கப்போன தன்னுடைய வலதுகாலை நியதி மெல்லப் பின்னிழுத்துக்கொண்டாள். அவள் அதிர்ச்சியுடன் பார்க்கவும், "எதுக்கு இங்க வந்த? நாங்க உயிரோட இருக்கோமா இல்லையான்னு பாக்க வந்தியா?" என்று மாலினி ஆவேசமாகக் கத்தினாள். அவளுடைய இந்த குத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் அங்கு அமர்ந்திருந்த வரதராஜனை நியதி பார்த்தாள்.

அவர் மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டு நியதி பேசத் துவங்கினாள், "அம்... மேடம் ஏன் இப்படி பேசுறீங்க? நான் எதுக்கு அப்படி நினைக்கப் போறேன்?" என்று தாழ்ந்தக் குரலில் கேட்டாள். உடனே மாலினி, "சும்மா எங்கமேல அக்கறை இருக்குற மாதிரி நடிக்காத. நல்லவ மாதிரி வேஷம் போட்டுட்டு இப்படி ஏமாத்திட்டியே. செய்...நீயெல்லாம் ஒரு பொண்ணா?" என்று கடுமையான வார்த்தைகளை நியதியின் மீது பயன்படுத்தினாள்.

அதைக் கேட்டு கவலையடைந்த நியதி, "ஏமாத்திட்டேனா? நானா? நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல" என்று குழப்பத்துடன் கேட்டாள். "என் பொண்ணோட வாழ்க்கைய அநியாயமா கெடுத்துட்டியேடி சதிகாரி. நீயெல்லாம் நல்லாவா இருப்ப?" என்று மாலினி அவள் மீது பழி சுமத்தவும் நியதி மேலும் அதிர்ச்சியடைந்தாள். "கனவுல கூட என் ரியா நல்லா இருக்கணும்னு நினைக்குற நான், ரியாவோட வாழ்க்கைய கெடுத்தேனா? என்ன சொல்றீங்க?" என்று புரியாமல் கேட்டவள் வரதராஜனை நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பினாள்.

எப்போதும் மாலினியின் வசைமொழிகளிலிருந்து தன்னை காப்பாற்றும் வரதராஜன் இன்று வார்த்தைகள் வரம்பு மீறிச்சென்றும் எதுவும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தது மேலும் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவள் வரதராஜனைப் பார்த்து, "ஏன் அப்பா இப்படி பேசுறாங்க? நான் என்ன..." என்று அவள் கேட்கும் முன்பே, "அவா பேசுறதுல என்ன தப்பு" என்று எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அவர் கூறியதைக்கேட்டு மாலினி ஆச்சரியமடைய நியதி அதிர்ச்சியடைந்தாள்.
WhatsApp Image 2025-01-25 at 7.23.41 PM.jpeg
'எப்பவும்போல நியதிக்கு சப்போட் பண்ணுவாருன்னு நினைச்சோம். ஆனா நமக்கு சாதகமா பேசுறாரு....நல்ல வேள இந்த மனுஷனுக்கு இப்பவாவது புத்தி வந்ததே' என்று தன்னுடைய மனதிற்குள் மாலினி மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் நியதிக்கு அவளுடைய செவிகளை நம்பவே முடியவில்லை. வரதராஜன் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று புரியாமல் அவரையே அவள் பார்த்துக்கொண்டு நிற்க அவர் மீண்டும் பேசத்துவங்கினார்.

"நீ ஏன் எங்கள ஏமாத்துன? ரியா கல்யாணத்தன்னைக்கு இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சும் நீ ஏன் எங்ககிட்ட எதுவும் சொல்லாம மறச்ச? சொல்லு நியதி" என்று தன்னுடைய குரலை உயர்தி நியதியைப் பார்த்துக் கேட்டார். அவருடைய குரலில் சற்று அதிர்ந்த நியதி, "அப்பா நான் எதுக்கு உங்கள ஏமாத்தப் போறேன்? எனக்கு ரியா இப்படி பண்ணப்போறாங்குறதே தெரியாது. தெரிஞ்சிருந்தா..." என்று அவள் கூறும்முன்பே, "பொய் சொல்லாத நியதி. ரியா தன்னோட எல்லா விஷயத்தையும் எங்ககிட்ட சொல்றாளோ இல்லையோ உன்கிட்ட சொல்லாம செய்யவே மாட்டா. அந்த காரணத்துனால தான் நான் இந்த பொறுப்ப உன்கிட்ட ஒப்படைச்சேன்....உன்னையும் என்னோட பொண்ணுமாதிரிதான நினச்சேன். உனக்கு தேவையான எல்லாத்தையும் பாத்துபாத்து செஞ்சேன்ல. அப்படி இருக்கும்போது நீ பணக்கார வாழ்க்கைய வாழணும்ங்கிறதுக்காக என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டியே" என்று ஆற்றாமை காரணமாக அவளை பார்த்து கத்தினார். அப்போது நியதி எந்தஒரு அசைவும் இல்லாமல் அப்படியே அவரைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள். ரியாவை மட்டும் தன்னுடைய பெண்ணாக குறிப்பிட்டதைக் கேட்டதும் நியதியின் மனம் மிகவும் நொந்து போனது.

அவளுடைய கண்களில் கண்ணீர் திரையிட வரதராஜனைப் பார்த்தவாறு, "அப்பா ஏன் இப்படியெல்லாம் பேசு...." என்று தன்னுடைய வார்த்தைகளை முடிப்பதற்கு முன்பே, "என்ன இனிமேல் அப்பான்னு கூப்பிடாத. இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நீ கிளம்பலாம் நிய....இல்ல இல்ல மிசெஸ் ஆரியவர்தன்" என்று பல வார்த்தை கனல்களை அவள்மீது எறிந்தார்.

வரதராஜன் தன்னை ‘அப்பா’ என்று அழைக்கக்கூடாது என்று கூறியதும் அவளுடைய மனம் சுக்குநூறாக உடைந்தது. அங்கு அதற்குமேலும் நிற்கமுடியாமல் அவள் விரைந்து வெளியேறி தன்னுடைய காரில் அமர்ந்துகொண்டாள்.
_4b39da07-5b8e-471c-bd74-22b6d72e3235.jpg
"மேடம் இப்போ எங்க போகணும்?" என்று கேட்ட அந்த டிரைவரிடம், "வீட்டுக்கு" என்று ஒற்றை பதில் மட்டும் அளித்தாள்.

‘வர்தன்ஸ் பாலஸ்’ செல்லும்வரை தன்னுடைய கண்ணீரை அடக்கிக்கொண்டாள். நியதி வீட்டினுள் விரைந்து நுழைந்ததைப் பார்த்த சந்திரமதி, "என்னமா உன் அப்பா அம்மாவ பாத்து பேசுனியா?" என்று கேட்டதற்கு, "பேசினேன்....எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு பாட்டி. அப்பறம் வர்றேன்" என்று முதியவள் கண்களை பார்க்காமல் கூறிவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு வேகவேகமாகச் சென்றாள்.
_bc428f96-9a90-46be-bc66-e40bae221ca4.jpg
நியதியின் செய்கையிலிருந்தே வரதராஜன் வீட்டில் ஏதோ நடந்திருப்பதை முதியவள் உணர்ந்தாள். உள்ளே சென்று பூட்டிக்கொண்டவள் மாலை ஆகியும் வெளியே வரவில்லை. சந்திரமதி அவளுடைய அறைக்கு உணவை அனுப்பி வைத்தபோதும் நியதி அதனை உண்ணவில்லை.

மாலையில் சந்திரமதி அந்த பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தார். அலுவலகவேலை அனைத்தையும் முடித்துவிட்டு வீடுதிரும்பிய ஆரியவர்தனைப் பார்த்து, "என்னப்பா இன்னைக்கு நாள் எப்படி இருந்துச்சு?" என்று தன்னுடைய வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
WhatsApp Image 2025-01-24 at 10.01.40 PM.jpeg
அதற்கு, "ம்ம்..நல்லா தான் பாட்டி போச்சு. ஆமா நியதிய எங்க?" என்று கேட்க அவனுடைய கண்கள் அவளைத் தேடின.

உடனே அவர், "வரதராஜன் வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து அவ அப்செட்டாவே இருக்கா. என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு கவலையா இருக்கு. நீ போய் பாரு ஆரி" என்று தன் மனதில் இருந்ததைக் கூறினார். "நீங்க கவலப் படாதீங்க பாட்டி. நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

நியதி தன்னுடைய அறையில் உள்ள மெத்தையில் கால்களை மடக்கி அமர்ந்து தன்னுடைய முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தாள்.
_482de0b3-167a-44aa-bd9f-7c5e019c727e.jpg
'அப்பாவுக்கு ரியா மட்டும் தான் அவரோட மகளா? நான் இல்லையா? நான் ரியாவோட வாழ்க்கைய கெடுப்பேன்னு அவருக்கு எப்படி தோணுச்சு? அவர் என் மேல வச்ச நம்பிக்க அவ்வளவு தானா?' என பல எண்ணங்கள் நியதியின் மனதில் தோன்றின.

அப்போது அவளுடைய அறையின் கதவு தட்டைப்பட்டது. உடனே அவள் தன்னை சரிசெய்துகொண்டு மெத்தையிலிருந்து எழுந்தபோது கதவைத் திறந்து ஆரியன் உள்ளே நுழைந்தான். அவள் எதுவும் பேசாமல் தன்னுடைய இமைகளை தாழ்த்தியாறு நிற்க அவன் பேசத்துவங்கினான், "நீ அப்செட்டா இருக்கிறதா பாட்டி சொன்னாங்க. என்ன ஆச்சு?” என்று வினவினான்.
WhatsApp Image 2025-01-24 at 10.22.04 PM.jpeg
ஆனால் அவளோ, "ஒன்னும் இல்ல சார். வீட்டுக்கு போனேன், அம்மா அப்பாவ பாத்துட்டு வந்தேன்" என்று கீழே பார்த்தவாறு கூறினாள். அவன் பலமுறை அவளிடம் காரணத்தைக் கேட்டும் அவள் கூற மறுத்துவிட்டாள். இறுதியாக அவன், "நியதி நீ என்ன உன்னோட ஹஸ்பண்டா நினைக்க வேண்டாம். ஒரு ஃரெண்டா, ஒரு வெல்-விஷரா நினச்சு உன் மனசுல உள்ளத ஷார் பண்ணு" என்று அவன் கேட்டபோது அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கண்ணீரை துடைத்துவிட்டு தன்னுடைய விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அங்கு நடந்தவற்றை மேலோட்டமாக அவனிடம் கூறினாள். அவள் கூறிமுடித்த பின்பு அங்கு அமைதி நிலவியது. பின் ஆரியன் பேசத் துவங்கினான், "நியதி மனுஷங்க எப்பவுமே சூழ்நிலை கைதியா மாறிடுறாங்க. அதேமாதிரிதான் மிஸ்டர் வரதராஜனும் அன்னைக்கு ஒரு பிசினஸ் மேனா, தன்னுடைய தொழில காப்பாத்த நினச்சு முடிவெடுத்தவர் காலம் கடந்ததுக்கு அப்பறம் ஒரு அப்பாவா தான் எடுத்த முடிவ நினைச்சு வருத்தப்படுறாரு. ஆனா அவர்தான உன்ன ரியாவுக்கு பதிலா உக்காரவச்சது. டெசிஷன் எல்லாத்தையும் அவரேஎடுத்துட்டு உன் மேல பழிபோடுறது தப்பு. திஸ் இஸ்ஸின்ட் ஃர்" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்தான்.

ஆனால் நியதியோ, "இல்ல சார் அவரோட பாயிண்ட் ஆஃ வியூல இருந்து பாத்தா அவர் செஞ்சது சரிதான். யாரா இருந்தாலும் அந்த சூழ்நிலைல அப்படி தான் செஞ்சிருப்பாங்க. ஆனா என்ன பத்தி நல்லா தெரிஞ்சும் என்மேல அவர் நம்பிக்க வைக்காமபோனதுதான் சார் எனக்கு வருத்தமே" என்று அப்போதும் வரதராஜனை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாகவே நியதி பேசினாள். "கவப்படாத நியதி மனுஷங்க எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. அவங்களோட தப்ப உணர்ந்து மாறக்கூடிய காலமும் வரும். அப்போ அவர் உன்னப்பத்தி புரிஞ்சிக்குவாரு" என்று அவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறவும் அவள் லேசாக புன்முறுவல் செய்தாள்.

பின், "இதையே யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு. நான் டின்னர கொண்டுவர சொல்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்லவிருந்தவனிடம், "ஒரு நிமிஷம் சார்" என்று அவனை நிறுத்தினாள். அவன் திரும்பிப் பார்த்தபோது, "நீங்களும் என்ன அப்பா மாதிரியே.....அதாவது நான் தான் ரியாவ பிரைன் வாஷ் பண்ணி..." என்று அவள் முடிக்கும் முன்பே, "நான் ஏற்கனவே சொல்லீருக்கேன் ரியா இஸ் மை பாஸ்ட். அவள பத்தி பேசாத" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

தன்னுடைய இன்டெர்காம் மூலம் கிச்சனுக்கு அழைத்து நியதி சாப்பிடுவதற்கு கொண்டுவருமாறு ஆணையிட்டான். பின் தன்னுடைய புளூடூத் மூலம் பார்கவை அழைத்து ஏதோ கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான். அன்றிரவு நியதியின் கைபேசிக்கு சரணிடமிருந்து அழைப்பு வந்தது. "என்ன நிதி, எப்படி இருக்க? எந்த ஒரு பிரச்னையும் இல்லைல? வர்தன் சார் ஏதாவது சொன்னாரா?" என்று அடுக்கடுக்காக அவளை விசாரித்தான்.

ஆனால் அவளோ, "நல்லா இருக்கேன் சரண்" என்று அவனுடைய அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலை கொடுத்தாள். அவளுடைய குரலில் மாற்றமும், எப்போதும் 'சான்' என்று அழைப்பவள் இன்று 'சரண்' என்று அழைப்பதையும் வைத்து அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை சரண் நன்கு உணர்ந்தான்.

பலமுறை அதைபற்றி அவளிடம் கேட்டபோதும் அவள் மழுப்பவும் அவன், "எனக்கு உன்ன பாக்கனும்போல இருக்குது நிதி. எப்பவும் நாம மீட் பண்ற ரெஸ்டாரண்ட்டுக்கு நாளைக்கு ஈவ்னிங் வந்துரு" என்று கூறவும் அவள் ஒப்புக்கொண்டாள். மறுநாள் மாலை அவர்கள் இருவரும் சந்தித்தபோது சரண் அவளைப் பார்த்து, "என்ன பிரச்சனை நிதி சொல்லு" என்று அவன் விசாரித்தான்.

ஆனால் அப்போது அவள் கூறாமல் இருக்கவும், "நிதி யாருக்கு தெரியுதோ இல்லயோ, உன்னப்பத்தி எனக்கு நல்லா தெரியும். உன்னோட சின்ன குரல் மாற்றத்தை வச்சி நீ எப்படி இருக்கன்னு கண்டுபிடிச்சிருவேன். அதனால என் கிட்ட உன்னால எதையும் மறைக்கவே முடியாது. சொல்லு என்ன ஆச்சு?" என்று அவன் வினவவும் அவள் வரதராஜன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் கூறினாள்.

உடனே அவன், "வரதராஜன் சாரா அப்படி சொன்னாரு? என்னால நம்பவே முடியல. இந்த பணக்காரங்களே இப்படித்தான். வேணுங்கிறப்ப யூஸ் பண்ணீட்டு அப்பறம் தூக்கியெறிஞ்சிருவாங்க. தான்பொண்ணுன்னு வரும்போது அவரு உன்னையா பாக்குறாரு" என்று கோபம்கொண்டான். ஆனால் அவளோ, "சரண் அவரோட இடத்துல இருந்து பார்த்தா அவர் செஞ்சது எதுவும் தப்பே இல்ல. அவரப்பத்தி தெரியாதவங்க இந்தமாதிரி சொல்லலாம் ஆனா நீ... நீ சொல்லலாமா. அவரு உனக்கும் எனக்கும் எவ்வளவோ செஞ்சிருக்காரு" என்று நியதி கூறவும் அவன் தலைகுனிந்தான்.

மேலும் அவள் "அவர் என்ன மகளா ஏத்துக்கலைனாலும் பரவால்ல ஆனா அவர் எனக்கு எப்பவுமே அப்பாதான்" என்று அவள் அப்போதும் வரதராஜனை உயர்த்திப்பேசினாள். "நிதி நீ என்ன அடிச்சாலும் உதைச்சாலும் நான் உன்னைவிட்டு போகவே மாட்டேன். அதனால உனக்கு என்ன பிரச்சன வந்தாலும் நீ என்கிட்ட மறைக்காம கண்டிப்பா சொல்லுவன்னு சத்தியம் பண்ணு" என்று தன்னுடைய கையை நீட்டினான்.

அவன் கூறிய விதத்தில் சற்று சிரிப்புவர லேசாக புன்னகைத்தவள், அவனுடைய கையில் தன்னுடைய கரத்தை வைத்து சத்தியம் செய்தபோது அங்கு சிரிப்பலை பரவியது. நியதியை இந்தவிஷயத்திலிருந்து திசைதிருப்புவதற்காக சரண் வேறு விஷயங்களை பேசத் துவங்கினான்.

அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை வீடுதிரும்பிக்கொண்டிருந்த ஆரியவர்தன் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டான். தன்னுடைய கைபேசியிலிருந்து கவனத்தை வெளியே திருப்பியவனின் கண்களுக்கு நியதியும் சரணும் ஒன்றாக சிரித்துப் பேசுவதைக் கண்டான்.
WhatsApp Image 2025-01-25 at 8.54.15 PM.jpeg
ரெஸ்டாரண்டின் கண்ணாடி வழியாக அந்த காட்சியை ஆரியவர்தனால் பார்க்க முடிந்தது. அவன் அதை பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.

டிராபிக் ஜாம் சரியானதும் அங்கிருந்து அவனுடைய கார் நகர்ந்தது. நியதியும் தன்னுடைய மனஇறுக்கம் குறைந்தவளாய் வீடு திரும்பினாள். அவளுடைய புன்னகையைப் பார்த்ததும் சந்திரமதிக்கு நிம்மதியாக இருந்தது. அவள் ஆரியவர்தனின் அறைக்குச் சென்றபோது அவன் தன்னுடைய லாப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து, "சாப்டீங்களா சார்?" என்று கேட்டதற்கு 'ம்ம்' என்று மட்டும் அவனிடமிருந்து பதில் வந்தது. தன்னுடைய அறைக்குள் செல்லவிருந்தவளை அழைத்து, "இதுக்கு முன்னால எப்படி இருந்தன்னு எனக்கு தெரியாது. ஆனா இனிமேல் நீ என்னோட வைஃ....மிசெஸ் ஆரியவர்தன். அதுக்கேத்தமாதிரி நீ நடந்துக்கோ" என்று கூறினான்.

அவன் ஏன் அவ்வாறு கூறினான் என்று அவளுக்கு புரியவில்லை, ஆனாலும் அவள் 'சரி' என்று தலையசைத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றாள். அவள் சென்றதும் ஆரியவர்தன், 'நேத்து என் கூட பேசும்போது இல்லாத அந்த சந்தோஷம் இன்னைக்கு அவன் கூட பேசும்போது இருக்கு. யார் அவன்? அவனுக்கும் நியதிக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்?' என்று தன்னுடைய மனதில் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அவனுடைய கைபேசிக்கு பார்கவிடமிருந்து அழைப்பு வந்தது, "சார் நீங்க சொன்னதுபோல செஞ்சுட்டேன்" என்று அவன் சொல்ல, 'ம்ம்' என்று மட்டும் கூறிவிட்டு தன்னுடைய கைபேசியை வைத்தான். அப்படியே நான்கு நாட்கள் ஓடின. நியதியால் வரதராஜனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

அதனால் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக தன்னுடன் வரதராஜன் கன்ஸ்ட்ரக்ஷன்சில் பணிபுரிந்த சகபணியாளான மாதவியை கைபேசியின் மூலம் தொடர்புகொண்டாள். நியதி என்று தெரிந்ததும் அழைப்பை எடுத்து அவளை குசலம் விசாரித்தாள். அனைத்திற்கும் பதிலளித்துவிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும் மாதவி, அப்பா எப்படி இருக்காங்க? அந்த ட்ரீம் ப்ராஜக்ட் எந்த லெவல்ல இருக்கு?" என்று கேட்டாள்.

சிறு மௌனத்திற்குப் பின், "அந்த ப்ராஜக்ட் நம்ம கையவிட்டு போய்டுச்சுன்னு உனக்கு தெரியாதா?" என்று அவள் கேட்டபோது நியதியால் அதை நம்பமுடியவில்லை. மேலும் அவள், "நமக்கு சரியான நேரத்துல ரா- மெடீரியல்ஸ் கிடைக்கல. அதனால வேல டிலே ஆயிடுச்சு. சோ கிளையண்ட்ஸ் டீல கான்சல் பண்ணீட்டாங்க" என்று சோகத்துடன் கூறினாள்.

உடனே நியதி, "அப்போ அப்பா...." என்றவளிடம், "சார் ரொம்ப நொந்துட்டாரு. இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்ல, கான்செல் ஆனதுல நிறைய லாஸ் ஆகிடுச்சு. நீ போனதுல இருந்து நம்ம கம்பெனி ரொம்ப மோசமான நிலைக்கு போய்டுச்சு....சரி சரி எனக்கு இப்போ வேல இருக்கு நான் அப்பறமா பேசுறேன்" என்று கூறி மாதவி அழைப்பை துண்டித்தாள்.

'இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பே இல்லையே. நாம எல்லாத்தையும் சரியாய் பாத்து தானே செஞ்சோம். எதனால இப்படி நடந்தது?' என்று நியதியின் மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன ஆனால் எதற்கும் பதில் மட்டும் கிடைக்கவில்லை.

நியதி எப்போதும் காலையில் எழுந்து குளித்து, கடவுளை வணங்கிவிட்டு காலை உணவை அனைவருடனும் உண்பாள். பின் லானில் அமர்ந்து இயற்கையை ரசிப்பாள். மதிய உணவிற்குப் பின் தன்னுடைய அறையில் புத்தகங்களை வாசிப்பாள். மாலை நேரத்தில் சந்திரமதியுடன் சிறிது நேரம் செலவிடுவாள். இரவு உணவு முடிந்ததும் விரைவில் தன்னுடைய படுக்கைக்குச் சென்றுவிடுவாள். இப்படியே மூன்று வாரங்கள் கழிந்தன. அந்த வாழ்க்கை சலிப்பை உண்டாக்கியது.

அப்படியொருநாள் நியதி லானில் அமர்ந்திருந்தபோது "மேடம்" என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அங்கு பார்கவ் ஒரு கோப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
_d0298a80-48fb-44d3-b032-b221f6b4dbc3.jpg
அவன் அதை நியதியிடம் நீட்டி, "வர்தன் சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாரு" என்று மட்டும் கூறி அவளிடம் அதை கொடுத்துவிட்டுச் சென்றான். 'என்னவாக இருக்கும்?' என்று நினைத்தவாறு அதை திறந்து பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
_e86b153e-5e1d-4dc8-8a6b-0461776bd6dc.jpg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 9
அதைப் பார்த்த நியதியால் தன்னுடைய கண்களை நம்பமுடியவில்லை. ஏனென்றால் ஆரியவர்தனின் பெர்சனல் அசிஸ்டன்டாக அவள் நியமிக்கப் பட்டிருப்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வர்தன் கார்ப்பரேட் குரூப்ஸில் பணிபுரிவது சாதாரண காரியம் அல்ல. அதில் பணிபுரியும் அடிமட்ட தொழிலாளி கூட அறிவுகூர்ந்தவனாக இருப்பான். அதனால் நிறுவனத்திற்குள் எளிதில் யாராலும் நுழையமுடியாது. முதலில் நியதியும் இங்கு பணிபுரியவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தாள், ஏன் அது அவளது கனவாகவும் கூட இருந்தது.

ஆனால் வரதராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க, தன்கனவை கைவிட்டு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிந்தாள். அப்படி இருக்க இவ்வளவு வருடம் கழித்து தனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை. தன்னுடைய கண்களை கசக்கி பலமுறை பார்த்தபோதும், தன் கையைக் கிள்ளிப்பார்த்தபோதும் அந்த கோப்பிலுள்ள செய்தியில் எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இந்த சந்தோஷமான செய்தியை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தன்னுடைய கைபேசியில் சரணை அழைத்து விஷயத்தை தெரிவித்தாள். அவனும் அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்து அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தான். கைபேசியை வைத்தபோது, 'கண்ணா இனிமேலாவது நியதியோட வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராம நீதான் பாத்துக்கணும்' என்று கடவுளை சரண் வேண்டிக்கொண்டான்.
_007d1c2b-181b-4e16-b23d-78929e347f3e.jpg
இங்கு நியதி இந்த விஷயத்தை சந்திரமதியிடம் தெரிவிப்பதற்காக திரும்பியபோது ரஞ்சித் அங்கு நின்றுகொண்டிருந்தான். "ஒரு நிமிஷம் உன்கூட பேசணும் நியதி" என்று கூற அவள் அங்கேயே நின்றாள். "அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஐ யம் ரியல்லி சாரி. மிஸ்டர் வரதராஜன் அப்படி பண்ணதுல ஆரிக்கு ஏதாவது கெட்டபெயர் வந்துருமோங்குற ஆதங்கத்துலதான் அப்படி நடந்துக்கிட்டேன். சோ என்ன மன்னிச்சிடு" என்று தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரினான்.
_8cc0d137-e626-42d6-9bce-397443d5e24e.jpg
அவள், "நீங்க உங்க ஃரெண்டு மேல வச்சிருக்குற நட்புனால தான் அப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். நான் அத தப்பா எடுத்துக்கல" என்று கூறினாள். ரஞ்சித் மீண்டும் பேசத் துவங்கினான், "நியதி ஆரி தன்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்டங்கள அனுபவிச்சிட்டான். இனிமேலாவது அவன் சந்தோஷமா இருக்கட்டும். நீ அவன நல்லபடியா பாத்துக்கோ" என்று கூறவும், "அவர நான் ரொம்பவே நல்லா பாத்துக்குறேன். இனி அவர் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். கவலையேபடாதீங்க" என்று அவனுக்கு உறுதியளித்தாள். அவன், "தாங்க் யூ" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதன்பின் நியதி விரைந்து சந்திரமதியிடம் சென்றாள். அந்தவிஷயத்தை கேட்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்த அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் ஃலை பூஜையறையில் வைக்குமாறு கூறினார்.

ஆரியவர்தன் மாலை வீடுதிரும்பியபோது நியதி அவனிடம் சென்று, "சார், என்ன உங்க பி.ஏ.வா அப்பாய்ண்ட் பண்ணதுக்கு தாங்க் யூ சோ மச். என்ன நம்பி நீங்க இந்த போஸ்ட ஒப்படைச்சிருக்கீங்க. நான் எந்த ஒரு குறையும் இல்லாம நல்லபடியா என்னோட வேலைய செய்வேன் சார்" என்று அவனுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தாள். "கங்கிராஜூலேஷன்ஸ் அண்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அவளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான்.
_c36827aa-0161-4fc1-bb2b-d1f679ba34d0.jpg
பின், "அண்ட் ஒன் மோர் திங் நீ இனிமேல் என்ன சார்னு கூப்பிடாத" என்று அவன் கூறவும் புரியாமல் அவனைப் பார்த்தாள். ஆனால் அவனோ , "ஐ மீண் ப்ரோஃஷனல்லா இருக்கும்போது 'சார்'னு சொல்லு. ஆனா பாட்டி முன்னால என்ன நீங்க, வாங்கண்ன்னு கூப்பிடு" என்று அவளிடம் கூறினான். உடனே அவள் சந்தோஷமாக, "ஓகே சார்" என்று வழக்கம்போல அழைக்கவும் அவன் அவளை அப்படியே பார்த்தான். அவனுடைய அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாக, "சாரி" என்று கூறிவிட்டு அசடுவழிய சிரித்தவாறு அங்கிருந்து சென்றாள். அவள் அங்கிருந்து செல்லும் வரையிலும் அவளை லேசான புன்னகையுடன் பார்த்தவாறே தன்னுடைய வீல்சேரில் அமர்ந்திருந்தான் ஆரியன்.

மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தபோது வழக்கத்திற்கு மாறாக இனிப்பு பரிமாறப்பட்டது.
WhatsApp Image 2025-01-28 at 7.32.59 PM.jpeg
அதைப் பார்த்து, "என்ன பாட்டி இன்னைக்கு வித்யாசமா பிரேக்ஃஸ்ட்டுக்கு ஸ்வீட்லாம் செஞ்சிருக்கீங்க. என்ன விசேஷம்?" என்று அந்த இனிப்பை உண்டவாறே பார்கவ் வினவினான்.

உடனே, "டேய் என்னோட பேத்தி முதமுதல்ல உங்ககூட சேர்ந்து ஆஃஸ்க்கு வரப்போறா. அதான் எல்லாருக்கும் இன்னைக்கு ஸ்வீட். தெரியாத மாதிரியே கேப்பான்" என்று சந்திரமதி அவனை விளையாட்டாக கடிந்தார். உடனே, "அட ஆமா நான் அத மறந்தே போய்ட்டேன். சாரி சாரி... ஆல் தி பெஸ்ட் மேடம்" என்று நியதியைப் பார்த்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான். அப்போது ரஞ்சித்தும் தன்னுடைய வாழ்த்துக்களைக் கூற இருவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தாள்.

அனைவரும் உண்டுமுடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும்போது சந்திரமதி, "ஆரி இன்னைக்கு நியதியோட முதல்நாள். நானும் அவளும் கோவிலுக்கு போறோம். அதனால நியதி ஆஃஸ் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்" என்று கூறினார். உடனே அவன், "இல்ல பாட்டி இன்னைக்கு நியதிக்கு ஃஸ்ட் டே. லேட்டா வந்தா கரெக்டா இருக்காது. அதுனால அவ என் கூடவே வரட்டும்" என்று மறுத்தான்.

ஆனால் சந்திரமதியோ, "போடா ஒருமணி நேரத்துல எதுவும் ஆகிடப் போறதில்ல. நியதி என் கூடத்தான் வருவா" என்று அவர் பிடிவாதமாகக் கூறவும் அவன், "உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். பூஜையறையிலுள்ள அந்த கோப்பை எடுத்துக்கொண்டு நியதியும் சந்திரமதியும் கோவிலுக்கு கிளம்பினர்.
WhatsApp Image 2025-01-28 at 1.01.38 PM.jpeg
அங்கு வரதராஜனின் வீட்டில், "என்னங்க நமக்குமட்டும் ஏன் அடுக்கடுக்கா பிரச்சன வருது. மொதல்ல ரியா நம்மள அவமானப் படுத்திட்டா, அடுத்து நம்ம பொண்ணு இருக்கவேண்டிய இடத்துல அந்த நியதி இருக்கா, எப்பவுமே நல்லா இருக்குற பிசினெஸ்ல இவ்வளவு பெரிய லாஸ்..." என்று பெருமூச்சுவிட்டாள். பின், "என் ஃரெண்டுக்கு ஒரு ஜோசியர தெரியுமாங்க. அவர போய் பாத்தா ஏதாவது பரிகாரம் சொல்லுவாரு. அத செஞ்சாலாவது நமக்கு நல்லது நடக்குமான்னு பாப்போமே" என்று வரதராஜனிடம் கேட்டாள். ஆனால் அவரோ, "நீயும் உன் பரிகாரமும். கோவிலுக்கு போவோம். வா" என்று கூற மாலினியும் ஒப்புக்கொண்டாள்.

அதேசமயம் கோவிலில் சந்திரமதி கருவறையின் முன்பு அமர்ந்திருக்க பிரகாரத்தை சுற்றிவிட்டு வருவதாகக் கூறி நியதி மட்டும் தனியே சென்றாள். அப்போது தற்செயலாக அங்கு வந்திருந்த வர்தராஜனை எதிர்கொண்டாள். அவரைப் பார்த்ததும் விரைந்து அவரருகே சென்று, "அப்பா எப்படி இருக்கீங்க?" என்று நலம்விசாரித்தாள்.

அவர் 'ம்ம்' என்று என்று மட்டும் பதிலளித்தார். "எனக்கு வர்தன் சாரோட பி.ஏ.வா வேல கிடைச்சிருக்கு. இன்னைக்கு தான் முதல் நாள். ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று அவருடைய காலில் விழுந்தாள். அவர் அவளை ஆசிர்வதிக்கவில்லை என்றபோது அவளுடைய மனது லேசாக வலித்தது. ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முருவலுடனேயே இருந்தாள்.

வரதராஜனின் நிறுவனத்தில் நடந்த அந்த பெரிய இழப்பைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று அவள் எண்ணும்போதே, "நீ எங்கள இங்கயும் நிம்மதியா இருக்கவிடமாடியா? எங்க போனாலும் பின்னாலயே வந்துடற. வாங்க நம்ம போகலாம்" என்று அங்கு வந்த மாலினி வரதராஜனை இழுத்துச் சென்றாள். ஆனாலும் நியதி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.

தங்களை நியதி தொடர்வதை அறிந்த வரதராஜன் தன் கையிலுள்ள திருநீறை இறைவனின் முன்னுள்ள கல்லில் வைத்துவிட்டு, "போற காரியம் நல்லதாவே நடக்கட்டும்" என்று கூறினார். இதைக்கேட்ட நியதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் மாலினிக்கு அவர் கூறியது விளங்கவில்லை, "நாம எங்கங்க போப்போறோம்?" என்று கேட்டதற்கு, "நீ வா" என்று அவளை அழைத்துச் சென்றார். அவர்கள் சென்றதும் நியதி அந்த திருநீறை அவருடைய ஆசீர்வாதமாக நினைத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள்.

வரதராஜன் நல்லவர்தான், ஆனால் சில துர்போதனைகளால் அவ்வப்போது அவருடைய மனம் தடுமாறுகிறது. பின் சந்திரமதி வீடு திரும்ப நியதி அலுவலகத்திற்குச் சென்றாள். அங்கு அவளுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் அனைவர்க்கும் நியதி அறிமுகப்படுத்தப் பட்டாள். அன்றிலிருந்து தினமும் ஆரியவர்தனின் பி.ஏ.வாக நியதி அவனுடன் அலுவலகத்திற்குச் சென்றாள். இவ்வாறாக மூன்று மாதங்கள் கடந்தன. அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.

தினமும் காலையிலிருந்து மாலைவரை இருவருமாக சேர்ந்தே இருப்பதால் அவர்களுக்குள் நல்ல புரிதல் உண்டாயிற்று. நியதிக்கு புத்தகம் வாசிப்பது பிடிக்கும் என்பதால் ஆரியன் ஒரு 'மினி லைபரேரியை' அவளுக்கென தனியாக அமைத்தான். அவர்களுக்கு இடையில் மெல்ல காதல் மலரத் துவங்கியது.

அப்படியொரு சமயம் ஆரியவர்தன் தன்னுடைய வேலைப்பளு காரணமாக விரல்களை தன்னுடைய புருவத்திற்கு இடையே அழுத்தியவாறு அமர்ந்திருந்தான். அவன் பார்கவைப் பார்த்து, "எனக்கு தல வலிக்குது காஃ போட்டு கொண்டுவா பார்கவ்" என்று கூறினான். அப்போது, "மே ஐ கம் இன்" என்று அனுமதிகேட்டவாறு கையில் காபி கப்புடன் நியதி அந்த அறையினுள் நுழைந்தாள்.
WhatsApp Image 2025-01-29 at 7.35.11 PM.jpeg
நியதி மற்றும் ஆரியன் இருந்த அறைகளை ஒரு கண்ணாடி சுவர் பிரிந்திருந்தது. அதனால் இருவரும் அடுத்தவர் அறையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்கமுடியும். அப்படித்தான் நியதி அவனுடைய டென்ஷனைப் பார்த்து அவனுக்காக காஃ கொண்டுவந்தாள். அவளைப் பார்த்து அங்கிருந்த இருவரும் திகைத்தனர்.

அவள், "சார் நீங்க டென்ஷனா இருக்கீங்க. இந்த காஃய குடிங்க. உங்க டென்ஷனும் தலைவலியும் போய்டும்" என்று கூறி அவனிடம் கப்பை நீட்டினாள். நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பார்கவ் லேசாக முறுவலித்தவாறு அங்கிருந்து வெளியேறினான். "நான் டென்ஷனா இருக்கேன்னு உனக்கெப்படி தெரியும்?" என்று காஃயை மிடறுகளாக அருந்தியவாறு அவளிடம் கேட்டான்.

அனால் அவளோ, "அதெல்லாம் தெரியும்" என்று புன்னகைத்தவாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்லவிருந்தவளை நிறுத்தி, "காஃ நல்லாயிருக்கு. தாங்ஸ் ஃர் தி காஃ" என்று அவன் பாராட்டவும் அவள் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றாள். மறுநாள் ஆரியன் தன்னுடைய அறைக்கு வந்தபோது ஒரு சுகந்தமான நறுமணம் அங்கு வீசியது. 'எங்கிருந்து அவை வருகின்றன?' என்று அவன் பார்த்தபோது அவனுடைய டேபிளில் லாவண்டர் பூக்கள் நிறைந்த கண்ணாடி வாஸ் வைக்கப்பட்டிருந்தது. ஆரியவர்தனுக்குப் பூக்கள் என்றால் பிடிக்கவேபிடிக்காது. அதனால் அவைகளைப் பார்த்தவுடன் அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது.

உடனே தன் வீல் சேரை டேபிளின் அருகில் செலுத்தி அந்த வாஸை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டான். உடனே அந்த பூக்கள் கீழே விழ அந்த கண்ணாடி வாஸும் தூள் தூளாக நொறுங்கியது. பக்கத்து அறையிலிருந்து ஆரியனின் புன்னகைக்காக காத்துக்கொண்டிருந்த நியதி அவன் அவைகளை கீழே தள்ளிவிட்டது தெரிந்ததும் அவனுடைய அறைக்கு விரைந்தாள். ஆரியவர்தன் பார்கவைப் பார்த்து, "எனக்கு ஃலார்ஸ் பிடிக்காதுன்னு தெரியும்ல? யார் இங்க வச்சா?" என்று அவனை திட்டினான்.

பயத்தில் உறைந்திருந்த பார்கவ், "சாரி சார்...யாருன்னு தெரியல....இப்போவே...கிளியர் பண்ணசொலீறேன்..." என்று தக்கித்தடுமாறி கூறினான். அங்கு வேகமாக வந்த நியதி, "சார் அத நான் தான் வச்சேன். இந்த பூவோட ஸ்மெல் ஸ்ட்ரெஸ்ஸ குறைக்கும். அதுனாலதான்...இனிமேல் இப்படி நடக்காது சார்" என்று அவள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். அதை வைத்தது நியதி என்று தெரிந்ததும் ஆரியனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் அவன் செய்த காரியம் நியதியின் மனதைப் புண்படுத்தியதை நினைத்து மிகவும் வருந்தினான். அன்றைய நாள் ஏனோதானோ என இருவருக்கும் சென்றது.

மறுநாள் காலை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்களது கார் சிக்னலில் நின்றது. அவன் மன்னிப்பு கேட்பதற்காக நியதியின் பக்கம் திரும்பியபோது அவள் வெளியே எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
_7760dc81-d664-4b66-b8bc-32c4e6d89755.jpg
அவனும் அதே திசையில் பார்த்தபோது அங்கு ஒரு ஏழு வயது பெண்குழந்தை பூக்களை விற்றுக்கொண்டிருந்தாள். நியதிக்கு அந்த பூக்களை வாங்கி அந்த சிறுமிக்கு உதவவேண்டும் என்று ஆசை இருந்தபோதும் முந்தைய தினம் நடந்த நிகழ்வு அவளைத் தடுத்தது.

அவளுடைய எண்ணத்தைப் புரிந்தவனாக பார்கவிடம் அந்த குழந்தையை அழைத்து பூக்களை வாங்குமாறு உத்தரவிட்டான். அவன் கூறியதைக் கேட்டு நியதியும் பார்க்கவும் ஆச்சரியத்துடன் அவனை திரும்பிப் பார்த்தனர். அவன் பார்கவிடன் பூக்களை வாங்குமாறு புருவத்தை ஏற்றி இறக்க அவனும் அவ்வாறே செய்தான்.

அந்த பூக்களுக்கான விலை நூறு ரூபாயாக இருந்தபோதும் பார்கவிடம் ஐநூறு ருபாயை அந்த குழந்தையிடம் கொடுக்குமாறு கூறினான். ஆனால் அந்த குழந்தை மறுத்துவிட்டாள். காரணத்தைக் கேட்டபோது, "சார் என் அப்பா எப்பவுமே உழைச்சதுக்கு காசுவாங்குனாதான் நம்ம உடம்புல ஒட்டும்ன்னு சொல்லுவாரு. ஒரு ரோஜா பூச்செண்டோட விலை நூறு ரூபா. அதுமட்டும் போதும்" என்று கூறினாள்.

அவளுடைய அந்த பதிலால் மனம் நெகிழ்ந்த ஆரியவர்தன், "இன்டெரெஸ்ட்டிங், வெரி இன்டரெஸ்டிங்" என்று கூறினான். மேலும் அவளிடமிருந்தே தினமும் பூக்களை வாங்கிக்கொள்வதாகக் கூறவும் அந்த சிறு குழந்தையின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ட்ராஃக் சிக்னலைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, "நியதி, நேத்து நான் அப்படி நடந்ததுக்கு ஐ அம் ரியல்லி சாரி. இனிமேல் தினமும் என்னோட டேபிள்ல அந்த பொண்ணு குடுக்குற ஃலவர்ஸ அரேஞ் பண்றது உன்னோட பொறுப்பு. ஓகே" என்று அவன் நியதியிடம் கூறினான். முதலில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த நியதி பின் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள். ஒருவருக்கொருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.

இங்கு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துகொண்டிருக்க அங்கு ஒரு பெரிய கோல்ஃ மைதானத்தில் இருவரைப் படுக்கவைத்திருந்தனர். அவர்களின் முகத்தில் கோல்ஃ பந்து வைக்கப்பட்டிருந்தது.
_9dd26462-0e0c-4162-b318-f41c74d44ab2.jpg
அவர்களுள் ஒருவன், "டேய் நான் தான் அப்படி செய்யாதன்னு அப்பவே சொன்னேன்ல. பாரு நாம அவங்ககிட்ட மாட்டி தப்பிச்சி வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு" என்று கூறினான்.

ஆனால் மற்றொருவனோ, "தப்பிச்சும் என்ன பிரயோஜனம் இங்க இவர்கிட்டல மாட்டிகிட்டோம். ஐயோ இவரு என்ன செய்யப்போறாருன்னே தெரியலையே. சிங்கத்துக்கு பயந்து மலைப்பாம்புகிட்ட சிக்குன்னு கதையாகிடுச்சே..." என்று அவர்கள் புலம்பும்போதே கோல்ஃ ஸ்டிக்கை இரும்புக் கம்பியில் யாரோ அடித்துக்கொண்டே வரும் சத்தம் கேட்டது. அங்கிருந்த இருவருக்கும் அவர்களது மரணம் நெருங்குகிறது என்று நன்றாகத் தெரிந்தது.

அவர்கள் முன் கோல்ஃ ஸ்டிக்குடன் ஒருவன் வந்து நின்றான். படுத்திருந்த இருவருக்கும் அவர்களது அடிவயிறு கலங்கியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு அதிகமாக துடித்தது. அவனிடம், "சார் எங்கள மன்னிச்சி விட்ருங்க. இனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டோம்" என்று தங்களுடைய உயிருக்காக மன்றாடினர். "என் கிட்ட வேல செய்யணும்னா ஒண்ணு அந்த வேலைய சரியா முடிக்கணும் இல்லாட்டி நான் அவங்கள முடிச்சிருவேன்” என்றவன் ஈவு இரக்கம் இல்லாத ராட்சசன் போல கோல்ஃ ஸ்டிக்கை ஓங்கினான்.
WhatsApp Image 2025-01-29 at 7.45.32 PM.jpeg
பின் அந்த இடத்தில் ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்துகிடக்க ரத்தம் படிந்த அந்த கோல்ஃ ஸ்டிக்கை அருகிலுள்ள ஒருவனிடம் அந்த விராஜ் குணசீலன் கொடுத்தான். “யூஸ்லெஸ் ஃல்லோஸ் ஒரு காரியத்த ஒழுங்கா செய்ய தெரியுதா" என்று கூறியவாறு அந்த சடலங்களை எத்தினான்.

அவன் சைகை செய்ய அங்கிருந்த பாடி-காட்ஸ் அந்த சடலங்களை அப்புறப்படுத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த அவனுடைய பி.ஏ. வீரா, "சார் கவர்மெண்ட் டெண்டெற்கான அனௌன்ஸ்மென்ட் வந்திருக்கு" என்று கூறவும், "இந்த டெண்டர் நம்ம கைக்கு வந்தே ஆகணும். வர்தன் கார்ப்பரேட்ஸ எப்படியாவது தோக்கடிச்சே ஆகணும்" என்று கூறி, "ஆரியவர்தன்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
_76220493-ba45-4730-b4a2-fbca6dd84697.jpg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 10
இங்கு வர்தன் கார்பரேட்சிலும் டெண்டரைப் பற்றிய பேசிச்சுதான் நடந்துகொண்டிருந்தது. அனைத்து துறைகளிலுள்ள மேலதிகாரிகளையும் அழைத்து மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
_17d0cb4f-c8c3-4cc6-85a1-7712c52afa23.jpg
அதில் யார் டெண்டருக்கான கொட்டேஷனை தயார் செய்யப்போகிறார் என தேர்வுசெய்வதாக இருந்தது. அனைவரும் 'யாராக இருக்கும்?' என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தபோது அந்த அறையின் கதவு திறக்கப்பட ஆரியவர்தன் உள்ளே நுழைந்தான்.

அவனுடன் நியதி, ரஞ்சித் மற்றும் பார்கவும் உள்ளே நுழைந்தனர். அவன் உள்ளே வந்ததும் அனைவரும் எழுந்தனர். தன்னுடைய இடத்திற்கு சென்றதும் அனைவரையும் அமருமாறு கூறினான். நியதியும் பார்கவும் தனியாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர். பின் ஆரியவர்தன் பேசத்துவங்கினான், "கவர்மெண்ட் டெண்டருக்கான அனௌன்ஸ்மென்ட் வந்திருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். இந்த தடவையும் அந்த டெண்டர் நமக்கே வந்தாகணும். சோ அதுக்கான கொட்டேஷன பிரிப்பர் பண்றதுக்கு ஒரு ஆள செலக்ட் பண்ணத்தான் இந்த மீட்டிங். இந்த டைம் அந்த வேலைய பாக்கப்போறது...." என்று அவன் இழுத்தபோது அனைவரும் ஆவலாக அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

அவன், "நியதி" என்று கூறவும் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நியதியும் அதைக்கேட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் அவனையே நோக்க, "உங்க எல்லாருக்கும் ஓகேதான?" என்று அவன் அங்கிருந்தவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டான். ஆரியவர்தன் எப்போதும் தான் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டுமென்று நினைப்பவன் அல்ல. எப்போதும் தன்னிடம் பணிபுரிபவர்களிடமும் ஆலோசனை கேட்பான். அவ்வாறு செய்வதால் தொழிலாளிகளிடம் அவனுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர்கள்தான் ஒரு நிறுவனத்தின் அஸ்திவாரம் என நன்கு அறிந்திருந்தான்.

இப்போதும் அதுபோலவே அவர்களுடைய கருத்தை கேட்டபோது, "எங்களுக்கு இதுல எந்த அப்ஜக்க்ஷனும் இல்ல சார்" என்று அனைவரின் ஒப்புதலையும் தெரிவிக்கும் வண்ணம் அங்குள்ள உயர்பதவியில் வகிக்கும் ஒருவர் கூறினார். அவனோ, "நான் சொல்றேங்கிறதுக்காக நீங்க இதை அக்சப்ட் பண்ணணுங்கிற அவசியம் இல்ல. உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லுங்க" என்று கேட்டான். ஆனால் அவரோ, "நீங்க எந்த ஒரு முடிவெடுத்தாலும் அது சரியாதான் சார் இருக்கும். மாற்றுக்கருத்தே கிடையாது" என்று அவர் கூற அங்கிருந்த அனைவரும் தலையசைத்து தங்களுடைய ஒப்புதலைத் தெரிவித்தனர்.

அவன் லேசாக புன்னகைத்துவிட்டு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தான். மீட்டிங் முடிந்ததும் ஆரியவர்தன் தன் அறைக்கு திரும்ப மற்றவர்கள் தங்களுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த நியதிக்கு, 'ஏன் ஆரியவர்தன் இந்த முடிவை எடுத்தார்?' என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் வேலை பளுவின் காரணமாக அதுமறந்தும்போனது. அந்த நாள் அப்படியே கடந்தது.

மாலை இருவரும் வீடு திரும்பியபோது சந்திரமதி அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். மூவருமாக இணைந்து பேசி சிரித்து டீ அருந்திவிட்டு தங்களுடைய அறைக்குச் சென்றனர். அந்த அமைதியான அறைக்குள் சென்று அவள் அமர்ந்தபோது மீண்டும் அதே கேள்வி மனதில் உதித்தது. தாமதிக்காமல் அதை அவனிடம் கேட்டுவிடவேண்டும் என்றெண்ணி கதவைத்திறந்தாள்.
பின் தன் தலையை மட்டும் எட்டி 'அவர் என்ன செய்கிறார்?' என்று பார்த்தபோது, அவன் தன்னுடைய அந்த பெரிய பஞ்சுமெத்தையில் அமர்ந்து புத்தகம் ஒன்றை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-02-01 at 5.58.50 PM.jpeg
அவள் மெதுவாக அவனருகே சென்று, "என்னங்க" என்று மெல்லிய குரலில் அழைக்க அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.மீண்டும் அவள், "என்னங்க" என்றதும் அவனிடமிருந்து, "ம்ம்" என்று மட்டும் வந்தது. உடனே அவள், "இல்ல...அது...இவ்வளவு பெரிய பொறுப்ப ஏன் என்கிட்டே ஒப்படைசீங்க? இது நம்ம கம்பெனியோட ரெப்யூடேஷன் சம்மந்தப்பட்டது. ஒரு சின்ன தப்பு நடந்தாலும் நமக்கு கெட்டபெயர் வந்துரும். அதோட கொட்டேஷன் பிரிப்பர் பண்றதுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸே கிடையாது. அதனால இந்த வேலைய வேற யார்கிட்டயாவது..." என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே புத்தகத்தை மூடிவிட்டு அவளிடம் தன் பார்வையைச் செலுத்தினான்.
அவன் மெத்தையில் அமருமாறு சைகைசெய்யவும் அவள் அமர்ந்தாள். பின் அவன் பேசத்துவங்கினான், "நியதி இந்த உலகத்துல எல்லாரும் எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு பிறக்குறது இல்ல. ஒரு வேலையில இறங்காம அது என்னன்னு எப்படி தெரியும்? கொட்டேஷன பிரிப்பர் பண்ண தெரியாதுண்ணு சொன்னீல, சோ இத ஒரு சான்ஸா யூஸ் பண்ணி அதப்பத்தி தெரிஞ்சிக்கோ. உனக்கு பக்கத்துலயே இருந்து ஹெல்ப் பண்ண நான் இருக்கேன்”

“அண்ட் நெக்ஸ்ட் நீ இத நல்லா செஞ்சிருவங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு....நாம முதல்ல நம்மள நம்பனும். அப்படி நம்பிக்க வச்சா எந்தஒரு ஒர்க்கையும் ஈஸியா செஞ்சிரலாம்" என்று கூறவும் நியதியின் மனதில் சந்தோஷமும் உற்சாகமும் பிறந்தது. "தாங்க்-யூ சோ மச், என்னாலையும் முடியுங்கிற நம்பிக்கைய எனக்கு நீங்க குடுத்ததுக்கு. நான் கண்டிப்பா இந்தவேலைய நல்லபடியா முடிப்பேன்" என்று அவள் உறுதியுடன் கூறினாள்.

அவன் அவளை பார்த்து, "தாட்ஸ் தி ஸ்பிரிட் அண்ட் தாட்ஸ் மை கேர்ள்" என்று புன்னகைத்தவாறு கூறினான். தன்னுடைய அறைக்குச் செல்லவிருந்தவளிடம், "இன்னும் டெண்டருக்கு டூ வீக்ஸ் இருக்கு. டேக் யுவர் டைம். ஆல் தி பெஸ்ட்" என்று கூறவும் அவனைப் பார்த்து லேசாக முறுவலித்துவிட்டு தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்.

மறுநாளிலிருந்து ஆரியவர்தனும் நியதியும் டெண்டருக்கான கொட்டேஷன் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவும் பகலுமாக இணைந்தே அனைத்து வேலைகளையும் செய்தனர். சிலநேரங்களில் நள்ளிரவுவரை அவர்களது வேலை நீடிக்கும். அப்படியொருநாள் அலுவலகத்திற்கு அவர்கள் கிளம்பும்போது சந்திரமதி, தான் காசிக்குச் செல்வதாகக் கூறிவும், "என்ன பாட்டி திடீர்னு?" என்று ஆரியவர்தன் வினவினான்.

அதற்கு, "நான் ஒண்ணு வேண்டீருந்தேன் அத நிறைவேத்துறதுக்காகத்தான்டா போறேன். அதோட விஸ்வநாதரயூம் தரிசனம் பண்ணாமாதிரி இருக்கும். அப்படியே காசிக்கு பக்கத்துல இருக்குற சில ஸ்தலங்கள பாத்துட்டு பத்து நாள்ல வந்துருவேன்" என்று அவனுக்கு விளக்கினார். உடனே அவன்,"சரி பாட்டி டேக் கேர். ஏதாவது வேணுன்னா உடனே எனக்கு கால் பண்ணுங்க. பத்திரமா போய்ட்டுவாங்க" என்று அவன் அக்கறையுடன் கூறினான்.
அவரும், "கண்டிப்பா டா" என்று கூறி தன்னுடைய பேரனின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார்.
பின் நியதியின் கைகளைப் பற்றி, "போய்ட்டுவர்றேன்மா" என்று ஒரு புன்முறுவலுடன் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
WhatsApp Image 2025-02-01 at 5.17.33 PM (1).jpeg
சந்திரமதி திடீரென யாத்திரை செல்ல ஒரு முக்கியமான காரணம் இருந்தது. ஏனென்றால் தன்னுடைய பேரனுக்கும் நியதிக்குமான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த முதியவள் நம்பினார். அவர் நம்பியது பொய்த்துப் போகவில்லை.

சந்திரமதி சென்றதும் இளையவர்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினர். அன்று ஒரு ப்ராஜக்ட் விஷயமாக மீட்டிங் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மீட்டிங்கில் நடக்கும் அனைத்தையும் குறிப்பெடுப்பது பார்கவின் வேலை. ஆனால் அன்று ஒரு அவசர வேலையாக பார்கவை ஆரியவர்தன் கன்ஸ்ட்ரக்க்ஷன் சைட்டிற்கு அனுப்பிவைத்திருந்ததால் குறிப்பெடுக்கும் வேலையை நியதி செய்தாள். மீட்டிங்கில் அந்த ப்ராஜெக்டைப் பற்றி ஒருவர் விவரித்துக்கொண்டிருக்க ஆரியவர்தன்உட்பட அனைவரும் அதை கவனித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆரியனின் கண்கள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த நியதியிடம் சென்றது. அவளை ஒரு புன்முறுவலுடன் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். பின் அவனுடைய பார்வையை அவளிடமிருந்து திருப்பியபோது ரஞ்சித்தை தற்செயலாகப் பார்த்தான்.
WhatsApp Image 2025-02-01 at 5.17.33 PM.jpeg
ஒரு குரும்புச் சிரிப்புடன் ரஞ்சித் அவனைப்பார்த்து, 'என்ன நடக்குது?' என்று கேப்பதுபோல் புருவத்தை ஏற்றியிறக்கினான். ஆனால் ஆரியனோ, 'உன் வேலைய மட்டும் பாரு' என்று பார்வையால் விளையாட்டாக கூறிவிட்டு மீண்டும் வேலையில் ஈடுபட ரஞ்சித் தன்னுடைய சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

மீட்டிங் முடிந்ததும் நியதி டெண்டருக்கான வேலையைத் துவங்கினாள். அப்போது சில முக்கியமான விஷயங்கள் தேவைப்பட்டதால் அவள் ஆரியவர்தனிடம் சென்றாள். அவனோ பார்கவின் அறையிலுள்ள டேபிள் டிராயரில் இருப்பதாகக் கூறி அதை எடுத்துவரச் சொன்னான். அடுத்தவர்களின் அனுமதியில்லாமல் அவர்களுடைய உடைமைகளை தொடுவது தவறு என்பதால் நியதி பார்கவை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அவன் இருக்கும் இடத்தில் டவர் கிடைக்காததால் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.

இப்போதே அந்த கோப்புகளைக் கொண்டுவருமாறு ஆரியவர்தன் விரட்டவும் அவள் தயங்கியவாறே தன்னுடைய தேடுதலைத் துவங்கினாள். அப்போது ஒரு அழகான பெண் சிரிப்பதுபோன்ற பென்சில் போர்ட்ரைட் அவள் கைகளுக்கு அகப்பட்டது.
WhatsApp Image 2025-02-01 at 5.45.51 PM.jpeg
அந்தப் பெண் நேரில் இருந்தால் எவ்வாறு இருப்பாளோ அதைப்போலவே அவ்வளவு தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் வரையப்பட்டிருந்தாள். அதில் சற்று லயித்த நியதி சட்டென நிதானத்திற்கு வந்தவளாய் அதை அப்படியே வைத்துவிட்டு தனுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அன்று வேலைமுடிந்து வீடுதிரும்புவதற்கு வெகுநேரமாகியிருந்தது. அதனால் தங்களுடைய இரவு உணவை ரெஸ்டாரண்டில் உண்ண தீர்மானித்திருந்தனர். தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தனர். வேலைப்பளுவின் காரணமாக ஆரியன் சற்று டென்ஷனாகவும் சோர்வாகவும் இருப்பதை நியதி கவனித்தாள். அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பது யார் என்று பார்த்தபோது அவனுடைய முகத்தில் சந்தோஷமும் இதழ்களில் புன்முறுவலும் பரவியது.
WhatsApp Image 2025-02-01 at 11.47.16 AM.jpeg
இவையனைத்தையும் நியதி கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். பின் அவளிடம், "ஜஸ்ட் அ மினிட்" என்று கூறிவிட்டு அவன் தனியாக பேசச்சென்றான். அவர்கள் ஆர்டர்செய்த உணவு வந்த அதே சமயம் அவனும் வந்துசேர்ந்தான். அப்போது அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி பலமடங்கு கூடியிருந்தது. உணவு உண்டுவிட்டு வீட்டிற்குச் சென்றவர்கள் அவரவர் அறையில் ஒடுக்கினர். ஆரியவர்தன் தன்னுடைய அறையில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க நியதி தூக்கமில்லாமல் தவித்தாள்.

'ரொம்ப டென்ஷனா இருந்தவரு அந்த போன் கால் வந்ததுமே சந்தோஷமாயிட்டாரே. இதுக்கு முன்னாலையும் நிறையதடவ இப்படி நடந்தத நான் நோட்டீஸ் பண்ணீருக்கேன். அது யாரா இருக்கும்?' என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. ஆனால் அவளுக்கு அதற்கான காரணம் அன்று விளங்கவில்லை.

மறுநாளும் அவர்களது வேலை தாமதமாக, இரவு உணவுக்காக ரெஸ்டாரண்ட் சென்றிருந்தபோது அவன் ஜுஸ் மட்டும் அருந்தினான்.
WhatsApp Image 2025-02-01 at 11.24.55 AM.jpeg
அவர்கள் வீடு திரும்பியதும் ஆரியன் தன்னுடைய அறைக்குச் செல்ல நியதி மட்டும் கீழேயே இருந்தாள். அவனுக்கு அந்த ரெஸ்டாரண்ட் உணவு பிடிக்கவில்லை என்பதை நன்கு உணர்ந்த அவள் தானே சமைத்து டிராலியில் அவனுடைய அறைக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கு ஆரியன் ஹோம் தியேடரில் தனக்கு பிடித்த பாடல்களை கேட்டவாறு வீல்-சேரில் அமர்ந்திருந்தான். அவள் ட்ராலியுடன் உள்ளே வரவும் ‘என்ன?’ என்பதுபோல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
WhatsApp Image 2025-02-01 at 5.50.28 PM.jpeg
அவள் அவனருகே டேபிளை வைத்து அவனிடம் பீங்கான் பிளேட் ஒன்றை நீட்டினாள். அவன் வாங்கிக்கொண்டதும் அதில் இரண்டு சப்பாத்தியும், தொட்டுக்கொள்வதற்கு பன்னீர் பட்டர் மசாலாவையும் வைத்தாள். அவன், "எனக்கு வேண்டாம் நியதி" என்று கையில் வைத்திருந்த பிளேட்டை அவளிடம் நீட்டினான்.

ஆனால் அவளோ மறுபடியும் அவனிடம் தள்ளி, "சாப்டாதானே எப்படி இருக்குன்னு தெரியும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன். உங்களுக்காக நானே சமச்சது. ப்ளீஸ்…." என்று அவள் கெஞ்சுவதுபோல் கேட்கவும் அவன் ஒப்புக்கொண்டு உண்ண ஆரம்பித்தான். அது சுவையாக இருப்பதை உணர்ந்து மேலும் உண்ணத்துவங்கினான். ஏதோ நினைவுவர நியதியைப் பார்த்து, "நியதி இன்னொரு பிளேட்ட எடு" என்று கூற அவளும் அவ்வாறே செய்தாள்.

அருகிலிருந்த ஹாட்பாக்சிலிருந்து இரண்டு சப்பாத்தியை எடுத்து அவளுடைய பிளேட்டில் வைத்தான். "எனக்கு எதுக்கு? நான் தான் சாப்..." என்றவளை நிறுத்தி, "நீ சாப்பிட்டததான் நான் பாத்தேனே..." என்று கூறியவாறு கிரேவியை பிளேட்டில் ஊற்றினான். ஆம் ஆரியன் ரெஸ்டாரண்டில் உண்ணவில்லை என்றதும் அவளும் அரைகுறையாகவே உண்டாள்.

அவர்கள் உண்டபிறகு பால்கனியில் இயற்கையை ரசித்தனர். "ஓ! உனக்கு சமைக்கக்கூட தெரியுமா?" என்று அவன் கேட்க, "எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்ச எல்லாத்தையும் நான் சமைக்க பழகிடேன்..." என்று பேசத் துவங்கினாள். அன்றிரவு அவர்கள் பிஸினஸைப் பற்றி அல்லாமல் தங்களைப் பற்றிப் பேசினர். பேசிமுடித்துவிட்டு படுகைக்குச் செல்லும்போது இருவரின் வயிறு மட்டுமல்ல மனமும் நிறைந்திருந்தது.
WhatsApp Image 2025-02-01 at 5.45.51 PM (1).jpeg
டெண்டருக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் நியதி ஆரியவர்தனிடம் சென்று, "நம்ம கொட்டேஷன முன்னாலையே அனுப்ப தேவையில்லையா சார்?" என்று கேட்டாள். அதற்கு, "இல்ல நியதி, டெண்டர் நடக்குற அன்னைக்கு மார்னிங் கொடுத்தா போதும். இது நமக்கும் குணசீலன் கார்பரேட்ஸ்கும் கவர்மண்ட் கொடுக்குற கன்சஷன்" என்று அவளுக்கு விளக்கினான். டெண்டருக்கான நாளும் வந்தது.

அனைவரும் அலுவலகத்திற்கு அன்று காலை முன்கூட்டியே சென்றனர். கொட்டேஷனுக்கான கோப்பையும், பென்டிரைவையும் ஆரியவர்தனின் அறையிலிருந்து எடுப்பதற்காகச் நியதி சென்றாள். லாக்கரைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அவைகள் அங்கு இல்லை. வேகமாகச் சென்று தன்னுடைய கணினியில் பதிந்து வைத்திருந்த சாஃட் காப்பியை தேடியபோது அதுவும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு நியதி அதிர்ந்தாள்.
WhatsApp Image 2025-02-01 at 6.04.08 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 
Last edited:

Krishna Tulsi

Moderator
மாயம் 11

பலமுறைதேடியும் கோப்புகள் கிடைக்கவில்லை என்பதால் நியதி செய்வதறியாது விழித்தாள். உடனே அவள் வெளியே காத்துக்கொண்டிருந்த ஆரியவர்தனிடம், "சார், கொட்டேஷன காணோம்" என்று யாரும் கேட்காவண்ணம் மெதுவாக கூறினாள்.
WhatsApp Image 2025-02-04 at 7.40.48 AM.jpeg
அவன், "நல்லா பாத்தியா?" என்றதற்கு, "பாத்துட்டேன் சார்" என்று பதற்றத்துடன் பதிலளித்தாள். உடனே, "என் கேபின்ல மறுபடியும் செக் பண்ணுவோம். வா" என்று கூறி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்.

அவர்கள் கேபினுக்குள் செல்வதைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சித்தும், பார்கவும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் உள்ளே சென்றபோது நியதி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும், "டெண்டருக்கு லேட்டாயிடுச்சு. கிளம்பாம இங்க என்ன பண்றீங்க?" என்று ரஞ்சித் வினவ, "டெண்டர் கொட்டேஷன் மிஸ்சாயிடுச்சு" என்று நியதி தாழ்ந்த குரலில் பதிலளித்தாள்.

அவள் அவ்வாறு கூறவும் ரஞ்சித்தும், பார்க்கவும், "என்ன!" என்று அதிர்ச்சியுடன் ஆரியவர்தனை நோக்க அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். "மிஸ்ஸிங்கா? எப்படி ஆரி காணாம போச்சு? இதுக்கு வாய்ப்பே இல்லையே. யாரோ இந்த டெண்டர் நமக்கு கிடைக்கக்கூடாதுன்னு இந்தவேலைய செஞ்சிருக்காங்க...இப்ப என்ன செய்றது? டெண்டர் ஸ்டார்ட் ஆகுறதுக்கு இன்னும் ஒன் ஹவர் தான் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது செஞ்சாகணுமே" என்று ஆரியவர்தனிடம் வினவினான்.

உடனே ஆரியவர்தன், "டென்ஷன் ஆகாத இத நான் பாத்துக்குறேன்" என்று அவனிடம் கூறிவிட்டு நியதியின் பக்கம் திரும்பி, "உனக்கு என்ன செய்யணும்னு தெரியும்" என்று அவளிடம் கூறினான். உடனே அவள், 'ஆம்' என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள். பின் அவர்களிடம் திரும்பி, "வாங்க கிளம்பலாம்" என்று கூறி அங்கிருந்து சென்றான். அவர்கள் இருவருக்கும் அவனுடைய செய்கை புரியவில்லை என்றாலும், அவன் ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறான் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்தது.

அதனால் மேலும் கேள்விகள் எதுவும் கேட்காமல் அவனுடன் டெண்டர் நடக்கும் இடத்திற்கு கிளம்பினர். அவர்கள் அவ்விடத்தை அடைந்ததும் அங்குள்ள அனைவரும் ஆரியவர்தனையே பார்த்தனர்.
WhatsApp Image 2025-02-04 at 7.59.51 AM.jpeg
அங்கிருந்த சிறுசிறு பேச்சுச்சத்தமும் நின்றுபோனது. அந்த டெண்டரை நடத்தும் அதிகாரி விரைந்து வந்து அவனை வரவேற்று முதல் வரிசையில் அவர்களை அமரவைத்தார்.

நியதிக்கு மட்டும் ஆரியனின் அருகில் இடத்தை விட்டுவிட்டு மற்ற இருவரும் சற்று தள்ளி அமர்ந்தனர். ஆரியவர்தன் தன் இடத்திற்குச் செல்லும்வரை இல்லாத சலசலப்பு அவன் அமர்ந்ததும் மீண்டும் துவங்கியது. அப்போது எந்த ஒரு கலக்கமுமில்லாமல் தெளிந்த முகத்துடன் அமர்ந்திருந்த ஆரியவர்தனைப் பார்த்து, "எப்படிடா உன்னால மட்டும் எந்த ஒரு டென்ஷனும் இல்லாம இருக்கமுடியுது. கொட்டேஷனே இல்ல. இப்போ நாம என்ன பண்ணப்போறோம்?..." என்று ரஞ்சித் மெல்ல கேட்டுக்கொண்டிருந்தபோதே சலசலப்புச் சத்தம் நின்று, மீண்டும் அவ்விடம் அமைதியானது.
_e10d1d4d-cd81-4c27-8dcd-e95af43cbf82.jpg
ஏனென்றால் வந்தது விராஜ் குணசீலன். அவன் கண்களில் கபடமும், நெஞ்சில் வஞ்சகமும், எப்படியாவது ஆரியவர்தனை தோற்கடித்தே ஆகவேண்டுமென்ற வெறியுடனும் நின்றுகொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-02-04 at 8.16.43 AM.jpeg
அவன் தன்னுடைய பி.ஏ.வுடன் வருவது தெரிந்ததும் டெண்டரை நடத்தும் அதிகாரி பயத்துடன் அவனிடம் விரைந்தார்.

ஆரியவர்தனும், விராஜும் பிசினஸ் உலகத்தில் மிகவும் முக்கியமான புள்ளிகள். அனைவர்க்கும் ஆரியனிடம் மதிப்பும், மரியாதையும் இருக்கும் ஆனால் விராஜிடம் பயமும், வெறுப்பும் தான் இருந்தது. அந்த அதிகாரி விராஜை தன்னுடன் அழைத்துச் சென்று ஆரியவர்தன் அமர்ந்திருந்த முதல் வரிசையில் சற்று தொலைவில் அமரவைத்தார். அவன் கால்மீது கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக அமர்ந்து ஆரியவர்தனை ஒரு அலட்சியப் பார்வையுடன் பார்த்து நக்கலாக சிரித்தான். ஆனால் ஆரியன் அவற்றை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

டெண்டர் ஆரம்பமாக இருக்கும் நிலையில் நியதி ஆரியனின் அருகே வந்து அமர்ந்தாள். அவள் ஆரியனைப் பார்த்து, 'வேலை முடிந்துவிட்டது' என்பதுபோல் கண்களை மூடி திறக்க அவனும் புன்னகை புரிந்தான். டெண்டர் துவங்கியது. ஒவ்வொருவரின் கொட்டேஷனையும் ஒவ்வொன்றாக வாசிக்க ப்ரொஜெக்டரின் மூலம் அவை காட்டப்பட்டது. ஆரியவர்தன் எந்தவொரு சலனமுமில்லாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

குணசீலன் கார்பரேட்ஸின் கொட்டேஷன் வாசிக்கப்படுவதை கேட்டதும் ரஞ்சித்தும் பார்கவும் அதிர்ந்தனர். விராஜ் தன்னுடைய கூலர்சை ஸ்டைலாக மாட்டிக்கொண்டு ஒரு வெற்றிப் புன்னகை புரிந்தான். உடனே ரஞ்சித் ஆரியவர்தனிடம் திரும்பி, "டேய் இது நம்ம கொட்டேஷன். அவனுங்க கைக்கு எப்பிடிடா போச்சி?...இப்பவும் ஏன்டா சிரிச்சிகிட்டே இருக்க..." என்று ஆதங்கத்துடன் வினவினான். ஆனால் ஆரியவர்தனோ, "டென்ஷனாகாத. ரிலாக்ஸ்..." என்று மட்டும் கூறினான்.

இறுதியாக வர்தன் கார்பரேட்ஸின் கொட்டேஷன் வாசிக்கப்படவிருந்தது. ‘கொட்டேஷனே இல்லாம எத வாசிக்கப் போறாய்ங்க’ என்று விராஜ் அலட்சியமாக நினைத்துக் கொண்டிருக்க கொட்டேஷன் வாசிக்கப்பட்டது. ஒவ்வொன்றாக வாசிக்க விராஜிடம் இருந்த புன்னகை அதிர்ச்சியாக மாறி அவன் கூலர்ஸை கழட்ட, ஆரியவர்தன் தன்னுடைய கூலர்ஸை ஸ்டைலாக அணிந்து வெற்றிப்புன்னகை புரிந்தான்.
WhatsApp Image 2025-02-04 at 1.35.51 PM.jpeg
அவனுடனிருந்த மற்ற இருவரும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைய நியதிக்கு, ஆரியன் டெண்டரைப் பற்றிக் கூறியது நினைவிற்குவந்தது.

அப்போது டெண்டர் கொட்டேஷன் முற்றுப் பெற்றிருந்த நிலை. நியதி ஆரியனிடம், "எப்படியோ கொட்டேஷன நல்லபடியா பிரிப்பர் பண்ணி முடிச்சாச்சி. இப்போ இத நாலு காப்பி எடுத்து வச்சுக்குறேன். இன் கேஸ் ஏதாவது டேமேஜோ இல்ல மிஸ் ஆகிடுச்சினாலோ வேற காப்பி யூஸ் பண்ணலாம்ல" என்று கூறினாள். ஆனால் ஆரியனோ, "டேமேஜ்னா இன்னொன்ன யூஸ் பண்ணலாம் ஆனா ஒன்ஸ் மிஸ்ஸானா மிஸ்ஸானது தான். அது நமக்கு இனிமேல் யூஸ் ஆகாது" என்று அவன் கூறவும் அவனைப் புரியாமல் நோக்கினாள்.
WhatsApp Image 2025-02-04 at 10.57.22 PM.jpeg
"மிஸ்ஸாயிடுச்சுனாலே அது திருட்டுப் போயிடுச்சுன்னு தான் அர்த்தம். திருடுனவன் அத தன்னோட சுயலாபத்துக்காக பயன்படுத்திக்குவான். அப்படி பண்ணும்போது அந்த கொட்டேஷன எத்தன காப்பி எடுத்துவச்சாலும் நோ யூஸ்" என்று விளக்கினான். உடனே, "அப்போ இத எப்படி சமாளிக்கிறது?" என்று அவள் கேட்டபோது, "இதுக்கும் ஒரு சொலுஷன் இருக்கு...இன்னொரு கொட்டேஷன் பிரிப்பர் பண்றது. அது ஃஸ்ட் கொட்டேஷன விடவும் பெட்டர் அண்ட் பெஸ்டா இருக்கணும்" என்று அவன் கூறினான்.

அவளுக்கு அவன் கூறியது புரிந்ததும், "அப்படி செஞ்சாதான் நாம டெண்டர்ல வின் பண்ண முடியும்" என்றவளிடம், "எக்ஸாக்ட்லி. எப்பவுமே ரெண்டு கொட்டேஷன் தயார் பண்ணிக்கணும். அப்பதான் இந்த சிட்டுவேஷன சமாளிக்கமுடியும்" என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்தான். "அப்போ நீங்களும் இதே மாதிரி எப்பவுமே பண்ணுவீங்களா சார்?" என்று அவள் வினவியபோது, "ஆமா நியதி கொட்டேஷன் பிரிப்பர் பண்றவங்க போக நானும் ஒண்ணு எக்ஸ்ட்ராவா யாருக்குமே தெரியாம இன்னொரு கொட்டேஷன் தயார் செய்வேன். இது அவங்க மேல நம்பிக்கை இல்லாததுனால இல்ல எப்பவுமே பீ பிரிப்பர்டா இருக்கணும். இதுவரைக்கும் நான் செஞ்சது தேவப்படல…" என்று அவளுக்கு தெரிவித்தான். நிகழ்காலத்திற்கு வந்தவள் தன்னருகே அமர்ந்திருந்த ஆரியனைப் பார்த்து புன்னகைக்க அவனும் அவ்வாறே செய்தான்.

இறுதியில் டெண்டர் வர்தன் கார்பரேட்ஸுக்கு சொந்தமானது. அங்கிருந்த அனைவரும் ஆரியவர்தனிடம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆரியவர்தன் வெற்றியடைந்ததைக் கண்ட விராஜுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் ஆரியவர்தனையும் அவனுடன் இருந்தவர்களையும் கண்கள் சிவக்க பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான். டெண்டர் தொலைந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கவேண்டாமென ஆரியவர்தன் மூவரிடமும் கூற அவர்களும் ஒப்புக்கொண்டனர். அலுவலகத்தை அடைந்தபோது அங்கிருந்த அனைவரும் நியதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவள் ஒரு நன்றிப் பார்வையை ஆரியனிடம் செலுத்தினாள். பின் அந்த வெற்றியைக் கொண்டாட ஆரியவர்தன் சார்பாக பார்ட்டி ஒன்று அன்றிரவு வைக்கப்போவதாகக் அறிவிக்கவும் அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக இருந்தனர். அந்த பார்ட்டிக்காக விராஜ் உட்பட அனைத்து முக்கிய புள்ளிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் மாலை வீடுதிரும்பியபோது சந்திரமதி தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பியிருந்தார். "எப்போ பாட்டி வந்தீங்க?" என்று மகிழ்ச்சியுடன் நியதி கேட்க, "இன்னைக்கு மதியம் தான்மா வந்தேன். டெண்டர வின் பண்ணீட்டீங்க போல! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க ரெண்டுபேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று அவர்களைப் பாராட்டினார்.

உடனே இளையவர்கள் சந்திரமத்தியின் காசி பயணத்தைப் பற்றி விசாரித்தபோது, "அத நாளைக்கு பாத்துக்கலாம். இப்போ ரெண்டுபேரும் பார்ட்டிக்கு ரெடியாகுங்க" என்று அவர்களை விரட்டினார். தன்னுடைய அறைக்குச் செல்லவிருந்தவளிடம், "நியதி, பார்ட்டிக்கு உனக்காக ரெண்டு ட்ரெஸ் செலக்ட் பண்ணி உன் ரூம்ல வச்சிருக்கேன். உனக்கு எது பிடிக்குதோ அதையே நீ வியர் பண்ணிக்கோ" என்று கூறினான். அவளுடைய மனதிற்குள் மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு இரண்டு வகையான உடைகள் மெத்தையில் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று அதிநவீன நாகரீக பெண்கள் அணியும் வெஸ்டர்ன் டிரஸ் மற்றொன்று நம்முடைய கலாச்சாரத்தைக் காட்டும் டிரெடிஷனல் டிரஸ்சான சாரி. அதைப் பார்த்தவாறே நியதி நின்றாள். இங்கு ஆரியவர்தன் நேவி புளூ டக்ஸீடோ அணிந்து அதில் கம்பீரமான ஆணழகனாக காணப்பட்டான். அதற்கு ஏற்றார் போல் ஷூவும், டையும் அணிந்திருந்தான். நியதிக்காக காத்துக்கொண்டிருந்தபோது, "நீங்க ரெடியாயிட்டா கீழபோங்க. நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும்" என்று அவள் அறையிலிருந்து குறல்கேட்டது.

அவன், "இருக்கட்டும் நியதி ஐ வில் வெய்ட்" என்று கூறியபோது, "இல்ல நீங்க போங்க" என்று அவள் சொல்லவும் ஆரியன் லிஃட் மூலம் கீழே இறங்கினான். அவன் நியதிக்காக காத்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்தும், பார்கவும் அங்கு வந்துசேர்ந்தனர். ரஞ்சித் ஆரியனைப் பார்த்து, "ஆரி நீ வழக்கம்போல டாஷிங்கா இருக்கடா" என்று பாராட்டவும் அவன் 'நன்றி' என்பதுபோல் தலையசைத்தான். அப்போது அங்கு வந்த சந்திரமதியையும் பார்த்து, "பாட்டி நீங்க இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க" என்று ரஞ்சித் பாராட்ட அவரோ, "போடா" என்று செல்லமாக திட்டினார்.

அங்கிருந்த மீதி மூவரும் பேசிக்கொண்டிருக்க ஆரியனின் மனதில், 'நியதி எந்த உடை அணிந்து வருவாளோ?' என்ற கேள்வியிலேயே நின்றது. அப்போது லிஃப்ட்டின் கதவுகள் திறக்கப்படும் சத்தம்கேட்டது. ஆரியன் ஆர்வமாக திரும்பிப் பார்த்தபோது அவனுடைய உதடுகளில் புன்முறுவல் மலர்ந்தது. ஏனென்றால் நியதி அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நேவி புளு டிசைனர் சாரியும் அதற்கேற்றாற் போல வைர நெக்லசும் அணிந்து ஒரு தேவதையாக காட்சியளித்தாள்.
WhatsApp Image 2025-02-04 at 5.16.34 PM.jpeg
தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் அந்த ஆணழகன். அப்போது, "வாவ் நியதி! யூ லுக் சோ பியூட்டிஃல்" என்று ரஞ்சித் அவளைப் பாராட்ட நியதி நன்றி தெரிவித்தாள். உடனே ஆரியன், "ரஞ்சித் நீ எல்லாருக்கும் காம்ப்ளிமென்ட் குடுத்தது போதும். கெஸ்ட் வர ஆரம்பிச்சிருப்பாங்க, போ அவங்கள கவனி" என்று ரஞ்சித்தை அங்கிருந்து விரட்டினான். பின் அவர்களும் ‘வர்தன்'ஸ் பார்ட்டி’ ஹாலுக்கு காரில் சென்றனர்.

அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, "நியதி நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க" என்று ஆரியன் கூறியபோது, "தாங்க் யூ" என்று வெட்கம் கலந்த புன்னகையுடன் கூறினாள். அவர்கள் பார்ட்டி ஹாலை அடைந்தபோது விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். ஒவ்வொருவராக ஆரியவர்தன் மற்றும் நியதி நிற்கும் இடத்திற்கு வந்து பூச்செ ண்டைக் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆரியன் அவர்களை நியதிக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

அப்போது அந்த பார்ட்டிக்குள் விராஜ் நுழைந்தான். அவனுடைய நெஞ்சம் எரிமலையாய் கோபத்தில் வெடித்தபோதும் எதையும் வெளிக்காட்டாமல் ஒரு லேசான புன்னகையுடன் ஆரியவர்தனிடம் வந்தான். "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் வர்தன். எப்பவுமே லக் உங்களுக்கு ஃப்பேவராவே இருக்கோ" என்று கூறி பூச்செண்டை கொடுத்தான். ஆனால் ஆரியவர்தனோ, "நான் எப்பவுமே ஹாட் ஒர்க்க நம்புறவன் மிஸ்டர் குணசீலன்" என்று உரைத்தவனின் கூரிய பார்வை விராஜின் இதயத்தை துளைத்தது.

இரண்டு எதிரி நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படியொரு நிலைமை அங்கு இருந்தது. கண்களாலே இருவருக்கும் இடையே பெரிய போர் நடந்துகொண்டிருக்க அங்கு மேலும் பதற்றம் நிலவியது. அருகில் நின்றுகொண்டிருந்த நியதி, ரஞ்சித் மற்றும் பார்கவ் செய்வதறியாது ஒருவறையொருவர் பார்த்தவண்ணம் விழித்தனர்.

உடனே நியதி, "தாங்க் யூ ஃபார் யூவர் காம்ப்ளிமென்ட் மிஸ்டர் குணசீலன்" என்று கூறி பேச்சை திசை திருப்பினாள். அந்த நேரம் விராஜின் பார்வை ஆரியவர்தனிடமிருந்து மெல்ல நியதியின் பக்கம் திரும்பியது. சட்டென அவனுடைய பார்வையிலிருந்த கடுமையை மறைத்து லேசான புன்முறுவலுடன், "வித் பிலஷர். நைஸ் டு மீட் யூ மிஸ்ஸஸ் வர்தன்" என்று கூறி கை குலுக்குவதற்காக நியதியிடம் கையை நீட்டினான். ஆரியன் எதுவும் கூறாமல் அவர்கள் இருவரையும் பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.

உடனே அவள் தன்னுடைய இரு கைகளை கூப்பி விராஜுக்கு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்தாள்.
WhatsApp Image 2025-02-05 at 6.37.26 PM.jpeg
அதைப் பார்த்ததும் ஆரியவர்தனின் அதரங்கள் புன்முறுவலால் மலர்ந்தது. அவளுடைய செய்கை விராஜுக்கு தன்னை அவமானப் படுத்துவதுபோல் இருந்தது. அவனும் தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துவிட்டு, "பெர்ஃக்ட் கப்பிள்" என்று பொய்யான புன்னகையுடன் விராஜ் கூற, "எஸ் மிஸ்டர் குணசீலன். தே ஆர் மெய்ட் ஃபார் ஈச் அதற்" என்று ரஞ்சித் பதில் கொடுத்தான். ரஞ்சித்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலும் நிற்க பிடிக்காமல் விராஜ் அங்கிருந்து நகர்ந்தான்.

அதன் பின் பார்ட்டி நல்லபடியாக நடந்து முடிந்தது. தன்னுடைய அறைக்கு செல்லவிருந்த நியதியை ஆரியன் வீட்டிலுள்ள தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்தான். அவள் வந்தவுடன், "நியதி, திஸ் இஸ் மை கிஃட் ஃபார் யூ" என்று கூறி அவளிடம் ஒரு கோப்பை நீட்டினான். அதில் வர்தன் கார்பரேட்ஸின் இருபது சதவீத ஷார்சை நியதியின் பெயரில் மாற்றி இருப்பதாக குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்த்து அவள் ஆச்சரியமடைந்தாள்.

அவள் அதை நிராகரித்தபோது, "நீ செஞ்ச ஹாட்வொர்க்குக்கு உனக்கு கிடைச்ச ரிவாட். சோ டோன்ட் இக்னோர்" என்று அவன் கூறவும் அவள் நன்றி கூறி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் அவரவர் வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களின் வீட்டில் ஒரு அறை மட்டும் திறக்காமல் எப்போதும் பூட்டியே இருப்பதை நியதி கவனித்தாள். உடனே சந்திரமதியிடம் சென்று, "பாட்டி அது யாரோட ரூம்? அது மட்டும் ஏன் திறக்காமையே இருக்கு?" என்று தன்னுடைய ஐயத்தை கேட்டாள்.

உடனே சந்திரமதியின் முகம் சோகமானது. "அது என்னோட பேத்தி அதிதியோடதுமா. அவ இறந்ததுல இருந்து அந்த ரூம யாரும் திறக்குறதே கிடையாது. அவளோட எல்லா ஃப்ட்டோசயும், நினைவுகளையும் ஆரி அந்த ரூம்குள்ள வச்சிருக்கான். அவன் வருஷத்துக்கு ஒரு தடவ அவளோட இறந்த நாளப்ப மட்டும் அந்த ரூம்குள்ள போய் சாத்திக்குவான். அடுத்த நாள் தான் அவன் வெளியவே வருவான்" என்று தனக்குள் இருந்த வருத்தத்தை நியதியிடம் கூறினார்.

ஆரியன் தன்னுடைய சொந்த விஷயங்களை வெளியுலகிற்கு காட்டிக்கொள்ளாததற்கு ஒரு காரணம் இருந்தது. அதனால் நியதி அதிதியைக் கண்டதில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்ற தன்னுடைய ஆவலை சந்திரமதியிடம் தெரிவித்தபோது, "என் கிட்ட ஆல்பம் இருக்கு வா நியதி நான் காட்டுறேன்" என்று கூறி அழைத்துச் சென்றார். அதில் ஆரியவர்தன் மற்றும் அதிதியின் சிறுவயதிலிருந்து அதிதியின் திருமணம் வரையிலான அனைத்து புகைப்படங்களும் இருந்தன.
WhatsApp Image 2025-02-04 at 5.36.33 PM.jpeg
அதிதி பருவப்பெண்ணாக இருந்த புகைப்படத்தை பார்த்தபோது நியதிக்கு அவளை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. எங்கு என்று தெரிந்ததும் நியதி அதிர்ச்சியடைந்தாள்.
WhatsApp Image 2025-02-05 at 6.14.27 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 12
அன்று பார்கவின் பெர்சனல் டேபிள் டிராயரில், தான் பார்த்த வரைபடத்தில் இருந்தது வேறுயாருமல்ல, அதிதி தான். நியதி தன்னுடைய மனதில், 'அதிதியோட போர்ட்ரைட்ட பார்கவ் ஏன் அவரோட பெர்சனல் ட்ராயர்ல வச்சிருக்காரு? அவருக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேள...ச...ச அப்படிலாம் இருக்காது. அவங்க ரெண்டுபேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா கூட இருக்கலாம் என்னையும் சரணையும் மாதிரி' என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் அவளே கூறிக்கொண்டாள்.

ஆனாலும் அவளுடைய மனதில் ஒரு சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது. ஆரியனின் குழந்தைப்பருவ புகைப்படத்தைப் பார்த்த நியதிக்கு அவனைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. "பாட்டி, உங்க பேரன் சின்ன வயசுல என்னலாம் செஞ்சாருண்ணு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு. ப்ளீஸ் பாட்டி எனக்கு அவர பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

தன்னுடைய பேரனைப் பற்றி நியதி கேட்கவும் சந்திரமதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஆரியவர்தனைப்பற்றியும் அவனுடைய பெருமைகளைப் பற்றியும் ஒவ்வொன்றாகக் கூறத் துவங்கினார்.

"என் மகன் சூரியவர்தனுக்கும் மருமக பிரபாவதிக்கும் பிறந்தவன் தான்மா ஆரி"
WhatsApp Image 2025-02-08 at 7.30.39 AM.jpeg_0c19582a-92cd-46d1-a9b2-6a31516fbdca.jpg
அவன் ரொம்ப சுட்டி. எப்பவுமே துறு துறுன்னு இருப்பான். கைல பிடிக்கவே முடியாது. எந்த ஒரு புது விஷயத்தையும் ஆர்வத்தோட கத்துக்குவான். ஆனா அதே நேரத்துல அவனுக்கு பிடிவாதமும் ரொம்ப ஜாஸ்தி. எதை நினைக்குறானோ அத கண்டிப்பா நடத்தியே தீருவான்”

“நாலு வர்ஷம் கழிச்சி அதிதி பிறந்தா. குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் நீடிக்கல..." என்று அவர் கூறும்போதே அவருடைய கண்களில் சோகம் வெளிப்பட்டது. "அதிதி பத்து மாசக் கைக்குழந்தையா இருந்தப்போ பிரபாவதி இறந்துட்டா. எங்க குடும்பமே ரொம்ப நொந்து போய்டுச்சி. அம்மா இல்லாத குறையே தெரியாத அளவுக்கு ஆரி அவளுக்கு அம்மாவா இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டான்”
_59b7144e-f50e-42e9-aa0d-ef13309829ed.jpg
“அவனுக்கு அதிதினா உயிர். அவளுக்கு ஒண்ணுன்னா ரொம்ப துடிச்சிருவான். அப்படிதான் ஒருநாள் அதிதி ஸ்விம்மிங் பூல்ல விழுந்துட்டா. அப்போ பக்கத்துல விளையாடிகிட்டு இருந்த ஆரி தனக்கு ஸ்விம்மிங்கே தெரியாதுங்குறதுகூட நினைப்பில்லாம தங்கச்சிய காப்பாத்துறதுக்கு ஸ்விம்மிங் பூல்ல குதிச்சிட்டான். அதுக்கப்பறம் எப்படியோ ரெண்டுபேரையும் காப்பாத்தியாச்சு. அவன் ஸ்விம்மிங்க ஒரே மாசத்துல தீவிரமா கத்துக்கிட்டான். அவனுக்கு வைராக்கியம் ரொம்ப ஜாஸ்தி”

“அவனுக்கு பதிமூணு வயசு இருக்கும்போது கொடைக்கானல் போர்டிங் ஸ்கூல்ல சேர்த்தோம். அங்கதான் அவன் ரஞ்சித்த முதல்ல பாத்தான். எப்ப போன் பண்ணாலும் ரஞ்சித் புராணம் மட்டும் தான் பாடுவான். அவங்க ரெண்டுபேரும் அவ்வளவு நெருக்கமா இருந்தாங்க"
WhatsApp Image 2025-02-08 at 8.38.14 AM.jpeg
"அதுக்கப்பறம் தான் தெரிஞ்சது ரஞ்சித்தோட அப்பா வேறயாரும் இல்ல சூர்யாவோட ஃப்ரெண்ட் சேகர்ன்னு”

“அப்பா ரெண்டுபேரும் நண்பர்கள்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் பசங்களுக்கு இடைல உள்ள ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் அதிகமாயிருச்சி. ஒருத்தவன விட்டு இன்னொர்த்தவன் பிரியவேமாட்டான். ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் ஆரி காலேஜுக்கு ஃபாரின் போயிட்டான். அங்க ஃப்மிலி ஃப்ரெண்ட் விஷ்வனாதன் பொண்ணு சரஸ்வதியோட கேம்பிரிஜ் யுனிவர்சிட்டில படிச்சான். சரஸ்வதியும் ஆரி மாதிரியே ரொம்ப சுட்டி. சின்னவயசுல ஆரியும் அவளும் சேர்ந்து செஞ்ச லூட்டி இருக்கே...அப்பா...தாங்க முடியாது"
_bfd7c575-48a4-4edb-a396-c3bd44c91181.jpg
"அவங்க குடும்பமும் இங்கதான் இருந்தாங்க. அதுக்கப்பறம் ஃபாரின் போய் செட்டிலாயிட்டாங்க”

“படிப்பு முடிஞ்சதும் ஆரி இந்தியாவுக்கே திரும்பி வந்து அவன் அப்பாவோட சேர்ந்து பிசினெஸ்ஸ பாத்துக்க ஆரம்பிச்சான். அப்ப ரஞ்சித்தோட அப்பா எதிர்பாராதவிதமா இறந்துட்டாரு. அதனால சூர்யா அவனையும் தன் பையனமாதிரியே நினைச்சி, கம்பெனில ஒரு பெரிய பொறுப்பக் கொடுத்தான். ஆரிக்கும், ரஞ்சித்கும் பிசினஸ்ஸ நல்லா கத்துக்கொடுத்தான். தான் போற எல்லா மீட்டிங்கும் ரெண்டுபேரையும் கூட்டீட்டு போவான்”

“ஆரி பிசினஸ்ஸ மட்டுமே பாத்துக்காம அதிதி கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணுவான். அவ சோகமா இருந்தா அவங்க ரெண்டுபேரும் பீச் ஹவுஸுக்கு போவாங்க. அங்க ஒரு நாள்முழுக்க அண்ணனும் தங்கச்சியுமா சேர்ந்து கேரம் விளையாடவும், பாட்டு கேக்கவுமா இருந்துட்டு நைட் தான் வருவாங்க"
_98c8df6e-3585-4d59-b88f-6243d10742a6.jpg
"வரும்போது ரெண்டுபேர் முகத்துலையும் சந்தோஷம் நிறைஞ்சி இருக்கும். இந்த பொடிப் பய பார்கவ் யாருன்னு உனக்கு தெரியுமா? என் மகனோட, பி.ஏ. சந்திரன் இருக்காருல்ல அவரோட பையன். ஒரு நாள் பிசினெஸ் விஷயமா, மீட்டிங்கு போன இடத்துல ஹார்ட்-அட்டாக்ல சந்திரன் இறந்துட்டாரு”

“அதனால பார்கவ்வ தனக்கு பி.ஏ.வா சூர்யா வச்சிக்கிட்டான். அவனும் ரொம்ப அறிவாளி, வந்த கொஞ்ச நாள்லயே எல்லா வேலையையும் சீக்கிரமா கத்துக்கிட்டான். ஆரி, ரஞ்சித், பார்கவ் மூணுபேருக்கும் ஒரே வயசுங்கிறதுனால நல்ல நண்பர்களா இருக்காங்க”
_e2bf28ea-8ba5-44cb-b728-8192fd40be31.jpg
“இப்போகூட பாத்திருப்பீல ரஞ்சித்தும், பார்கவும் உரிமையோடு இங்க வர்றதுக்கு சூர்யா தான் காரணம். அவன் மூணுபேரையும் ஒண்ணுபோல தான் நடத்துவான். ஆனா அந்த ஒரு நாள்...அந்த ஒரு நாள்...." என்று கூறும்போதே சந்திரமதியின் கண்களில் நீர் பெருகி நிற்க மேலும் பேசமுடியாமல் தவித்தார். தன் கண்களை இறுக மூடியதும் தேங்கியிருந்த கண்ணீர் வழிந்தது. அதனை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நியதி அவருடைய கைகளை ஆறுதலாக பற்றினாள்.

நியதியின் தொடுகையை உணர்ந்து கண்களை மெல்லத் திறந்த சந்திரமதி, கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் பேசத் துவங்கினார். "சூர்யாவுக்கு பிசினெஸ் உலகத்துல ஆதரவு ரொம்ப இருந்தாலும், அவனுக்கு எதிரிகளும் இருக்கத்தான் செஞ்சாங்க. அந்த சமயம் ஒரு பெரிய ப்ராஜக்டுக்காக நிறையபேர் போட்டி போட்டாங்க. ஆனா அது சூர்யாவுக்குதான் கிடைச்சது. அன்னைக்கு காலைல என் கிட்ட ஆசீர்வாதம் வாங்கீட்டு அந்த ப்ராஜக்ட் விஷயமா அவனும் ஆரியும் கார்லா கிளம்பினாங்க. அப்பதான் நான் என் மகன கடைசியா உயிரோட பாத்தது" என்று கூறும்போதே அந்த முடியவளின் குரல் தழுதழுத்தது.

“அவனோட எதிரிகளின் சதியால அவங்க போன கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி. அந்த விபத்துல…என் மகன் இறந்துட்டான். ஆனா ஆரிக்கு ரொம்ப அடிபட்டு அவன் ஆறு மாசமா கோமால இருந்தான். அந்த சமயம் ரஞ்சித்தும், பார்கவும் இந்த குடும்பத்துக்கு உறுதுணையா இருந்தாங்க. அவன் சுயநினைவுக்கு வந்த உடனே அவனோட அப்பா இறந்துட்டாங்குற செய்திய தெரிஞ்சிகிட்டான். அத கேட்டதும் அவன் கதறுன கதறல் இருக்கே...ப்பா....அது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு”
WhatsApp Image 2025-02-08 at 8.38.13 AM.jpeg
“ஒரு மகனா தன் அப்பாவுக்கு, செய்யவேண்டிய இறுதி சடங்க செய்யமுடியாம போனது அவன் மனசுல ஒரு குற்றஉணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்துச்சி. தன்னோட பெஸ்ட் ஃரெண்டா, வழிகாட்டியா, வெல் விஷரா, டீச்சரா இருந்த அப்பா இப்போ உயிரோட இல்லங்கிறத அவனால கொஞ்சம்கூட ஏத்துக்கவே முடியல. அதே சமயம் இன்னொரு அதிர்ச்சியும் எங்களுக்கு காத்துக்கிட்டு இருந்தது”

“அந்த ஆக்சிடென்ட்டுக்கு அப்பறம் ஆரியால நடக்கவேமுடியல. நல்லா ஓடி, ஆடி, திரிஞ்ச பையன் பையன் ஒரு வீல்சார்ல உட்கார்ந்துட்டான். யாரு கண்ணு பட்டதோ! அடிக்கு மேல அடியா விழுந்துக்கிட்டே இருந்தது. அப்பதான் சரஸ்வதி எப்படியாவது ஆரிய நடக்கவைக்கணும்னு ட்ரீட்மென்ட்காக ஃபாரின் கூடீட்டு போனா. எங்க எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை வந்துச்சி ஆரி எப்படியாவது நடந்திருவான்னு. ஆனா எங்களோட அந்த ஒரு துளி நம்பிக்கையும் தூள் தூளா ஆயிருச்சி”

“ஆரியோட ஸ்பைனல் காட்ல பலத்த அடிபட்டதால அவனால எழுந்து நடக்கவே முடியாதுண்ணு சொல்லி டாக்டர்ஸ் கைய விரிச்சிட்டாங்க. தன்னமாதிரியே அதிதிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுண்ணு ஆரி ரொம்ப கவனமா இருந்தான். அவளுக்கு அப்பா, அம்மாவா இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டான். அதனால அதிதிய ஒரு நல்லவன் கைல ஒப்படைக்கணும்னு நினைச்சான். அதுக்கு ரஞ்சித் தான் சரியான ஆளுன்னு எண்ணி ரஞ்சித்கும் அதிதிகும் கல்யாணம் நடத்திவச்சான்"
WhatsApp Image 2025-02-08 at 8.20.05 AM.jpeg
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. இனியாவது நல்லதா நடக்கும்ணு நினைச்சப்ப மறுபடியும் விதி தன்னோட கோர விளையாட்ட ஆரம்பிச்சது”

“கல்யாணமான ஒரே வாரத்துல அதிதி ரஞ்சித் ரெண்டுபேரையும் ஹனிமூனுக்காக ஸ்விட்சர்லான்டுக்கு ஆரி அனுப்பிவச்சான். அங்க ரெண்டுபேரும் சந்தோஷமாதான் இருந்தாங்க. ஆனா ஒரு நாள் அங்க நடந்த துப்பாக்கி சூடுல என் பேத்தி அதிதி இறந்துட்டா"
"ரஞ்சித்தும் குண்டடிபட்டு ரொம்ப மோசமான நிலமைல தான் இருந்தான். ரெண்டு மாசம் பெட் ரெஸ்டுக்கு அப்பறம் சரியானதும் இந்தியாவுக்கு ஆரி அவன கூட்டீட்டு வந்தான்”

“வாழ்க்கையே அவதான்னு நிச்சிகிட்டு இருந்த ஆரிக்கு அதிதி விட்டுட்டு போனதும் வாழ்க்க மேல வெறுப்பே வந்திருச்சி. அதிதியையும், தன்னோட அப்பாவையும் கொன்னது யாருன்னு தீவிரமா தேடினான். ஒட்டுமொத்த வெறியையும் பிசினெஸ் மேல காட்டி அத பலமடங்கு பெருக்கினான். தனிமைய தவிர்க்குறதுக்கு இராப்பகலா உழைக்க ஆரம்பிச்சான்”

“இப்படியே இருந்தா அவனுக்கு டென்ஷன் அதிகமாகி டிப்ரஷன்ல போய்டுவான்னு பயந்துட்டேன். ஒரு நல்ல பொண்ணு இவனோட வாழ்க்கைல வந்து, மனச மாத்துவான்னு நம்பிதான் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு முடிவெடுத்தேன். அந்த சமயம் ரியாவ ஒரு ஃங்ஷன்ல பாத்தேன். எனக்கு அவள ரொம்ப புடிச்சது. இவா ஆரியோட வாழ்க்கைல வந்தா நல்லவிதமா இருக்கும்னு நினச்சி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன். ஆனா கடவுள் ஆரியோட வாழ்க்கைல வெளிச்சம் கொண்டுவரப்போறது ரியா இல்ல நீ தான்னு முடிவெடுத்துருக்கான்னு அப்போ எனக்கு அது தெரியல. ஆனா இப்போ அத கண்கூடா பாக்குறேன்...நியதி நீ வந்ததுக்கு அப்பறம் ஆரி பழைய நிலைமைக்கு திரும்பிகிட்டு இருக்கான். அந்த சந்தோஷம், சிரிப்பு, பேச்சு எல்லாமே இப்போ தான் மெல்ல வர ஆரம்பிச்சிருக்கு. எனக்கு என்னோட பழைய ஆரிய நீ திருப்பி தருவியாமா?" என்று நியதியின் கையைப் பற்றி அந்த முதியவள் கேட்டாள்.

அவருடைய கண்களில் ஒரு விதமான ஏக்கத்தை நியதியால் காணமுடிந்தது. உடனே அவளும், "கவலயே படாதீங்க பாட்டி, உங்க பழைய ஆரிய கொண்டுவர்றது என்னோட பொறுப்பு. அவரோட வாழ்க்கைல இனிமேல் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்" என்று சந்திரமதியின் கையை ஆதரவாக பற்றினாள். புன்முறுவல் செய்த சந்திரமதியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. அவர் நியதியின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டு, "இது போதும்டா எனக்கு" என்று ஆனந்தத்துடன் கூறினார்.

தன்னுடைய அறைக்கு சென்றுகொண்டிருந்த நியதி ஹோம் ஆஃபிசை கடந்தபோது ஆரியன் தீவிரமாக லாப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள் சற்றுநேரம் அங்கேயே ஒரு புன்முறுவருடன் அவனையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். உடனே அவளுக்கு ஏதோ தோன்ற கிச்சனுக்கு சென்று இருவருக்குமாக காபியைக் கலந்து இரு கோப்பைகளில் ஊற்றி அலுவலக அறைக்கு எடுத்துவந்தாள்.

அவள் அந்த அறையினுள் நுழைந்ததுகூட தெரியாமல் வேலையில் தீவிரமாக இருந்த ஆரியனைப் பார்த்து, "எப்ப பாத்தாலும் வேல வேல...ரெஸ்ட்டே எடுக்க மாடீங்களா? கொஞ்சநேரம் அத வைங்க" என்று அவனிடமிருந்து லாப்டாப்பை பிடுங்கி வைத்தபோதுதான் அவளும் அங்கு இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

உடனே, "நியதி அத குடு. முக்கியமான வேலையா..." என்று அவன் கூறும்போதே, " இத விடுங்க, அங்க பாருங்க..." என்று கூறி அந்த பெரிய ஜன்னல் வழியாக தெரிந்த வானவில்லைக் காட்டினாள். அப்போதுதான் மழை பெய்து முடிந்து லேசாக சூரியன் தன்னுடைய கிரணங்களை வெளிப்படுத்த, இயற்கை அன்னை வானில் வர்ணங்களை தீட்ட வானவில் அழகாக காட்சியளித்தது. அதைப்பார்த்த ஆரியன் தன்னிலை மறந்து அதை ரசிக்க, பாவையோ அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.
WhatsApp Image 2025-02-07 at 8.40.09 PM.jpeg
பின் இருவரும் காப்பியை அருந்தியவாறு சில நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். அன்றிரவு நியதி, 'ஆரியன் நீங்க ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிருக்கீங்கன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சது. ஆனா எதையுமே வெளிக்காட்டாம எப்படி உங்க மனசுக்குள்ளயே வைக்க முடியுது? நான் உங்கள தனியாவே விடமாட்டேன். இனி உங்க வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். எந்த ஆபத்தா இருந்தாலும், என்ன தாண்டினாதான் உங்கள நெருங்க முடியும். நான் எப்பவுமே அரணா இருந்து உங்கள பாதுகாப்பேன்' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். நியதி தீர்க்கதரிசிபோல் இயற்கை ஆடவிருக்கும் ஆட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தாள் போலும். இவ்வாறு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய கைபேசிக்கு சரணிடமிருந்து அழைப்பு வந்தது.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 13
நியதி தன் தொலைபேசியில் வந்த அழைப்பை புன்முறுவலுடன் எடுத்தபோது, "என்ன நிதி, எப்படி இருக்க?" என்று சரண் கேட்க, "நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? உன் லைஃ எப்படி போகுது?" என்று பதிலுக்கு விசாரித்தாள். "ஏதோ போகுது. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று அவள் மீது அக்கறையுடன் விசாரித்தான்.
WhatsApp Image 2025-02-12 at 5.00.50 PM.jpeg
அவளும், "இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க" என்று கூறவும், "நாளைக்கு என்ன நாள்னு நியாபகம் இருக்குல? எப்பவும் போல காலைல ஷார்பா பத்து மணிக்கு நாம மீட் பண்ற பார்க்குக்கு வந்துரு... வந்திருவீல? " என்று கேட்டு அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அவள் யோசித்துவிட்டு, "சரி சான் நான் வந்துடறேன்" என்றாள். உடனே மகிழ்ச்சியுடன், "கிரேட், அப்ப நாம நாளைக்கு பாப்போம். உன் கூட நிறைய பேசவேண்டி இருக்கு. நம்மளால முன்னமாதிரி அடிக்கடி மீட் பண்ணவே முடியல. ஆனா நாளைக்கு ஒரு நாள் முழுக்க உன்னோடதான் இருக்க போறேங்குறத நினச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. குட் நைட் நிதி" என்று சொல்ல தானும், "குட் நைட் சான்" என்று கூறிவிட்டு தன் கைபேசியை வைத்தாள். நியதியின் திருமணத்திற்குமுன் சரண், ரியா மற்றும் நியதி மூவருமாக சேர்ந்து வருடத்திற்கு ஒரு நாள் வெக்கேஷன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
WhatsApp Image 2025-02-12 at 7.23.58 AM.jpeg
அன்று முழுவதும் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு ஒவ்வொரு இடமாக சுற்றி மகிழ்வதுண்டு. இந்த வழக்கத்தை திருமணம் ஆனாலும் கடைபிடிக்கவேண்டும் என்று ஒப்பந்தமும் செய்துகொண்டனர்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நியதியால் சரணை அடிக்கடி சந்திக்க இயலவில்லை. இப்போது தன்னுடன் ஒரு நாள் மட்டும் செலவிட வேண்டும் என்று அவன் கேட்டபோது அவளால் மறுக்கமுடியவில்லை ஏனென்றால் அவளுக்கும் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது.

அப்போது அவளுக்கு ஆரியவர்தனைப் பற்றுய நினைவு வந்தது. அதே சமயம் சரண் மீது கொண்ட அளவுகடந்த அன்பு அவளை அங்கு செல்ல தூண்டியது. எப்படியாவது ஆரியவர்தனிடம் அனுமதிவாங்கிவிடவேண்டும் என்று தன் அறைக் கதவை தயங்கியவாறு மெல்லத் திறந்து அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். அப்போது ஆரியன் முக்கியமான ஒரு கோப்பை புரட்டிக்கொண்டிருந்தான்.

அங்கு வந்த நியதி அந்த அறையிலுள்ள பால்கனிக்குச் சென்று வெளியே பார்த்தவாறு நின்றாள். அவனிடம் எப்படி அனுமதி வாங்குவது என்ற பதற்றம் அவள் மனதில் நிலவியது. ஏனென்றால் ஆரியவர்தன் வேலையில் மிகவும் கண்டிப்பானவன். தேவையற்ற விஷயங்களுக்கு விடுப்பு எடுப்பதை அவன் விரும்பமாட்டான். அவ்வப்போது ஒரு ஓரப்பார்வை மட்டும் அவன்மீது செலுத்தினாள். அவனிடம் சென்று கேட்கலாம் என்று நினைத்த மறுகணமே அவள் மனதை பயம் ஆட்கொள்ள மீண்டும் தன்னுடைய அறையினுள் புகுந்தாள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரியனின் அறைக்குள் வந்தாள். டீபாயில் இருந்த மேகஸின் ஒன்றை புரட்டியவாறு அவனுடைய படுக்கைக்கு முன் இருந்த சோஃவில் அமர்ந்தாள். அவள் செய்த அனைத்தும் ஆரியவர்தன் பார்வையிலிருந்து தப்பவில்லை. அவன் புன்முறுவலுடன், ‘தன்னிடம் ஏதோ ஒன்று கூற தயங்குகிறாள்’ என்பதை நன்கு உணர்ந்தான். அவனிடம் கேட்க தயங்கி மீண்டும் தன் அறையினுள் செல்லவிருந்தவளிடம், "ஒரு நிமிஷம் நியதி" என்று கூறவும் அப்படியே நின்றாள்.
WhatsApp Image 2025-02-12 at 7.29.17 AM.jpeg
"ஏதாவது சொல்லணுமா?" என்று அவன் கேட்கவும் அவள் சற்று தயங்கிவிட்டு விஷயத்தைக் கூறினாள். உடனே அவன், "நீ என்னோட வைஃப் நியதி. என்கிட்ட பெர்மிஷன் கேட்கணுங்கிற அவசியம் இல்ல" என்று கூற அவளோ, " வைஃப்ஆ இல்லைனாலும் ஒரு எம்ப்ளாயியா பாஸான உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கணும்ல. அது தானே சரி" என்றாள். ஒரு புன்முறுவலுடன் அனுமதிகொடுக்கவும் அவள் மகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாள். நியதி சரணுடன் செல்வது ஆரியனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவளுடைய விருப்பத்திற்காக அவன் ஒப்புக்கொண்டான்.

மறுநாள் ஆரியவர்தன் அலுவலகம் சென்றுவிட நியதி சரணைப் பார்க்கச் சென்றாள். இருவரும் தாங்கள் வழக்கமாக செல்லும் அனைத்து இடத்தையும் சுற்றினர். எல்லா விஷயங்களையும் அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களது பேச்சினூடே நியதியின் மனம் ஆரியனிடம் சென்றது. 'மணி இப்போ பதினொன்னு ஆச்சி. இப்போ அவரு காஃ கேப்பாரு' என்று அவள் எண்ணினாள்.

இங்கு தீவிரமான வேலையில் இருந்த ஆரியன் மணி பதினொன்று ஆகியும் நியதி காஃயைக் கொண்டுவரவில்லை என்றதும் இன்டர்காமில் அழைத்து, "நியதி என் டேபிளுக்கு காப்ஃ கொண்டுவா" என்று கூறி வைத்துவிட்டான். நேரமாகியும் காப்ஃ வரவில்லை என்றதும் நியதியின் கேபினைப் பார்த்தான். அப்போதுதான் அவள் அங்கு இல்லை என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது. ஆரியன் அந்த வெற்று கேப்பின்னை பார்த்தவாறே அவளுடைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

அப்போது ஒரு கோப்புடன் ரஞ்சித் அவன் அறையினுள் நுழைந்தான். அதை ஆரியவர்தனிடம் காட்டி விவரம் கேட்டுக்கொண்டிருக்க அவனோ அதனை கவனிக்காமல் நியதியின் அறையையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை கவனிக்கவில்லை என்று அறிந்த ரஞ்சித் பேச்சை அப்படியே நிறுத்தி ஆரியனைப் பார்த்தான். அவனுடைய பார்வை சென்ற திசையைப் பார்த்தவுடன் ரஞ்சித்துக்கு சிரிப்பு வந்தது.

"நியதிக்கு ஒரு போன் கால் பண்ணி பேசிட்டு வா டா. யூ வில் ஃபீல் பெட்டர்" என்று அவனுக்கு ரஞ்சித் ஆலோசனைக் கூறினான். ஆனால் ஆரியனோ, "இல்லடா நான் அவளுக்கான பிரைவேட் ஸ்பேஸ்ல தலையிட விரும்பல...கம் லெட் அஸ் கண்டின்யூ" என்று கூறி கோப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்தினான். அன்றைய பொழுது அவனுக்கு யுகங்களானது.

இருவரும் உடலால் பிரிந்திருந்தாலும் மனதால் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டுதான் இருந்தனர். மாலை நியதி வீடுதிரும்பினாள். அதுவரை வாடியிருந்த ஆரியனின் முகம் அவளைக் கண்டதும் சூரியனைப் போல் பிரகாசித்தது. இருவருக்கும் இடையே பரஸ்பரிய அன்பு நிலவியது.

இவ்வாறாக நாட்கள் சில கடந்தன. ஆரியவர்தனின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று நினைத்த நியதி ரஞ்சித்திடம் தன்னுடைய யோசனையைப் பற்றி தெரிவித்தாள்.
WhatsApp Image 2025-02-12 at 7.40.32 AM.jpeg
ஆனால் அவனோ, "நியதி தயவுசெஞ்சு அந்த மாதிரி எந்தஒரு காரியத்தையும் பண்ணீடாத. ஆரிக்கு அது சுத்தமா பிடிக்காது" என்று அவளை எச்சரித்தான். "ஆனா ஏன்?" என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டபோது, "வேண்டாம்னா விட்டுரு அவ்வளவுதான்" என்று கூறி அங்கிருந்து எழுந்துசென்றான்.

நியதி சந்திரமதியிடம் சென்று அதைப் பற்றி கேட்டபோது, "அதிதி போனதுல இருந்து ஆரி தன்னோட பிறந்தநாள கொண்டாடுறதையே விட்டுட்டான். எந்த ஒரு சந்தோஷமான நிகழ்ச்சியும் அவன் கலந்துக்கவே மாட்டான். ஆனா இப்போதான் கொஞ்சம் மாறிக்கிட்டு வர்றன். நியதி நீ ஏதாவது செஞ்சு என் பேரன அவனோட பிறந்தநாள் அன்னைக்கு சந்தோசமா இருக்கும்படி செய். அதுவே எனக்கு போதும்" என்று அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே அவள்," அது என்னோட பொறுப்பு. சோ நோ ஒரீஸ் பாட்டி" என்று உறுதியளித்தாள்.

ஆரியவர்தனின் பிறந்தநாளும் வந்தது. அவன் காலையில் எழுந்தபோது அவனுடைய படுக்கையில் ரோஜா பூவும், அதனருகில் உள்ள ஒரு சிறு காகிதத்தில் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவன் அடுத்து செல்லவேண்டிய இடமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்ததைப் போல் செய்தபோது அவன் அடுத்த இடமான பாத்ரூமுக்குச் சென்றான். அங்கும் அதேபோல ஒரு பூவும் அவன் செய்யவேண்டிய அடுத்த வேலையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை யார் செய்திருப்பார் என்று நன்கு அறிந்த ஆரியன் எதையும் தவிர்க்காமல் அதிலுள்ளபடியே செய்தான். குளித்துவிட்டு வந்தபோது அவன் அணிவதற்கு அழகான கோட்ஸூட்டும் காத்துக்கொண்டிருந்தது.

அதையும் அணிந்துகொண்டு வீல்சேரில் லிப்ஃட் மூலமாக கீழே வந்தான். அங்குதான் நியதி அவனுக்காக காத்துக்கொண்டிருந்தாள். அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவனுக்குத் தெரிவித்தனர். அவனுக்கு பிடித்த உணவை பார்த்துப் பார்த்துச் செய்த நியதி தானே பரிமாறவும் செய்தாள்.
WhatsApp Image 2025-02-12 at 7.44.47 AM.jpeg
உண்டுமுடித்துவிட்டு அலுவலகத்திற்கு செல்லவிருந்தவனை தடுத்து, "இன்னைக்கு நீங்க ஆஃபீஸ் போகப்போறது இல்ல" என்று நியதி ஆரியனிடம் கூறினாள். ஆனால் அவனோ, "இதுவரைக்கும் நீ சொன்ன எல்லாத்தையும் செஞ்சேன். இது என்னால கண்டிப்பா முடியாது நியதி. ஐ அம் சாரி" என்று கண்டிப்பான குரலில் கூறினான்.

ஆனால் அவளோ விடுவதாக இல்லை, "இல்ல மிஸ்டர் வர்தன் முடியவே முடியாது. இன்னைக்கு உங்களோட பிறந்தநாள். இன்னைக்கும் வேல வேலன்னு இருக்காதீங்க" என்று கூறினாள். "நியதி புரிஞ்சிக்கோ நான் என்னோட பிறந்தநாள கொண்டாடமாட்டேன்..." என்று அவன் கூறவும், "எனக்கு தெரியும் மிஸ்டர் வர்தன். நான் ஒன்னும் உங்கள பார்ட்டி வச்சு கொண்டாட சொல்லலயே. இன்னைக்காவது உங்க எல்லா டென்க்ஷனையும் விட்டுட்டு உங்க மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போய் ரிலாக்ஸா இருங்க..." என்று கூறினாள்.

அங்கு இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அதனை அங்கிருந்த ரஞ்சித், பார்கவ் மற்றும் சந்திரமதி பார்த்து சிரித்தவாறே ரசித்துக்கொண்டிருந்தனர்.
WhatsApp Image 2025-02-12 at 7.50.59 AM.jpeg
ஆரியன் ஒன்று சொல்ல நியதி வேறொன்றை கூறி அவனை மடக்கிவிடுவாள். "சபாஷ் சரியான போட்டி" என்று ரஞ்சித் கூற மற்றவர்கள் நகைத்தனர். இறுதியில் நியதி வெற்றிபெற்றாள்.

அன்று காலை அவர்கள் அவனுக்கு மிகவும் பிடித்தமான 'வர்தன்ஸ் மினி ஃபாரெஸ்ட்டிற்கு'ச் சென்று அங்குள்ள மரங்களையும் செடிகளையும் ரசித்தனர். பின் மதிய உணவை முடித்துவிட்டு நியதி அவனை அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்தவுடன் அவனுடைய மனதில் ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது. ஏனென்றால் அது ஆரியனும் அதிதியும் தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை செலவிட்ட பார்ம் ஹவுஸ் ஆகும். அங்கு ஆரியன் மற்றும் அதிதியின் சிறுவயது புகைப்படங்களை அழகாக தொங்கவிட்டு வண்ண விளக்குகளால் அந்த இடத்தை அலங்கரித்திருந்தாள்.
_29326faf-b476-42da-8f94-2014e4457847.jpg
அங்கு சிறிது நேரம் செலவிட்டபிறகு கதிரவன் அஸ்தமிப்பதை கடற்கரையிலிருந்து ரசித்தனர். அந்த மாலை நேர மெல்லிய கதிரொளியும், இதமான காற்றும், கடலலையின் ஓசையும் அவன் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.
WhatsApp Image 2025-02-12 at 7.59.24 AM.jpeg
இயற்கையை ரசித்தவாறே, "நியதி இந்த கடல பாத்தா உனக்கு என்ன தோணுது?" என்று வினவினான். அதற்கு, "ஆழமான கடல், அடிக்கடி இந்த கரைய தொட நினைக்கும் அலைகள், மனசுக்கு இதமான காட்சி...உங்களுக்கு?" என்று அவனிடம் கேள்வியைத் திருப்பினாள். அவனோ, "என் அப்பா என்ன தினமும் இங்க கூட்டீட்டு வருவாரு. அப்போ நான் அவர்கிட்ட கடலபத்தி கேக்கும்போது, 'ஆரி இந்த அலைகள் எப்போ பார்த்தாலும் சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும் ஆனா அந்த சத்தம் ஆழ்கடலோட அமைதிய பாதிச்சதே கிடையாது. அதேமாதிரி நம்ம வாழ்க்கைல இந்த அலைகள் மாதிரி நிறைய பிரச்சனைகளும், சவால்களும் வரும் ஆனா ஆழ்கடல் மாதிரி அமைதியான மனதோட முடிவெடுத்தா எப்பவுமே வெற்றி உன் கைவசம்'னு சொல்லுவாரு. அன்னைக்கு என் அப்பா சொன்னத இப்போவரைக்கும் ஃபாலோ பண்றதுனாலதான் என்னால சக்ஸஸ்ஃபுல்லா இருக்கமுடியுது" என்று தன்னுடைய தந்தை கூறியதை நினைவுகூர்ந்தான். சில நேரம் அங்கு இருந்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினர்.

இதுவரையில் பிறந்தநாளென்றால் விழா மற்றும் பரிசுகள் என்று நினைத்த ஆரிக்கு மனம்நிறைந்த சந்தோஷமும், மலரும் நினைவுகளை கொண்டதே உண்மையான பிறந்தநாள் என்று நியதி உணரவைத்தாள். அவளுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தான்.

அன்றிரவு தூங்குவதற்காக தன்னுடைய அறைக்குச் செல்லவிருந்த நியதியை நிறுத்தி, "நியதி...இஃ யூ ஆர் கம்ஃர்டபிள் நாம இனி...ஒரே...ரூம ஷார் பண்ணலாம்னு நினைக்குறேன். உனக்கு சம்மதமா?" என்று சற்று தயங்கிக் கேட்டான். அவனுடைய இந்த கேள்வியானது நியதிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இவ்வாறு கேட்பான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாணத்தால் ஒரு மெல்லிய புன்னகையுடன் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தாள். அன்றிலிருந்து அவர்களுக்குள் இருந்த சுவர் நீங்க நெருக்கம் மேலும் அதிகரித்தது. நாட்கள் சில இனிமையாகவே கடந்தன.

சரண் தன்னுடைய வேலை விஷயமாக மூன்று மாத காலம் டில்லிக்கு செல்லவேண்டி இருந்தது. இவ்வளவு பெரிய பிரிவு இதுவரையில் நியதி, சரண் இருவருக்கும் இடையே வந்ததே இல்லை. அதனால் மாலை தான் செல்வதற்கு முன்பு நியதியை பார்க்கவேண்டுமென்று எண்ணினான். அனைவரும் காலை உணவுக்காக அமர்ந்திருந்தபோது நியதி ஆரியனிடம் விஷயத்தைக்கூறி தனக்கு இரண்டுமணிநேரம் மட்டும் விடுப்பு கொடுக்குமாறு வேண்டினாள். ஆனால் அவனோ வேலை நிறைய இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டான்.

உடனே பார்கவ், "சார் மேடம் போகட்டும். டூ ஹார்ஸ் தான நான் பாத்துக்குறேன்" என்று நியதிக்கு ஆதரவாகக் கூறினான். ஆனால், "பார்கவ் உனக்கு சைட் வேல இருக்கும்னு நினைக்குறேன்" என்று கூறி அவனை ஆரியவர்தன் ஒரு பார்வை பார்த்தவுடன், "ஆமா சார் நான் மறந்துட்டேன்" என்று பயந்தவனாக தன்னுடைய தலையை தாழ்த்தினான். "வேணும்னா ஒண்ணு செய்யலாம். எல்லா வேலையும் சீக்கிரமா முடிச்சிட்டு நீ கிளம்பீரு நியதி" என்று ஆரியன் கூற அவளும் அதனை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள். ஆனால் அதன்பின் அவன் வைத்திருந்த மாயத்தை அவள் அப்போது அறியவில்லை.

அவள் வேலையை செய்துமுடித்துவிட்டு அவனிடம் வந்து நிற்க, ஒவ்வொரு வேலையாக அடுக்கிக்கொண்டே சென்று நேரத்தைக் கடத்தினான். அவன் அவளை விடுவதாகவே இல்லை. இறுதியில் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு செல்லவிருந்த நியதியின் கைபேசிக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் சரணிடமிருந்து வந்தது. அதில், 'இட்ஸ் ஓகே நியதி. நீ வரமுடியலைனாலும் பரவாயில்ல. நாம மூணு மாசம் கழிச்சி மறுபடியும் மீட்பண்ணுவோம். நான் ஃலைட்ல ஏறிட்டேன். பை வாலு. டேக் கேர்' என்று ஏழுதியிருந்தது. அதைக் கண்டவுடன் நியதியின் முகம் சோகத்தில் வாடியது. இவையனைத்தையும் தன்னுடைய அறையிலிருந்தவாறே ஆரியன் கவனித்துக்கொண்டே இருந்தான். அவனுடைய மனதில் குற்றவுணர்ச்சி எழுந்தது. நியதியின் சோகமான முகத்தைப் பார்த்ததும், தான் செய்த காரியத்தை நினைத்து தன் மீதே கோபம் எழுந்தது.
WhatsApp Image 2025-02-12 at 7.37.37 AM.jpeg
அன்றிரவு ஆரியன் படுக்கையின் ஒருபுறம் அமர்ந்திருக்க, நியதி அவன் புறம் திரும்பியவாறு உறங்கிக்கொண்டிருந்தாள். அவன் குழந்தைத் தனமான சோகம் கலந்த அவளுடைய முகத்தைப் பார்த்து, "ஐ அம் ரியல்லி சாரி நியதி. இன்னைக்கு நான் ஏன் அப்படி செஞ்சேன்னு எனக்கே தெரியல...சரண் கூட நீ போனா எனக்கு ஏன் பிடிக்கல? லவ்ல பொஸசிவ்னஸ் இருக்கலாம் ஆனா அது யாரையும் பாதிக்கவே கூடாத அளவுக்கு இருக்கனும். பட் இன்னைக்கு நான் செஞ்சது உன்ன ரொம்பவே ஹர்ட் பண்ணீருச்சு. ஐ அம் எக்ஸ்ட்ரீமிலி சாரி. இனிமேல் இப்படி நடக்காது. நான்..." என்று கூறும்போதே நியதியிடம் அசைவு தெரிந்தது.

அவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். அப்போது ஆரியனுக்கு ஒரு நிமிடம் அவனுடைய இதயம் நின்று மீண்டும் துடித்தது.
_4ca98e27-097d-4a4f-9fbc-10c8acae095b.jpg
தான் கூறிய எதையும் நியதி கேட்கவில்லை, தூங்கதான் செய்கிறாள் என்பதை உறுதிசெய்துகொண்டதற்கு பிறகுதான் ஆரியனுக்கு நிம்மதி பிறந்தது. அவனும் உறங்கச் சென்றான். அப்போது நியதி தன்னுடைய கண்களை மெல்லத் திறக்க அவளுடைய அதரங்கள் புன்னகையில் மலர்ந்தன.

மறுநாள் காலை நியதி சரணுடைய கைபேசிக்கு அழைத்து, "சாரி சான் நேத்துவரமுடியால" என்று அவள் மன்னிப்பு கோர அவனோ, "பரவா இல்ல நிதி இருக்கட்டும். பிறகு பாத்துக்கலாம்" என்று சமாதானம் கூறினான். "நீ எப்போ அங்க ரீச் பண்ண? எப்போ மீட்டிங்கு கிளம்புவ?" என்று கேள்விகளை அடுக்கினாள். அவன் மெல்லிய புன்னகையுடன், "நேத்து நைட்டே வந்துட்டேன். இன்னைக்கு காலைல பத்துமணிக்கு மீட்டிங். அங்க போறதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கேன்...என்ன இன்னைக்கு வழக்கத்துக்கு மாறா உன் பேச்சுல்ல சந்தோஷம் தாண்டவமாடுது. என்ன விஷயம் மேடம்?" என்று ஆவலுடன் விசாரித்தான்.

"அது...அது..." என்று அவள் தயங்கியபோது, "என்ன வெக்கம்லாம் படுறீங்க?...என்ன லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சா?" என்று அவன் சந்தோஷத்துடன் கேட்டான். அதற்கு, "போ சரண்" என்று அவள் வெட்கத்துடன் புன்னகைத்தாள். உடனே, "எப்போ ஆரியன் சார் கிட்ட ப்ரபோஸ் பண்ணப்போற?" என்று அவன் கேட்டதற்கு, "எங்களோட ஃபஸ்ட் வெட்டிங் அனிவர்சரில சொல்லலாம்னு இருக்கேன்" என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தாள்.

"வாழ்த்துக்கள் நிதி. எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணும். எனக்கு அது போதும்" என்று அவன் கூற அவளும், "தாங்க் யூ டா. உன்னோட வாழ்க்கையிலும் உன்ன உண்மையா விரும்புற ஒரு நல்ல பொண்ணு சீக்கிரம் வருவா...சரி போய் மீட்டிங்கு கிளம்பு. நான் போன வைக்காட்டி நீ பேசிக்கிட்டே இருப்ப" என்று சிரித்தவாறே தன்னுடைய கைபேசியை வைத்தாள். நியதி நன்றாக இருக்கவேண்டுமென்று சரண் கடவுளை வேண்டினான். ஆனால் அந்த ஆழகிய மாதின் வாழ்வில் ஒரு பெரிய சூறாவளி வீச காத்துக்கொண்டிருப்பதை அவன் அன்று அறியவில்லை.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 14

அதிதியின் நினைவுநாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் நியதி வேலைநிமித்தமாக பார்கவை தேடிக்கொண்டிருந்தாள். அவன் எங்கு தேடியும் தென்படாததால் ஆரியனிடம் சென்று விசாரிக்க அவனோ, "பெர்சனல் ஒர்க் காரணமா பார்கவ் அவுட் ஆப்ஃ ஸ்டேஷன் போயிருக்கான். டே ஆப்ஃடர் டுமாரோ தான் வருவான். என்ன சந்தேகம்னாலும் என்கிட்ட கேளு" என்று கூறினான்.
WhatsApp Image 2025-02-13 at 7.42.54 AM.jpeg
மறுதினம் அதிதியின் நினைவுநாள் என்பதால் அனைவரும் திதி கொடுப்பதற்காகச் சென்றனர். ஆரியனும், நியதியும் ஒரு காரில் செல்ல, சந்திரமதியும், ரஞ்சித்தும் மற்றொரு காரில் புறப்பட்டனர்.

திதி கொடுத்துவிட்டு நியதி காரில் ஏறுவதற்காக கதவைத் திறந்தபோது ஏதோ தெரிந்த நபரைப் பார்த்தது போல் தோன்றியது. சட்டென்று திரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
_7b6a9ae8-345c-442a-a005-9c0316e399a6.jpg
ஏனென்றால் அருகிலிருந்த ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குள் பார்கவ் நுழைந்தான். 'பார்கவ் அவுட் ஆப்ஃ ஸ்டேஷன் போனதா ஆரியன் சொன்னாரு. ஆனா இங்க எப்படி? அதுவும் ஆர்ஃனேஜ்ல' என்று அவளுடைய மனம் குழம்பியது. அவள் சட்டென ஒரு யோசனைக்கு வந்தவளாக ஆரியனிடம் தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு, அனைவரும் கிளம்பியதும் பார்கவைப் பின்தொடர்ந்தாள்.

அங்குள்ள ஒருவரிடம் அவனைப் பற்றி விசாரித்தபோது அவன் அதிதியின் பெயரில் அந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் முழுவதற்குமான சாப்பாடும் துணிகளும் கொடுத்திருப்பதாக கூறினார்.
_3d7cbe1a-aa62-4e01-9637-e4a6b8d9e8e9.jpg
அப்போது நியதியின் குழப்பம் இன்னும் அதிகரித்தது. 'இந்த நல்ல காரியத்த எல்லாருக்கும் தெரிஞ்சே செய்யலாமே. ஏன் மறைக்குறாரு?' என்ற சந்தேகம் அவள் மனதில் எழுந்தது. பார்கவ் அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவனுடைய வீடு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது ஃப்லோரிலுள்ள ஒரு பெரிய லக்ஸூரி அப்பார்ட்மெண்ட். பின்தொடர்ந்தவள் அவன் விரைந்து சென்று தன்னுடைய அப்பார்ட்மென்டில் நுழைந்து கதவை சாத்திக்கொள்ள வெளியே அப்படியே நின்றாள். 'இனி உள்ளே செல்ல வாய்ப்பில்லை' என்று நிராசையுடன் திரும்பும்போதுதான் அந்த கதவு பூட்டப்படாமல் இருப்பதை கவனித்தாள். மெதுவாக கைப்பிடியைத் திருகி வீட்டினுள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்.
_866efb45-7d3d-4e26-a6ff-14feea80634d.jpg
உள்ளே சென்றவள் சப்தம் எதுவும் எழுப்பாமல் மேலும் நகர்ந்தாள்.

அந்த பெரிய அப்பார்ட்மென்டில் பார்கவ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 'எங்க போயிருப்பார்?' என்று என்னும்போது அவளுக்கு ஒரு அழுகுரல் கேட்டது. அது வேறுயாருமல்ல பார்கவ் தான். நியதி ஆச்சரியத்துடன் நிற்கும்போதே, “நீ ஏன் இவ்வளவு சீக்கிரமா எங்கள விட்டுட்டு போய்ட்ட? நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நான் நினைச்சேனே. நான் உன்ன லவ் பண்ண விஷயத்த மறச்சது உன்ன இந்த நிலைல பாக்கவா?...கடவுளே ஏன் எங்க வாழ்க்கைல இப்படி விளையாண்ட? என்னோட காதல அவகிட்ட சொல்லமுடியாத பாவியாயிட்டேனே" என்று அவன் புலம்பும்போதே அறையின் வெளியே நின்ற நியதி புரியாமல் விழித்தாள்.
_016550d2-2f1c-483d-a33a-670cf503a3a2.jpg
'இவரு யார நினைச்சி புலம்புறாரு?' என்று அவள் நினைக்கும்போதே, "அதிதி என்ன ஏன் இப்படி தவிக்கவிட்டுட்டு போயிட்ட? நம்ம காதல் கனவா போய்டுச்சே அதிதி..." என்று பார்கவின் புலம்பல் சத்தம் கேட்டது. அவன் தன்னுடைய அரை முழுவதும் அதிதியின் புகைப்படங்களால் நிறப்பியிருந்தான். அவளுக்கென வாங்கிய பரிசுப் பொருள்களை, கொடுக்க முடியாமல் ஒரு பெரிய பெட்டியில் வைத்திருந்தான். ஒரு நீண்ட பெரிய சுவற்றில் ‘அதிதி’ என்ற பெயராலே அவளுடைய அழகான முகத்தை வரைந்துவைத்திருந்தான்.

அதை கேட்ட நியதிக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளால் தான் கேட்டதை நம்பவேமுடியவில்லை. ஆனால் அவனுடைய காதலும், வலியும், ஆதங்கமும் அந்த புலம்பலில் இருந்ததை நன்றாக நியதியால் உணரமுடிந்தது. அவள் அதிர்ச்சியில் தன்னையறியாமல் பின்னே நகர அந்த நேரம் பன்னிரண்டு மணியானதால் கடிகாரத்திலுள்ள குயில் கூவத்துவங்கியது. அதில் சற்று பயந்த நியதி அருகிலிருந்த டேபிளிலுள்ள கண்ணாடி ஜாடியை கவனிக்காமல் தட்டிவிட்டதால் அது கீழே விழுந்து உடைந்தது.
_78965f3d-58cc-44bd-94c7-04ddab6529f2.jpg
அந்த சத்தத்தைக் கேட்ட பார்கவ் கண்களை துடைத்தவாறு விரைந்து வெளியே வந்தான். ஆனால் அங்கு யாரும் தென்படவில்லை. வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது அங்கு யாருமில்லாததால் மீண்டும் தன் அப்பார்ட்மென்டிற்குள் சென்று பூட்டிக்கொண்டான்.

மனம் நிறைந்த குழப்பத்துடன் நியதி வீடு திரும்பினாள். வீட்டிற்கு வந்தவள் தங்களுடைய அறைக்குச் செல்லாமல் லானிலேயே அமர்ந்துவிட்டாள்.
_c13305c1-eddb-42f8-a7c6-fe38d831cf6c.jpg
அவளுடைய மனம் எண்ணகளின் குவியலானது. அவள் ஒரு கேள்வியைக் கேட்க அது பதிலைத்தராமல் மற்றொரு கேள்வியில் சென்று நின்றது. இப்படியே யோசனையில் ஆழ்ந்தவளுக்கு முகத்தில் இதமான கதிரவனின் ஒளியும், குளிர்காற்றும் அவளை வருடியது. அது மாலை நேரம் என்பதை உணர்ந்து தங்களுடைய அறைக்குத் திரும்பினாள்.

அங்கு ஆரியன் தன் அறையிலுள்ள பால்கனியில் ஆட்டோமேட்டிக் வீல்-சேரில் அமர்ந்து வானத்தை வெரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். காலையில் திதி கொடுத்துவிட்டு வீடுதிரும்பியவுடன் அதிதியின் அறையினுள் சென்றவன் மாலைதான் தன்னுடைய அறைக்குத் திரும்பியிருந்தான். அறைக்கு வந்த நியதி அவனருகே சென்று, "ஆர் யூ ஆல்ரைட் மிஸ்டர் வர்தன்?" என்று கேட்டு அவனைப் பார்த்தபோது அவனுடைய முகம் கல்லாக இருகியிருந்தது.
WhatsApp Image 2025-02-13 at 8.20.58 AM.jpeg
அவள் தன்னுடைய கையை ஆதரவாக அவனுடைய தோளில் மெல்ல வைத்தபோது உணர்வுக்கு வந்தவனாக தன் வலிய கரங்களால் அவள் கையைப் பற்றினான்.

ஒரு பெருமூச்சுவிட்டு பின் பேசத் துவங்கினான், "எனக்கு என் அப்பான்னா ரொம்ப பிடிக்கும். அவர் என்னோட ஃப்ரெண்ட், ரோல்-மாடல். எல்லாத்தையும் நான் அவர்கிட்டதான் ஷார் பண்ணுவேன். நான் கோமால இருந்தப்ப அவர் இறந்துட்டாரு. நான் சுயநினைவுக்கு வந்ததும் அத கேட்டு மனசொடஞ்சி போயிட்டேன். என்னோட வாழ்க்கையே இருண்டுபோயிடுச்சு. ஒரு மகனா நான் அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்ககூட செய்யமுடியாத பாவியாயிட்டேன். அத நினச்சா எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு..." என்று அவன் கூறும்போதே கண்ணீரால் நிறைந்த அவனுடைய கண்கள் சிவப்பாக மாறியது. "அதிதியோட பாதுகாப்புக்காக அவள ரஞ்சித்கு கல்யாணம் பண்ணிவைச்சேன்”

“அவங்கள சந்தோஷமா ஹனிமூன்க்கு அனுப்பிவச்சேன். ஆனா அப்படியொரு அசம்பாவிதம் நடக்கும்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல. அதிதியும் ரஞ்சித்தும் ஸ்கையிங்(பனிச்சறுக்கு) போனப்ப அவங்கமேல ஷூட் அவுட் நடந்துச்சு. அப்ப அதிதி அந்த மலையில இருந்து கீழவிழுந்துட்டா...எவ்வளவு தேடியும் அவள எங்களால கண்டுபிடிக்கவே முடியல. அப்பவும் என்னோட தங்கச்சி முகத்த என்னால பாக்க முடியல...நான் ஒரு பொறுப்பான மகனாவும் இல்ல, அண்ணனாவும் இல்ல..." என்று கூறும்போதே இன்றுவரையும் அவன் மனதில் அது ஆறாத ரணமாக இருப்பதை நியதி உணர்ந்தாள்.

அதை பார்த்த நியதி, "உங்களுக்கு நடந்தது ரொம்பவே துயரமான சம்பவம். அத யாராலயும் ஜீரணிக்கவே முடியாது. நடந்த எதுவுமே உங்க கட்டுப்பாட்டுக்குள்ள இல்ல. அதனால அத ஏத்துக்கதான் செய்யணும். கவலப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. நீங்க இப்படி சோகமா இருக்குறது உங்க அப்பாவுக்கும், அதிதிக்கும் பிடிக்குமா? " என்று அவள் கூறவும் அவன் அவளை நோக்கினான். "அதோட நீங்க கவலப் படுறதுனால பாட்டி, ரஞ்சித், பார்கவ் எல்லாருமே கவலையா இருக்காங்க. கவலையில்லாத மனுஷனே இந்த உலகத்துல கிடையாது. நானும் என் வாழ்க்கைல நிறைய கஷ்டங்கள தாண்டிதான் வந்திருக்கேன். அத நினைச்சுகிட்டே இருக்க முடியுமா? நாம தான் நம்மள மாத்திக்கணும். நீங்க எப்பவுமே சொல்லுவீங்கள்ள பாஸ்ட பத்தியோ ஃப்யூச்சர பத்தியோ யோசிக்க கூடாது ப்ரசன்ட்ல தான் இருக்கணும்னு. ஆனா நீங்க இப்போ அப்படியா இருக்கீங்க? ப்ளீஸ் அத விட்ருங்க" என்று அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

அவள் கூறியதைக் கேட்டவன், தன் அருகிலுள்ளவர்களின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான். பின் அவளிடம் திரும்பி, "நியதி உன் ஃபேமிலிக்கு என்ன ஆச்சு? நீ ஏன் மிஸ்டர் வரதராஜன் வீட்ல தங்கி இருந்த?" என்று அவளை பற்றி அறியும் ஆவலில் கேள்விகளை கேட்டான். உடனே அவள் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தாள், "என் தாத்தாவுக்கு மூணு பசங்க. முதல்ல என் அப்பா, அதுக்கப்பறம் ரெண்டு பேர். எல்லாருமே சேர்ந்து தான் இருந்தோம் ஆனா தாத்தா இறந்ததுக்கு அப்பறம் சித்தப்பா ரெண்டுபேரும் தனித்தனியா போய்ட்டாங்க. எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஆனா அந்த ஒரு நாள் என் வாழ்க்கைய அப்படியே பொரட்டிபோட்ருச்சி”

“எங்க குலதெய்வ கோவில் சாமி கும்புடறதுக்காக எங்க குடும்பம் மொத்தமா கிளம்பினோம். சாமிய பாத்துட்டு பக்கத்துல இருக்குற ஆறுல என் தங்கச்சி குளிக்கணும்னு சொன்னா. அதனால நானும் என் அப்பாவும் கரைல நிக்க என் அம்மா மட்டும் அவள அங்க கூட்டீட்டு போனாங்க. அங்க இருந்த சுழல்ல ரெண்டுபேரும் மாட்டிக்கிட்டாங்க. என் அப்பா அவங்கள காப்பாத்த போயி, என் கண்ணு முன்னாலேயே அவங்க மூணுபேரும் தண்ணிக்குள்ள போய்ட்டாங்க...என்னால எதுவுமே செய்யமுடியால. யாரும் என்ன ஏத்துக்க தயாரா இல்ல அதனால என்ன ஒரு ஹோம்ல சேத்துட்டாங்க. அங்க தான் நான் சரண சந்திச்சேன். எனக்கும் அவனுக்கும் ஒரு நல்ல பாண்டிங் வந்துச்சி. எனக்கு ஒண்ணுன்னா அவன் தான் முதல்ல வந்து நிப்பான். ஹோம்ல சேத்தவங்க எப்பயாவது வந்து பாக்க வருவாங்க. ஆனா அதுவும் ஒரு சுயநலத்துக்காக தான்னு எனக்கு அப்போ தெரியல. நான் மேஜரானதும் நாங்க வாழ்ந்த வீட்ட என் ரெண்டு சித்தப்பாவும் அவங்க பேருக்கு மாத்தி என்கிட்ட சைன் வாங்கிட்டாங்க. அதுக்கப்பறம் என்ன யாருமே பாக்கவரல”

“நான் இப்போவாரைக்கும் உயிரோட தான் இருக்கேன்ங்குறதுகூட அவங்களுக்கு தெரியாது...காலேஜ் படிக்கும்போது ஒரு பிரச்சனைல இருந்து ரியாவ காப்பாத்தினபோதுதான் எங்க ரெண்டுபேருக்கும் நட்பு ஏற்பட்டுச்சி. ரியாவோட நடவடிக்கைல நல்ல மாற்றம் என்னால ஏற்பட்டதால வரதராஜன் அப்பா அவரு வீட்டு அவுட் ஹவுஸ்ல என்ன தங்க வச்சாரு. படிப்பு முடிஞ்சதும் அவரோட கம்பெனிலயே வேலையும் போட்டுக்குடுத்து என்ன நல்லா பாத்துக்கிட்டாரு. அதனால நான் அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவர் என்னதான் என்ன வெறுத்தாலும் நான் அவர வெறுக்கவே மாட்டேன்..." என்று அவள் கூறும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது ஆரியன் நியதியின் கையை ஆறுதலாகப் பற்றி, "கவலப் படாத நியதி நான் இருக்கேன். எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்" என்று நேருக்கு நேர் அவளுடைய கண்களை பார்த்துக் கூறினான். கண்கள் வழியாக இருவரும் தங்களுடைய காதலை பரிமாறிக் கொண்டனர். இப்போது இருவருக்கும் உள்ள நெருக்கம் மேலும் அதிகரித்தது.

மறுநாள் காலை அலுவலகத்தில் வைத்து பார்கவை பார்த்தவுடன் முந்தயநாள் நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது. அதை எப்படியாவது அவனிடம் கேட்டுவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தாள். பார்கவ் கேஃடீரியா செல்ல அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள். அவன் அமர்ந்திருந்த டேபிளின் எதிரே போடப்பட்டிருந்த மற்றொரு நாற்காலியில் அவளும் அமர்ந்தாள்.
WhatsApp Image 2025-02-13 at 8.36.38 AM.jpeg
அதைப் பார்த்து சற்று பதற்றமடைந்த பார்கவ், "மேடம் என்ன திடீர்னு இங்க வந்திருக்கீங்க?" என்று கேட்டான். “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தப் பத்தி பேசணும்" என்று அவள் கூறவும், "சொல்லுங்க மேடம்" என்று கூறிவிட்டு காஃபியிலிருந்து மிடறுகளாக அருந்தத் துவங்கினான்.

உடனே நியதி, "நீங்க அதிதிய லவ் பண்ணீங்களா?" என்று கேட்க நினைத்ததை படாரென போட்டுடைத்தாள். காஃபியை அருந்திக்கொண்டிருந்தவன் அந்த எதிர்பாராத கேள்வியை கேட்டதும் அவனுக்கு புரை ஏறியது.
WhatsApp Image 2025-02-13 at 8.31.20 AM.jpeg
சற்று நிதானித்துவிட்டு அவளை பார்த்தபோது நியதி பார்கவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். "என்ன மேடம் இப்படி கேக்குறீங்க? அப்படிலாம் எதுவும் இல்ல" என்று அவன் மழுப்ப அவளோ, "பெர்சனல் விஷயமா ஊருக்கு போறேன்னு சொன்ன உங்களுக்கு நேத்து ஹோம்ல என்ன வேல?" என்று கேட்டபோது அவளுக்கு தன்னைப் பற்றிய விஷயம் தெரிந்துவிட்டது என்பதை பார்கவ் உணர்ந்தான். "அப்போ நேத்து என் வீட்டுக்கு நீங்க தான் வந்தீங்களா?" என்று அவன் கேட்டவுடன், அவளும் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தாள். இனி மறைத்து எந்த பயனுமில்லை என்பதை உணர்ந்த பார்கவ் அனைத்தையும் கூறத் துவங்கினான்.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 15

பார்கவின் தந்தை இறந்தபின், அவனை சூரியவர்தன் தன் பி.ஏ.வாக நியமித்தார். அவர் எங்கு சென்றாலும் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். முழுநேரமும் அவருடன் செலவிட்டதால் அவனுக்கு அதிதியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதி மிகவும் நல்ல பெண். அவள் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் உதவிசெய்வாள். அவளிடம் தன்னை எப்போது தொலைத்தான் என்று பார்கவுக்கு தெரியவில்லை.

அவனது காதலை அவளிடம் எப்படியாவது சொல்லவேண்டுமென்ற ஆவல் எழும்போதெல்லாம் அதை அவள் மறுத்துவிடுவாளோ என்ற பயமும் வரும். அதனால் அவன் அவள்மீது கொண்ட அளவுகடந்த காதலை யாரும் அறியாவண்ணம் தன் மனதினுள் புதைத்து வைத்திருந்தான். ஆனால் அவனே வியக்கும் அளவிற்கு ஒரு ஆச்சரியம் நடந்தது. அதிதியின் பிறந்தநாளின் முன்தினம் அவள் பார்கவிடம், அவனைக் காதலிப்பதாகக் கூறினாள்.
அதைக் கேட்டதும் அவனால் நம்பமுடியவில்லை. அவன் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான். அவனுடைய முடிவை அதிதி தன்னுடைய பிறந்தநாளன்று தெரிவிக்குமாறு கூறினாள்.

அவனும் சந்தோஷமாக தன்னுடைய காதலை அவளுடைய பிறந்தநாள் பரிசாக அவளுக்கு தெரிவிக்கவேண்டுமென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். ஆனால் அவளுடைய பிறந்தநாளன்று அவர்கள் இருவரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஆரியவர்தன் பிறந்தநாள் விழாவோடு அதிதிக்கும், ரஞ்சித்துக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்திவைத்தான்.
WhatsApp Image 2025-02-14 at 4.25.30 PM.jpeg
அன்றிரவு பார்ட்டி முடிந்தவுடன் அதிதி, பார்கவை சந்தித்து தன்னுடைய அண்ணனிடம் அவர்களது காதலைப் பற்றி தெரிவித்தால் அவன் அந்த திருமணத்தை நிறுத்தி, அவர்கள் இருவரையும் சேர்த்துவைப்பான் என்று கூறி பார்கவை ஆரியனிடம் பேசுமாறு அழைத்தாள்.
WhatsApp Image 2025-02-14 at 4.41.59 PM.jpeg
அவனோ அதிதியை காதலிக்கவில்லை என்று கூறவும் அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளோ, அவனுடைய கண்களில் அவளுக்காக காதல் இருப்பதை பலமுறை பார்த்ததாகக் கூறினாள். இறுதியில் பார்கவ் அவள்மீது கொண்ட காதலை அடியோடு மறுக்க வேறுவழியில்லாமல் மனதில் நிராசையும் கண்களில் கண்ணீருடனும் அங்கிருந்து சென்றாள்.

பார்கவ், ஆரியவர்தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட காரணமாக அப்படி செய்ய நேர்ந்தது. அதிதியின் காதலை ஏற்றால் அது ஆரியனுக்கு அவமானத்தை தரும். தன்னுடைய தங்கையின் நிச்சயதார்த்தத்தை பெருமையாக நடத்தியவன் அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய நேரிடும் என்று அஞ்சி அவன் அவ்வாறு செய்தான். அதிதியின் திருமணம் இரண்டே வாரங்களில் நடந்து முடிந்தது. அதன்பின் அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு, பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது, அது அதிதியின் மரணம். அவனால் அவளுடைய நிரந்தரப்பிரிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தன்னுடைய சொல்லப்படாத காதலை நினைத்து அன்று மிகவும் வருந்தினான். இவ்வாறு அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தொண்டை அடைத்தது. பேச்சு வெளிவர மறுத்தது, கண்கள் கலங்கின. நியதி அவனைப் பார்த்து, "இப்போவாவது மிஸ்டர் வர்தனுக்கு தெரியுமா?" என்று கேட்டபோது, "இல்ல மேடம், அவருக்கு தெரியாது…இத யார்கிட்டயும் சொல்லீராதீங்க..." என்று அவன் வேண்டிக்கொண்டான்.

அவளும், "என்னால உங்க உணர்வுகள புரிஞ்சிக்க முடியுது. கவலைப்படாதீங்க நான் யார்டயும் சொல்லமாட்டேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். இவர்கள் சந்தித்ததை சி.சி.டீ.வி. மூலம் கவனித்த ஆரியன் நியதியை அழைத்து கேட்டபோது வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறி மழுப்பிவிட்டாள். நியதி எதையோ தன்னிடமிருந்து மறைகிறாள் என்பதை தெரிந்தும் அவன் அவளை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டான்.

ஆரியன் மற்றும் நியதியின் திருமண வாழ்வில் ஓராண்டு காலம் இனிதாக நிறைவடைந்து அவர்களது முதலாமாண்டு திருமண நாள் வந்தது. அன்று முழுவதும் அவனும் நியதியும் தனிமையில் இருக்க விரும்பிய ஆரியன், தன்னுடைய ரிசார்ட்டுகளுள் ஒன்றான பீச்-ஹவுஸ் ரிசார்ட்டில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தான். காலை முழுவதும் அவர்கள் அந்த ரிசார்ட்டிலுள்ள ஒவ்வொரு இடமாகச் சுற்றிப்பார்த்தனர். அவைகள் ஆரியவர்தனின் செல்வச்செழிப்பை பறைசாற்றியது.

பின் அவர்களுக்காக தனியே அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நியதியை அழைத்துச் சென்றான்.
அதைப் பார்த்ததும் நியதி ஆச்சரியத்தால் அப்படியே அந்த இடத்தைப் பார்த்தவாறு நின்றாள். அங்கு அவர்களுக்காக ஒரு தனி வீடே இருக்க அதைச் சுற்றி ஸ்விம்மிங்ப்பூல் இருந்தது. அந்த ஸ்விம்மிங்ப்பூலின் ஒரு பகுதியில் அவர்கள் இளைப்பாறுவதற்காக வட்டமான ஒரு இடம் கட்டப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்வதற்காக அந்த இடத்திற்கேற்றாற்போல் சோஃபாவும் இருந்தது. ஒவ்வொரு இடத்திற்குச் செல்லவும் தனியாக நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்குகிற இடமானது ஆரியன் மட்டுமே பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட இடம்.

அவன் வேலைவிஷயமாக அந்த ரிசார்டுக்கு வந்தால் அங்குதான் தங்குவான். வெளியாட்கள் யாரும் நுழைய அனுமதி கிடையாது. அவன் முதல்முறையாக நியதியை அங்கு அழைத்து வந்திருந்தான். அப்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய கைபேசிக்கு அழைப்புவர அவன் விரைவில் வருவாதாகக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவள் தனித்துவிடப்பட நேரத்தில், "எக்ஸ்குயூஸ் மீ மேடம்" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க அவள் திரும்பிப்பார்த்தாள். அந்தப் பெண் ஒழுங்காக ஐயன் செய்யப்பட்ட கருப்பு நிற பேண்ட்டும், வைட் ஷர்ட்டும் அதன் மீது கருப்புநிற ப்ளேசரும் அணிந்திருந்தாள். அவள் அதற்குப் பொருத்தமான ஹீல்ஸ் அணிந்து மெல்லிய புன்னகை புரிந்தவாறு அங்கு நின்றுகொண்டிருந்தாள்.

அவளுடைய ப்ளேசரில் பெயரும், அவள் வகிக்கும் பதவியையும் குறிக்கும் பாட்ச் ஒன்றை அணிந்திருந்தாள்.
நியதியைப் பார்த்து, "மேடம், ஐ அம் ஷீலா, ஹவுஸ் கீப்பிங் மேனேஜர். சார் உங்களுக்கு இந்த இடத்த சுத்திக்காட்ட சொன்னாரு. ஷால் வி கோ?" என்று கேட்க நியதியும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டாள். அவளை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினாள்.

முதலில் அங்குள்ள ஹாலிற்கு அழைத்துச் சென்றாள். அது மிகவும் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருந்தது. அங்கு போடப்பட்டிருந்த சோஃபா, டேபிள், திரைச் சீலைகள் அனைத்தும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
_0b87ffdd-ad2d-4bfa-828d-1e48456a2607.jpg
அடுத்ததாக அவள் நியதியை சமயலறைக்கு அழைத்துச் சென்றாள். அது மிகப்பெரிய மாடுலார் கிட்சன். பீங்கான் தட்டுகள், கண்ணாடி டம்பளர்கள் என்று அனைத்து வகை பொருட்களும் அழகாகவும், நேர்த்தியாகவும் அடுக்கிவைக்கப் பட்டிருந்தது. சமயலுக்குத் தேவையான அத்தனைப் பொருட்களும் அங்கு காணப்பட்டது.
_0465916e-065c-4884-bdc2-b8807d059d60.jpg
பின் ஒவ்வொரு இடமாக அவள் விவரித்துக்கொண்டே வர நியதிக்கு தலை சுற்றியது. முற்காலத்தில் ராஜாக்கள் கூட இவ்வளவு சுகமாக வாழ்திருப்பர்களோ என்ற ஐயம் அவளுடைய மனதில் எழுந்தது. தான் சிலநாட்கள் மட்டுமே தங்கிச் செல்லும் இடத்திற்கு கூட ஆரியன் கொடுத்த முக்கியத்துவம் நியதியை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அனைத்து இடங்களையும் பார்த்த பிறகு, "இந்த ரிசார்ட டிசைன் செஞ்சதும், இங்க இருக்குற திங்ஸ் எல்லாமே செலக்ட் பண்ணதும் வர்தன் சார்தான் மேடம்" என்று கூறும்போது நியதிக்கு வியப்பாக இருந்தது. இறுதியாக அவளை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, "சார் உங்களுக்காக இந்த கிப்ட் வச்சிருக்காங்க மேடம்" என்று அவள் படுக்கையில் வைத்திருந்தை சுட்டிக் காட்டினாள்.
_8e39acc8-020f-4016-a8dd-1836c049c54a.jpg
அதனருகே சென்று நியதி பார்த்தபோது ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன ஏனென்றால் அன்று திருமணத்திற்காக புடவை எடுக்க அவர்கள் வந்திருந்தபோது அவளுடைய கருத்தை ஈர்த்த புடவை அது. இளம்பச்சை நிறத்தில் தங்க ஜரிகையால் மயில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அதே புடவை. அன்று விலை அதிகம் என்றெண்ணி அதை தவிர்த்த நியதிக்கு இப்போது அதே புடவையை அவன் பரிசாகக் கொடுத்திருந்தான்.

அவளுக்கு இது மிகவும் பிடித்தமான புடவை என்று அவனுக்கு எப்படி தெரியும் என்ற குழப்பம் அவளுடைய மனதில் இருந்தாலும் அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும், மகிழ்ச்சியுமே அவளுடைய மனதில் நிறைந்திருந்தது. அந்த புடவைக்கு ஏற்றவாறு நகைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவள் புடவையை உடுத்தி தன்னை அலங்கரிப்பதற்கு ஷீலாவும் உதவி செய்தாள். பின், "சார் உங்களுக்காக வெய்ட் பண்றாங்க" என்று கூறி அந்த இடத்தை ஒட்டி அமைந்திருந்த கடற்கரை பகுதியை சுட்டிக்காட்டி அவளிடமிருந்து ஷீலா விடைபெற்றாள். அதன்பின் நியதி தானாக ஆரியன் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
WhatsApp Image 2025-02-14 at 5.12.07 PM.jpeg
அங்கு கடற்கரையிலுள்ள தென்னை மரங்களுக்கு இடையே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடுவில் டேபிளும், இருவர் மட்டும் அமர்வதற்காக இருக்கையும் போடப்பட்டிருந்தது. அந்த டேபிளைச் சுற்றியுள்ள மணல் முழுவதும் ரோஜா இதழ்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தன.
_0d52d69e-a32a-4706-9b30-e76a05262bc6.jpg
நியதி அந்த இடத்திற்கு வரும் முன்பாக ஆரியன் அவளுக்காக அங்கு காத்துக்கொண்டிருந்தான். அவன் வெண்ணிற ஷர்ட்டும் அதன்மீது நேவி புளு நிறத்தில் வெல்வெட் கோட் ஸூட்டும் அதற்கேற்றாற்போல பிராண்டட் ஷூவும் அணிந்திருந்தான்.
WhatsApp Image 2025-02-14 at 5.18.41 PM.jpeg
நியதி வருவதை ரசித்துக்கொண்டு பார்த்தவாறே அமர்ந்திருந்தான். புன்முறுவலுடன் அங்கு வந்த நியதியைப் பார்த்து, "யூ லுக் வெரி பியூட்டிஃ நியதி" என்று அவன் கூறவும் நாணத்தால் அவளுடைய கன்னங்களில் செம்மை பரவியது. "நீங்களும் ஹேன்சமா இருக்கீங்க" என்று அவள் கூற அவன் புன்னகைத்து அவள் இருக்கையில் அமருமாறு சைகை செய்தான். அவள் இருக்கையில் அமர்ந்ததும், "உனக்கு இந்த அரேஞ்சமென்ட்ஸ் பிடிச்சிருக்கா நியதி?" என்று கேட்டதற்கு, "இந்த கடல், பௌர்ணமி நிலா, இந்த லைட்டிங்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்டர் வர்தன்" என்று அவள் புன்னகையுடன் கூறினாள்.
_36e4f5a1-4707-4713-adf3-4be04a17cd1a.jpg
அவர்கள் சாப்பிடுவதற்காக அனைத்து வைகையான சாப்பாட்டுவைகைகளும் மேஜையில் வைக்கப் பட்டிருந்தன. அதைப் பார்த்த நியதி, 'எப்பா இவ்வளவு வெரைட்டியான டிஷ்ஷஸா? இதுல பாதி டிஷ்ஷோட பேரே தெரியாதே எனக்கு. என்ன பண்றது?' என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணத்தைப் புரிந்தவனாக, "இங்க இருக்குற எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும் நியதி. இந்த இத ஃஸ்ட் டேஸ்ட் பண்ணு..." என்று கூறி அதை அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்.

அவன் ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுக்க நியதி அனைத்தையும் ருசி பார்த்தாள். அப்படி அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, "உங்களுக்கு எப்படி எனக்கு இந்த சாரி பிடிக்கும்னு தெரிஞ்சது..." என்று கேட்டவளின் கண்கள் அனிச்சையாக தொலைவிலிருந்த புதரின் பக்கம் சென்றது.

அங்கு முகமூடி அணிந்த ஒருவன் மறைந்திருந்தான். அவள் உற்று நோக்கியபோது துப்பாக்கியால் அவன் அரியனை நோக்கி குறிவைப்பது தெரிந்தது.
_e9939dc8-890e-4958-9b86-78c18c835c71.jpg
சற்றும் தாமதிக்காமல், “ஆரியன்” என்று அலறியவள் அவனை வீல் சாரிலிருந்து இழுத்தாள். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் அந்த நிசப்தமான கடற்கரை பகுதியில் தெளிவாகக் கேட்டது. ஆரியன் கீழே விழ நியதி அவன் மீது விழுந்தாள்.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 16
துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டு அங்குவந்த ஆரியனின் மெய் காப்பாளர்கள் அடுத்த தாக்குதலில் இருந்து பாதுகாக்க அவர்கள் இருவரையும் சூழ்ந்தனர். இருவர் மட்டும் அந்த கொலையாளியை பிடிக்க விரைந்தனர். ஆனால் அவனோ அங்கு நின்றுகொண்டிருந்த ஜெட்-ஸ்கை ஒன்றை எடுத்து கடல் வழியாகத் தப்பினான்.
WhatsApp Image 2025-02-17 at 3.23.09 PM.jpeg
ஆனால் சற்று தூரம் சென்றதும் அது வெடித்து, அவனும் சுக்குநூறாகச் சிதறினான்.

தன் மீது விழுந்த நியதியை எழுப்புவதற்காக அவளுடைய கையைப் பிடித்தபோது ஏதோ ஈரமாக இருந்தது. உடனே அது என்ன என்று அவன் பார்த்தபோது அவனுடைய கை முழுவதும் குருதியால் நிரம்பியிருந்தது.
WhatsApp Image 2025-02-17 at 3.40.29 PM.jpeg
வந்த குண்டை நியதி தடுத்து தன்னைக் காப்பாற்றினாள் என்று அறிந்த அவன், கண்களில் கண்ணீர் பெருகின. மயக்க நிலையிலிருந்த நியதி விரைவில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள்.

அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே அவளுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்க, தன் கைகளில் அவள் குருதி தோய்ந்திருந்ததை, வெறித்தவாறு ஆரியன் அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-02-17 at 4.53.06 PM.jpeg
சற்றுநேரத்தில் சந்திரமதியுடன் ரஞ்சித்தும், பார்கவும் அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்து சரணும் மருத்துவமனைக்கு விரைந்தான். அவள் இருந்த அறையிலுள்ள கண்ணாடிக் கதவின் வழியாக சரண் அவளைப் பார்த்தபோது, அவனுடைய மனம் பெரும் துயரத்தில் ஆழ்ந்தது.
WhatsApp Image 2025-02-17 at 3.45.59 PM.jpeg
கண்களிலிருந்து பெருகிய நீரை அடக்கியவாறு அவர்களுடன் அங்கேயே நின்றான். சிகிச்சை முடிந்து நார்மல் வார்டிற்கு நியதி அழைத்துச்செல்லப்பட்டாள். இரண்டுநாட்கள் கழித்து அவள் சுயநினைவுக்கு வந்தபோதுதான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

அதன்பின் ஆரியன் நியதியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே சிகிச்சை அளிக்குமாறு கூறவும் அவ்வாறே செய்யப்பட்டது. நியதியை பார்த்துக்கொள்வதற்காக நர்ஸும் நியமிக்கப்பட்டாள். அவன் நியதியை கவனித்துக்கொண்டவிதத்தை எந்த ஒரு பெண் பார்த்தாலும் அவளுக்கு பொறாமை தான் வரும், அப்படி அவளைப் பார்த்துக்கொண்டான். அவனுடைய அனைத்து வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு முழுநேரமும் நியதியின் பக்கமே இருந்தான். நியதி விரைவில் குணமடைந்தாள், மருத்துவரின் சிகிச்சையால் அல்ல ஆரியனின் அளவற்ற அன்பாலும் அரவணைப்பாலும். ஒரு மாதம் அப்படியே கழிந்தது.

அன்று மாலை நன்றாக குணமடைந்த நியதி மறுநாளிலிருந்து ஆரியனுடன் அலுவலகம் செல்ல திட்டமிட்டிருந்தாள். அப்போது பார்கவ் அவளிடம் வந்து, "சார் முக்கியமான விஷயம் பேசணும்னு உங்கள வரசொன்னாங்க மேடம்" என்று கூற அவளும் ஒப்புக்கொண்டாள். 'அன்னைக்கு அவர் சொல்லணும்னு நினைச்சத இப்ப சொல்றதுக்காக கூப்புடுறாரோ, என்னவோ?' என்று நினைத்த பாவை, அகம் மகிழ்ந்தாள். உடனே, அவனுக்காக அவள் கொடுப்பதற்காக வைத்திருந்த அவர்களது பெயர் பதித்த பிளாட்டினம் மோதிரத்தையும், தன்னுடைய காதலைத் தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு அவனைப் பார்க்க வேகவேகமாகச் சென்றாள்.

ஒரு புன்முறுவலுடன் அந்த அறையினுள் சென்றபோது ஆரியன் தன்னுடைய முதுகைக் காட்டியவாறு வீல்-சேரில் அமர்ந்திருந்தான். அவள் வந்தது தெரிந்ததும், "நியதி டேபிள்ல இருக்குற ஃபைல் உனக்குத்தான். அத திறந்து பாரு" என்று அவன் கூற அவளும் அதனை ஆவலுடன் திறந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. அப்போது வெளியே வானம் இருட்டிக்கொண்டு பெரிய இடி இடித்தது. அந்த இடி வானத்தில் மட்டுமல்ல அவளுடைய இதயத்திலும் விழுந்தது.
_19b738d9-0063-4e55-a6ba-861a82d0dd31.jpg
ஏனென்றால் அது அவர்களது மணவிலக்கு பத்திரம். அதில் எழுதியிருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அதில் இருப்பதை ஏற்கமுடியாமல் கண்களில் கண்ணீர் திரையிட இதயம் கனத்தது. பேச்சுவரவில்லை என்றாலும் வார்த்தைகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு, "...சார் ஏன்? எதுக்கு இந்த திடீர் முடிவு?..." என்று கேட்டாள்.

அப்போதும் திரும்பாமல் அவன், "லுக் நியதி, நான் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டதே என்னோட ரெப்புட்டேஷன காப்பாத்தறதுக்கு தான். இப்போ ஒன் இயர் ஆயிருச்சி. சோ இனி நாம பிரிஞ்சோம்னா எந்த ஒரு பிரச்னையும் இருக்காது...அதோட நீயும் வேற வழி இல்லாம மிஸ்டர் வரதராஜன் சொன்னதாலதான என்ன கல்யாணம் பண்ணீருப்ப? இனி அதுக்கு அவசியமே இல்ல. நீ சுதந்திரமா வாழலாம். நீ உன் வழியில போ, நான் என் வழியில போறேன். அதனால இத சைன் பண்ணு" என்று அவன் கூறவும் அவளுக்கு உலகமே இருண்டது.

துக்கம் தொண்டையை அடைக்க அவள், ‘சரி’ என்பதுபோல் தலையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு பேனாவை எடுத்து அதில் கையெழுத்திடும்போது அவளுடைய கை நடுங்கியது. கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

அவள் கையெழுத்திடவும், "நீ இந்த வீட்ட விட்டு இப்பவே போகணுங்கிற அவசியமில்ல. உனக்கு எப்ப தோணுதோ அப்ப போகலாம்" என்று கூறவும் அவள் வலி கலந்த புன்னகையுடன் அந்த அறையில் மேலும் நிற்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறினாள். அதுவரையில் தன்னுடைய முதுகைக் காட்டியவன் அவள் சென்றதும் திரும்பினான். அவனுடைய முகம் எந்தஒரு உணர்ச்சியுமில்லாமல் கல்லாக இருகியிருந்தது.

அவள் சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருந்தவனின் எண்ணங்கள், அவன் நியமித்த தனியார் துப்பறிவாளரும் அவனும், பேசிய உரையாடலுக்குச் சென்றது. அது நியதி அவசரப் பிரிவிலிருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்ட நேரம். அப்போது ஆரியனின் கைபேசிக்கு துப்பறிவாளனிடமிருந்து அழைப்பு வர விரைந்து அவனைக் காணச்சென்றான். "வருண் இப்போ என்மேல நடந்த அட்டாக் பத்தி ஏதாவது இன்ஃர்மேஷன் தெரிஞ்சதா?" என்று அவன் கேட்டதற்கு, "சார் ஒரு சுமால் கரெக்ஷன், இப்போ நடந்த அட்டாக்ல டார்கெட் நீங்க இல்ல. உங்க மனைவிதான்" என்று கூறவும் ஆரியன் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.
WhatsApp Image 2025-02-17 at 5.23.26 PM.jpeg
"என்ன சொல்ற வருண்?" என்று கேட்டதற்கு, "சார் முதல்ல உங்களுக்கு நடந்த ஆக்சிடன்ட்ல உங்களையும் உங்க அப்பாவையும் கொல்லப்பாதிருக்காங்க. அப்போ நீங்க தப்பிச்சிட்டீங்க. அடுத்த அட்டாக்கும் உங்கமேலதான நடந்திருக்கணும்? அப்படியில்லாம உங்க சிஸ்டர் அண்ட் அவங்க ஹபண்ட் மேல ஏன் நடந்துச்சி? அப்பவே எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது. அதேமாதிரி இப்பவும் உங்க ஒயிப்ஃ மேல நடந்திருக்கு. இத எல்லாத்தையும் வச்சிப்பாக்கும்போது...அந்த பெர்சன் உங்கள ஃபிஸிக்கலா மட்டும் இல்லாம மென்டலாவும் வீக் ஆக்க நினைக்குறான்" என்று வருண் விளக்கினான்.

உடனே, "வீக்கா? என்ன எதுக்கு வீக் ஆக்கணும்?" என்று ஆரியன் கேட்கவும், "ஒரு ஆலமரத்த சாய்க்கணும்னா சாதாரண விஷயம் இல்ல. முதல்ல அதோட கிளை, விழுதுன்னு எல்லாத்தையும் வெட்டிட்டு தான் நடுபாகத்துக்கு வருவாங்க. அதே மாதிரி உங்களுக்கு முக்கியமானவங்க எல்லாரையும் அட்டாக் பண்ணீட்டு தான் உங்ககிட்ட வருவாங்க. அதனால உங்க ஒயிப்ஃ உயிருக்கு மறுபடியும் ஆபத்துவரலாம். நீங்க கவனமா இருக்கணும்" என்று எச்சரித்தான்.

நியதிக்கு ஆபத்து என்று அறிந்த ஆரியனால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. அவளை தன்னிடமிருந்து விலக்கினால்தான் அவளை காக்க முடியும் என நினைத்த ஆரியன் மணவிலக்குதான் சரியான தீர்வாக இருக்கும் என எண்ணி இந்த முடிவுக்கு வந்தான்.

நியதி சுய மரியாதை உள்ளவள், என்பதால் தனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று தெரிந்ததும் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற தயாரானாள். அவள் 'வர்தன்ஸ் மேன்ஷனின்' காம்பவுன்டைத் தாண்டவும் அடைமழை பெய்யத் துவங்கியது. இயற்கையும் அவர்களது பிரிவிற்காக மழையின் மூலமாக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தது.

அப்படியே நனைந்தவாறு சென்ற நியதி மழையைப் பொருட்படுத்தவே இல்லை ஏனென்றால் அவளுடைய மனதில் பெரிய சூராவளியே வீசிக்கொண்டிருந்தது. மனதில் பல எண்ணங்கள் எழ எதற்கும் பதில் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் அந்த பேதை. எண்ணக்கடலில் மூழ்கியிருந்தவள் எங்கு செல்கிறோம் என்பதுகூட தெரியாமல் கால்போன போக்கில் நடந்துகொண்டே சென்றாள்.

அப்படியே வந்தவள் சரணும் அவளும் வழக்கமாக சந்திக்கும் அந்த பூங்காவிற்கு வந்தாள். அங்கிருந்த ஒரு பெஞ்சில் எந்தஒரு உணர்வுமில்லாமல் அப்படியே ஜடமாக அமர்ந்திருந்தாள்.
WhatsApp Image 2025-02-17 at 4.57.22 PM.jpeg
இரண்டுமணி நேரத்திற்குப் பின் மழை ஓய்ந்தது. தினமும் சரண் தன்னுடைய அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை அந்த பூங்காவின் வழியாகத் தான் தன்னுடைய காரில் செல்வான்.

அன்றும் அதேபோல சென்றுகொண்டிருந்தபோது ஏதோ தெரிந்த நபரைப் பார்த்ததுபோல் சரணுக்குத் தோன்ற அவன் காரின் வேகத்தைக் குறைத்து உற்று நோக்கினான். அது நியதி என்று தெரிந்ததும் அதிர்ந்தான்.

அவன் காரை நிறுத்திவிட்டு விரைந்து அவளருகே சென்று தோளில் கையை வைத்து, "நியதி" என்று அழைத்தான். அவள் தன்னுடைய முகத்தை மெல்ல திரும்பிப் பார்த்தபோது கண்கள் சிவந்திருந்தன. மனதிலுள்ள வேதனையும் வலியும் அவளுடைய கண்களில் தெளிவாக சரணுக்குத் தெரிந்தது. இதற்கு முன்பும் சோகத்தில் இருந்த நியதியை சரண் பார்த்திருக்கிறான்தான், ஆனால் இன்று அவள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தை அவனால் நன்கு உணரமுடிந்தது.

அந்த நிலையில் நியதியைக்கண்ட மறுகணமே அவனையறியாமல் அவன் கண்களில் நீர்பெருகின. உடனே அதை துடைத்துவிட்டு, "வா நியதி, வீட்டுக்குப் போகலாம்" என்று கூறி அவளுடைய கையைப் பிடித்து காருக்கு அழைத்துச் செல்ல ஒரு உணர்வற்றவளாய் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவனுடைய வீட்டை வந்தடைந்ததும் நியதியை உடைமாற்றி வரச்சொல்லிவிட்டு அவர்களுக்கான காப்பியை தயாரிக்க சமயலறைக்குச் சென்றான். நியதி உடைமாற்றிவிட்டு ஹாலிலுள்ள சோஃவில் அமர சரணும் தன்னுடைய கையில் இரண்டு கோப்பைகள் நிறைய சூடான காபியை கொண்டுவந்தான்.
WhatsApp Image 2025-02-17 at 5.02.03 PM.jpeg
ஒன்றை அவளிடம் கொடுத்து, "இத குடி மழைக்கு நல்லா இருக்கும்" என்று கூறிவிட்டு மற்றொன்றை தான் பருகினான்.

அவள் இருமிடறுகள் அருந்தியபின், "என்ன பிரச்சன நியதி?" என்று வினவினான். அவள் எதுவும் கூறாமல் சிலையாய் அமர்ந்திருக்க, "சொல்லு நியதி என்ன நடந்துச்சின்னு சொன்னாதான தெரியும்" என்று அவளை உலுக்கினான். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தேம்பித் தேம்பி, அழத்துவங்கினாள். அதைக் கண்டதும் சரண் அதிர்ச்சியடைந்தான். அவளருகே அமர்ந்து அவளை சமாதானம் செய்யவும் நியதியின் அழுகை சற்றுக் குறைந்தது. அவள் தன்னை நிதானித்துக்கொண்டு நடந்த அனைத்து விஷயங்களையும் மெல்ல கூறாத் துவங்கினாள். அதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்த சரண், "என்ன நினைச்சிகிட்டு இருக்காரு அவரு மனசுல? டைவர்ஸ் குடுன்னா ஒடனே குடுத்தரணுமா? நீயும் ஏன் அதுல சைன் பண்ண? உன் லவ்வ அவர்கிட்ட சொல்லவே இல்லையா?" என்று அவன் கேள்விகளை அணிவகுத்தான்.

அவளோ, "என் லவ்வ சொல்லதான் போனேன் ஆனா அவர் தன்னோட ரெப்புட்டேஷன காப்பாத்துறதுக்காகதான் என்ன கல்யாணம் பண்ணீருக்காருன்னு தெரிஞ்சதும் நான் என்ன சொல்ல? அதான் சைன் பண்ணீட்டேன்" என்று அவள் கூறும்போதே கண்களிலிருந்து நீர்பெருகியது.

"அன்னைக்கு போன்ல கூட அவர் உன்ன லவ் பண்றதாதான சொன்ன?" என்று குழப்பத்துடன் கேட்கவும், "நானும் அப்படித்தான் நினச்சேன். ஆனா அது எல்லாமே உண்மையில்லை, பொய்ன்னு இன்னைக்கு டைவர்ஸ் நோட்டீஸ் குடுத்து அத நிரூபிச்சிட்டாரு....ஏன் சரண் என் வாழ்க்கைல மட்டும் இப்படி நடக்குது? ஏன் எனக்கு பிடிச்சவங்க எல்லாரும் என்ன விட்டு விலகுறாங்க? நான் என்ன பாவம் பண்ணேன்? முதல்ல என்னோட குடும்பம், அடுத்து வரதராஜன் அப்பா, இப்போ ஆரியன்…" என்று சோகமாகக் கேட்டாள்.

பின் சரணைப் பார்த்து, "இவங்க எல்லாரும் போனது மாதிரி நீயும் என்ன விட்டுட்டு போயிருவியா சரண்?" என்று சிறுகுழந்தை போல் அவனைப் பார்த்து கேட்டபோது அவனுடைய கண்கள் கண்ணீர்த்திரையிட்டன. உடனே அவளுடைய கையைப் பற்றி, "நான் கடைசி வரைக்கும் உன்கூட தான் இருப்பேன். உன்னைவிட்டு எப்பவும் நான் பிரியவே மாட்டேன்" என்று ஆதரவாகக் கூறவும் லேசாக நியதி புன்னகைத்தாள்.

"நீ இனிமேல் இங்கயே என் கூடவே இரு. வா உன்ன உன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்" என்று சரண் இருக்கையிலிருந்து எழுந்தான். ஆனால் நியதியே, "இல்ல சரண் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பல. வெளிய ஹாஸ்டல்ல தங்கிக்குறேன்" என்று மறுத்துவிட்டாள். "பாரமா? நீயா? என்ன உளறுற? நீ இங்க தான் இருக்கணும்" என்று அவன் கூற இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

இறுதியில், "உனக்கு பிடிவாதம் ஜாஸ்தின்னு எனக்கு தெரியும். ஆனா நீ இப்பவும் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க?" என்று அவன் கேட்க மற்றவளோ, "நான் இங்க தங்குறதால உனக்கு கண்டிப்பா பிரச்சன வரும். அத நான் விரும்பல. நீ என்கூடவே இருப்பேன்னு சொன்னீல அதுவே எனக்கு போதும்" என்று புன்னகையுடன் கூறினாள். மேலும், "நான் விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்குறதுக்கு ஹெல்ப் பண்றியா?" என்று நியதி கேட்க அவனும் ஒருமனதாக ஒப்புக்கொண்டான். நியதியைத் தங்கவைப்பதற்காக பெண்கள் விடுதியில் ஒரு அறையை அன்றிரவே ஏற்பாடுசெய்தான்.

வீட்டிற்கு திரும்பியவன் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு படுக்கைகுச் சென்றான். ஆனால் நியதியின் அந்த சோகமான முகம் அவனை உறங்கவிடாமல் செய்தது. சட்டென்று எழுந்தவன், 'பணக்காரங்கனா என்ன வேணும்னாலும் செய்யலாமா? அவங்களுக்கு என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு? இந்த பணக்காரங்களே ரொம்ப மோசம். ஆரியன் சார்! நான் உங்ககிட்ட இத எதிர்பார்க்கல. நியதிக்காக கேக்குறதுக்கு யாருமே இல்லன்னு நினைசீங்களா? நான் இருக்கேன். இத விடமாட்டேன்’ என்று தன் மனதிற்குள் கோபத்தால் கொதித்தான்.

மறுநாள் காலை ஆரியவர்தன் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்தபோது அவனுக்கும் நியதிக்கும் நடந்த விவாகரத்து பிரேக்கிங் நியூசாக ஓடிக்கொண்டிருந்தது.
WhatsApp Image 2025-02-17 at 5.15.02 PM.jpeg
அதை எந்தஒரு உணர்ச்சியுமில்லாமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அப்போது அவனுடைய கைபேசிக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்தபோது, "ஆரி நான் இந்தியா வர்ரேன்" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
WhatsApp Image 2025-02-17 at 5.18.50 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 17
அரியனை கைபேசியில் அழைத்தது வேறுயாருமல்ல ஆரியனின் பாலியஸ்நேகிதி சரஸ்வதி. "எப்ப வர்ற?" என்று அவன் கேட்டதும், "இன்னும் டூ வீக்ஸ்ல வந்திருவேன். நீ எப்படி இருக்க?" என்று அவனை விசாரித்தாள். அதற்கு, "ம்ம் இருக்கேன்" என்று அவன் பதில்கூற அவளோ, "என்னடா ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் வாய்ஸ் டல்லா இருக்கு?" என்று வினவினாள். "அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சீக்கிரம் இந்தியா வா" என்று கூறிவிட்டு கைபேசியை வைத்தபோது பார்கவ் அங்கு வந்தான். அவன் ஆரியனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "என்ன ஆரி இது? உனக்கும் நியதிக்கும் டைவர்ஸ் ஆயிருச்சா? ஏன்டா இப்படி பண்ண?" என்று அங்கு அதிர்ச்சியில் இருந்த ரஞ்சித் ஆற்றாமை காரணமாக கேட்டான்.

"என்னோட ரெப்புட்டேஷன காப்பாத்துறதுக்காக மட்டும் தான் அவள கல்யாணம் பண்ணேன். இப்போ பிரச்சனை முடிஞ்சதும் டைவர்ஸ் பண்ணீட்டேன். தாட்ஸ் இட்" என்று விட்டேற்றியாக பதிலளித்தான். "இப்பதான் அவளோட உயிருக்கு ஆ..." என்று அவன் கூறும்போதே, "ரஞ்சித் நான் எடுத்ததுதான் ஃபைனல் டெசிஷன். இனிமேல் இதப்பத்தி பேச விரும்பல" என்று அந்த பேச்சை முடித்துவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பினான்.

ஆரியவர்தன் மற்றும் நியதியின் விவாகரத்து செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது. அங்கு வரதராஜன் வீட்டில் காலை உணவின்போது தொலைக்காட்சியில் அந்த டைவர்ஸ் விஷயத்தைக் கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
WhatsApp Image 2025-02-19 at 1.21.04 PM.jpeg
'மிஸ்டர் வர்தன் ஏன் இப்படி பண்ணாரு? அவர் நியதிய நல்லபடியா பாத்துக்குவாருன்னு தான நினச்சேன். ஆனா இப்படி நடந்திருச்சே' என்று அவர் மனதில் பல எண்ணங்கள் எழ தொலைக்காட்சியை வெரித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார். வரதராஜன் எதுவும் உண்ணாமல் டிவியையே நோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மாலினியும் அந்த செய்தியைக் கண்டாள். மறுநொடியே அவளுடைய முகத்தில் மகிழ்ச்சி காட்டாற்றுவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

"டைவர்ஸ் ஆயிருச்சா? ரொம்ப நல்லது. நம்ம எல்லாரையும் ஏமாத்தீட்டு கல்யாணம் பண்ணால்ல அதுக்கு கடவுள் சரியான தண்டன குடுத்தான். அவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு. அதான பாத்தேன் நாம இப்படி இருக்கும்போது இவா மட்டும் நல்லா இருந்துருவாளா?..." என்று அடுக்கடுக்காக தன்னுடைய ஆற்றாமையை பொரிந்து கொட்டித்தீர்த்தாள். அதைக் கேட்ட அவளுடைய கணவன், "நீயெல்லாம் ஒரு மனுஷியா? நியதியோட வாழ்க்கையே போயிருச்சி, அதப்பத்தி கவலப்படாம சந்தோசப் படுற? உனக்கு ஈவு இரக்கமே கிடையாதா? கவலப்படவேண்டாம் அட்லீஸ்ட் பரிதாபமாவது படலாம்ல" என்று தன் மனைவியை அதட்டினார். ஆனால் அவளோ, "என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்தாள்ள அதான் அவளுக்கு இந்த தண்டன கிடைச்சிருக்கு. இது என்ன பொறுத்தவரைக்கும் ரொம்பவே நல்ல விஷயம்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். அவரோ, 'பாவம் நியதி இப்ப எங்க இருக்காளோ? என்ன கஷ்டப் படுறாளோ. கடவுளே அவள நீ தான்பா காப்பாத்தணும்' என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் நியதி காலை எழுவதற்கு வழக்கத்தைவிட தாமதமாகிவிட்டது. அவள் தூக்கத்திலிருந்து கண்களை திறப்பதற்குமுன், முந்தைய நாள் நடத்த அனைத்து சம்பவங்களும் நினைவிற்கு போட்டிபோட்டுக்கொண்டு வந்தன. 'அவையனைத்தும் கனவாகவே இருந்துவிடக்கூடாதா' என்று நினைத்தவாறு கண்களைத்திறந்து பார்த்தபோதுதான் நடந்தவை அனைத்தும் நிஜமான சத்தியம் என்று அந்த பெண்களின் விடுதி அறை உணர்த்தியது.
WhatsApp Image 2025-02-19 at 3.00.24 PM.jpeg
அவளுடைய மனம் பாரமானது. அப்போது நியதியின் கைபேசி ஒலிக்க அதை எடுத்தபோது, "குட் மார்னிங். உனக்கு அங்க பிடிச்சிருக்கா? எந்தஒரு டிஸ்டர்பன்ஸும் இல்லயே?" என்று விசாரித்தான். "நல்லாதான் இருக்கு" என்று சுருக்கமாக பதிலளித்தாள்.

உடனே, "சரி, நீ சீக்கிரம் ரெடியாகி ஒரு ரெஸூமோட வெயிட் பண்ணு. நான் வந்து உன்ன பிக் அப் பண்ணிக்கிறேன்" என்று சரண் கூறினான். "எதுக்கு சரண்? நாம எங்க போறோம்?" என்று வினவியபோது, "நான் வர்றேன்" என்று மட்டும் கூறிவிட்டு தன் கைபேசியை வைத்தான். நியதியும் அவன் கூறியதுபோலவே செய்தாள். அவளை தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் சி.இ.ஓ.ஆனா கோவிந்தராஜனின் பெர்சனல் அசிஸ்டண்டாக சரண் பணிபுரிந்தான். அவன் நியதிக்காக முந்தைய தினமே கோவிந்தராஜனிடம் அவளுடைய நிலையையும் வேலையையும் பற்றிப் பேச அவரும் எந்த ஒரு மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார். நியதிக்கு முன்னனுபவம் இருந்ததால் செக்ரெட்டரியாக நியமிக்கப்பட்டாள்.

அன்று மாலை ஆரியன் தன்னுடைய அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினான். அப்போது சந்திரமதி அவனுடன் முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்று தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.
WhatsApp Image 2025-02-19 at 2.56.21 PM.jpeg
"என்ன விஷயம் பாட்டி?" என்று கேட்க சந்திரமதியோ, "என்ன ஆரி நான் எதப்பத்தி பேசப்போறேங்கிறது கூடவா உனக்கு தெரியாது? நேத்து எவ்வளவோ நடந்திருக்கு நீ என்னன்னா எதுவுமே நடக்காதமாதிரி இன்னைக்கு ஆஃபிஸ் போயிட்டு வந்திருக்க" என்று அவனை கடிந்தார். அவன் எதுவும் பேசாமல் தன்னுடைய தலையை தாழ்த்தியவாறு வீல் சேரில் அமர்ந்திருக்க, "ஆரி" என்று மெல்ல அவனை அழைத்தார்.

வீல் சேரில் அமர்ந்தபடியே அவன் சாய்ந்து சந்திரமதியின் மடியில் தன் தலையை வைத்து, "பாட்டி நான் ஏதாவது முடிவெடுத்தா அது சரியாவும், அதுக்கு பின்னால ஒரு காரணம் இருக்கும்னு நம்புறீங்களா?" என்று கேட்டான். "என் ஆரி எப்பவுமே சரியான முடிவுதான் எடுப்பான்னு எனக்கு தெரியும்...ஆனா இந்த விஷயத்துல என்னால இத ஏத்துக்கவே முடியல. நியதியும் ரொம்ப பாவம். உன்னோட இந்த முடிவ நினைச்சி அவ மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்?" என்று அவனுடைய சிகையைக் கோதியவாறு கேட்டார். அதற்கு, "நான் அவளோட நல்லதுக்காகத்தான் செஞ்சேன்னு ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சிக்குவா பாட்டி" என்று அவன் நம்பிக்கையுடன் கூற, "நல்லதே நடக்கும்னு நம்புவோம்" என்று கூறி பெருமூச்சுவிட்டார்.

சரண் நியதியைப் பற்றி ஆரியவர்தனிடம் பேசவேண்டுமென்று பலமுறை முயற்சித்தபோதும் அங்கிருந்த காப்பாளர்கள் அவனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கடந்தன. மறுநாள், பொறுமையிழந்த சரண் அங்கிருந்த அனைவர் தடுத்தும் ஆரியன் இருக்கும் இடத்திற்கு கோபத்துடன் சென்றான். அப்போது ஒரு முக்கியமான போட் மீட்டிங்கில் ஆரியன் இருந்தான். "நானும் ரெண்டுமூணு நாளா இங்க வர்றேன், என்ன உங்கள பாக்கவே விடமாட்டேங்கிறாங்க..." என்று தொலைவிலிருந்து யாரோ கத்தும் குரல் கேட்க மீட்டிங்கில் இருந்த அனைவரின் கவனமும் அங்கு சென்றது. "என்ன சார் பணக்காரங்கண்ணா எதுனாலும் பண்ணுவீங்களா? யாருமே அத தட்டிகேக்கமாட்டாங்கன்னு நினச்சிக்கிட்டு இருக்கீங்களா?" என்று கூச்சலிட்டவாறே அந்த போட் ரூமுக்குள் நுழைந்தபோதுதான் வந்தவன் யாரென்று ஆரியனுக்குத் தெரிந்தது. அவன் எதுவும் பேசாமல் சரணையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-02-19 at 12.58.58 PM.jpeg
ஆரியனைப் பார்த்ததும் சரணின் கோபம் மேலும் அதிகரிக்க, "என்ன சார்? உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? உங்களுக்கு வேணும்னா வேணும், வேண்டாம்னா அப்படியே தூக்கியெறிஞ்சிருவீங்களோ? கேக்குறதுக்கு யாருமே இல்லன்னு நினைசீங்களா? நான் இருக்கேன். அவளுக்கு ஏதாவது பிரச்சனனா நான் கேப்பேன்..." என்று சொல்லிக்கொண்டே அரியனை நெருங்கினான். சரணுக்கு தான் எங்கு இருக்கிறோம், யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நிதானமும் இல்லை. அவனுக்கு அப்போது இருந்த ஒரே கவலை நியதியைப் பற்றி மட்டும்தான். அதனால் அவன் சுற்றியிருந்த சூழலை கவனிக்கவில்லை. அங்கிருந்த ரஞ்சித் அவனை தடுத்தபோது காப்பாளர்கள் அங்குவந்துசேர்ந்தனர். சரணை அவர்கள் வெளியே இழுத்துச் செல்லும்போது, "அநியாயமா ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துடீங்களே. உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? நீங்க இல்லைனா அவளால வாழமுடியாதா? அவா நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லாதான் இருப்பா. இனிமேல் அவா வாழ்க்கையில என்னைக்குமே நீங்க தலையிடாதீங்க..." என்று கத்தினான்.

சரண் அறையினுள் வந்ததிலிருந்து அவனை இழுத்துச் சென்றவரை ஆரியன் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். நியதியின் வாழ்வில் அவன் மீண்டும் தலையிடக்கூடாது என்று சரண் கூறியபோது ஆரியனின் மனம் வலித்தது ஆனால் அதே நேரம் அவன் மீது கோபமும் எழுந்தது. அவன் எதுவும் கூறாமல் அந்த போட் ரூமைவிட்டு வெளியேறி தன் அறைக்குச் சென்றான். சரணைப் பற்றி போலீசிடம் புகார்கொடுக்கலாம் என்று ரஞ்சித் கூறியபோது ஆரியன் மறுத்துவிட்டான்.

நியதியிடம் இந்த விஷயத்தைப் பற்றி சரண் தெரிவித்தபோது அவள் பதறிவிட்டாள்.
WhatsApp Image 2025-02-19 at 1.02.25 PM.jpeg
"நீ எதுக்குடா அங்க போன?" என்று கேட்டபோது, "பின்ன இந்த விஷயத்த அப்படியே விடச்சொல்றியா? என்னால முடியாது. அதான் நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டுட்டு வரலாம்ன்னு போனேன்" என்று அவன் கோபத்துடன் கூறினான். அவள், "ஆனாலும் உனக்கு ரொம்பதான் கோபம் வருது...நீ இப்போ செஞ்ச கலாட்டால உனக்கு ஏதாவது பிரச்னை வந்திருமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அக்கறைகொண்டவளாகக் கூற அவனோ, "என்ன பிரச்சன வந்தாலும் உனக்காக சந்திக்க நான் தயார்" என்று வீரவசனம் பேச அவளோ அவனைப் பார்த்து முறுவலித்தாள். சரண் தன்மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து மெச்சினாள். அப்படியே இரண்டு வாரங்கள் சென்றன.

சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் உரிமையாளர் கோவிந்தராஜன் முதுமை மற்றும் வாரிசின்மை காரணமாக தன்னுடைய கம்பெனியை நெருங்கிய தோழருக்கு கொடுக்க விரும்பினார். அதனால் அன்று மாலை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. கோவிந்தராஜன் முக்கியமான கோப்பை மறந்ததால் சரண் அதை கொடுப்பதற்காக அங்கு வந்தான். கோப்புகளைக் கொடுத்துவிட்டு ஹோட்டலின் வாயிலில் நின்றவனின் முன் வேகமாக ஒரு புகட்டி கார் வந்து நின்றது. அதனுள் இருந்து அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கினாள். அவள் ஃலேர்டு பாண்ட்டும் அதற்கேற்றாற்போல் வெண்ணிற ஷர்ட்டும் அணிந்திருந்தாள்.
WhatsApp Image 2025-02-19 at 1.02.23 PM.jpeg
ஏதோ ஒரு அவசர வேலையாக வந்தவள் கார் சாவியை சரணிடம் வீசிவிட்டு, "பார்க் தி கார்" என்று கூறி உள்ளே செல்லப்போனவளை, "ஹலோ" என்று கோபத்துடன் அழைத்தான். அவள் திரும்பியபோது சட்டென அந்த சாவியை மீண்டும் அவள் முகத்தில் வீசினான். "வாட் தி ஹெல்?" என்று கோபாத்துடன் அவனைப் பார்த்தபோது, "நான் ஒண்ணும் வேலைக்காரன் கிடையாது. வேற யார்கிட்டயாவது குடுத்து நிறுத்த சொல்லுங்க" என்று எரிச்சலுடன் கூறினான்.
WhatsApp Image 2025-02-19 at 3.15.15 PM.jpeg
அவள், "ஹொவ் டேர் யூ டாக் டு மீ லைக் தாட்?" என்று கோபத்துடன் கேட்டபோது, "ஹவ் டெர் மீ...அப்போ நீங்க நடந்துக்கிட்டது மட்டும் சரியா? யாரு என்னனு தெரியாம சாவிய முகத்துல வீசுரீங்க? முதல்ல உங்க பிஹேவியர மாத்துங்க. வேலைபாக்குறவங்களும் மனுஷங்க தான். அவங்க கைல சாவிய குடுங்க. என்கிட்ட செஞ்சமாதிரி அவங்ககிட்டவும் பண்ணாதீங்க" என்று கூறினான்.

அவள் கோபம் கலந்த திமிருடன், "நான் அப்படித்தான் செய்வேன். அத சொல்றதுக்கு நீ யாரு? நான் யாருன்னு உனக்கு தெரியுமா?...ஒரு பெரிய கம்பெனியோட சி.இ.ஓ" என்று அவள் கூறவும் சரண் வயிறுவலிக்க சிரிப்பதுபோல் பாவனை செய்தான். அவனுடைய சிரிப்பால் எரிச்சலடைந்தவள், "என்ன நக்கலா?" என்று கேட்டதற்கு தன்னுடைய சிரிப்பை அடக்கிக்கொண்டு, "நீ சி.இ.ஓனா அந்த கம்பெனி உறுப்டமாதிரி தான். அங்க அடிமுட்டாள் தான் வேல பாப்பாங்க. அந்த கம்பெனி ஒழுங்காவே இருக்காது, சீக்கிரமாவே திவாலா போய்டும்...ஒரு ஆள ஒழுங்கா ஜட்ஜ் பண்ண தெரியல நீயெல்லாம் சி.இ.ஓவா ஆகி..." என்று கூறி சிரித்தபோது அவளுக்கு கோபம் தலைக்கேறியது. சுற்றியிருந்த கூட்டத்தைப் பார்த்து தன்னை நிதானித்துக்கொண்டவளாய், 'கண்டிப்பா ஒரு நாள் என்கிட்ட மாட்டுவ, அப்ப உன்ன பாத்துக்குறேன்' என்று தன் மனதில் நினைத்தவாறு அங்கிருந்து அகன்றாள்.

சரண் அலுவலகத்திற்கு திரும்பியபோது நியதியிடம் நடந்த அனைத்தையும் கூறினான். "இந்த பணக்காரங்களே இப்படித்தான், திமிரு ஜாஸ்தி. அவ செஞ்ச தப்புக்கு கடைசிவரைக்கும் சாரி கேக்கவே இல்ல...ச்ச அவளாம் ஒரு பொண்ணா..." என்று கோபத்துடன் கூறினான். உடனே நியதி அவனுக்கு குடிப்பதற்கு தண்ணீரைக் கொடுத்துவிட்டு, "ஏய் அடிக்கடி உனக்கு ரொம்ப கோபம் வருது. அத கண்ட்ரோல் பண்ணு. மறுபடியும் அந்த பொண்ண பாத்தா சாரி கேளு..." என்று கூறிமுடிக்கும்முன்பே, "பொண்ணா அது, ராட்சசி. அவள பாக்கவே கூடதுன்னு நினைக்கிறன் நீ என்னன்னா சாரி கேக்கசொல்லர" என்றவன் அறியவில்லை உலகம் ஒரு சிறிய உருண்டை என்று.

அங்கு ஆரியனின் வீட்டிற்கு முன் ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதனுள் இருந்து அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சரணுடன் சண்டையிட்ட அதே இளம்பெண் இறங்கினாள். அவள் வீட்டினுள் விரைந்து நுழைந்தபோது சந்திரமதி அவளை ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் பார்த்து, "வா சரஸ்வதி எப்படி இருக்க?" என்று விசாரித்தார். "சரஸ்வதி இல்ல பாட்டி, ஜஸ் கால் மீ சரஸ்... ஐ அம் கிரேட். நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டதற்கு, "ஏதோ இருக்கேன்" என்று சோகத்துடன் கூறினார். "எனக்கு புரியுது பாட்டி. நீங்க சாடா இருக்க ஆரியன் தான காரணம். அவன் ஏன் இப்படி பண்ணா?" என்று அவள் சந்திரமதியிடம் கேட்டாள். ஆரியன் இன்டர்நேஷனல் பிசினெஸ் மேன் என்பதால் அவனைப் பற்றிய செய்தி பி.பி.சியிலும் வெளிவந்திருந்தது. அதற்கு சந்திரமதி, "நீயே அவன்கிட்ட போய் கேளு. அவன் அவனோட ரூம்ல தான் இருக்கான்" என்று கூறவும் ஆரியனைப் பார்க்கச் சென்றாள்.
WhatsApp Image 2025-02-19 at 1.02.24 PM.jpeg
அவள் "ஆரி" என்று அழைத்தவாறு உள்ளே சென்றபோது அவன் தன் கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய குரல் கேட்டதும், "ஹே சரஸ் வாட் எ சப்ரைஸ்...நீ எப்ப வந்த" என்று புன்னகையுடன் அவளிடம் கேட்டான். அதற்கு, "டுடே மார்னிங் தான் வந்தேன்...சரி நீ ஏன் இப்படி பண்ண?" என்று கேட்டபோது, சரஸ் எதைக் குறிப்பிடுகிறாள் என்று ஆரியனுக்கு நன்கு விளங்கியது. அவன், "எனக்கு வேற வழி இல்ல" என்று கூற, "அப்போ நீ கல்யாணம் பண்ணாம இருந்திருக்கணும்" என்றதும், "சந்தர்ப்ப சூழ்நில" என்று ஒற்றை பதிலாகக் கூறினான். "அப்ப என்ன செய்யப்போற?" என்ற அவளுடைய கேள்விக்கு, "பாப்போம் காலம் தான் பதில் சொல்லனும்...சரி அத விடு உன் விஷயம் என்ன ஆச்சி?" என்று கேட்டதற்கு, "நான் போனேன் ஆனா அதுக்கு முன்னால ஒரு லூசர மீட் பண்ணேன்" என்று கோபத்துடன் கூறினாள். "லூசரா?" என்று புரியாமல் கேட்டபோது நடந்த அனைத்தையும் கூறினாள்.

"நான் ஏற்கனவே உன்கிட்ட இதப்பத்தி சொல்லீருக்கேன் யார்கிட்டயும் இப்படி பிஹேவ் பண்ணாதன்னு..." என்று கூறும்போதே, "அவன் மட்டும் என்ன சும்மாவா இருந்தான்? நிறைய பேசினான்" என்று அவள் கோபத்துடன் கூறினாள். "சாரி சொன்னியா?" என்று அவன் வினவவும், " ஏதோ அவசரத்துல நான் செஞ்சிட்டேன். அதுக்கு நான் ஏன் சாரி கேக்கணும்..." என்று வெறுப்புடன் சொன்னாள். "அவசரம்னாலும் அப்படியா செய்யிறது? அவங்களும் மனுஷங்க தான, அவங்களையும் மதிக்கணும். அதனால மறுபடியும் நீ அவன பாத்தினா சாரி சொல்லு" என்று கூற அவளோ, "வாட்? நான் அவன மறுபடியும் மீட் பண்ணவா? நெவர். இட் வில் நெவர் ஹேப்பன்" என்று உறுதியுடன் கூறினாள். அவன் அந்த விஷயத்தை விட்டுவிட்டு கம்பெனியைப் பற்றி கேட்கலானான். அவள் கம்பெனியின் பெயரையும், இன்னும் ஒரு மாதம் கழித்து அதை எடுத்து நடத்தப்போவதாகக் கூறினாள். கம்பெனியின் பெயரைக் கேட்டதும் ஆரியன் ஒரு மாயப் புன்னகை புரிந்தான். அவனுடைய அந்த புன்னகையின் அர்த்தம் சரஸுக்கு அப்போது விளங்கவில்லை, ஆனால் விரைவில் புரிந்துகொண்டாள்.

ஒரு மாதம் அப்படியே உருண்டோடியது. தங்களுடைய புதிய முதலாளியை வரவேற்பதற்காக அனைவரும் போட் ரூமில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது கையில் பொக்கேயுடன் நின்ற சரண், "நம்ம பாஸ் பேரு சாரான்னு சொன்னாங்க, ஒருவேள ஃபாரினரா இருப்பாங்களோ?" என்று கேட்க, "இருக்கலாம்" என்று நியதி பதிலளித்தாள். அப்போது 'டக் டக்' என்று ஹீல்ஸ் சத்தம் கேட்டது. உடனே, "அவங்க வர்ராங்கன்னு நினைக்குறேன்" என்று ஏற்கனவே சரியாக இருந்த தன்னுடைய சிகையை மேலும் கோதி சரிசெய்து கொண்டான். இதை ஓரப் பார்வையால் பார்த்த நியதிக்கு சிரிப்பு வந்தது. அந்த அறையின் கதவு திறந்தபோது முதலில் கோவிந்தராஜன் உள்ளே வந்தார். அவருக்கு பின் வந்த சாராவைப் பார்த்தபோது சரணின் கண்கள் அதிர்ச்சியால் விரிய, பூச்செண்டு வைத்திருந்த கை நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது.
WhatsApp Image 2025-02-18 at 7.41.15 PM.jpeg

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 18

அங்குவந்த 'சாரா' வேறுயாருமல்ல அன்று சரணுடன் ஹோட்டலில் வைத்து சண்டையிட்டவள். உடனே சரண் தன் கையிலிருந்த பூச்செண்டை நியதியிடம் தள்ளிவிட்டு, "இத நீயே குடு" என்றவன் அவளுக்கு அடுத்ததாக விரைந்து வந்து நின்றான். அவனுடைய இந்த செய்கையின் அர்த்தம் புரியாமல் நியதி விழித்தாள். கோவிந்தராஜன் அங்கு வேலைபார்க்கும் ஒவ்வொருவரையும் சாராவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். நியதியைப் பார்த்ததும் ‘அவள் யார்’ என்பதை சாரா அடையாளம் கண்டுகொண்டாள். அப்போதுதான் அவளுக்கு அன்று ஆரியன் புரிந்த மாயப்புன்னகையின் அர்த்தம் விளங்கியது.
WhatsApp Image 2025-02-22 at 3.48.22 PM.jpeg
ஆனால் நியதிக்கு 'சாரா' ஆரியனின் தோழி என்பது தெரியாது. நியதியை அறிமுகம் செய்தபோது அவள் இன்முகத்துடன் பூச்செண்டை சாராவிடம் கொடுக்க அவள் புன்முறுவலுடன் வாங்கிக்கொண்டாள். அடுத்ததாக நின்றவனைப் பார்த்தபோது, சாரா ஒரு ஏளனப் புன்னகை புரிந்தாள். ஆனால் சரணோ அவளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் செய்வதறியாது விழித்தான்.
WhatsApp Image 2025-02-22 at 7.08.14 PM.jpeg
அவன் தன்னுடைய பி.ஏ. என்று தெரிந்ததும் தன்னுடைய ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, 'என்கிட்டயா மோதுன...இப்போ நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்' என்று நினைத்தவள் லேசாக கள்ளச் சிரிப்பு சிரித்தாள். கோவிந்தராஜன் அனைவரையும் சாராவுக்கு அறிமுகம் செய்து, அவளை சி.இ.ஓ கேபினுக்கு அழைத்துச் சென்று விவரங்களைக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அதுவரை இழுத்து பிடித்துவைத்திருந்த தன் மூச்சுக்காற்றை மெல்ல சரண் வெளியிட்டு தன்னை ஆசுவாசப் படுத்துக்கொண்டான். பின் நியதியும் சரணும் தங்களுடைய அறைக்குத் திரும்பினர். அவர்கள் இருவருக்கும், ஓரே கேபினாக சி.இ.ஓவின் அறையருகே கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இரு அறைகளையும் ஒரு கண்ணாடிக் கதவு பிரித்தது. இருக்கையில் அமர்ந்தபோது நியதி, "மேம் ரொம்ப நல்லவங்க மாதிரி தெரியிதுலடா. எனக்கென்னவோ இவங்க சாஃட் டைப்பா இருப்பாங்கன்னு தோணுது" என்று கூறியவுடன் சரண் அவளை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சாஃட் டைப்பா? இவளா? ஏய் அன்னைக்கு ஒருத்தி என்கூட ஹோட்டல்ல சண்டபோட்டான்னு சொன்னேன்ல அது வேற யாரும் இல்ல இந்த ராச்சசி தான்" என்று கூறவும் நியதி ஆச்சரியமடைந்தாள்.

"இவங்கள?…இப்ப என்ன செய்யப்போற?” என்று நியதி கேட்டதற்கு, "நான் என்ன செய்ய? அவா தான் என்ன வச்சி செய்யப்போறா…இனி இந்த ராட்சசி என்ன என்னலாம் பாடுபடுத்தப்போறாளோ..." என்று அவன் புலம்பும்போதே அவனுடைய இண்டர்காமிற்கு அழைப்பு வந்தது. உடனே, "இதோ அடிச்சிருச்சிபாரு அபாய மணி" என்று கூறிவிட்டு மெல்ல இண்டர்காமை எடுத்து காதில்வைத்தான்.
WhatsApp Image 2025-02-22 at 2.27.01 PM.jpegWhatsApp Image 2025-02-22 at 2.34.03 PM.jpeg
"கம் டு மை கேபின்" என்று கூறி சட்டென கைபேசியை வைத்துவிட்டாள். "நான் சொன்னேன்ல கூப்டுட்டா...என்ன செய்ய காத்திருக்காளோ..." என்று புலம்பியவாறு கண்ணாடிக் கதவைத் தட்டி, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். தன்னை வேலையை விட்டு நீக்கிவிடுவாளோ என்று நினைத்தவாறு சரண் உள்ளே செல்ல அவளோ அதற்கு மாறாக, "இதுவரைக்கும் நீங்க என்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ணீங்கன்னு எனக்கு தேவை இல்ல. திஸ் இஸ் மை கம்பெனி. இனி இங்க நான் வைக்கிறது தான் ரூல்ஸ்" என்று கூறினாள் . அவள் அந்த சம்பவத்தைப் பற்றி எதுவும் கேட்கவில்லை என்றதும் சரணுக்கு குழப்பம் உண்டாயிற்று.
WhatsApp Image 2025-02-22 at 1.56.06 PM.jpeg
அவள்,"மார்னிங் ஷார்ப் டென் ஓ கிளாக் அவங்கவங்க கேபின்ல இருக்கணும். ஒன் மினிட் லேட்னாலும் இட் வில் பி கன்சிடர்ட் அஸ் ஹல்ஃப் டே லீவ்..." என்று தன் விதிமுறைகளை கூற ஆரம்பித்தாள். அவள் ஒவ்வொன்றாகக் கூறிக்கொண்டு வர சரணுக்குத் தலை சுற்றியது.

'ஹிட்லரவிடவும் இவ பயங்கரமான ஆளா இருக்காளே!' என்று நினைத்தவன் அவளை தன் மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தான். அவளோ அனைத்தையும் கூறிவிட்டு, "இஸ் தாட் கிளியர்?" என்று கேட்டபோது அவன் தன்னுடைய எண்ணங்களில் மூழ்கியிருந்ததால் எதுவும் கூறாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்து மீண்டும், "இஸ் தாட் கிளியர்?" என்று தன்னுடைய குரலை அவள் சற்று உயர்த்திக்கேட்க, நிதர்சனத்திற்கு வந்த சரண், "எஸ் மேடம்" என்று சத்தமாகக் கூறினான். அதன் பின் அவள் தற்போது நடந்துகொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டுகளின் விவரங்களைக் கேட்டபோது அவன் ஒவ்வொன்றாகக் கூறத் துவங்கினான். முதலில் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே டேபிளில் தன்னுடைய பேனாவை வைத்து, 'டக், டக்' என்று வேண்டுமென்றே அடித்தாள். அதில் சற்று கடுப்பான சரண் மேலும் எதுவும் கூறாமல் அப்படியே நின்றான். பேச்சு நின்றதும் அவள் அவனை 'என்ன?' என்பதுபோல் புருவத்தை உயர்த்த, அவன் மீண்டும் கூறத் துவங்கினான்.
WhatsApp Image 2025-02-22 at 3.19.51 PM.jpeg
சிறிதுநேரம் சென்றதும் அவனை மேலும் வெறுப்பேத்த, விரும்பிய சாரா தன் கையிலிருந்த பேனாவை கீழே போட்டாள். வேண்டுமென்றே செய்கிறாள் என்று தெரிந்த சரணுக்கு சினம் பொங்கி எழுந்தது. அவன் அவளைப் பார்த்தபோது எதுவும் தெரியாதவள் போல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அந்த செய்கை அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது. ஆனால், முதலாளி என்பதால் தன்னுடைய கோபத்தை அவள்மீது காட்ட இயலாமல் கட்டுப்படுத்திக்கொண்டான். அவன் பேனாவை எடுத்து மீண்டும் டேபிளில் வைத்தபோது சாரா ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

அனைத்தையும் அவன் சொல்லி முடித்த பின், "ஓகே இத அப்பறம் பாக்கலாம்...நான் ஒரு பிக் ப்ராஜக்ட் பண்ணப்போறேன். அதுக்காக இங்க இருக்குற ஒரு கம்பெனியோட டை-யப் வச்சிக்கலாம்னு இருக்கேன். சோ இன்டெர்ஸ்டட் கம்பெனிஸ் அவங்களோட ப்ரபோசல மெயில் மூலமா நமக்கு அனுப்பும்படி சொல்லணும். ஒன் வீக் கழிச்சி நான் யார செலக்ட் பண்ணிருக்கேன்னு ஒரு பார்ட்டிவச்சி அதுல அநௌன்ஸ் பண்ணுவேன். இத ஒரு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி நியூஸ்பேப்பர்ல குடுத்திரு. ஓகே?" என்று கேட்டாள்.

'அடப்பாவமே! அப்ப இவ்வளவு நேரம் தொண்டத்தண்ணி வத்த கத்துனது எல்லாம் வேஸ்ட்டா!' என்று மனதில் அவன் நினைத்துக்கொண்டிருந்தபோதே, "ஓகே!" என்று அவளுடைய குரல் மீண்டும் ஒங்கி ஒலித்தது. உடனே அவன், "ஓகே மேடம்" என்று பதற்றத்துடன் பதிலளித்தான். பின் அவன் அங்கிருந்து செல்லவிருந்தபோது, "அண்ட் ஃபைனல்லி…என் கம்பெனில முட்டாள்களுக்கு இடம் கிடையாது" என்று சட்டென அவள் கூறவும் சரணுக்கு சுருக்கென்று இருந்தது. அவளை முறைத்துவிட்டு தன்னுடைய கேபினுக்குச் சென்றான்.

அறையினுள் வந்தவன் 'தொப்'பென்று தன் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான். அருகிலிருந்த நியதி மெல்ல அவனுடைய தோளில் கைவைத்து, "சரண்" என்று அழைத்தபோது, "இவ மனுஷியே இல்ல" என்று கத்தினான். சற்று அதிர்ந்த நியதி, "ஏய் கத்தாத அவங்களுக்கு கேட்றபோது. என்ன ஆச்சி?" என்றவளிடம், "நல்லா கேக்கட்டும். ஈவு இரக்கம் இல்லாத ராட்சசி. வஞ்சம் வச்சி பழிவாங்குறா" என்று மீண்டும் சாராவைத் திட்டினான். "ச்ச்...முதல்ல என்ன சொன்னாங்கண்ணு சொல்லு" என்று நியதி விசாரிக்க அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான். அதைக்கேட்டவுடன் நியதிக்கு அடக்கமுடியாமல் சிரிப்புவந்தது.
WhatsApp Image 2025-02-22 at 3.40.36 PM.jpeg
உடனே, "சரி விடு உன்ன அவங்க வேலையவிட்டு தூக்கல. அத நினைச்சி சந்தோஷப் படு" என்று நியதி கூறினாள். அவனோ, "என்ன நிதி இப்படி சொல்ற" என்று அவன் கேட்க, "நீயும் என்ன கொஞ்சமாவா பேசியிருக்க? அப்படி பேசுனா யாருக்குத்தான் கோபம் வராது? ம்ம்... பேசும்போது பாத்து பேசணும். இந்தா தண்ணி குடி" என்று சொல்லி ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீரை ஊற்றி அவனுக்கு கொடுத்தாள்.

அவன் அதை குடித்துவிட்டு ஆசுவாசப் படுத்திகொண்டிருக்கும்போதே அவனுடைய இன்டர்காம் அழைத்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபின், சரண் அந்த இன்டர்காமை எடுத்தான். "அட்வர்டைஸ்மென்ட்டுக்கு குடுக்குறதுக்கு முன்னாடி ஒரு ரஃப் காப்பி என் டேபிள்ள இருக்கணும். நான் செக் பண்ணதுக்கு அப்பறம்தான் அது அட்வர்டைஸ்மென்ட்டுக்கு குடுக்கணும். இன்னைக்கே இந்த வேல முடிஞ்சாகனும்" என்று கூறிவிட்டு பட்டென அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டபோது, சரணுக்கு அவன் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. சரண் தன் மனதில், 'எனக்கு எப்படி எழுதணும்னு கூடவா தெரியாது? நான் என்ன நேத்து தான் வேலைக்கு சேர்ந்திருக்குறமாதிரி பேசுறா. செக் பண்ணுவாளாம் செக்கு. இவள...' என்று முணுமுணுத்தவன் கோபத்துடன் தன் டேபிளை படாரென ஒரு தட்டு தட்டினான். அருகிலிருந்த நியதி அவனைப் பார்த்து 'பொறுமை, பொறுமை' என்பது போல் செய்கை செய்ய மீண்டும் நிதானத்திற்கு வந்தான்.

சரணுடைய வேலை மாலையாகியும் முடியாமல் இருந்ததால் நியதி தனித்து பெண்கள் விடுதிக்கு செல்லவேண்டியிருந்தது. அவள் விடுதிக்கு செல்வதற்கு முன் அவர்கள் சந்திக்கும் பார்க்கில் சற்று நேரம் அமர்ந்து அவளும் சரணும் பேசிவிட்டுச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அன்று சரண் அவளுடன் வர இயலாத காரணத்தால் நியதி மட்டும் தனித்து ஒரு பெஞ்சில் ஆரியனின் நினைவுகளோடு அமர்ந்திருந்தாள். அப்போது அறுபதுவயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவளருகில் அமர்ந்தார். முகத்தில் களைப்பும் சோர்வும் இருக்க அவருக்கு மூச்சு வாங்கியது. உடனே நியதி தன்னுடைய வாட்டர் பாட்டிலை கொடுத்து தண்ணீரைப் பருகுமாறு கூறினாள்.
WhatsApp Image 2025-02-21 at 11.03.38 PM.jpeg
அவர் தண்ணீர் அருந்தி, பாட்டிலை அவளிடம் கொடுத்து நன்றி கூறுவதற்காகத் திரும்பியபோது, "நியதி" என்று ஆச்சரியத்துடன் அழைத்தார்.

அவள் சற்று திகைத்துவிட்டு, "உங்களுக்கு என்ன தெரியுமா?" என்று கேட்க அவரோ, "ஆமா நியதி. எனக்கு உன்ன நல்லா தெரியும்" என்று சிறு புன்னகையுடன் கூறினார். உடனே அவள், "நீங்க..." என்று இழுத்தபோது, "நான் கிரிஜா, ரஞ்சித்தோட அம்மா" என்று கூற நியதியும் புன்னகைத்தாள். பின், "நீ எப்படி இருக்க?" என்று கேட்டதற்கு, "இருக்கேன்மா" என்று ஒற்றை பதிலாக கூறினாள். ஒரு சிறு அமைதிக்குப் பின், "நடந்த எல்லாத்தையும் கேள்விப்பட்டேன்மா. எனக்கும் ரொம்ப வருத்தமா இருந்துச்சி. நீ காவலப்படாத இதுவும் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நடந்திருக்கு. இந்த நிலமையும் கடந்துபோகும்....ஆமா நீ இப்போ எங்க தங்கியிருக்க?" என்று அவளை விசாரித்தார். "இங்க பக்கத்துல இருக்குற விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்" என்று அவள் கூறும்போதே கிரிஜாவின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

அதை எடுத்து, "பக்கத்துல தான்டா வாக்கிங் வந்தேன். இப்போ வீட்டுக்கு வந்துருவேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தார். தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த நியதியிடம் திரும்பி, "ரஞ்சித் தான்மா...நீ ஒரு நாள் என் வீட்டுக்கு கண்டிப்பா வா" என்று கூற நியதியும் ஒப்புக்கொண்டாள். கிரிஜா சென்றபின் நியதி மீண்டும் தனித்து விடப்பட்டாள். சிறிது நேரம் கழித்து அவளும் தன்னுடைய விடுதிக்கு கிளம்பினாள். அவ்வளவு நேரமாக இவர்களது உரையாடலை தன்னுடைய காரிலிருந்தபடியே ஆரியன் கவனித்துக்கொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-02-22 at 2.13.15 PM.jpeg
தினமும் இங்கு நியதி வருவதை அறிந்த அவன் எவ்வளவு வேலை இருந்தாலும் அவையனைத்தையும் விட்டுவிட்டு அவளைப் பார்ப்பதற்காக வந்துவிடுவான். அவன் அந்த பார்க்கின் சற்று தொலைவிலேயே தன்னுடைய காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்து தினமும் நியதியைப் பார்த்துவிட்டு அவள் கிளம்பியதும் தானும் கிளம்புவான். அன்றும் அதேபோலத்தான் செய்தான். வீடு திரும்பியதும் தன்னுடைய அறையிலுள்ள பால்கனியில் சற்று நேரம் வானத்தை வெறித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய நினைவிற்கு நியதியின் சோகம் கலந்த முகம் தோன்றி அவனை வெகுவாக பாதித்தது.
WhatsApp Image 2025-02-22 at 3.33.35 PM.jpeg
அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்துப் பேசினான். மறுமுனையில் இருப்பவர் கூறியதைக் கேட்டதும் ஆரியனின் முகம் சட்டென கல்லாக இறுகியது. அவன் அந்த அழைப்பை வைத்தபோது கோபத்தால் அவனுடைய கண்கள் சிவந்தன.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 19
மறுநாள் வர்தன்ஸ் மேன்ஷனில் அனைவரும் காலை உணவு உட்கொண்டிருந்தபோது அனைவரும் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது போதைப் பொருளைப் பயன்படுத்திய சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கைது என்ற செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதைக் கேட்டதும், "இந்த காலத்துப் பிள்ளைங்க ஏன் இப்படி பண்றாங்கண்ணு தெரியல. இந்த ட்ரக்ஸ்னால அவங்க வாழ்க்கையே பாழா போயிடுது...இதெல்லாம் இவங்களுக்கு எப்படி கிடைக்குது? முதல்ல இத குடுக்குறவங்கள போலீஸ் பிடிக்கணும்..." என்று சந்திரமதி கூறிக்கொண்டிருக்கும்போதே ஆரியன் சேனலை மாற்றினான்.
WhatsApp Image 2025-02-24 at 9.24.41 AM.jpeg
உடனே, "டேய் நான் நியூஸ் பாத்துகிட்டு இருக்கேன்ல. எதுக்கு மாத்துன?" என்று முதியவள் கேட்டதற்கு, "இதெல்லாம் தேவையில்லாத நியூஸ். பி.பி.சி. பாருங்க இது தான் நமக்கு தேவ" என்று கூறினான். "போடா நீயும் உன் பி.பி.சி.யும்..." என்று கூறிவிட்டு உண்ணத் துவங்கினார். அதைப் பார்த்த மற்ற இருவரும் சிரித்துக் கொண்டே உணவை உட்கொண்டனர். காலை உணவு முடிந்ததும் ஆரியன், ரஞ்சித் மற்றும் பார்கவ் அலுவலகத்திற்குக் கிளம்பினர்.

அலுவலகத்தில் சாரா கொடுத்த விளம்பரத்தைப் பற்றி பார்கவ் ஆரியனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். "எப்படியும் இந்த ஜாயிண்ட் வென்சர் நமக்கு தான் கிடைக்கும்" என்று ரஞ்சித் கூறவும் ஆரியன் அவனை கேள்வியாக நோக்கினான். உடனே, "ஆமா சாரா உன் ஃரெண்டு. அதனால அவங்க நமக்கு தான குடுப்பாங்க" என்று கூறவும் ஆரியன் லேசாக சிரித்தான்.
WhatsApp Image 2025-02-24 at 9.30.27 AM.jpeg
"சாரா என் ஃரெண்டுதான். ஆனா அவங்க பிசினெஸ் அண்ட் பெர்சனல் விஷயத்த எப்பவுமே பிரிச்சிதான் பாப்பாங்க. அவங்களுக்கு பிடிச்சா மட்டும் தான் நமக்கு அந்த ஜாயிண்ட் வென்சர் கிடைக்கும்...அதோட நாம நம்ம ப்ரபோசல ஒழுங்கா பிரிப்பர் பண்ணனும். நம்ம வேலைய ஒழுங்கா செஞ்சிட்டா அதுவே நமக்கு சக்ஸஸ் தான்" என்று அவனுக்கு விளக்கினான்.

"ஆனாலும் எனக்கு நம்பிக்க இருக்கு நம்ம ப்ரபோசல் தான் வின் பண்ணும். ஏன்னா இதுவரைக்கும் வர்தன் கார்பரேட்ஸோட போட்டி போட்டு யாரும் ஜெயிச்சதே கிடையாது. நாம தான் வின் பண்ணோம் இனிமேலும் நாம மட்டும் தான் வின் பண்ணுவோம்" என்று உறுதியுடன் ரஞ்சித் கூற அதைப் பார்த்து ஆரியன் சிரித்தான். "இப்ப எதுக்கு சிரிக்கிற?" என்ற அவனுடைய கேள்விக்கு, "ஓவர் கான்பிஃடன்ஸ் உடம்புக்கு ஆகாதுடா" என்று ரஞ்சித்திடம் கூறிவிட்டு பார்கவிடம், "இன்னைக்கே ஒரு பெர்ஃக்ட் ப்ரபோசல சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்க்கு அனுப்பீரு" என்று கூறினான்.

அங்கு விராஜின் கம்பெனியான குணசீலன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸிலும் இந்த ப்ரபோஸலைப் பற்றிய பேச்சு தான் நடந்துகொண்டிருந்தது. "ஒரு ப்ரபோசல சீக்கரம் ரெடி பண்ணி அனுப்பு" என்று தன்னுடைய பி.ஏ. வீராவிடம் கூற அவனோ, "சார் மிஸ் சாரா அண்ட் மிஸ்டர் வர்தன் சையில்டுஹூட் ஃரெண்ட்ஸ்னு எல்லாருக்கும் தெரியும். அந்த ப்ரபோசல வர்தன் கார்பர்டேஸ்க்கு தான் குடுப்பாங்க. இதுல பார்ட்டிசிபேட் பண்றதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அப்ப நாம ஏன் கலந்துக்கணும்?" என்று கேட்டான். அதற்கு அவனோ, "எனக்கு எல்லாம் தெரியும். நான் அங்க பார்ட்டிசிபேட் பண்ண போகல, பிரச்னைய உருவாக்க மட்டும் தான் போறேன்" என்று கூற மற்றவனோ, "பிரச்சனையா?" என்று புரியாமல் கேட்டான். "வெயிட் அண்ட் வாட்ச்" என்று ஒரு வஞ்சப் புன்னகை புரிந்தான்.
_b5b3f6aa-f16f-421a-bef3-e029c696e647.jpg
அதே சமயம் இங்கு நியதியும் சரணும் தங்களுடைய அறையினுள் நுழைந்தபோது தரை முழுவதும் கசக்கப்பட்ட காகிதங்கள் குவிந்து கிடைத்தன. அதைப் பார்த்த நியதி, "என்னடா இது? எப்பவுமே இந்த இடத்த நீட்டா தான வச்சிருப்ப. இன்னைக்கு ஏன் இவ்வளவு குப்பையா இருக்கு?" என்று வினவ அவனோ, "எல்லாம் அந்த ராட்சசினால தான்" என்று பதிலளித்தான்.
WhatsApp Image 2025-02-24 at 4.17.49 PM.jpeg
"என்ன சொல்ற?" என்று கேட்டதற்கு, "முதல்ல நான் ஒரு ட்ராஃட் கொண்டுபோனப்ப பேப்பர் சரியில்லன்னு சொன்னா, ரெண்டாவது தடவ பேனா சரியில்லன்னு சொன்னா, இப்படியே முப்பத்தி ஆறு தடவ செஞ்சா. ஒவ்வொரு தடவையும் ஏதாவது குறை சொல்லிகிட்டே இருந்தா. கடைசில நான் முதல்ல பிரிப்பர் பண்ணதயே ஓக்கேன்னுட்டா. எனக்கு வந்துச்சே பாரு கோபம், அப்பவே அவகிட்ட, ‘நீ மனுஷப்பிறவியே இல்ல ஒரு ராட்சசின்னு’ கத்தனும் போல இருந்துச்சி..." என்று அவன் சாராவை வசைமொழி பொழிய அதைக் கேட்டுக்கொண்டே நியதி சிரித்துவாறு அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
WhatsApp Image 2025-02-24 at 4.17.49 PM (1).jpeg
சரண் தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, "என் நிலமைய பாத்தியா நிதி 'ஆப்பில் அகப்பட்ட குரங்கு' மாதிரி ஆயிருச்சி" என்று புலம்பும்போதே, "நான் நினச்சேன் நீ சொல்லீட்ட" என்று அவள் கூறி சிரிக்கவும் சரண் அவளை முறைத்தான். பின் இருவரும் அவர்களுடைய வேலையைத் துவங்கினர்.

ஞாயிறு காலை பெண்கள் விடுதியில் நியதி காஃபியை அருந்திக்கொண்டிருந்தபோது 'யாரழைப்பது யாரழைப்பது யார் குரலிது' என்று அவளுடைய கைபேசியின் ரிங்டோன் ஒலித்தது. ஒரு புன்முறுவலுடன் காஃபியை அருந்தியவாறே அழைப்பை எடுத்து, "குட் மார்னிங் சான். என்ன காலையிலயே கால் பண்ணீருக்க?" என்று கேட்டாள். "நிதி எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. அதனால இன்னைக்கு நாம எங்கயாவது வெளிய போயிட்டு வருவோம்" என்று அவன் கேட்க அவளோ, "உனக்கா? ஸ்ட்ரெஸ்ஸா?" என்று புரியாமல் கேட்டாள். உடனே, “என்ன தெரியாத மாதிரி கேக்குற? வந்து மூணே நாள் தான் ஆகுது அந்த ராட்சசி என்ன படுத்தின பாடு இருக்கே.....முடியலடா சாமி. இன்னைக்கு சன்டே. அந்த ராட்சசிய பாக்கவேண்டிய அவசியமே இல்ல. சோ நாம ஜாலியா வெளிய போறோம் என்ஜாய் பண்றோம்" என்று தன்னுடைய திட்டத்தைக் கூறினான்.

அவளும் ஒப்புக்கொள்ள இருவரும் அங்குள்ள பெரிய மாலிற்குச் சென்று அன்றைய தினத்தைக் கழித்தனர். காலை முழுவதும் அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்துவிட்டு, மதியம் தியேட்டரில் படம் பார்த்தனர். மாலையில் அங்குள்ள புட்-கோர்ட்டில் அமர்ந்திருந்தபோது சரண் நியாதிக்காக ஐஸ் க்ரீம் வாங்கச் சென்றான். நியதி தனியே இருந்தபோது, "ஹெலோ நியதி" என்று ஏதோ குரல் கேட்க அவளும் திரும்பிப் பார்த்தாள்.
WhatsApp Image 2025-02-24 at 4.23.36 PM.jpeg
அங்கு சரண் அவர்களுக்காக ஐஸ் க்ரீமை வாங்கிவிட்டு திரும்பியபோது நியதி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அது யாரென்று பார்த்தபோது அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால் அங்கு சாரா நின்றுகொண்டிருந்தாள். "இவ இங்க என்ன பண்றா? நான் எங்க போனாலும் வந்துடறா? இன்னைக்கும் என்ன நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா? கடவுளே என்ன இவகிட்ட இருந்து காப்பாத்து" என்று புலம்பிக்கொண்டிருந்தான். சாரா செல்லும் வரையிலும் அந்த இடத்திற்குப் போகக்கூடாது என்று முடிவெடுத்து அவர்கள் பேசிமுடிக்கும்வரை அந்த கவுண்டரின் அருகில் ஐஸ்க்ரிமுடன் நின்றான்.

நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இருக்கையில் அமரவும், "என்ன உக்காந்துட்டா! இப்போதைக்குள்ள இவ போற மாதிரி தெரியலையே...இந்த நிதி வேற அவகூட பேசிக்கிட்டே இருக்கா. நான் ஒருத்தன் இருக்கேங்குற நினைப்பே இல்லையா? நிதி அவள சீக்கிரம் அனுப்புடி" என்று நியதியையும் திட்டிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து சாரா கிளம்பியதும் சரண் விரைந்து சென்று நியதியிடம் அந்த பனிக் கூழை கொடுத்தான்.

"நிதி அவகூட என்ன அவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்த? நான் ஒருத்தன் இருகேங்குறதையே மறந்துட்டியா? அவள சீக்கிரம் அனுப்பிருக்கலாம்ல" என்று கேள்விகளை அடுக்கினான். நியதியோ, "நான் என்ன அவங்ககிட்ட 'மேடம் சீக்கிரம் கிளம்புங்க. நீங்க இருந்தா சரண் வரமாட்டான். ஏன்னா அவனுக்கு உங்கள பிடிக்காதுன்னு' சொல்லி விரட்டவா முடியும்" என்று கேட்க அவன் சிரித்துவிட்டான். அவன், "சரி சரி….ஆமா இந்த மால இன்னைக்கேவா மூடப் போறாங்க?" என்று தீவிர முகபாவனையுடன் சரண் கேட்க, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே. ஏன்?" என்று புரியாமல் கேட்டாள். அதற்கு, "இல்ல இன்னைக்கே மூடப்போற மாதிரி அந்த ராட்சசி இவ்வளவு ஷாப்பிங் பண்ணீருக்காளே அதான் கேட்டேன்...என்ன ஆச்சு நிதி ஏன் அப்படி பாக்குற?" என்று விளங்காமல் கேட்டான்.
அப்போது, "நியதி" என்று சாராவின் குரல் கேட்க அவன் அசையாமல் அப்படியே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-02-24 at 3.27.29 PM.jpeg
"மறுபடியும் ஒரு தடவ மீட் பண்ணனுவோம், தனியா" என்று கூறி சரணை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள். 'தனியா' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தபோதே அவள் தன் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறாள் என்பதை சரண் அறிந்தான். "அவ இருக்கான்னு சொல்லக்கூடாது?" என்று கேட்டதற்கு, "நான் சொன்னேன் உனக்கு தான் புரியல" என்று அவள் கூறினாள். "நான் பேசுனது அவளுக்கு நல்லாவே கேட்டுருக்கும். சும்மாவே வச்சி செய்வா, இனி என்ன பண்ணபோறாளோ!" என்று சரண் பயந்தான். பின் இருவரும் சிறிதுநேரம் பேசிமுடித்ததும் நியதியை விடுதியில் விட்டுவிட்டு தன் வீட்டிற்குச் சென்றான்.

சரண் பயந்தது போலவே அவள் அவனை படாத பாடு படுத்தினாள். அப்படியே ஒரு வாரம் கடந்தது. அந்த வாரம் முழுவதும் வந்திருந்த அனைத்துப் ப்ரபோசல்களையும் நன்கு ஆராய்ந்து தனக்கு எது நல்லதோ அதை தேர்வுசெய்தாள். சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் யாருடன் இணையப்போகிறார்கள் என்ற முடிவை தெரிவிப்பதற்கு பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ப்ரபோசல் அனுப்பிய அனைத்து கம்பெனிகளும் அங்கு வரவேற்கப்பட்டனர். மொத்தம் இருபது பெரிய கம்பெனிகள் அதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொருவராக அங்கு வருகை தந்த போது அனைவரும் அவர்களை வரவேற்றனர். நியதி சரணிடம் ஏதோ கூறிக்கொண்டிருக்கும்போது ஆரியவர்தன் அந்த ஹாலிற்குள் நுழைந்தான்.

அப்போதுதான் நியதி அவர்களது பிரிவிற்குப் பின் முதன்முதலாக அவனைக் கண்டாள்.
WhatsApp Image 2025-02-24 at 3.50.10 PM.jpeg
அது அவளுக்கு பல யுகங்கள் போல் தோன்றியது. அவனைப் பார்த்ததும்,’ ஏன் அப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா நீங்க எது செஞ்சாலும் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். அது எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லீருக்கலாமே, நாம ரெண்டுபேரும் சேர்ந்தே அத சந்திருச்சிருக்கலாம். ஏன் இந்த பிரிவ தேர்ந்தெடுத்தீங்க. என்னால உங்கள பிரிஞ்சிருக்கவே முடியல ஆர்யன்...’ என்று இருக அணைத்தவாறு மார்பில் சாய்ந்து அழவேண்டும் என்பதுபோல் இருந்தது. ஆனாலும் கண்களிலிருந்து வெளிவரவிருந்த கண்ணீரை கட்டுப்படுத்தி இயல்புநிலைக்கு வந்தாள்.

ஆரியனின் பார்வையிலிருந்தும் நியதி தப்பவில்லை. அவன் தன் மனதில் ‘நியதி இந்த முடிவ உன் நல்லதுக்காகத்தான் எடுத்தேன். கூடிய சீக்கிரத்துல உனக்கு புரியும்' என்று அவளுக்கு ஆறுதல் கூறவேண்டும் என்று தவித்தான். மேலும் அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று அஞ்சி தன் பார்வையை வேறுபுறம் திருப்பினான். பின்பு அவன் உள்ளே செல்ல பார்கவும், ரஞ்சித்தும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அப்போது விராஜ் அந்த ஹாலுக்குள் நுழைந்தான். அவனுடைய முகத்தில் ஒரு கபடச் சிரிப்பு மட்டுமே இருந்தது. அனைவரும் அந்த இடத்திற்கு வந்ததும் விழா ஆரம்பமானது. முதலில் சாரா அங்கிருந்த அனைவரையும் வரவேற்று, விழாவிற்கு வந்ததற்காக நன்றியையும் தெரிவித்தாள். பின் சில வார்த்தைகள் தன் கம்பெனியைப் பற்றி பேசிவிட்டு யாரை தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று தன் சார்பாக அவளுடைய செக்ரட்டரியான நியதி ஆறிவிப்பாள் என்று கூறி இருக்கையில் அமர்ந்தாள். அங்கு வந்த அனைவரும் ஆவலோடு முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆரியவர்தனின் ப்ரபோசல் தான் வெற்றிபெறும் என்று அனைவருக்கும் தெரிந்தபோதும் ஒரு நப்பாசையால் அதில் கலந்துகொண்டனர். நியதி நினைத்தது போல அவள் கையில் வைத்திருந்த கோப்பில், 'வர்தன் கார்பர்டேஸ்' என்று இருந்தது.
WhatsApp Image 2025-02-24 at 3.55.24 PM.jpeg
முடிவு அறிவிக்கப்பட்டதும், அனைவரின் முகத்திலும் நிராசை இருந்தபோதும் கைதட்டினர். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவன், "இங்க என்ன நடக்குது? நீங்க உங்க ஃரெண்டுக்கே குடுக்கணும்னு நினைச்சிருந்தா ஏன் எங்க எல்லாரையும் கூப்பிட்டு அவமானப் படுத்தணும்" என்று சாரவைப் பார்த்துக் கேட்டான். பின், “இத யாருமே தட்டிக் கேக்க மாட்டீங்களா?" என்று அருகிலிருந்த அனைவரையும் பார்த்துக் கேட்டான். நியதி மற்றும் சரணுக்கும் சாரா, ஆரியனின் தோழி என்று அப்போதுதான் தெரியவந்தது. அங்கு சலசலப்பு சத்தம் அதிகரிக்க சாரா செய்வதறியாமல் விழித்தாள்.

சாரா எப்போதும் பிசினஸ்ஸையும், பெர்சனல் விஷயத்தையும் சேர்த்து பார்க்கக்கூடியவள் அல்ல. அவளுடைய கம்பெனிக்கு எது நல்லதோ அதற்கேற்றாற்போல் முடிவெடுப்பாள். இங்கும் வர்தன் கார்ப்பரேட்ஸின் ப்ரபோசல் அவளுடைய கம்பெனிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதியே இந்த முடிவை எடுத்தாள். மேலும் இந்த பார்ட்டி மூலம் அனைவருடனும் நட்பு கொள்ளவேண்டும் என்றும் சாரா விரும்பினாள். அங்கிருந்த யாரையும் அவமதிக்கும் எண்ணம் அவளுக்கு துளிகூட இல்லை. இந்த நிகழ்வு அனைத்தும், விராஜின் குள்ளநரி சூழ்ச்சியே என்பதை ஆரியன் நன்கு அறிந்திருந்தபோதும், அமைதியாகவே இருந்தான். ஒரு சிறு தவறு நடந்தால் கூட, கம்பெனியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்த சாரா இதிலிருந்து எவ்வாறு தப்புவது என்று பதற்றத்துடன் வழிதேடிக்கொண்டிருக்க, வந்தகாரியம் வெற்றியடைந்ததை நினைத்த விராஜ் கள்ளமாகச் சிரித்தான்.
WhatsApp Image 2025-02-24 at 7.29.24 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 20
மேடையில் நின்றுகொண்டிருந்த நியதியும் இந்த பிரச்சனைக்கான தீர்வை சிந்தித்தபோது ஒரு யோசனைத் தோன்றியது. சாராவோ என்ன செய்வது என்று அறியாமல் விழித்துக்கொண்டிருக்க, நியதி அவளருகே சென்று தாழ்ந்த குரலில் ஏதோ கிசுகிசுத்தாள்.
WhatsApp Image 2025-02-25 at 8.12.51 PM.jpeg
முதலில் பதற்றத்துடன் இருந்த சாராவின் முகம் மெல்ல மாற அவள் புன்னகைத்தாள். உடனே அங்குள்ள மைக்கில், "லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் மிஸ்டர் வர்தன் என்னோட ஃரெண்டுங்கிறதுக்காக நான் அவரோட ப்ரபோசல அக்சப்ட் பண்ணல. என் கம்பெனிக்கு எது ப்ராபிஃட்டபிளா இருக்குமோ, அதத்தான் நான் செஞ்சேன்”

“வர்தன் கார்ப்பரேட்சோட ப்ரபோசல் நான் எதிர்பார்த்தவிட பலமடங்கு லாபத்த எனக்கு குடுக்கும். அதனாலதான் அத செலக்ட் பண்ணேன். அதுக்காக மத்த கம்பெனியோட ப்ரபோசல குறைவா எடபோடல. நான் இந்த பார்ட்டிய வைக்கறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, உங்க எல்லார்கூடவும் ஒரு நல்ல ஃரெண்ட்ஷிப் வச்சுக்கணும்...அண்ட் லாஸ்ட்லி சங்கம் கான்ஸ்ட்ரக்க்ஷன்ஸோட சி.இ.ஓ.வா நான் ஒரு பிராமிஸ் பண்றேன்…இங்க எங்களோட இன்விடேஷன மதிச்சி வந்த எல்லா கம்பெனிசோடவும் நாங்க கண்டிப்பா ஒரு ப்ராஜக்ட் பண்ணுவோம்" என்று சாரா அறிவித்தவுடன் அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அனைவரும் சங்கம் கான்ஸ்ட்ரக்க்ஷன்சுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்தார்கள். ஆனால் இப்போது அவர்களுடன் சேர்ந்து ஒரு ப்ராஜக்டில் பணிபுரியப் போவதைநினைத்து, அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். அவளுடைய அந்த முடிவை ஆமோதிக்கும் விதமாக ஹாலிலிருந்த அனைவரும் எழுந்து கைதட்டினர்.
WhatsApp Image 2025-02-26 at 5.39.32 PM.jpeg
ஆரியனும் ஒரு புன்முறுவலுடன் கைதட்டினான். விராஜின் திட்டம் தோல்வியடைந்ததும், அவனுடைய முகம் கடுகடுத்தது. "என்ஜாய் த பார்ட்டி" என்று கூறிவிட்டு மேடையைவிட்டு சாரா கீழே இறங்கினாள். அனைவரும் முந்தியடித்துக்கொண்டு பூச்செண்டுகளை அவளிடம் கொடுத்து தங்களுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

அப்போது ஆரியவர்தன் அங்கு வந்தவுடன் அனைவரும் அவனுக்கும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றனர். சாராவின் அருகே நின்றுகொண்டிருந்த நியதி மற்றும் சரணின் பக்கம் அவனுடைய கவனம் சென்றது. நியதி அவனை எதிர்கொள்ள முடியாமல் விருந்தினர்களை கவனிக்கப் போவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல சரணும் அவளைப் பின்தொடர்ந்தான். சாராவுக்கு முதலில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தான், பின் சரண் அங்கிருப்பதைப் பார்த்ததும், "சரஸ், ஏன் உன்னோட எல்லா ஸ்டாஃசும் வந்திருக்காங்க? முக்கியமானவங்க மட்டும் வந்தா போதாதா?" என்று அவளிடம் கேட்டான்.
WhatsApp Image 2025-02-25 at 10.42.57 PM.jpeg
அதற்கு அவளோ, "முக்கியமானவங்கதான் வந்திருக்காங்க. ஏன் கேக்குற?" என்று புரியாமல் வினவ, "அவன் இங்க என்ன பண்றான்?" என்று சரணைப் பார்த்தான். சரண் இங்கு பணிபுரிகிறான் என்று ஆரியனுக்குத் தெரியும், ஆனால் அவன்தான் சரஸின் பி.ஏ. என்று தெரியாது. உடனே அவள், " ஓ அவனா! என்னோட பி.ஏ. அண்ட் ஒன் மோர் திங் என்ன ஒருத்தன் ஹோட்டல்ல இரிடேட் பண்ணதா சொன்னேன்ல அந்த லூசர், வேறுயாரும் இல்ல இவன் தான். இப்ப என்கிட்டே வசம்மா மாட்டிக்கிட்டான்" என்று கூறி அவள் சிரிக்கவும் ஆரியனுக்கு அனைத்தும் புரிந்தது. அவனும் லேசாக புன்னகைத்தான்.

இங்கு நியதியும் சரணும் வேலைகளை முடித்துவிட்டு சற்று இளைப்பாறுவதற்காக இருக்கைகளில் ஐஸ் கிரீமுடன் அமர்ந்தனர். "இன்னைக்குள்ள அந்த சிட்டுவேஷன நீ எப்படியோ சமாளிச்சிட்ட நிதி. கங்கிராஜுலேஷன்ஸ்...இனி நாம வர்தன் கன்ஸ்ட்ரக்க்ஷன்சோட ஒர்க் பண்ண போறோம். தினமும் மிஸ்டர் வர்தன பாக்கவேண்டியதா இருக்கும். உனக்கு..." என்று அவன் இழுத்தபோது, "நீ கவலைப்படாத நான் பாத்துக்குறேன்"
WhatsApp Image 2025-02-25 at 9.41.13 PM (1).jpeg
"நம்ம கம்பெனி ஒரு பெரிய ப்ராஜக்ட் பண்ணபோறத நினைச்சி சந்தோஷமா இருக்கு....சீக்கிரம் ஐஸ் க்ரீம சாப்பிடு இல்லாட்டி உருகப் போகுது" என்று அவள் அன்று நடந்ததைக் குறிப்பிடவும் சரண் சிரித்தவாறே ஐஸ் க்ரீமை உண்ணத் துவங்கினான். அப்போது நியதியின் கைபேசிக்கு சாராவிடமிருந்து அழைப்புவந்தது.

அதை எடுத்தபோது, "நியதி, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சீக்கிரம் வா" என்று அழைக்க, "ஓகே மேடம்" என்று நியதியும் பதிலளித்துவிட்டு கைபேசியை அப்படியே டேபிளில் வைத்தாள். அருகிலிருந்த சரண், "யாரு?" என்று கேட்க "மேடம் கூப்புடுறாங்க" என்று எழுந்தாள். உடனே, "இந்த ராட்சசிக்கு வேற வேலையே இல்லையா? அன்னைக்குதான் நிம்மதியா இருக்கவிடல இன்னைக்கும் அப்படியே பண்றா? இவ்வளவு நேரம் வேலைய முடிச்சிட்டு இப்பதான் உட்கார்ந்திருக்கோம் அதுக்குள்ள கூப்டா. அன்னைக்கு சொன்னேன்ல இவா சி.இ.ஓ.வா இருந்தா அந்த கம்பெனி திவாலாகிடும்னு அதே மாதிரி இன்னைக்கு நடந்திருக்கும் ஆனா நீ காப்பாத்தீட்ட. நல்லவேள..." என்று சரண் நையாண்டி செய்தான்.

"டேய் வாய மூடு. ஒழுங்கா பேசாம வா" என்று நியதி சொல்ல அவனும் அவளைப் பின்தொடர்ந்தான். சற்று தூரம் சென்றதும் தன் கைபேசியை மறந்து டேபிளில் வைத்தது நினைவுவர விரைந்து எடுக்கச் சென்றாள். அதை எடுத்தபோது அதில் சாராவின் அழைப்பு அப்போதும் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தவுடன் பயந்து அந்த அழைப்பை துண்டித்தாள்.
WhatsApp Image 2025-02-25 at 9.53.18 PM.jpeg
'டேய் சரண் இவ்வளவு நேரம் நீ பேசுனத மேடம் கேட்டாங்களான்னு தெரியல. கேட்டிருந்தா நீ அவ்வளவு தான்... கண்ணா நீதான் சரண காப்பாத்தணும்' என்று மனதில் நினைத்தவாறு தன் கைபேசியுடன் சென்றாள்.

இருவரும் சாராவின் அருகில் வந்தபோது, அவள் ஆரியனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவர்களைக் கண்டதும், "வர்தன் கார்பரேட்ஸ் அண்ட் சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்சோட அக்ரிமெண்ட் பேபர்ஸ்ஸ ரெடி பண்ணீரு நியதி. நாளைக்கு காலைல நம்ம கம்பெனில மிஸ்டர் வர்தன் வந்து சைன் பண்ணுவாரு. ஓகே?" என்று கேட்க நியதியும், "ஓகே மேம்" என்று மட்டும் கூறினாள். "நீங்க பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க" என்று சாரா சொன்னதும் நியதி சரணை ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் அவனோ நியதியை அங்கிருந்து அழைத்துச் செல்வதிலேயே மும்மரமாக இருந்தான். 'நல்ல வேள மேம் சரண் பேசுனத கேக்கல போல. சரண் தப்பிச்சான்' என்று நியதி தன் மனதிற்குள் நிம்மதியடைந்தாள்.

அதே சமயம் சாரா, ‘நானா ராட்சசி. இந்த ராட்சசி என்ன பண்ணுவான்னு பாரு’ என்று நினைத்தவள் சரண் இடறி விழுவதற்காக தன் காலை அவன் வரும் வழியில் சட்டென நீட்டினாள்.
WhatsApp Image 2025-02-25 at 6.40.02 PM.jpeg
அதிர்ஷ்டவசமாக தன்னையறியாமலே, சரண் சாரா விரித்த வலையில் விழவில்லை. அவன் அவளைத் தாண்டி சென்றுவிட்டான். இதை சற்றும் எதிர்பாராத சாரா ஏமாற்றமடைந்தாள். 'ச்ச அந்த ராஸ்கல் தப்பிச்சிட்டானே...' என்று தன் மனதிற்குள் நினைத்தவள் நிராசையை அடைந்தாள். ஆனால் அவையனைத்தையும் அவனுக்கு பின்னே வந்த நியதி கவனிக்கவில்லை.

அவள் சாராவின் கால் இடறி அவளருகே அமர்ந்திருந்த ஆரியனின் மீது விழுந்தாள். அவள் தன் இரு கைகளையும் அவனுடைய தோள்களில் வைத்து அப்படியே விழுந்தாள்.
WhatsApp Image 2025-02-25 at 9.55.29 PM.jpeg
அவளுக்கும் அவனுக்கும் சிறு இடை வேளை மட்டுமே இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு இருக்க அப்படியே நிமிடங்கள் சில கடந்தன. நியதியின் இதயத்துடிப்பு பந்தயக்குதிரையின் வேகத்தை மிஞ்சியது. இதுவரையில் ஆரியனை இவ்வளவு அருகில் காணாத நியதி, இன்று அவனை மிகவும் அருகில் காணவும் அவளுடைய முகம் நாணத்தால் சிவந்தது. ஆரியனும் நியதியை ரசித்தவாறே தன்னுடைய கண்களை அவளிடமிருந்து அகற்றாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான்.

சுற்றியிருந்த அனைவரும் நியதி, ஆரியன்மீது விழுந்ததைக் கண்டுவிக்கித்து நின்றனர். பார்கவ் தன்னுடைய சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்க ரஞ்சித் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அப்படியே திகைத்து நின்றான். சாராவோ, 'நாம ஒரு ஸ்கெட்சு போட்டா இங்க வேற என்னவோ நடக்குது....பரவா இல்ல இதுவும் நல்லாதான் இருக்கு' என்று நினைத்தவாறு அவர்களையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். முன்னே சென்ற சரண் யாரோ விழும் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தான். நியதி ஆரியனின் மீது விழுந்திருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியிலிருந்த அவனுடைய முகம் பின் கோபத்தால் சிவந்தது.

அவன், "நியதி" என்று கோபத்துடன் அழைக்க நிதர்சனத்திற்கு வந்தவளாக சட்டென அவனைவிட்டு விலகி நின்றாள். சரண் அவள் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து விரைந்து அழைத்துச் சென்றான். ஆரியன் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருக்க சாராவோ, ‘நல்ல சிட்டுவேஷன கெடுத்துட்டான். ராஸ்கல். ச்ச...' என்று சரணை மனதினுள் திட்டினாள்.

சரண் நியதியை தனியே அழைத்துவந்து, "என்ன நிதி பாத்து வரக் கூடாது" என்றதும் அந்த அதிர்ச்சியிலிருந்து சற்றும் மீளாதவளாக அப்படியே நின்றுகொண்டிருந்தாள். நிதர்சனத்திற்கு வந்தவளுக்கு ஏதோ புரிய, "சரண் ஒருவேள நீ பேசுனத அவங்க கேட்ருப்பாங்களோ?" என்று வினவியபோது, "யாரு எத கேட்ருப்பாங்க?" என்று புரியாமல் கேட்டான். அவள் நடந்த அனைத்தையும் விளக்க, "ஆமா நிதி அவா கண்டிப்பா கேட்ருக்கா. நான் விளணுங்கிறதுக்காக தான் கால அப்படி வச்சிருந்திருக்கா. ஆனா நீ விழுந்துட்ட. இவ இருக்காளே...கையையும் காலையும் வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டா. என்னைக்கு என்கிட்ட வாங்கிக்கட்டிக்க..." என்று கூறிக்கொண்டிருந்தவன் அப்படியே பேசாமல் நின்றான்.

சரண் எங்கோ வெறித்துக்கொண்டிருப்பதை பார்த்த நியதியும் அதே இடத்தை நோக்கியபோது அவளுடைய கண்களில் வெறுப்பு தெரிந்தது. ஏனென்றால், அன்று பணத்துக்காக சரணை ஏமாற்றிய அதே மாயா கையில் வொயின் கிளாஸுடன் ஸ்டைலாக அவர்களைப் பார்த்தவாறே அங்கு அமர்ந்திருந்தாள். அவர்கள் தன்னைக் காண்கிறார்கள் என்று தெரிந்ததும் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்களை நோக்கி வந்தாள். "ஹே வாட் அ சப்ரைஸ். ஹொவ் ஆர் யூ சரண்?" என்று தன்னுடைய கையை நீட்ட, நியதி அதை தட்டிவிட்டு, "நீ இல்லைல அவன் ரொம்ப நல்லா இருக்கான்...ஆமா நீ இங்க என்ன பண்ற?" என்று பதிலுக்கு அவளைக் கேட்டாள்.
WhatsApp Image 2025-02-25 at 9.16.59 PM.jpeg
"ஏன் நீங்க மட்டும் தான் பி.ஏ.வா இருப்பீங்களா? நாங்க இருக்க மாட்டோமா?" என்று மாயா கேட்க நியதியோ, "உன் வேலைய பத்திதான் எங்களுக்கு நல்லா தெரியுமே" என்று நக்கலாக சிரித்தாள். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று தெரிந்ததும் மாயாவின் முகம் கடுகடுக்க, "மைன்ட் யுவர் வேர்ட்ஸ் நியதி" என்று கோபமாகச் சீறினாள். நியதியும் விடாமல், "போடீ" என்று அவளைப் பார்த்து கூறிவிட்டு சரணிடம் திரும்பி, "வா சரண் நம்ம போகலாம். கண்டவங்க கூட நமக்கென்ன பேச்சு" என்று அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

அவர்கள் இருவரும் அந்த பார்ட்டியின் ஓரத்தில் யார் கண்களுக்கும் தென்படாமல் அமர்ந்துகொண்டனர். சரண் தனக்கு தெரிந்த நபரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றான். தனித்துவிடப்பட்ட நியதி அனைவரையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அங்குவந்த பணியாள் ஒருவன் அவளிடம் பழச்சாறை நீட்ட, அவளும் அதை எடுத்துக்கொண்டாள். இவை அனைத்தையும் தொலைவிலிருந்து கூரூரப்பார்வையுடன் பார்த்தவாறே மாயா நின்றுகொண்டிருந்தாள். 'என்னயாடி அவமானப்படுத்துன? இன்னும் கொஞ்சநேரத்துல யாரு அசிங்கப்படப்போறான்னு பாரு' என்று ஏழனமாகச் சிரித்தாள்.
WhatsApp Image 2025-02-25 at 10.31.56 PM.jpeg
நியதி கையில் வைத்திருந்த பழச்சாறு மாயாவால் அனுப்பப்பட்டது. அவள் நியதியை பழிவாங்குவதற்காக போதை மாத்திரையை அதில் கலந்திருந்தாள். அதை குடித்து நிதானமில்லாமல் நியதி அனைவரின் முன்னும் அவமானப் படவேண்டும் என்பது தான் அவளுடைய குறிக்கோளாக இருந்தது. நியதி பழச்சாற்றை குடிப்பதற்காக தன்கையில் எடுத்தாள்.
WhatsApp Image 2025-02-25 at 10.15.24 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
****************************************************************************

தங்களுடைய பொன்னான கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம் சகோஸ்...

Link
https://www.narumugainovels.com/threads/21888/


 

Krishna Tulsi

Moderator
மாயம் 21

'நியதி' என்று அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, சாரா அங்குவந்து நின்றாள். அவள் நியதியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து, "தேங்க யூ சோ மச் நியதி. ஆமா, உனக்கு எப்படி இந்த ஐடியா தோணுச்சி?" என்று சாரா வினவினாள்.
WhatsApp Image 2025-02-28 at 8.44.23 PM.jpeg
அதற்கு ஒரு சிறு முறுவலுடன், "மேடம் நான் ஒரு வருஷம் ஆரியன் சார் கிட்ட ஒர்க் பண்ணீருக்கேன். அவர் எந்த சிட்டுவேஷன, எப்படி சமாளிப்பாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் உங்களுக்குச் சொன்னேன்" என்று கூறினாள். சற்று அமைதிக்குப் பின் சாரா, "சாரி நியதி நான் ஆரியோட ஃரெண்டுன்னு உன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு" என்று மன்னிப்பு கோர மற்றவளோ, "பரவா இல்ல மேம்" என்று மட்டும் கூறினாள்.

"என்ன சாரான்னே கூப்பிடு" என்று சிறு புன்னகையுடன் அவள் கூறவும், "ஓகே மேட...சாரா" என்று நியதி சொல்ல இருவரும் நகைத்தனர். பின் இருவரும் தங்களைப் பற்றி பேசி கொண்டிருந்தனர். அச்சமயம் சாராவுக்கு இருமல் வந்தது. அருகிலிருக்கும் பணியாளிடம், குடிப்பதற்கு ஏதாவது எடுத்துவரச் சொல்லலாம் என்றால் அங்கு யாரும் இல்லை. உடனே நியதி தன் கையில் வைத்திருந்த பழச்சாற்றை சாராவிடம் கொடுக்க அவள் அதைப் பருகினாள்.
WhatsApp Image 2025-02-28 at 8.47.55 PM.jpeg
தொலைவிலிருந்து இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மாயா அந்த ஜுசை சாரா அருந்தியதும் நிராசையுடன் அங்கிருந்து அகன்றாள். பின் சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சாராவுக்கு ஏதோ செய்ய ஆரம்பித்தது.

அதை கவனித்த நியதி, "ஆர் யூ ஓகே சாரா?" என்று வினவ அவளும், "ம்ம்" என்று மட்டும் தலையசைத்தாள். அவள் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்த அனைவரும் டி.ஜே. பாட்டிசைக்க நடனமாடத் துவங்கினர். அப்போது விராஜ், நியதியின் அருகில் வந்து, "ஹலோ மிஸ்ஸஸ்....சாரி சாரி மிஸ் நியதி எப்படி இருக்கீங்க?" என்று மறைமுகமாக அவளை வார்த்தைகளால் குத்தினான்.
WhatsApp Image 2025-02-28 at 10.53.52 PM.jpeg
அதை சற்றும் பொருட்படுத்தாத நியதி, "ஐ அம் ஃஐன்" என்று மட்டும் பதிலளித்தாள். அங்கு அனைவரும் நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த விராஜுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவன் ஆரியனை வெறுப்பேற்றுவதற்காக, "ஷால் வீ டான்ஸ்?" என்று கையை நீட்டி நியதியை தன்னுடன் ஆட வருமாறு அழைத்தான். நியதி தயங்கியவாறே பார்த்துக்கொண்டிருக்க அவன் கைமீது, "யா சுயர்" என்று சாரா தன் கையை வைத்தாள். அவள் செய்ததை பார்த்த நியதி ஆச்சரியம் அடைந்தாள்.
WhatsApp Image 2025-02-28 at 6.14.08 PM.jpeg
ஆனால் விராஜோ, ‘ஒரு மீனுக்கு தூண்டில் போட்டா இன்னொரு மீன் தானா வந்து மாட்டுதே' என்று மனதில் நினைத்தவன் தன் முகத்தில் புன்னகைமாறாமல் அவளை அழைத்துக்கொண்டு நடனமாடும் இடத்திற்குச் சென்றான். விராஜும், சாராவும் நடனமாடத் துவங்கினர். அவள் போதையில் நிதானமில்லாமல் இருக்கிறாள் என அங்கிருந்த யாரும் அறியவில்லை. ஆரம்பத்தில் குத்துமதிப்பாக ஆடிய சாரா சில நேரம் கழித்து தள்ளாடத் துவங்கினாள்.

நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது விராஜின் ஷூ காலில் தன்னுடைய ஹை ஹீல்ஸால் பலமுறை மிதித்தாள். அவன் 'அவுச்' என்று லேசாக கத்தியபோது, "சாரி...தெரியா....ம...பட்ரு...ச்சு" என்று குழைந்து உளறினாள். அவளுடைய பேச்சில் சில மாற்றங்கள் தெரிய விராஜ் அவளை உற்று நோக்கினான். அப்போதுதான் அவள் நிதானத்தில் இல்லை என்பது தெரியவந்தது. ‘நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு இதை எப்படி விடறது…' என்று தன் மனதில் நினைத்தவன் நக்கலாகச் சிரித்தான்.

அப்போது நிதானமில்லாத சாராவும் அவனை உற்று நோக்கி, "என்..ன...பாக்...குற?" என்று தள்ளாடிய குரலில் கேட்க அவன் சட்டென பின்னடைந்தான். 'ஒன்றும் இல்லை' என்பதுபோல் தலையசைத்துவிட்டு சாராவை அவமானப் படுத்தவேண்டும் என்று சிந்தித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே அவன், அவள் கையைப் பிடித்தவாறு சுழற்றி விட்டான்.
WhatsApp Image 2025-02-28 at 10.16.33 PM.jpeg
அவள் வேகமாக சுழன்றுகொண்டிருக்கும்போது, அவன் கையை விட்டதும் சாரா அங்கு நின்றுகொண்டிருந்த சரணின் மீது பொத்தென்று விழுந்தாள்.
WhatsApp Image 2025-02-28 at 10.29.57 PM.jpeg
தன் மீது மோதியவளை சரண் தாங்கிப் பிடித்தான். சாரா கீழே விழவில்லை என்றதும் கடுப்பில் சற்று பின்னடைந்த விராஜ், வெயிட்டர் மீது மோதியபோது அவன் கையிலுள்ள ட்ரிங்க்ஸ் அனைத்தும் விராஜின் மீது கொட்டியது. அவனுடைய கோபம் இன்னும் அதிகரிக்க அந்த பணியாளின் சட்டைக் காலரைப் பிடித்தான். சுற்றி இருந்த அனைவரும் தன்னைப் பார்க்கின்றனர் என்று தெரிந்தும், கோபத்துடன் அவனை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக அகன்றான்.

இங்கு சரண் மீது விழுந்த சாரா எழாமல் அப்படியே இருக்கவும் அவனுக்கு கடுப்பானது. உடனே, "மேம் எந்திரிங்க எல்லாரும் பாக்குறாங்க" என்று தாழ்ந்த குரலில் கூற சாரா சிரிக்க ஆரம்பித்தாள். தன்னை எப்போதும் எரித்துவிடுவதுபோல் பார்க்கும் சாரா இன்று சிரிப்பதை பார்த்ததும் சரணுக்கு சந்தேகம் எழுந்தது.

உடனே அவன்,"குடிச்சிருக்கீங்களா?" என்று கேட்க அவளோ, "ஆ...மா….குடிச்...சேன்" என்று ராகத்துடன் பிதற்றினாள். அதைப் பார்த்ததும் சாரா குடிபோதையில் இருக்கிறாள் என்பதை உறுதிசெய்தான். என்ன செய்வது என்று பார்த்துக்கொண்டிருந்தபோதே நியதி அங்கு விரைந்து வந்தாள். "சரண் மேம்க்கு என்ன ஆச்சு?" என்று பதறினாள். உடனே அவனோ, "ம்ம், மேம் ஃபுல் போதையில இருக்காங்க" என்று கூறியதும் நியதி புரியாமல் விழித்தாள்.
WhatsApp Image 2025-02-28 at 10.14.31 PM.jpeg
"போதையா?" என்று கேட்டவுடன், "ஆமா நல்லா குடிச்சிருக்கா...பாரு" என்று நியதியிடம் அவளை சுட்டிக்காட்ட சாரா நிதானமில்லாமல் உளறுவது தெரிந்தது. உடனே அவள் சரணின் உதவியோடு சாராவை யாரும் அறியாவண்ணம் ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றாள். "இவ்வளவு நேரம் நல்லா தானடா இருந்தாங்க. திடீர்னு என்ன ஆச்சு?" என்று நியதி குழம்ப, "யாருக்கு தெரியும், சையிடு கேப்ல போய் ஒரு கட்டிங் போட்ருப்பா. குடிகாரி..." என்று அவளைப் பார்த்து திட்ட சாராவோ "ஆமா...ஆமா..", என்று தன் கையை அசைத்தவண்ணம் சிரித்தவாறே அவனைப் பார்த்துக் கூறினாள். "பாரு அவளே ஒத்துக்கிட்டா" என்றவனிடம், "இல்லடா நிதானமாத்தான் இருந்தாங்க. அதுக்கப்பறம் நான்..." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நியதிக்கு ஏதோ தோன்றியது.

"அவங்க ஜுஸ் குடிக்குறதுக்கு முன்னாடி நல்லா தான்டா இருந்தாங்க ஆனா அதுக்கப்பறம் ஒரு மாதிரியாயிட்டாங்க" என்று நியதி கூறியதும், "என்ன?...ஜுஸா?" என்று சரண் புரியாமல் கேட்டான். "ஆமா நான் வச்சிருந்த ஜுஸ மேம் குடிச்சிட்டாங்க...அப்ப...அதுல ஏதோ கலந்திருக்கு" என்று நியதி சொன்னதும் சரணுக்கு மெல்ல புரியவர கோபம் தலைக்கேறியது.

உடனே, "இந்த வேலைய யாரு செஞ்சிருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று கூறி சுற்றிமுற்றிப் பார்த்தான். அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று அறிந்ததும், "மாயா" என்று அவளும் கூறினாள். "ஆமா அவளே தான்...பாத்தியா இந்த சகுனி வேலைய பாத்துட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டா...அவள" என்று அங்கிருந்து செல்லவிருந்தான். அவனைத் தடுத்து, "அவள விடு இப்போ இவங்கள என்ன செய்ய?" என்று நியதி கேட்டதற்கு, "இவள அப்படியே விட்டுட்டு வந்துரு" என்று கூறியதும் அவனைப் பார்த்து முறைத்தாள்.

உடனே அவன், "சரி...அப்போ இவள என்ன பண்ண சொல்ற?" என்றதற்கு நியதி யோசிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு ஒன்று தோன்றவும், "யாருக்கும் தெரியாம இவங்கள உன் கார்ல அவங்க வீட்ல விட்டுருடா" என்று கூறவும், "நானு...இவள...போவியா..." என்று சரண் மறுத்தான். மேலும், "உன்ன இங்க தனியா விட்டுட்டு போகவா? நோ சான்ஸ். இப்பவே மணி ரொம்ப நேரமாகிடுச்சி. என்னால முடியாது" என்று கூறினான்.

நியதி பலமுறை கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, "சரி நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள வீட்ல தள்ளிட்டு வந்துடறேன். நீ இங்க வெயிட் பண்ணு. நான் உன்ன கூட்டிட்டு போறேன்" என்று ஒப்புக்கொண்டான். அவர்கள் இருவரும் யாரும் அறியாவண்ணம் சாராவை பின் வாசல் வழியாக வெளியே அழைத்துவந்தனர். அவளை சரணுடைய காரில் அமரவைக்கவும் அவன் அவளை அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றான்.

பார்ட்டி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். வெகுநேரமாக அந்த ஹோட்டலின் வெளியே நின்ற நியதி சரணுக்கு கால் செய்தபோது 'அவுட் ஆஃ நெட்வர்க் கவரேஜ்' என்று வர கேப் மூலமாக விடுதிக்குச் செல்ல முடிவெடுத்தாள்.
WhatsApp Image 2025-02-28 at 10.21.57 PM.jpeg
கேபை புக் செய்வதற்காக தன் கைபேசியை எடுத்தபோது அவள் முன்பு ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது.

யாருடையது என்று அறிந்திருந்த நியதி அதைப் பார்த்தவாறு அப்படியே நின்றாள். அதிலிருந்து பார்கவ் விரைந்து இறங்கி, "மேடம் சார் உங்கள கார்ல ஏறச்சொல்றாங்க" என்றதும் அவளோ, "பரவா இல்ல" என்று கூறி வர மறுத்தாள்.
WhatsApp Image 2025-02-28 at 10.26.04 PM.jpeg
அப்போது காரின் பின் கதவிலுள்ள கண்ணாடி கீழே இறங்க ஆரியன் உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்தது. "எம்ப்ளாயியோட சேஃடிக்கு அவங்களோட ஓனர் தான் பொறுப்பு...அதோட மிட் நைட்ட தாண்டிருச்சி. எந்த கேபும் கிடைக்காது. நம்ம அவங்கள ட்ராப் பண்ணீரலாம் பார்கவ்" என்று ஆரியன் பார்கவைப் பார்த்துக் கூறினான்.

பார்கவ் நியதியைப் பார்த்து, 'ப்ளீஸ் வந்து ஏறுங்க' என்பதுபோல் சைகை செய்ய அவளும் காரின் பின் சீட்டில் ஆரியனுடன் அமர்ந்துகொண்டாள். நள்ளிரவில் வானத்தில் நிலவு தவழ்ந்துகொண்டிருக்க காற்றைக் கீழ்த்துக் கொண்டு ஆரியவர்தனின் கார் வேகமாகச் சென்றது. இருவருக்கும் இடையே மௌனம் நிலவியது. அப்போது பார்கவ் முன் கண்ணாடி வழியாக ஆரியனைப் பார்த்தான். ஆரியனும் அவனை அந்த காண்ணாடியில் பார்த்து, 'என்ன?' என்பது போல் புருவத்தை ஏற்றி இரக்க பார்கவ் 'ஒன்றுமில்லை' என்பதுபோல் தலையசைத்துவிட்டு குனிந்துகொண்டான். நியதி வெளியே பார்த்துக்கொண்டிருக்க ஆரியனும் மறுபுறம் திரும்பியிருந்தான்.

இருவருக்கும் இடையே நிறைய பேசவேண்டியது இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். சற்றுநேரம் அங்கு இறுக்கம் பரவியிருந்தது. அதை தவிர்க்க விரும்பிய ஆரியன், "பார்கவ் எஃ.எம். ஆன் பண்ணு" என்று கூற மற்றவனும் அப்படியே செய்தான்.

அப்போது அதில் பிரபலமான எஃ.எம். ஸ்டேஷனிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அடுத்த பாட்டை போடுவதற்கு முன் அந்த ரேடியோ ஜாக்கி, "அடுத்ததா நாம கேக்கப் போற பாடல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிஞ்ச கப்பிள்ஸ் ரொம்ப நாள் கழிச்சி மறுபடியும் மீட் பன்னா எப்படி இருக்கும்? அங்க வார்த்தைகளுக்கு இடம் இருக்காது….ஆனா மனசுல உள்ள உணர்வுகள் கண்கள் வழியா பேசும். அப்படி என்ன பேசும்? ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலிருந்து 'அன்பே சுகமா' பாடல் உங்களுக்காக..." என்று கூறி முடிக்க அந்த இறுக்கமான சூழலை உடைத்துக் கொண்டு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

'அழகே சுகமா,

உன் கோபங்கள் சுகமா...'

என்று ஆணின் குரல் கேட்கவும் ஆரியன் நியாதியை நோக்கினான். அப்போது அவள் மௌனமாக கற்சிலைபோல் அமர்ந்திருந்தாள். பின்,

'அன்பே சுகமா

உன் தாபங்கள் சுகமா....'

என்று பெண்ணின் குரல் கேட்கவும் நியதி அவனை நோக்கினாள். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வர காத்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடல் அவர்கள் இருவரின் மனதையும் பிரதிபலித்தது.
WhatsApp Image 2025-02-28 at 10.39.41 PM.jpeg
அப்படியே சில வினாடிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அவர்கள் வாய்திறந்து எதுவும் பேசவில்லை என்றாலும் கண்கள் ஆயிரம் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டன. அவனுடைய வலிய கரங்கள் அவளுடைய மெல்லிய கரங்களைப் பற்றின. அதை சற்றும் எதிர்பாராத நியதி நாணிச் சிவந்தாள். சிறிதுநேரம் அப்படியே கடந்தது. இந்த நிமிடங்கள் இப்படியே நீண்டுவிடாதா என்று நினைத்தபோது கார் நியதி தங்கியிருந்த விடுதியின் முன் வந்து நின்றது.

உடனே இருவரும் நிகழ்காலத்திற்கு வந்தவர்களாய் ஆரியன் அவளுடைய கையை சட்டென விடுவிக்க அவள் விரைந்து காரிலிருந்து இறங்கினாள். "தேங்க் யூ சார்" என்று ஆரியனிடம் கூற, "போகலாம்” என்று அவன் ஓட்டுனரிடம் கூறினான். கார் கிளம்பியதும் நியதி விடுதிக்குள் சென்றாள். ஆரியனுக்கு தான் தங்கும் இடம் தெரிந்திருப்பதை நினைத்து ஆச்சரியமடைந்தாள். இங்கு இவ்வாறு இருக்க அங்கு தன்னிடம் சிக்கிய சரணை சாரா படாதபாடு படுத்திக்கொண்டிருந்தாள்.

மாயங்கள் தொடரும்...

**********************************************************************

தங்களுடைய பொன்னான கருத்துக்களை இந்த கருத்துத் திரையிலும் பதிவிடலாம் சகோஸ்

Link
https://www.narumugainovels.com/threads/21888/

 

Krishna Tulsi

Moderator
மாயம் 22
சாராவின் வீடு அந்த ஹோட்டலிலிருந்து வெகு தொலைவில் இருந்ததது. சரண் காரை ஓட்டிக்கொண்டிருக்க சாரா அவ்வப்போது ஏதாவது கத்திக்கொண்டே வந்தாள். சில நேரம் ஸ்டீரிங்கை திருகி சரணை தடுமாறச் செய்தாள். இறுதியாக காரிலுள்ள மியூசிக் பிளேயரில் பாட்டை அதிக ஒலி வைத்து தானும் அதனுடன் சேர்ந்து பாடியவாறு ஆடிக்கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்த சரண், "ஸ்டாப் இட்" என்று கத்தியவாறு காரை நிறுத்தினான். அதில் சற்று பயந்த சாரா எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்தாள். அவன் பாட்டை நிறுத்திவிட்டு, "ஏய் வாய மூடு...உக்காரு....ஏன் ஆட்டமா ஆடுற?....இப்படியே செஞ்சீனா உன்ன பிடிச்சி வெளிய தள்ளீறுவேன். வீட்டுக்கு போறவரைக்கும் ஏதாவது செஞ்ச..." என்று கூறும்போதே அவள் தன் வாய் மீது கைவைத்துக்கொண்டு ஒரு சிறுகுழந்தையைப் போல் அமர்ந்துகொண்டாள். வீடு செல்லும்வரை அவள் எதுவும் பேசவில்லை.
Gemini_Generated_Image_peznelpeznelpezn.jpg
சரணின் கார் சாராவினுடைய வீட்டின்முன் வந்து நின்றது. அவன் அவளை இழுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றபோது அதைப் பார்த்த முதன்மைப் பணியாள் ஆச்சர்யம் அடைந்தாள். அவள் விரைந்து அவனருகே வந்து சாராவை பிடிக்க இருவருமாக சேர்ந்து அவளை ஹாலிலுள்ள சோஃவில் அமர வைத்தனர். பின், "பாப்பாக்கு என்ன ஆச்சு?" என்று அவள் வினவ அவனோ, "இவங்க குடிச்சிருக்காங்க" என்று கோபத்துடன் கூறினான்.

ஆனால் அந்தப் பணியாளோ, "பாப்பாக்கு குடிக்கிற பழக்கமே கிடையாதே" என்று கூறியதும், "தெரியல அவங்க எதயோ குடிச்சிட்டாங்க" என்று விட்டேற்றியாக பதிலளித்தான். உடனே அவள், "நீங்க யாரு?" என்று கேட்டதற்கு, "நான் சரண். இவங்க பி.ஏ.....சரி நான் கிளம்புறேன்" என்று கூறி அங்கிருந்து விரைந்து வெளியே வந்தான். கோட்பாக்கட்டில் கைவிட்டு கார் சாவியை தேடியபோது அது அங்கு இல்லை. அவளுடைய வீட்டு நடைபாதையில் விழுந்திருக்குமோ என்று எண்ணி அங்கு சாவியைத் தேடத் துவங்கினான்.

அங்கும் கிடைக்காததால் வீட்டினுள் தேடுவதற்காக நுழைவாயிலை அடைந்தபோது சாராவின் ஒற்றைக் ஹீல்ஸ் அவனை நோக்கி பறந்து வந்தது. முதலில் திகைத்தவன் சட்டென குனிந்ததும் அது வீட்டின் வெளியே விழுந்தது.
WhatsApp Image 2025-03-02 at 6.15.27 PM (1).jpeg
அதைப் பார்த்த சாரா, "ஜஸ்ட் மிஸ்" என்று கூற அவனோ அந்த ஐந்து அங்குலம் ஹீல்ஸைப் பார்த்து, ‘ராட்சசி….கொஞ்ச நேரத்துல என்ன கொன்றுப்பாட்டா. நல்லவேள தப்பிச்சிட்டேன்' என்று அரண்டு நின்றான்.

அவனை அங்கு மீண்டும் பார்த்ததும், "என்ன தம்பி?" என்று அந்த பணியாள் வினவ, “கார் சாவிய காணும். அதான் இங்க இருக்கான்னு..." என்று அவன் கூற இருவரும் சாவியை தேடினர். அது அவளருகில் சோஃபாவில் இருக்க அதை சரணுக்கு எடுத்துக்கொடுத்தார்.

அவன் அங்கிருந்து செல்லவிருந்தபோது அந்த பணியாள், "தம்பி பாப்பாவ தனி ஆளா தூக்க முடியல. அதனால அவங்கள பெட்ரூம் வரைக்கும் கொண்டுவந்து விட்டீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும். ப்ளீஸ் தம்பி" என்று கெஞ்சினார். முதலில் தயங்கியவன் பின் ஒப்புக்கொள்ள இருவரும் அவளை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றனர்.
WhatsApp Image 2025-03-03 at 1.45.26 PM.jpeg
அப்போது அந்த பணியாளின் கைபேசி ஒலிக்க, "தம்பி இதோ ஒரு நிமிஷம். நான் இப்போ வந்துடறேன்" என்று சாராவை அவனிடம் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

சரண் அவளை படுக்கைக்கு அழைத்துவந்தபோது அவளுடைய முகபாவனை மெல்ல மாற, "ஆர் யூ ஆல்ரைட்?" என்று வினவினான். அவள் பதில் எதுவும் கூறாமல் அப்படியே இருக்க அவளை தன் முன் நிறுத்தி, "என்னடி செய்யிது? சொல்லித் தொல...வாயில என்ன வச்சிருக்க…" என்று அவளை உலுக்கினான். அவனை மெல்ல தலைநிமிர்ந்து பார்த்தவள் சட்டென அவன்மீது வாந்தி எடுத்தாள். அவன் மறுகணமே அவளை படுக்கையில் தள்ளிவிட்டு, "லூசு அறிவிருக்கா உனக்கு. வாந்தி வருதுன்னு சொல்லவேண்டியதுதான....என் புது கோட் ஃபுல்லா பாழாயிருச்சி, ராட்சசி..." என்று திட்டினான்.

அப்போது, "நொவ் ஆல்ரைட்" என்று கட்டை விரலை 'தம்ப்ஸ் அப்' காட்டியவாறு அப்படியே படிக்கையில் பொத்தென விழுந்தாள்.
Gemini_Generated_Image_u31w1bu31w1bu31w.jpg
அங்கு வந்த பணியாள் அவனுடைய கோலத்தைப் பார்த்து, "ஐயோ மன்னிச்சிருங்க தம்பி...இப்படி ஆயிருச்சே....நீங்க போய் பாத்ரூம்ல கழுவிக்கோங்க" என்று கூற தன்னுடைய கைக்கடிகாரத்தை அங்குள்ள டேபிளில் கழற்றிவைத்துவிட்டு சுத்தம்செய்துகொள்ள குளியலறைக்குள் புகுந்தான். வெளியே வந்தபோது சாரா நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து, 'ராட்சசி பண்றதெல்லாம் பண்ணீட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படி தூங்குது பாரு....இப்ப அமைதியா தான இருக்க, பின்ன ஏன் ஆபீசுல மட்டும் அந்த ஆட்டம் ஆடுறா...' என்று நினைத்தான். அப்போது அவளுடைய சுருள் கேசம் காற்றுக்கு நெற்றியில் வந்து விழுந்தது. அவள் தூக்கத்திலும் அதை தன் விரல்களால் காதுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டாள். ஒரு சிறு குழந்தையைப் போல அவ்வப்பொது அவளுடைய இதழ்கள் லேசாக முறுவலிக்க, அவன் தன்னையறியாமல் புன்னகைத்தான்.
WhatsApp Image 2025-03-03 at 9.52.47 AM.jpeg
'ஏய் சரண் ஒரு பொண்ணு தூங்கும்போது இப்படியா பாப்ப? உனக்கு மேனர்ஸ் இல்ல?' என்று அவனுடைய மனசாட்சி திட்ட, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் காலை சாரா எழுந்தபோது அவளுக்கு தலை மிகவும் கனத்தது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தபோது தன் அறையில் இருப்பதை உணர்ந்தாள். 'எப்படி இங்க வந்தோம்?' என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அறையினுள் பணியாள் நுழைந்தாள். அவளைப் பார்த்து, "ராதாமா நான் எப்படி இங்க வந்தேன்?" என்று கேட்க, "நீங்க எங்கமா வந்தீங்க. உங்கள இங்க வந்துல்ல விட்டுட்டு போனாரு" என்று பதிலளித்தாள். “யார்?” என்றபோது, “சரண்ன்னு சொன்னாரு” என்று பதிலளித்தாள்.

"ஆனாலும் பாப்பா அவர படாதபாடு படுத்தீட்டீங்க" என்று கூறவும் சாரா அவளைப் புரியாமல் நோக்கினாள். இரவு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறவும், 'ஓ மை காட். இப்படியா பண்ணேன்...போச்சு....என் இமேஜ் ஃபுல் டேமேஜ் ஆயிருச்சு. போயும் போயும் இவன் முன்னாலயா நான் அப்படி நடந்துக்கணும்...ச்ச...' என்று மனதினுள் தன்னையே கடிந்துகொண்டாள். அவளுக்கு தன் மீதே கோபம் எழ அருகிலிருந்த மேஜையிலுள்ள ஒரு பொருளை வீசி எறிந்தாள். பின் குளித்துவிட்டு விரைந்து அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

இங்கு அலுவலகத்தில் கான்ட்ராக்டிற்கு உரியவற்றை சரணும், நியதியும் தயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது சரண் முந்தையநாள் தான் பட்ட அவதியைக் கூறிக்கொண்டே வர நியதி சிரித்துக்கொண்டே இருந்தாள். அதைப் பார்த்து, "ஏய் உனக்கு என்ன பாத்தா காமெடியா இருக்குல்ல?" என்று கேட்க அவளோ 'ஆம்', 'இல்லை' என்பதுபோல் நாலா பக்கமும் தலையாட்டினாள். பின், "நீ எப்படி நேத்து ஹாஸ்டல்கு போன?" என்று அவன் கேட்டபோது நியதிக்கு முன் இரவு நடந்த அனைத்தும் அவளுடைய மனத்திரையில் ஓட ஆரம்பித்தது.

அப்போது சாரா தன்னுடைய அறையினுள் நுழைவது தெரிய, "ராட்சசி வந்துட்டா" என மெல்ல நியதியிடம் கூறினான். சிறிதுநேரம் கழித்து சரணை தன்னுடைய கேபினுக்கு அழைத்து, "டீல் பேப்பர்ஸ் ரெடியா?" என்று சாரா கேட்க அவனும் 'ஆம்' என்று கூறினான். உடனே, "வர்தன் கார்பரேட்ஸ்ல இருந்து வந்துருவாங்க. சோ பேப்பர்ஸ சீக்கிரம் போட் ரூமுக்கு கொண்டு வந்திரு. மேக் இட் ஃஸ்ட்" என்று கூறி அவனை அவசர படுத்தினாள்.
WhatsApp Image 2025-03-03 at 1.46.44 PM.jpeg
சரண் தன்னுடைய அறைக்கு வந்ததும், "நேத்து எதுவுமே நடக்காதமாதிரி இருக்கா பாரு...ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல...." என்று சாரவைக் கோபத்துடன் கடிந்தான்.

அனைவரும் போட் ரூமில் காத்துக்கொண்டிருக்க ஆரியவர்தன் அங்கு வந்தான். டீலை ஆரியவர்தன் மற்றும் சாரா கையெழுத்திட நல்லபடியாக ஒப்பந்தம் முடிந்தது. பின் சாரா அந்த ப்ராஜெக்ட்டைப் பற்றி விவரிக்க அங்கிருந்த அனைவரும் கவனித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது நியதியின் கண்கள் ஆரியனை நோக்க அவனோ சாரா கூறுவதையே கேட்டுக்கொண்டிருந்தான். பின் நியதி பார்க்காதபோது அவன் அவளை நோக்கினான்.

திடீரென ஆரியன் தன் கையிலிருந்த பேனாவை கீழே தவறவிட்டான். அதை எடுக்க முயற்சி செய்தும், அவனால் முடியவில்லை. அதை கண்ட பார்கவ் விரைந்து எடுக்கச் சென்றான். ஆனால் தொலைவிலிருந்து சாரா அவனைப் பார்த்து 'எடுக்காத...அங்க பாரு' என்று சுட்டிக்காட்ட, அவனும் புரிந்துகொண்டான். அப்போது நியதியும் ஆரியனைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

உடனே அவள் வேகமாக முன்வந்து ஆரியனுக்கு அந்த பேனாவை எடுத்துக் கொடுத்தாள். அவன் அதை வாங்கியபோது அவர்களது விரல்கள் ஸ்பரிசித்தன. மின்சாரம் தாக்கியதுபோல் உணர நியதி தன் கையை சட்டென பின்னிழுத்துக் கொண்டாள்.
_5435bdb2-7599-444f-952a-8482d84eedff.jpg
வெட்கத்தால் அவளுடைய கன்னங்கள் சிவக்க ஆரியன் அதைக் கண்டு புன்னகைத்தான்.

ஒப்பந்தம் நல்லபடியாக முடிய ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். வர்தன் கார்ப்பரேட்ஸ் மற்றும் சங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அந்த ப்ராஜெக்ட்டில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். ப்ராஜக்டை காரணமாகக்காட்டி ஆரியன் நியதியைப் பார்க்க சங்கம் கன்ஸ்டரக்சன்சுக்கு அடிக்கடி வருவதுண்டு. அவ்வப்போது சாராவும் வேலை விஷயமாக நியதியை வர்தன் கார்ப்பரேட்சுக்கு அனுப்பிவைப்பாள்.

இப்படியே நாட்கள் சில கடந்தன. ஒருநாள் நியதி கோவிலுக்குச் சென்றபோது அங்கு தற்செயலாக ரஞ்சித்தின் தாயான கிரிஜாவைச் சந்தித்தாள்.
Gemini_Generated_Image_xm8gy1xm8gy1xm8g.jpg
"நியதி எப்படிமா இருக்க?" என்று அவளை நலம் விசாரிக்க அவளும், "நல்லா இருக்கேன்மா நீங்க?" என்று கேட்டாள். அதற்கு, "ஏதோ இருக்கேன்" என்றவரின் முகத்தில் சோகம் பரவியிருந்தது.

அதைப் பார்த்த நியதி, "என்னமா...என்ன ஆச்சி?" என்று வினவ, "எல்லாம் இந்த ரஞ்சித்தப் பத்திதான்மா. எனக்கும் வயசாயிருச்சி...எனக்கப்பறம் ரஞ்சித்த யாரு பாத்துக்குவான்னு ரொம்ப கவலையா இருக்கு. அவன் எப்ப பார்த்தாலும் வேல வேலன்னே இருக்கான். அதிதி, என் மக மாதிரி. அவளும் திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்ட்டா. இந்த தனிம ரொம்ப கொல்லுதுமா..." என்று வருந்தினாள். பின் கிரிஜா தயங்கியவாறு அவளைப் பார்த்து, "நியதி நீ ஹாஸ்டல்லதான இருக்க, ஏன் எங்க வீட்ல தங்கக்கூடாது? உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைச்சமாதிரியும் இருக்கும் எனக்கும் ஒரு மகள் கிடைச்ச மாதிரி இருக்கும்" என்று கேட்டபோது அவளுடைய முகம் பிரகாசமாக இருந்தது.

"அதுவந்துமா..." என்று அவள் இழுத்தபோது, "என்ன அம்மான்னு தான கூப்பிடுற இந்த அம்மா சொல்றத கேளு.." என்றவர் அவளுடைய பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். அனால் நியதியோ, "நாளைக்கு சொல்லட்டுமா?" என்று கேட்கவும், "ஓ! தாராளமா" என்று உற்சாகத்துடன் கூற நியதி புன்னகைத்தாள்.

இந்த விஷயத்தைப் பற்றி அவள் சரணிடம் அபிப்ராயம் அவன் சிலநிமிடங்கள் யோசித்தான். பின், "ரஞ்சித் சாரோட அம்மா சொல்றதும் சரிதான். ஹாஸ்டலவிடவும் அவங்க வீடு உனக்கு பாதுகாப்பாதான் இருக்கும். அதோட அவங்க உன்ன தன்னோட பொண்ணு மாதிரி பாக்குறாங்க...நமக்கு இந்தமாதிரி அன்பு கிடைக்குறது கஷ்டம். அதனால நீ அங்கயே தங்கு" என்று கூற நியதியும் ஒப்புக்கொண்டாள். அவள் தன்னுடைய முடிவை கிரிஜாவிடம் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அன்று மாலை ரஞ்சித் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீடுதிரும்பியபோது, கிரிஜா ஹாலில் அவனை வரவேற்றாள். "ரஞ்சு நம்ம வீட்டுக்கு ஒரு புதுஆள் வந்திருக்காங்க. இனி அவங்க இங்க தான் தங்க போறாங்க" என்று கூறவும் அவன் தன் தாயைக் கேள்வியாக நோக்கினான். 'இதோ' என்று காட்டியபோது நியதி அங்கு நின்றுகொண்டிருந்தாள். அவளை அங்கு பார்த்ததும் ஆச்சரியமடைந்த ரஞ்சித், "நியதியா!" என்று சொல்லவும் 'ஆம்' என்பதுபோல் கிரிஜா தலையசைத்தார். "நியதிக்கு ஓகே தானா?" என்று வினவினான்.

"அவ ஒத்துக்கிட்டதுனாலதானடா இங்க வந்திருக்கா" என்று கூறவும் அவன் நியதியை நோக்க அவள் லேசாக முறுவலித்தாள். "சரி அவளுக்கு ரூம்..." என்று அவன் கூறும்போதே, "பேக் யார்டு பக்கத்துல இருக்குற அந்த ரூம அவளுக்கு கிளீன் பண்ண சொல்லியாச்சு" என்று கிரிஜா கூறினார். உடனே, "அம்மா அந்த ரூம் சின்னதா இருக்கும் வேற ஏதாவது ரூம் ரெடி பண்ண...." என்று முடிப்பதற்குள், "அவளுக்கு கார்டன்னா ரொம்ப பிடிக்குமா. அதான் அங்க சொன்னேன்" என்று பதிலளித்தார். அவன் நியதியிடம் சென்று, "நியதி இது இனி உன் வீடு. உனக்கு என்ன வேணுமோ அத என்கிட்ட தயங்காம கேக்கலாம். டோன்ட் ஹெசிட்டேட். வெல்கம் ஹோம் நியதி" என்று புன்முறுவல் செய்ய அவளும் புன்னகைத்தாள்.
Gemini_Generated_Image_2kwdk02kwdk02kwd.jpg
இரவு உணவு முடிந்ததும் நியதி தன்னுடைய அறைக்கு திரும்பியபோது அது மிகவும் அழகாக இருந்தது. அங்கிருந்தே பின் புறம் இருக்கும் தோட்டத்தை ஜன்னல் வழியாக பார்க்கவும் முடியும். மேலும் நிலவொளியும் அந்த ஜன்னல் வழியாக அறையினுள் பரவ அழகாக காட்சியளித்தது. அவற்றை ரசித்தவாறே பார்த்துக்கொண்டிருந்தபோது கிரிஜா அங்கு வந்தார். அவர் சிலமணிநேரம் நியதியுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையில் பால் டம்பளருடன் பணிப்பெண் அறையினுள் நுழைந்தாள்.

"இந்தா நியதி இத குடி" என்று கிரிஜா அதைக் கொடுக்க, "இதெல்லாம் எதுக்குமா எனக்கு" என்று நியதி மறுத்தாள். ஆனால் கிரிஜாவோ விடவில்லை. அப்போது ரஞ்சித் கிரிஜாவைக் கூப்பிடவும் அவர் அங்கிருந்து அகன்றார். பாலை குடித்துக்கொண்டிருந்தபோது நியதியின் பார்வை அந்த பணியாளின்மீது பட்டது. அவள் ஜன்னல் வழியாக பின் தோட்டத்தையே பயந்தவாறு பார்த்தவண்ணம் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். இதை கவனித்த நியதி, " என்ன ஆச்சி? ஏன் அங்கயே பாக்குறீங்க?”என்று கேட்கவும்,” ஒன்னும் இல்லமா" என்று மழுப்பினாள். ஆனால் அவள் மீண்டும் பின்தோட்டத்தையே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, "என்ன ஆச்சிச்சுன்னு சொல்லுங்க?" என்று அழுத்தத்துடன் நியதி வினவினாள். முகத்தில் வேர்வை துளிகள் வடிய, "'அது' வந்துருமோன்னு பயமா இருக்குமா" என்று அந்த இருள் சூழ்ந்திருந்த பின் தோட்டத்தைக் காட்டி பயத்துடன் கூறினாள்.
WhatsApp Image 2025-03-03 at 1.45.26 PM (1).jpeg
மாயங்கள் தொடரும்...

***********************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம்...

Link

https://www.narumugainovels.com/threads/21888/

 

Krishna Tulsi

Moderator
மாயம் 23

"எது?" என்று விழங்காமல் நியதி கேட்க அந்தப் பணிப்பெண்னோ, "'அது'...அந்த 'ஆவி' வந்துரும்" என்று பயத்துடன் கூறவும் நியதியின் மனதில் லேசாக அச்சம் தலைதூக்கியது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு, "ஆவியா?...என்ன சொல்றீங்க?" என்றவுடன் அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நியதியின் அருகில் மெல்ல வந்தாள்.

அவள், "ஆமாம்மா இந்த தோட்டத்துக்கு நடுவுல ரஞ்சித் ஐயா சின்னம்மாவுக்காக ஒரு நினைவுச் சின்னம் கட்டீருக்காரு. அது பக்கத்துல ஒரு பெரிய மரம் இருக்குமாம், அங்க தான் அந்த ஆவி சுத்திகிட்டு இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. இதுக்கு முன்னால அங்க போன ஒருத்தர ‘அது’ கொன்றுச்சி..." என்று சொல்லும்போதே நியதியின் கைகள் பயத்தால் ஜில்லென குளிர்ந்தது.

"நீங்க அத பாத்திருக்கீங்களா?" என்று கேட்டவளிடம், "இல்லமா நான் பாக்கல. ஆனா இங்க இருக்குறவங்க சொல்லி கேட்ருக்கேன். அந்த ஆவி வெள்ள கவுன் போட்டிருக்குமாம். முகத்த மரச்சமாதிரி முடியபோட்டு பாக்குறதுக்கே ரொம்ப பயங்கரமா இருக்குமா. அதுக்கு முகம் இருக்குமா இல்லையான்னு தெரியாது. அதோட கையும் காலும் வெள்ளைவெள்ளேர்னு நிறைய வெட்டுக் காயத்தோட பாக்க கொடூரமா இருக்குமா. அது நம்மள..." என்று திகிலூட்டும் விதமாக அவள் கூறிக்கொண்டிருக்க நியதி, "போதும்...போதும்...பேயின்னு ஒன்னு கிடையவே கிடையாது. அது நம்மளோட மனப்பிரம்ம. இனிமேல் தயவுசெஞ்சி அதப்பத்தி பேசாதீங்க" என்று அவளுடைய பேச்சை அப்படியே நிறுத்தி அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டாள்.

படுக்கைக்குச் சென்றவளின் மனம் தூக்கத்திற்குச் செல்லாமல் மீண்டும் மீண்டும் அந்தப் பெண் கூறிய விஷயத்திலேயே நின்றது. உடனே எழுந்து தன் படுக்கையில் அமர்ந்தவளின் கண்கள் மைஇருள் பூசிய அந்த தோட்டத்தை நோக்கின.
WhatsApp Image 2025-03-05 at 3.59.35 PM.jpeg
"நியதி இந்த உலகத்துல ஆவி, பேய், பிசாசுன்னு எதுவும் இல்ல. அதெல்லாம் பொய்..." என்று தனுக்குத் தானே தைரியம் கூறிக்கொண்டவள் அருகிலிருந்த மேஜையில் தான் வைத்திருந்த மார்பிளாலான கிருஷ்ணர் சிலையை தன் கையில் எடுத்தாள். அதை தன் மார்போடு அணைத்துக் கொண்டு, "என் கண்ணன் இருக்கான்...அவன தவிர்த்து இந்த உலகத்துல எதுவும் கிடையாது. அவன் என்ன பாத்துக்குவான்" என்று கூறியவாறு படுக்கையில் சாய்ந்தாள். சிறிது நேரம், 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே அப்படியே உறங்கினாள்.

மறுநாள் வர்தன்ஸ் பேலசில் அனைவரும் அந்தப் பெரிய பிரதான அறையில் அமர்ந்திருந்தபோது, "ஆரி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்ற ரஞ்சித்திடம் ஆரியனோ, "ம்ம்..." என்று தொலைக்காட்சியைப் பார்த்தவாறே தலையசைத்தான். தண்ணீரை மெல்ல அருந்திவிட்டு, "ஆரி, நியதி இப்ப எங்கவீட்லதான் தங்கியிருக்கா" என்று ரஞ்சித் கூற மற்றவனோ, "ஓ அப்படியா? சோ வாட்” என்று ஆரியன் விட்டேற்றியாக பதிலளித்தான். சற்று ஆச்சரியமடைந்த ரஞ்சித் மீண்டும் ஆரியனைப் பார்த்து, "அம்மாதான் அவள அழைச்சிட்டு வந்தாங்க" என்று தயங்கியவாறே சொல்லவும் அவன், "ரஞ்சித் அது உன்னோட பெர்சனல் மேட்டர். நான் அதுல தலையிட விரும்பல" என்று கூறினான்.
WhatsApp Image 2025-03-05 at 3.39.34 PM (1).jpeg
மீண்டும், "...நியதி அங்க தங்குறதுல உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைல...அது அவா உன்னோட..." என்று கூறிக்கொண்டிருந்த ரஞ்சித்தை இடைமறித்து, "லுக் ரஞ்சித் எங்க ரெண்டுபேருக்கும் டைவர்ஸ் ஆயிருச்சி. அவா என்ன செய்றா, எங்க தங்குறா அது அவா இஷ்டம். இனி அதப்பத்தி பேசாத..." என்று சாதாரண குரலில் கூற ரஞ்சித் குழம்பினான். இதை அருகிலிருந்து கேட்டவாறு பார்த்துக்கொண்டிருந்த பார்கவுக்கு ஆரியனின் பேச்சு புதிராக இருந்தது.

'நியதி மேடம் ரஞ்சித்சார் வீட்லதான் இருக்காங்கன்னு இவருக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் எதுவுமே தெரியாதமாதிரி இருக்காரு...அவங்கள பத்தின எல்லா விஷயமும் தெரிஞ்சும் ஏன் அக்கற இல்லாத மாதிரி காட்டிக்கிறாரு...இவரு மனசுல என்னதான் இருக்கோ!....யப்பா இவர புரிஞ்சிக்க தனி மூளை வேணும்...முடியலடா சாமி' என்று மனதில் நினைத்த பார்கவ் ஆரியனை நோக்கினான். அப்போது ஆரியனோ தொலைக்காட்சியைப் பார்த்தவாறு இயல்பாக அமர்ந்திருந்தான்.

இங்கு சங்கம் கன்ஸ்ட்ரக்ஷ்ன்சில் நியதியும் சரணும் வேலை செய்துகொண்டிருந்தபோது, "நிதி ரஞ்சித்சார் வீடு உனக்கு பிடிச்சிருக்கா?" என்று விசாரிக்க நியதியின் மனமோ அந்தப் பணியாள் கூறிய விஷயத்திலேயே நின்றது. 'சரண்கிட்ட சொல்லலாமா? வேண்டாமா?....இல்ல இப்ப சொல்ல வேண்டாம்' என்று அவள் நினைக்கும்போதே அவளுடைய முகத்தின் முன் சரண் கையை அசைத்து, "என்ன மேடம் எங்க போய்ட்டீங்க? எல்லாம் ஓகே தான? இல்ல ஏதாவது..." என்று கேட்டவனிடம், "ஒண்ணும் இல்லடா" என்று பதிலளித்தாள்.

பின் அவள், "என்னடா உன் வாட்ச் கிடைச்சதா?" என்று கேட்க அவனோ, "இல்ல நிதி. பார்ட்டி அன்னைக்கு தொலைஞ்சிபோனது ஒரு வாரமாகியும் இன்னும் கிடைக்கல. அவா வீட்டுக்கு போன்னேன்லே அதுகாப்பரத்துல இருந்துதான் காணும். அது என்னோட லக்கி வாட்ச்....எல்லாம் உன்னாலதான். நான் அன்னைக்கு சிவனேன்னு போயிருப்பேன். நீ தான் அவள வீட்டுல போய் விடச் சொன்ன....என் வாட்ச் தொலைஞ்சதுக்கு நீ தான் காரணம். நீ எனக்கு அதேமாதிரி ஒரு புது வாட்ச் வாங்கி தரணும்" என்று ஆணையிட்டான்.

உடனே நியதி, "அதெல்லாம் முடியாது போடா. ஒழுங்கா வாட்ச்ச பத்திரமா வச்சிக்க தெரியல என் கிட்ட சண்டபோட வந்துட்டான்" என்று வாங்கி தர மறுத்துவிட்டாள். "ஏய் என்னடி இப்படி சொல்ற. எனக்கு தெரியாது, நீ தான் வாங்கித்தரனும். இல்லாட்டி..." என்று சரண் கூற இருவருக்கும் இடையே ஒரு மினி வார் நடந்தது.
WhatsApp Image 2025-03-05 at 3.39.34 PM.jpeg
அதன்பின் நியதி, "சரி சரி வாங்கி தாரேன்" என்று ஒப்புக்கொள்ளவும் அங்கு சமரசம் உண்டாயிற்று. அப்படியே அன்றைய பொழுது கழிய இருவரும் மாலையில் பூங்கா அரட்டைக்குப் பின் அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய நியதி இளைப்பாறிவிட்டு, கிரிஜாவுடன் சற்றுநேரம் பேசினாள். காஃபி அருந்தியவாறே இருவரும் பேசிச் சிரித்தனர். அதன் பின் அந்த பேக் யாட்டிலுள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள அனைத்தையும் ரசித்தாள். அது மிகவும் பெரிய தோட்டம். மாலை நேரம் என்பதால் சூரிய ஒளி பட்ட அனைத்து இடங்களும் தங்கம் போல் மின்னின. அளவாக வெட்டப்பட்டிருந்த பச்சை நிற புல் தரை, அழகான பூச்செடிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள் என அனைத்தையும் கண்டு அகம் மகிழ்ந்தாள். அப்படியே நடந்து சென்றவள் அந்த தோட்டத்தின் மையப் பகுதியை அடைந்தாள்.

அங்கு ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பு இருந்தது. அதில் 'அதிதி மெமோரியல்' என்று எழுதியிருக்க அது அதிதியின் நினைவிடம் என்று அவளுக்குப் புரிந்தது. அதை அப்படியே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தபோது, "நியதி இங்க என்ன பண்ற?" என்று ரஞ்சித்தின் குரல் கேட்க அவள் திரும்பிப் பார்த்தாள். "பாக்க ரொம்ப அழகா இருந்துச்சா அதான் ஒரு வாக் போகலாம்னு வந்தேன்" என்று பதிலளித்தவளின் கண்கள் அதிதியின் நினைவிடத்தை நோக்கியது.
WhatsApp Image 2025-03-05 at 3.39.35 PM.jpeg
அவள் அதைப் பற்றி அறிய விளைகிறாள் என்று யூகித்த ரஞ்சித், "நியதி இது தான் அதிதியோட மெமோரியல். அவளோட நினைவா இத இங்க வச்சிருக்கேன்" என்று பதிலளித்தான்.

உடனே அவள், "உங்களுக்கு அதிதினா ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்க அவனோ ஒரு சிறு முறுவலுடன் 'ஆம்' என்று தலையசைத்தான். பின் அந்த நினைவிடத்தைப் பார்த்து, "நான் வர்தன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்க்கு வந்த பிறகுதான் அதிதிய பாத்தேன். அப்போ எனக்கு அவள பிடிக்கும் ஆனா அவள லவ் பண்ணல. எப்போ ஆரி எனக்கும் அவளுக்கும் கல்யாணத்த முடிவு பண்ணானோ அப்பவே எனக்கு அவமேல உள்ள அன்பு அப்படியே காதலா மாறிடுச்சி. அப்ப இருந்த சூழ்நிலைல எங்கள நாங்க ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்க நேரமில்ல. எங்களோட கல்யாணமும் நடந்துச்சி. எங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் வந்ததுக்கு அப்பறம் ஒரு கணவன் மனைவியா வாழணும்னு நினைச்சோம் ஆனா அதுக்குள்ள..." என்று அவன் கூறும்போதே தொண்டையை துக்கம் அடைக்க அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவனுடைய கண்கள் சிவந்து இருக்க அவன் கல்லாக இறுகி இருந்தான். அவள், "சாரி ரஞ்சித் நான் உங்களோட பழைய நினைவுகள தூண்டிவிட்டுடேனோ?" என்று கேட்க அவனோ, "இல்ல நியதி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. வா உள்ள போகலாம்" என்று அந்த மெமோரியலுக்குள் அழைத்துச் சென்றான். அங்குள்ள பெரிய சுவற்றில் அதிதியின் புகைப் படம் இருக்க, அறைக்கு நடுவே அழகிய மார்பிள் சிலை ஒன்று இருந்தது. அதைப் பார்த்தவுடனே அது அதிதி என்று அறிந்துகொண்டாள்.
WhatsApp Image 2025-03-05 at 8.34.13 AM.jpeg
அந்த சிலைக்கு முன்பு ஒரு சிறு மேடை போன்ற அமைப்பு இருக்க ரஞ்சித் அதைச் சுட்டிக்காட்டி, "இதுக்குள்ளதான் அதிதிக்கு பிடிச்ச திங்ஸ் எல்லாத்தையும் அவா நியாபகார்த்தமா வச்சிருக்கேன். இப்பவும் என்கூடதான் இருக்கா...எப்பவும் என்ன பிரியவே மாட்டா" என்று தழுதழுத்தக் குரலில் கூறினான். அங்கிருந்து வெளியே வந்தபோது அருகிலிருந்த மரம் அவளுடைய கண்களுக்கு தென்பட அந்த பணியாள் கூறியது நினைவிற்கு வந்தது. உடனே, "உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்" என்று சொல்ல ரஞ்சித் அவளை திரும்பிப் பார்த்தான். சற்று தயங்கியவாறு, "இங்க ஆ..வி...இருக்கறதா சொல்றாங்களே. அது உண்மையா?" என்று கேட்கவும், "கம் ஆன் நியதி எந்த காலத்துல இருக்க? பேய், பிசாசு, ஆவி அப்படின்னு ஒண்ணுமே கிடையாது. இங்க வேல பார்த்த ஒருத்தர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு. அதப் போய் பேய்யின்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனா எனக்கு இது ரொம்பவும் பிடிச்ச இடம். பாக்க அழகா அமைதியா இருக்குற இந்த இடத்த பார்த்தா உனக்கு அப்படி தோணுது? நீ அதயெல்லாம் நம்பாத" என்று கூறியதும் நியதி சற்று நிம்மதியடைந்தாள்.

ரஞ்சித் சொல்லிதும் நியதிக்கு தைரியம் பிறந்தது. அவள் தினமும் மாலை வேளைகளில் அந்த தோட்டத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டாள். சில நாட்கள் கடந்தன. அன்று வேலை காரணமாக வீட்டிற்கு தாமதமாக நியதி வந்தாள். இரவு உணவை முடித்துவிட்டு தன் அறைக்குச் சென்றவள் இன்னும் சில அலுவலக வேலைகள் இருந்ததால் அதை பார்த்துக்கொண்டிருந்தாள். மணி பதினொன்று ஆகவும் அந்த ஹாலிலுள்ள பெரிய கடிகாரம் பதினோரு முறை, 'டங், டங்' என ஒலியெழுப்பியது. கிரிஜா நியதியின் அறையில் இன்னும் விளக்குகள் அணையாமல் இருப்பதைக் கண்டு ஒரு வேலையாளை அனுப்பி நியதியை சீக்கிரம் தூங்கச் சொல்லுமாறு பணித்தாள். அப்போதுதான் வெகு நேரம் ஆகுவீட்டது என்பதை உணர்ந்த நியதி, தன் மடிக்கணினியை மூடிவிட்டு, விளக்கை அணைத்து பின் படுக்கைக்குச் சென்றாள்.

அவள் வெகுநேரமாக படுக்கையில் உருண்டபோதும் உறக்கம் வரவில்லை. ஜன்னல் வழியாக வந்த நிலவொளி அந்த அறை முழுவதும் நிறைந்திருப்பதை கவனித்தவள் நிலவை நோக்கினாள். பௌர்ணமி இரவு என்பதால் அம்புலியானவன் நட்சத்திரக் கூட்டத்துடன் அந்த பறந்தவானில் அழகாக காட்சியளித்தான். அதைப் பார்த்ததும் ஆரியனின் நினைவுவர அவள் படுக்கையிலிருந்து எழுந்து அந்த தோட்டத்திற்கு தன்னையறியாமல் சென்றாள். அந்த வெண்மதியின் குளிர்ந்த ஒளியுடன் ஆங்காங்கே காணப்பட்ட மின்விளக்குகளின் ஒளியும் சேர்ந்து கண்களைக் கவர்ந்தன.
WhatsApp Image 2025-03-05 at 3.59.34 PM.jpeg
அங்கு இதமாகவீசிய தென்றல்காற்றும் அவளுடைய மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்தது. இவையனைத்தையும் அனுபவித்தவாறு சென்றவள் அந்த தோட்டத்தின் மத்தியப்பகுதி அதாவது அந்த நினைவிடத்தை அடைந்தாள். அதைப் பார்த்ததும், 'அதிதி நீ ரொம்ப லக்கி. நீ இறந்ததுக்கு அப்பறமும் உன் நினைப்புலயே நிறையபேர் இருக்காங்க. ஆனா இவங்க எல்லாரையும் இப்படி தவிக்கவிட்டுட்டு எப்படி உன்னால போகமுடிஞ்சது...' என்றவளின் கண்கள் தற்செயலாக அந்த மரத்தின் பக்கம் சென்றன.

உடனே பணியாள் கூறிய அந்த ஆவியின் தோற்றம் நினைவுவர, 'ச்ச அநியாயத்துக்கு இந்த நேரத்துலயா அது ஞாபகத்துக்கு வரணும்' என்று எண்ணியவள் அங்கிருந்து விரைந்து செல்ல, காலடியெடுத்து வைத்தபோது வழக்கத்தைவிடவும் ஒரு விதமான குளிர்காற்று அங்கு வீசத்துவங்கியது. அவளுடைய மனதில் பயம் குடிகொள்ள அதுவரையில் இதமாக இருந்த அந்த அமைதியான சூழல் இப்போது திகிலூட்டியது. அந்த மரத்தின் அருகே ஏதோ இருப்பதுபோல் தோன்ற அங்கு பார்த்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிய, கைகள் பயத்தால் நடுங்கியது. ஏனென்றால் ‘அந்த உருவம்’, அந்த பணியாள் விவரித்த அதே உருவம் அங்கு நின்றுகொண்டிருந்தது.
WhatsApp Image 2025-03-05 at 3.40.21 PM.jpegWhatsApp Image 2025-03-05 at 3.39.33 PM.jpeg
மாயங்கள் தொடரும்...

*****************************************************************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பகிர்ந்துகொள்ளலாம்

Link

 

Krishna Tulsi

Moderator
மாயம் 24

அந்த உருவத்தைக் கண்டதும் அச்சத்தால் நியதி உறைந்து நின்றாள். பயத்தின் உச்சிக்கே சென்றதால், அவளுடைய மூளை செயலிழந்துவிட அந்த உருவத்தை வெறித்தவாறு அப்படியே நின்றாள். குளிர்ந்த காற்றானது ஊசியாய் அவளைத் துளைக்க மீண்டும் சுயநினைவிற்கு வந்தவள், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த இடத்தைவிட்டு ஓடினாள். திரும்பிப் பார்க்கக் கூட தைரியம் இல்லாமல் ஓடியவள் ஹாலுக்குள் புகுந்தாள்.

வேகமாக வந்தவள் அப்போதுதான் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஞ்சித்தின் மீது எதிர்பாராவிதமாக மோதி கீழே விழச் சென்றாள். நியதி தன் மீது மோதியதும் கழைப்பின் காரணமாக சற்று தடுமாரியவன் சுதாரித்துக்கொண்டு நியதியையும் பிடித்து நிறுத்தினான். அவள் அச்சத்துடன் இருப்பதைக் கண்டு, "என்ன ஆச்சு? ஏன் பயந்தமாதிரி இருக்க?" என விசாரிக்க அவளோ, "அது அங்...க...யா...ரோ...யாரோ..." என்று தடுமாறினாள். அவள் அச்சத்தில் இருப்பதைப் பார்த்தவன், "ரிலாக்ஸ் நியதி. இங்க உக்காரு" என்று அந்த பெரிய சோஃவில் அமர்த்தினான்.

அருகிலிருந்த பணியாளிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி நியதியைக் குடிக்க வைத்தான்.
WhatsApp Image 2025-03-08 at 3.47.04 PM.jpeg
பின் அந்தப் பணியாளை அனுப்பிவிட்டு நியதியின் பக்கம் திரும்பினான். அவளுடைய பதற்றம் சற்று குறைந்ததும், "இப்ப சொல்லு...என்ன ஆச்சி?" என்று வினவ, "அந்த ஆவிய நான் பாத்தேன்" என்று பதிலளித்தாள். "ஆவியா? என்ன சொல்ற" என்று அவன் புரியாமல் கேட்க, "நான் அன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன்ல அந்த ஆவி...அத நான் பாத்தேன்" என்று கூறவும் ரஞ்சித் நகைத்தான். பின், "நியதி ஆவி, பேய், பிசாசுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்ல. நீ ரொம்ப குழம்பியிருக்க...போய் படுத்து தூங்கு எல்லாம் சரியாகிடும்" என்று அறிவுரை கூற அவளோ, "இல்ல ரஞ்சித் அங்க ஏதோ ஒண்ணு கண்டிப்பா இருக்கு...ப்ளீஸ் எனக்காக அங்க வந்து பாருங்களேன்..." என்று கெஞ்சும் குரலில் கேட்கவும் அவன் ஒப்புக்கொண்டான். பின் இருவருமாக அந்த தோட்டத்திற்கு நடுவே உள்ள அதிதியின் நினைவாலயத்திற்கு வந்தனர். "இங்க தான் அது இருந்தது" என்று அந்த பெரிய மரத்தைச் சுட்டிக் காட்டியதும் அவன், "சரி இப்போ எங்க போச்சி?" என்று கேட்டான்.

உடனே, "தெரியல...ஆனா இங்க தான் இருந்தது" என்று அவள் ஆணித்தரமாகக் கூறவும் அவன், "சரி இங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுவோம்" என்று இருவரும் சிறிதுநேரம் அந்த உருவத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். எதுவும் கண்களுக்கு தென்படவில்லை என்றதும், "நியதி அது உன்னோட மனபிரம்ம. இனிமேல் எதப்பத்தியும் நினைக்காம போய் படு" என்று ரஞ்சித் கூறினான். சற்று குழப்பமடைந்த நியதி ரஞ்சித் கூறுவதுபோல் இருக்கலாம் என்றெண்ணினாள். பின் இருவரும் அந்த இடத்தைவிட்டு செல்லவிருந்தபோது அந்த மரத்தின் பக்கம் ஒரு சலசலப்புச் சத்தம் கேட்டது.

அவர்கள் இருவரும் அதைக் கேட்டவுடன் அப்படியே நின்றனர். உடனே ரஞ்சித், "யாரது?" என்று கேட்டபோது எந்தஒரு பதிலும் இல்லை. மீண்டும், "கேக்குறேன்ல யாரது?" என்றபோதும் பதில்வரவில்லை. அவன் நியதியை அங்கேயே இருக்குமாறு சைகை செய்துவிட்டு, 'அங்கு என்ன இருக்கிறது?' என்பதைப் பார்க்கச் சென்றான்.
WhatsApp Image 2025-03-07 at 9.52.50 PM.jpeg
மெல்லச் சென்று அந்த மரத்தின் பின் பார்த்தபோது அவன் புன்னகைக்க நியதி புரியாமல் விழித்தாள். அப்போது ஒரு கறுப்புப் பூனையை ரஞ்சித் தன் கையில் ஏந்தியவாறு நியதியிடம் வந்தான்.

"பாரு நியதி இது பூன.....நான் கூட ஒரு நிமிஷம் பயந்துட்டேன். நீ இத பாத்துதான் பயந்திருக்க. எவ்வளவு அழகா இருக்கு. இந்தா..." என்று ரஞ்சித் அதை நீட்ட அவளோ, "இல்ல இருக்கட்டும். நான் போறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகல ரஞ்சித்தும் அவளைப் பின்தொடர்ந்தான். அவர்கள் அங்கிருந்து செல்வதை ஒரு உருவம் பார்த்துக்கொண்டே நின்றது.
WhatsApp Image 2025-03-08 at 3.46.33 PM.jpeg
அதே விஷயத்தில் நியதியின் மனம் உழன்றுகொண்டே இருக்க அவளுக்கு தூக்கம் வர மறுத்தது. படுக்கையில் புரண்டவள் வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றாள். இரவு சரியான தூக்கம் இல்லாததால் நியதி அன்று அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றாள். அவளைக் கண்டதும், "என்ன நிதி இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு?....ஏன் உன் முகம் டல்லா இருக்கு. நைட் ஒழுங்கா தூங்கலையா?" என்று சரண் கேள்விகளை அடுக்க அவளோ பதில் எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்ததும், "ஏய் நான் உன்ன கேட்டுகிட்டே இருக்கேன் நீ என்ன பேய்யறஞ்சமாதிரி இருக்க?" என்று அவன் கேட்தும், 'பேய்' என்ற வார்த்தையில் நிகழ்காலத்திற்கு வந்தாள். உடனே, "வாய மூடு காலங்காத்தால பேய், பிசாசுன்னு..." என்று முணுமுணுத்தாள். சற்று நேரம் கழித்து அவள் சரணிடம் மெல்ல சென்று, "பேய் நிஜமாவே இருக்கா?" என்று கேட்க அவனோ நியதியின் மிக அருகே சென்று, "ஆமா நிதி பேய் நிஜமாவே இருக்கு" என்று அவளை உற்று நோக்கியவாறு கூறினான். உடனே, "நீ அத பார்த்திருக்கியா?" என்று அவள் கேட்க அவனோ, "ஆமா நான் தினமும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்…..அதோ அங்க பாரு" என்று கோப்புகளை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த சாராவை நோக்கி காட்டினான்.
WhatsApp Image 2025-03-08 at 3.46.34 PM (1).jpegWhatsApp Image 2025-03-08 at 3.46.34 PM (2).jpeg
அவள் முறைத்தவாறே, "போ டா. நீ திருந்தவே மாட்ட" என்றவள் சிரித்துவிட்டாள். அப்போது அவனுடைய இன்டர்காமிற்கு அழைப்பு வந்தது. எதிர்பாராமல் அடித்த அந்த ஒலியால் சற்று அதிர்ந்தவன், 'ஐயோ நான் பேசுனது அவளுக்கு கேட்ருச்சோ' என்று பயந்தவாறு இன்டர்காமை எடுத்தான். அப்போது, "பிரிங் மீ காப்ஃ" என்று கூறிவிட்டு பட்டென வைத்துவிட்டாள். ஒவ்வொரு முறையும் அவள் அப்படி செய்யும்போது சரணுக்கு, தன்னை முகத்தில் அறையாமல் அறைந்ததுபோல் இருக்கும்.

"இவளுக்கு கொஞ்சம்கூட மேனர்ஸே தெரியல. இப்படியா பட்டுன்னு இன்டர்காம வைப்பா?" என்று திட்டியவாறே காஃயைப் போடச் சென்றான். அவள் இதற்கு முன்பாக விளம்பரத்திற்குச் செய்ததைப் போலவே இப்போதும் செய்தாள். முதலில் கப் சரியில்லை என அவனை அனுப்பினாள், பின் கப்பின் கலர் சரியில்லை என அனுப்பினாள். இறுதியாக அவன் காப்ஃபியை அவள் கூறியவாறே கொண்டுவந்தபோது அதிலிருந்து சிறு மிடரை அருந்திவிட்டு, "இட்ஸ் ஓகே. ஐ வில் அட்ஜஸ்ட்" என்று அவள் கூறவும் சரணுக்கு கோபம் பீறிட்டு வந்தது. அதை அடக்கியவாறு தன்னுடைய அறைக்குச் சென்றவன், "நிதி என் காப்ஃபி எப்படி இருக்கும்?" என்று கேட்க அவளோ, "ரொம்ப நல்லா இருக்கும்டா. எனக்கு நீ போடற காஃபி ரொம்ப பிடிக்கும். அதுக்கு நான் அடிமை" என்று பணிவதுபோல் பாவனை செய்தாள்.

"பின்ன இந்த ராட்சசி மட்டும் ஏன் பரவா இல்லன்னு சொல்றா?" என்று அவன் கத்தவும் நியதி அரண்டுவிட்டாள். "என்னடா என்ன ஆச்சு?" என்று வினவ அவன் நடந்தவற்றைக் கூறினான். அவளோ, "உனக்குதான் அவங்கள பத்தி தெரியும்ல. அதனால இத சீரியஸா எடுத்துக்காத. இல்லாட்டி உனக்கு பி.பி ஏறிரும்" என்று கண்ணைச் சிமிட்டி சிரித்தவாறு கூற அவனோ விளையாட்டாக நியதியை முறைத்தான். அங்கு சாராவின் கேபினில் சரண் போட்டுக்கொடுத்த காப்பியை அவள் அருந்தியதும் மிகவும் ஆச்சரியமடைந்தாள்.
WhatsApp Image 2025-03-08 at 4.04.02 PM.jpeg
'இவ்வளவு நல்ல காப்ஃபிய நான் குடிச்சதே இல்லையே. நமக்கு காப்ஃபியே போடவராது, ஆனா இவன் இவ்வளவு நல்லா போட்ருக்கான்' என்று நினைத்தவாறு அனைத்தையும் அருந்தினாள்.

பின் சரணை உள்ளே அழைத்து ஏதோ விவரம் கூற அவன் அதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியே செல்லவிருந்தான். மேஜையின் மீது இருந்த காபி கப்பை எடுத்தபோது அது மிகவும் லேசாக இருந்தது. அவன் அதனுள் பார்த்தபோது ஒரு சொட்டு காப்ஃபி கூட மிச்சம் இல்லை. இதை நியதியிடம் தெரிவித்தபோது இருவரும் வயிறுவலிக்கச் சிரித்தனர். சாராவுடன் ப்ராஜக்ட் விஷயமாக ஆலோசிக்க வந்த ஆரியன் சரணும், நியதியும் சிரித்துப் பேசுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
WhatsApp Image 2025-03-08 at 4.13.03 PM.jpeg
ஆரியனின் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்த சாரா அவனுடைய பார்வை சென்ற இடத்தை பார்த்ததும் விஷயம் விளங்கியது. உடனே அதற்கான நடவடிக்கையை அன்றே எடுத்தாள். மதிய உணவை ஃபுட் கோர்ட்டில் முடித்துவிட்டு நியதியும் சரணும் தங்களுடைய அறைக்குத் திரும்பியபோது சரணின் இருக்கை அங்கு இல்லை. அதைப் பற்றி அங்குள்ள பியூனிடம் விசாரித்தபோது, "மேடம் தான் உங்க இடத்த அவங்க கேபின்கு மாத்த சொன்னாங்க" என்று கூறவும் சரணுக்கு கோபம் வந்தது.

“இங்க பாரேன் அவா இஷ்டத்துக்கு பண்றா. அவள.....” என்று கூறியவன் சாராவின் கேபினுக்கு விரைந்தான். வேகமாக சென்றவன் அவளைப் பார்ததும் மெல்லிய குரலில், "மேம், என் டேபிள இங்க", என்று சொல்ல முயன்றவனை நிறுத்தி சாரா, "இனி இதுதான் உன்டோ சீட், போய் வேலையப் பாரு", என்று இருக்கையை சுட்டிக் காட்டினாள்.

அவளிடம் அதற்குமேல் வாதிடமுடியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். இவ்வாறாக நாட்கள் சில கடந்தன. நியதிக்கும், சரணுக்கும் உணவு இடைவெளியின்போதும், மாலை பூங்காவிலும் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நியதிக்கு அந்த ஆவியின் நினைவு எப்போதும் வந்து அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தது.

ஒரு மீட்டிங் விஷயமாக சாராவும், சரணும் ஒரு வாரம் பெங்களூர் செல்லவேண்டியிருந்ததால் நியதியையே அனைத்துப் பொறுப்பையும் பார்க்குமாறு கூறிவிட்டு அவளுடைய உதவிக்காக ஹேமா என்றவளையும் சாரா நியமித்தாள். மறுநாளே சாராவும் சரணும் ஃளைட்டில் பெங்களூருக்குக் கிளம்பினர். அவர்கள் அங்கு தரையிறங்கியபோது மாலைநேரம் என்பதால் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தனித்தனி அறையில் தங்கினர்.

மறுநாள் சரண் காலையில் விரைந்து கிளம்பி சாராவுக்காக காத்துக்கொண்டிருந்தான். வெகுநேரமாகியும் அவள் வராததால் அவளுடைய அறைக்குச் சென்றான். அறைக்கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் அந்த ஹோட்டலிலுள்ள உயரதிகாரிகளின் உதவியோடு அந்த அறையைத் திறந்தான். உள்ளே சென்று பார்த்தபோது சாரா ப்ளாங்கெட்டைப் போர்த்தி சுருண்டு நடுங்கியவாறு படுத்திருந்தாள். சற்று தயங்கியவன் அவளருகே சென்று ப்ளாங்கெட்டை விலக்கி அவளுடைய நெற்றியை லேசாக தொட்டபோது நெருப்பாகக் கொதித்தது.

உடனே அந்த ஹோட்டல் மூலமாக மருத்துவரை வரவழைத்து அவளுக்கு சிகிச்சை அளித்தான். பின் சாராவின் நிலையைப் பற்றி தாங்கள் சந்திக்க வந்த நபரிடம் தெரிவித்தபோது அவர் அந்த மீட்டிங்கை சாரா குணமடைந்ததும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். பின் அவன் அவளை நன்கு பார்த்துக் கொண்டான்.
WhatsApp Image 2025-03-08 at 3.56.43 PM.jpeg
மறுநாள் அவளுடைய உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருந்தது. அவன் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் அவளுக்கு கொடுக்க அதைப் பார்த்து, "இந்த ஃஉட் தான் ஃபீவர்க்கு குடுக்கணும்னு உனக்கெப்படி தெரியும்?" என்று வினவினாள்.

அதற்கு, "எனக்கு சின்னவயசுல உடம்பு சரியில்லாம போகும்போது 'ஹோம்ல' இதத்தான் குடுப்பாங்க. அதவச்சி தான் தெரியும் மேடம்" என்று கூற அதைக் கேட்டதும் சாராவுக்கு அவன்மீது சற்று இரக்கம் பிறந்தது. பின் மீட்டிங்கின் நினைவு வர அதைப் பற்றி கேட்டபோது அவன், "நான் அவர்கிட்ட சொல்லீட்டேன் மேடம். உங்க ஹெல்த் சரியானதும் பேசிக்கலாம்னு சொல்லீட்டாரு" என்று பதிலளித்தான். சரண் அவளை நன்கு கவனிக்க சாரா விரைவில் குணமடைந்தாள். அவளுடைய மனதில் சரணின் மீதிருந்த கோபம் மெல்ல மெல்ல காதலாக மாறத்துவங்கியது.

இங்கு நியதி அனைத்து வேலைகளையும் இரவும் பகலுமாக பார்த்தாள். அவ்வப்போது அந்த பேயைப் பற்றிய நினைவு வந்தாலும் பிடிவாதமாக தன்னுடைய மனதை வேலையில் இழுத்து வருவாள். நாளுக்கு நாள் நியதியின் மனதில் பயம் அதிகரித்துக்கொண்டே வர அவளுடைய தூக்கம் பறிபோனது. எப்போதாவது வேலை பழுவால் அசந்து தூங்கினால் மட்டுமே அவளுக்கு தூக்கம் கிட்டும். அதேபோல ஒருநாள் வேலை செய்துகொண்டிருந்தபோது தன்னுடைய அறையில் அப்படியே அசந்து தூங்கிவிட்டாள்.

அவள் எழுந்தபோது அங்கு யாரும் இல்லாமல் அந்த இடம் மயான அமைதியாக இருந்தது. அந்த அமைதியை கிழித்துக் கொண்டு 'டக் டக்' என கோப்புகளின் அறையிலிருந்து சப்தம் கேட்டது. மெல்ல தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து அந்த அறைக்குச் சென்றாள். அந்த அறையில் நிறைய கோப்புகள் ரேக்குகளில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியிலிருந்து சத்தம் வர அந்த இடத்திற்கு நியதி தயங்கியவாறு சென்றாள். அப்போது அங்கு ஒரு பெண் வெள்ளை உடை அணிந்து தன்னுடைய முதுகைக்காட்டியவண்ணம், சுவற்றைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் ஒருவிதமான பயம் மனதில் ஊடுருவ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "யார் நீ?" என்று கேட்டாள். அப்போது அந்தப் பெண் மெல்ல திரும்பினாள். முதலில் நன்றாக இருந்த அவளுடைய முகம் பின்பு கோரமாக மாறியது.
WhatsApp Video 2025-03-08 at 3.47.29 PM (1).gif
அவள் விரைந்து தன்னை நோக்கி ஓடி வரவும் தூக்கத்திலிருந்து பாடாரென நியதி எழுந்தாள். அப்போதுதான் நடந்த அனைத்தும் கனவு என்று தெரியவந்தது. வேகமாக எழுந்தவள் டேபிளிலிருந்த பென்-ஸ்டாண்டை தட்டிவிட்டாள்.

அந்த ஏ.சி. அறையிலும் அவளுடைய நெற்றியில் வேர்வைத் துளிகள் நிரம்பியிருந்தன. அப்போது அங்கு வந்த ஹேமா நியதியின் செய்கையைப் பார்த்து, "ஆர் யூ ஓகே மேம்?" என்று கேட்க நியதி 'ஆம்' என்று மட்டும் தலையசைத்தாள். பயம் ஒருவரின் மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். அதேபோல, நியதியும் பயத்தின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாள்.

மாயங்கள் தொடரும்...

****************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம்.

Link
https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 25
நாட்கள் மெல்ல நகர்ந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, அதே ஹோட்டலின் அடித்தளத்திற்கு உணவுண்ண சரணும், சாராவும் வந்தனர். சரண் தனக்கு வேண்டியவற்றை மட்டும் ஆர்டர் செய்ய சாராவோ அங்குள்ள அனைத்து வகையான உணவுகளையும் ஆர்டர் செய்தாள். அவள் ஆர்டர் செய்ததைக் கேட்டு முதலில் திகைத்தவன் அவை அனைத்தும் வந்ததும் பிரம்மித்துப் போனான். ஏனென்றால் அவள் ஆர்டர் செய்தவை அந்த பெரிய மேஜையில் நிரம்பி இருந்தது.

அதைப் பார்த்து, 'இவா மனுஷியா? இல்ல கடோத்கஜியா?...ஒருத்தி சாப்பிடுறதுக்கா இவ்வளவு ஆர்டர் பண்ணீருக்கா?' என்று ஆச்சரியமடைந்தான். அவள் அனைத்திலும் ஒருவாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை அப்படியே வைத்துவிட்டாள்.
WhatsApp Image 2025-03-10 at 6.54.32 PM.jpeg
அதைப் பார்த்துக் கொண்டே இருந்த சரண், "ஒருவேள சாப்பாடுகூட கிடைக்காம நிறையபேர் கஷ்டப்படுறாங்க. ஆனா எல்லாத்தயும் இப்படி வேஸ்ட் பண்றாளே. இதுல பத்து குடும்பம் பசியாறும். இதெல்லாம் இவளுக்கு எங்க தெரியப்போகுது?..." என்று முணுமுணுத்தவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

சரணுடைய அந்த முணுமுணுப்பு சாராவின் காதுகளுக்கு எட்டியபோது, அவள் முன்பைப் போல அவன்மீது கோபமடையாமல் அதற்கு மாறாக யோசித்தாள். தான் செய்வது தவறோ என முதல் முறையாக மனதிற்குள் எண்ணத்துவங்கினாள். அவள் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே வந்தபோது, ஒரு சிறு குழந்தையுடன் உணவை யாசித்த ஏழைப் பெண்ணுக்கு உணவுப் பொட்டலங்களை சரண் வாங்கிக் கொடுத்தான்.

அதை வாங்கியவுடன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியும், நன்றி உணர்ச்சியும் மிகுந்து காணப்பட்டது. அதைப் பார்த்தவள், தான் செய்தது தவறு என்பதை உணர்தாள். தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த சாரா அன்றிலிருந்து தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் பார்க்கத்துவங்கினாள்.

இங்கு இவ்வாறு நடந்துகொண்டிருக்க மற்றொரு இடத்தில் காலை காஃபியுடன் தன்னுடைய லக்ஸூரி அப்பார்ட்மென்டிலுள்ள தோட்டத்தில் ஒரு பெண் இயற்கையை ரசித்தவாறு அமர்ந்திருந்தாள். அவள் வேறு யாரும் அல்ல ரியா தான்....ஆம் அன்று திருமணத்தின் போது நியதியை இக்கட்டான சூழ்நிலையில் விட்டுச்சென்ற அதே ரியா. ஒவ்வொருமிடராக காஃபியை அருந்திக்கொண்டிருக்கும்போது அவளுடைய கைபேசிக்கு அழைப்பு வந்தது.
WhatsApp Image 2025-03-10 at 3.36.11 PM.jpeg
அதைப் புன்னகையுடன் எடுத்தாள். மறுமுனையில் உள்ளவர் கூறியதைக் கேட்டதும் அவளுடைய புன்னகை மெல்ல மாறியது. "ம்ம்....நான் பாத்துக்குறேன்" என்று மட்டும் கூறிவிட்டு அந்த அழைப்பை துண்டித்ததும் அவள் முகத்தில் தீவிரமான யோசனை பரவி இருந்தது.

அதே சமயம் இங்கு ரஞ்சித்தின் வீட்டிற்கு ஆரியனின் பாட்டியான சந்திரமதி வருகை தந்திருந்தார். அன்று ரஞ்சித் மற்றும் ஆரியனுக்கும் இடையே நடந்த உரையாடலை கவனித்தபோதுதான் நியதி அங்கு இருப்பது சந்திரமதிக்குத் தெரியவந்தது. ஆரியனுக்குத் தெரியாமல் அவளை சந்திக்க ஒரு நல்ல சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தவருக்கு அந்த ஞாயிறு சரியான நாளாக அமைந்தது. ஏனென்றால் அன்று கோல்ஃ விளையாடுவதற்காக ஆரியனும் ரஞ்சித்தும் சென்றிருந்தனர்.

அவர்கள் திரும்புவதற்குள் நியதியை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கு சென்றார். அவரைக் கண்டதும் கிரிஜாவுக்கும், நியதிக்கும் ஒரே இன்ப அதிர்ச்சி. நியதி விரைந்து வந்து அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாள். அவரோ நியதியைப் பார்த்து, "எப்படிம்மா இருக்க?" என்று விசாரிக்க அவளோ, "நல்லா இருக்கேன் பாட்டி" என்று கூறினாள்.
WhatsApp Image 2025-03-10 at 3.44.02 PM (1).jpeg
உடனே, "நியதி அன்னைக்கு ஆரி அவ்வளவு பெரிய முடிவெடுத்ததுக்கு நான் எதுவுமே சொல்லலன்னு உனக்கு என் மேல வருத்தம் இருக்கும். என்ன மன்னிச்சிருமா நான் அப்படி...." என்றவரை இடைமறித்து, "பாட்டி பெரியவங்க நீங்க என்கிட்ட மன்னிப்பு கேக்கலாமா? ஆசீர்வாதம் மட்டும் தான் பண்ணனும். அதோட எனக்கு உங்க மேலயும் அவர்மேலயும் எந்த ஒரு வருத்தமும் இல்ல. அதனால இப்போ அந்த விஷயத்தை விடுங்க, ரொம்பநாள் கழிச்சி பாக்குறோம். நான் ஏதாவது செஞ்சி கொண்டுவறேன்" என்று கூறி நியதி எழுந்தாள்.

அவளை நிறுத்தி, "அதுக்குதான் இங்க நிறைய வேலகாரங்க இருக்காங்கள்ள. அவங்க பாத்துக்குவாங்கமா நீ உக்காரு" என்று கிரிஜா கூறினாள். ஆனால் நியதியோ, " உங்க ரெண்டுபேருக்கும் என் கையால சமைச்சி கொண்டுவாரேன்" என்று கூற அவளும் ஒப்புக் கொண்டாள். நியதி சென்றதும் கிரிஜா, "நியதி ரொம்ப நல்ல பொண்ணுமா. ஆரி ஏன் இப்படி செஞ்சான்னு தெரியல" என்று சோகத்துடன் கூற அவரோ, "கவல படாத கிரிஜா. கண்டிப்பா நல்லதே நடக்கும்" என்று கூறினார்.

சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருக்க அந்த அறையினுள் பலவித பலகாரங்களுடன் நியதி நுழைந்தாள். அவை அனைத்தையும் சந்திரமதி ரசித்து உண்டு நியதியைப் பாராட்டினார். அப்போது நியதிக்கு ஒன்று தோன்ற அவள் சந்திரமதியைப் பார்த்து, "பாட்டி நீங்க இங்க வந்தது அவருக்கு தெரியுமா?" என்று கேட்க அவரோ, "இல்லமா தெரிஞ்சா அவ்வளவுதான்" என்று கூற நியதியின் முகம் லேசாக வாடியது. சந்திரமதி கிரிஜாவிடம் திரும்பி, "கிரிஜா, நான் நியதிய பாக்கவந்தத ரஞ்சித்கிட்ட சொல்லீறாத. அவன் உண்மைவிளம்பிமாதிரி அதையும் ஆரிகிட்ட சொல்லீருவான். அதுக்கப்பறம் அவ்வளவுதான்" என்று கூற மற்றவளோ, "கவலைப்படாதீங்கமா நான் சொல்லமாட்டேன்" என்று புன்னகையுடன் கூறினார்.

சிறிது நேரம் சந்திரமதி அவர்களுடன் பேசிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பிவிட்டார். நியதியின் மனதில் ஒருபுறம் கவலை இருந்தாலும் தனக்காக பேரனின் விருப்பதையும் எதிர்த்துவந்த சந்திரமதியை நினைத்து சந்தோஷமாக இருந்தது.

மறுநாள் வேலைகாரணமாக நியதி ஆரியனின் அலுவலகத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. அன்று முழுவதும் அவளுடைய பொழுது ஆரியனுடனே கழிந்தது. இரவு, வேலை முடிவதற்கு தாமதமானதால் அவளை தானே வீட்டில் விடுவதாகக் கூறினான். அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது அந்த இரவின் குளிர்ந்த காற்று நியதியின் முகத்தை மெல்ல வருடியது. நித்திரை அவளுடைய கண்களைத் தழுவ அருகிலிருந்த ஆரியனின் தோளில் தன்னையறியாமல் மெல்லச் சாய்ந்தாள்.
வேலைப் பழுவாலும், அந்த பேயின் பயத்தினாலும் வெகு நாட்கள் தூக்கமில்லாமல் தவித்த நியதி அன்றுதான் நிம்மதியாக எந்த ஒரு பயமும் இல்லாமல் உறங்கினாள். ஒரு தாயின் கருவறையில் சிசுவானது எப்படி எந்த ஒரு பயமுமின்றி இருக்குமோ அதே போல நியதியும் ஆரியனின் அருகாமையால் பாதுகாப்பை உணர்ந்தாள். தன் தோளில் நியதி சாய்ந்ததும் முதலில் சற்று திகைத்த ஆரியன் பின் அவள் நன்கு உறங்குவதை உணர்ந்தவன், அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கிக்கொண்டிருந்த நியதியை பார்த்து புன்முறுவலுடன் ரசித்தான்.
WhatsApp Image 2025-03-10 at 3.44.04 PM.jpeg
வீடு வந்தும் நியதி எழாமல் அப்படியே உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் இறங்காத காரணத்தினால் திரும்பிப் பாராமலே பார்கவ், "மேடம் வீடு வந்துருச்சி" என்று கூறியவனிடம், "ஜஸ்ட் வெயிட்" என்று ஆரியன் கூற பார்கவ் அப்படியே அமர்ந்திருந்தான்.

சில்லென்ற காற்று முகத்தில் படாத காரணத்தினால் அவளுடைய துயில் கலைந்தது. அவளிடம் லேசாக அசைவு தெரியவே அவன் தன்னுடைய பார்வையை திருப்பிக்கொண்டான். நியதி விழித்தபோது, தான் இருந்த நிலையை உணர்ந்து சட்டென அவனிடமிருந்து விலகிஅமர்ந்தாள். அவளுடைய முகம் நாணத்தால் சிவப்பதை மறைத்துக் கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து வீட்டினுள் சென்றுவிட்டாள். நியதி போகும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் அமர்ந்த இடத்தில் ஏதோ காகிதம் இருப்பது தெரிந்தது.

நியதி தவறுதலாக விட்டுச்சென்றாள் என்று தெரிந்ததும் அதை எடுத்துப் பார்த்தான். அப்போது ஆரியனின் அதரங்கள் புன்னகையில் விரிய கண்களில் மகிழ்ச்சி ததும்பியது. உடனே அவன் அதை தன்னுடைய கோட் பாக்கட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு ஓட்டுனரைப் பணிக்க அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

தன்னுடைய அறைக்கு வந்த நியதி படுக்கையில் அப்படியே சாய்ந்தாள். ஆரியனின் தோளில் தான் சாய்ந்து உறங்கிய தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க அவளுடைய இதழ்கள் மெல்ல மலர்ந்தன. அவனருகே இருந்த அந்த நிமிடங்களை மனதில் எண்ணியவாறு அப்படியே உறங்கிவிட்டாள்.

இரவு நன்கு உறங்கியதால் மறுநாள் நியதி ஒரு புத்துணர்வுடன் எழுந்தாள். அன்று அலுவலகத்திற்குச் சென்றவள் அனைத்து வேலைகளையும் உற்சாகத்துடன் செய்தாள். மாலை வீட்டிற்கு திரும்பியவள் சரணை தன்னுடைய கைபேசியிலிருந்து அழைத்தாள். வேலை பழுவின் காரணமாக அவன் எடுக்கவில்லை. பின் இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றாள். அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தபோது அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

தூக்கத்திலிருந்தவாறே தன்னுடைய கைபேசியைப் பார்த்தவளின் இதழ்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன.
WhatsApp Image 2025-03-10 at 3.44.03 PM (1).jpegWhatsApp Image 2025-03-10 at 3.44.03 PM.jpeg
அவள் சட்டென எழுந்து அந்த அழைப்பை எடுத்து, "என்னடா எப்படி இருக்க? ரொம்ப பிசியா?" என்று வினவினாள். மறுமுனையிலிருந்த சரண், "நல்லா இருக்கேன் நிதி. நீ எப்படி இருக்க? ஆமா இப்போ தான் ஃரீயானேன். பேசியே அஞ்சி நாளாச்சி" என்று கூற நியதியோ, "ஆமா டா ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு....சரி போன விஷயம் என்ன ஆச்சு?" என்று வினவினாள். அதற்கு, "சக்ஸஸ் தான். இந்த டீலும் நமக்கு கிடைச்சிருச்சி. நாளைக்கு தான் டீல் பேபர்ஸ் சைன் பண்ண போறாங்க. முடிஞ்சதும் நாங்க சென்னைக்கு வந்துருவோம்" என்று கூறவும், "சூப்பர் டா. எனக்கு தெரியும் கண்டிப்பா நல்லபடியாதான் முடியும்னு. சீக்கிரம் வா" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

பின் அவர்கள் அந்த ஐந்து நாட்கள் பேசாததை அந்த ஒரே இரவில் பேசி முடித்தனர். நேரம் நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டுவது தெரிய, "சரி சரண் லேட் ஆயிருச்சு. நாளைக்கு முக்கியமான வேல இருக்கு. நீ தூங்க போ" என்று கூறி கைபேசியை வைத்தாள். அப்போது அந்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அந்த கருமையான வானத்தில் மின்னல் பளிச்சென மின்ன இடி முழங்க ஆரம்பித்தது. மழை வருவதுபோல் இருக்க நியதி அங்குள்ள அனைத்து ஜன்னல்களையும் சாற்றினாள்.

அப்போது அந்த அமைதியான அறையில் யாரோ மூச்சுக் காற்றை இழுத்து விடும் சத்தம் மட்டும் கேட்டது. அது நியதியின் மிக அருகில் கேட்கவும் அவளுடைய இதயத் துடிப்பு அதிகமானது. அவளுடைய பார்வை தன் முன்னிருந்த கண்ணாடியில் தற்செயலாகவிழ, தன் பின்னே ஏதோ உருவம் நிற்பது தெரிந்தது. அவள் பயத்துடன் விரைந்து திரும்பிப் பார்த்தபோது மின்னலின் ஒளியில் அந்த வெள்ளை உருவம் அங்கே நின்று கையை நீட்டி அவளை 'வா' என அழைத்தது.
WhatsApp Image 2025-03-09 at 7.56.09 PM (1).jpeg
பயத்தின் ஊச்சியிலிருந்த நியதி அதைக் கண்டதும் 'ஆ!' என அலறியவாறே அதே இடத்தில் மயங்கி விழுந்தாள்.

அவள் மயக்கம் தெளிந்து எழுந்தபோது ரஞ்சித்தும், பணியாள் ஒருத்தியும் அங்கு இருந்தனர். எழுந்தவுடன் பயத்தில் இருந்த நியதி, "அது இங்க..." என்று கூறியவளுக்கு பயத்தின் காரணமாக வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவள் கூற வருவதை அறிந்த ரஞ்சித், "இப்போதைக்கு இந்த பால குடிச்சிட்டு தூங்கு. நாளைக்கு பாத்துக்கலாம்” என்று பணியாள் கொண்டுவந்த பாலை வாங்கி அவளிடம் நீட்டினான்.

அவள் பாலை அருந்தியதும் அந்த பணியாளிடம் திரும்பி, "இன்னைக்கு இங்கயே இருந்து மேடம பாத்துக்கோ" என்று பணித்துவிட்டு அங்கிருந்து சென்றான். பயத்தில் விழித்திருந்த நியதி சற்றுநேரம் கழித்து அப்படியே உறங்கிவிட்டாள்.

அந்த இரவு வேளையில் மற்றொரு இடத்தில் இருட்டான அறையில் ஒரு பெண்ணை இருவர் இழுத்து வந்தனர். அவள் இருக்கும் இடத்தில் மட்டும் வெளிச்சம் இருக்க அந்த அறையின் மற்ற இடங்கள் இருள் சூழ்ந்து இருந்தது. அவளுடைய இரு கைகளிலும் நிறைய ஊசி போடப்பட்ட தடங்கள் இருந்தன. அரை மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை அவர்கள் சங்கிலியால் பிணைக்க அதை இருட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒரு உருவம் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தது.
WhatsApp Image 2025-03-10 at 6.50.02 PM.jpegWhatsApp Image 2025-03-10 at 3.48.53 PM.jpeg
அவளை கட்டிமுடித்ததும் அந்த அடியாட்கள் சென்றுவிட அந்த உருவம் அவளை நோக்கி நடந்துவந்து தன்னுடைய ஒற்றை விரலால் அவளுடைய முகத்தை தூக்கி உற்றுப் பார்த்தது. அவள் பாதி மயக்கத்தில் இருப்பதை அறிந்து தன் கையில் வைத்திருந்த ஊசியை அவளுக்கு போட்டது. ஊசி போட்ட வலியால் அந்தப் பெண் துடித்தாள். அவளுடைய அந்த வேதனையை ரசித்தவாறு அந்த உருவம் ஒரு கொடூரப் புன்னகை புரிந்தது.

மாயங்கள் தொடரும்...

*********************************************************************************

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்து திரியிலும் பகிர்ந்து கொள்ளலாம்...

Link

 

Krishna Tulsi

Moderator
மாயம் 26

மறுநாள் காலை ரஞ்சித்திடம் முந்தைய இரவு நடந்த விஷயத்தை நியதி விவரித்ததும் அவன் அதிர்ச்சி அடைந்தான். "என்ன சொல்ற நியதி? நிஜமாவே நீ பாத்தியா?” என்றவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். பின், "இதுநாள் வரைக்கும் இப்படி நடந்ததே இல்ல. எனக்கே வினோதமா இருக்கு. நீ சொல்றத நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. உன்ன பத்திரமா பாத்துக்கவேண்டியது என்னோட பொறுப்பு. நீ கவலப் படாத, அது என்னன்னு கண்டுபிடிக்குற வேலைய நான் பாத்துக்குறேன்" என்று அவளைத் தேற்றினான்.

அவனுடைய வார்த்தைகளில் சற்று ஆறுதல் அடைந்த நியதியின் மனதில் மற்றொரு கேள்வியும் எழுந்தது. "ரஞ்சித் இதப்பத்தி கிரிஜாமாவுக்கு தெரியுமா?" என்று கவலையுடன் கேட்க அவனோ, "அம்மாவுக்கு தூக்கம் வராதுங்குறதுனால எப்பவுமே ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டுட்டுத்தான் படுப்பாங்க. அதனால அவங்களுக்கு எதுவும் தெரியாது" என்று கூறவும் நிம்மதியடைந்தாள்.

மேலும் அவளைப் பார்த்து, "நியதி உனக்கு பயமா இருந்தா அம்மா கூட தங்கேன்?" என்று கூற நியதி யோசித்தாள். உடனே, "நீ அந்த விஷயத்த நினைச்சி பயப்படாத நான் அத பாத்துக்குறேன்" என்று அவன் கூறவும் நியதியின் மனம் அமைதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற நியதியின் மனம் வேலையில் ஈடுபடவில்லை. முந்தைய இரவு தன் காதருகே கேட்ட மூச்சுக் காத்தும், அந்த உருவமும் அவளுடைய மனதில் பலவிதமான எண்ணங்களை தோற்றுவித்து அவளுக்கு அச்சத்தைத் தூண்டின. தன்னுடைய மனதை ஏதாவது பாதித்தால் அதிலிருந்து வெளிவருவதற்காக யூ-டியூபில் 'ஊக்கமளிக்கும் மேற்கோள்களை' பார்க்கும் பழக்கம் நியதிக்கு உண்டு.

அன்று மதிய உணவின்போது தன்னுடைய கைபேசியில் யூ-டியூபைப் பார்த்தாள்.
Gemini_Generated_Image_abt3o5abt3o5abt3.jpg
ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு பத்திரிகையாளர் ஒருவர் ஆரியவர்தனை நேர்காணல் எடுத்த காணொளி கண்களுக்குத் தென்பட்டது. அதில் 'நாம் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது?' என்று ஆரியவர்தன் பேசியது தெரிய அந்த காணொளியை ஓடவிட்டாள்.
Gemini_Generated_Image_np3ko2np3ko2np3k.jpg
அதில் அந்த பத்திரிகையாளர் அவனுடைய தொழிலில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்று கேட்டதற்கு, "எல்லாருமே அவங்களோட வாழ்க்கைல பிரச்சன வந்தா அதப்பாத்து பயந்து ஓடுவாங்க. ஆனா நான் அப்படி கிடையாது, தைரியமா அத ஃஏஸ் பண்ணுவேன். பயம் ஒரு மனிதனோட சிந்திக்கும் திறனையே மழுங்கடிச்சிரும். அதனால நாம எதுக்காகவும் எப்பவும் பயப்படவே கூடாது. நான் என் பிராப்லம்ச ஒரு மூனாவது மனிஷனா தள்ளி இருந்துதான் பாப்பேன். நாம பிரச்னையோட பிரச்சனையா சேர்ந்திருந்தா அதுக்கான சொலூஷன கண்டுபிடிக்கவே முடியாது”

“ஃஆர் எக்ஸாம்பிள் இப்போ ரெண்டுபேர் செஸ் விளையாடுறாங்க. அவங்க அந்த கேம பயத்துல விளையாண்டா அதுல உள்ள சின்ன சின்ன நுணுக்கங்களக்கூட மறந்துருவாங்க. ஆனா அந்த கேம பார்வையாளனா இருந்து பாக்குறவனால ஈஸியா அதுல உள்ள நுணுக்கங்கள கண்டுபிடிக்கமுடியும். ஏன்னா அவனுக்கு வெற்றி தோல்வீங்கிற பயமே கிடையாது. அதே மாதிரிதான் நாமும் நம்ம பிரச்சனைகள பார்வையாளனா எந்தஒரு பயமும், சலனமும் இல்லாம எதிர்கொண்டா நமக்கு வெற்றி நிச்சயம்" என்று அவன் கூறவும் அந்த பத்திரிகையாளன் கைதட்டி அவனைப் பாராட்டினான்.

ஆரியனின் அந்த ஊக்கமூட்டும் பேச்சைக் கேட்டதும் நியதியின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. அவளுடைய பயம்தான் அவளை எதுவும் செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதை அறிந்த நியதி அச்சத்தை விடுத்து தைரியமாக செயல்படவேண்டும் என்று தன் மனதிற்குள் உறுதியெடுத்துக் கொண்டாள்.

அதே சமயம் இருள் சூழ்ந்த அறையில் சங்கிலியால் கட்டப்பட்ட அந்தப் பெண் மெல்ல சுயநினைவிற்குத் திரும்பினாள். அவளருகில் நிறைய பயன்படுத்தப் பட்ட ஊசியும், மருந்து பாட்டில்களும் கீழே கிடக்க அங்குள்ள காற்றில் மருந்தின் வாசனை பரவியிருந்தது. அவள் மெல்ல கண்களைத் திறந்தபோது அங்கு மாஸ்க் அணிந்த இருவர் அறையினுள் நுழைந்தனர். அவர்களது கையில் ஒரு ஊசியும் அதில் ஒரு திரவியமும் இருந்தது.
WhatsApp Image 2025-03-11 at 5.19.45 PM.jpegGemini_Generated_Image_m7fghvm7fghvm7fg.jpg
அதைக் கண்டதும் அவள் பயத்தால் 'வேண்டாம், வேண்டாம்' என்பதுபோல் கையசைக்க அவர்கள் அந்த ஊசியுடன் அவளை நெருங்கினர். அவளுடைய கைகளை பற்றவும் அவள் தன்னுடைய முழுபலத்தால் திமிறினாள், ஆனால் அவள் உடனே சோர்வடைந்தாள். அந்த ஊசியைப் போட்டதும் அவள் வலியால் துடித்தாள். அந்த இடத்தில் சங்கிலியின் உரசல் சத்தமும், அவளுடைய அலறல் மட்டுமே கேட்டது. சற்று நேரம் வலியால் கதறியவள் மீண்டும் மயக்க நிலையை அடைந்தாள்.

அங்கு பெங்களூரில் சாரா டீலை வெற்றிகரமாகப்பேசி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டாள். மருநாள் அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு கிளம்புவதாக இருப்பதால் அவள் அங்குள்ள பிரபலமான மாலுக்குச் சென்று தன்னுடைய ஷாப்பிங்கைத் துவங்கினாள். முன்புபோல் அங்குள்ள அனைத்தையும் வாங்காமல் தனக்குத் தேவையானவற்றை மட்டும் அளவோடு வாங்கினாள். அவளுடைய நடவடிக்கைகளை அருகிலிருந்தே கவனித்த சரண் ஆச்சரியம் அடைந்தான். அவன், 'இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சி? எப்பவுமே நிறைய வாங்கி குமிப்பா, இன்னைக்கு கம்மியா வாங்கீருக்கா. ஒருவேள திருந்தீட்டாளோ? நம்பமுடியலையே' என்று மனதினுள் நினைத்தவாறே அவளைப் பின்தொடர்நதான்.

அப்படி அவர்கள் செல்லும்போது சரணுக்கு ஏதோ தெரிந்த நபரைப் பார்த்தது போல் தோன்றியது. அவன் அந்த நபரை பின் தொடர்ந்து ஒவ்வொரு இடமாகச் செல்ல ஓரிடத்தில் அந்த மாலிலுள்ள கூட்டத்தின் காரணமாக தவறவிட்டான்.
Gemini_Generated_Image_gq5naigq5naigq5n.jpg
'ச்ச விட்டுட்டேனே' என்று நினைத்தவாறு நின்றுகொண்டிருந்தவனின் தோளை ஒரு கை தொட அவன் விரைந்து திரும்பினான். உடனே, "என்ன ஆச்சு சரண்? ஏன் என்ன தனியா விட்டுட்டு போன?" என்று சாரா வினவ அவனோ, "இல்ல மேடம் எனக்கு தெரிஞ்சவங்கமாதிரி இருந்துச்சு அதான்..." என்று அவன் பதிலளித்தான். "சரி போலாமா?" என்று அவள் கேட்க அவனும் 'சரி' என்று தலையசைத்துவிட்டு அவளுடன் அங்கிருந்து சென்றான். அவர்கள் செல்வதை இரண்டு கண்கள் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தது.

இரவு உணவை அந்த மாலில் முடித்துவிட்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குத் திரும்பும்போது அவர்களது கார் திடீரென நின்றது. உடனே, "என்ன ஆச்சு டிரைவர்?" என்று அவள் வினவ மற்றவரோ இறங்கிப் பார்த்துவிட்டு, "மேடம் கார் பிரேக் டவுன் ஆயிருச்சு. ஒரு மெக்கானிக் வந்துதான் சரி செய்யணும். நான் அவன வரச்சொல்றேன்" என்று பதிலளித்தான். அவள், 'சரி' என்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கேயே தன்னுடைய கைப்பேசியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

சரணுக்கு கண்ணாடிகளால் மூடப்பட்ட அந்த ஏ.சி. காரில் மூச்சுமுட்ட மேலும் இருக்கமுடியாமல் காரை விட்டு கீழே இறங்க, அவளும் அவனோடு காரை விட்டு வெளியே வந்தாள். அவள் சரணிடம், "ஏன் இறங்கிட்ட?" என்று கேட்க அவனோ, "மேடம் எனக்கு இந்த ஏ.சி. மூச்சு முட்டுது. அதான் இயற்கைகாத்த சுவாசிச்சிக்கிட்டே கொஞ்சதூரம் வாக் போலாம்னு வெளிய வந்தேன்" என்று கூறினான். உடனே அவள், "நானும் உன்கூட ஜாயின் பண்ணிக்கலாமா?" என்று ஒரு புன்னகையுடன் கேட்க சற்று திகைத்தவன் பின் ஒப்புக்கொண்டான்.

இருவரும் குளிர்ந்த காற்று அடிக்கும் அந்த இரவு வேளையில் ஆளரவம் குறைவாக இருந்த சாலையில் நடக்கத் துவங்கினர். அவள் அந்த காற்றை ரசித்தவாறு, "எவ்வளவு நல்லா, ரெஃரெஷிங்கா இருக்கு. இதுக்கு முன்னால நான் இப்படி அனுபவிச்சதே இல்ல" என்று வியந்தபோது அவன், "எப்படி மேடம் அனுபவிச்சிருப்பீங்க? நீங்க வீட்ல, கார்ல, ஆஃஸ்ல இருக்குறது எல்லாமே ஏ.சி. பிறகு எப்படி உங்களுக்கு தெரியும்? கொஞ்சமாவது ஏ.சி.யவிட்டு வெளிய வாங்க, அப்பதான் இயற்கையோட அழகு தெரியும்…அதோட இது உங்க உடம்புக்கும் நல்லது" என்று அவன் கூறவும் அவள் அதை ஒப்புக்கொண்டாள்.

அப்போது அங்கு ஐஸ்-கிரீம் வண்டியில் ஒருவர் மணியடித்தவாறே வந்துகொண்டிருந்தார். ஐஸ்-கிரீம் பிரியனான சரண் உடனே அங்கு சென்று தனக்காக சாக்கோபார் ஒன்றை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். சாரா இருப்பதைக்கூட உணராமல் தான் மட்டும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தவன் அவள் இருப்பதைக் கண்டதும், 'வேண்டுமா?' என்பதுபோல் அவளிடம் ஐஸ்-கிரீமைக் காட்டி கேட்க அவளும் 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

பின் இருவரும் அந்த சாலையில் ஐஸ்-கிரீமை உண்டவாறே நடந்தனர்.
Gemini_Generated_Image_j3ckuvj3ckuvj3ck.jpg
அவள் சாப்பிடும்போது சிறுபிள்ளையைப் போல் ஆங்காங்கே அவளுடைய முகத்தில் ஐஸ்-கிரீம் இருப்பதைப் பார்த்து சரண் நகைத்தான். அவனைப் பார்த்து, 'என்ன?' என்பதுபோல் தலையசைக்க தன் கைபேசியால் அவளை புகைப்படம் எடுத்து அவளிடம் காட்டினான்.
Gemini_Generated_Image_mowsd6mowsd6mows.jpg
அதைப் பார்த்தவள் தன் கைக்குட்டையைத் தேடினாள். உடனே சரண் தன்னுடையதைக் கொடுக்க, ஒரு அசட்டுப் புன்னகையுடன் அதை வாங்கி தன்னை சுத்தம்செய்து கொண்டாள். அவர்கள் பேசிக்கொண்டே சென்றபோது, சரணைப் பற்றி அறியும் ஆவலில், சாரா அவனிடமே அனைத்தையும் கேட்டு அறிந்துகொண்டாள். அவளுடைய மனதில் சரணின் மீதான காதல் மேலும் அதிகரித்தது. கார் சரியாவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் அவர்கள் இருவரும் ஒரு கேபை புக் செய்து ஹோட்டலுக்குத் திரும்பினர்.

மறுநாள் காலை சென்னையில் நியதி அலுவலகத்திற்குச் சென்று தன்னுடைய அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்தாள். ஆரியனின் சொற்பொழிவைக் கேட்டதிலிருந்து அவளுடைய மனதில் ஒரு தைரியம் பிறந்தது. அவள் எதற்கும் அஞ்சாமல் ஒரு தெளிவான புத்தியுடன் செயல்பட ஆரம்பித்தாள். அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை வீடுதிரும்பிய நியதி அந்த உருவம் பற்றிய உண்மையை கண்ணனை வணங்கிவிட்டு ஆராயத் துவங்கினாள்.

தன்னுடைய ஆராய்ச்சியின் முதற்படியாக, பேக்யார்டில் அந்த உருவத்தை முதன் முதலில் தான் பார்த்த இடத்திற்குச் சென்றாள்.
Gemini_Generated_Image_x5i76qx5i76qx5i7.jpg
அங்கு சுற்றும் முற்றும் தேடியவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவள் நிராசையுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தபோது அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் வெள்ளைநிறப்பொடி ஒரு சிறு குவியலாக இருப்பதைக் கண்டாள். சந்தேகத்தின் அடிப்படையில் அதில் ஒரு பகுதியை சிறு பிளாஸ்டிக் பையினுள் எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்.

இரவில் மீண்டும் அந்த இருட்டு அறையில் இருந்த பெண் சுயநினைவுக்கு வந்தாள். உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் பாதிக்கப்பட்ட அவள் அழுதுகொண்டே இருந்தாள். ஆனால் பாவம் அவளுக்கு அழுவதற்கு கூட சக்தியில்லாத நிலை.
Gemini_Generated_Image_wh382pwh382pwh38.jpg
உடனே அவள், "ஏன் என்ன தினமும் இப்படி சித்ரவத பண்ற. நீ யாரு? இப்படி அணு அணுவா டார்ச்சர் பண்றதுக்கு பதிலா ஒரேடியா என்ன கொன்னுடு. முடியல....என்னால முடியல எனக்கு ரொம்ப வலிக்கிது. தயவுசெய்து என்ன விட்டுரு. இதனால உனக்கு என்ன கிடைக்க போகுது..." என்று அவள் வலுவிழந்து ஈனக்குரலில் கத்தியபோது அந்த முகமூடி மனிதன் அந்த அறையினுள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அந்தப் பெண்ணின் கண்களில் பயமும், கோபமும் அதிகரித்தது. அவன் மெல்ல அவளருகே வந்து, "நீ அவ்வளவு சீக்கிரமா சாகக் கூடாது. ஏன்னா எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்....கவலைப்படாத என் வேல முடிஞ்சதும் நானே உனக்கு சென்ட்-ஆஃ பார்ட்டி வச்சி அனுப்பீருவேன். அதுவரைக்கும் நீ மரணத்த கெஞ்சி கேட்டா கூட உனக்கு அது கிடைக்காது. நீ இந்த வலியையும், வேதனையையும் அனுபவிச்சுதான் ஆகணும். அது உன்னோட விதி. ஆரியவர்தன் தங்கச்சியான உனக்கு நான் குடுக்குற குறைஞ்சபட்ச தண்டன இதுதான்" என்று கூறி அவன் வன்மமாக சிரிக்க அவளுடைய சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
Gemini_Generated_Image_dalerjdalerjdale.jpg

மாயங்கள் தொடரும்...

*********************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம்...

Link
 

Krishna Tulsi

Moderator
மாயம் 27

சரணும், சாராவும் பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பினர். அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை சரணும் நியதியும் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் பூங்காவில் பகிர்ந்துகொண்டனர். முதலில் சரண், "நிதி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவா பேரு 'சாரா' கிடையாது 'சரஸ்வதி'யாம். நாங்க டீல் சைன் பண்ண போனோம்ல அவர் சொல்லிதான் தெரியும். 'சரஸ்வதி'ன்னு பேர் வச்சிக்கிட்டு 'சாரா', 'போரா'ன்னு சொல்லிக்கிட்டிருக்கா" என்று கூறி அவன் சிரிக்க அவளோ, "எனக்கு இது ஏற்கனவே தெரியும்டா" என்று பதிலளித்தாள்.
WhatsApp Image 2025-03-15 at 1.44.08 PM.jpeg
உடனே, "நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?" என்று கேட்கவும் அவள், "இப்படி கிண்டல் பண்றீல அதான் சொல்லல" என்று கூறவும் அவன் முகத்தில் அசடு வழிந்தது. உடனே அவன், "உனக்கு ஒண்ணு தெரியுமா அந்த 'ராட்சசி'யோட நடவடிக்கைல நிறைய வித்யாசம் தெரியுது. முன்னமாதிரி என் மேல எறிஞ்சிவிளாம ரொம்ப சாஃடா பேசுறா. அவா..." என்று ஆரம்பித்தவன் அங்கு சாரா செய்த அனைத்தையும் உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருக்க நியதி அவனை ஒரு புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அந்தப் புன்னகையால் சற்று குழம்பியவன் அவளை பார்த்து, "ஏன் சிரிக்குற?" என்று கேட்க அவளோ, "அவங்க மாறுனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியல ஆனா நீ கண்டிப்பா மாறிட்ட" என்று கூற அவன் அவளை லேசாக முறைதான். "நீ சொல்றதெல்லாம் பாத்தா மேடம்கு உன்மேல 'சம்திங் சம்திங்' இருக்கோன்னு தோணுது" என்று கூறி அவள் கண்சிமிட்ட அவனோ, "அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீயா எதையாவது கற்பன பண்ணாத....ஆமா உனக்கு இங்க எப்படி போச்சி? வேல நிறைய இருந்திருக்கும்ல?" என்று அவன் கேட்டான்.

"ஆமாடா முதல்ல கஷ்டமா இருந்தது, ஆனா அதுக்கப்பறம் பழகீருச்சி...டேய் உன்னோட ஃரெண்டு கெமிக்கல் அனலிஸ்ட்டா இருக்கான்னு சொல்லீருக்கீல. அவன்கிட்ட இதக்குடுத்து டெஸ்ட் பண்ண சொல்றியா?" என்று கூறியவள் தன் கையில் வைத்திருந்த பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.

அதைப் பார்த்து, "என்னடி பவுடர் மாதிரி இருக்கு?" என்று கேட்க அவளோ, "ஆமாடா...இதப்பத்தி எனக்கு தெரியனும்" என்று கூறினாள். "இது எங்க கிடைச்சது?" என்று வினவ நியதியோ, "இப்போதைக்கு கேக்காத. பிறகு சொல்றேன்" என்று கூறவும் சரண் அந்தப் பேச்சை விட்டான். சிறிதுநேரம் அவர்கள் பேசி சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

சாராவின் பிறந்தநாள் இன்னும் இரண்டே நாட்களில் வரவிருந்தது. அவளுடைய பிறந்தநாளன்று ஒரு பெரிய விழாகொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் கலந்துகொள்வதற்காக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சாரா தன்னுடைய பிறந்தநாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள், ஏனென்றால் சரண் மீது கொண்ட காதலை அன்றுதான் அவனிடம் தெரிவிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தாள். ஒருபுறம் சந்தோஷம் இருந்தாலும், மறுபுறம் ‘சரண் அதை ஏற்றுக்கொள்வானா?’ என்ற பயமும் அவள் மனதில் இருந்தது.

அதே சமயம் விராஜுக்கு சாராவின் பிறந்தநாள் விழாவைப் பற்றிய செய்தி தெரியவந்தது.
WhatsApp Image 2025-03-15 at 1.44.08 PM (2).jpeg
அவன் தன்னுடைய பி.ஏ.விடம், "மிஸ் சாராவோட பிறந்தநாள் எப்போ?" என்று கேட்க அவனோ, "இன்னும் டூ டேஸ்ல சார்... ஆனா அந்த பார்ட்டிக்கு அவங்க குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேட்டிவ்ஸ் மட்டும் தான் இன்வைட் பண்ணீருக்காங்க" என்று கூறவும் விராஜின் முகம் மாறியது. சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தவன், "பரவா இல்ல இதுவும் நல்லதுக்கு தான்" என்று கூறி குரூரமாகப் புன்னகைத்தான். அவனுடைய மனதில் பயங்கரமான திட்டம் ஒன்று தோன்றியது.

சரணும் நியதியும் மதியஉணவின்போது, "நிதி நீ ஒரு பவுடர் குடுத்தீல, அத என் ஃரெண்டுகிட்ட டெஸ்ட் பண்ண அன்னைக்கே கொடுத்துட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் அது என்னங்குறத சொல்லீருவான். அதனால நாம அவன மீட் பண்ணனும். ரெடியா இரு" என்று கூறவும் நியதி 'சரி' என தலையசைத்தாள். அதைப் பற்றி அறிந்துகொள்ள நியதி மிகவும் ஆவலாக இருந்தாள்.

அன்று மாலை அவர்கள் இருவரும், சரணின் நண்பனான ரகுவை கஃபேயில் சந்தித்துப் பேசினர்.
WhatsApp Image 2025-03-15 at 1.44.07 PM.jpeg
"இந்த பவுடர் என்னது மிஸ்டர் ரகு?" என்று நியதி கேட்க அவனோ அதனுடைய பெயரைக் கூறிவிட்டு, “உலகத்துலயே மோசமான ட்ரக்ஸ்ல இதுவும் ஒண்ணு. அத யூஸ் பண்ணா ஹாலூசினேஷன் உண்டாகும் அதாவது இல்லாதத இருக்குறமாதிரி காட்டும். அதிக அளவுல தினமும் பயன்படுத்தினா கோமாவுக்கு போறதுக்கு கூட சான்ஸ் இருக்கு. இது டிரக் டீலர்ஸ் இல்லாட்டி டிரக்ஸ் யூஸ் பண்றவங்ககிட்ட மட்டும் தான் இருக்கும். உங்ககிட்ட எப்படி?" என்று ரகு கேட்க நியதியும் சரணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "நான் சொல்றத சொல்லீட்டேன்" என்று அவன் அங்கிருந்து கிளம்பினான்.

அவர்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தபோது, "அத தயவுசெஞ்சி தூக்கி எரி. அவன் சொல்லும்போதே எனக்கு மயக்கம் வந்திருச்சி....ஏய் உனக்கு இது எங்க கிடைச்சது?" என்று அவன் விசாரிக்க முதலில் மௌனமாக இருந்தவள், பின் நடந்த அனைத்தையும் விவரித்தாள். அவள் ஒவ்வொரு விஷயமாகக் கூறும்போதே சரணின் கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.

உடனே அவன், "இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட ஒருவார்த சொல்லல" என்று சிறு கோபத்துடன் கேட்க அவள் எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். "அதுனால தான் அன்னைக்கு பேய் அது இதுன்னு கேட்டுட்டு இருந்தியா?" என்று அவன் வினவ, 'ஆம்' என்று மட்டும் தலையசைத்தாள். "இத அங்க இருக்குற யாரோ யூஸ் பண்றாங்களோ?" என்று சந்தேகத்துடன் கேட்க அவளோ, ‘யாரா இருக்கும்?’ என்று எண்ணினாள்.

சிறிதுநேரம் தீவிர யோசனையில் ஆழ்ந்தவளுக்கு ஏதோ பொறிதட்ட, "ஒருவேள அவங்க பயன்படுத்துறது தெரியக்கூடாதுங்குறதுக்காக ‘பேய்’ன்னு சொல்லி திசைதிருபுறாங்களோ?" என்று தனக்கு தோன்றியதைக் கூறினாள். அவனோ, "அப்படிக் கூட இருக்கலாம். முதல்ல இத ரஞ்சித்சார்ட்டப்போய் சொல்லு. அவர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பாரு" என்றதும் அவள் ஒப்புக்கொண்டாள்.

மறுநாள் காலை நியதி ரஞ்சித்தை தேடிச்சென்றபோது அவன் தன் வீட்டிலுள்ள அலுவலக அறையில் வேலை செய்துகொண்டிருந்தான். அனுமதிபெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தவள் காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு தான் சொல்லவந்த விஷயத்தைக் கூறத் துவங்கினாள். தன் கையில் வைத்திருந்த அந்த பவுடர் பாக்கட்டை காட்டி, "ரஞ்சித் இது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க அவன் புரியாமல் அவளையும் அந்த பாக்கட்டையும் பார்த்தான்.

"இது ஒரு மோசமான ட்ரக். இங்க இருக்குற யாரோதான் இத பயன்படுத்துறாங்க" என்று தான் கண்டுபிடித்ததை ரஞ்சித்திடம் கூறினாள். அவள் கூறியதைக் கேட்டவன் முதலில் புரியாமல் விழிக்க, "இல்ல நியதி அதுக்கு வாய்ப்பே இல்ல. அந்த பழக்கம் இங்க யாருக்குமே கிடையாது...ஆமா இது உனக்கு எங்க கிடைச்சது?" என்று அவன் கேட்க, "பேக் யாட்ல உள்ள அந்த பெரிய மரம். அந்த பேய பாத்ததா சொன்னேன்ல அதே மரத்துப் பக்கத்துல இருந்துதான் கிடைச்சது" என்று பதிலளித்தாள். சிறிது நேரம் யோசித்தவன், "வீடு முழுக்க சி.சி.டி.வி கேமெரா இருக்கு. அதுல பாத்தா தெரிஞ்சிரும்" என்று கூறியவன் நியதியோடு சி.சி.டி.வி கேமெரா கண்ட்ரோல் ரூமிற்குச் சென்றான்.
WhatsApp Image 2025-03-15 at 2.32.09 PM.jpeg
நேற்றுக்கு முந்தையதினத்தின் பேக் யார்டிற்குரிய இரவுநேரக் காணொளியை ஓடவிட்டு பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் கையில் ஒரு மூட்டையை சுமந்துகொண்டு சென்றது. திடீரென அதனுடைய கால் இடரவும் அந்த மூட்டை கீழே விழ அதிலிருந்து சிறிதளழவு வெள்ளைப் பொடி விழுந்தது. அதே நேரம் அந்த உருவத்தின் முகம் அப்போது தெரிந்தது. அதைக் கண்டதும், "இது பாண்டியன் ஆச்சே" என்று அதிர்ச்சியுடன் கூறினான். பாண்டியன் வேறுயாருமல்ல அங்கு பணிபுரியும் தலைமை தோட்டக்காரன்.

அப்போது அவன் மனதில் மற்றொரு எண்ணமும் தோன்றியது. உடனே நியதி பேய்யைக் கண்டதாகக் கூறிய அந்த நாளிற்குரிய சி.சி.டி.வி. பதிவையும் காட்டுமாறு பணிக்க அங்கிருந்தவனும் அவ்வாறே செய்தான். அதில் எந்தஒரு பேயின் உருவமும் தெரியவில்லை ஆனால் அதற்கு மாறாக அவர்கள் சென்றதும் ஒரு உருவம் அந்த மரத்திலிருந்து குதிப்பது தெரிந்தது. அதுவும் வேறுயாரும் அல்ல அதே பாண்டியன்தான் என்பது அதில் நன்றாகத் தெரிந்தது.

அதனைக் கண்டதும் ரஞ்சித்தின் முகம் கோபத்தால் சிவக்க, "பாண்டியன்" என்று ஆக்ரோஷமாகக் கத்த, நியதி பயந்துவிட்டாள். வெளியே வேலை செய்துகொண்டிருந்த அனைத்து வேலையாட்களும் அஞ்சி நிற்க மறுநொடியே அவனுடைய மெய்காப்பாளர்களால் ரஞ்சித்தின் முன்னால் பாண்டியன் நிறுத்தப்பட்டான். தன் அவுட் ஹவுஸிலுள்ள பெரிய ஹாலில் ரஞ்சித் பெரிய சோஃபாவில் அமர்ந்திருக்க அவனுக்கருகே போடப்பட்ட மற்றொரு சோஃபாவில் நியதி அமர்ந்திருந்தாள்.
WhatsApp Image 2025-03-14 at 10.08.33 PM (1).jpeg
நியதியிடமிருந்து வாங்கிய வெண்ணிறப் போடி வைக்கப்பட்டிருந்த பாக்கட்டை அவன் முன் இருந்த டீபாயில் போட்டுவிட்டு, "இது என்னன்னு தெரியுதா?" என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக்கேட்டான்.

அதைக் கண்டதும் பாண்டியனின் முகம் மாற அவன் படபடக்க ஆரம்பித்தான். "எனக்...தெரி...யாது..." என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, "பொய் சொல்லாத...அன்னைக்கு அந்த மரத்துக்கு பின்னால நின்னதும் நீதான?" என்று அவன் கேட்க பாண்டியனுக்கு உடல் அனைத்தும் வியர்த்துக்கொட்டியது. 'அதுவும் தெரிஞ்சிருச்சா' என்று அவன் தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தபோது, "இதெல்லாம் நீ யார் சொல்லி பண்ற?" என்று அடுத்த கேள்வி ரஞ்சித்திடமிருந்து பிறந்தது. அவன் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே நின்றுகொண்டிருக்க, "உனக்கு இதெல்லாம் சரிவராது..." என்றவன் கண்ணால் சைகை செய்ய அருகிலிருந்த மெய்காப்பாளன் பாண்டியனருகே ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து வந்து அவன் முதுகில் அடிக்கவும் நியதி அதிர்த்தாள்.

"ரஞ்சித் என்ன பண்றீங்க. அவன அடிக்காம போலீஸ்கிட்ட ஒப்படைச்சிருங்க" என்று கூறவும். "இல்ல நியதி இந்த மாதிரி ஆட்களுக்கு என் ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட்" என்று கூற அந்த பாண்டியன் மீது மேலுமொரு பலத்த அடி விழுந்தது. உடனே அவனுடைய வாயிலிருந்து குருதி வழிவதைப் பார்த்த நியதி, "தயவுசெஞ்சி இப்படி பண்ணாதீங்க. ப்ளீஸ்..." என்று அழுத்தமான குரலில் கூறவும் ரஞ்சித் தன் மெய்காப்பாளர்களை பார்த்து சைகை செய்ய அவர்கள் பாண்டியனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

சற்று தீவிரமான யோசனையிலிருந்தவனைப் பார்த்து, "என்ன ஆச்சு ரஞ்சித்?" என்று நியதி வினவினாள். "இத யாரு செஞ்சிருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று அவன் கூற நியதி கேள்வியாக ரஞ்சித்தை நோக்கினாள். "இது அந்த விராஜோட வேலதான். ஆரிய அவமானப் படுத்துறதுக்காக என்ன பயன்படுத்துறான். நான் அதுக்கு கண்டிப்பா விடவேமாட்டேன்" என்று உறுதியான குரலில் கூறினான்.

பின் நியதியைப் பார்த்து, "ஐ அம் சாரி நியதி. நீ சொல்றத அன்னைக்கே கேட்டிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது..." என்று அவன் மன்னிப்பு கோரவும், "இட்ஸ் ஓகே ரஞ்சித். இப்பயாவது தெரிஞ்சுசே. அதுவே போதும்" என்று பதிலளித்தாள்.

அதே சமயம் விராஜ் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்தபோது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. புன்முறுவலுடன் அந்த அழைப்பை எடுத்தவன் அதை துண்டித்தபோது கோபத்தின் உச்சிக்கே சென்றான். உடனே தன்னுடைய கையில் வைத்திருந்த கைபேசியை கோபத்துடன் சுவற்றில் வீசி எரிய அது சுக்குநூறாக உடைந்து தரையில் விழுந்தது. "ஒரு வேலைய கொடுத்தா ஒழுங்கா கூட செய்யத்தெரியால. இர்ரெஸ்பான்சிபிள் இடியட்ஸ்" என்று கோபத்தில் உறுமினான்.

அன்று சாராவின் பிறந்தநாள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அவளுடைய தந்தை ராஜாராமனிடமிருந்து வீடியோ கால் வந்தது. "மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃ த டே பிரின்சஸ்" என்று தன் வாழ்த்துக்களைக் கூறவும் அவள் தன் நன்றியைத் தெரிவித்தாள். "எப்படி இருக்க? அப்பா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா" என்றவரிடம் அவளும், "ஐ டூ மிஸ் யூ பா. எனக்கு உங்க நியாபகமாவே இருக்கு" என்று சிறு வருத்தத்துடன் கூறினாள்.
WhatsApp Image 2025-03-15 at 2.15.05 PM.jpeg
"உன் பிறந்தநாளுக்கு உன்கூட இருக்கமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு" என்று அவர் சோகத்துடன் கூறவும் மகளோ, "உங்க உடம்பு சரியானதும் நீங்க இந்தியா வாங்க. இப்போதைக்கு நீங்க அங்கயே ரெஸ்ட் எடுங்க பா" என்று அறிவுரை கூறினாள். பின், "உன் லைஃ எப்படி போகுது?" என்று அவர் கேட்க அவளோ, "ரொம்ப நல்லா போகுது. இந்தியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க..." என்று கூறிக்கொண்டே சென்றாள்.

மகளுடைய பேச்சில் சற்று மாறுதலை உணர்ந்த அவர், "யாரையாவது காதலிக்கிரியா சரஸ்?" என்று கேட்க அவள் சட்டென தன்னுடைய பேச்சை நிறுத்தினாள். அவள் மௌனமாக இருப்பதைக் கண்டவர் அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவள் மெல்ல புன்னகைக்க, "ஹூ இஸ் தாட் லக்கி மேன்?" என்று கேட்டார். அவள், "சரண்" என்று பதிலளித்துவிட்டு அவர்களின் முதல் சந்திப்பிலிருந்து பெங்களூர் சென்றதுவரை அனைத்தையும் தன் தந்தையிடம் விவரித்தாள்.

அவள் சொன்னவிதத்திலிருந்தே அவருக்கும் சரணைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. மேலும் அன்று மாலை நடக்கவிருக்கும் பிறந்தநாள் விழாவில் தன்னுடைய காதலை அவனுக்குத் தெரிவிக்கப் போவதாகக் கூறினாள். உடனே, "ஆல் தி பெஸ்ட் பிரின்சஸ்" என்று வாழ்த்தினார். சிறிதுநேரம் பேசிவிட்டு சாரா இணைப்பை துண்டித்தாள். தன்னுடைய டேபிள் டிராயரிலிருந்து கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அதைப் பார்த்தவாறே படுக்கையில் சாய்ந்தாள். அது வேறு எதுவுமல்ல சரண் தவறவிட்டதாக நினைக்கும் அதே கடிகாரம். தன்னுடைய பிறந்தநாள் விழாவில் அதை சரணுக்கு அணிவித்து காதலை தெரிவிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

மாலை பிறந்தநாள் விழாவிற்கு அவளுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் வருகைதந்தனர். விழா ஏழு நட்சத்திர ஹோட்டலில் ரூஃப் டாப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரா அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீளமான கவுன் ஒன்றை அணிந்து அதற்கேற்றாற்போல் டைமென்ட் நெக்லஸ்ஸும் அணிந்திருந்தாள்.
WhatsApp Image 2025-03-14 at 7.55.40 PM.jpeg
சரண் அவளையே மெய்மறந்து பார்த்தவாறு நின்றான். நியதிதான் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தாள். அவர்கள் சாராவிற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சாராவின் பார்வை சரணை விட்டு அகலவில்லை. அங்கு ஆரியனும் வருகைதந்து வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு பரிசையும் கொடுத்தான். கேக்கை வெட்டிமுடித்துவிட்டு அனைவரும் அந்த பார்ட்டியில் சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தபோது சரணை சாரா அழைத்ததாக வெயிட்டர் கூறவும் அவன் அவளைப் பார்க்கச் சென்றான். "மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃ தி டே மேடம்" என்று கூற அவள், "தாங்க் யூ" என்று மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தாள்.

பின், "உன் கைய நீட்டு நான் உனக்கு ஒரு கிஃட் குடுக்கணும்" என்றவளிடம், "மேடம் இன்னைக்கு உங்களுக்கு தான பிறந்தநாள். நான் தான் உங்களுக்கு கிஃட் குடுக்கணும். நீங்க குடுக்க போறேன்னு சொல்றீங்க?" என்று கேட்டான். உடனே அவள், "இது என் ஸ்டைல். கைய நீட்டு..." என்றவாறு அவனுடைய கையைப் பிடித்தாள். அந்த கடிகாரத்தை அவனுக்கு அணிவித்தபோது ஆச்சரியத்தால் அவளைப் பார்த்தான். பின் அவனுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், "ஐ லவ் யூ சரண்" என்று கூற அவன் மேலும் திகைத்தான்.
WhatsApp Image 2025-03-15 at 2.15.05 PM (1).jpeg
அவன் பேச்சிழந்து நிற்கும்போது, "உனக்கு இது அதிர்ச்சியா இருக்கும்னு தெரியும். எனக்கு உன்ன எப்படி பிடிச்சதுன்னே தெரியல. ஆனா நீ என் லைஃல வந்தா நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று கூறினாள். அவள் கூறுவதைக் கேட்டு அப்படியே உறைந்து நின்ற சரணிடம், "நீ உன்னோட முடிவ இப்பவே சொல்லணுங்கிற அவசியம் இல்ல. மெதுவா யோசிச்சி நல்ல முடிவா சொல்லு" என்றாள். எதுவும் சொல்லாமல் சிலையாய் நின்றவன் அங்கிருந்து நியதியிடம் வந்தான்.

அவனைப் பார்த்ததும், "என்னடா மேடம் என்ன சொன்னாங்க? என்ன ஆச்சி ? ஏன் இப்படி இருக்க?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
WhatsApp Image 2025-03-15 at 7.00.02 PM.jpeg
சரணிடமிருந்து எந்த பதிலும் வராததால், "டேய் நான் உன்கிட்டதான் கேக்குறேன்..." என்று வினவ, "அவா என்ன லவ் பண்றாளாம்" என்றதும் நியதி ஆச்சரியமடைந்தாள். மிகவும் மகிழ்ச்சியுடன், "அதுக்கு நீ என்னடா சொன்னா?" என்று கேட்டவுடன், "நான் ஒண்ணும் சொல்லல அப்படியே வந்துட்டேன்" என்று கூறவும் நியதிக்கு கோபம் உண்டாயிற்று.

"லூசு...ஏன்டா எதுவும் சொல்லல?" என்று கேட்க அவனோ, "இல்ல நிதி அவங்க ஸ்டேட்டஸ் வேற என்னோடது வேற. அது செட்ஆகாது" என்று கூறினான். "என்ன செட்ஆகாது?" என்று கோபத்துடன் கேட்கவும், "நான்தான் உன் விஷயத்துல பாக்குறேன்ல. மறுபடியும் அதே தப்ப நானும் செய்யவா? வேண்டாம் நிதி" என்று மட்டும் கூறினான். உடனே அவள், "டேய் என் விஷயம் வேற, உன்னோடது வேற. அவங்களே உன்கிட்ட வந்து லவ்வ சொல்லீருக்காங்க. மிஸ் பண்ணீராத. பொறுமையா நிதானமா யோசிச்சி ஒரு முடிவ சொல்லு…அவங்க ரொம்ப நல்லவங்கடா" என்று கூற சரணும் யோசிக்கத் துவங்கினான்.

சரணும் நியதியும் பேசுவதை ஆரியன் நோக்கினான். அவன் ‘வியூ பாயிண்ட்’ என்று கூறப் படும் அந்த உயரமான இடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த பார்ட்டி நடக்கும் அதே இடத்தில்தான் இருந்தது. அங்கிருந்து சென்னை நகரத்தின் மொத்த அழகையும் பார்க்க முடியும். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு சென்றவன் நியதியைக் கண்டதும் அவளை ரசிக்கத் துவங்கினான்.

அப்போது பின்னிருந்து யாரோ ஆரியனின் வீல் சேரை காலால் ஓங்கி உதைக்க அவன் தடுமாறி கீழே விழச்சென்றான். அப்போது அவன் பாதுகாப்புக்காக போடப்பட்ட கம்பியை பிடித்துக்கொள்ள அந்த வீல் சேர் மட்டும் அதிக சத்தத்துடன் கீழே விழுந்தது. அது விழும் சத்தம் கேட்டு அந்த பார்ட்டியிலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மேலே நோக்கியபோது அந்த உயரமான இடத்திலிருந்து ஆரியன் தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
WhatsApp Image 2025-03-14 at 1.52.16 PM.jpeg
அதைக் கண்டதும் நியதியின் கண்களிலிருந்து தன்னையறியாமலே தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. பிரம்மை பிடித்தவள் போல் ஆரியனையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். அவளருகே இருந்த சரண் ஒரு நொடிகூட தாமதிக்காமல் ஆரியனைக் காப்பாற்ற அந்த இடத்திற்கு விரைந்தான். அங்குள்ள கம்பிகளை இறுக்கமாக பிடித்திருந்த ஆரியனின் கை மெல்ல நழுவத்துவங்கியது. அவனுடைய விரல்கள் ஒவ்வொன்றாக அந்த கம்பியிலிருந்து நழுவ இறுதியில் ஒரு விரலால் மட்டும் கம்பியை பிடித்திருந்தான். சிறிதுநேரத்தில் அவனுடைய கடைசி பிடியும் நுழுவியது.

மாயங்கள் தொடரும்...

****************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம் 🥰🥰

Link

https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 28

அப்போது ஒரு கை ஆரியனின் வலிய கரத்தைப் இறுகப் பற்றியது.
WhatsApp Image 2025-03-17 at 6.24.36 PM.jpeg
அது வேறு யாருமல்ல, ஆரியனின் ஆருயிர் நண்பனான ரஞ்சித். ஆரியனின் ஒரு கையை அவன் பிடித்து இழுக்க அதே சமயம் மற்றொரு கையை பார்கவ் பிடித்தான். சிலநிமிட போராட்டத்திற்குப் பின் இருவரும் ஆரியனை மேலே தூக்கினர். அப்போது அந்த வியூ பாயிண்ட் இடத்திற்கு மற்றவர்ளும் வந்து சேர்ந்தனர். மறுநொடியே அவனை வீட்டிற்கு அழைத்து வந்ததும் மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

ஆரியனைக் கண்ட சந்திரமதி மிகவும் மனம் வருந்தினார். அவனது வலது கையில் லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்கு கை கவண் போடப்பட்டதும் மருத்துவர் சில மருந்துகளை குறிப்பெழுதி கொடுத்துவிட்டு கிளம்ப மற்றவர்கள் அங்கேயே இருந்தனர். அப்போது ஆரியன், "சாரி சரஸ், என்னால உன்னோட பர்த்டே பார்ட்டி ஸ்பாயில் ஆயிருச்சி" என்று கூறவும் அவள், "டேய் என்னடா பேசுற? ஒரு செகண்ட்ல எனக்கு ஹார்ட் பீட்டே நின்றுச்சி தெரியுமா? நீ என்னனா பார்ட்டியபத்தி பேசுற?" என்று சரஸ் உரிமையுடன் கடிந்தபோது ஆரியன் லேசாக புன்னகைத்தான். அப்போது ரஞ்சித், "நீ ஏன் அங்க போன? எப்படி ஆச்சு?" என்று அக்கறையுடன் விசாரித்தான்.

அதற்கு அவனோ, "அங்க இருந்து சென்னை சிட்டியோட மொத்த அழகயும் பாக்கலாம்ன்னு போனேன். திடீர்னு ஸ்லிப் ஆயிருச்சு அதான்...." என்று பதிலளித்தவனை இடைமறித்து, "ஸ்லிப் ஆயிருச்சா? என்னடா கேஷுவலா சொல்ற? எங்க எல்லாருக்கும் எப்படி இருந்துச்சி தெரியுமா? யப்பா...." என்று பெருமூச்சுவிட்டாள் சாரா. அப்போது தற்செயலாக அவளுடைய கண்கள் அங்கு நின்ற பார்கவின் மீது பட, "பார்கவ் நீ எப்பவுமே அவன் கூடதான இருப்ப, அந்தநேரம் எங்க போன?" என்று கோபத்துடன் கேட்டாள்.

உடனே, "அது...அது ஒரு இம்பார்டன்டான பிசினஸ் கால் ஒண்ணு வந்துச்சி மேம் அதான் சார டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ணு நானே..." என்றவனை, "என்ன பார்கவ் இப்படி இர்ரெஸ்பான்சிபிள்ளா பதில் சொல்ற? பிசினஸ் முக்கியம்தான் ஆனா அதவிடவும் நமக்கு ஆரி ரொம்ப முக்கியம்...நீ இனிமேல் அவன ஒரு நிமிஷம் கூட தனியா விடக்கூடாது. ஓகே?" என்றதும், "ஓகே மேம்" என்று தலையை தாழ்த்தியவாறே பதிலளித்தான். அதைப் பார்த்த ஆரியன், "இப்ப பார்கவ ஏன் திட்டுற? பாரு அவன் பயந்துட்டான்" என்று கூறி புன்னகைக்க அவளோ அவனைப் பார்த்து முறைத்தாள்.

இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டியதும் ஆரியன், "எல்லாரும் கிளம்புங்க ரொம்ப லேட் ஆயிருச்சி" என்று கூற சரஸோ, "இல்ல ஆரி இன்னைக்கு நாங்க இங்கதான் இருக்கப்போறோம்" என்று கூறினாள். உடனே, "என்ன பாத்துக்க இங்க நிறையபேர் இருக்காங்க டோன்ட் வொரி" என்றவனிடம் ரஞ்சித், "இல்ல நான் இன்னைக்கு நைட் இங்கதான் தங்கப்போறேன்" என்று உறுதியாகக் கூற மற்றவனோ, "எனக்கு ஒண்ணும் இல்ல. பயப்படாத, காலைல பாக்கலாம்" என்று அவனையும் ஆரியன் கிளப்பினான்.

நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவராத, நியதி அவர்கள் பேசுவதை மட்டும் பார்த்துக்கொண்டே நின்றாள். ஆரியனின் அருகிலிருந்து அவனைப் பார்த்துக்கொள்ள எண்ணியபோதும் அவளுக்கு சூழ்நிலை இடம்கொடுக்கவில்லை. அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றாள். அதுவரையில் ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டே இருந்த ஆரியன் அனைவரும் அங்கிருந்து செல்ல தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

அதே இரவு ஆரியன் தப்பித்த செய்தியை அறிந்த விராஜ், "இப்பவும் தப்பிச்சிட்டியா? ஒவ்வொரு தடவையும் நழுவிகிட்டே இருக்க. இன்னைக்கு இல்லைனா என்ன...என்கிட்ட ஒருநாள் கண்டிப்பா மாட்டுவ. அப்ப பாத்துக்குறேன்...உன்னோட முக்கியமான ட்ரம்ப்காட் என்கிட்ட மாட்டி இருக்கு..." என்று கூறியவன் வில்லத்தனமாகச் சிரித்தான்.

இரவு முழுவதும் ஆரியனைப் பற்றிய நினைவிலேயே நியதி சரியாக உறங்கவில்லை. மறுநாள் காலையில் அவள் விரைந்து எழுந்து அருகிலுள்ள கிருஷ்ணரின் கோவிலுக்குச் சென்றாள். ஆரியனின் நலனுக்காக பிரார்தித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
WhatsApp Image 2025-03-17 at 3.29.18 PM.jpeg
அவனைக் காண ஏங்கியவள் ஒரு வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தாள். அலுவலகத்தில் சாரா ஆரியனைப் பார்க்கப் போவதாகக் கூறியவுடன் தானும் அவளுடன் இணைந்து அவனைப் காணச் சென்றாள். அவனுடைய அறைக்கு சென்றபோது ஆரியன் தன்னுடைய காலை உணவை முடித்திருந்தான்.
WhatsApp Image 2025-03-17 at 3.30.34 PM.jpeg
நியதி அங்கு வந்ததைக் கண்டதும் அவன் மனம் மகிழ்ந்தான். ஆனாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே இருந்தான். சாரா ஆரியனின் உடல்நிலையை விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியபோது நியதி தன் கையிலிருந்த விபூதியை அவனுக்கு கொடுக்குமாறு சாராவிடம் சைகையில் கேட்க சாராவோ சற்று யோசித்தவளாய், "பாட்டி கூப்பிட்டாங்க. நான் அவங்கள பாத்துட்டு வந்துடறேன். நீயே அவன்கிட்ட குடுத்துரு" என்று சாக்கு கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அந்த அறையில் சற்றுநேரம் அமைதி நிலவியது. பின், "இப்ப எப்படி சார் இருக்கு?" என்ற நியதி கேட்க அவனோ, "பரவா இல்ல" என்று மட்டும் கூறினான். அடுத்து என்ன கேட்பது என்று அவள் யோசிப்பதற்குள், "உன் கைல என்ன?" என்று அவனே கேட்டான். "அது...கோவிலுக்கு போனேன். அதான் விபூதி...." என்றவள் சற்று தயங்கியவாறு விபூதி இருந்த கையை நீட்டினாள். ஆரியனுக்கு கடவுள், கோவில் என்பதெல்லாம் பிடிக்காது என்று அவள் அறிந்திருந்ததால் முதலில் காட்டாமல் வைத்திருந்தாள். ஆனால் அவனோ அவளுடைய மனதை நன்கு அறிந்தவனாய் எந்த ஒரு தயக்கமுமின்றி விபூதியை எடுக்கச் சென்றதும் அவள் ஆச்சரியமடைந்தாள்.

அவன் விபூதி எடுப்பதற்கு கஷ்டப் படுவதைப் பார்த்து முதலில் தயங்கியவள் பின் தானே அவனுடைய நெற்றியில் இட்டாள்.
WhatsApp Image 2025-03-17 at 4.11.34 PM.jpeg
அவர்களது கண்கள் ஒருவரை ஒருவர் நோக்க அப்படியே அசையாமல் இருந்தனர். அங்கு வந்த சரஸின் இருமல் சத்தம் கேட்டு இருவரும் யதார்த்தத்திற்கு வந்தனர். எதுவும் தெரியாததுபோல் இருவரும் வெவ்வேறு திசையை நோக்க அதைப் பார்த்த சரஸ் புன்னகைத்தாள். பின் அவளும் நியதியும் அங்கிருந்து அலுவலகத்திற்கு கிளம்பினர். ஆரியன் மிக விரைவிலேயே குணமடைந்தான்.

அந்த இருட்டு அறையில் மெல்லிய சூரிய ஒளி ஊடுருவி பொலிவிழந்து காணப்பட்ட அதிதியின் முகத்தில் விழுந்ததும் மயக்கத்திலிருந்தவள் சுயநினைவுக்கு வந்தாள். அதைக் கண்டதும், 'என்னோட இருண்ட வாழ்க்கைல எப்பதான் வெளிச்சம் வருமோ...கடவுளே' என்று அவளுடைய மனம் ஏங்கியபோது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. அப்போது அங்குவந்த முகமூடி மனிதன் தன்னை நோக்கி வருவதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். "யாருடா நீ? என்ன ஏன் இப்படி கொடுமைப்படுத்துற? உனக்கு ஈவு இரக்கமே இல்லையா? நீயெல்லாம் மனுஷன் தானா? இதனால உனக்கு என்ன கிடைக்கபோகுது. எதுக்காக இப்படி செய்யிற? இப்பயாவது காரணத்த சொல்லு" என்று தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆவேசமாகக் கத்தினாள்.
WhatsApp Image 2025-03-17 at 4.11.35 PM.jpeg
அவன் ஒரு அரக்கனைப் போல் சிரித்துவிட்டு, "நீ என்ன கத்துனாலும் யாரும் வரமாட்டாங்க. என் தேவ முடிஞ்சதும், உன்ன எங்க அனுப்பணுமோ அங்கயே அனுப்பீருவேன்" என்று சொல்லி அவன் தன் கையில் ஊசியை எடுத்தான்.

அவளுடைய, 'வேண்டாம், வேண்டாம்' என்ற அலறலையும் பொருட்படுத்தாமல் அந்த ஊசியை போட்டான். அதிதி மயங்கிவிட்டாள் என்று எண்ணி தன்னுடைய முகமூடியை கழற்றியவன் அந்த அறையிலுள்ள இருட்டிலிருந்து வெளிச்சத்திற்காக போடப்பட்ட லைட்டின் அருகில் வந்தான். அப்போது அரை மயக்கத்திலிருந்த அதிதி அது யார் என்பதைக் கண்டாள். அவனைப் பார்த்ததும் அதிச்சி அடைந்தவள் பின் அந்த மருந்தின் வீரியத்தால் மயக்கமடைந்தாள்.

அன்று ஞாயிறு என்பதால் சரணும் நியதியும் மாலிற்கு சென்றனர். சிலநேரம் சுற்றிவிட்டு மதிய உணவிற்காக ஃஉட் கோட்டில் அமர்ந்திருந்தபோது, "என்ன சரண் முடிவெடுத்திருக்க?" என்று கேட்க மற்றவனோ புரியாமல் அவளை நோக்கினான். "சரஸ் விசயத்த சொன்னேன்" என்றதும் சிறு மெளனத்திற்குப் பின், "இன்னும் சரியான டெசிஷன் எடுக்க முடியல நிதி. எனக்கு என்ன சொல்லன்னே தெரியல" என்றான். உடனே அவள், "நிதானமா யோசிச்சி ஒரு நல்ல முடிவ எடு. அவள மிஸ் மட்டும் பண்ணீராத" என்று கூறினாள். பின் அந்த பேச்சை விடுத்து வேறுவிஷயங்களைப் பேசினர்.
WhatsApp Image 2025-03-17 at 4.16.48 PM.jpeg
அவர்கள் வீட்டிற்குக் கிளம்பும்போது ஒரு பெண் வேகமாக நியதியின் மீது மோதினாள். அவளைப் பார்த்ததும் நியதி அடையாளம் கண்டுகொண்டவளாக, "ஹே சுரேகா. வாட் எ சப்ரைஸ். உங்கள பாத்தே ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க?" என்று கூற சுரேகாவும் லேசாக புன்னகைத்து, "நல்லா இருக்கேன் மேம்" என்று மட்டும் பதிலளித்தாள்.
WhatsApp Image 2025-03-16 at 6.22.34 PM (1).jpeg
சுரேகா வேறு யாருமல்ல ரஞ்சித்தின் பி.ஏ.. நியதி ஆரியவர்தனிடம் வேலை செய்தபொழுது அவளை அடிக்கடி சந்திக்க நேரிடும். அப்போது அவர்களுக்கிடையே ஒரு சிநேகிதம் உண்டாயிற்று. அவ்வளவு நெருக்கம் இல்லை என்றாலும் இருவருக்கும் இடையே ஒரு நட்புணர்வு மட்டும் இருந்தது. நியதி அரியனைப் பிரிந்ததிலிருந்து சுரேகாவை சந்திக்கும் வாய்ப்பும் வெகுவாகக் குறைந்தது. இப்போது மீண்டும் அவளைப் பார்த்தபோது நியதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் முன்பு அவளிடம் பார்த்த சிரிப்பும் துறுதுறுப்பும் காணாமல் போனதை உணர்ந்த நியதி, "என்ன ஆச்சி? ஏன் டல்லா இருக்கீங்க?" என்று வினவினாள்.

அதற்கு, "என் வேல போயிடுச்சி" என்றதும் மற்றவள் அதிர்த்தாள். "என்ன சொல்றீங்க? என்ன நடந்தது?" என்று அவள் விசாரிக்க சுரேகாவோ, "எப்பவுமே நான் அக்கவுண்ட்ஸ் டிபாட்மென்ட் போகவே மாட்டேன். அன்னைக்கு ஒரு வேலவிஷயமா ஃல் தேவைப்பட்டதுனால அங்க போனேன். ஆனா மேனேஜர் திலீப் அத கொடுக்கவே இல்ல. எனக்கு அப்பவே அவன்மேல சந்தேகம் வந்துச்சி. அதனால ஒரு தடவ அவனுக்கு தெரியாம அந்த ஃல நான் எடுத்து பாத்தேன். அப்பதான் எனக்கு அவன் நிறைய பணமோசடி பண்றான்னு தெரியவந்துச்சி. யாருக்குமே சந்தேகம் வராத அளவுக்கு பணத்த எடுத்திருக்கான். இத எப்படியாவது ரஞ்சித் சார்கிட்ட சொல்லலாம்னு நினச்சேன், ஆனா அதுக்குள்ள என் மேல வேற ஒரு பழிய சுமத்தி வேலைய விட்டு தூக்க வச்சிட்டான். ரஞ்சித் சார் முதல்ல அவன நம்பல, ஆனா அவன் எனக்கு எதிரா நிறைய பொய்யான எவிடென்ஸ பக்காவா ரெடி பண்ணி வேலைய விட்டு தூக்க வச்சிட்டான். அவன கையும் களவுமா பிடிச்சி ரஞ்சித் சார் கிட்ட புரூவ் பண்ண எவிடேன்ஸ் சேகரிச்சிகிட்டு இருக்கேன். இதுக்காக தர்ஷனும் எனக்கு ஹெல்ப் பண்றாரு" என்று கூறினாள்.

தர்ஷன் சுரேகாவின் காதலன். சுரேகாவிற்கு வேலை பரிபோனதும் அவளுக்கு உதவுவதற்காக அந்த அலுவலகத்தில் இருந்துகொண்டே அனைத்து செய்திகளையும் சேகரித்து அவளுக்கு தெரிவிப்பான். "கவலைப்படாதீங்க உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன். தயங்காம கேளுங்க" என்று நியதி கூறவும் நன்றியுடன் புன்னகைத்தாள். பின் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

அதே நாள் அந்த இருள்சூழ்ந்த அறையில் அதிதி மயக்கத்திலிருந்து மெல்ல எழுந்தாள். ‘இங்கிருந்து எப்படியாவது தம்பியாக வேண்டுமென்று’ நினைத்தவளுக்கு ஒரு யோசனை உதித்தது. அறையினுள் இரண்டு முகமூடி அணிந்த அடியாட்கள் நுழைவது தெரியவும் அவள் மூர்ச்சை அடைந்ததுபோல் எழாமல் அப்படியே சாய்ந்துகிடந்தாள். பலமுறை எழுப்ப முயற்சித்தும் அவள் எழாமல் அப்படியே இருக்க அவர்கள் பயந்துபோயினர்.

"டேய் இவ மட்டும் செத்துட்டானா, நம்மள பாஸ் கொன்னுபோட்ருவாரு. சீக்கிரம் அந்த சங்கிலிய கழட்டு அவள அந்த சிக் ரூம்கு கூட்டீட்டு போலாம்" என்று கூறி அவளுடைய சங்கிலிகளை அவிழ்த்தனர். மறுகணமே அவள் அருகிலிருந்த ஊசியை எடுத்து அவர்களைக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறினாள். எங்கு இருக்கிறோம் என்று தெரியாத நிலையிலும் தன் கால் போன போக்கில் அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஓடினாள். அவள் வேகமாக ஓட அந்த அடியாட்கள் இருவரும் அவளைப் பிடிப்பதற்காக பின்தொடர்ந்தனர். அவர்களிடமிருந்து தப்பியவள் நெடுஞ்சாலையை வந்தடைந்தாள். அதைக் கடக்கும்போது வேகமாக வந்த ஒரு வாகனம் அவள் மீது மோத தலையில் பலத்த அடியோடு மயங்கி கீழே விழுந்தவள் குருதி வெள்ளத்தில் கிடந்தாள்.
WhatsApp Image 2025-03-17 at 3.30.35 PM.jpeg
மாயங்கள் தொடரும்...

*********************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் தெரிவிக்கலாம் :love::love:

Link
https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 29
எந்தஒரு அசைவும் இல்லாமல் கிடந்த அதிதியை தூக்குவதற்காக அடியாட்கள் விரைந்தபோது அங்கு கூட்டம் கூடியது. ‘அதற்குமேல் அங்கு நின்றால் பிடிபட்டுவிடுவோம்’ என்று எண்ணி பயந்தவர்கள், அவள் பிழைப்பதற்கு வழியில்லை என்பதை உறுதிசெய்துவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

‘இந்த விஷயத்தை தங்களுடைய எஜமானரிடம் எப்படி தெரிவிப்பது?’ என்ற பயத்திலும் குழப்பத்திலும் இருந்தபோது முகமூடிமனிதன் அந்த அறையினுள் நுழைந்தான். அவனைக் கண்டதும் அந்த இருவருக்கும் பயம் மேலோங்க கைகள் அச்சத்தால் நடுங்கியது. அவர்களது நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்தவன், "என்ன ஆச்சி?” என்று சற்று அழுத்தமான குரலில் கேட்டான்.

"அது...வந்து...அவா..." என்று அவர்கள் இழுக்க பொறுமையிழந்தவனாய், "அவளுக்கென்ன?" என ஆக்ரோஷத்துடன் கத்தவும் இருவரும் பயந்து நடந்த அனைத்தைத்தையும் கூறினர். அதிதி இருந்த நிலையில் அவள் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மேலும் கூற அவன், "எரும மாதிரி இருக்குற! நிதானத்துல இல்லாத ஒருத்திய தப்பிக்க விட்டுட்டு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே கதை சொல்லுவ? அவ செத்தாலும் இங்கதான் சாகணும்" என்று குரூரமாகக் கத்தியவன் அவர்கள் இருவரையும் கோபத்துடன் பார்த்தான். “நீங்க எனக்கு அடியாளா இருக்க லாயக்கில்ல, உயிரோட இருக்கவும் தகுதியில்ல" என்றவன் சட்டென தன் துப்பாக்கியால் இருவரையும் சுட்டுத்தள்ளினான்.

இங்கு, வேலை இடைவேளையின்போது நியதியும் சரணும் கேஃடீரியாவில் காஃபி அருந்திக்கொண்டிருந்தபோது நியதி, சரஸ் விஷயத்தைப் பற்றி மறுபடியும் கேட்க சரண் மௌனமாகவே இருந்தான். "டேய் உனக்கு சரஸ்ஸ பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் பின்ன ஏன் அத மறைக்குற? உன் மனசுல இருக்குறத சொன்னாதான தெரியும்" என்றவளிடம் சரண் பேசத் துவங்கினான்.

"நீ சொல்றது உண்மதான். எனக்கு சரஸ்ஸ ரொம்பவே பிடிக்கும். ஆனா இதுல அவா சம்மதம் மட்டும் போதாது, அவளோட பெத்தவங்க சம்மதமும் ரொம்ப முக்கியம். பிள்ளைங்களுக்கு எப்பவுமே பெஸ்ட்டானத தான் குடுக்கணும்னு பேரன்ட்ஸ் நினைப்பாங்க. அந்த கொடுப்பினை எனக்கில்ல, ஆனா சரஸ்க்கு அப்படி கிடையாது; அவளுக்காக எல்லாத்தையும் பாத்து பாத்து செய்ய அப்பா இருக்காரு. அவரு தன்னோட பொண்ணுக்கு எப்படிப்பட்ட கணவன் வரணும்னு பல கனவுகள் வச்சிருப்பாரு”

“அவருக்கு என்ன பிடிக்குமா என்னன்னு எனக்கு தெரியாது, ஆனா இந்த கல்யாணம் நடக்கனும்னா அதுக்கு அவரோட சம்மதம்தான் ரொம்பவே முக்கியம்....பெத்தவங்களோட அருமை நம்மள விட வேற யாருக்கு நிதி நல்லா தெரியும்" என்று சரண் கூற நியதியும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டாள்.

சரணும் நியதியும் சந்தர்ப்ப சூழ்நிலையினால் பெற்றவர்களை சிறுவயதிலேயே இழந்தவர்கள். அவர்களுக்கு பெற்றவர்களின் அருமையும் அவர்கள் இல்லாது போனால் வாழ்வில் ஏற்படும் வெறுமையும் நன்கு உணர்ந்தவர்கள். அதனால் தான் சரண் அப்படிக்கூறினான்.

நியதியும் அவனும் பேசிக்கொண்டிருந்தபோது, "தம்பி எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? எனக்கும் ஒரு கப் காஃபி வாங்கித்தரமுடியுமா?" என்று அவர்கள் அருகிலிருந்த சேரில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்க சரண் ஒரு புன்னகையுடன், 'சரி' என்று தலையசைத்துவிட்டு அவருக்காக காஃபியை வாங்கிக் கொடுத்தான்.

பின், "சார் இதுக்கு முன்னால நான் உங்கள இங்க பாத்ததே இல்ல... உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று அவன் கேட்க அந்த பெரியவரோ, "எனக்கு தெரிஞ்சவங்கள பாக்க வந்திருக்கேன்" என்று பதிலளித்தார். உடனே அவன், "யாருன்னு சொல்லுங்க, நான் உடனே கூப்புடுறேன்" என்று கூறவும் அவர், "பரவா இல்ல. நானே போய் பாத்துக்குறேன். தேங்க யூ" என்று புன்முறுவலுடன் அங்கிருந்து சென்றுவிட நியதியும் சரணும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர்.

அவர்கள் வேலைசெய்யும் இடத்திற்கு வந்தபோது அங்கிருந்த சக பணியாளர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் என்ன என்று விசாரித்தபோது அவர்களுள் ஒருவன், "மேடமோட அப்பா வந்திருக்காங்க சரண் சார். அவங்க கேபின்ல தான் ரெண்டுபேரும் பேசிகிட்டு இருக்காங்க" என்று கூற நியதியும் சரணும் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அப்போது சரணை சாரா அழைப்பதாகக் கூறவும் அவன் அவளுடைய கேபினுக்கு விரைந்தான்.
WhatsApp Image 2025-03-18 at 10.21.49 PM.jpeg
அனுமதிபெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால் அங்கு அந்த கேஃடீரியாவில் சந்தித்த அதே பெரியவர் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் சரஸ் அறிமுகம் செய்தாள். பின் அவர் மாலையில் அவனை அருகிலிருக்கும் காஃபி ஷாப்பில் சந்திப்பதாகக் கூற அவனும் ஒப்புக்கொண்டான்.

அதே நாள் மாலையில் பார்கவ் ‘வர்தன்ஸ் மேன்ஷனில்’ ஒரு கோப்பு தேவைப்படுவதாகக் கூறிவிட்டு அங்குள்ள அனைத்து அறைகளிலும் எதையோ தேடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ரஞ்சித், "பார்கவ்" என்று அழைக்கவும் மற்றவனுக்கு இதயத் துடிப்பே நின்றுபோனது. அவன் மெல்ல திரும்பியபோது, "இங்க என்ன செய்ற?" என்று ரஞ்சித் வினவ மற்றவனோ, "அது....வந்து....வர்தன் சார் அந்த ப்ராஜக்ட் ஃபைல் கேட்டாரு. அத எடுக்க வந்தேன்" என்று கூறி சமாளித்தான்.
Gemini_Generated_Image_agijyuagijyuagij.jpg
ஆனால், "அத ஏற்கனவே அவன்கிட்ட குடுத்துட்டேனே அப்பறம் எப்படி உன்கிட்ட கேட்டான்?" என்று அவன் யோசிக்க பார்கவ் எதுவும் பேசாமல் அப்படியே நின்றான். பின், "சரி...அவன் உன்ன கீழ தேடுறான். போ" என்று ரஞ்சித் கூற மற்றவன் அங்கிருந்து விரைந்து கிளம்பினான். ரஞ்சித், 'இவன் ஏன் வித்யாசமா நடத்துகிறான்?' என்று யோசிக்கலானான்.

அதே சமயம் சரணும் சரஸின் தந்தையான ராஜாராமனும் காஃபி ஷாப்பில் சந்தித்தனர்.
Gemini_Generated_Image_nfrhzinfrhzinfrh.jpg
சரண் தன்னை அறிமுகம் செய்துகொள்ள சரஸின் தந்தை பேசத் துவங்கினார், "நான் நேரா விஷயத்துக்கு வரேன். என் பொண்ணு உன்ன காதலிக்கிறதா சொன்னா. அதான் அவா லவ் பண்ற பையன் எப்படி இருக்கான்னு ஒரு அப்பாவா பாக்குறதுக்காக நான் இந்தியா வந்திருக்கேன். சரஸ் எடுக்குற முடிவு எப்பவுமே சரியாதான் இருக்கும். அதே மாதிரி தன்னோட லைஃ பாட்னர சூஸ் பண்றதுலயும் அவா சரியான முடிவுதான் எடுத்திருக்கா" என்று கூற சரண் புரியாமல் விழித்தான்.

அவர், "நீங்க உங்க ஃரெண்டோட பேசுறத நான் கேட்டேன். லவ் பண்ணும்போது எப்பவுமே அவங்கள பத்திமட்டும்தான் நினைப்பாங்க. சுத்தியிருக்குறவங்களபத்தி யோசிக்கிறதே கிடையாது. ஆனா நீ அந்த பொண்ணோட குடும்பத்தப்பத்தியும் நினைக்கிற, இப்படி ஒரு நல்ல பையன் நானே தேடினாகூட கிடைக்கமாட்டான். எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூர்ண சம்மதம்" என்று கூறவும் சரண் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைந்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஒரு நெருடல் இருந்தது.

அவன், "சார் நீங்க உங்க பொண்ணுக்கு உங்க ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலான பையன கல்யாணம் பண்ணிவைக்கணும்னு நினைச்சிருப்பீங்க. நான் உங்க அளவுக்கு..." என்று இழுத்தவனை இடைமறித்து, "எப்பவுமே ஸ்டேட்டஸ்ங்குறது பணத்தவச்சி வர்றது இல்ல மனுஷனோட குணத்த வச்சி வர்றது. என் பொண்ண நல்லா பாத்துக்குற பையன் மட்டும்தான் எனக்கு வேணும். சரஸ் உங்ககூட சந்தோஷமா இருப்பாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு...மாப்பிள" என்று அவர் கூறவும் சரண் இன்ப அதிர்ச்சியடைந்தான்.

உடனே அவனும், "உங்கள மாதிரியான ஒரு குடும்பம் கிடைக்க நானும் குடுத்துவச்சிருக்கணும்...மாமா" என்று கூறி தன்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்திய சரணைப் பார்த்து ராஜாராமன் புன்னகைத்தார். இந்த விஷயத்தை சரஸ் அறிந்தபோது அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் வேகமாக வந்து சரணை சந்தித்தபோது அவன் தன்னுடைய காதலை அவளுக்கு வெளிப்படுத்தினான். அவர்களுது காதலுக்கு ஆரியன், நியதி என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அன்றிலிருந்து அவர்களது காதல் படலம் துவங்கியது.

அன்று அதிதியின் மூன்றாமாண்டு நினைவுநாள். வர்தன்ஸ் மேன்ஷனில் எப்பவும் போல அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. இந்த முறை சரஸ் அதில் கலந்துகொள்ள அவளுடைய செக்ரட்டரி என்ற முறையில் நியதியும் அங்கு வந்தாள். நியதிக்கு போனவருடம் அதே நாளில் நடந்த அனைத்தும் நினைவிற்கு வந்தது.

சென்றமுறை ஆரியனின் மனைவியாக அந்த வீட்டில் இருந்தவள் இப்போது வேற்றாளாக அங்கு வந்திருக்கும் தன்னுடைய நிலையை நினைத்து மிகவும் வருந்தினாள். அனைவரும் அந்த பெரிய ஹாலில் காத்துக்கொண்டிருந்தபோது ஆரியன் அந்த இடத்திற்கு வந்தான். அவனுடைய முகத்தில் வழக்கத்தைவிடவும் சோகம் அதிகமாகக் காணப்பட்டது.

அவனுடைய மனநிலையை நன்கு அறிந்த நியதியால் மட்டுமே அவன் படும் துயரத்தை உணரமுடிந்தது. அனைத்து சடங்குகளும் முடிவுற்றபிறகு தன் தங்கையின் பிரிவை தாங்கமுடியாத ஆரியன் பார்ம் ஹவுஸில் தனிமையில் நேரம் செலவிடபோவதாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான். அவனது துயரத்தை அறிந்ததால் யாரும் அவனைத் தடுக்கவில்லை.

அப்படியே சில நாட்கள் கடந்தன. அந்த சமயம் ஆரியன் தன்னுடைய அலுவலக அறையில் முக்கியமான விஷயம் பற்றி கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அந்த அறையின் கதவருகே பார்கவ் நின்றுகொண்டு ஆரியன் பேசுவதை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் அவனால் தெளிவாக கேட்க இயலவில்லை.

அப்போது அறையின் வெளியே ஒருவரின் நிழல் தெரியவும் ஆரியன் பிறகு பேசுவதாகக் கூறிவிட்டு தன்னுடைய கைபேசியை வைத்தான். மெல்ல தன்னுடைய வீல் சேரில் நகர்ந்தவாறு கதவருகே வந்தவன் சட்டென அதைத் திறந்தான்.
WhatsApp Image 2025-03-18 at 10.21.50 PM.jpeg
அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவன் குழப்பமடைந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அந்த அறையினுள் சென்று ஆரியன் கதவை சாற்றிக்கொண்டான். அப்போது அந்த அறையின் அருகிலிருந்த தூணின் பின் ஒளிந்து நின்ற பார்கவ் வெளியே வந்தான். ‘நல்லவேள தப்பிச்சிட்டேன்' என்று எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டவன் ஆரியன் இருந்த அறையைய் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் அங்கிருந்து அகன்றான்.
WhatsApp Image 2025-03-18 at 10.21.49 PM (1).jpeg
மாயங்கள் தொடரும்...
*********************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் பதிவிடலாம்

Link

https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 30
நாட்கள் சில கடந்தன. சுரேகாவின் காதலனான தர்ஷன் நிறைய ஆதாரங்களை யாரும் அறியா வண்ணம் சேகரித்தான். அப்போது அவனுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. தர்ஷனும், சுரேகாவும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு பென்ட்ரைவில் ஏற்றிவிட்டு, நியதியை கைபேசியில் அழைத்தனர். அவள் அதை எடுத்ததும் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சுரேகா நியதியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்க அவளும் அங்கு விரைந்தாள்.

வீட்டுக் கதவை பலமுறைத் தட்டியும் திறக்காத காரணத்தால் அருகிலிருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்குள்ள காட்சியைக் கண்டவளின் கண்கள் அதிர்ச்சியால் விரிய கண்ணீர் வழிந்தது.
_06ccd57f-ad0a-4ee6-aabb-fbc628e5be1b.jpg
ஏனென்றால் கழுத்தறுபட்டு சுரேகா ஒரு திசையில் கிடக்க வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு அவளுடைய காதலன் தர்ஷன் மற்றொரு திசையில் குருதி வெள்ளத்தில் கிடந்தான்.

அவள் உடனே தன்னுடைய முழு பலத்தை வைத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது சுரேகா இறந்து கிடைக்க தர்ஷன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தான். அவள் தர்ஷனின் அருகே சென்று, "இது எப்படி நடந்தது?" என்று பதற்றத்துடன் வினவ அவனோ தான் கண்டுபிடித்த அனைத்து உண்மைகளையும் கூறி இந்த சதிச் செயலுக்கு யார் காரணம் என்பதையும் தெரிவித்தான்.

அதை அறிந்ததும் நியதி அதிர்ந்தாள். ஆனால் விரைவிலேயே யதார்த்தத்திற்கு வந்தவள் தர்ஷனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறவும் அவன், "இல்ல நியதி இனி நான் பிழைக்கமாட்டேன். நீங்க எங்களுக்கு உதவி செய்யணும்னு நினைசீங்கன்னா இந்த எவிடன்ஸ வர்தன் சார்கிட்ட கொடுத்திருங்க" என்று தான் மறைத்துவைத்திருந்த பென்ட்ரைவை அவளிடம் கொடுத்த மறுநொடியே அவனுடைய உயிர் பிரிந்தது.
WhatsApp Image 2025-03-22 at 7.20.04 PM.jpeg
அவள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் அங்கிருந்து ஆரியனை பார்ப்பதற்கு விரைந்தாள். ஆட்டோ ஒன்றில் ஏறச் சென்றபோது ஒரு பெண் அவள் மீது தெரியாமல் மோதியதும் அவளுடைய கைப்பை மற்றும் அந்தப் பெண்ணின் புத்தகங்களும் கீழே விழுந்தன.
Gemini_Generated_Image_5ewopr5ewopr5ewo.jpg
இருவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொண்டு அங்கிருந்து அகன்றனர்.

ஆரியனைப் பார்க்க அவனுடைய வீட்டிற்கு விரைந்தபோது அவன் பார்ம் ஹவுஸில் இருப்பதாக அங்கிருந்த பணியாட்கள் கூறவும் நியதி அவ்விடத்திற்கு விரைந்தாள். அங்கு சென்றபோது ஆரியன் ஒரு அறையிலிருந்து வெளியே வந்தான். அவனைக் கண்டதும் அவனருகே சென்று, "ஆரியன் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அது..." என்று அவள் ஆரம்பிக்கும்போதே அங்கு வந்த ரஞ்சித், "என்னடா ஆரி? எதுக்கு கூப்பிட்ட?" என்று கேட்டபோது அவனுடைய கண்கள் அங்கிருந்த நியதியின் மீது பட்டது.

உடனே, "ஹே நியதி நீ எப்ப வந்த?" என்றவனிடம், "ஓ!...நீங்களும் இங்கதான் இருக்கீங்களா!" என்று ஏளனத்தொனியில் கேட்டாள்.
WhatsApp Image 2025-03-22 at 7.08.57 PM.jpeg
ரஞ்சித் புரியாமல் விழிக்க, "நீ ஏன் இங்க வந்த?" என்று ஆரியன் அழுத்தமான குரலில் கேட்டவுடன் அவள் அவனிடம் திரும்பி, "உங்ககிட்ட நான் தனியா பேசணும்” என்றதும் அவனோ, "நான் ரஞ்சித்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசப்போறேன் நீ கிளம்பு" என்றான். அதைப் பொருட்படுத்தாமல், "இது அதவிட முக்கியமான விஷயம்.முதல்ல இதக்கேளுங்க. உங்களோட ஒரு கம்பெனியான டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிய மிஸ்டர் ரஞ்சித் தானே பாத்துக்குறாரு. அதுல பெரிய பணமோசடி நடக்குறது உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க ஆரியன் ரஞ்சித்தைப் பார்த்தான்.

மற்றவன் புரியாமல் விழிக்க நியதி, "...சொல்லீருக்க மாட்டாரு. எப்படி சொல்லுவாரு? ஏன்னா அத பண்றதே அவர்தான். அடிச்ச பணத்த வச்சி டிரக்பிசினஸ் பண்றாரு. இவரு ஒரு பெரிய டிரக் மாஃபியா. இவருக்கு நிறைய இடத்துல கனக்ஷன் இருக்கு. இவர் மட்டுமில்ல....அவரோட சேர்ந்து வர்தன் கார்பரேட்ஸோட பரம எதிரியான விராஜும் பண்றாரு" என்று ரஞ்சித்தை குற்றம் சாட்டினாள்.

பின், "இதுமட்டும் இல்ல நீங்க இந்த வீல்-சேர்ல இருக்குறதுக்கும், உங்க அப்பா, தங்கச்சி இறந்ததுக்கும் இவர்தான் காரணம்" என்று கூறியவள் ரஞ்சித்தின் அருகில் சென்று, "எப்படி ரஞ்சித் உங்களால இப்படியொரு நம்பிக்கை துரோகம் பண்ணமுடிஞ்சது? இவ்வளவு நம்புறவர போய் இப்படி ஏமாத்தீருக்கீங்களே...ச்ச்சை" என்று அருவருப்பு மிகுந்த குரலில் கூறினாள்.

உடனே, "நியதி நீ யார பேசுறங்குறது உனக்கு தெரியுமா?” என்று சற்று குரலை உயர்த்தி ஆரியன் கேட்க அவளோ, "தெரியுது....ஃரெண்டு, ஃரெண்டுன்னு சொல்லி ஏமாத்திகிட்டு இருந்த ஒரு நயவஞ்சகன பத்திதான் சொல்றேன். ஒரு ஆட்டு உடைக்குள்ள மறஞ்சி இருக்குற ஓநாயத்தான் பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது" என்று கோபத்துடன் அடுக்கிக்கொண்டே போனாள்.

அவளுடைய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் சற்று கோபமடைந்த ரஞ்சித், "ஜஸ் ஸ்டாப் இட் நியதி. வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத.... உனக்கு என்மேல என்ன கோவம்னு எனக்கு தெரியல. உன்ன யாரோ நல்லா பிரைன் வாஷ் பண்ணீருக்காங்க. என் நட்புமேலயே சந்தேகப் படுரியா?” என்று கேட்டான். உடனே ஆரியன், “ஏதாவது ஆதாரம் இருக்கா?” என்று கேட்க மற்றவளோ, "இருந்துச்சி, ஆனா அது இப்ப இல்ல....சுரேகாவும், தர்ஷனும் இவர் பண்ண எல்லா தில்லுமுல்லையும் தெரிஞ்சி உங்ககிட்ட சொல்லலாம்னு வர்றதுக்குள்ள அவங்கள அநியாயமா கொண்ணுடாரு" என்று கூற எந்த சலனமும் இல்லாமல் ஆரியன் அப்படியே அமர்ந்திருந்தான்.

உடனே ரஞ்சித், "என்ன இறந்துட்டாங்களா? எப்படி?" என்று கேட்க அவளோ, "ரொம்ப நல்லா நடிக்கிறீங்க...நீங்களே கொன்னுட்டு எதுவுமே தெரியாதமாதிரி கேக்குறீங்களா?....ஆனா அத மறைக்கலாம்னு நினைக்காதீங்க அவங்க எவிடென்ஸ என்கிட்டதான் இருக்கு..." என்று கூறி தன் கைப்பையில் அந்த பென்டிரைவை தேடினாள். பலமுறை தேடியும் அது கிடைக்கவில்லை. அப்போது தான் தன் மீது மோதிய பெண் ரஞ்சித்தின் கையாள் என்பதை உணர்ந்தாள்.

அவள் செய்வதறியாது விழித்தபோது ரஞ்சித், "நியதி ஒருத்தவங்க மேல பழிபோடுறதுக்கு முன்னாடி பலதடவ யோசிக்கணும். ஏன்னா ஆதாரம் இல்லாம யாரும் நம்பமாட்டாங்க..." என்று அவளைப் பார்த்துக் கூற நியதி முறைத்தாள். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது, "ஆதாரம் இருந்தா ஒத்துக்குவியா?" என்று கணீரென ஆரியனின் குரல் கேட்க மற்றவர்கள் ஆச்சரியத்துடன் அவனைத் திரும்பிப்பார்த்தனர்.

உடனே ரஞ்சித், "என்ன சொல்ற?" என்று கேட்க ஆரியனோ, "புரியலயா? இப்ப புரியும்….நீ இருட்டுல இருந்தது போதும், வெளிய வா" என்று அழைக்க அருகிலிருந்த அறையிலிருந்து முக்காடு அணிந்த ஒரு பெண் அந்த ஹாலிற்குள் நுழைந்தாள். அவள் மெல்ல ஆரியனின் அருகே வந்து நின்றாள். முக்காடை விலக்கி தன்னுடைய முகத்தைக் காட்டியபோது அங்கிருந்தவர்களின் கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன. ஏனென்றால் அந்தப் பெண் வேறுயாருமல்ல ஆரியனின் ஆருயிர் தங்கை அதிதி.

அன்று அதிதி சென்று மோதிய வாகனம் வேறு யாருடையதும் அல்ல அவளுடைய சோதரனான ஆரியனுடையது. 'இறந்துவிட்டாள்' என்று நினைத்த தங்கை மீண்டும் உயிரோடு வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான். ஆனால் அவள் இருந்த நிலையைக் கண்டதும் அவன் மனம் உடைந்தான். இதயத்தை பல இடிகள் தாக்கியதைப் போல் உணர்ந்தான். அவனுடன் இருந்த பார்கவும் அவளைக் கண்டதும் மகிழ்ந்தான். அதேசமயம் அவளுடைய அந்த பரிதாபமான நிலையைக் கண்டு மனம் வருந்தி, கண்களிலிருந்து வரவிருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டான்.

பின் அதிதியை ஆரியன் யாருமறியா வண்ணம் பார்ம் ஹவுஸில் வைத்திருந்தான். அந்த விஷயம் பார்கவுக்குக்கூட தெரியாது. அவை அனைத்தையும் அதிதியின் பாதுகாப்பு கருதியே செய்தான். அடிபட்டதால் கோமாவிற்குச் சென்றவள் தீவிர சிகிச்சையால் மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். அப்படி வந்தவள் நடந்த அனைத்தையும் தன் தமையனிடம் விவரித்தாள்.

அவளை அங்கு கண்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த ரஞ்சித், "நீ இன்னும் சாகலயா?.......ம்ம்...இனிமேல் மறச்சி எந்த பிரயோஜனமும் இல்ல....ஆமா நான் தான் செஞ்சேன். அதுக்கு இப்ப என்ன?" என்று கூறும்போதே அவனுடைய குரலில் மாற்றம் தெரிந்தது. அனைவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “'ஆரியவர்தன்'ங்கிறது பேர் கிடையாது, அது 'பிராண்ட்'. அதுக்கு இருக்குற மரியாதையும், பவரும் தனின்னு எல்லாருக்கும் தெரியும். அந்த இடத்துக்கு வர்றதுக்காகத்தான் இத்தன வேலையும் செஞ்சேன்" என்று வன்மமாகச் சிரித்தான்.

உடனே, "ஏன் அப்பாவ கொன்ன? அவரு உன்ன தான் பையன் மாதிரிதான வளர்த்தார். உன்னால அவருக்கு எப்படிடா துரோகம் பண்ணமுடிஞ்சது?" என்று தன் மனதிலிருந்த ஆற்றாமையை கேள்விக்கு கனைகளாக ஆரியன் தொடுத்தான். அதற்கு, "எனக்கு முதல்ல அந்த எண்ணமே இல்ல. நான் உண்டு என் வேல உண்டுன்னு தான் இருந்தேன். ஆனா நீ இந்த பிசினஸ் உலகத்துலயே நம்பர்ஒன் ஆகி அதுல பலமடங்கு பிராஃபிட் கொண்டுவந்த பாத்தியா அப்போ கொஞ்சம் தடுமாறுனே”

“உன் பேர கேட்டா இங்க மட்டும் இல்ல, வெளிநாட்டுல உள்ள ரொம்ப பவர்ஃலான பிசினஸ் மேனும் பயப்பட ஆரம்பிச்சாங்க. அப்பத்தான் உன் இடத்துக்கு வரணும்னு நான் முடிவெடுத்தேன். அத எப்படி செயல்படுத்துறதுன்னு முதல்ல தெரியல. அப்பதான் என் மனசுல இருக்குறத புரிஞ்சிகிட்ட விராஜ், என் கூட கைகோர்த்தான். நாங்க முதல்ல உன்னையும் உன் அப்பாவையும் கொல்ல பிளான் போட்டோம். உன் அப்பா இறந்துட்டாரு, நீ தப்பிச்சிட்ட...உனக்கு ஆயுசு கெட்டிடா நண்பா. ஆனா என்ன, நீ வீல் சேர்ல உட்காரவேண்டிய நிலைமை வந்திரிச்சி. பாவம்...." என்று அவன் சோகமான முகத்தை வைத்துக் கூறினான்.

அப்போது ஆரியன், "நீ என்னையும், அப்பாவையும் பழிவாங்குன ஆனா என் தங்கச்சி என்னடா பாவம் பண்ணா? அவள ஏன் இந்த நிலைமைக்கு ஆளாக்குன? உன்ன என்னோட ஃரெண்டுன்னு நினைச்சி ஆசையா என் தங்கச்சிய உனக்கு கல்யாணம் பண்ணிவச்சேனே. துரோகி" என்று ஆரியன் அவனைக் கடிந்தான்.

ஆனால் ரஞ்சித், "நீ ஆசையா உன் தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணிவெச்ச ஆனா நான் ஆசப்பட்டது உன்னோட ஆஸ்த்திமேலன்னு உனக்கு தெரியாம போச்சே....உனக்கு நியாபகம் இருக்கா நீ கோமால இருந்து எந்திரிச்சப்போ உன் தங்கச்சியோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்னு பலதடவ சொன்னேன். அது எதுக்குன்னு நினைக்குற? அப்பதான் அவள நீ எனக்கு கல்யாணம் பண்ணி தருவ. சொத்துல உள்ள அவளோட பங்கும் எனக்கு வரும்”

“ஆனா அவளுக்கும் பார்கவுக்கும் இடையில ஒரு சைலன்ட் லவ் ஸ்டோரி ஓடிக்கிட்டு இருந்துச்சி. அவன் அவள தள்ளீட்டு போயிருவானோன்னு நினச்சேன். அதனால உனக்கு பல வழில அதிதிய எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க பிரஷர் குடுத்தேன்” என்று கூறியபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர். 'இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது?' என்பதுதான் மூவரின் மனத்திலும் எழுந்த ஒரே கேள்வி.

“எப்பவுமே சரியான முடிவெடுக்கும் மிஸ்டர் ஆரியவர்தன் அன்னைக்கு தங்கச்சி விஷயத்துல தப்பான முடிவெடுத்துட்டாரு. அது எனக்கு சாதகமா போச்சி. நாங்க ஹனிமூன் போனப்ப எங்க மேல அட்டாக் நடந்தமாதிரி நானே செட் பண்ணி அவள நானே கடத்தீட்டேன்" என்று ரஞ்சித் குரூரமாகச் சிரித்தான்.

அப்போது அதிதி, "எனக்கு ஏன் அவ்வளவு டார்ச்சர் குடுத்த? அப்பவே என்ன கொன்றுக்கலாம்ல?" என்று கோபத்துடன் கேட்க அவனோ, "நீ போய்ட்டா உன் சொத்து மட்டும் தான வரும் அவனோடது வராதே. அதான் உன்ன விட்டுவச்சிருந்தேன். அதாவது உன் கல்யாணம் ஆகாத அண்ணன கொன்னுட்டா அந்த சொத்துக்கு வாரிஸே இருக்காது. அப்ப மொத்த சொத்துக்கும் நீதான் வாரிசு. நீ மறுபடியும் உயிரோட வந்ததா வெளியுலகத்துக்குக்காட்டி எல்லாத்தையும் என் பேருக்கு மாத்திட்டு உன்னையும் கொன்னுடுவேன்”

“இப்படி பக்காவா பிளான் போட்டு வச்சப்ப, ஆரியனுக்கு கல்யாணம்னு அந்த கிழவி சொன்னதும் எனக்கு பகீர்னு ஆயிருச்சி. இவனுக்கு மனைவின்னு ஒருத்தி வந்துட்டா அவன் சொத்து எல்லாமே அவளுக்கு போய்டுமேன்னு யோசிச்சேன். அப்பதான் இவன கல்யாணம் பண்ணிக்க இருந்தவ ஓடிபோய்ட்டான்னு தெரிஞ்ச உடனே எனக்கு ரொமப சந்தோஷமா இருந்துச்சி. ஆனா நானே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அன்னைக்கு நடந்துச்சி, அதுதான் ‘நியதி’. என்னோட பிளான் மொத்தத்தையும் இவன் ஃப்ளாப் பண்ணீட்டான்" என்று ஆரியனைச் சுட்டிக்காட்டினான்.

பின் மீண்டும் பேசத் துவங்கினான், "அந்த கவர்மண்ட் டென்டர விராஜுக்கு கொடுத்ததே நான்தான். கெட்டிகாரெண்டா நீ….அதையும் சமாளிச்சிட்ட. நியதிய கொல்ல பீச் ஹவுஸ் அட்டாக்க பிளான் பண்ணேன். அதுக்கப்பறம் எனக்கே ஒரு செக்மேட் வச்சான் பாரு…அதுதான் டைவர்ஸ். முதல்ல நான்கூட அத நம்பிட்டேன், ஆனா அது எல்லாமே உன்னோட தந்திரம்னு எனக்கு அப்ப தெரியாம போச்சே..." என்று கூறினான்.

பின் நியதியைப் பார்த்து, "இவா என் வீட்டுக்கு வந்தா..." என்று கூறியவனின் யோசனைக்கு ஏதோ தோன்ற ஆரியனைப் பார்த்து, "ஏன்டா நான்தான் எல்லாமே பண்றேன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் இவள என் வீட்டுல எப்படி தங்கவிட்ட?" என்று கேட்க மற்றவனோ, "திருடன் கையில சாவிய குடுத்தா அது பாதுகாப்பா இருக்கும்" என்று கூற ரஞ்சித், "நீ கில்லாடிதான் டா" என்று பெருமைப்பட்டான். மீண்டும் நியதியிடம் திரும்பி, "நீ முதல்ல பேய்னு பயந்தியே அது பேயே இல்ல எல்லாமே ட்ரக்கோட வேல...உன் ரூம்குள்ளவே பேய பாத்ததா சொன்னியே அது என்னோட அருமை மனைவி அதிதி”

“அன்னைக்கு அவா தப்பிச்சி உன்கிட்ட உதவிகேக்குறதுக்காக வந்தா ஆனா நீ பேய்னு பயந்து மயக்கம் போட்டுட்ட. இன்னுமும் அவள இங்க வச்சிருந்தா சேஃ கிடையாதுன்னு என்னோட பார்ம் ஹவுஸுக்கு மாத்தீட்டேன்....இன்னொரு இன்டெரெஸ்டிங்கான விஷயம் தெரியுமா? அதிதி முதல்ல எங்க இருந்தா தெரியுமா, அன்னைக்கு உனக்கு சுத்திக் காமிச்சேனே அந்த மெமோரியல் ஹாலோட அன்டர்கிரவுண்ட்ல" என்று அவன் கூறவும் நியதி அதிர்ந்தாள்.

மீண்டும் அவனே பேசத் துவங்கினான், "சரஸோட பிறந்தநாளன்னைக்கும் உன்ன தள்ளிவிட்டது யாருன்னு நினைச்ச? அதுவும் நான் தான். என் பிளான் முடியப்போற நேரத்துல பார்கவ் வந்துட்டான். இல்லாட்டி நீ அன்னைக்கே செத்திருப்ப. நானும் நல்லவனா நடிக்கவேண்டியதா போச்சி....எல்லாத்தையும் பண்ணது நான்தான்னு உனக்கு நல்லாவே தெரியும். பின்ன ஏன்டா என்ன விட்டுவச்ச?" என்று ஆரியனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு ஆரியன், "நீதான் எல்லாத்தையும் செய்யிறன்னு தெரிஞ்சதும் எனக்கு உன்ன கொன்னுபோடுனுங்குற அளவுக்கு கோபம் வந்துச்சி...ஆனா என் தங்கச்சி இறந்துட்டா…அவளோட உடம்பு கிடைக்கலன்னு சொன்னியே அது பொய்யோன்னு யோசிக்க தோணுச்சி. அப்படி உயிரோட இருந்தா கண்டிப்பா உன் பிடியில தான் அவா இருப்பா. அதான் அதிதிய நான் கண்டுபிடிக்குற வரைக்கும் உன்ன விட்டுவச்சிருந்தேன். ஆனா கடவுளாபாத்து என் தங்கச்சிய என்கிட்ட சேர்த்துட்டாரு. இனி உன்ன கண்டிப்பா விடமாட்டேன்..." என்று கர்ஜிக்கும் குரலில் ஆரியன் கத்தினான். அதைக் கேட்டு கோபமடைந்த ரஞ்சித், "நீ வீல்-சேர்ல இருந்துகிட்டே இத்தன வேல பாத்திருக்கியே உனக்கு மட்டும் கால் இருந்தா என்னலாம் செய்வ?" என்று கூறியவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி நீட்டினான்.

அவனுடைய செய்கையால் அதிர்ந்துபோன நியதி, "அவர விட்டுரு ரஞ்சித். அதுக்கு பதிலா என் உயிர எடுத்துக்கோ" என்று கூற ரஞ்சித்தோ, "கவலப் பாடாத, உங்கள நான் பிரிக்கமாட்டேன். அவனுக்கு அப்பறம் நீ தான்" என்று கூறி தன் துப்பாக்கியிலிருந்த ட்ரிகரை அழுத்தச் சென்றான். அப்போது நியதி விரைந்து அவனை தட்டிவிட ரஞ்சித் கீழே விழுந்தான். அவன் வெறிகொண்டவனாக எழுந்து நியதியை அறைந்ததில் அவள் சுருண்டு கீழே விழுந்தாள். உடனே தன் துப்பாக்கியை அவள்புறம் நீட்டி, "உன்னதாண்டி முதல்ல கொல்லணும்" என்று கூறி ட்ரிகரை அழுத்தச் சென்றான். அப்போது யாரோ அவனை ஓங்கி உதைக்க துப்பாக்கி ஒருதிசையிலும் ரஞ்சித் மற்றொரு திசையிலும் விழுந்தான். ஆத்திரம் கொண்டவன் தன்னை தாக்கியவன் ‘யார்?’ என்று திரும்பிப் பார்த்தபோது அதிர்ந்து கண்ணிமைக்காமல் பார்த்தவாறு அப்படியே நின்றான்.
Gemini_Generated_Image_w1zkz4w1zkz4w1zk.jpg
மாயங்கள் தொடரும்...
****************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் பகிர்ந்துகொள்ளலாம்...

Link
https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 31

கோபத்தில் கண்கள் ரத்தச்சிவப்பாக மாற தன் கை முஷ்டி இறுக்கியவாறு ஆரியவர்தன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-03-24 at 4.10.52 PM.jpeg
ஆம், இத்தனை நாளாக வீல் சேரில் அமர்ந்துகொண்டு இந்த பிசினஸ் உலகத்தையே தன் கண்பார்வையால் ஆட்டுவித்த ஆரியவர்தனால் நன்றாக நடக்கமுடியும்.

முன்பு, அவன் கோமாவிலிருந்து எழுந்தபோது அவனுடைய கால்கள் முழுமையாக செயலிழந்திருந்தன. அப்போது சரஸ் தன்னுடன் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அவனால் மீண்டும் நடக்க முடிந்தது. ஆனால் தன்னையும் தன் தந்தையையும் கொல்லநினைத்த அந்த ‘கொலையாளி யார்?’ என்பதை அறிந்துகொள்வதற்காகவே அவன் வீல் சேரிலேயே இருந்தான். இந்த விஷயத்தை சரஸும் நன்கு அறிவாள். ஆரியன் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவள் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

அதைக் கண்ட நியதியும், அதிதியும் ஆச்சரியமடைய, ரஞ்சித் மேலும் அதிர்ச்சியடைந்தான். அவன் திகைத்தவாறு ஆரியனை நோக்கி, "...உன்னால நடக்கமுடியுமா?..." என்று கேட்க ஆரியனோ, "நடக்கவும் முடியும் உன்ன அடிக்கவும் முடியும்" என்று கூறி மீண்டும் உதைத்தான். கோபமடைந்த ரஞ்சித், "அப்ப இத்தன நாளா ஏமாத்தீருக்க?" என்று ஆங்காரத்துடன் கத்த மற்றவனோ, "இல்ல என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கிய துரோகிய கையும்களவுமா பிடிக்குறதுக்கு ஒரு சின்ன டிராமா போட்டேன். இப்ப அவன் வசமா மாட்டிகிட்டான்" என்று நக்கலாக சிரிக்கவும் ரஞ்சித்துக்கு கோபம் தலைக்கேறியது.

அவன் ஆரியனை தாக்கியபோது அவன் லாவகமாக அதிலிருந்து தப்பினான். அங்கு ஆரியனுக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடுமையான சண்டை நிலவியது. இருவரும் சமஅளவு பலம்பொருந்தியவர்கள் என்பதால் விட்டுக்கொடுக்காமல் ஒருவரோடு ஒருவர் மோதினர்.
WhatsApp Image 2025-03-24 at 4.10.53 PM.jpeg
இறுதியில் ஆரியன் ஓங்கி அவனுடைய தாடையில் ஒரு குத்துவிட ரஞ்சித் அப்படியே விழுந்தான். அவனுடைய நாசியிலிருந்தும் வாயிலிருந்து இரத்தம் வடிய ஆரியனைப் பார்த்தவன் ‘இனி தன்னால் இங்கிருந்து தப்ப இயலாது’ என்பதை உணர்ந்தான்.

உடனே, "காட்ஸ்...காட்ஸ்..." என்று ரஞ்சித் குரல்கொடுக்க அங்கு நிறைய அடியாட்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தனர். ஆரியவர்தனை தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற ஒரே எண்ணத்தில்தான் இந்த ஏற்பாட்டை முன்கூட்டியே செய்திருந்தான். அவர்கள் அனைவரும் உள்ளே வருவதைப் பார்த்து நியதியும் அதிதியும் பயத்துடன் நின்றுகொண்டிருந்தனர். "நீ இனிமேல் தப்பிக்கவே முடியாது" என்று கூறியவன் அரக்கனைப் போல் சிரித்தான்.
Gemini_Generated_Image_nju4r6nju4r6nju4.jpg
பின் அந்த அடியாட்களிடம் திரும்பி, "காட்ஸ், ஷூட் தெம்" என்று ஆணையிட்டபோது அவர்கள் அனைவரும் ரஞ்சித்தை நோக்கி துப்பாக்கியை குறிவைத்தனர். அவன் புரியாமல் அதிர்ச்சியில் ஆரியவர்தனைப் பார்க்க அவன் வெற்றிப் புன்னகை செய்தான். ஆரியன், ரஞ்சித்தை பார்ம் ஹவுஸிற்கு அழைத்ததன் முக்கிய காரணமே அவனைப் பிடிப்பதற்காகத்தான். அதற்காக காவல்துறையில் உயர்பதவியில் பணிபுரியும் தன்னுடைய நண்பனான தாமோதரனிடம் உதவி கேட்டிருந்தான்.

காவல் துறையினர் அந்த வீடு முழுவதும் முற்றுகையிட்டபோது வேறு பல அந்நியர்கள் அந்த வீட்டைச் சுற்றி இருப்பதைக் கண்டனர். உடனே அவர்களை அடித்துவிட்டு காவலர்கள் அனைவரும் அவர்களின் உடைக்கு மாறிக்கொண்டனர். ரஞ்சித் தன் அடியாட்களை அழைத்தபோது உள்ளே வந்தது அவனுடைய அடியாட்கள் அல்ல அனைவரும் காவலர்களே.

ஆரியன் ரஞ்சித்தைப் பார்த்து, "இவங்க எல்லாம் போலீஸ்....உன்னோட அடியாட்கள் இல்ல. உன்ன எதுக்கு கூப்பிட்டேன்னு நினைச்ச? உன்ன பிடிக்க தான்...நீயே இவ்வளவு யோசிச்சா நான் எவ்வளவு யோசிப்பேன். இனி உன்னால தப்பிக்கவே முடியாது. யூ ஆர் டிராப்ட்" என்று கூறவும் ரஞ்சித் அதிர்ந்தான். பின் அங்குள்ள காவலர்களைப் பார்த்து ரஞ்சித்தை கைதுசெய்யுமாறு கூறினான்.

இதிலிருந்து எப்படியாவது தப்பவேண்டும் என்று நினைத்தவன் உடனே ஆரியனின் காலில் விழுந்து, "என்ன மன்னிச்சிரு ஆரி. எல்லாம் அந்த விராஜோட வேலதான். நான் ஒழுங்காதான் இருந்தேன் ஆனா அவன் தான் ஏதேதோ பேசி என் மனச மாத்தீட்டான். என்ன மன்னிச்சி மறுபடியும் ஒரு சான்ஸ் குடு" என்று அவனிடம் வேண்டினான்.

ஆனால் அவனுடைய குள்ளநரிதனத்தை நன்கு அறிந்த ஆரியன், "ஒருத்தன் ஒருதடவ என்ன ஏமாத்துனா அது அவன் தப்பு. நான் மறுபடியும் அவன்கிட்ட ஏமாந்தா அது என் தப்பு. நான் மறுபடியும் அந்த தப்பசெய்ய விரும்பல" என்றதும் ரஞ்சித் செய்வதறியாமல் விழித்தான்.

எப்படியாவது இங்கிருந்து தப்பவேண்டுமென்று நினைத்தவன் அருகிலிருந்த அதிதியை பிடித்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தான். "யாராவது பக்கத்துல வந்தீங்க இவள கொன்னுடுவேன்" என்று கூறி அவளுடைய கழுத்தில் கத்தியை லேசாக அழுத்தினான். அதைப் பார்த்ததும் அங்கிருந்து அனைவரும் பயந்து விலகினர்.

அப்போது ஆரியனின் அறிவுரைப் படி அங்குவந்த பார்கவ் ரஞ்சித்தை பின்னிருந்து தாக்க அவனுடைய பிடி நழுவியது. அந்த சந்தற்பத்தைப் பயன்படுத்தி அதிதி அவனிடமிருந்து தப்பிக்க ரஞ்சித் காவலர்களிடம் பிடிபட்டான்.
WhatsApp Image 2025-03-24 at 4.10.49 PM.jpeg
அங்கிருந்த அனைவரும் நிம்மதியடைந்தனர். "இனிமேல் இவன நான் பாத்துக்குறேன். இவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டன கண்டிப்பா கிடைக்கும்" என்று தாமோதரன் கூறவும் ஆரியன் லேசாக அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

நால்வரும் காரில் வீட்டிற்குக் கிளம்பினர். அந்த வாகனத்தில் அப்போது ஒரு மயான அமைதிமட்டுமே நிலவியது. ஒவ்வொருவர் மனத்திலும் ஆயிரம் கேள்விகள் எழுந்தபோதும் அதைக் கேட்காமல் அப்படியே அமர்ந்திருந்தனர். அப்போது கார் ஒரு இடத்தில் நின்றது. எந்த இடம் என்று பார்த்தபோது நியதி வியந்தாள்.
WhatsApp Image 2025-03-24 at 4.10.50 PM.jpeg
ஏனென்றால் அது வரதராஜனின் பங்களா. அவள் புரியாமல் ஆரியனை நோக்க அவனோ 'இறங்கு' என்று செய்கை செய்ய அவளும் இறங்கினாள். அங்கு அவளை விட்டுவிட்டு ஆரியனின் கார் அவனுடைய மேன்ஷனுக்குச் சென்றது.

ஆரியனும், அதிதியும் வீட்டினுள் நுழைந்தபோது அவர்களை சந்திரமதி ஆரத்தி எடுத்து வரவேற்றாள். சரஸ் அனைத்து உண்மைகளையும் சந்திரமத்தியிடம் அவர்கள் வருவதற்கு முன்பே தெரிவித்திருந்தாள். தன்னுடைய பேத்தியைப் மீண்டும் உயிருடன் பார்த்தபோது அவருடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவர் அதிதியின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டு அணைத்துக்கொண்டார்.

அப்போது, "பாத்தீங்களா பேத்தி வந்ததும் பேரன மறந்தாச்சி" என்று ஆரியன் கூறவும் சந்திரமதி அவனையும் அழைத்து அன்புடன் அரவணைத்துக் கொண்டார். பின், "படுவா ராஸ்கல்! இத்தன நாளா உன்னால நடக்கமுடியும்கிற உண்மைய என்கிட்டகூட சொல்லல” என்று ஆரியனின் காதைத் திருக அனைவரும் நகைத்தனர்.
WhatsApp Image 2025-03-24 at 4.10.51 PM.jpeg
அங்கிருந்தவர்கள் சந்தோஷமாகப் பேசுக்கொண்டிருக்க ஆரியனின் கண்கள் பார்கவிடம் நின்றது. அவன் அதிதியையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆரியன் பார்கவை லானிற்கு அழைத்துச்சென்று, "ஏன் என்கிட்ட உண்மைய மறச்ச?" என்று கேட்க மற்றவன் புரியாமல், "நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல சார்?" என்று கேட்டான். அப்போது அதிதியின் வரைபடத்தை ஆரியன் அவனுக்கு காட்டவும் பார்கவ் அதிர்ச்சியடைந்தான். உடனே, "அது....சார்....வந்து..." என்று அவன் இழுத்தபோது, "அதிதி எல்லாத்தையும் சொல்லீட்டா" என்று ஆரியன் கூறவும் அவன் எந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறான் என்று அறிந்து அப்படியே நின்றான். அதிதி சிகிச்சையின் பின் சுயநினைவுக்கு வந்தபோது இந்த விஷயத்தையும் ஆரியனிடம் தெரிவித்திருந்தாள்.

அவன் எதுவும் கூறாமல் தன் தலையை தாழ்த்தியவாறு அப்படியே நின்றுகொண்டிருந்தான். அப்போது அதிதியும் அங்கு வந்தாள். உடனே ஆரியன், "நீங்க ரெண்டுபேரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க, ஓகே!" என்று அங்கிருந்து அகன்றான். அவன் சென்றதும் அங்கு ஒரு மௌனமான சூழல் நிலவியது. "உனக்கு என்ன பிடிக்குங்கிற விஷயத்த அன்னைக்கு ஏன் மறச்ச பார்கவ்?" என்று அந்த மௌனத்தை உடைத்து அதிதியின் கேள்வி பிறந்தது.

அவன் எதுவும் பேசாமல் நிற்க, "இப்படியே எதுவும் பேசாம இருக்காத பார்கவ். இன்னைக்காவது உன்னோட மனசுல இருக்குறத தயவுசெஞ்சி சொல்லு..." என்று கூறும்போதே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்வழிந்தது. அவளுடைய கண்ணீரை பார்க்க முடியாமல், "என்ன மன்னிச்சிரு அதிதி. நான் அன்னைக்கே சொல்லீருந்தா நீ இந்த நிலமைக்கு வந்திருக்கமாட்ட. இது எல்லாமே என்னாலதான்" என்றவனின் கண்களும் கலங்கின.

பின் தன் கண்ணீரை துடைத்துவிட்டு, "இனிமேல் அப்படி நடக்காது. நான் யாரையும் நம்மளோட காதலுக்கு நடுவுல வரவிடமாட்டேன். இனி உன் கண்ணுல இருந்து வர்றது ஆனந்தக் கண்ணீரா மட்டும்தான் இருக்கும்" என்று கூறி அவளுடைய கண்ணீரை துடைத்துவிட்டான். பின் அவள் முன்னே மண்டியிட்டு தன் கையை நீட்டியவாறு, "ஐ லவ் யூ அதிதி. வில் யூ மேரி மீ?" என்று அவன் கேட்க அவள் சந்தோஷத்துடன் 'எஸ்' என்று தன் கையை அவன் கைமேல் வைத்தாள்.

அங்கு ஆரியன் தன்னுடைய அறையில் தனித்துநிற்க சரஸ் அவனருகே வந்து, "டேய் ஆரி ஏன் அந்த ரஞ்சித்த அப்படியே விட்டுட்ட? அவனுக்கு பெரிய தண்டனைய நீ குடித்திருக்கணும். அவனால எத்தன இழந்திருக்க? எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க? அதிதிய அவன் எவ்வளவு டார்ச்சர் பண்ணீருக்கான். இத்தனைக்கும் சேர்த்து அவன நீ தண்டிக்கவேண்டாமா? அவன ஏன் போலீஸ் கிட்ட ஹேண்டோவர் பண்ண?" என்று ஆற்றாமையால் கேட்டாள்.

உடனே அவன், "அப்போ அவன பழிவாங்க சொல்றியா? அவன் என்ன பண்ணினானோ அதேமாதிரி நானும் அவனுக்கு திருப்பி பண்ணனும்னு சொல்றியா? அப்படி செஞ்சா எனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம். அவன மாதிரியே ஒரு அரக்கனாக விரும்பல. அதுக்காக அவன் செஞ்ச எல்லாத்தையும் மன்னிச்சி விட நான் ஒன்னும் கடவுளும் கிடையாது. நானும் ஒரு சராசரி மனுஷன்தான் அதனால தான் அவன போலீஸ் கிட்ட ஒப்படைச்சேன். அவன் பண்ணினதுக்கு அவனுக்கு கண்டிப்பா ஆயுள் தண்டனை கிடைக்கும்”

“ஒவ்வொரு நாளும் அத நினைச்சி கண்டிப்பா வருத்தப்படுவான்....சரஸ், எப்பவுமே நாம எதுபன்னாலும் அது நமக்கு பலமடங்கு திருப்பி வரும். அதனாலதான் நான் இந்த முடிவ எடுத்தேன். தப்பு செஞ்சவன் கண்டிப்பா அதுக்கான தண்டனைய அனுபவிப்பான். அதுதான் கர்மா" என்று கூற சரஸ், "என்னவோ சொல்ற போ. நீயும் உன் கர்மாவும்" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

இங்கு ரஞ்சித்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் வழியில் சிக்கனலில் வண்டி நின்றது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடினான். அவன் விரைந்து விராஜிடம் சென்று தன்னை காப்பாத்துமாறு கெஞ்சினான்.
WhatsApp Image 2025-03-24 at 4.21.06 PM (1).jpeg
"உன்ன நான் எதுக்கு காப்பாத்தணும்?" என்று அவன் கேட்க ரஞ்சித் அதிர்ச்சியடைந்தான். உடனே, "நான் உங்களுக்காக நிறைய பண்ணீருக்கேனே. அதுக்காகயாவது…" என்று அவன் கேட்க மற்றவனோ, "நானே பெரிய வில்லன் நீ எனக்கு மேல வில்லனா இருக்க. ஆரியவர்த்தனோட தங்கச்சிய இத்தன நாளா எனக்கே தெரியாம மறச்சி வச்சிருந்திருக்க. இனிமேல் உன்ன நான் எப்படி நம்புறது?....உனக்கும் எனக்கும் இருக்குற டீலிங் அவ்வளவுதான். நீ கிளம்பலாம்" என்று கூறவும் ரஞ்சித்துக்கு கோபம் வந்தது.

அவன், "ஓ! அப்போ நீ எனக்கு ஹெல்ப் பண்ணமாட்ட...பரவா இல்ல நான் போலீஸ் கிட்ட அப்ரூவரா மாறி எல்லா உண்மையையும் சொல்லீருவேன். நீதான்எல்லாத்தையும் செய்யிறதுக்கு தூண்டுனன்னு சொல்லுவேன். எப்பவுமே தப்பு செஞ்சவனவிட செய்ய தூண்டுனவனுக்கு தான் தண்டன அதிகம்...அதோட நீயும் நானும் பண்ற ட்ரக் பிசினஸ்யும் பத்தி சொல்லுவேன். அப்படி செஞ்சா நீ கட்டிவச்சிருக்கிர குணசீலன் கர்ப்பரேட்ஸ் சாம்பிராஜ்ஜியம் ஒரே நாள்ள தரமட்டமா போய்டும். நீயும் ஜெயில்ல என்னோட சேர்ந்து கம்பி எண்ண வேண்டியதுதான்..." என்று அவன் கூறவும் விராஜுக்கு கோபம் தலைக்கேறியது.

உடனே, "நீ உயிரோட இருந்தா தானடா சொல்லுவ....காட்ஸ் இவன கொன்னுடுங்க" என்று விராஜ் ஆணையிட ரஞ்சித்தை அவனுடைய அடியாட்கள் சூழ்ந்தனர். அவன் தன்னுடைய அனைத்து பலத்தாலும் சண்டையிட்டு அங்கிருந்து ஒரு காரில் தப்பினான். அவனை விராஜின் ஆட்கள் துரத்த அவர்களிடமிருந்து தப்பிக்க அவன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டினான்.

அப்படி ஓட்டிக்கொண்டிருந்தபோது அவனுடைய மூச்சு திணற நெஞ்சில் வலி ஏற்பட ஆரம்பித்தது. தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தபோது கழுத்தில் ஏதோ குத்தியிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோதுதான் ரஞ்சித்துக்கு விஷயம் புரிந்தது. அது ஒரு போதை ஊசி. அன்று அதிதியின் மீது ரஞ்சித் பயன்படுத்திய அதே போதை ஊசி. அதை ரஞ்சித் தப்பி ஓடும்போது அவனைக் குறிபார்த்து அந்த ஊசியை விராஜ் சுட்டான். அளவிற்கு மீறி அவனுடைய உடலில் செலுத்தப் பட்டதால் அவனுடைய நரம்பு மண்டலங்கள் செயலிழக்க அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு முறையும் அதிதி அனுபவித்த அந்த வலியை அன்று அவன் மொத்தமாக அனுபவித்தான். வலியால் துடித்தவன் சற்று நேரத்தில் அப்படியே ஸ்டியரிங்கில் சாய்ந்தான். அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த அவனுடைய வாகனம் கட்டுப்பட்டை இழந்து கீழே உள்ள தண்ணீரில் விழுந்தது. கார் தண்ணீரில் விழுவதைப் பார்த்து அவனைத் துரத்திவந்த அடியாட்கள் விராஜுக்கு கைபேசியில் அழைத்து ரஞ்சித் இறந்துவிட்டான் என்ற செய்தியை தெரிவித்தனர்.

விராஜ் அந்த செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்தான். அவன் சந்தோஷமாக இருக்கும்போது சிகர் பிடிக்கும் பழக்கம் உண்டு. அப்பிடிதான் அன்றும் தன்னுடைய பி.ஏ. வீராவிடம் சிகரை வாங்கி பிடிக்க ஆரம்பித்தான்.
WhatsApp Image 2025-03-24 at 4.25.17 PM.jpeg
சில நேரத்திலேயே அவனுடைய வலது கையில் ஏதோ செய்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மேலும் பிடித்துக்கொண்டே இருக்க அவனுடைய கால்களும் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியுடன் தன்னுடைய பி.ஏ. வீராவைப் பார்த்தபோது அவன் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன.

அவன், "அன்னைக்கு நீ என்னோட அண்ணன கொன்னீல இன்னைக்கு நீ அனுபவி" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். விராஜ் அன்று கோல்ஃ ஸ்டிக்கால் இருவரை அடித்து கொன்றதில் ஒருவன் வீராவின் அண்ணனாவான். விராஜை பழிவாங்க காத்துக்கொண்டிருந்தவனுக்கு இன்று வாய்ப்பு கிட்டியது. அதனால் விராஜ் பிடித்த சிகரில் ஒரு மருந்தை வீரா கலந்திருந்தான். அதனால் தான் விராஜுக்கு ஏதோ செய்ய ஆரம்பித்தது. விராஜ் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான்.

ரஞ்சித்தும், விராஜும் ஆரியனிடமிருந்து தப்பித்ததாக நினைத்தாலும் கடவுளிடமிருந்து தப்ப இயலவில்லை. 'வினை விதைத்தவன் வினையறுப்பான்' என்ற பழமொழிக்கு இணங்க டிரக்காலே இவர்கள் இருவரின் வாழ்வும் அழிந்தது. ஒருவன் தவறுசெய்தால் அதற்கான பலனை அப்போதே அனுபவிப்பான். இங்கு ரஞ்சித் ஆரியனிடமிருந்து தப்பியிருந்தாலும் இயற்கையாகிய கடவுளிடமிருந்து தப்பமுடியவில்லை. அதே போல ஒருவனுக்கு குழி வெட்டினால் உன் அருகிலிருப்பவன் உனக்கான குழியை அவனே வெட்டுவான் என்பதற்கு விராஜ் ஒரு எடுத்துக்காட்டு. நன்மையோ, தீமையோ எது செய்தாலும் அது பலமடங்கு திருப்பி வரும் அதனால் எப்போதும் நாம் எல்லாருக்கும் நல்லதே செய்யவேண்டும்.

இங்கு நியதி வரதராஜனின் வீட்டிற்குள் செல்ல தயங்கியவாறு வெளியே நின்றாள். அவளை அங்கு கண்டதும் வரதராஜன் விரைந்து வந்து, "வாமா...ஏன் வெளியவே நிக்கிற? உள்ள வா" என்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். அவருடைய நடவடிக்கையில் மாற்றங்களைக் கண்ட நியதிக்கு வீட்டினுள் சென்று மாலினியைக் கண்டதும் மேலும் ஆச்சரியமடைந்தாள். ஏனென்றால் தன் மீது எப்போதும் சுடுவார்த்தைகளையே பயன்படுத்தும் மாலினி, இன்று அன்புடன் அவளை வரவேற்றாள்.
WhatsApp Image 2025-03-24 at 4.21.06 PM.jpeg
"வா நியதி...இந்தா பாயாசம் குடி" என்று தானே எடுத்து அவளுக்கு ஊட்டினாள்.

உடனே, "போதும் மேடம்..." என்று கூறியவளை தடுத்து நிறுத்தி, "என்ன அம்மான்னே கூப்புடு நியதி....நான் உன்ன தப்பா நினைச்சிட்டேன். இப்பதான் எங்களுக்கு உண்மை தெரிஞ்சது. என்ன மன்னிச்சிருமா" என்று மாலினி கூற நியதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. "என்கிட்டபோய் ஏன் மன்னிப்பு கேக்குறீங்க” என்று அவள் கூற மாலினியோ, "இனி நீயும் எங்க பொண்ணுதான்...அப்படிதானங்க?" என்று வரதராஜனைப் பார்த்துக் கேட்க அவரும் 'ஆம்' என்று தலையசைத்தார். அங்கு அப்போது சரண் வருவதைக் கண்ட நியதி அவனிடம், "டேய் இங்க என்னடா நடக்குது" என்று கேட்க அவனோ, "மேல போய் பாரு" என்று புன்முறுவலுடன் மெல்ல அவளுடைய காதில் முணுமுணுத்தான்.

அவளும் மேலே சென்று பார்த்தபோது ரியாவின் அறைக்கதவு திறந்திருந்தது. அறையினுள் சென்றவள் திகைத்து நின்றாள். ஏனென்றால் அங்கு ரியா தன்னுடைய ஒன்பதுமாத குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் நியதி மகிழ்ச்சி அடைந்து அவளருகே சென்று அணைத்துக் கொண்டாள். "ஏன்டி அன்னைக்கு அப்படி பண்ண?" என்று நியதி கேட்க அவள் மௌனமாகவே இருந்தாள்.
Gemini_Generated_Image_xz7q1pxz7q1pxz7q.jpg
உடனே, "என்கிட்ட இல்லாட்டி சரணகிட்டயாவது சொல்லீருக்கலாம்ல?" என்று கேட்க ரியாவோ, "அதெல்லாம் சொல்லீட்டுதான் போனேன்" என்று தலையைக் குனிந்தவாறே பதிலளித்தாள். அவள் முகத்தை உயர்த்தி, "சரண்கிட்டயா?" என்று கேட்க, "இல்ல…ஆரியவர்தன் கிட்ட" என்று ரியா கூறியதும் நியதி அதிர்ச்சியடைந்தாள். அவள், "ஏய் விளையாடாத" என்றதும், "நான் ஒண்ணும் விளையாடல.... இன்ஃபாக்ட் அன்னைக்கு கல்யாணத்துல இருந்து தப்பிக்க உதவிசெஞ்சதே அவர்தான்" என்று கூறவும் நியதி அதிர்ந்து அவளை நோக்கினாள்.

மாயங்கள் தொடரும்...

*********************************************************************************

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

Link:
https://www.narumugainovels.com/threads/21888/
 

Krishna Tulsi

Moderator
மாயம் 32

வாயடைத்து நின்ற நியதியைப் பார்த்து, "என்ன பொண்ணுபாக்க வந்த அப்பவே நான் லவ் பண்ற விஷயத்த அவர்கிட்ட சொல்லீட்டேன். ஒரு நிமிஷம் எதுவும் பேசாம இருந்த அவரு, நான் வருண கல்யாணம் செய்ய ஹெல்ப் பண்றதா சொன்னாரு. ‘நீங்க எனக்கு எதுக்கு ஹெல்ப் பண்ணணும்னு?’ கேட்டேன், சொல்ல மறுத்துட்டாரு. நானும் அதுக்கப்பறம் கேக்கல”

“அன்னைக்கு கல்யாண மண்டபத்துல இருந்து தப்பிச்சி போறதுக்கு அவர்தான் உதவி செஞ்சாரு. அதோட நாங்க ரெண்டுபேரும் யார் கண்ணுலையும் படாதமாதிரி பெங்களூர்ல உள்ள அவரோட ஒரு கம்பெனி பொறுப்ப வருண்கிட்ட ஒப்படச்சி, தங்குறதுக்கு இடமும் கொடுத்து எங்கள நல்லா பாத்துக்கிட்டாரு. எனக்கு பிடிச்சவரோட எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருக்கேன்" என்று நடந்த அனைத்தையும் விளக்கினாள். உடனே நியதி, "உனக்கு ஏன் அவர் உதவிசெய்யணும்? அதனால அவருக்கு என்ன லாபம்? அவரோட நேம் ஸ்பாயில் ஆயிறும்னு தெரிஞ்சும் ஏன் இந்த ரிஸ்கான காரியத்த பண்ணாரு?" என்று தன் மனதில் நினைத்ததைக் கேட்டாள்.

அதற்கு, "எனக்கும் முதல்ல புரியல. ஆனா அதுக்கான அர்த்தம் இப்பதான் புரியுது..." என்று ரியா கூற நியதியோ ஒன்றும் அறியாதவள்போல், "என்ன?" என்று வினவினாள். ஒரு குரும்புச் சிரிப்புடன், "அத நீயே அவர்கிட்ட கேளு" என்ற ரியா செல்லமாக நியதியின் கணத்தில் தட்டினாள். நியதிக்கு அதுவே சரியாகத் தோன்ற அவள் ஆரியனைத் தேடி வர்தன்ஸ் மேன்ஷனுக்குச் சென்றாள்.

நியதியை சரஸ் அங்கு கண்டதும், "ஹே நியதி நீ எங்க போன? உனக்கு ஒரு..." என்று அவள் கூறுவதற்குமுன்பே, "சரஸ் ஆரியன் எங்க?" என்று வினவினாள். அவன் 'வர்தன்ஸ் மினி ஃஆரஸ்டில்' இருப்பதாக சரஸ் சொன்னதும் அங்கு விரைந்தாள். நேராக ஆரியனுக்கு பிடித்த இடத்திற்குச் சென்றாள்.

அது குடில் போல் மேற்கூரை அமைக்கப்பட்டு அமர்வதற்காக குஷன் இருக்கைகள் போடப்பட்டிருக்கும் இடம். சுற்றிலும் அழகான பூச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அவள் வருகைக்காகவே காத்துக்கொண்டிருந்த ஆரியன் அவளைக் கண்டதும் ஒரு புன்முறுவல் செய்தான். "நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க?" என்று மூச்சுவாங்க வேகமாக வந்தவள் கேட்க கூஜாவிலிருந்த நீரை கண்ணாடி டம்பிளரில் ஊற்றி அவளிடம் நீட்டி குடிக்குமாறு சைகை செய்தான். ஆனால் அவளோ, "நான் என்ன கேட்டா, நீங்க என்ன செய்றீங்க?" என்று பொறுமையிழந்தவளாய் கேட்க அவனோ, "உனக்கு தெரிஞ்சிக்கணுமா வேண்டாமா?" என்று விளையாட்டாக கேட்க அவளோ வேறுவழியில்லாமல் அவன் கூறியது போலவே செய்தாள்.
WhatsApp Image 2025-03-26 at 3.42.45 PM.jpeg
பின் அவனிடம், "இப்ப சொல்லுங்க" என்று கேட்கவும் அவன் அனைத்தையும் கூறத் துவங்கினான். "உன்னோட காலேஜுக்கு ஒன் வீக் வொர்க்ஷாப்கு நான் வந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்று அவன் கேட்க அதற்கு நியதி 'ஆம்' என்று மட்டும் தலையசைத்தாள். "அன்னைக்கு நான் டிபார்ட்மெண்ட்ல இருந்தப்ப ஸ்டாஃஸ் எல்லாம் உன்னப்பத்தி பேசிகிட்டு இருந்தாங்க. நான் சொல்ற மோட்டிவேஷனல் கோட்ஸ் எல்லாத்தையும் நீ எப்பவுமே சொல்லி என்ன உன்னோட ரோல்-மாடலா வச்சிருக்கண்ணு சொன்னாங்க”

“நம்மள ரசிக்கிற அந்த ரசிகை யாருன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது. அப்போதான் நீ நேவி ப்ளூ டாப், வைட் பலாஸோ போட்டு ஷால அழகா பின் பண்ணி, காதுல பெரிய ஜிமிக்கி போட்டு அந்த டிபார்ட்மெண்ட்க்குள்ள நுழைஞ்ச. அங்கமட்டும் இல்ல என் மனசுலயும் தான். எனக்கு அப்போ அது என்னன்னு தெரியல. ஆனா அன்னைக்கு உன்ன பார்த்ததும் எனக்குள்ள ஒரு ஸ்பார்க்....ஒரு அழகான உணர்வு எனக்கு வந்தது. அத இப்ப நினைச்சா கூட மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு....அப்பாவுக்கு வேலை இருந்ததால நான் முதல் நாள் மட்டும் தான் அங்க லெக்சர்கு வர்றதா பிளான்”

“ஆனா உன்ன தினமும் பாக்கணுங்கிறதுக்காக நானே ஒரு வாரமும் லெக்சருக்கு போறதா அப்பாகிட்ட சொன்னேன். நான் ஆர்வமா இருக்கறதா நினைச்சி என் அப்பாவும் சரின்னு சொல்லீட்டாரு. பாவம் அவருக்கு உண்மை என்னனு தெரியல...அந்த ஒரு வாரமும் உன்ன பாக்க, பேச எல்லா வாய்ப்பும் கிடைச்சது. ஆனா அது சீக்கிரமாவே முடிஞ்சிருச்சி. நான் உன்ன காண்டாக்ட் பண்ண நிறைய முயற்சி செஞ்சேன், என்னால முடியல. அதுக்கப்பறம் என்னோட வாழ்க்கைல என்னலாமோ நடக்க ஆரம்பிச்சது”

“என் அப்பாவோட மரணம், என் தங்கச்சி இறந்துட்டாங்குற செய்தி இதெல்லாம் என்னோட வாழ்க்கைய இருட்டா ஆக்கிருச்சி. என் மனச மாத்த என்ன கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி பாட்டி ரொம்ப கெஞ்சுனாங்க. உன்ன தவிர வேறயாரையும் அந்த இடத்துல வச்சிப் பாக்க எனக்கு மனசே இல்ல. பாட்டியோட சந்தோஷத்துக்காக சம்மதிச்சேன். அப்பதான் ரியாவ பாக்குறதுக்கு மிஸ்டர் வரதராஜன் வீட்டுக்கு வந்தோம். நான் அவள பிடிக்கலன்னு சொல்ல தான் அங்க வந்தேன் ஆனா அதுக்கு முன்னால ரியாவே ஒருத்தன காதலிக்குறதா சொன்னா”

“'நல்லவேள அவளே கல்யாணம் வேண்டாம்'ணு சொன்னதுனால நிம்மதியா இருந்துச்சி. அப்ப நீ அந்த அவுட்ஹவுஸ்ல இருந்து வெளியவந்தத பார்த்தேன். அந்த ஒரு நிமிஷம் என் வாழ்க்கைல இருள் மறஞ்சி வெளிச்சம் வந்துச்சி. நான் யாருக்காக இவ்வளவு நாள் ஏங்கிக்கிட்டு இருந்தேனோ அந்த முகத்த அன்னைக்கு தான் ரொம்பநாளுக்கு அப்பறம் பாத்தேன். உன்ன என் மனைவியாக்க ஒரு வழிய யோசிச்சேன். கல்யாணத்தனைக்கு ரியா போய்ட்டா அந்த இடத்துல அடுத்து யாரு வருவா?...மிஸ்டர் வரதராஜன் தன்னோட பொண்ணா நினைக்கிற நீ தான் வருவன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் அப்படி செஞ்சேன். நான் நினைச்சதுபோலவே நடந்தது. நீ என்னவளான" என்று ஆரியன் அனைத்தையும் விளக்க நியதி திகைத்து அவனை நோக்கினாள்.

உடனே அவள், "அன்னைக்கு நான் இல்லாம அப்பா வேறயாரையாவது தேர்ந்தெடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?" என்று நக்கலாக கேட்டவளிடம், "அதெப்படி செய்வாரு? இந்த ஆரியனுக்கு நிகர் நியதி மட்டும்தான். அதனால அவர் அப்படி செய்யமாட்டாரு" என்று சர்வநிச்சயமாக கூறினான். அதற்கு, "அப்படி இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?" என்று அவள் மீண்டும் கேட்க அவன், "எனக்கு நீதான் வேணும், உன்னைத்தான் லவ் பண்றேன்னு அவரோட சண்ட போட்ருப்பேன்" என்று சிறு குழந்தையைப் போல் கூறவும் நியதிக்கு சிரிப்பு வந்தது. உடனே, "பக்கா கில்லாடிதான் நீங்க" என்று அவள் கூற அவனோ தன் ஷர்ட் காலரை தூக்கிவிட்டு பெருமைகொண்டான்.

பின், "நியதி உன்கிட்ட ஒண்ணு காட்டணும்" என்று கூறி அங்குள்ள கிளாஸ் ஹவுஸுக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவன் தன்னுடைய கைக்கடிகாரத்தையே பார்க்க அவளோ புரியாமல் விழித்தாள். அது மாலை நேரம் என்பதால் சூரியன் மேற்கு திசையில் மறைவதற்காக சென்றுகொண்டிருந்தது. அப்போது சூரிய ஒளி அந்த கிளாஸ் ஹவுஸை சுற்றியுள்ள மரங்களின் இலைகள் வழியாக ஊடுருவி அங்குள்ள சுவற்றில் பட்டது. அதை ஆரியன் நியதிக்கு காட்டவும் அவளுடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகின.

ஏனென்றால் அந்த சூரிய வெளிச்சம், 'ஐ லவ் யூ நியதி' என்ற வடிவத்துடன் அந்த சுவற்றில் விழுந்தது.
WhatsApp Image 2025-03-26 at 4.05.43 PM.jpeg
அங்குள்ள மரத்தின் இலைகளை அதற்கேற்றாற்போல் வெட்டிவைத்திருந்ததால் சூரியவெளிச்சம் அவ்வாறு விழுந்தது. பின் அவள் ஆரியனை கனிவுடன் பார்க்க அவன், "இந்த விஷயத்த நம்மளோட ஃஸ்ட் அனிவர்சரிக்கே சொல்லணும்னு இருந்தேன். ஆனா என்னலாமோ நடந்திருச்சி. அதான் இப்ப சொல்றேன், 'ஐ லவ் யூ நியதி'" என்று தன் மனதில் தேக்கிவைத்திருந்த நீண்டநாள் காதலை வெளிப்படுத்த அவள் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது. தன்னுடைய வாழ்வில் சந்தோஷம் மீண்டும் கிடைத்ததாக அவள் உணர்ந்தாள். "ஐ டூ லவ் யூ ஆரியன்" என்று கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.
WhatsApp Image 2025-03-26 at 4.02.48 PM.jpeg
அவனும் அவளை இறுக அணைத்து, "நாம மறுபடியும் கல்யாணம் பண்ணி ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிப்போம். இனி என்ன கஷ்டம் வந்தாலும் நான் உன்ன பிரியவே மாட்டேன்" என்று அவளுக்கு வாக்குறுதி அளித்தான். "நானும் உங்கள எப்பவும் பிரியவே மாட்டேன் ஆரியன்" என்று சத்தியம் செய்தாள். ஒருவருக்கொருவர் பிரிய மனமில்லாத காரணத்தினால் இருவரும் வெகுநேரம் அப்படியே அணைத்தவாறு நின்றனர். இருவரின் மனத்திலும் தூய்மையான பிரேமை மட்டுமே நிலவியது.

அதே சமயம் காவல்துறையினர் தப்பியோடிய ரஞ்சித்தை அவன் வீட்டில் சென்று தேடினர். அங்கிருந்து அவனுக்கு எதிராக பல ஆதாரங்களையும், டிரக் தொழிலில் அவனுக்கு உதவி செய்பவர்களையும் காவலர்கள் கைதுசெய்தனர். இறுதியில் விராஜும் இந்த பிசினஸில் இருப்பது தெரியவந்தது. அவர்கள் உடனே அவனையும் கைது செய்வதற்காக வீட்டிற்குச் சென்றபோது அங்கு விராஜ் டிரக்கின் வீரியத்தால் பக்கவாதம் வந்து வலதுகையும் காலும் செயலிழந்து படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனுடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விராஜ் தான் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தான்.

சில நாட்கள் கடந்தன. இங்கு ஒரே நாளில் நியதி-ஆரியன், சரஸ்-சரண் மற்றும் அதிதி-பார்கவ் ஜோடிகளுக்கும் திருமணம் முன்பைப் போலவே ஸீ-ஷோர் ரிசார்ட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். திருமணத்தன்று மூன்று மாப்பிள்ளைகளும் அந்த பெரிய மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். அழகான வெண்ணிற பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தனர். வேட்டியில் தங்க ஜரிகையாலான பார்டர் அழகாக நெய்யப்பட்டிருந்தது. மூவரும் மூவேந்தர் போல் கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டனர்.
WhatsApp Image 2025-03-26 at 3.28.04 PM.jpeg
ஒவ்வொருவரின் உதவிக்காக ஐந்து வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மூவரும் தயாராகி முடித்த பின் ஆரியன் பார்கவிடம் வந்து, "அன்னைக்கு என் ரூம்க்கு வெளிய நிண்ணு ஒட்டுக்கேட்டது நீ தான? அதிதிய பத்தி தெரிஞ்சிக்கத்தான அப்படி செஞ்ச?" என்று கேட்க பார்கவ் அசடுவழிய, சரணோ உரக்க சிரித்தான்.

அங்கு மணமகளின் அறையில் மணப்பெண் மூவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் உதவிக்காக பத்து பெண்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
WhatsApp Image 2025-03-26 at 4.15.46 PM.jpeg
மேக் அப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட் என பலர் அங்கு இருந்தனர். ஒவ்வொரு மணமகளும் அழகாக தங்கஜரிகையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரப் பட்டுப்புடவையை அழகாக கட்டி தேவலோக கன்னியர் போல் மிகவும் அழகாக காட்சியளித்தனர். மணமேடை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது.
WhatsApp Image 2025-03-26 at 3.28.05 PM.jpeg
முதலில் மூன்று மணமகன்களும் அங்கு கம்பீரமான சிங்கநடை போட்டு அங்கு நுழைந்தார்கள். மாப்பிள்ளைகள் அங்கு நுழைவதை மணப்பெண்கள் அவர்களது அறையிலிருந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். எப்போதும் ஆரியவர்தனை வீல் சேரிலேயே பார்த்த நியதி இப்போது அவன் கம்பீர நடை போட்டு நடந்து செல்வதைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்துப்போனாள். பின் மணப்பெண்கள் அந்த சிவப்பு கம்பளத்தில் மணமேடையை நோக்கி நடந்தனர். மணமகன்கள் அவரவர் அன்பிற்குரியவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆரியன் நியதியை மீண்டும் மணமகள் கோலத்தில் கண்டபோது பழைய நினைவுகள் அவன் மனதில் ஒடத்துவங்கியது. அதை நினைத்து அவன் அகம் மகிழ்ந்தான்.

பின் மந்திரம் ஓத, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, தங்க திருமாங்கல்யத்தை ஆடவர்கள் பெண்களின் கழுத்தில் அணிவிக்க காதல் மனங்கள் திருமணபந்தத்தில் நுழைந்தன. திருமணம் முடிந்ததும் பெரியவர்களிடம் மூன்று தம்பதியினரும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றனர். அப்போது ஆரியன் அதிதியை அழைத்து ரஞ்சித்தின் தாயான கிரிஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வைத்தான்.

கிரிஜா ஆசீர்வாதம் செய்துவிட்டு, "அதிதி இனி உன்னோட வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். நீ நல்லா இருப்பமா" என்று கண்களில் கண்ணீர்வழிய அவளை அணைத்துக்கொள்ள மற்றவளும் அவ்வாறே செய்தாள். ஆரியன் கிரிஜாவை ஒரு நன்றிப் பார்வை பார்க்க அவளோ புன்னகை புரிந்தாள். அப்போது அவளுடைய மனம் அவளுக்கும் ஆரியனுக்கும் இடையே நடந்த உரையாடலுக்குச் சென்றது.

ரஞ்சித்தை காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு வீடுதிரும்பிய ஆரியன் அனைவரிடமும் பேசிவிட்டு பின் கிரிஜாவைத் தேடிச் சென்றான்.
WhatsApp Image 2025-03-26 at 4.11.24 PM.jpeg
அவள் இருக்கும் அறைக்கு வந்தவன், "கிரிஜாமா" என்று அழைக்கவும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றவள் தன் கண்ணை துடைத்துவிட்டு அவன்புரம் திரும்பினார். அவன் அவளருகே வந்து, "அது வந்து..." என்று எப்படி கூறுவது என்று தெரியாமல் ஆரியன் திணற அவளே, "எனக்கு தெரியும் ஆரி....ரஞ்சித் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சிக்கூட பாக்கல. நீ அவன போலீஸ் கிட்ட ஒப்படைச்சி நல்லகாரியம் பண்ணீருக்க”

“தனக்கு உதவிசெஞ்சவங்களுக்கே துரோகம் பண்ணீருக்கான். இவன் என்னோட பிள்ளைன்னு சொல்லிக்க எனக்கு அவமானமா இருக்கு...ஆனாலும் நான் அவனோட அம்மா இல்லையா! அதனால என்னால அவன முழுசா வெறுக்க முடியல. அவன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்..." என்று கூறியவரின் கண்களில் கண்ணீர்வழிய கையைக் கூப்பினார். உடனே ஆரியன் கிரிஜாவின் கையைப் பற்றி, "நீங்க என் அம்மாமாதிரி. என்கிட்ட மன்னிப்பு கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டு என்ன அந்நியனா ஆக்கீராதீங்க" என்று கூறினான். பின், "கிரிஜாமா உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் அது..." என்று அவன் கூறவரும்போதே, "அதிதி பார்கவ் கல்யாணம் பத்திதான ஆரி. எனக்கு தெரியும்" என்று கூற அவன் திகைத்து நின்றான்.

மீண்டும் அவளே பேசத் துவங்கினாள், "அதிதி என்கிட்ட ஏற்கனவே சொல்லீட்டா. என் மகன் மாதிரி ஒரு அரக்கனோட வாழ்ந்தவளுக்கு இப்ப ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. எனக்கு மனப்பூர்வமான சம்மதம்" என்று கூறவும் ஆரியனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் அவளுடைய கையைப் பற்றி, "ரொம்ப தேங்க்ஸ் கிரிஜாமா" என்று கூற அவளும் புன்னகைத்தாள்.

பின் மனதில் ஏதோ தோன்ற அவள், "அதிதியோட வாழ்க்கைல இனி ரஞ்சித்தால ஏதாவது பிரச்சன வருமா ஆரி?" என்று அக்கறையுடன் வினவ அவனோ, "இல்லமா அவன் அதிதிய உறவு ரீதியாவும், சட்ட ரீதியாவும் எதுவும் செய்யமுடியாது" என்று உறுதியான குரலில் கூற கிரிஜா நிம்மதியடைந்தாள். ஒரு தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் தான். அதிதிக்கு ரஞ்சித் இழைத்த அநீதியை ஒரு பெண்ணாக அவளும் எதிர்த்ததால் இந்த முடிவை எடுத்தார்.

திருமணம் முடிந்ததும் அனைத்து ஜோடிகளும் வர்தன்ஸ் மேன்ஷனுக்கு அழைத்துவரப்பட்டனர். புதுமணத் தம்பதியினரை ஆரத்தி எடுத்து சந்திரமதி வீட்டினுள்ளே வரவேற்றார். பின் அனைவரையும் பூஜை அறைக்கு அழைத்தபோது ஆரியன் மட்டும் அங்கு இல்லை. உடனே, "ஆரி எங்க இருக்க? இப்பயாவது வா..." என்று கூறியவர் பூஜை அறையினுள் ஏற்கனவே அவனைக் கண்டதும் அவர் ஆச்சரியமடைந்தார்.

அவர் திகைத்து நோக்கவும், "என்ன? எனக்கு கண்ணன் எப்பவுமே நல்லது தான் பண்ணுவாரு. ஆனா அது எனக்குதான் தெரியல. ஆசீர்வாதம் வாங்க எல்லாரும் வாங்க" என்று கூற அனைவரும் சிரித்தனர். அவர்கள் ஹாலுக்கு வந்தபோது வரதராஜன் ஆரியனிடம், "நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன். என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ளை" என்று கூறவும் ஆரியன் அவரை திகைத்துப் பார்த்தான். அவர், "நியதியும் என்னோட பொண்ணு. அப்போ நீங்க எனக்கு மாப்பிள்ளை தானே" என்று கூற ஆரியன் புன்னகைத்தான். அனைத்து ஜோடிகளும் களைப்பால் அங்குள்ள சோஃவில் அமர்ந்தனர். அவர்களுடன் ரியாவும் அமர்ந்திருந்தாள்.
WhatsApp Image 2025-03-26 at 3.28.05 PM (1).jpeg
அப்போது சரண், "இப்பலாம் அவங்களுக்குன்னு ஆள் வந்துட்டா நண்பர்களையே மறந்துடறாங்க. ரிங் டோன்லாம் மாதீர்ராங்க" என்று கூறவும் அருகிலிருந்த சரஸ் அவனைப் பார்த்து, "இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுற?" என்று கேட்டாள். அதற்கு அவன், "இது புரியிறவங்களுக்கு புரிஞ்சிருக்கும்" என்று கூறி நியதியைப் பார்க்க அவளோ திகைப்புடன் அவனை நோக்கினாள். அவன் தன் கைபேசியில் நியதியை அழைக்க அது, 'அரியனே பல மாயங்கள் புரிந்தாய்...' என்று ஒலிக்கத் துவங்கியது.

அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விஷயம் புரிந்தது. உடனே அனைவரும் நகைக்க ஆரம்பித்தனர். ஆரியனும் வெட்கத்தால் தன் தலையை குனிந்துகொண்டான். உடனே நியதி விரைந்து தன்னுடைய கைபேசியை எடுத்து அதை நிறுத்தினாள். அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற அவள் சரஸைப் பார்த்து, "சரஸ் உனக்கு சரண் வச்சிருக்குற செல்லப்பேர சொன்னானா?" என்று கேட்க அவளோ, "செல்ல பேரா? அப்படி எதுவும் சொல்லலையே. அது என்ன நியதி?" என்று ஆவலுடன் கேட்டாள். அவள் தன்னுடைய ரிங்டோனை குறிப்பிடுகிறாள் என்று அறிந்த சரண் கைபேசியிலுள்ள வால்யூமைக் குறைக்கச் சென்றான்.

ஆனால் அதற்குள் நியதி சைகை செய்ய சரஸ் அவனிடமிருந்து கைபேசியை பிடுங்கினாள். நியதி ஆதற்கு அழைத்தபோது, 'அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே' என்று பாட ஆரம்பித்தது. அதைக் கேட்டு சரஸ் கோபமாக அவனைப் பார்த்து, "ராட்சசி என்ன பண்ணுவான்னு நான் காட்றேன்" என்று கூற நியதி வாய்விட்டு சிரித்தாள். அவள் சரணைப் பார்த்து, 'மாட்னியா?' என்று புருவத்தை ஏற்றி இறக்க அவனோ அவளை செல்லமாக முறைதான்.

பின் சரஸ் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு அதிதி மற்றும் பார்கவ் இருக்கும் இடத்தை பார்க்கச் சொன்னாள். அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்ல பேசிக்கொண்டிருந்தனர். சிரித்துப் பேசும் சப்தம் நின்றதும் அவர்கள் திரும்பிப் பார்த்தபோதுதான் அங்கிருந்த அனைவரும் அவர்களை கவனிப்பது தெரிந்தது. உடனே இருவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர்.

பின் ஆரியன், "இங்க இருக்குற ஒவ்வொருவருக்கும் நான் ஒண்ணு சொல்லணும்" என்று அவன் பேச அனைவரும் அமைதியாக அவனை உற்று நோக்கினர். அவன் சரணிடம் திரும்பி, "ஐ அம் சாரி சரண். நீ நியதி மேல வச்சிருந்த தூய்மையான பாசத்த நான் தப்பா நினைச்சிட்டேன். என்ன மன்னிச்சிரு" என்று கூற அவனோ, "நீங்களும் என்ன மன்னிச்சிருங்க. நீங்க நியதியோட நல்லதுக்குதான் செஞ்சிருக்கீங்கன்னு தெரியாம நான் என்னலாமோ பேசிட்டேன்" என்றவுடன் ஆரியன் புன்னகைத்தான். சரஸிடம் திரும்பி, "சரஸ் உன்னமாதிரி ஒரு ஃரெண்ட் கிடைக்க நான் கொடுத்துவச்சிருக்கணும். நீ இல்லாட்டி நான் வீல் சேர்ல தான் இன்னமும் இருந்திருப்பேன். தேங்க் யூ" என்று கூற அவளோ, "டேய் ஃரென்ஸ்கு இடைல நோ சாரி, நோ தேங்க்ஸ்" என்று கண்சிமிட்டினாள்.

பின் ரியாவிடம் திரும்பி, "தேங்க் யூ ரியா. என்னோட நியதி கிடைக்க நீதான் காரணம்" என்று கூற அவளோ, "அப்படி இல்ல ஆரியன், உங்களோட உண்மையான காதல்தான் நியதிய உங்களோட சேர்த்துவச்சிருக்கு" என்று கூற நியதியும், ஆரியனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். பார்கவிடம் திரும்பி, "நீ எனக்கு எல்லா விஷயத்துலயும் நம்பிக்கையானவனா இருந்ததுக்கு ரொம்ப நன்றி பார்கவ்" என்றுதும், "சார் நீங்க எனக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்லாதீங்க. அது என்னோட கடமை" என்றான். உடனே ஆரியன், "நீ இந்த வீட்டு மாப்பிள்ள. இனி சார்னு கூப்பிடாத" என்று சிரித்தவாறே சொல்லவும் மற்றவனோ புன்னகைத்தான்.

அதிதியிடம், "நீ என்னோட ஸ்பெஷல் கிஃட் அதிதி. உனக்கு இனி எந்த கஷ்டமும் வரவிடமாட்டேன்" என்று கூறும்போதே அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அதிதி விரைந்து சென்று தன்னுடைய தமையனை இருக அணைத்துக்கொண்டாள். அங்கு சிறிது நேரம் அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசமழை பொழிந்தது. இறுதியாக அவன் நியதியிடம் திரும்பி, "நியதி நீ என்னோட வாழ்க்கைக்கு கிடைச்ச பெரிய வரம். நீ வந்த பிறகு என் வாழ்க்கை ரொம்ப அழகா மாறீடுச்சி. தேங்க யூ ஃர் மேக்கிங் மை லைஃ கலர்ஃல்" என்று அவளுடைய கையைப் பற்றி மென்மையாக அழுத்தினான். சிறிது நேரம் அவர்கள் இருவரும் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தபோது சரஸ் 'அஹம்' என்று இரும இருவரும் நிதர்சனத்திற்கு வந்தனர்.

ஆரியன் அனைவர்க்கும் அவன் சார்பாக பரிசு கொடுப்பதாகக் கூறினான். சரஸுக்கும் சரணுக்கும் தன்னுடைய வில்லா ஒன்றையும், பீச் ஹவுஸ் ஒன்றையும் திருமண பரிசாக அளித்தான். பின் பார்கவுக்கு தன்னுடைய ஒரு ஆட்டோமொபைல் கம்பெனிக்கு சி.இ.ஓவாக அவனை நியமித்து அந்த பத்திரத்தை அவனுக்கு பரிசாகக் கொடுத்தான். ஆனால் பார்கவோ அதை மறுத்துவிட்டான். பலமுறை கூறியும் அவன் அதை ஏற்கவில்லை. "எனக்கு உங்களோட செக்ரட்டரியா இருக்குறதே பெரிய சந்தோஷம். வேற எதுவும் வேண்டாம் ஆரியன்" என்று கூற ஆரியன் புன்னகைத்தான். பின் நியதியிடம் திரும்பி ஒரு கோப்பை கொடுத்தான்.

அதை திறந்து பார்த்தபோது அவள் ஆச்சரியமடைந்தாள். ஏனென்றால் அவளை தன்னுடைய கம்பெனியின் முக்கியமான பொறுப்பில் நியமித்திருந்தான். அவளோ, "என்கிட்ட இவ்வளவு பெரிய நிர்வாகத்த குடுத்திருக்கீங்க. என்னால எப்படி முடியும் ஆரியன்?" என்றவளிடம், "உன்னால முடியும். உன்ன என்னோட பி.ஏ.வா வச்சதுக்கு காரணமே நீ அடிமட்டத்துல இருந்து எல்லா வேலையும் தெரிஞ்சிக்கணும்னு தான். நீ ரொம்பவே திறமசாலி. எப்பவுமே உன்கூடதான் இருப்பேன். நீ கண்டிப்பா இத ஏத்துக்கிட்டே ஆகனும்" என்றவுடன் அவள் ஒப்புக்கொண்டாள்.

அவன் மீண்டும் ஒரு கோப்பை அவளிடம் நீட்ட அவள் புரியாமல் விழித்தாள். அவன், 'பார்' என்று செய்கை செய்ய அதை வாங்கி பார்த்தவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. ஏனென்றால் அது அவளுடைய வீட்டு பத்திரம். அதாவது அவளுடைய தந்தையின் வீடு. அதை அவளுடைய உறவினர்கள் நயவஞ்சகத்தால் அவளிடமிருந்து பறித்தனர். ஆனால் அதே வீடு இன்று அவளுடையதாக இருக்கிறது. ஏனென்றால் அது நியதிக்கு ‘விலைமதிக்கமுடியாத பொக்கீஷம்’ என்று ஆரியன் அதை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தான். அதைக் கண்டதும் நியதிக்கு மகிழ்ச்சி பொங்கியது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிநிற்க தன் கணவனை இருக அணைத்துக் கொண்டாள். பின் அங்கிருக்கும் அனைவரையும் உணர்ந்து இருவரும் விலகினர். அதன் பின் அங்கு கலகலப்பு சத்தம் மட்டுமே நிரம்பி இருந்தது.

அப்போது ஆரியனின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் தனியே வந்து அழைப்பை எடுத்தபோது, "வாழ்த்துக்கள் நண்பா" என்று குரூரமான குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று தெரிந்ததும் ஆரியனின் முகம் சட்டென மாறியது. ஏனென்றால் பேசியது வேறுயாருமல்ல ரஞ்சித். அவன் அந்த தாக்குதலிலிருந்து எப்படியோ தப்பியிருந்தான். "என்னடா ஜெயில்ல இருந்து தப்பிச்சவன் இப்ப எப்படி பேசுறான்னு தான நினைக்குற....ஜெயில்ல மட்டும் இல்லடா மரணத்தோட விழிம்புல இருந்து தப்பிச்சிருக்கேன்" என்று அழுத்தமான குரலில் கூறி வில்லத்தனமாகச் சிரித்தான்.

ஆரியன் எதுவும் பேசாமல் எந்தஒரு பதற்றமும், சலனமும் இல்லாமல் அமைதியாக ஒரு புன்முறுவலுடன் கேட்டான். அவனுக்கு ரஞ்சிதைப் பார்த்து எந்தஒரு பயமும் இல்லை. "என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கீட்டு நீ மட்டும் சந்தோஷமா இருந்திருவியா?....விடமாட்டேன்...உன்ன கண்டிப்பா விடவேமாட்டேன். நான் உனக்காக திரும்ப வருவேன்டா" என்று ஆக்ரூஷமாகக் கத்தினான். அதைக் கேட்ட ஆரியன், "ஐ அம் வெய்டிங்" என்று மட்டும் கூறி கைபேசியை சட்டென வைத்தவன் மாயப் புன்னகை புரிந்தான்...
WhatsApp Image 2025-03-26 at 3.28.05 PM (2).jpeg
சுபம்

🙏என் அருமை கண்ணனுக்கு நன்றி🙏

*********************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

Link

https://www.narumugainovels.com/threads/21888/
 
Status
Not open for further replies.
Top